Sunday, June 14, 2015

பிரமிட் பற்றிய பல மர்மங்கள்..!

பிரமிட் பற்றிய பல மர்மங்கள்..!
----------------------------------------------------
உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில்
ஒன்று பிரமிடு. சீனப் பெருஞ்சுவரைப்
போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக்
கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும்
மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை
எதிர்கொண்டும், அதனால் எந்தவித
பாதிப்புகளும் அடையாமல், தொன்மை
உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின்
அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து
நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை
உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக
இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான
கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம்
என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே
பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற,
விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற
என்று காலம் காலமாகத் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது
எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில்
அக்காலத்தில் இறந்த மன்னர்
போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக
வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’
என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள்
இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர
பல்வேறு புதையல்களும் அங்கே
இருக்கக்கூடும்” என்பதுதான்.
ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும்
உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா
அவ்வளவு பெரிய கட்டிடங்களைக்
கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள்
சிந்தனைக்குரியன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான
மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ
கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல,
தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம்
பாலைவனமும், மறுபுறம் கடலும் தான்
இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால்
இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்
பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து
கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய
உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பா
ர்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும்,
விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்ற
னர். மேலும் இந்த அளவுக்கு அருகில்
பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி
எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று
வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு
தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய
பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த
ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி
இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று
இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை
உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த
நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான்
இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார்.
தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில்
தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த அவர்,
பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின்
பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து
கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக
வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும்
நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும்
தெரிவித்தார்.
ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள்
மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை
விடப் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப்
பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால்
கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர். இந்தக்
கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும்
ரஷ்ய விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப்
போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க்
கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக்
கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க்
கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும்
ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற
அமைப்புகளுக்கும், எகிப்தின்
பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.
பிரமிடுகளின் மர்மங்கள் தொடர்கின்றன.
பிரமிடு என்பது பட்டைக்கூம்பு வடிவில்
அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன்
அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும்.
எனினும், இது முக்கோணம், வேறுவகைப்
பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும்
அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில்
பெரும் பகுதி அடிப்பகுதியில்
அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு
மையம் நிலத்துக்கு அண்மையில்
அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால
நாகரிக மக்கள் உறுதியான நினைவுச்
சின்னங்களை அமைப்பதற்கு இந்த
வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய
அமைப்புக்கள் பிரமிடுகளாகவே இருந்தன.
முதலில் எகிப்தில் டாசுர் நக்குரோபோலிசில்
உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின்
பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக
இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள்
இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய
பிரமிடு மட்டுமே. இது பெரும்பாலும்
சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில
உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால்
ஆனவை.
கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி
பிரமிடில் 2.5 தொன்கள் (5,500 lb) இலிருந்து
15 தொன்கள் (33,000 lb) வரை எடையுள்ள
1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா
நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது. இதன் அடி
சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230
மீ (755 அடி) நீளமுடையதாக உள்ளது.இதன்
உயரம் கட்டப்பட்டபோது 146.5 மீ (488
அடி)யாக இருந்தது. ஆனால் உச்சியில் இருந்த
வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு
கெய்ரோவில் கட்டுமானத்திற்கு
பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம்
137 மீ (455 அடி)யாக உள்ளது. இருப்பினும்
இதுவே மிக உயரமான பிரமிடாக
விளங்குகிறது.
உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், கனவளவு
அடிப்படையில் மிகப் பெரியது
மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய
பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும்
அகழப்பட்டு வருகின்றது.
பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர்,
மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக
மக்களால் அமைக்கப்பட்டன.
பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம்
முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு
அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின்
நெவாடா மாநில லாஸ் வேகஸ் நகரில் லக்சர்
ஓட்டல் எகிப்திய பிரமிடின் வடிவமைப்பில்
கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது.
தொன்மையானக் கட்டிடங்கள்
********************************************
மெசொப்பொத்தேமியா
மெசொப்பொத்தேமியர்கள் சிக்குரத்கள்
எனப்பட்ட துவக்க கால பிரமிடுகளை
முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய
வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப்
பயன்படுத்திக் கட்டப்பட்டமையால்
அனைத்தும் அழிந்துபட்டன. இத்தகைய
சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள்,
ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும்
அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் கட்டினர்.
ஒவொரு சிக்குரத்தும் கோயில் வளாகம்
ஒன்றின் பகுதியாக இருந்தது.
எகிப்து
-----------
எகிப்திய பிரமிடுகளே மிகவும்
புகழ்பெற்றவையும் அறியப்பட்டவையும்
ஆகும். செங்கல் அல்லது பாறைகளால்
கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய
கட்டிடங்களில் ஒன்றாக அமைந்தன.
பெரும்பாலான பிரமிடுகளின் மேற்பரப்புகள்
வெள்ளைநிற சுண்ணக்கற்களால் மிகவும்
எதிரொளிக்குமாறு தீட்டப்பட்டிருந்தன.
இதனால் தொலைவிலிருந்து பளபளப்புடன்
காணப்பட்டன. முகட்டுக்கல் அல்லது சிகரம்
மட்டும் கருங்கல் அல்லது
எரிமலைப்பாறையால் ஆனதாகவும் தங்கம்,
வெள்ளி அல்லது தங்கம்,வெள்ளியின் கலப்பு
உலோகத்தினால் பூசப்பட்டும் இருந்தது.
கி.மு 2700க்குப் பிறகு கட்டத் துவங்கிய
எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக்
கட்டினர். மூன்றாம் வம்ச காலத்தில் யோசர்
மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை
ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு
ஒன்றை கட்டினர். எகிப்தின் பெரிய பிரமிடுகள்
கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான
பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப்
புறத்திலேயே கட்டப்பட்டன.
2008ஆம் ஆண்டுப்படி , இதுவரை 135
பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.
எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசாவின்
பெரிய பிரமிட்டின் அடித்தளம் 52,600 சதுர
மீற்றர்கள் (566,000 sq ft) பரப்பளவில்
அமைந்துள்ளது. இது பண்டைய உலக
அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
முகட்டில் பதித்திருந்த சுண்ணக்கற்களும்
கடற்சங்குகளும்[6] காலப்போக்கில்
விழுந்துவிட்டன அல்லது திருடப்பட்டு
கெய்ரோவில் கட்டிடங்களுக்குப்
பயன்படுத்தப்பட்டன.
சூடான்
-----------
பிரமிடுகள் எகிப்துடனேயே
அடையாளப்படுத்தப் பட்டாலும் உலகின் மிகக்
கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச்
சூடான் விளங்குகிறது. இங்கு 220 பிரமிடுகள்
இன்றும் உள்ளன.[8] நுபியர்கள் சூடானின்
மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை
அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ
அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக
இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய
பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன.
அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான
கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள்
கட்டப்பட்டு வந்தன.
நைஜீரியா
---------------
அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு
வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக்
காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து
பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட
அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி
உயரத்தையும் கொண்டுள்ளது.
அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில்
கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள்
வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை
கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின்
இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள்
வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன்
அடையாளமாக ஒரு கம்பு அங்கு
நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக
ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன.
இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால்
அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய
வேண்டியிருந்தது.
கிரீசு
--------
கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர்
பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு
கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில்
ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ
(12 மைல்) தொலைவில் தென்மேற்கே
இருந்ததாகவும் அர்கோசு ஆட்சிக்காகப்
போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை
கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை
இரண்டுமே பிரமிடுகளை ஒத்து
இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை
கிடைக்கப்பெறவில்லை.

