Showing posts with label branding consultancy. Show all posts
Showing posts with label branding consultancy. Show all posts

Wednesday, November 11, 2015

Awesomee ......A story in one of the schools in Chennai

Awesomee ......A story in one of the schools in Chennai where admission is considered impossible!!!

To get UKG admission 

The child could not understand why they brought her there..

When we all were standing, the school principal started to converse with the child....yes...in English only! This is one of the most memorable interview I have ever witnessed in my life..
Here goes..

"What's your name?"

"Sarithra"

"Good. Tell me something you know"

"I know many things. Tell me what you want...!"

Alas, there is no better point for not getting the admission!

Sarithra's mother was trying to make up the situation but the principal stopped her..

Turning to child, she said.. "Tell any rhyme or story which you know.."

Again,"Which one you want.. Rhyme or Story!?"

"Ok. Plz tell me a story.."

"Do uou want to hear what I studied or what I wrote..!?"

Taken to surprise, she asked "Oh! you write stories...???"

"Why should I not write..?"

Now even I was taken aback But she was impressed with the answer. She ( including us) would have not heard such a story in our life...

Ok, tell me story which you have written-?

Sarithra said "Ravanan kidnapped Sita & took her to Srilanka"

The opening scene failed to impress but still she encouraged the child to continue..

"Rama asked Hanumans help to rescue Sita. Hanuman too agreed to help Rama ..."

"Then?"

"Now, Hanuman called his friend Spider man." No one expected this twist in the story!!

"Why?"

"Because there are lot of mountains between India and Srilanka.. but if we have Spiderman we can go easily with his rope..."

"But Hanuman can fly isn't it.. ?"

"Yes. But he is having Sanjeevi Mountain on one hand so he cannot fly very fast.!"

All is quiet, after a while Sarithra asked "Should I continue or not?.".

"Ok plz continue!"

"Hanuman and Spiderman flew to Srilanka and rescued Sita. Sita said Thanks to both!"

"Why"

"When you are helped you should say Thanks!" So "Hanuman is now called Hulk..."

All were surprised.She realized our curiosity and said " Now Sita is there, so to take her safely back to Rama she called Hulk"

"What??? "Hanuman can carry Sita right?"

"Yes. But he has Sanjeevi Mountain in one hand and has to hold spider man on the other"

No one could control thier smiles. " So when they all started to India they met my friend Akshay! "

"How come Akshay there now?"

"Because its my story and I can bring any one there!"

The principal didn't get angry but waited for the next twist

Then all started to India and landed at Chennai Velechery bus stop! 

Now I asked,"Why they have landed In Velechery bus stop?

"Because they forgot the way..& Hulk got an idea and called Dora!"

I came to know about Dora only there...!

"Dora came and she took Sita to Velechery Venus Colony...that's all!" 

She finished the story with a smile.. 😀

The principal asks "Why venus Colony...?"

"Because sita is there & iam Sita!!!"

The principal was impressed and embraced the child. She has been admitted in UKG & was gifted with a Dora doll...
😂😂😂

Kids can really amaze... but we clip their wings (creativity) expecting them to do things as we see it right & not from their viewpoint..

Let's give every child freedom to do their own thing & watch their dreams come true..

Monday, May 11, 2015

பலனுள்ள பன்னிரண்டு!!!

பலனுள்ள பன்னிரண்டு!!!

நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும்.

இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி அவர்களுடன் உறவாட வேண்டும் என்பதான பயிற்சியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவதற்கு முன்னால் என்னவெல்லாம் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதோ 12 மோசமான பழக்கங்கள்:

1. மற்றவர்களிடம் பேசும்போது அவர்களை நேராகப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்துப் பேசுவது. யாருடன் பேசுகிறோமோ அவர்களது கண்ணை நேராகப் பார்த்துப் பேசும்போதுதான் நமது வார்த்தைகளிலுள்ள உண்மையையும் நேர்மையையும் அடுத்தவருக்குப் புரியவைக்க முடியும். அதற்காக அவர்களை முறைத்துப் பார்க்கக் கூடாது.

2. நிற்கும்போதோ உட்காரும்போதோ நேராக இல்லாமல் வளைந்து கூனியிருப்பது. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் மற்றவர்களை உங்கள் பால் ஈர்க்க அவசியம். அது உங்களுக்கு உங்கள்மேல் உள்ள தன்னம்பிக்கையைக் காட்டும்.

