Wednesday, August 31, 2016

ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

இதோ அதற்கு ஓர் உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். 

""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. 
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார். 

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. 

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.'' வினையை விதைத்துவிட்டு அறுவடைக்காலத்தில் சாமர்த்தியமாக வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது. 

வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான். 

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும். 

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை

#Beleive_in_God #கடவுளை_நம்பு

அமைதியும், புன்னகையும் தவழும்.

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். 

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?” 

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார். 

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். 

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது” 

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார். 

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.” 

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார். 

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை. 

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது. 

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது. 

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன? 

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம். 

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது? 

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்! 

-என்.கணேசன்

விருட்ச சாஸ்திரம்

🌼விருட்ச சாஸ்திரம்

🌼விருட்சங்களும் 
தெய்வீக சக்திகளும்

 
🌼துளசி
துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில்கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது.துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களைகுணமாக்கும்.

🌼சந்தன மரம்
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும்பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மனஅமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும். 

🌼அத்திமரம்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்துவெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியைகொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும். 

🌼மாமரம்
மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள்பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது. 

🌼அரசமரம்
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும். 

🌼ஆலமரம்
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின்விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது. 

🌼மருதாணிமரம்
மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால்கேட்ட கனவுகள் வராது. 

🌼ருத்ராஷ மரம்
ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்தஅழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும். 

🌼ஷர்ப்பகந்தி
இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள்தீண்டாது. 

🌼நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகலபாவங்களும் நீங்கும். 

🌼வில்வமரம்
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும்நீங்கும். 

🌼வேப்பமரம்
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்துவணங்கி வர சக்தியின் அருள் கிட்டும். 

🌼கருவேல மரம்
கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களைமந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின்மீதுதான் குடியிருக்கும். 

🌼காட்டுமரம்
காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம்சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும். 

🌼அசோக மரம்
அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும். 

🌼புளிய மரம்
புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளியமரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை. 

🌼மாதுளம் மரம் 

மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீககுணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையேஅன்னியோன்யம் ஏற்படும்🌼

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

*சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்! இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.

இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா,
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிராணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிராணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிப்பதை பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

*சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்! இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.

இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா,
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிராணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிராணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிப்பதை பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.

கோல்டன் ஹவர்

கோல்டன் ஹவர்

“கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாமே… 10 நிமிஷத்துக்கு முன்னாடி கூட்டிட்டு வந்திருந்தா, உயிரைக் காப்பாத்தியிருக்கலாம்” என்று ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்னைகளுக்கு,  ‘பொன்னான நேரம்’ (Golden hour) என்று ஒன்று உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான சிகிச்சை கிடைக்கச் செய்துவிட்டால், உயிரிழப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது மருத்துவ உலகம்.

 இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வந்து பிழைத்தவர்களும் உண்டு. இரண்டு நிமிடத் தாமதத்தால் இறந்தவர்களும் உண்டு. ஒரு உயிரைக் காப்பாற்றும் இந்த ஒவ்வொரு மணித் துளியின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பொன்னான நேரத்தில் உயிருக்குப் போராடும் ஒருவரை எப்படிக் காப்பாற்றுவது? அவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி, சிகிச்சைகள் என்னென்ன?

சாலை விபத்து
***********************
கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

யாருக்கு அதிகமாக அடிபட்டு உள்ளதோ, அவரை முதலில் ஆம்புலன்ஸில் ஏற்ற உதவ வேண்டும். அடிபட்டவரைச் சுற்றிலும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பதால், மூச்சுவிட அதிக சிரமப்பட்டு, உடல்நிலை மேலும் பாதிக்கும்.

அதிகப்படியான ரத்தப்போக்கின்போது ஒரு சுத்தமான பருத்தித்துணியால் (துப்பட்டா, கைக்குட்டை, துண்டு) கட்டுப்போட்டால் ரத்தம் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். இதற்குப் பெயர் ‘ப்ரீ ஹாஸ்பிடல் டிராமா கேர்’ (Pre Hospital trauma care). இதனால், உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அடிபட்டவரை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

விபத்தில் முதுகு அல்லது கழுத்தில் காயம்
***************************************************************
கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

விபத்தில் சிக்கியவருக்குக் கழுத்து, முதுகில் காயம் ஏற்பட்டிருந்தால் அல்லது அந்தப் பகுதியில் வலிக்கிறது என்றால், இன்னும் சற்று கவனத்துடன் அவர்களைக் கையாள வேண்டும். தலை தொங்குவது போல தூக்கக் கூடாது. தலையும் உடலும் நேர்க்கோட்டில் இருப்பது போல தூக்கிவைக்க வேண்டும். கவனம் இன்றித் தூக்கும்போது, உடைந்த முதுகெலும்போ கழுத்து எலும்போ மேலும் சேதமாகி, கோமா நிலைக்குப் போகலாம். முதுகு, கழுத்து எலும்பில் அடிபட்டவர்களை நேராகத் தூக்கிவைக்க ஸ்ட்ரெச்சரோ பலகையோ இல்லை என்றால், ஆம்புலன்ஸ் வரும் வரை தூக்காமல் இருப்பதே பேருதவி.

அடிபட்டவருக்கு ஜூஸ், பால், உணவுகளைக் கொடுக்கக் கூடாது. இதனால், வாந்தி வரக்கூடும். தலையில் அடிபட்டு இருந்தால், பெரும் சிக்கல் ஆகிவிடும். சிறிது தண்ணீர் வேண்டுமெனில் கொடுக்கலாம்.

அடிபட்ட, முதல் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய, முறையான முதலுதவியால் உயிர் பிழைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதம்
******************
கோல்டன் ஹவர்: மூன்று மணி நேரத்துக்குள்

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ரத்தக்கசிவு காரணமாகப் பக்கவாதம் வரும். தலைசுற்றல், இரண்டு நிமிடங்களுக்கு சுயநினைவு இழந்துபோதல், கை, கால் இழுத்தல், வாய் ஒருபக்கம் இழுத்தல், பேச்சுக்குழறல் என்று சொன்னால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இதற்கு மூளை நரம்புகளில் ஏற்பட்ட அடைப்பைக் கரைப்பதற்கான மருந்தை மூன்று முதல் நான்கரை மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். எனவே, பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவமனையை அணுகினால், பக்கவாதப் பாதிப்பில் இருந்து முற்றிலும் நீங்கலாம்.

8 முதல் 12 மணி நேரத்துக்குள் வந்தால், உயிரிழப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அதற்குள் மூளையில் உள்ள நியூரான்கள் அதிக அளவில் உயிரிழந்திருக்கும். இதனால், உடலின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

12 மணி நேரத்துக்குப் பிறகு உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அப்படியே உயிரைக் காப்பாற்றினாலும், கை, கால் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது.

குடல்வால் வெடிப்பு – வயிற்றுவலி
*****************************************************
கோல்டன் ஹவர்: 4-6 மணி நேரத்துக்குள்

வயிற்றுவலிக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல் அடைப்பால் ஏற்படும் வலி, குடல்வால் வீக்கம் (Appendicitis), குடல் முறுக்கு, அடைப்பு போன்ற தீவிரமான வலி எனில், 4-6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

குடல்வால் பிரச்னை என்றால் வாந்தி, தீவிர வயிற்று வலி இருக்கும். இதற்கு, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை அல்லது மாத்திரை, மருந்துகளால் சரிப்படுத்த முடியும். மிகவும் தீவிர நிலையில் இருக்கிறது என்றால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குடல்வால் வெடித்துவிட்டது என்றால், நோய்த்தொற்று குடல் முழுவதும் பரவிவிடும். இந்த நிலையில், குடல் வாலை அகற்றுவதுடன், நோய்த்தொற்றை நீக்க, குடல் பகுதியை முற்றிலும் சுத்தம் செய்ய வேண்டும்.  காலராவால் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறிவிடும். இதனுடன், தாதுஉப்பும் வெளியேறிவிடும். குழந்தைகளைப் பாதிக்கும்போது, உயிரிழப்பு வாய்ப்பு அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எலெக்ட்ரோலைட் அல்லது உப்பு சர்க்கரை நீர்க் கரைசலைக் கொடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே, உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

பாம்புக் கடி 
*****************
கோல்டன் ஹவர்:  (3 மணி நேரத்துக்குள்)

சினிமாவில் காட்டுவது போல, பல்லால் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது, கத்தியால் வெட்டுவது என வித்தைகள் எதுவும் செய்யக் கூடாது. குழாய் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். கடித்த இடத்தை அதிக அசைவுகள் கொடுக்காமல் இருந்தாலே போதும். பாம்பு கடித்த, மூன்று மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது நல்லது. மருத்துவர் ஆன்டிவெனோம் மருந்தைக் கொடுத்தால், விஷம் முறிந்துவிடும். மருத்துவமனைக்கு வராமல் தாமதித்தால், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். ஆனால், இவற்றுக்கும் சிகிச்சைகள் உண்டு.

