Showing posts with label business consultancy. Show all posts
Showing posts with label business consultancy. Show all posts

Saturday, October 29, 2016

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்
ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.
தேவையானவை:-
வாழை இலை
பச்சை கற்பூரம்
சீரகம்
பருத்திக் கொட்டை
கல் உப்பு
மிளகு
நவ தான்யங்கள்
கோதுமை
நெல் (அவிக்காதது)
முழு துவரை
முழு பச்சை பயிறு
கொண்ட கடலை
மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)
முழு வெள்ளை மொச்சை
கருப்பு எள்
முழு கொள்ளு
முழு கருப்பு உளுந்து
விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42
தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21
செய்யும் முறை:-
எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.
துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கோட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.
ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும், ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).
இறுதியாக இறைவனிடம் "இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம். மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். வேண்டுமானால், உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.
மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும். இது கட்டாயம்.
ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார். அதனால், கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும். கோவிலில் முன் அனுமதி பெறுவது மிக முக்கியம்
# Nanrigal kodi siththanarul
About temple & Details - Divine Mr.Sathasivam - 81448 42722
பணவளக்கலை - 98946 24425

Sunday, September 25, 2016

கட்டு மந்திரங்களும் முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும்

கட்டு மந்திரங்களும் முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும்

கட்டு மந்திரங்களும் முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும்  அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும்
சக்தி வாய்ந்த கட்டு மந்திரங்களும் அவற்றை முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் .. அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும் .. 
==================================== 

சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன 
வாழ்விடங்களில் இருந்து விலகி 
காடுகளிலும், மலைகளிலும் 
வாழ்ந்திருந்தனர்.அவர்களின் வாழ்நாள் தேடல் 
விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் 
சார்ந்ததாகவே இருந்தது. இத்தகைய தேடலில் 
அவர்கள் அடைந்த தெளிவும், முதிர்வும் 
அசாதாரணமானவை. 

தாங்கள் உணர்ந்த அரிய தகவல்கள் 
சுயநலவாதிகளிடமோ அல்லது 
பேராசைக்காரர்களிடமோ சென்று சேர்ந்து 
விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக 
இருந்தனர்.அதன் பொருட்டே தங்களின் 
பாடல்களை மறைபொருளாய் எழுதி 
வைத்தனர். 

சித்தரியலில் குருவே எல்லாவற்றுக்கும் 
ஆதாரமானவர் என தீர்க்கமாய் 
நம்பினர்.குருவானவர் தனத் தெளிவுகளை 
சீடர்களுக்கே அளித்தார்.மறைபொருளை 
கட்டவிழ்க்கும் வகையினையும் 
குருவிடமிருந்தே சீடர்கள் 
பெற்றனர்.இதனையே நாம் குருவருள் 
என்கிறோம். 

சதாரண மனிதர்களினால் செயல் 
படுத்தமுடியாத நுட்பங்கள், வழிமுறைகள் 
அவற்றின் அசாத்திய விளைவுகளை பற்றிய 
தகவல்களே இப்படி பாதுகாக்கப் 
பட்டது.இவற்றையே பொது மக்கள் சித்த 
ரகசியம் என்று அழைத்தனர். 
என்னுடைய புரிதலின்படி இந்த சித்த 
ரகசியங்களை ஆறு வகைகளாய் தொகுக்க 
நினைக்கிறேன். 

அவையாவன... 
உடல் கட்டு மந்திரங்கள் 
அபாயகரமான யந்திரங்கள் 
சாபநிவர்த்தி மந்திரங்கள் 
காயகற்ப வகைகள் 
இரசவாதம் 
தீட்சைகள் 
இரசவாதம் பற்றி முன்பே பல பதிவுகளில் 
பார்த்து விட்டபடியால் மற்ற வகைகளைப் 
பற்றிய எனது புரிதல்கள் மற்றும் 
தகவல்களை வரும் நாட்களில் பகிர்ந்து 
கொள்கிறேன். 

இனி பகிர இருக்கும் பல தகவல்கள் நம்ப 
இயலாத வகையிலும், பகுத்தறிவுக்கு 
ஒவ்வாதனவாகவும் இருக்கலாம்.இவற்றின் 
சாத்திய,அசாத்தியங்கள் ஆய்வுக்கும், 
விவாதத்திற்கும் உட்பட்டவை. இந்த 
முறைகளை செயல்படுத்தி பலன் காண்பதில 
நிறையவே நடைமுறை சிக்கல்கள் 
இருக்கின்றன.முறையான குருவின் அருளாசி 
மற்றும் வழி நடத்துதல் இருந்தால் மட்டுமே 
இவை சாத்தியமாகும்.எனவே இவற்றை ஒரு 
தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட 
வேண்டுகிறேன். 

சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்” 
------------------------------------------------------------- 
நமது உடலானது பஞ்ச பூதங்களின் 
சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச 
சக்திகளான கோள்கள், அட்டதிக்கு 
பாலகர்களுக்கு 
கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான 
மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் 
ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த 
கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே 
எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், 
சுயமாகவும் செயல்பட முடியும் என 
சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் 
தெளிவுகளுமே இந்த பதிவு... 

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து 
உடலை வெளியேற்றுவது, வெளியேறிய 
பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு 
அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு 
மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் 
கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது 
அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் 
மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக 
குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் 
என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், 
அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் 
கூறப் பட்டிருக்கிறது. 

இனி நவ கோள்களின் உடல் கட்டு 
மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு 
மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த 
பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க 
வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். 

அதாவது... 
"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய 
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன் 
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா 
தனி தனியாய் உருத்தான் போடு போடே" 
- அகத்தியர் - 

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம் 
நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம் 

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம் 

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் 
ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது 

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது 

அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது 

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது 

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது 

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் 
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் 

திக்கு கட்டு 
------------------- 
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் 
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு 
முன்புறம் போடவும் 
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும் 
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும் 
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும் 
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம் 
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் 
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே 
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே 
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே 
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே 
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே 
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே 
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே 
பொருப்பு இருப்பாக கொண்டேனே 
சிவன் சிவமாக கொண்டேன் 
சிவன் இருந்தவாறே 

உடல்கட்டு. 
------------------- 
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல் 
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல் 
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல் 
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல் 
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா 
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்) 
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர 
கீழ்க்கண்டவை நடக்கும் 
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும் 
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும் 
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும் 
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும் 
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும் 
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது 
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்........... 

சிவ மகாமந்திரம் ... முயன்று பாருங்கள் 
-------------------------------------------------------------------- 
"ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்" 
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது: 
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது. 
இதை நீக்க சிவ மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம் - அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும். 

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் . 
"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த 
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே! 
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை 
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே 
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே 
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே! 
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! 
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும். 

அனுமாரின் வசியக் கட்டு மந்திரம் ... 
---------------------------------------------------------- 
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா, 
லங்காபுரி ராவண சம்ஹாரா, 
சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா, 
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு 
ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா" 
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார்அகத்தியர். 

சகலத்திர்கும் கட்டு மந்திரம் ... 
------------------------------------------------ 
"ஓம் பஹவதி ப்ய்ரவி 
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு 
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு 
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி 
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு 
சத்ருவை கட்டு எதிரியை கட்டு 
எங்கேயும் கட்டு 
சிங்க் வங்க் லங்க் லங்க் 
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம" 
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா” 
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன். 

சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
--------------------------------------------------------- 
"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு 
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம் 
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" 
என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் 
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். 

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
--------------------------------------------------------- 
"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர 
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம் 
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" 
என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் 
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். 

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------------ 
"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர 
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே" 
- அகத்தியர் - 

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் 
றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் 
செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------- 
"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு 
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம் 
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்" 
- அகத்தியர் - 

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு 
சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் 
உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
-------------------------------------------------------- 
"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு 
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம் 
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் 
மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று 
அன்பாக லட்சம் உரு செபித்தால் 
குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
-------------------------------------------------------------- 
"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு 
இறீம் றீம் நசி மசி யென்று போடே" 
- அகத்தியர் - 

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு 
செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு 
தீரும் என்கிறார் அகத்தியர். 