காவலிபாளையம் கெந்த வங்குருவா்'s photo.
இந்தியாவில்
---------------------
சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில்
கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ
கோபுரங்களுடன் கூடிய பல பெரும்
கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில்
உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்,
கங்கைகொண்ட சோழபுரம் மற்றும்
தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் சிறீரங்கம் வட்டத்திலுள்ள
அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில்
சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ
சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில்
யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக
1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்
விரிவாக்கமாக 2004ஆம் ஆண்டு
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும்
தாராசுரம் கோயிலும் இணைக்கப்பட்டன.
இந்தோனேசியா
---------------------------
இந்தோனேசியாவின் ஆத்திரேலேசிய பாறைக்
கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல்
மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப்
புந்தென் பெருந்தக் எனப்பட்ட
மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு
கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு
சாவாவின் குனுங் படாங் பகுதியிலும்
சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும்
காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த
இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக
உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின்
அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள்
கட்டப்பட்டன.
மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில்
8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய
பிரமிடு ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா
கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின்
தாக்கத்துடன் கட்டப்பட்டன.
எகிப்த் பிரமிட் பற்றிய மேலும் சில தகவல் பிரமிட் உள்ள இடத்திலிருந்து 10-15 தொலைவில் பல பல பிரமிட் கள் உள்ளது. அவையாவும் அரச பரம்பரையின் வம்சாவழியை சார்ந்தவர்கள் . முக்கிய பிரமிட் இருக்கும் இடத்தில் மொத்தம 7 உள்ளது ,அதில்முக்கிய 3 தான் நாம் பார்ப்பது. மூன்றில் முதன்மையாக இருக்கும் மிக பெரியதின் உச்சியை பார்த்தால்மட்டும், போல்ட் செய்ததுபோல் இருக்கும். முதலில் முக்கிய மூன்று பிரமிட்களும் முழுமையாக போல்ட் செய்து தான் இருந்தது. பின்நாளில் வந்த மிக பெரிய பூகம்பம் எகிப்தில் வந்த போது ஏற்ப்பட்ட அழிவில் பிரமிட் மேல் உள்ள போல்ட் மட்டுமே சரிந்தது. மீது மூன்று பிரமிட்கள் சேதம் அடைந்தன்.. முக்கிய மூன்றில் ஒன்றில் மட்டும் பொது மக்கள் உள்ளேசென்று பார்க்க அனுமதி. உள்ளே 300-500 மீட்டர் வரைசெல்லும் பாதை,பிறது 1000 சதுரஅடி பரப்பளவு உள்ள சம தளத்தில் பன்டைகால மீதமுள்ள நிகழ்வை பார்க்களாம் ஆராய்ச்சியின் போது அங்கு எடுத்த பொருள் ,தங்கத்தால் செய்த அறை ,மம்மி முதலியன எகிப்து அருங்காச்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment