எந்தவொரு உடல்
உறுப்பும் , ரத்தம் அதிகமாக
செல்லாமல் இருந்தோலோ,
அதிகப்படியான
வேலையை
செய்யும்போதோ அதில்
பாதிப்பு ஏற்படுகிறது.
கண்களை பாதுகாக்க:
1. உடல் உறுப்பில் மிக
முக்கியமானது கண் .
சாதாரணமாக நாம்
பார்ப்பதால் கண்களுக்கு
எந்த பாதிப்பும்
ஏற்படுவதில்லை . ஆனால்,
கண்களுக்கு மிக அருகில்
அதிக ஒலியுடன் கூடிய
கணினியைத் தொடர்ந்து
பல மணிநேரங்கள்
பார்த்துக்
கொண்டிருப்பதால் கண்
பாதிக்கப்படுகிறது .
2. கண்களுக்கு ஓய்வு
என்றால் கண்களுக்கு
இருளைக் கொடுக்க
வேண்டும். கண்களுக்கு
இருளைக் கொடுப்பது
மட்டுமல்லாமல் , மனதின்
சிந்தனையை வேறு
இடத்திற்கு மாற்ற
வேண்டும்.
3. கண்களுக்கு ஓய்வளிக்க
பல ஆசனங்கள் உள்ளது .
கண்களுக்கு அதிக ரத்த
ஓட்டம் அளிக்க தலைகீழ்
ஆசனம் உள்ளது . சிரசாசனம்
செய்வதால் கண்களின்
பார்வை அதிகரிக்கும் .
4. மேலும், கண்களுக்கு
திராடகம் என்ற ஒரு
பயிற்சி உள்ளது .
அதாவது , ஒரு இருளான
அறையில் மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்து அதைப்
பார்த்துக் கொண்டே
இருந்தால் கண்களுக்கு
அதிகமான சக்திக்
கிடைக்கும் .
7. முக்கியமான விஷயம்
என்னவென்றால், தினமும் 8
மணி நேரம் நிம்மதியாகத்
தூங்க வேண்டும்.
அதுவும் மிகவும்
இருளான ஒரு அறையில்
தூங்குவதே கண்களுக்கு
ஒரு நல்ல ஓய்வாக
அமையும் .
8. பின் தூங்கி முன்
எழுதல் மிகவும் நல்லது .
அதாவது சீக்கிரமாகத்
தூங்கி அதிகாலையில்
எழுவது உடலுக்கும்
புத்துணர்ச்சி கிட்டும்.
9. அலுவலகத்தில்
பணியாற்றிக்
கொண்டிருக்கும் போது
இடையே உங்கள்
கண்களுக்கு ஓய்வு
தேவைப்படும்போது,
உள்ளங்கைகள்
இரண்டையும் , நமது
கண்களில் அழுத்தி
சிறிது நேரம்
வைத்திருந்து மூச்சை
உள்ளிழுத்து
வெளிவிட்டால் நல்ல பலன்
கிடைக்கும் .
10. அப்படி செய்யும்போது
உள்ளங்கைகளை
எடுத்துவிட்டு சிறிது
நேரம் கழித்து மெதுவாக
கண்களைத் திறக்க
வேண்டும்.
11. மேலும், இதனை வேறு
முறையிலும் செய்யலாம்.
அதற்கு அதிக பலன்
கிட்டும் . அதாவது, ஒரு
ஈரத் துணியை நனைத்து
பின்பக்க கழுத்தில்
போட்டுவிட்டு சிறிது
எண்ணெயை
புருவங்களில்
தடவிவிட்டு இரண்டு
உள்ளங்கைகளையும்
கண்களில்
அழுத்தும்போது
உங்களது கண்களுக்கு
குளிர்ச்சியும், ஓய்வும்
ஒரு சேர கிடைக்கும் .
12. புருவம் என்பது,
கண்களுக்குத்
தேவையான வெப்பத்தை
சீராக வைத்திருக்க
அமைக்கப்பட்ட ஒரு இயற்கை
கொடையாகும்.
புருவங்களின்
சூட்டினால்தான்
கண்களின் குவியங்கள்
எளிதாக சுருங்கி
விரிகின்றன .
13. ஆனால், அதை விட
அதிகமான வெப்பத்தை நம்
கண்கள் கணினியில்
இருந்து பெற்று
வருகிறது . எனவே அந்த
வெப்பத்தைக் குறைக்க
புருவங்களில் எண்ணெய்
வைப்பது கண்களுக்கு
குளிர்ச்சியை அளிக்கும்.
14. பொதுவாக
கண்களுக்கு ஓய்வு
என்றால் , எதையும் உற்று
அல்லது கூர்ந்து
பார்க்காமல் இருந்தாலேப்
போதும் . அதாவது
சாதாரணமாக கண்களால்
எந்தப் பொருளையும்
பார்ப்பதால் கண்களுக்கு
எந்த பாதிப்பும் ஏற்படாது.
15. ஆனால் எதையாவது
உற்றுப் பார்க்கும்
போதுதான் அதற்கு
பாதிப்பு ஏற்படுகிறது.
சிறிது நேரம் எந்தப்
பொருளையும் உற்றுப்
பார்காகமல் , எதைப்
பற்றியும் சிந்திக்காமல்
இருப்பதும் நல்ல
பயிற்சிதான் .
16. அதேப்போல மதியம்
உணவு இடைவேளையின்
போது சாப்பிட்டுவிட்டு
உடனடியாக கணினி முன்
அமர்வதைவிட , சாப்பிட்ட
பின் ஒரு 15 நிமிடம் அமரும்
நாற்காலியிலேயே
தளர்வாக அமர்ந்தபடி கண்
மூடி இருப்பது ஏன் 10
நிமிடம் தூங்குவது கூட
மிகவும் நல்லது .
17. ஒரு நாளைக்குத்
தேவையான சக்தியை
இந்த 15 நிமிட தூக்கத்தில்
உடல் பெற்று விடும்.
அதற்காக படுக்கையில்
படுத்து தூங்கக் கூடாது .
18. அமர்ந்த படி தளர்வாக 15
நிமிடம்
அமர்ந்திருந்தாலும் கூட
நல்லது. இப்படி செய்வதால்
மாலையிலும் நீங்கள்
சுறுசுறுப்பாக இருக்க
முடியும்
No comments:
Post a Comment