சனிக்கான உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------------- 
"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு 
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி 
தேடுவாய் லட்சமுருப் போடு போடே" 
- அகத்தியர் - 

பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு 
செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------------- 
"திறமான இராகுவுட கட்டுதீர 
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம் 
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்" 
- அகத்தியர் - 

திறமான இராகு பகவானின் உடல் கட்டு 
மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" 
என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் 
இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------ 
"சாடுவாய் கேதுவுட கட்டு தீர 
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் 
போடே" 
- அகத்தியர் - 

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு 
செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு 
தீரும் என்கிறார் அகதியர். 

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் 
மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் 
கட்டு மந்திரங்களை அகத்தியர் 
அருளியிருக்கிறார். 

குளிகன் உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------- 
"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க 
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம் 
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா" 
- அகத்தியர் - 

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு 
"ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு 
செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம். 
------------------------------------------------------------- 
"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப் 
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு 
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும் 
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் 
என்றும் 
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும் 
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும் 
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும் 
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே" 
- அகத்தியர் - 

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் 
புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் 
வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் 
பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது 
லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே 
அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் 
என்கிறார். 

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் 
உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் 
பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ 
கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் 
அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது 
உடல் முழுமையாக உனது 
கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார். 

உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை 
---------------------------------------------------------------- 
சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் 
நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் 
மந்திரங்கள் மட்டுமே கூறப் 
பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை 
செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு 
கொண்டு வருவது போன்றவைகள் 
குருவினால் மட்டுமே கூறிட இயலும். 
தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை 
வலியுறுத்துவதன் பின்னனி இதுதான். 
இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் 
முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை 
இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு 
பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் 
மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி 
பார்ப்போம். 

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள் 
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு 
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும் 
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு 
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா 
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம் 
திருவான வினாயகரின் சுழியை முந்திச் 
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே" 
- அகத்தியர் - 

குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்" 
என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் 
முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் 
என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், 
சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே 
அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், 
மேலும் திருவான வினாயகரின் சுழியை 
முதலில் செபித்தே தனது மந்திரங்கள் 
அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று 
சொல்கிறார். 

"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு 
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு 
வடக்குமுகம் இருந்துலட்சம் 
உருத்தான்போடு" 
- அகத்தியர் - 

மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு 
உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து 
ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு 
நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க 
வேண்டும் என்கிறார். 

இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய 
தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும், 
முயற்சியும் உள்ள எவரும் குருவருளை 
வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன் 
படுத்திடலாம். 

பின் குறிப்பு : 
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள் 
அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட 
நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத 
நம்பிக்கைகளை விதைப்பதோ எனது 
நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை, 
பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும், 
விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும் 
தெளிவுகள் கிடைக்கலாம். 

சிவ சிவ சிவ சிவ நமசிவாய................. 

முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்.

Monday, September 19, 2016

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி? 
.
காலக்கெடு !
மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக்கும் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக் கொண்டால், முக்கியமில்லாத பணிகள் மறந்து போய், முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் பதிந்து அதனை முடிக்க வைத்துவிடும்.
.
தூக்கம் !
நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவதை பாதிக்கும் காரணிகளாகும்.
.
சீரான முன்னேற்றம் !
மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால், பணிகளில் சிறு சிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சிதறுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.
.
இதயமும் மனமும் !
இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமுறையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடியும். பணியினை அனுபவித்து, ஈடுபடுத்திக் கொண்டு, ரசித்து செய்யும் போது, மனம் உண்மையிலேயே அதில் முழுமையாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.