தீக்காயம்
***************
கோல்டன் ஹவர்: (உடனடி – 1 மணி நேரத்துக்குள்)

பால், சுடுதண்ணீர், கஞ்சி போன்றவை மேலே ஊற்றிக்கொண்டால், உடனே குழாய் நீரைக் காயத்தின் மேல் விட்டு, ஈரமான பருத்தித் துணி, வாழை இலையால் போர்த்தி, மருத்துவமனைக்கு உடனே கொண்டுசெல்லவும். பஞ்சு, சாக்குப் பை, சிந்தடிக் துணி ஆகியவற்றால் துடைக்கவோ, போர்த்தவோ கூடாது. நூல் நூலாகப் பிரிந்த துணியைக் காயத்தின் மேல் போர்த்தக் கூடாது. இது, காயத்தை மேலும் பாதிக்கும்.

குழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டால்                                   *******
குழந்தைகள் விளையாட்டாகச் செய்யும் சில காரியங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். கையில் கிடைக்கும் காசு, சிறிய விளையாட்டுப் பொருட்கள், பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விழுங்கும்போது, அது மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம்.  இதை, உடனடியாகச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  தண்ணீர், உணவு கொடுக்கவே கூடாது.

தற்கொலைக்கு முயன்றவர்கள் (உடனடி)

பூச்சிக்கொல்லி, எலி மருந்து, வயலுக்கு அடிக்கும் மருந்தைக் குடித்துவிட்டால், உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மயங்கிய நிலையில் இருப்பவருக்கு, சோப்பு கரைசல், உப்புக் கரைசல் கொடுக்கக் கூடாது. இதனால், புறை ஏறி, நுரையீரல் பாதித்து உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகிவிடலாம்.

மாரடைப்பு, நெஞ்சு வலி
                        *****
கோல்டன் ஹவர்: 1 மணி நேரம்

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்பு. ரத்தக்குழாயில், ரத்தம் உறையும்போதும், கொழுப்பு அடைத்துக்கொள்ளும்போதும், இதயத்தசைகள் பாதிக்கப்படும். செல்கள் உயிர்வாழ ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் தேவை. இதை, ரத்தம் மூலம்தான் உடல் பெறுகிறது. இதயத்திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காமல் போகும்போது, அது உயிரிழக்க ஆரம்பிக்கிறது. எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அந்த அளவுக்கு இதயத்திசுக்களின் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

 40 வயது கடந்த ஆண்கள், 45 வயது கடந்த பெண்கள் அவர்கள் வாழ்நாளில் சந்திக்காத வலி இடது கை, இடது பக்கத்தில் ஏற்படும், மயக்கம் வரும். இதுவே மாரடைப்பு.

மாரடைப்பில் தீவிரமானது மேசிவ் அட்டாக் (Massive attack), 50 சதவிகித இதயத் தசைகள் வேலை செய்யாமல் போக, இதயம் திணறும். அப்போது அவர்களுக்கு மூச்சு வாங்கும். அவர்களால் படுக்க முடியாது. ஆதலால், படுக்கக் கட்டாயப்படுத்தாமல் அவர்களைச் சாயவைத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

சளி, மூச்சுத் திணறல் இருப்பவர்களைப் படுக்கவைக்காமல், தலையணை வைத்து அதில் சாய்த்தது போல கொண்டு செல்லலாம். படுத்தால், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள், ஆஸ்பிரின் மாத்திரையைத் தண்ணீரில் கலந்து உடனே குடித்துவிட வேண்டும். மாரடைப்பு நோயாளியை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சீக்கிரம் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இதயம் பாதுகாக்கப்படும், தசைகள் அழிவது மற்றும் மாரடைப்பு திரும்ப வருவது தடுக்கப்படும்.

கவனிக்க: சர்க்கரை நோயாளிகளுக்கு பல நேரங்களில் மாரடைப்பின் அறிகுறிகள் வெளிப்படாமலேகூட இருக்கும். லேசாக நெஞ்சுவலி வந்தாலே, இவர்கள் மருத்துவமனையை அணுக வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மனச்சோர்வு, மனஅழுத்தம், உடலுழைப்பு இல்லாதவர்கள், முதியவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், 40 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆகியோர் வீட்டில் கட்டாயம் ‘ஆஸ்பிரின் மாத்திரை’ வைத்துக்கொள்ள வேண்டும்.

108 நம்பர், அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர எண் நம்பரை பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும்.

சடன் கார்டியாக் அரெஸ்ட்
***************************************
சீராகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று, துடிப்பை நிறுத்திக்கொள்ளும். இதற்கு, சடன் கார்டியாக் அரெஸ்ட் (திடீர் இதயத்துடிப்பு முடக்கம்) என்று பெயர். பலரும் இதை மாரடைப்பு எனத் தவறாகக் கருதுகின்றனர்.

இதயத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதயம் இயங்காமல் நிற்பது, இதயத்துடிப்பு குறைந்து அப்படியே நின்றுவிடுவது, மாரடைப்பு வருவதால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுவது, சிறுநீரகச் செயலிழப்பு எனப் பல்வேறு காரணங்களால் சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் வரலாம்.

சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து 4-10 நிமிடங்களுக்கு, எந்த ஓர் உறுப்புக்கும் ரத்த ஓட்டம் செல்லவில்லை எனில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். உடனடியாக, அவசர உதவிக்கு அழைத்துவிட்டு, சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். இதயத்துக்குத் துடிப்பு கொடுக்கும் முதலுதவி செய்ய நெஞ்சுப் பகுதியில் மசாஜ், மூச்சுக்குழாயில் ஆக்சிஜன் கொடுத்துக் காப்பாற்றலாம். மீண்டும் இதயம் துடிக்கவில்லை எனில், நிமிடத்துக்கு 100- 120 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அவருக்கு டேஃபிபிரிலேட்டர் (Defibrillator) சிகிச்சை அளிக்க வேண்டும்.

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் உண்மைகளும் :

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் உண்மைகளும்   :

வழிபாடு என்பது மிகப் பழமையானதும், மிகவும் ரகசியமாகவும் வைக்கப்பட்டதுமான ஒரு அரிய முறை ஆகும். ஆனால் அன்னியர்களின் படையெடுப்பினால் இந்த அரிய முறைகள் பின்பற்றப்படாமல் மறைக்கப்பட்டன. தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் தழைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நவீன காலத்தில் இணையத்தில் பைரவ வழிபாட்டிற்கு ஆதரவாகவும், பைரவர் வழிபாட்டிற்கு எதிராகவும் வலைப்பூக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உண்மையை சொல்லப்போனால் பைரவ வழிபாட்டிற்கு எதிராக ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.

பைரவ வழிபாடு பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் இப்பதிவில் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் இவற்றை காண்போம்.

கட்டுக்கதை – 1:

பைரவரை வணங்கினால் வீட்டின் தலைமகனை காவு வாங்கி விடுவார்.

