Saturday, October 29, 2016

சித்தர் மூல மந்திரம்

சித்தர் மூல மந்திரம்

சித்தர் மூல மந்திரம்.
--------------------------------
ஓம் பசு பரபதி பஷராஜ
நிரதிசய சித்ரூப ஞானமூர்த்தோய தீர்க்கநேத்ராய
கணகண் கம்கங் ,கெங்லங்
லிங் லங் லாலீலம்,ஆவ்.பாவ் ஆம் .ஊம் .பார்கவிய
ஜோதிமய வரப்பிரசன்ன பாததெரிஷய
கோரக்க சரண்யா நமஸ்து !
1. சித்தர்களின் மூல மந்திரம்.
---------------------------------------------
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
. ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
முக்கிய சிவ மந்திரம்.
-------------------------------
மகான் ஸ்ரீ கோரக்கர்
ஓம் கிரீங்.ரீங்.கிரீங் சிம்.சிம்.சிவயநம
ஓம்.உம்.கிலி.அங்.லங்.அங் சிவயநம
ஓம்.வங்.சிங்.யங்.ரங்.ரங்.சிவயநம
ஓம்.வயநமசி.உம்.உம்.லிங்.லிங்.சிவயநம
ஓம் நங்கிலி.நௌ.மௌ.ரங்.யங்.சிவயநம
ஓம்.நசிமசி.வசி.மசி.சிவ.சிவயநம
ஓம்.அங்.அங்.கங்.கெங் ரிங் சிவயநம
ஓம் அம் உம் நம் லம் சிம் சிவயநம
ஓம் சிங் கிலி கிலி நம் நம் சிவயநம
ஓம் சிவ சிவ.நசி மசி.சிவயநம
ஓம் மங் கிலி.ஸ்ரீங் சிங் சிங் சிவயநம
ஓம் மசிமசி வயநமசி லிங் லிங் சிவயநம
ஓம் சிங்சிவ மங்மங் வசி சிவயநம
ஓம் லங்லங் ரூங் ரூங் ரீங் சிவயநம
ஓம் லா லி லூ.லம்.சிங் சிவயநம
தியான மந்திரம்.
---------------------------
ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்க தெய்வமே நம!
அம்பாள் மந்திரம்.
----------------------------
ஓம் அம் உம் நம் லம் லிங்
கங் டங் ரங் சிங் வங்
கா லீ கம் கம் ரீம் கிலீம் சுவாஹா.
108 கோரக்கர் போற்றி.
-----------------------------------
ஓம் கோரக்கர் திருவடிவடிகள் போற்றி ! ஓம்
ஓம் கோரையில் பிறந்தவனே போற்றி ! ஓம்
ஓம் மட்டையில் பிறந்த மகானே போற்றி ! ஓம்
ஓம் திருநீரில் பிறந்த தேவனே போற்றி ! ஓம்
ஓம் சிவபுரத்தில் உதித்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் சிவசமயம் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி ! ஓம்
ஓம் மச்சேந்திரனின் மைந்தா போற்றி ! ஓம்
ஓம் மலையில் வாழ்ந்த மகானே போற்றி ! ஓம்
ஓம் திக்கெல்லாம் புகழ்பெற்ற கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் அற்புதங்கள் நிகழ்த்திய அண்ணலே போற்றி ! ஓம்
ஓம் சித்துக்கள் செய்த செம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பிணிகளை அறுக்க வந்த பேரருளே போற்றி ! ஓம்
ஓம் சித்தர்களின் முதல்வனே போற்றி ! ஓம்
ஓம் சிந்தை தெளிந்தவனே போற்றி ! ஓம்
ஓம் சிவ ஒளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் ஞான ஒளி பெற்ற நாயகரே போற்றி ! ஓம்
ஓம் யோகநெறி கண்ட யோகியே போற்றி ! ஓம்
ஓம் தவநெறி கண்ட தமயனே போற்றி ! ஓம்
ஓம் சித்தமருத்துவம் கண்ட சித்தரே போற்றி ! ஓம்
ஓம் சிவநெறி கண்ட சிவபுரத்தானே போற்றி ! ஓம்
ஓம் பேரொளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரஒளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரம்பொருள் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் வெட்டவெளியில் நின்றாய் போற்றி ! ஓம்
ஓம் வேண்டும் வரம் அளிப்பாய் போற்றி ! ஓம்
ஓம் ஆணவம் அகன்றாய் போற்றி ! ஓம்
ஓம் கன்மம் கரைந்தாய் போற்றி ! ஓம்
ஓம் கர்மவினை தீர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் கொல்லிமலை சித்தரே போற்றி ! ஓம்
ஓம் சதுரகிரியை ஆண்டாய் போற்றி ! ஓம்
ஓம் கோரக்கர் குண்டம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பொதிகைமலை கண்டவனே போற்றி ! ஓம்
ஓம் திருப்பதி மலை கண்ட தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் அண்ணாமலையாரின் அன்பரே போற்றி ! ஓம்
ஓம் பழனிமலை கண்ட பாவலரே போற்றி ! ஓம்
ஓம் போகரின் தோழா போற்றி ! ஓம்
ஓம் வெற்றியின் வேந்தரே போற்றி ! ஓம்
ஓம் யாகத்தின் தலைவனே போற்றி ! ஓம்
ஓம் குருவுக்கு கண் கொடுத்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் குருவாரம் கண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் குருவருள் தருவாய் போற்றி ! ஓம்
ஓம் செம்பை பொன்னாக்கிய சித்தரே போற்றி ! ஓம்
ஓம் குன்றை பொன்னாக்கி கொடுத்தவனே போற்றி ! ஓம்
ஓம் குறை தீர்க்க வந்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் சீன தேசத்தின் தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் வாலாம்பிகை அருள் பெற்ற வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் ஞானப்பாலுண்ட ஞானியே போற்றி ! ஓம்
ஓம் காயகல்பம் செய்த வித்தகரே போற்றி ! ஓம்
ஓம் சந்திரரேகை படைத்த சீலரே போற்றி ! ஓம்