Sunday, July 31, 2016

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை எல்லாம் இன்பமயம்

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும்  இல்லை எல்லாம் இன்பமயம்

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று மகான் ரமணர் கூறுவார்.
எங்கே எண்ணங்கள் தோன்றுகின்றனவோ, எங்கே அவை தொடங்குகின்றனவோ,
அங்கே உள்ள ஒன்றையே நாம் மனம் என்கிறோம்.
மனம் என்பது தனியே ஒன்று இருப்பதில்லை அது எண்ணங்களையே சார்ந்துதிருக்கிறது. நான் என்ற எண்ணத்தையே முதன்மையாய்க் கொண்டது. அகத்தில் ஆன்மாவையும் , புறத்தில் உலகத்தையும் அது கொண்டிருக்கிறது. அது தனித்திருப்பத்தில்லை அதற்கெண தனியாக ஒரு இடம் கிடையாது.
எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை தற்போது பயனற்றதாய் உள்ள எண்ணம் அதுவே பிறகு பயனுள்ளதாயிருக்கும்.
நான்,எனது,என்னுடைய,எனக்கு என்ற ஒவ்வொரு எண்ணத்திலும் ஒரு அகந்தை இருக்கிறது.மணதுக்கென வலிமையுண்டு அது எண்ணங்கள்ற்ற நிலையில் அளவற்ற வலிமையுடன் இருக்கும். நாம் மனதை பயன்படுத்தி நம்மையறிவதில்லை நம்மை சுற்றியுள்ள புறப்பொருள்களையே அறிகிறோம். ஞானம் வந்துவிட்டால் இந்த மனம் தனக்குள் இந்த பிரபஞ்சத்தை காணும். பிரபஞ்சத்தில் தன்னைக் கண்டுக்கொள்ளும்.
மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை. ஆசையை விடவேண்டும். சொல்லற்று செயல்லற்று சும்மாயிருக்கும் நிலையை அடையவேண்டும். தியானத்தின் மூலமே மனதை வசப்படுத்த முடியும். அதனால் தான் சும்மாயிரு என்கிறது பல மகான்களின் நூல்கள். சும்மா இருப்பது என்பதே தவம் அதை வள்ளல் பெருமான்கெஞ்சுவதை பாருங்கள்
இன்று வருமோ? நாளை வருமோ?
அல்லது மற்று என்றுதான் வருமோ?
துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்கு உள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்.
அதையே பத்தரகிரியார் சும்மா இருப்பதை நினைத்து இப்படி ஏங்குகிறார்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்.
ஒரு பக்கதனுடைய மனம் அறிகிறது தனக்குள் மனமாகவும் ,பிராணனாகவும் , ஆன்மாவாகாவும் இருப்பது இறைவனே. அவனுக்குள் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது அவனுடைய துடிப்பும், ஏக்கமும், அருள்தாகமும் அதைச் சாத்தியப்படுத்துகிறது என்று ராமகிருஷ்ணர் கூறுகிறார்.அகந்தை ஒரு திரை அந்தத் திரையை விலகினால், அதுவரை அறிந்திராதவைகளை அறிய முடியும், கணமுடியாத காட்சிகளை காணமுடியும், இறைக்காட்சி உட்பட.

Yours Happily
Jc.Dr.Star Anand ram
www.moneyattraction.in
9790044225

Saturday, June 18, 2016

முதுகு நலமாக இருக்க 10 யோசனைகள்:

முதுகு நலமாக இருக்க 10 யோசனைகள்:

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

2. அமரும்போது வளையாதீர்கள்.

3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்

4. சுருண்டு படுக்காதீர்கள்।

5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்

வேதம் என்றால் என்ன?

வேதம் என்றால் என்ன?



எதற்கு?


இந்தியப் பண்பாட்டுக்குப் பழமையான ஆதாரமான முதல்நூல் வேதம்.

உலகிலேயே மிகவும் பழமையான நூல் வேதம் என்பதைச் சரித்திர வல்லுனர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

வேதம் என்றால் ஞானம். பரம்ப்ருளை அறிவிக்கும் வழி, பேரறிவைப் பார்த்தல் என்ற பல பொருள்கள் உண்டு.

