வரவேண்டிய கடன், பணம், வந்து சேர பரிஹாரம்
(share) செய்யுங்கள்)
சிலருக்கு சில நிறுவனத்தில் வேலையில் பல நாட்கள் சம்பள பாக்கி இருக்கும். நிறுவனத்தின் திடீர் வறுமையால் வேலை செய்த பணம் கூட சரியான நேரத்தில் கிடைக்காது. இன்றைய சூழ் நிலையில் நெருங்கிய ஒருவருக்கு கடன் கொடுப்பதென்றாலே பயம்தான். கடன் திருப்பி வரவில்லை என்றால் நல்ல நட்பு வைத்திருக்கும் இடத்தில் தேவையில்லாத மனஸ்தாபங்கள் பிரச்சினைகள் ஏற்படும்.
நமக்கும் கடனை கொடுத்து விட்டு மிகவும் நெருங்கியவர்களிடம் அடிக்கடி நியாபகப்படுத்தி கேட்பதற்க்கு சற்று பயமாக இருக்கும். அப்படியே நாம் கேட்டாலும் நம்முடைய அவசரத்தேவைக்கு பணம் என்பது கிடைக்காது இவற்றை போக்குவதற்கு ஒரு எளிய பரிஹாரம் உள்ளது.
உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை சிறிது இடித்து அதை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தென் மேற்கு மூலையில் வைத்துவிட்டால் வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும். இதனால் நம் துன்பம் நீங்கும்.

No comments:
Post a Comment