உண்மை:

பைரவர் அசூரர்களை அழிக்க அவதாரம் செய்த சிவனின் வடிவம். அவர் தம்மை வணங்குபவர்களையும் அவரது பரம்பரையையும் காத்து நிற்கும் உன்னதமான சிவ வடிவம். மனிதர்களை அழிக்க அவதாரம் செய்யவில்லை. மனிதர்களை காக்கும் கடவுளே பைரவர் ஆவார்.

கட்டுக்கதை – 2:

பைரவரை வீட்டில் வழிபாடு செய்யக்கூடாது.

உண்மை:

பொதுவாக பைரவ வடிவங்களில் வீட்டில் வைத்து வழிபட தக்கவர் தன் மடியில் சொர்ணதாதேவியை அணைத்தவாறு உள்ள சொர்ணபைரவர் ஆவார். மற்ற பைரவர்களை வழிபாடு செய்யும் இடங்களும், காலங்களும் வெவ்வேறானவை. மற்ற பைரவர்களை ஆலயங்களில் வழிபாடு செய்வதே சிறப்பானது.

கட்டுக்கதை – 3:

பைரவரை சந்நியாசிகள் தான் வழிபாடு செய்ய வேண்டும்.

உண்மை:

எல்லா பைரவர்களையும் எல்லோரும் வழிபாடு செய்யலாம். எல்லா பைரவர்களுக்கும் சக்தியர் உள்ளனர். அவர்கள் யோகினிகள் எனப்படுவர். பைரவர்கள் சிவசக்தி வடிவமாக உள்ளனர். சிவசக்தி வடிவங்களை யார் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். பைரவர்களின் வழிபாட்டு முறைகளை குருமுகமாக தெரிந்து கொண்டு வழிபாடு செய்வதே சிறந்தது.

கட்டுக்கதை – 4:

பைரவருக்கு அசைவம் படைக்கலாம்.

உண்மை:

அசைவம் படைப்பது என்பது பெரும் பாவம் ஆகும். ஜீவகாருண்யமே சிவ வடிவங்களின் உண்மையான குணம் ஆகும். மாமிசம் என்பது பேரீச்சம்பழமே ஆகும். பேரீச்சம்பழத்தினை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.

கட்டுக்கதை – 5:

பைரவருக்கு மது படைக்கலாம்.

உண்மை:

மதுவினை படைத்தலும் பெரும் பாவமே ஆகும். உண்மையில் மது என்பது தேன் ஆகும். தேனை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன?
ஊதுபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப்
படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள
பெரியவர்கள் கூறியிருக்க நாம்
கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும்
உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து
பார்க்கவேண்டும்.
ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன்,
அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம்
சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும். அது
புகைந்து சாம்பலானாலும், தன்னைச்
சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால்
மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக
மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர்
உண்மையான இறைத் தொண்டன்,
தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம்
விட்டொழிக்கவேண்டும். பிறருக்காக
நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்ளவேண்டும். மற்றவர்களின்
வாழ்க்கையும் மணம்வீச வழி செய்வதே
தெய்வீக செயலாகும்.
ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன்
மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்ற
து. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம்
நினைவிலே வைத்திருப்பர்.
அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை
செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின்
பேரும்புகழும் என்றுமே மக்களிடையே
நிலைத்திருக்கும்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத்
தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும்,
நல்ல விஷயங்களை அவர்களுக்கு
செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு
பெறவேண்டும் என மனதார நினைப்பதும்
மிகப் பெரிய உன்னதமான செயலாகும்.
இதுபோன்ற குணத்தை தான் ஊதுபத்தி
குறிக்கின்றது. இதுபோன்ற குணத்தை
உடையவர்கள் தான் ஈஸ்வரனுக்கு
மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம்
பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.
”அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்” (குறள் 96)
--- மற்றவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல
விஷயங்களைச் சொல்வதால் ஒருவருடைய
தீவினைகள் தேய்ந்து, நல்வினைகள்
பெருகும்.

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள்...!!! .

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள்...!!!

. நமது கோரிக்கைகளை கடவுளை அடைய  ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

 
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி,  தெய்வீக செயல்களையும், நினைத்த  காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.
 
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
 
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
 
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.   
 
இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:- 
 
அகஸ்தியர் - திருவனந்தபுரம் 
 
கொங்கணர் - திருப்பதி 
 
சுந்தரனார் - மதுரை 
 
கரூவூரார் - கரூர் 
 
திருமூலர் - சிதம்பரம் 
 
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் 
 
கோரக்கர் - பொய்யூர் 
 
குதம்பை சித்தர் - மாயவரம் 
 
இடைக்காடர் - திருவண்ணாமலை 
 
இராமதேவர் - அழகர்மலை 
 
கமலமுனி - திருவாரூர் 
 
சட்டமுனி - திருவரங்கம் 
 
வான்மீகர் - எட்டிக்குடி 
 
நந்திதேவர் - காசி 
 
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் 
 
போகர் - பழனி 
 
மச்சமுனி - திருப்பரங்குன்றம் 
 
பதஞ்சலி - இராமேஸ்வரம்
 
இவைகள் போலவே, தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம். 
 
ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகி ஓடும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. மனம் அமைதி பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வெற்றி நம்மைத் தேடிவரும்.
 
எனவே, ஜீவசமாதிகள் பெரும்பாலும், மூலவருக்கு அருகிலேயே தனிச்சன்னதி கொண்டு இருக்கும். அங்கு சென்று, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், நமது எல்லா செயல்களும் வெற்றி பெறுவது நிச்சயம்.

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள்...!!! .

புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள்...!!!

. நமது கோரிக்கைகளை கடவுளை அடைய  ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

 
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி,  தெய்வீக செயல்களையும், நினைத்த  காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.
 
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
 
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
 
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.   
 
இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:- 
 
அகஸ்தியர் - திருவனந்தபுரம் 
 
கொங்கணர் - திருப்பதி 
 
சுந்தரனார் - மதுரை 
 
கரூவூரார் - கரூர் 
 
திருமூலர் - சிதம்பரம் 
 
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் 
 
கோரக்கர் - பொய்யூர் 
 
குதம்பை சித்தர் - மாயவரம் 
 
இடைக்காடர் - திருவண்ணாமலை 
 
இராமதேவர் - அழகர்மலை 
 
கமலமுனி - திருவாரூர் 
 
சட்டமுனி - திருவரங்கம் 
 
வான்மீகர் - எட்டிக்குடி 
 
நந்திதேவர் - காசி 
 
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் 
 
போகர் - பழனி 
 
மச்சமுனி - திருப்பரங்குன்றம் 
 
பதஞ்சலி - இராமேஸ்வரம்
 
இவைகள் போலவே, தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம். 
 
ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகி ஓடும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. மனம் அமைதி பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வெற்றி நம்மைத் தேடிவரும்.
 
எனவே, ஜீவசமாதிகள் பெரும்பாலும், மூலவருக்கு அருகிலேயே தனிச்சன்னதி கொண்டு இருக்கும். அங்கு சென்று, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், நமது எல்லா செயல்களும் வெற்றி பெறுவது நிச்சயம்.

ஞானத்தை யாரிடம் கற்பது ?

ஞானத்தை யாரிடம் கற்பது ?

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட  அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும், 

“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது. 

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை”  பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.

நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவது ஏன் தெரியுமா*

*அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவது ஏன் தெரியுமா* 

சொல்லின் செல்வன், இராமனின் பக்தன், சஞ்சீவி மலையை தூக்கியவன், பஞ்ச புதங்களை வென்றவன் என்ற பல பெயர்களை கொண்ட அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவது ஏன் தெரியுமா.

ராவண வதத்திற்குப் பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களை வதம் செய்யக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமனே அதற்கு தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவரவருக்கு உரிய ஆயுதங்களை ஆசீர்வாதம் செய்து அளித்தார்கள்.

ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னபிற கடவுள்களும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் அளித்தார்கள். ஸ்ரீராமர், தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அளித்து இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடுவாய் என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

அதன்படி அனுமன் வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்துவிட்டார். அதுபோல நாம் வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும்.