இவ்வுலக நன்னெறியையும் தெய்வீக நெறியையும் அறிவிக்கும் நூல் வேதம்.

அந்த அந்த ஸ்வரங்களைத் தவறாமல் உச்சரித்தால் பயன் தரக்கூடிய வல்லமை பெற்ற மந்திரங்களைக் கொண்ட பழநூலே வேதமாகும்.

மாந்தர் நல்வழியில் வாழ்ந்து விரும்பியவற்றை பெறவும் தீமைகளை விலக்கவும் தெய்விகமான உபாயங்களை அறிவிக்கும் கிரந்தமே வேதம்.

இஷ்டப்ராப்தி – அநிஷ்டபரிஹாரயோ:, அலௌகிகம் உபாயம் யோ க்ரந்தோ வேதயதி ஸ வேத: என்று வேத பாஷ்யகாரரான ஸாயணர் என்ற மஹரிஷி வேத்த்துக்கு லக்ஷணம் கூறியிருக்கிறார்.

மாந்தரைத் தெய்வீக நெறியில் வாழ வழி கூறுவது வேதம். இன்னும் வைணவர்கள் ஒருவரை ஒருவர் “ தேவரீர் “ என்று சொல்லி வழங்குவதைப் பார்க்கிறோம். மாந்தரை மனிதராக வாழ வழி காட்டுபவை. வேத ரிஷிகள் அல்லாத பிறர் இயற்றிய நூலகள் மாந்தரை விலங்கு வழியில் செலுத்தும் நூல்களையும் இன்று சிலர் எழுதுவதைக் காண்கிறோம்.

“ பகவத் ஸங்கல்பம் – இறைவனது திருவுள்ளம் என்பதை மையமாகப் பற்றிக் கொண்டு நன்னெறியில் வாழ்ந்துள்ள பலரை நாம் நேரில் கண்டிருக்கிறோம். நல்ல வாழ்வுக்கு வழி காட்டும் வேதத்தையே அவர்கள் ந்டைமுறையில் கடைப்பிடித்திருந்தார்கள்.

யுகம் யுகமாக என்றும் நிலைத்துள்ள வேத மந்திரங்களை ரிஷிகள் நெடும் தவத்தினாலும் மன ஆற்றலினாலும் கண்டார்கள்.

மிகவும் நுட்பமான அறிவு வடிவில் இருக்கும் வாக்கே “பரா என்பது: இதுதான் வேதம், ரிஷிகள் இதைக் கண்டதும் இந்த வாக்கு “பஸ்யந்தி என்ற பெயர் பெற்றது. சொல் வடிவாகத் தோன்றும் வேதம் இது. இதற்கு இடம் நாபி {தொப்புல்} இது ஸ்தூல வடிவம் கொள்ளும் போது “ மத்யமா வாக்கு “ ஆகிறது.

இதற்கு இடம் இருதயம். இதுவே நெஞ்சு வழியாக வெளிவரும்போது ஒலி வடிவம் பெற்று “ வைகரீ வாக்கு “ ஆகிறது.

வேதம் அநாதி, என்றும் உள்ளது; இறைவனின் மூச்சுக் காற்று இது. வானத்தில் எப்போதும் ஒலிவடிவமாக இது மறைந்துள்ளது.

“மலைக் குகைகளிலும், ஆறுகள் சங்கமிக்கும் இடங்களிலும் பேரறிவு வாய்ந்த ரிஷிகள், வேத மந்திரங்களை வெளியிடப் பிறந்தார்கள். – உபஹ்வரே கிரீணாம், ஸங்கதே ச நதீநாம், தியாவிப்ரோ அஜாயத – என்று ரிக்வேதம் கூறுகிறது. நம் சமயப் பெரியோர்கள் யாவரும் இத்தகைய புனித இடங்களிலேயே அவதாரம் செய்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

“ வேதம் முழுவதுமே மாந்தரின் நற்கடமையைப் போதிக்கிறது “ என்பது ஜைமினியின் கொள்கை. {மீமாம்ஸா ஸூத்ரம், 1-2-1}

“ ரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டவர்கள். இயற்றியவர்களல்லர் “ என்று நிருத்தம் கூறுகிறது. அந்த அந்தக் காலத்தில் முன்பு இருந்தபடியே வேத மந்திரங்கள் முனிவர் வாயிலாக வெளி வருகின்றன.