ஓம் ரவிமேகலை மந்திரம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் முத்தாரம் நூல் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பரூரில் சமாதி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பாவத்தை அறுக்க வந்த பாவலரே போற்றி ! ஓம்
ஓம் பொய்கைநல்லூரில் வாழ்ந்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் மருத்துவநூல் படைத்த மருத்துவரே போற்றி ! ஓம்
ஓம் யோகநிலை உணர்த்திய உத்தமரே போற்றி ! ஓம்
ஓம் ஞானநெறி கண்ட நாயகரே போற்றி ! ஓம்
ஓம் சித்தர் பூரண பொக்கிஷம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் காட்மாண்டில் குடிகொண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் பதினெண் சித்தர்களின் பாவலரே போற்றி ! ஓம்
ஓம் ககனமார்கம் கண்ட காவலரே போற்றி ! ஓம்
ஓம் மாயபிறப்பறுக்கும் மகானே போற்றி ! ஓம்
ஓம் அருஉருவம் படைத்த அண்ணலே போற்றி ! ஓம்
ஓம் சிவயோகியான சிவபாலா போற்றி ! ஓம்
ஓம் புலிமேல் அமர்ந்த புலவரே போற்றி ! ஓம்
ஓம் சன்மார்க்கம் கண்ட சமத்துவமே போற்றி ! ஓம்
ஓம் அருள் ஞானம் படைத்த அரசே போற்றி ! ஓம்
ஓம் முதுமை நீங்க மூலிகை படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் வாசியோகம் கண்ட வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் இல்லறமே நல்லறம் என்று உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சுழிமுனையின் சூட்ச்சமம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சூட்ச்சமத்தின் பொருள் கண்டாய் போற்றி ! ஓம்
ஓம் மரணமில்லா வாழ்வு பெற வழிகண்டாய் போற்றி ! ஓம்
ஓம் கலியுகத்தை காக்க வந்த காவலரே போற்றி ! ஓம்
ஓம் காயத்ரி மந்திரம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் அண்ட வெளியில் நின்றாய் போற்றி போற்றி ! ஓம்
ஓம் அருள் ஒளி தருவாய் போற்றி ! ஓம்
ஓம் பஞசாக்கரத்தினை உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் தியான நிலை கண்ட தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் தீராத வினை எல்லாம் தீர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் நவகண்ட யோகம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் கையாந்திர மூலிகை கண்டாய் போற்றி ! ஓம்
ஓம் பரிபாஷை கண்ட பாலகா போற்றி ! ஓம்
ஓம் குருமூலி கண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் அருட்பெரும் ஜோதியானாய் போற்றி ! ஓம்
ஓம் அருள்ளாலரின் அன்பராய் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் அருளாட்சிக்கு வழி சொன்ன வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் சத்தியசீலரே போற்றி ! ஓம்
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் சமதர்மம் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் மும்மலத்தை வென்றவனே போற்றி ! ஓம்
ஓம் முக்திக்கு வழி கண்ட முதல்வா போற்றி ! ஓம்
ஓம் முழுமுதற் பரம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பரூரின் நாயகனே போற்றி ! ஓம்
ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ! ஓம்
ஓம் ஹரி சிவனுக்கு இடையே அமர்ந்தாய் போற்றி ! ஓம்
ஓம் அமர்ந்த நிலை சமாதி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரூரில் சூட்சமம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பரிபாஷையில் அருள்வாக்கு உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சுக்கும சரீரம் கொண்டாய் போற்றி ! ஓம்
ஓம் அட்டாங்க யோகம் அடைந்தாய் போற்றி ! ஓம்
ஓம் பக்தி நெறி அறிவித்த பரம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பக்தர்களின் குறை களைவாய் போற்றி ! ஓம்
ஓம் மக்களை காப்பாய் போற்றி ! ஓம்
ஓம் மகான் அருள் தருவாய் போற்றி ! ஓம்
ஓம் எண்ணில்லா கோடி சித்த ரிஷி கணங்களின்
திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி!
ஓம் சித்தாய நம ஓம் மஹா சித்தா
கோரட்சநாதாய நம
ஓம் ஸ்ரீம் கலம் ஸ்ரீ கோரக்கா சித்த சாமியே போற்றி .
Om Nama Shivaya - ஓம் நம சிவாய
---------------------------------------------------
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.
ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி.
சித்தர்களின் காப்புக் கவசம்.
-------------------------------------------
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே
( ரோமரிஷி பூஜாவிதி )
நிறைவுப் பாடல்.
---------------------------
முகாசபரூரின் முதலே போற்றி
முன்வினை அறுப்பாய் போற்றி
கோப்பெரும் குருவே போற்றி
கோரக்கர் அருளே போற்றி
சீர்பெற எனையோர் வாழ்க்கை
சிவ சிவ சிவனே போற்றி
பேர் பெறும் பெரியபரூரின்
பேரின்ப சுடரே போற்றி!போற்றி
" ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்கர்
தெய்வமே சரணம் "