3. முகத்தைச் சிடுசிடுவென வைத்துக்கொண்டு முறைப்புடன் பேசுவது. இது யாருக்குமே பிடிக்காது, உங்களுக்கு பேசப் பிடிக்கவில்லையானால் அவர்களுடன் பேசுவதைத் தவிருங்கள், பேசும்போது முகத்தில் ஒரு புன்னகையைத் தவழவிடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுவதோடு உங்களோடு உறவாடுபவருக்கும் ஒரு உற்சாகத்தை அளிக்கும்.

4. யாராவது புதியவர்களைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொள்வது. உங்கள் பெற்றோர்கள் உங்களது சிறு வயதில் புதியவாராக யாராவது இருந்தால் அவருடன் பழகாதே என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் நீங்கள் இப்பொது வளர்ந்து விட்டிர்கள். யாருடன் பேசும்போதும் நீங்கள் என்ன பேசுவது என்று பேசத் திணறாமல் அவர்களுடன் சரளமாக உரையாடுவது உங்களது உறவுகளை மேம்படுத்தும். சந்திப்பவர்கள் பரிச்சயமில்லாதவராக இருந்தாலும் கூச்சமில்லாமல் பேசப் பழகுங்கள்.

5. நீங்கள் மற்றவர்களது மனதில் ஏற்படுத்தும் முதல் முத்திரைதான் உங்களோடு உறவாடுபவர்களது நினைவில் எப்போதும் நிலைத்து நிற்கும். அதை வைத்துத்தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். அதனால் முதல் சந்திப்பிலேயே மற்றவர்களைக் கவருமாறு நடந்துகொள்வது மிகவும் அவசியம்.

6. மிகவும் சங்கோஜத்துடன் அதிகமாகப் பேசாமலிருப்பது. வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் மற்றவர்களிடம் உறவாடும்போது நன்கு சகஜமாகப் பேசத் தெரிய வேண்டும். எண்ணங்களைத் தங்குதடையில்லாமல் வெளிப்படுத்த வேண்டும். அதற்காக வளவளவென்று பேசி ‘இவன் எப்போது வாயை மூடுவான்’ என்று மற்றவர்கள் நினைக்கும்படி செய்யக் கூடாது. வார்த்தைகளை அளந்து சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அழகாகப் பேச வேண்டும். அசந்தர்ப்பமாக ஏதாவது பேசி, தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடாது. முக்கியமாக நீங்களே உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். மனதில் தோன்றுவதை யெல்லாம் கண்டபடி உளறக் கூடாது.

7. மற்றவர்கள் பேசும்போது அவர்கள் பேச்சில் கவனமில்லாமல் இருப்பது. அடுத்தவர்கள் பேசும்போது காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் பேசும்போது எங்கோ கவனத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள், ‘நான் சொல்வது சரிதானே’ என்று கேட்கும்போது என்ன சொன்னார்கள் என்றுகூடத் தெரியாமல் விழிக்கக் கூடாது. அவர்களைப்பற்றி உங்களுக்கு ஏதும் அக்கறையில்லை, ‘மனுஷன் மகா போர்’ என்று நினைத்தால் ஏதோ பரவாயில்லை. ஆனால் முக்கியமான அலுவலக அதிகாரியிடமோ அல்லது மிகவும் வேண்டியவருடனோ பேசும்போது மனதை அங்கும் இங்கும் அலைய விடதீர்கள். கேட்கும் விஷயத்தில் கவனமாக இருங்கள்!

8. சொந்தக்காரர்களுடன் அல்லது நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்லோரிடமும் நல்ல உறவு வைத்திருக்க அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது அவசியம். அவ்வப்போது அவர்களது பிறந்த நாள், மணநாள் இவைகளைக் குறித்து வைத்துக்கொண்டு, வாழ்த்துத் தெரிவித்து, அவர்களுடன் ஏதாவது வகையில் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அதற்காக தினமும் பேச வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் ஒருவர் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அவ்வப்போது நினைவு படுத்திக்கொண்டிருந்தால் சரி!

9. உற்சாகமில்லாமல் சோர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் இருக்கும் சூழ்நிலை இறுக்கமாக இருக்கும்போது அந்த இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு நல்ல உற்சாகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லையென்றால் அதற்குப் பிறர் மீது பழிபோடுவதில் பயனில்லை. நிலைமையை சரிப்படுத்த நீங்கள் ஏதாவது செய்யுங்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் அதைப்பற்றி யாருக்கும் அக்கறையிருக்காது. ஒரு வேளை உங்கள் அம்மாவைத் தவிர!