மருவிய தமிழர்நாட்டின் ஊர்ப்பெயர்கள்:

மருவிய தமிழர்நாட்டின் ஊர்ப்பெயர்கள்:
**********************************
தன்செய்யூர் - தஞ்சாவூர்

பொழில் ஆட்சி - பொள்ளாட்சி

வெண்கல்லூர் - பெங்களூர்

செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு

ஒத்தைக்கல் மாந்தை- உதகமண்டலம்

ஒகேனக்கல் - உகுநீர்க்கல்

குன்னூர் - குன்றூர்

எருமையூர் - மைசூர் (எருமை என்பது வடமொழியில் மகிசம். எனவே மகிசூர் என்று மாற்றி, பின் அது மைசூர் என்றானது)

ஆத்தி மரம் நிறைந்த பகுதி - ஆர்க்காடு (ஆர் என்பது ஆத்தி மரம்)

ஏரியை ஒட்டிய காடு அமைந்திருந்த பகுதி - ஏரிக்காடு - ஏர்க்காடு - ஏற்காடு ஆயிற்று.

மதுரை - மதிரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு மக்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதனால், தங்கள் தலைநகரத்தை மதுரை என்று பெயரிட்டனர்)

பாண்டி பசார் - சவுந்தரபாண்டியனார் அங்காடி.
(அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்ட சில தமிழர் ஊர்ப்பெயர்கள்:
***************************************************

விருதாச்சலம் - முதுகுன்றம்

வேதாரண்யம் - திருமறைக்காடு

திண்டிவனம் - புளியங்காடு

மாயவரம் - மயிலாடுதுறை

யானையின் எடை எவ்வளவு..?

யானையின் எடை எவ்வளவு..?

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
''யானையின் எடையை எப்படி அறிவது?'' என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ''நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.
எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

- வெ. இறையன்பு

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.

ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.

அவன் மன்னனிடம், “அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

வீரத்தை வென்ற விவேகம்!

வீரத்தை வென்ற விவேகம்!

மதனபுரி என்ற நாட்டை மகேந்திரவர்மர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்குத் தன் நாட்டிலுள்ள தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதை அறிய ஆவல் வந்தது. அதனால் அரச சபை கூடிய தினத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

வீரத்தை வென்ற விவேகம்“‘அறிவில் சிறந்த அவையோரே, அன்பில் சிறந்த குடிமக்களே! நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன் யாரெனத் தேடிக் கண்டுபிடியுங்கள். வரும் பெüர்ணமியன்று வழக்கம் போல அரச சபை கூடும்போது, அவரை அழைத்து வந்து நிரூபித்துக் காட்டலாம். நம் ராஜபிரதானிகள் தேர்ந்தெடுக்கும் அந்த மாவீரனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கி “தலைசிறந்த துணிச்சல்காரன்’ என்ற பட்டமும் வழங்கப்படும். அந்த மாவீரனை அழைத்து வரும் நபருக்குப் பரிசாக ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும்” என்றார்.

பெüர்ணமி அன்று, மீண்டும் அவை கூடியது. நாட்டின் மாவீரனைக் காண மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது. கட்டியங்கூறுவோன் வாழ்த்தொலி கூற அவைக்கு அரசர் வந்தார். அவை எழுந்து மரியாதை செலுத்தியது. அரசர் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர். அரசர் சொன்னார்-

“”உயர்ந்த குடிமக்களே, நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதைக் காண ஆவலாக வந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தீர்ப்பு சொல்ல ராஜபிரதானிகளும் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றி. அன்று நான் அறிவித்தபடி, அழைத்து வந்திருப்பீர்கள். ஒவ்வொருவராக, அவர்களுடைய மாவீரனை அழைத்து வாருங்கள்…” என்று ஆணையிட்டார்.

முதலில் ஒரு தனவந்தர் தனது அடியாளான ஒரு முரட்டு மனிதனை அழைத்து வந்தார். அரசனை வணங்கிவிட்டுச் சொன்னார்-

“”அரசே, நான் தேடிக் கண்டுபிடித்த நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரர் இவர்தான். இவரோடு மோத யாருக்கும் தைரியம் இருந்தால் வந்து மோதிப் பார்க்கலாம்…” என்று அவையில் சவால் விட்டார்.

சட்டை போடாத அந்த முரடர், தன் கை, மார்பு, கால் சதைகளை முறுக்கித் தன் உடல் திறத்தை வெளிப்படுத்தினார். அதைக் கண்ட மக்கள் கரகோஷம் எழுப்பினர். அவரை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. அதனால் அவருக்குத் தனி ஆசனம் கொடுக்கப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார்.

அடுத்து ஒரு கவசம் அணிந்த சிப்பாய் தனியே வந்தான். அரசரை வணங்கிச் சொன்னான்-

“”மன்னர் மன்னா… நான்தான் தங்கள் காலாட்படையிலேயே தலைசிறந்த வீரன். பக்கத்து நாட்டோடு போர் மூண்டபோது என் வாள் பலபேரை வெட்டிச் சாய்த்தது. என் போர் திறமையைப் பாராட்டிய தளபதி, எனக்குப் பரிசாக அளித்த முத்துமாலை இதோ…” என்று எடுத்துக் காண்பித்து மேலும் சொன்னான், “”அந்தப் போரில் கத்தியும் ஈட்டியும் என்னைக் காயப்படுத்தின. இதோ பாருங்கள், அந்த வீரத் தழும்புகளை” என்று கூறித் தனது கவசத்தைக் கழற்றிக் காண்பித்தான். சில இடங்களில் அவன் கூறியபடி காயத் தழும்புகள் இருந்தன.
அரசர் கோபமாக எழுந்தார், “”நீயெல்லாம் மார்பில் வேல் தாக்கிய வீரனா? முதலாவதாக வந்தவன் போரிட சவால் விட்டானே, அப்போது நீ வந்து முன் நின்றாயா? அல்லது அது உன் காதில் விழவில்லையா? ரோஷமில்லாத உன்னை என் வீரனென்று கூறவே என் நா கூசுகிறது. உனக்குப் போய் முத்துமாலையைப் பரிசளித்த அந்த முட்டாள் தளபதியைத்தான் நான் நொந்து கொள்ள வேண்டும். பேராசை பிடித்தவனே… என் கண்முன்னால் நிற்காமல் ஓடிப் போய்விடு..” என்று கர்ஜித்தார்.

அரசரின் கோபத்துக்கு ஆளானால் தனக்குத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் அந்த சிப்பாய் ஓடிப்போய்விட்டான்.
அடுத்த அழைப்புமணி ஒலித்தது. தளபதி ஒருவர் தன்னோடு ஒரு வீரனை அழைத்து வந்து சபையில் அறிமுகம் செய்தார்.

“”மக்களை ஆளும் சக்கரவர்த்தியே, இந்த வீரன் நமது கொரில்லாப் படையின் தலைவன். தன் உயிரை துச்சமாக மதித்து நம் நாட்டுக்கு சேவை செய்பவன். இவனுக்குத் தனது உயிர் பெரிதல்ல. ஆனால் நமது நாட்டைக் காக்க இவன் நமக்குத் தேவை. இவன் மனித வெடிகுண்டாக மாறினால், இதோ அமர்ந்திருக்கும் இந்த முரடனைப் போல எத்தனை பேர் வந்தாலும் அவர்களையும் அழித்துத் தானும் அழிந்து விடுவான். இப்படிப்பட்ட துணிச்சல் வேறு எவருக்கு வரும்? தன் உயிரைத் துச்சமாக மதிக்கும் இவனே நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன்… சக்கரவர்த்தி அவர்களே…” என்று வணக்கத்துடன் கூறினார். அவனுக்கும் தனி ஆசனம் கொடுக்கப்பட்டது. அடுத்த அழைப்புமணி ஒலித்தது.

சிறிது நேரம் யாருமே வரவில்லை.

