Tuesday, June 2, 2015

சாதுர்யப் பேச்சு!!!!

சாதுர்யப் பேச்சு!!!!
.
ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.
.
அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.
இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
.
கடைசியில் ஒருவன் கேட்டான்
.
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
.
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
.
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.
சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும் !!!
urs
www.v4all.org

No comments:

Post a Comment