Saturday, July 18, 2015

சில காலம் முன் அமிதாப் பச்சனை , ஒரு பொது மேடையில் பலர் அறிய பாராட்டினார் ரஜினி...

சில காலம் முன் அமிதாப் பச்சனை , ஒரு பொது மேடையில் பலர் அறிய பாராட்டினார் ரஜினி...
“அமிதாப்பச்சன் சின்ன வயசுல ஜெயித்தது பெரிய விஷயமல்ல. அவரது 60 வது வயதில் பெரிய கஷ்டம் வந்தது... வீட்டையே அடமானம் வைத்துவிட்டார். படமும் எதுவும் கிடைக்கல. அவ்வளவு கஷ்டப்பட்ட நேரத்திலும் யாருக்கிட்டேயும் உதவிக்காக நின்னதுல்ல. ஆனால் தனி மனிதனா நின்னு ஜெயிச்சு அந்த வீட்டை மீட்டதும் இல்லாம , அதே ஏரியாவுல்ல இன்னும் 2 வீடு வாங்கியிருக்காரு. அதுதான் அமிதாப் பச்சன்…”
# சரி....அமிதாப்புக்கு அறுபது வயதில் சூறாவளிதான் வீசியது...ஆனால் , “ஆறிலிருந்து அறுபதுவரை ” படத்தில் நடிக்கும் வேளையில் , ரஜினியின் திரையுலக வாழ்வை சுனாமியே சூறையாடியது...!
இயக்குனர் பாலச்சந்தர் சொன்னது போல , அது ரஜினியின் “இருண்ட காலம்”....
1979-ம் ஆண்டு.... இரவும் பகலும் இடைவெளியில்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்தது ஒரு பக்கம்... மது ..ஜரிதா பீடா..ஜாதிக்காய் பழக்கம் இன்னொரு பக்கம்...நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு.. எதைக் கண்டாலும் எரிச்சல்... யாரைக்கண்டாலும் கோபம் அடைந்தார் ரஜினி...
13-3-1979 அன்று ஒரு விழாவில் கலந்து கொள்ள சக நடிகர்களுடன் மதுரை வந்த ரஜினிகாந்த், மதுரை விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று சோடா கேட்டிருக்கிறார்..
`சோடா இல்லை ' என்று கடை ஊழியர் சொன்னதால் , அவரை கன்னத்தில் அறைந்தார் ரஜினி..., அத்தோடு விட்டாரா..? தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி , அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்க.... இதைப் பார்த்தவர்கள் பயந்து போய் ஓட்டம் பிடிக்க... ரஜினியை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்தனர். மற்ற நடிகர்கள் வந்து, "நாங்கள் அவரை பத்திரமாக அழைத்துப் போகிறோம்'' என்று உறுதிமொழி கொடுக்க சென்னை வந்து சேர்ந்தார் ரஜினி...
இருந்தும் , இயல்பான நிலைக்கு வரவில்லை ரஜினி.... இதனால் சென்னை விஜயா நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டார்...
# அந்த "இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் கே.பாலசந்தர் இப்படி குறிப்பிடுகிறார்...
“அந்தச் சூழ்நிலையில் ரஜினி வீட்டுக்குச் சென்ற என்னிடம் , ரஜினி "நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் அழுதார். அவரது பேச்சு தொடர்பில்லாமல் இருந்தது. ரஜினியை அந்த சூழ்நிலையில் பார்த்த என் கண்கள் கலங்கின. இந்த நேரத்தில் பலர் பலவிதமாகப் பேசினார்கள். இத்தோடு அவர் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்றும், அவரது பெயரைக்கூட சொல்லாமல் சிலர் `மெண்டல்' என்று குறிப்பிடுகின்ற துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டிருந்தது.”
# பாலச்சந்தர் சொன்னது உண்மைதான்...அந்தக் காலத்தில் ரஜினியை “மெண்டல்” என்று கிண்டல் செய்தார்கள்..
ஆனால்..அதே ரஜினியின் வசனங்கள் இன்று மேனேஜ்மெண்ட் மந்திரங்கள், பிஸினெஸ் யுக்திகளுக்கு பயன்படும் “ரஜினியின் பன்ச் தந்திரம்” புத்தகமாக...!
எப்படி நடந்தது இந்த மேஜிக்..?
ரஜினி சந்திரமுகி ஆடியோ மேடையில் சொன்ன “பஞ்ச்” டயலாக் ஞாபகம் வருகிறது...
“நான் யானையில்லை குதிரை… கீழே விழுந்தா டக்குன்னு எழுந்துப்பேன்..”
# ஆம்...!
“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை

No comments:

Post a Comment