“”இவ்விருவரைத் தவிர வேறு எவருமே இல்லையா? இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன் வருபவர் வரலாம்…” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது மந்திரி மதிவாணர் தன் கையில் ஓர் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு அவைக்குள் நுழைந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் விழித்தனர்.

மதிவாணரைப் பார்த்து அரசர் கேட்டார், “”என்ன மதிவாணரே… ஆட்டை மேய்க்க அவைக்கே வந்து வீட்டீர்? ஆடு மேய்க்க உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? இந்தப் போட்டியில் இப்படி நீர் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் உமது கெüரவமாவது மிஞ்சியிருக்கும்…” என்று நையைண்டி செய்தார். மதிவாணர் அடக்கமாகச் சொன்னார்-

“”அரசே, நமது நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரர் இவர்தான் அரசே!” என்று ஆட்டைக் காட்டி அறிமுகம் செய்தார். அதைக் கேட்ட அரசரும் அவையோரும் கொல்லெனச் சிரித்தனர். கசமுசவென்று ஒரே பேச்சு சத்தம்… அரசர் அவையை அமைதிப்படுத்திவிட்டுச் சொன்னார்-

“”என்ன மதிவாணரே, நீர் மதியை இழந்துவிட்டீரா இல்லை உமது மதி கலங்கி விட்டதா? எப்பேர்ப்பட்ட வீரர்கள் எதிரே இருக்கும்போது ஒரு சாதாரண ஆட்டைக் கொண்டு வந்து இதுதான் தலைசிறந்து துணிச்சல்காரன் என்கிறீரே! உம்மைப் போய் நான் மந்திரியாக வைத்திருப்பதை நினைத்தால் எனக்குத்தான் அவமானமாக இருக்கிறது…”

“”அரசே, எதையும் பார்த்த மாத்திரத்தில் அவசரப்பட்டு தீர்ப்பு சொல்லக்கூடாது. அன்று பாண்டியன் நெடுஞ்செழியன் அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்கியதால்தான் மதுரை மாநகரமே எரியும்படி நேர்ந்தது. தீர்ப்பு வழங்குவதில் எப்போதுமே நிதானம் தேவை அரசே! இல்லையென்றால் நீதியே அநீதியாகிவிடும்” என்று சொல்லிவிட்டுக் கை தட்டினார் மதிவாணர்.

அப்போது பெரிய வீச்சரிவாளுடன் முகத்தில் முக்கால்வாசி மீசையுடன் வந்து நின்றான் ஒருவன். அவனது வீச்சரிவாளை மதிவாணர் வாங்கி, அமர்ந்திருந்த முரடனின் கழுத்தில் அந்த அரிவாளை வைத்தார். முரடன் திருதிருவென்று விழித்தான்.

“”உலக மகா துணிச்சல்காரரே, இதைக் கொண்டு உம்மை இப்போது நான் வெட்டப் போகிறேன்…” என்றார்.

அதற்கு அந்த முரடன், “”ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நிராயுதபாணியான என்னை வெட்டுவேன் என்கிறீரே? தைரியம் இருந்தால் அரிவாளைக் கீழே போட்டுவிட்டு என்னுடன் மோதிப் பாரும்.. உமது எலும்புகளை அப்பளமாக நொறுக்கிக் காட்டுகிறேன்…” என்றான்.

“”ராஜபிரதானிகளே, நீங்களே சொல்லுங்கள். பலமான உடம்பும் எவருக்கும் பயப்படாத குணமும் கொண்ட இவன், கேவலம் இந்த அரிவாளைக் கண்டு பயப்படுகிறானே? இவன் உண்மையிலேயே துணிச்சல்காரனா? தீர்ப்பு சொல்லுங்கள்… தனது உயிருக்குப் பயந்த எவனுமே நிச்சயம் துணிச்சல்காரனாக முடியாது…”

அரசரும் ராஜபிரதானிகளும் பதில் பேசமுடியாமல் போயிற்று.
“”அரசே, மிஞ்சி இருப்பவன் இந்த கொரில்லாக்காரன். தளபதி இவனைக் கூட்டி வந்திருப்பதை ஒற்றன் மூலம் கேள்விப்பட்ட நான், இவனது ஒரே மகனை ஆள் வைத்துக் கடத்திச் சென்றிருக்கிறேன். நான் போகாமல் இவன் மகனை மீட்க முடியாது. இன்னும் இரண்டு நாழிகைக்குள் நான் வராவிட்டால் அவனைத் தீர்த்துக்கட்டச் சொல்லியிருக்கிறேன். இவனுக்குத் தைரியமிருந்தால் என்னைக் கொல்லட்டும்… மகனை மீட்கட்டும் பார்க்கலாம்…” என்றார் மதிவாணர்.

கொரில்லா வீரன் மதிவாணரின் காலைத் தொட்டுக் கேட்டான்.

“”மதிவாணரே, நாங்கள் தவமாக இருந்து பெற்றெடுத்த பாலகன் அவன். வசதியில்லாத நான் அவனை வளமாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகத்தான், கொரில்லாப் படையிலேயே சேர்ந்தேன். நான் செத்தாலும் அவன் மட்டும் சாகக்கூடாது மதிவாணரே!” என்று மண்டியிட்டுக் கெஞ்சினான்.

“”அரசே, ராஜபிரதானிகளே… அந்த முரடன் தன் உயிருக்குப் பயந்தவன், இவனோ பாசத்தால் பலவீனமாகிப்போய்விட்டான். ஓடிய சிப்பாயோ பணத்தாசை பிடித்தவன். ஆனால் இதோ நிற்கும் ஆடு எதற்குமே அடிமையாகாது மன்னா… இதற்குப் பேராசையே கிடையாது ராஜபிரதானிகளே! அரசே, இதன் முன் உங்கள் கஜானாவையே கொட்டிப் பாருங்கள். அது தொட்டுக்கூடப் பார்க்காது. கொல்லபோகும் கசாப்புக் கடைக்காரனோடு தைரியமாக வந்துள்ளது. இவன் கொல்லத் துணிந்தாலும் எதிர்த்துப் போராடாது. அதனால் இதற்குத் தனது உயிரின் மீதும் ஆசையில்லை. இதன் குட்டியைப் பிரித்து, அதன் கண்முன்னே எந்தச் சித்திரவதையானாலும் செய்த பாருங்கள். சிறிதுகூடக் கண்ணீர் சிந்தாது. அதனால் இது பாசத்துக்கும் அடிமை கிடையாது. பொன், உயிர், பாசம் ஆகிய மூன்று ஆசைகளுமே இல்லாதவரே நிகரற்ற துணிச்சல்காரர். இந்த மூன்று ஆசைகளுமே இல்லாத இந்த ஆடே, உண்மையான துணிச்சல்காரன் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ராஜபிரதானிகளே, இப்போது நீங்கள் நன்றாக ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுங்கள்…” என்று கேட்டுக் கொண்டார் மந்திரி மதிவாணர்.
ராஜபிரதானிகளின் தீர்ப்பின்படி இரண்டாயிரம் பொற்காசுகள் மந்திரி மதிவாணருக்குக் கிடைத்தது. அதில் கசாப்புக் கடைக்காரனுக்கு இருநூறு பொற்காசுகள் கிடைத்தது. ஆட்டின் கழுத்தில் “உலகமகா துணிச்சல்காரன்’ பட்டம் தொங்கியது.

கொரில்லாக்காரனிடம் மந்திரி சொன்னார், “”உன் மகனை நான் கடத்தவில்லை. இந்தப் போட்டிக்காக அப்படிச் சொன்னேன். உன் மனத்தைப் புண்படுத்திய என்னை மன்னித்து விடு…” என்று கேட்டுக் கொண்டார்.

வீரத்தை விவேகம் வென்றுவிட்டதை உணர்ந்தார் மன்னர் மகேந்திரவர்மன்.