கேதார கெளரி விரதம் உருவான கதை!

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய அருட்சக்தியான எழில் மிகு அம்பிகை உமையவளைக் குறித்து அனுட்டிக்கப்படுகின்ற மகிமையும் மகோன்னதமும் மிக்க விரதம்கேதார  கெளரி விரதமாகும். இது மிகவும் பக்திபூர்வமாக அனுட்டிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்புமிக்க நன்மை பயக்கும் விரதமாகும்.
இந்த விரதம் அனுட்டிக்க விரும்புவோர் இருபத்தொரு நாள் உபவாசமிருந்து உமையம்மையை நினைந்து வணங்குவதோடு சிவபெருமானையும், சேர்த்து வழிபாடியற்றுதல் வேண்டும். இவ்விரதம் புரட்டாதி மாதத்தில் சுக்கில பட்சத்து தசமி முதலாக ஆரம்பமாகி தீபாவளிப் பண்டிகை நாளில் பூர்த்தியாகும்.
இருபத்தொரு நாள் உபவாசமென்றால் சாப்பாடு இல்லாமலே இருத்தல் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அதாவது பகலிலே சாப்பிடாமலிருந்து தினமும் அந்திப் பொழுதில் பூஜை வழிபாடு ஆராதனைகளை முடித்துக் கொண்டு இறைவன் இறைவிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள்களை மட்டும் உட்கொண்டு விட்டு தண்ணீர் அருந்துவது விசேஷம்.
முடியுமாயின் தினமும் அதாவது ஒவ்வொரு நாளும் இறைவனுக்கும் இறைவிக்கும் மஞ்சள் உருண்டை, எள்ளுருண்டை, அரியதரம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை வகைக்கு ஒவ்வொன்றாகப் படைத்து குத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி பக்திப் பனுவல்களைப் பாராயணஞ் செய்தல் வேண்டும்.
இந்த விரதமிருப்பவர்கள் தினமும் காலை எழுந்து புனித புண்ணிய நீராடித் தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து சந்தியாவந்தனம் முடித்து வீட்டிலோ அல்லது ஓர் ஆலயத்திலோ இருபத்தொரு இழைகள் கொண்ட நூலைக் கும்பத்திலோ அன்றி லிங்கத்திலோ சாத்தி பூஜை வழிபாடு ஆராதனையின் பின்பு பூவும் நீரும் கொண்டு வலம் வந்து மிக்க பயபக்தியுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுப் போடுதல் வேண்டும். இது மிகவும் பக்குவமாகப் பக்தியுடன் செய்யப்பட வேண்டும்.
இறுதியாக இருபத்தோராம் நாள் காப்பு நூல் கட்டும் போது முதல் வருடம் கையிற் கட்டியிருந்த காப்பை நீக்கிவிட்டு புதுக்காப்பைக் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். கடந்த வருடம் கட்டிய காப்பு நூலையும் பூஜித்த லிங்கத்தையும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இவ்விரதத்தை தொடர்ந்து 21 வருடம் அனுட்டிக்க வேண்டும். அதுவே ஆன்ம ஈடேற்றம் தரவல்லது.
சிலபேர் இருபத்தொரு வருடம் என்றில்லாது வாழ்நாள் முழுவதும் நிறுத்தாமல் அனுட்டிப்பர். இருபத்தொரு நாளும் வழிபாடியற்றிய விரதகாரர் இறுதி நாளில் முழு நேரமும் உபவாசமிருந்து அடுத்தநாள் அதிகாலை இந்த விரதமிருந்த நற்பயனை எனக்குத் தர வேண்டுமென்று மானசீகமாக விண்ணப்பித்து வேண்டிக் கொண்டு பாறணை பண்ணலாம்.
