Tuesday, June 9, 2015

பெண்களை பற்றிய உயர்வான பழமொழிகள்

பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் சமூகத்தில் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக்காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

பெண்களை பற்றி தவறான பழமொழிகள் அதிகம் சொல்லப்பட்டாலும் உயர்வான பழமொழிகளும் சொல்லப்பட்டுள்ளன. அப்படி உயர்வாக சொல்லபட்ட சில பழமொழிகளை காண்போம்.

*குடியில் பிறந்த பெண் வயிறெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும் 

*நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண்போகாது

*தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்
பெண்களை பற்றிய உயர்வான பழமொழிகள்

*ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே

*பெண் என்றால் பேயும் இரங்கும்

*பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ என்பார்கள்

*பெண் கொடுத்த மாமியோ கண் கொடுத்த சாமியோ

*தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை 

*தாய்க்குப்பின் தான் தாரம்

*அத்தை பகையில்லை அம்மாள் உறவில்லை

*மனம் காவலா மதிகாவலா?(பெண்ணுக்கு)

*வீட்டுக்கு அலங்காரம் மனையாள் 

*பெற்ற தாயானாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?

No comments:

Post a Comment