அன்பு வெற்றி செல்வம். அன்பு, வெற்றி, செல்வம், என்ற மூவரும் நண்பர்கள் ஆவார்கள்

அன்பு
வெற்றி 
செல்வம்.
அன்பு, வெற்றி, செல்வம், என்ற மூவரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் நாள் தோறும் யார் அழைத்தாளும், அவர்களுடைய வீட்டிற்க்குச் சென்று அவர்களை உபசரிப்பது வழக்கம்.

ஒரு நாள் மாலை ஆறு மணி ஆகிவிட்டது. ஊரில் உள்ளவர்கள் எல்லோருடைய வீட்டிலும் குத்துவிலக்கேற்றி பூஜை அரையில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமையத்தில் ஒரு வீட்டில் வயதான பெரியவர் வீட்டுக்கு வெளியில் உள்ள தின்னையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அன்பு, வெற்றி, செல்வம் என்ற மூன்று நண்பர்களும் அந்தப் பெரியவரைப் பார்த்தவாரு தெருவில் சென்றுக் கொண்டிருந்தனர். பெரியவர் அவர்களை அழைத்தார், அவர்களின் பெயர் மற்றும் அவர்களை பற்றி விசாரித்தார்.
உடனே பூஜை அறையில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த தனது மருமகளுக்கு குரல் கொடுத்தார்... நமது வீட்டிற்க்கு வெற்றி, செல்வம், அன்பு என்ற மூன்று பேர் வந்திருக்கிறார்கள். அவர்களில் யாரை அழைப்பது என்று கேட்டார்.

அதற்க்கு அந்த பெரியவரின் மருமகள், அந்த மூவரையும் நமது வீட்டிற்க்கு அழைத்து வாருங்கள் அப்போது தான், நமது வீடு சந்தோஷமாகவும் செல்வச் செழிப்போடும் இருக்கும் என்றால்.  

உடனே அந்தப் பெரியவர். வெளியில் காத்திருந்த அந்த மூவரையும் தனது வீட்டிற்க்கு வந்து தங்களை உபசரிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். அதற்க்கு அந்த மூவர் அளித்த பதில் என்னத் தெரியுமா! எங்களில் யாரையாவது ஒருவரை மட்டும் தான் நீங்கள் அழைக்க வேண்டும் மற்ற இருவர்கள் ஊரில் உள்ள மற்ற வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றனர்.

இந்த செய்தியைக் கேட்டவுடன், உடனே அந்த பெரியவர் தனது மருமகளிடம் விஷயத்தை சொன்னார். அதற்க்கு அந்த மருமகள் அப்படியானல்... நமது வீட்டிற்க்கு செல்வத்தை அழைத்து வந்துவிடுங்கள். அவனைவைத்து நமக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளலாம் என்றால்.

உடனே அந்த பெரியவர் செய்வதறியாமல் தனது வீட்டிற்க்கு செல்வத்தை அழத்துக்கொண்டார். மற்ற இருவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

வெற்றி, மற்றும் அன்பு ஆகிய இருவர்களில் வெற்றியை ஒரு வீட்டுக்காரர் அழைத்துக்கொண்டார். பிறகு அன்பு தனிமைப்படுத்தப்பட்டான். கடைசியாக ஒரு ஏழை விவசாயி வேறு வழியின்றி அன்பை தனது வீட்டிற்க்கு வந்து தங்களை உபசரிக்கும்மாறுக் கேட்டுக்கொண்டார்.

சிறிது நாள் சென்றது. தனது நண்பன் அன்பு என்றவனைக் காணாமல், பேசாமல் இருந்ததால் துடிதுடித்துப் போய்விட்டார்கள் வெற்றியும், செல்வமும்.

வெற்றியும், செல்வமும் உடனே ஒரு முடிவை எடுத்தார்கள். அவர்கள் குடிக்கொண்ட வீட்டில் உள்ளவர்களை அழைத்து “அன்பு” எங்களது ஆறுயிர் நண்பன் அவனைக் காணாமல் பேசாமல் எங்களால் ஒரு நொடியும் இருக்க முடியாது. ஆகையால் தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறு கணமே அங்கிருந்து கலம்பிவிட்டார்கள் அன்பு இருக்கும் இடத்திற்க்கு. 

அன்பு இருக்கும் இடத்தில் தான் வெற்றியும் செல்வமும் நிலைத்திருக்கும். மற்ற இடங்களில் ஒருவேலை வெற்றியும், செல்வமும் இருந்தாலும் அது நிலைத்திருக்காது என்பது உண்மை. அவற்றை இந்த கதையின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அன்பு என்றால்! மன்னிப்பு, சகிப்புதன்மை, கருனை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நன்மை மற்றும் தீமையை கண்டறியும் தெளிவு, பாசம், முரட்டுதனம் இல்லாத காதல். இவையெல்லாம் மனிதக் குலத்திற்க்கே உள்ள கடவுள் கொடுத்த மகத்தான சொத்து.

இத்தகைய சொத்தை பயன்படுத்தி வாழ்கையில் மோகம் இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், கொடூரங்களை செய்யாமலும், வாழ்க்கையின் நியதி அறிந்து நிம்மதியாக வாழலாம்

தோஷங்களை நீக்கும் மம்மியூர் கோயில்!

தோஷங்களை நீக்கும் மம்மியூர் கோயில்!