இந்த விரதத்தை முறைப்படி அனுட்டித்தவர்களுக்கு நல்ல சிறப்பான மங்களம் நிறைந்த இல்லற வாழ்க்கையும் நன்மக்கட்பேறும் நிச்சயம் கிடைக்கும். மேலும் இடை நடுவில் தடைப்பட்ட திருமணங்கள் நல்லமுறையில் மங்களகரமாக நிறைவேறும். அது மாத்திரமன்றி பெண்களுக்கு அவர்கள் விரும்பய மாதிரி கணவரும் புத்திரப் பேறும் கிட்டும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்த விரதம் பற்றிய ஒரு பூர்வீகக் கதையும் வழக்கிலிருக்கிறது. அதாவது முன்னொரு காலத்தில் திருக்கயிலாய மலையின் மீது சிவனும் சக்தியும் வீற்றிருக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் பிரம்ம விட்டுணுக்களும் தும்புரு, நாரதர் முதலானோரும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் இருவரையும் வணங்கிச் சென்றனராம்.
அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சிவனை மாத்திரம் வழிபட்டு விட்டு அம்பிகையை வணங்காமல் சென்றுவிட்டார். அதைக் கண்ணுற்ற உமையவள் தமது பிராணநாயகராகிய சிவபெருமானைப் பார்த்து, “ஐயனே! பிரபுவே! மன்னிக்கவும், நான் இப்படிக் கேட்டதைத் தவறாக எண்ணாமல், அது என்ன? விபரீதச் செயல்; என்னை வணங்காமல் தங்களை மட்டும் வணங்கி விட்டுச் செல்கிறாரே! காரணம் தாங்கள் அறியாததா?” என்று வினவி நின்றார். அதைக் கேட்ட சிவன் சிரித்துக் கொண்டே “தேவி! பிருங்கி முனிவருக்கு எந்தப் பாக்கியமும் தேவையில்லை. மோட்சத்தை மட்டுமே விரும்பிய அவர் உன்னை விடுத்து, என்னை வணங்கிச் செல்கின்றார். இதிலென்ன?” என்றார்.
அதைக் கேட்ட உமையவள், “அப்படியா! சங்கதி!!” என்று கூறியவண்ணம் பிருங்கி முனிவரிடம் சென்று “ஏ! பிருங்கி முனிவரே! உம்முடம்பிலுள்ள இரத்தம், மாமிச இறைச்சி’ முதலியன என்னுடையவை. ஆகவே, அவற்றைக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டார். உடனே பிருங்கி முனிவர் தம்முடம்பிலுள்ள தசை, நார், இரத்தம் என்பவற்றை உதறிக்கொட்டிவிட்டார்.
இரத்தம் முதலானவை இல்லாமற் போனதால் பிருங்கி முனவரின் உடல் தளர்ந்து நடக்க முடியாமல் தள்ளாடினார். நிலை தடுமாரிய பிருங்கியைப் பார்த்து சிவபெருமான், “அட பிருங்கி முனிவரே! நீர் ஏன் அசத்தனானீர்?” என்று வினவினார். அதற்கு அவர் “சர்வேஸ்வரனே! சிறியேன் சக்தியை விட்டுவிட்டுத் தங்களை மாத்திரம் வணங்கியதால் வந்த வினை” என்று கூறி அங்கலாய்த்தார்.