10. மற்றவர்களோடு கலகலப்பாய் இல்லாமல் உம்மனாமூஞ்சியாய் இருப்பது அடுத்தபடி தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் நீங்கள் ஒரு ஜாலியான மனிதர் என்று எண்ணும்படியாக இருக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களோடு சேர்ந்து பேசி வாழ்க்கையை உற்சாகமாகச் செலவிடுங்கள்!

11. உங்களுக்குள்ள பயத்தையும் தயக்கத்தையும் வெளிக்காட்டாதீர்கள். முக்கியமாக, புதிய நண்பர்களைச் சந்திக்கும்போது, உயர் பதவியில் இருப்பவர்களுடன் பேசும்போது, நேர்முகத் தேர்விற்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

12. விடாப்பிடியாகத் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நினைப்பது. எப்போதும் திறந்த மனதோடு இருங்கள் உங்களைச் சுற்றிப் பல மதத்தினர், வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், கொள்கையில் மாறுபட்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் மனக்கசப்போ அல்லது வேறுபாடோ இருந்தால் சுமுகமாகப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்.

Yours Happily
Dr.Star Anand Ram
Self motivation Trainer 
9790044225
www.v4all.org

Tuesday, May 5, 2015

யார் தலைவன்? - www.v4all.org

யார் தலைவன்? - www.v4all.org

ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன் பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு பெற நினைக்கிறேன்…”

அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அவர் தொடர்ந்தார்.

“உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும் செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத் தேர்ந்தெடுப்பேன்”

சொல்லி விட்டு அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார்.  அந்த இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.

மூன்று வாரங்களான பின்னும் அந்த விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட்டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த மாற்றமும் அவன் விதையில் இல்லை.
கம்பெனியிலோ அவரவர்களின் விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.

ஒரு வருடம் கழித்து அந்த முக்கிய நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது. அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக நின்றான்.

சேர்மன் வந்தவர் ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார்.  வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன் அவர் கேட்டார். “என்ன ஆயிற்று?”

அவன் கூனிக் குறுகிப் போனாலும் நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.

சேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர் சொன்னார்.

“நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.”

“நீங்கள் அனைவரும் திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால் உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத் திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில் தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என் கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

அவனிடம் தலைமைப் பொறுப்பைத் தந்து விட்டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.

இது ஒரு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, கட்சி, அமைப்பு, கூட்டம், நாடு எல்லாவற்றிற்கும் பொருந்தும். அவன் அரிச்சந்திரனாக எல்லா விஷயங்களில் இருக்கிறானோ இல்லையோ, யாருக்குத் தலைவராக ஆகிறானோ அவர்களுக்காவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருப்பவன் தான் அவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அவனே தலைவன், அப்படி இருக்க முடியாதவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே!

Friday, May 1, 2015

உள்ளதும் போச்சு...

உள்ளதும் போச்சு...

உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்றுஇருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன்.நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள்நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப்பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல்அவனிடம் சிக்கவே இல்லை.
எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்றுநினைத்த அவன் அரசனிடம் சென்றான். "அரசே என்தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான்எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றான். சிரித்தஅரசன் 'ஒரு முயலைப் பிடிக்க உன்னால்முடியவில்லையா?" என்று கேட்டான்.
"அரசே! அந்த முயலுக்கு மாய மந்திரம் தெரிந்திருக்கவேண்டும். நான் அதைப் பார்த்துக் கல்லையோகட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவதுஇல்லை" என்றான் அவன்.
"நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்குவருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என்வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலைப்பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்"என்றான் அரசன்.
மகிழ்ச்சியுடன் தன் தோட்டத்திற்கு வந்தான் அவன்.இனி முயலின் தொல்லை இருக்காது என்று நினைத்துஅரசனுக்கும் அவன் வீரர்கட்கும் சிறப்பான விருந்திற்குஏற்பாடு செய்தான். மறுநாள் படை வீரர்கள்,வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்குவந்தான்.
எல்லோரையும் வரவேற்ற உழவன் அவர் களுக்குச்சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது.மகிழ்ச்சி அடைந்த அரசன் "இன்னும் சிறிது நேரத்தில்அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்" என்றுவேட்டையாடப் புறப்பட்டான்.
வேட்டைக்காரர்கள் கொம்புகளை ஊதினார்கள்.வேட்டை நாய்கள் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டேதோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்தமுயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்தவேலியை நோக்கி ஓடியது.
அதைப் பார்த்த அரசன், "அந்த முயலைத் தப்பவிடாதீர்கள், பிடியுங்கள்" என்று கத்தியபடி வேலிப்பபக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும் வீரர்களும்அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள்.
தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும்இங்கும் ஓடியது. அவர்கள் அனைவரும் அதைத்துரத்தினார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக்கவ்விப்பிடித்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அந்தமுயலை உழவரிடம் காட்டினான் அரசன். இவர்களின்முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம்முற்றிலும் நாசமாகி விட்டதை அறிந்து வருந்தினான்உழவன்.
நீதி...
"சிறு வேலைக்குப் பெரியவர்கள் உதவி கேட்பது தவறுஎன்று உணராமல் போனேனே. என் அழகான தோட்டம்அழித்துவிட்டதே. ஒரு முயல் என்ன ஆயிரம் முயல்கள்பல நாட்கள் வந்திருந்தாலும் இப்படிப்பட்ட அழிவைஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள்தனத்தால்பேரழிவைத் தேடிக் கொண்டேன்" என்று வந்திருந்தான்அவன்.
Sri Muthu Krishnan Iyengar's photo.