ஸ்ரீகிருஷ்ண பகவான் சொர்க்கத்திற்குச் சென்ற பின் துவாரகை கடலில் மூழ்கியது. அந்த நேரத்தில் மகா விஷ்ணுவின் விக்கிரகம் தண்ணீரில் மிதந்து வந்தது. 
குருவும், வாயுவும் சேர்ந்து விக்கிரகத்தை எடுத்துப் பிரதிஷ்டை செய்வதற்கு, வானில் சஞ்சரித்தபடி தகுந்த இடத்தைத் தேடிக் கொண்டிருந்தனர்.  வாசுதேவனும் ஸ்ரீ கிருஷ்ணனும் பூஜை செய்திருந்த அந்த விக்கிரகத்தின் தெய்வீக ஒளி ரிஷிகளுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.
குருவும், வாயுவும் கேரளக் கரைக்கு வந்த போது பரசுராமரைக் கண்டனர். அவர் காட்டிய வழிப்படி, மகாதேவன் பல யுகங்களாகத் தவம் செய்து வந்த ருத்ர தீர்த்தக் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் கண்டு மகிழ்ந்த பரமசிவன் அவர்களை வர வேற்று, தனக்கு அருகே அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா விஷ்ணுவின் விக்கிரகமே மம்மியூரப்பன் ஆலயத்தில் மகாதேவனின் அருகே தனி ஆலயத்தில் உள்ளது.
காலப்போக்கில் இந்தத் தலம் மம்மியூர் எனவும், இங்குள்ள மகாதேவன் மம்மியூரப்பன் எனவும் அழைக்கப்படுகிறார்.
கலியுகம் தொடங்கும் முன்பே உள்ள திருக்கோவில் என்ற பெருமைக்குரிய ஆலயம் மம்மியூரப்பன் ஆலயம். சிவபெருமானும், மகா விஷ்ணுவும் ஒரே ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அதிசயம் இந்த ஆலயத்தில் தான் உள்ளது.
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மம்மியூரில் அமைந்துள்ளது மம்மியூரப்பன் ஆலயம்.
எந்த ஆலயத்திலும் இல்லாத சிவபெருமானும், மகா விஷ்ணும் இந்த ஆலயத்தில் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர். இருவருக் கும் ஒரே நேரத்தில்  பூஜைகள் நடைபெறுகின்றன. இரண்டு அர்ச்சகர்கள் தனித்தனியே இருவருக் கும் ஒரே நேரத்தில் பூஜைகளையும் ஆராதனைகளையும் நடத்தும் சம்பவம் இந்த ஓர் ஆலயத்தில் மட்டுமே நடக்கும் அதிசயம் எனலாம்.
ஆலயத்தின் முகப்பு மண்டபத்தைக் கடந்தவுடன் ஒரு பெரிய ஆலமரம் அதைத் தொடர்ந்து பெரிய மண்டபம் உள்ளது. அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன. அதைத் தொடர்ந்து மம்மியூரப்பனின் கருவறை உள்ளது.
ஆலயத்தின் வடபுறத்தில் பகவதியம்மன் சன்னதி அமைதியான சூழலில் அமைந்துள்ளது. அன்னை மேற்குத் திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.
குருவாயூரப்பனைத் தரிசிக்க வருபவர்கள் அந்த ஆலயத்திலிருந்து 1 1/2 கி.மீ. தொலைவில் உள்ள மம்மியூரப்பன் ஆலயத்திற்கு வந்து மகாதேவனையும், மகா விஷ்ணுவையும் தரிசனம் செய்தால் மட்டுமே அவர்களுடைய புண்ணிய பயணம் பூர்த்தியாகும் என்பது வழிவழியாக வரும் ஐதீகம்.
இந்த ஆலயத்தில் மகாதேவனுக்கும் உள்ள முக்கியத்துவம் மகா விஷ்ணுவுக்கும் தரப்படுகிறது.
காலை 4.45க்கு ஆலயம் திறந்தால் நிர் மால்ய தரிசனம், எண்ணெய் அபிஷேகம், மாலை சார்த்துதல், மலர் நைவேத்தியம், திருமதுர நைவேத்தியம் முதலியவற்றைச் செய்கின்றனர்.
அனைத்து தினங்களிலும் மகாதேவனுக்கும், மகா விஷ்ணுவிற்கும் ரிக்வேத தாரை, பாலாபிஷேகம், உஷ பூஜை முதலியன நடைபெற்று பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 4.45 க்குக் கோவில் திறக்கப்படுகிறது.
பின் தீபாரதனை, உமா-மகேஸ்வர பூஜை, இரவு பூஜைக்குப் பிறகு, அன்ன நைவேத்தியம், பால் பாயசம், அப்பம் முதலியவற்றை எல்லா தெய்வங்களுக் கும் நைவேத்தியம் செய்து, இரவு 8.30 மணிக்கு ஆலயம் சாத்தப்படுகிறது.
இந்த ஆலயத்தில் ஆதி காலம் முதல் கோவிலின் ஆச்சார முறைப்படி வேத மந்திரம் சொல்லி, எல்லாச் சடங்குகளையும் விதிமுறைப்படி நடத்தி வருகின்றனர்.
1930 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் நடப்பட்ட ஆலமரம் ஒன்று இப்போது வளர்ந்து நெடிதுயர்ந்து, சுவாமி சன்னதியின் முன் ராட்சஸ உருவில் நிற்கிறது.
1961 ஆம் ஆண்டு ஒரு பெண் இந்த ஆலமரத் துக்கு உபநயனம் நடத்தி, வேத மந்திர விதிமுறைப்படி எல்லாச் சடங்குகளையும் செய்து வைத்தார். பின், ஆலமரத்தை ஒரு வரனாகப் பாவித்து, மணப் பெண்ணாக வேப்ப மரத்தை நட்டு வைத்து, வேத மந்திரங்கள் சொல்லி, வாத்தியங்கள் முழங்க, இரண்டுக் கும் திருமணம் நடத்தி வைத்தார்.
பத்து நாட்கள் நவராத்திரி விழா இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி மண்டபத்தில் வாணி தேவிக்கு விசேஷ பூஜையும், அனுமனுக்கு வடை மாலை சாத்துதலும், அஷ்டமி தினத்தில் பூஜைக்காக புத்தகங்கள் வைப்பதும், நவமி நாட்களில் லட்சார்ச்சனையும் இங்கு நடைபெறுகிறது.
விஜயதசமி நாளில் நாட்டின் பல திசைகளிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்குத் தலைமை அர்ச்சகர்கள் ஹரிஸ்ரீ எழுதப் பயிற்று விக்கும் சம்பிரதாயம் நம்மை வியக்க வைக்கும் நிகழ்ச்சி என்பதில் சந்தேகமே இல்லை.
இங்கு நடக்கும் பூஜைககல் கலந்து கொள்வதால் தாம்பத்தியத்தில் நிம்மதியும், புத்திர பாக்கியம் ஏற்படுவதுடன், அனைத்துத் தோஷங்களும் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

சுமை தீர்க்கும் வைத்தியநாத சுவாமி கோயில்.

சுமை தீர்க்கும் வைத்தியநாத சுவாமி கோயில்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து வடமேற்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது பாண்டூர் என்ற கிராமம். சகல விதமான  வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இங்குதான் அமைந்துள்ளது. பசுமையான வயல்வெளிகள் சூழ இயற்கை சூழலில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம். 
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி. இறைவி அருள்மிகு பாலாம்பிகை என்பதாகும்.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையார் வலதுபுறம் துர்க்கை சன்னதிகள் உள்ளன.
அடுத்து மகாமண்டபமும் அர்த்த மண்டபமும் உள்ளன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் கீழ்த்திசை நோக்கி லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார்.  மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி அருள்மிகு பாலாம்பிகை தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. பிரகாரத்தில் மேற்கு திசையில் பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை திருமேனிகள் உள்ளன.
வடக்கு பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. அதனடியில் சிறிய அளவிலான சிவலிங்கம், நாகர், நந்தி திருமேனிகள் உள்ளன. இங்கே, சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சண்டீஸ்வரர் சன்னதியும் இங்கு உள்ளது. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், பைரவர் சன்னதிகள் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தமான சூரிய புஷ்கரணி ஆலயத்தின் எதிரே உள்ளது.
நவராத்திரி, சிவராத்திரி மற்றும் விசேஷ நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. தினசரி காலை, சாயரட்சை, அர்த்த சாமம் என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மூத்த ஆலயமாக இது கருதப்படுகிறது. சனிபகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளதால் நவக்கிரகங்கள் இங்கு இல்லை. சனிக்கிழமை மற்றும் கிரகப் பெயர்ச்சி நாட்களில் இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
சனிப் பார்வையால் துன்பப்படுவோர் இங்குள்ள சனி பகவானை வேண்டிக் கொண்டு பாதிப்பின் வேகம் குறைய, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தி நிம்மதி பெறுகின்றனர். எள் சாத நிவேத்தியம் செய்து அனைவருக்கும் விநியோகம் செய்கின்றனர்.
சனிபெயர்ச்சிக் காலங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை.
ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
அரிச்சந்திரன் இத்தலத்து இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்ததால் தனது கடன் தொல்லைகளிலிருந்து நீங்கப் பெற்றதாகக் தல வரலாறு கூறுகிறது.
எனவே, அதை நினைவுபடுத்தும் விதமாக சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை கடன் நிவர்த்தி பூஜை இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் நடத்தப்படுகிறது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் பக்தர்கள் இந்தப் பூஜையில் கலந்துகொண்டு பலன் பெறுவதாக நம்புகிறார்கள்.
மேலும், அன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவிலுக்கு அருகே அரிச்சந்திரன் வரலாற்றை நாடகமாக அரங்கேற்றி அதைப் பார்த்து மக்கள் மகிழ்வது வழக்கமாக உள்ளது.
சகலவிதமான சரும நோய்களை நீக்க வல்லவர் இத்தலத்து இறைவன் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி நீலோத்பவ மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்தால் ரோக நிவர்த்தி பெறலாம் என்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
கார்கோடன் என்ற நாகத்தால் தீண்டப்பட்டு உருமாறிய நளமகாராஜன் இத்தலத்து இறைவனை வேண்டி தன் பழைய உருவைப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. பொதுவாக நோய்களில் இருந்தும், கடன் பிரச்னைகளிலிருந்தும் மீட்டு நல்வழியை இத்தலத்து இறைவன் காட்டுவார் என பக்தர்கள் நம்புகின்றனர்.
மயிலாடுதுறையிலிருந்தும் காளியிலிருந்தும் இத்தலம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. பொன்னூர் என்னும் கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது யார்?

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது யார்?

தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள். அது எப்படி?

எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைந்து தன் வாழ்க்கையில் எத்தகு இன்ப துன்பத்தை அனுபோகிக்க வேண்டும் என்ற கரு அமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் உங்கள் தாய் வயிற்றில் உங்கள் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டது. 