உடனே சிவபெருமான் பிருங்கி முனிவருக்கு ஒரு தண்டை எடுத்து ஊன்று கோலாகக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட பிருங்கி முனிவர் அதனை ஊன்றி நடந்து தனது ஆச்சிரமத்தை அடைந்தார். இப்படி நடந்ததைக் கண்ணுற்ற உமையம்மை இந்த அவமதிப்பைத் தாங்க முடியாமல் சிவபெருமானுடன் கோபித்துக் கொண்டு விண்ணுலகான கைலயங்கிரியை விட்டு நீங்கிப் பூலோகம் சென்றார். பின்பு அவர் கெளதம முனிவருடைய ஆச்சிரமத்தையடைந்து ஒரு மரநிழலில் அமர்ந்திருந்தார்.
மழையின்மையால் வாடிப்போயிருந்த கெளதம முனிவரது ஆச்சிரமத்துப் பூச்செடிகளெல்லாம் அம்பிகையின் வரவால் பூத்துக் குலுங்கின. அழகான புஸ்பங்கள் மலர்ந்து அந்த ஆச்சிரமம் முழுவதும் நறுமணம் வீசியது.
தம்முடைய ஆச்சிரமம் திடீரென்று அழகுமிக்கதாக பூக்கள் மலர்ந்து நறுணம் வீசியதைக் கண்ட கெளதம முனிவர் அதிசயித்து வெளியில் வந்து பார்த்த போது, அம்பிகை அமர்ந்திருப்பதைக் கண்டு “தாயே! லோகமாதா! ஆதிபராசக்தியே! உமையவளே! தாங்கள் என் ஆச்சிரமத்துக்கு வந்த காரணம் யாதோ?” என்று பணிவுடன் வினவி நின்றார். அவருக்கு நடந்தவற்றை விவரமாகக் கூறிய அம்பிகையை கெளதம முனிவர் ஓர் அழகிய சிம்மாசனத்தை வரவழைத்து அதில் அம்பாளை எழுந்தருளச் செய்து வணங்கி நின்றார்.
அந்நேரம் அம்பிகையானவள் மகிழ்ச்சியடைந்து “ஓ முனிவரே! யான் ஒரு விரதம் அனுட்டித்து இறைவனை அடைய நீர்தான் வழிகாட்ட வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டாள். அதைக் கேட்ட கெளதமரும்” தேவி! பூமியில் ஒரு நல்ல விரதம் உண்டு. அதுதான் கேதாரகெளரி விரதம். அதனை அனுட்டித்தால் தாங்கள் சிவபெருமான¨ச் சென்றடையலாம். இதோ அதற்கான விதிமுறைகளைக் கூறுகிறேன். கேட்பீர்களாக!” என்று கூறி கேதாரகெளரி விரதம் அனுட்டிக்கும் விதிமுறைகளையும் சொல்லி வைத்தார்.
அதைக்கேட்ட அம்பிகையானவள் உடனே அந்த விரதத்தை முறைப்படி நோற்று சிவபெருமானிடம் சென்றடைந்தார். சிவபெருமானும் அம்பிகையை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாமபாகத்தைக் கொடுத்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
இடபாரூடராகக் காட்சி கொடுத்த சிவபெருமானிடம், “ஐயனே! இந்த விரதத்தை முறையாக அனுட்டிப்பவர்களுக்கு சகல செளபாக்கியங்களையும் தேவரீர் வழங்கியருள வேண்டும்” என்று உமையவள் விண்ணபிப்பித்து நின்றார். அது கேட்ட சிவபெருமானும்” அப்படியே ஆகட்டும், தேவி! உமையவளே! உன் விரும்பப்படியே இந்தக் கேதார கெளரி விரதத்தை முறையாக அனுட்டிப்பவர்கள் இப்பூவுலகில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெற்றுச் சகல செளபாக்கியங்களுடன் வாழ்வர்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஆதலால் இந்தக் கெளரி விரதத்தை சைவமக்கள் ஒவ்வொருவரும் முறையாக அனுட்டித்து மனித வாழ்வில் சகல ஐசுவரியங்களையும் பெற்றுச் சீரோடுஞ் சிறப்போடும் வாழ தம்மைத் தாமே தயார்படுத்திக் கொள்வார்களாக…!

