Friday, May 1, 2015

உள்ளதும் போச்சு...

உள்ளதும் போச்சு...

உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்றுஇருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன்.நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள்நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப்பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல்அவனிடம் சிக்கவே இல்லை.
எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்றுநினைத்த அவன் அரசனிடம் சென்றான். "அரசே என்தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான்எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றான். சிரித்தஅரசன் 'ஒரு முயலைப் பிடிக்க உன்னால்முடியவில்லையா?" என்று கேட்டான்.
"அரசே! அந்த முயலுக்கு மாய மந்திரம் தெரிந்திருக்கவேண்டும். நான் அதைப் பார்த்துக் கல்லையோகட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவதுஇல்லை" என்றான் அவன்.
"நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்குவருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என்வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலைப்பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்"என்றான் அரசன்.
மகிழ்ச்சியுடன் தன் தோட்டத்திற்கு வந்தான் அவன்.இனி முயலின் தொல்லை இருக்காது என்று நினைத்துஅரசனுக்கும் அவன் வீரர்கட்கும் சிறப்பான விருந்திற்குஏற்பாடு செய்தான். மறுநாள் படை வீரர்கள்,வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்குவந்தான்.
எல்லோரையும் வரவேற்ற உழவன் அவர் களுக்குச்சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது.மகிழ்ச்சி அடைந்த அரசன் "இன்னும் சிறிது நேரத்தில்அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்" என்றுவேட்டையாடப் புறப்பட்டான்.
வேட்டைக்காரர்கள் கொம்புகளை ஊதினார்கள்.வேட்டை நாய்கள் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டேதோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்தமுயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்தவேலியை நோக்கி ஓடியது.
அதைப் பார்த்த அரசன், "அந்த முயலைத் தப்பவிடாதீர்கள், பிடியுங்கள்" என்று கத்தியபடி வேலிப்பபக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும் வீரர்களும்அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள்.
தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும்இங்கும் ஓடியது. அவர்கள் அனைவரும் அதைத்துரத்தினார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக்கவ்விப்பிடித்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அந்தமுயலை உழவரிடம் காட்டினான் அரசன். இவர்களின்முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம்முற்றிலும் நாசமாகி விட்டதை அறிந்து வருந்தினான்உழவன்.
நீதி...
"சிறு வேலைக்குப் பெரியவர்கள் உதவி கேட்பது தவறுஎன்று உணராமல் போனேனே. என் அழகான தோட்டம்அழித்துவிட்டதே. ஒரு முயல் என்ன ஆயிரம் முயல்கள்பல நாட்கள் வந்திருந்தாலும் இப்படிப்பட்ட அழிவைஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள்தனத்தால்பேரழிவைத் தேடிக் கொண்டேன்" என்று வந்திருந்தான்அவன்.
Sri Muthu Krishnan Iyengar's photo.

No comments:

Post a Comment