அதேபோல, கருமைப்பைக் கொண்டும், பிறந்த பின்னர் இதுவரை நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள மனத்தின் தரத்தைக் கொண்டும், உங்களுக்கு வாழ்நாளில் என்ன இன்ப துன்பம் வரவேண்டுமோ, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைத் துணைவர் வருகிறார். அவரை உங்கள் உயிரே - அடிமனமே தெரிந்து, அது பல பேர் மனத்தில் பிரதிபலித்து, அவர்கள் என்னவோ முயற்சி எடுப்பது போல் சில நடவடிக்கைகள் நடந்தேறி, உங்களுக்கேற்ற அந்த வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான். 

எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்.

அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் ஞானமேயானாலும் சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது அது ஞானமேயாயினும் அதனால் ஒரு பயனும் வராது.

- வேதாத்திரி மகரிஷி

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

எவர்  ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார். 
நான் ஒண்ணுமே செய்ய முடியாது. என் கையிலே ஒண்ணுமே இல்லை. நான் ஒரு கையாலாகாதவன் , கோழை, யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க, நான் ஒரு அநாதை, நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட் , என்ன பண்ணினாலும், எவ்வளவு சம்பாதிச்சாலும் - கையிலே பைசா நிக்கவே இல்லை. இப்படி - பலப்பல எண்ணங்கள் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு அஷ்டம சனி யோ , இல்லை ஏழரை சனியோ நடந்து கொண்டிருக்கும்.

சிவனே னு நீங்க பாட்டுக்கு டூ வீலெர் ல போய்க்கிட்டு இருப்பேங்க, சம்பந்தமே இல்லாமே  திடீர்னு ஒரு நாய் , தேடி வந்து , ஏதோ உங்களுக்காகவே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த மாதிரி , உள்ளே வந்து விழும். அப்புறம் என்ன, ஒரு மாசம் கட்டு போட்டு உக்காரணும். 

உற்றார் உறவினரை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருக்க வேண்டி வரும். நாம ரொம்ப நேசிக்கிற பொருள், உயிர், நண்பர்கள் எல்லாரையும் வெறுத்து ஒதுக்க வேண்டி வரும். அவரை மாதிரி ஒரு உத்தமன் உண்டானு சொல்லிக்கிட்டு இருந்த உலகம் , இப்போ கை கொட்டி சிரிக்கும்.

கவலையே படாதீங்க. இப்போ தான் நீங்க ஒரு பக்குவப்பட்ட மனுஷனா மாறி இருப்பீங்க. அசலுக்கும், போலிக்கும் இப்போ தான் வித்தியாசம் பார்க்க முடியும். நீங்க செஞ்ச பாவக் கணக்கு - நேராகுதுன்னு நினைச்சுக்கிட்டு - மனசை தேத்திக்கோங்க. 

ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம் பாஸு ! இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க. ....

இது எல்லாமே, சனி யால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக
ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி  மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். 

உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.

12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்..

12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்.. 


நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம் காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம் நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம் நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு மேற்க்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்... பஞ்சபூத ஸ்தலங்கள்; மண் -காஞ்சிபுரம் நீர்-திருவானைக்காவல் நெருப்பு-திருவண்ணாமலை காற்று -ஸ்ரீகாளஹஸ்தி ஆகாயம் -சிதம்பரம் உங்கள் லக்னம் மிதுனம் என்றால் மிதுனம் காற்று ராசி ..எனவே அதர்குறிய ஸ்ரீகாளஹஸ்தி சென்று உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.. விதி,கதி,மதி என சொல்லப்படும் லக்கினம்,சூரியன்,சந்திரன் எது பலமாக இருக்கிறதோ அது எந்த ராசியை குறிக்கிறதோ அதற்குறிய கோயிலும் சென்று வரலாம்..சனி எந்த ராசியில் இருக்கிறதோ அதற்குறிய வழிபாட்டை செய்தால் தொழில் நன்றாக இருக்கும்...என்ன திசை இப்போது நடக்கிறதோ அந்த திசாநாதன் இருக்கும் ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்றாலும் சிறப்பு..பஞ்சபூத கோயில்கள் பின்னால் இருக்கும் சூட்சுமமும் இதுதான்...

- Dr.Star Anand ram Visvakarma 
Www.moneyattraction.com 

Monday, August 29, 2016

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் !!

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் !!

 நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.  சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.

அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.

உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.

அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.

இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:-

அகஸ்தியர் – திருவனந்தபுரம்
கொங்கணர் – திருப்பதி
சுந்தரனார் – மதுரை
கரூவூரார் – கரூர்
திருமூலர் – சிதம்பரம்
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் – பொய்யூர்
குதம்பை சித்தர் – மாயவரம்
இடைக்காடர் – திருவண்ணாமலை
இராமதேவர் – அழகர்மலை
கமலமுனி – திருவாரூர்
சட்டமுனி – திருவரங்கம்
வான்மீகர் – எட்டிக்குடி
நந்திதேவர் – காசி
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
போகர் – பழனி
மச்சமுனி – திருப்பரங்குன்றம்
பதஞ்சலி – இராமேஸ்வரம்

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து

உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
அடுத்து

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்

27 நட்சத்திரங்களும் சித்தர்களும்

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.

மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.

மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.

மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,

புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்
நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;

* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்

* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.

* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.

சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம்(விருச்சிகம்)=
ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.

* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.

பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.
ரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் :

1. அஸ்வினி நட்சத்திரம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :

2. பரணி நட்சத்திரம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :

3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :

4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :

5. ரோகிணி நட்சத்திரம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :

6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :

7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ரிஷப இராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :

8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

9. மிருகசீரிடம் நட்சத்திரம் 4ம் பாதம் – மிதுன இராசி :
ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

10. திருவாதிரை நட்சத்திரம் – மிதுன இராசி :
ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :

11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – மிதுன இராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :

12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – கடக இராசி :
ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :

13. பூசம் – நட்சத்திரம் கடக இராசி :
ஓம் ஸ்ரீம் – குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :

14. ஆயில்யம் நட்சத்திரம் – கடக இராசி :
ஓம் ஸ்ரீம் ம் -அம் – உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :

15. மகம் நட்சத்திரம் – சிம்ம இராசி :
ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

16. பூரம் நட்சத்திரம் – சிம்ம இராசி :
ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – சிம்ம இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் – ஸ்ரீ இராம தேவரே நம
18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – கன்னி இராசி :
ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – கன்னி இராசி :
ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :

20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – கன்னி இராசி :
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :

21. அஸ்தம் நட்சத்திரம் – கன்னி இராசி :
ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – கன்னி இராசி :
ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – துலாம் இராசி :
ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

24. சுவாதி நட்சத்திரம் – துலாம் இராசி :
ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – துலாம் இராசி :
ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – விருச்சிக இராசி :
ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

27. அனுஷம் நட்சத்திரம் – விருச்சிக இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

28. கேட்டை நட்சத்திரம் – விருச்சிக இராசி :
ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :

29. மூலம் நட்சத்திரம் – தனுசு இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :

30. பூராடம் நட்சத்திரம் – தனுசு இராசி :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :
31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – தனுசு இராசி :
ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – மகர இராசி :
ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

33. திருவோணம் நட்சத்திரம் – மகர இராசி :
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – மகர இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :

36. சதயம் நட்சத்திரம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :

37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :

38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – மீன இராசி :
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :

39. உத்திரட்டாதி நட்சத்திரம் – மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :

40. ரேவதி நட்சத்திரம் – மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம்



கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

படித்து பாருங்கள் உங்களுக்கு மெய்
சிலிர்த்துபோகும் !!

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? 
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.

பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.. 

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
தை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க. 
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில்
சேரும் என்பது ஐதீகம்.

பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். 
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். 

எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம். 

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
அது மிகையாகது.. 

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட
லைட்னிங் அரெஸ்டர்ஸ்.. 

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்.. 

இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்.. 

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில்
இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான்.