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்
ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.
தேவையானவை:-
வாழை இலை
பச்சை கற்பூரம்
சீரகம்
பருத்திக் கொட்டை
கல் உப்பு
மிளகு
நவ தான்யங்கள்
கோதுமை
நெல் (அவிக்காதது)
முழு துவரை
முழு பச்சை பயிறு
கொண்ட கடலை
மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)
முழு வெள்ளை மொச்சை
கருப்பு எள்
முழு கொள்ளு
முழு கருப்பு உளுந்து
விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42
தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21
செய்யும் முறை:-
எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.
துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கோட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.
ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும், ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).
இறுதியாக இறைவனிடம் "இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம். மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். வேண்டுமானால், உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.
மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும். இது கட்டாயம்.
ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார். அதனால், கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும். கோவிலில் முன் அனுமதி பெறுவது மிக முக்கியம்
# Nanrigal kodi siththanarul
About temple & Details - Divine Mr.Sathasivam - 81448 42722
பணவளக்கலை - 98946 24425

கந்தர் கலிவெண்பா

கந்தர் கலிவெண்பா !


1. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

(ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


(குறிப்பு: எங்கெங்கு பதம் பிறிப்பதனால் பொருள் மாறுபடவில்லையோ அங்கெல்லாம் பதம் பிறிக்கப்பட்டுள்ளது.)
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த(1) முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத(2) போதமாய் - ஆதிநடு
.1
(1) நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
(2) போதமுங் காணாத

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு
.2

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத .
.3

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்
.4

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து .
5

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
.6

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்
7

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய ..
.8

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் .
9

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் .
.10

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா
.11

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் .
.12

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் ..
.13

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் ..
.14

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் .
.15

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து (1)உள்நின்று
ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு ..
.16
(1) கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்

முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம் .
.17

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் .
.18

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட .
.19

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் ..
.20

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் .
.21

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச இருள்துரந்து (1) பல்கதிரில் சோதிவிடும்
.22
(1) பாச விருடுரந்து ப்ல்கதிரிற் சோதிவிடும்

வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்
.23

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
.24

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
.25

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்
.26

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்
.27

புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி .
.28

இளம்பருதி நுாறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து
.29

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
30

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி .
31

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ
32

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்
33

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்
34

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ .
35

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும்
36

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்
37

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து
38

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் .
39

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று .
40

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்
41

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய .
42

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி .
43

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து
44

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன்
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்
45

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்
46

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்
47

தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம்
48

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
வீரனைத் துாதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு .
49

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்
50

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு .
51

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மோலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம்
52

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு .
53

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து .
54

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் .
55

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமுந்தீீ நீரும் பொருபடையும் - தீது அகலா .
56

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத்
57

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் .
58

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை
59

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
60

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று
61

பகை கடிதல்!