அளவற்று ஒன்றாக இருந்த வேதத்தை வியாச மஹரிஷி உலக நன்மைக்காக மந்திரங்களைத் தொகுத்து நால்வகையாக வகுத்தார்.

“ ரிக், யஜுர், சாம, அதர்வண “ என்று வேதம் நான்காக வகுக்கப் பெற்றதைப் புருஷ ஸூக்தம் தெரிவிக்கிறது.

இந்த நான்கு வேதங்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொண்டவை.

ரிக் வேதம் தேவர்களைப் பற்றிய துதிகளின் தொகுப்பு;

யஜுர் வேதம் வேள்வி முறைகளை வர்ணித்து உரைப்பது;

ஸாம வேதம் வேத மந்திரங்களை இசைத்துப் பாடுவது;

அதர்வண வேதம் மாந்தர் இந்த உலகில் நோயின்றி நீண்ட வாழ்வு வாழ உதவும் மூலிகைகளைப் பற்றியும், மருத்துவம் பற்றியும், ஆயுளை நீட்க்கும் மந்திரங்கள் பற்றியும் விரிவாக கூறுவது. ஜோதிடம், மாந்திரீகம், தாந்திரீகம் எல்லாம் இதில் அடக்கம்.

இந்த வேதங்களுக்கும் அவற்றின் அங்கங்களுக்கும் உரை இயற்றிய வேத பாஷ்யகாரர்கள் எழுபது பேர் விளங்குகிறார்கள்.

வேதப் பகுதிகளில் ஐயத்துக்கு இடமான பொருள்களை நன்கு விளக்குவது – பிராம்மணம் என்ற நூல்.

மூல நூலான ஒவ்வொரு வேத சமிதைக்கும் அதைச் சார்ந்த பிராம்மணம் உண்டு.

வேதவ்யாக்யா நரூபத்வாத் ப்ராஹ்மணஸ்ய – வேதத்துக்கு உரையாக விங்குவது ப்ராஹ்மணம் என்று ஸாயனர் கூருகிறார்.

 பிராம்மணத்துடன் இணைந்தது ஆரண்யகம் என்ற பகுதி.

ஆற்றங்கரையில் தவ வனங்களில் ரிஷிகள் ஆராய்ந்து மிக்க அமைதியுடன் கண்ட உண்மைகளை ஆரண்யகம் அறிவிக்கிறது.

ஆரண்யகத்தின் கடைசியில் வருவது உபநிஷத் – முடிந்த முடிவான ஆராய்ச்சி உண்மைகளைக் கூறுவது இதனால்தான் உபநிஷத்துக்கு “ வேதாந்தம் “ என்று பெயர். இந்த விதிக்கு விலக்காக, சுக்ல யஜுர் வேதத்து வாஜஸ்னேய ஸமிதையின் விளங்குவது – ஈசாவாஸ்ய உபநிஷதம்.

சதபதப் பிராம்மணத்தின் கடைசியில் ஆரண்யகமும் உபநிஷதமுமாக விளங்குவது பிருகதாரண்யகோபநிஷத்.

வேத மந்திரங்களுக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் அது மந்திரங்களின் குற்றமல்ல. குருடனுக்கு எதிரே இருக்கும் கம்பம் தெரியா விட்டால் அது கம்பத்தின் குற்றமல்ல குருடன் இயற்றிய குற்றமாகும். என்று யாஸ்கர் உரைக்கிறார்.

வேத மந்திரங்களுக்கு முதன் முதலாக உரை வகுத்தவர் யாஸ்கர்; அவர் பழமையான ஸம்ஸ்கிருத மொழி இலக்கணத்தில் மிகவும் வல்லவர்.