வீட்டில் குபேர வாசல் திறக்கச் செய்வோம்...

வீட்டில் குபேர வாசல் திறக்கச் செய்வோம்...


இது என்ன புதிய கதையாக இருக்கிறது. குபேர வாசல் என்று ஒன்று உண்டா? அதைத் திறப்பது எப்படி என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடு என்றால் உயிரை காத்துக் கொள்ள நாம் புகுந்து கொள்கிற சாதாரண கூடு என்று மட்டும் நினைத்துக் கொண்டுள்ளோம்.
வீடு என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் நவக்கிரகங்களும், எண் திசைக் காவலர்களான இந்திரன், நிருதி வாயு, குபேரன் ஆகியோர் சுற்றி வந்து ஆட்சி செய்கின்ற இடம் என்று பொருள். அந்த இடத்தில் தெய்வ அருள்நிலை பெற்றிருக்க வேண்டும் இல்லாவிட்டால் வெற்றிடமாகி (சூன்யம்) விடும் அந்த வீடு.
ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்று வந்தால் நல்ல அமைதியான சூழலில் அமைந்து சாந்தமான மனநிலையையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் உருவாக்கித் தர வேண்டும். கிரகம் (வீடு) என்பதற்கு வினைகள் நெருங்காத தெய்வாம்சமும் பாதுகாப்பும் நிறைந்த நல்ல எண்ணங்களை உருவாக்கக் கூடிய கூடம் என்று பொருள்.
கிரகம் என்பதற்கு நவக்கிரகங்கள் ஆட்சிபுரியும் பீடம் என்றும் கூறலாம். எனவே தான் கிரகப்பிரவேச காலங்களில் நவக்கிரக ஹோமம் செய்து வழிபடுகிறோம். வீட்டில் பணம் சேரவில்லை. பதவி உயர்வு தாமதமாகிறது குழந்தைப்பேறு கிடைக்கக் காலம் நெருங்கவில்லை. பெண்ணுக்குத் திருமணமாக நாள் வரவில்லை என்று பல குடும்பங்கள் இன்று புலம்புவதோடு பல பரிகார பூஜைகளைச் செய்கிறார்கள்.
முதலில் குடியிருக்கும் வீட்டில் தோஷங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இதை சரிசெய்து விட்டாலே நாம், நம் வீட்டில் குபேர வாசலை திறந்து விட்டதாக அர்த்தம். வீட்டில் குபேரன் அருளால் செல்வம் பெருக, வாஸ்து சாஸ்திரப்படி சங்கு ஸ்தாபனம் செய்து பார்க்க வேண்டும்.
பெரிய கம்பெனி, ïனிட் கட்டுவோர் மட்டுமின்றி கிரகத்தில் சல்லிய, தோஷம், வாஸ்து தோஷம் உள்ளதென்று சொல்வோரும் வலம்புரிச் சங்கை சாஸ்திரப்படி பூஜை செய்தால் வளம் காண முடியும். மனையடி சாஸ்திரத்தின் சூட்சுமங்களாகக் கூறும் ஆதிகால நூலில் இந்த ரகசியம் உள்ளது.
www.v4all.org 



உங்களின் பிரசாத்'s photo.

Wednesday, April 29, 2015

"ஹலால்" என்றால் என்ன?