பகை கடிதல்!


பகை கடிதல்
"பகை கடிதல்" என்னும் "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்."என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!

படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் கீழ்வருமாறு:
திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே
இருடபு மொளியுருவே யெனநினை யெனதெதிரே
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே.
1
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!!

(விசேடம்) திரு - தெய்வத்தன்மை, பேரழகு முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் - முனிவர்களுமாம். முருகவேளை அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள் பெற்றனர். இருள்தபும் ஒளியுரு - புற இருள் நீக்கும் சூரியன் போலாது அக இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. "ஓவற இமைக்கும் சேண்  விளங்கு அவிர் ஒளி" என்பர் நக்கீரர். குருகுகள் - பறவைகள். மயில், முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச்சிறப்பால் "குருகுகள் முதல்" எனப்பட்டது. இறைவன் - எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே, மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.
மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே.
2
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!!!!!
இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே.
3
இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!!!!!
பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே.
4
பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
5
அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!!!!!
இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே.
6
இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே.
7
எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே.
8
இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே
குகபதி யமர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
9
இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
10
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

(விளக்கம்) அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

(விசேடம்) பாம்பனடிகள் பிரப்பன் வலசைப் பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டை கூடியபோது காளைக் குமரேசன் அவர் திருமுன் அகத்தியர், அருணகிரி என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான். இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம். சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இரு முனிவர் திருநாமங்களும் ஒரே பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேச நினைவும் நிழலாடக் காணலாம். இதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும் அருள் நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது உணர்ந்து மகிழத்தக்கது.

குமாரஸ்தவம்!

குமாரஸ்தவம்!


ஓம் குமரகுருதாச குருப்யோ நம :
குமாரஸ்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம:
ஆறுமுக தலைவனுக்குப் போற்றி போற்றி.

2. ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஆறுவகை சமயங்களின் தலைவனுக்குப் வணக்கம்.

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஆறு கழுத்துக்களையுடைய தலைவனுக்கு வணக்கம்.

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம:
ஆறு கிரீடங்களை (முடிகளை) அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்.

5. ஓம் ஷட்கோன பதயே நமோ நம:
அறுகோண (சக்கரத்தில் எழுந்தருளியுள்ள) தலைவனுக்கு வணக்கம்.

6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்.

7. ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஒன்பது வகையான நிதிகளின் தலைவனுக்கு வணக்கம்.

8. ஓம் சுபநிதி பதயே நமோ நம:
பேரின்ப முக்தி நிலையத் தலைவனுக்கு வணக்கம்.

9. ஓம் நரபதி பதயே நமோ நம:
அரசர் தலைவனுக்கு வணக்கம் (நரபதி - மக்கள் அரசன்).

10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம:
தேவ ராஜனான தேவேந்திரனுக்கும் மகா தேவனான சிவனாருக்கும் முறையே ஆட்சியையும் உபதேசமும் அளித்த அண்ணலான சுரபதிக்கு வணக்கம்.

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
கூத்தப் பிரானான அறுமுகச் சிவனாருக்கு வணக்கம்.

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:
ஆறெழுத்து இறைவனுக்கு அநேக வணக்கம்.

13. ஓம் கவிராஜ பதயே நமோ நம:
கவிராஜ ராஜனாகிய தலைவனுக்கு வணக்கம்.

14. ஓம் தபராஜ பதயே நமோ நம:
தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்.

15. ஓம் இஹபர பதயே நமோ நம:
இவ்வுலகத்திற்கும் மறுமையிலடையும் சுவர்க்கம் முதலிய உலகத்திற்கும் தலைவனான குமரனுக்கு வணக்கம்.