ரிக் வேத ஸூக்தங்கள் ஒரே பரம்பொருள் தெய்வீக நெறியில் கடமைகளை ஆற்றுவதற்காக அக்கினி, இந்திரன், சோமன், வருணன், விஷ்ணு முதலிய பல வடிவங்களில் தோன்றுவதை வர்ணிக்கின்றன.

அக்கினி வானத்தில் சூரியனாகவும், இடைவெளியில் வாயுவாகவும் பூவுலகில் நெருப்பாகவும் விளங்குகிறான். அவனே வீட்டைக் காக்கும் தெய்வம்.

வருணன் கடல்வாழ் தெய்வம்; மாந்தரின் பாவ புண்ணியங்களை அவன் காண்கிறான்; வருணபாசம் பாவிகளைக் கட்டுப்படுத்துகிறது.

மூவடியினால் மூவுலகங்களிலும் வியாபித்த விஷ்ணு கடுமையான இடங்களிலும் மலைக் குகைகளிலும் திரிகிறான்; இவனுடைய ஈரடிகளை மாந்தர் இவ்வுலகில் காண இயலும்; மூன்றாவது திருவடி, மிகவும் உயர்ந்த விண்ணுலகில் விளங்குகிறது; வெள்ளத்தைப் பருகிப் பேரானந்தம் எய்துகின்றனர்.

வாயுதேவன் காதைச் செவிபடுத்தும் இடியோசையை உண்டாக்கி மின்னலுடன் மழையைப் பொழியத் தூண்டுகிறான். புயற்காற்றினால் பெரிய பெரிய மரங்கள் ஆடி வேரற்று விழும் போது இவனுடைய கடும் வடிவத்தை நாம் காண்கிறோம்.

இந்திரன் தெய்வ உலகுக்கு அரசனாக விளங்கி மாந்தரின் நலனுக்காக மழையைப் பொழிகிறான். தனக்கு இடையூறு இழைக்கும் பாவ வடிவினனான விருத்திரனை அழித்து அவன் வெற்றிவாகை சூடுகிறான்.

நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு மருத்துவமும் ஆயுதச் சிகிச்சையும் செய்து உதவுகிற தெய்வீக மருத்துவ இரட்டையர் – அஸ்வினி தேவர் ஆவர்.

இவ்வாறு தேவர்கள் பல வடிவங்களில் உலகுக்குக் காப்பாக இருந்து துணைபுரிகின்றனர்.

கிடைக்கும் பொருளைக் கொண்டு போதுமென்று மனதுடன் அமைதியாக வாழ்வாயாக – வித்தே ரமஸ்வ பஹுமந்யமாந: என்று வேதம் கூறுகிறது.

சூதாட்டம் வேண்டாம்; வேளான்மை செய்து தொழில் செய்து பிழைப்பாயாக – அக்ஷைர் பா திவ்ய:, க்ருஷிமித் க்ருஷஸ்வ என்கிறது வேதம்.

“ தன்னிடம் மிகுதியாக உள்ளதை மாந்தர் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். பட்டினி இருந்து சாவதற்காகத் தேவர்கள் பசியை படைக்கவில்லை. ஈயாப் பித்தனும் ஒரு நாள் இறந்தே போவான். பிறருக்குக் கொடுப்பவனது செல்வம் என்றும் குறைவதில்லை. பிறருக்குச் சோறு இடாதவனுக்கு ஆபத்தில் உதவ ஈ காக்கையும் வராது எனவே கொடை என்பது சிறந்த பண்பு; அனைவருக்கும் இந்த பண்பு இராது. இரண்டு கைகள் ஒரே ஆற்றலுடன் வேலை செய்வதில்லை; இரட்டையராக இருப்பினும் ஒருவருக்கு உள்ள ஆற்றல் மற்றொருவருக்கு இருப்பது இல்லை; அண்ணன் தம்பியராயினும் ஒருவரைப் போல் மற்றவர் கொடுப்பதில்லை என்று ரிக் வேதம் { 10-1-17} கூறுகிறது.


வேதம் நமது என்றும் அழியாத பெருஞ்செல்வம். அதைக் காத்துப் போற்றி மகிழ்வது நமது இன்றிமையாத கடமை; பேரின்பம் நல்கும் கடமையும் கூட.