"ஹலால்" என்றால் என்ன?
-------------------------------
நீண்ட நாள் எனக்குள் கேள்வி... இந்த முறை ஏற்றுமதி ஆர்டர் எடுக்க செல்லும்போது சகோ நிசார் அவர்களிடம் கேட்டேன். "ஹலால்" என்றால் என்ன?
அவர் கூறினார் கோழி ஆடு போன்றவற்றை ரெத்தம் இறங்கும் வரை வைத்து இருந்து பின்னர் சமைப்பது ஹலால் என்றார்.
ரெத்ததில் பல கிருமிகள் இருப்பதால் அவை மாமிசத்தின் உடலை விட்டு வடிந்த பிறகு சமைத்து உண்பதால் உடலுக்கு நன்மையாம்.
மற்ற நண்பர்களுக்கும் இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்...

your Happily
www.v4all.org 

Saturday, April 18, 2015

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ? நாம் தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில் பல தொழில்கள் இருக்கும் . அதை நாம் சந்தை ஆய்வு செய்தோ அல்லது சந்தையில் உள்ள அதிகப்பட்ச தேவையின் அடிப்படையிலோ தேர்தெடுத்து வைத்திருப்போம் . இதிலிருந்து நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பதில் நமக்கு மிகுந்த குழப்பம் இருக்கும் .நமக்கு தகுந்தாற் போல் சரியான தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகள் பயன்படும் .

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?

நாம்  தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில்  பல தொழில்கள்  இருக்கும் . அதை நாம்  சந்தை ஆய்வு செய்தோ அல்லது சந்தையில் உள்ள அதிகப்பட்ச தேவையின் அடிப்படையிலோ தேர்தெடுத்து வைத்திருப்போம் .    இதிலிருந்து நமக்கு பொருத்தமான தொழிலை  தேர்தெடுப்பதில் நமக்கு  மிகுந்த  குழப்பம் இருக்கும்  .நமக்கு தகுந்தாற் போல் சரியான தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகள் பயன்படும் .

1.தொழில்களை  பட்டியலிடுங்கள் :-

நம் மனதில் பு துப்  புது  தொழில்கள் தோன்றிக்  கொண்டே  இருக்கும். நம் மனதில் தோன்றிய தொழில்களை முதலில் பட்டியலிட (List )வேண்டும். தொழில்களை ஒரு தாளிலோ அல்லது கணினியிலோ வரிசையாக பட்டியலிடுங்கள் .   சந்தை ஆய்வு(Market Survey) அல்லது சந்தையில் உள்ள  தேவையின்(Market Demand) அடிப்படையிலோ இந்த தொழில்ப்பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

2.தகுதி(Competence) மற்றும் சந்தையில் தேவைகளை (Market Demand) பொருத்திப் பாருங்கள் :  

பல தொழில்களுக்கு சந்தையில் தேவை நிறைய இருக்கும் .நீங்கள் பட்டியலிட்ட தொழில்களில் அதிகபட்ச சந்தை தேவையுள்ள (Huge Market Demand) தொழில்களை தேர்ந்தெடுங்கள் . அதில் உங்கள் தகுதி (Competence),ஆற்றல் (Ability) ,திறமைகளை(Skills) பொருத்திப்  பாருங்கள் . உங்கள்  தகுதி மற்றும் திறமைகளுக்கு  அதிகம் ஒத்துப்  போகிற தொழில்களை தேர்ந்தெடுங்கள் .

3.பேரார்வம் மற்றும் உணர்ச்சிகளை சோதித்து பாருங்கள் (Check Passion and Emotions ):-

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் உங்களுக்கு பேரார்வம் (Passion) உள்ளதா என்பதை சோதித்து  பாருங்கள்.  தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் தீராத காதல்(Passion) இருக்குமா அல்லது மேலோட்டமான பார்வையால் தேர்ந்தெடுத்தீர்களா  என்பதை சோதித்து பாருங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் உங்கள் உணர்ச்சிக்குட்பட்டு(Emotions) இருக்குமா என்பதை சோதித்து பாருங்கள் .

4.குறிக்கோள்(Objectives) மற்றும் நோக்கத்திற்கு(Purpose) இடமளியுங்கள் :

உங்கள் குறிக்கோள்கள்  மற்றும் நோக்கங்களுக்கு  இடம் தருகிற தொழில்களை தேர்ந்தெடுங்கள். நம் சிலரின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை  எளிமையாக்குவது ,சேவை ,வாழ்க்கை மற்றும் உடலுக்கு நலம் தரக்கூடிய ,சூற்றுச்சூழல் பாதுகாப்பு ,பாதிப்பில்லா சமூகம் போன்றவையாக இருக்கலாம் . நாம் தேர்ந்தெடுக்கும்  தொழில் நமது  குறிக்கோள்கள்  மற்றும் நோக்கங்களுக்கு இடமளிக்கிறதா என்பதை சோதித்துப்  பார்க்க வேண்டும் .