16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம:
திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரினாதருடைய தலைவனுக்கு வணக்கம்.

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம:
வெற்றி மிக்க இறைவனுக்கு வணக்கம்.

18. ஓம் நயநய பதயே நமோ நம:
மிக்க இனிமையைச் செய்யும் தலைவனுக்கு வணக்கம்.

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
அழகு குருவான தலைவனுக்கு வணக்கம்.

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
தேவகுஞ்சரி என்னும் தெய்வானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்.

21. ஓம் வல்லீ பதயே நமோ நம:
வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்.

22. ஓம் மல்ல பதயே நமோ நம:
மல் போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்.

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
வேல் முதலிய தெய்வப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
சாஸ்திரங்கள் என்ற கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
சஷ்டி திதியில் அமைந்த கந்த விரதத் தலைவனுக்கு வணக்கம்.

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம:
(வேள்வி) யாகத் தலைவனுக்கு வணக்கம்.

27. ஓம் அபேத பதயே நமோ நம:
வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்.

28. ஓம் ஸுபோத பதயே நமோ நம:
மெய்யுணர்வு அருளும் தலைவனுக்கு வணக்கம்.

29. ஓம் (வ்) வியூஹ பதயே நமோ நம: (
சேனைகளின்) அணிவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்.

30. ஓம் மயூர பதயே நமோ நம:
மயூர நாதனுக்கு வணக்கம்.

31. ஓம் பூத பதயே நமோ நம:
பூதங்களின் தலைவனுக்கு வணக்கம்.

32. ஓம் வேத பதயே நமோ நம:
வேதநாதனுக்கு வணக்கம்.

33. ஓம் புராண பதயே நமோ நம:
பழமையான (புராணங்களுக்குத்) தலைவனுக்கு வணக்கம்.

34. ஓம் (ப்) பிராண பதயே நமோ நம:
ஆன்ம நாதனுக்கு வணக்கம்.

35. ஓம் பக்த பதயே நமோ நம:
அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்.

36. ஓம் முக்த பதயே நமோ நம:
பாச பந்தங்களில் இருந்து விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்.

37. ஓம் அகார பதயே நமோ நம:

38. ஓம் உகார பதயே நமோ நம:

39. ஓம் மகார பதயே நமோ நம:
மூல மந்திரமாகிய "ஓம்" என்ற பிரணவம் அகரம், உகரம், மகரம் என்று பிரியும். இம்மூன்று ஒலிகளும் முறையே ஆகல, காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் அவற்றை செய்யும் அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளையும் உணர்த்தும். அந்த மும்மூர்த்திகளையும் அதிஷ்டித்து நிற்கும் முருகனே மூவர் தேவாதிகள் தம்பிரான் ஆவான். அவனே பிரணவ வைசியன் என்க.

40. ஓம் விகாச பதயே நமோ நம:
எங்கும் துன்றி நிறைந்த இறைவனான குகபதிக்கு வணக்கம்.

41. ஓம் ஆதி பதயே நமோ நம:
எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்.

42. ஓம் பூதி பதயே நமோ நம:
சகல ஐஸ்வரியங்களுக்கும் அண்டங்களுக்கும் நாயகனுக்கு வணக்கம்.

43. ஓம் அமார பதயே நமோ நம:
மாரவேளை எரித்த மாதேவருக்குத் தலைவனுக்கு வணக்கம்.

44. ஓம் குமார பதயே நமோ நம:
குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

மங்கலவுரை

குமாரஸ்த்வம் என்ற இச்சிறுநூல் ஓர் ஆறெழுத்து மந்திர மறையாகும். இந்நூலின் முதல் ஆறு அடிகள் ஆறு என்ற எண் அமையவருவது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரபிரானது திருமுகம், திருக்கைவேல், மயில், இரு தேவியர் முதலிய அனைத்தும் பேசப்படுவதால் இதனைப் பாராயணம் செய்வோர் குமாரப்பெருமானை இரு தெவியற்களோடும் மயில்மீது தரிசிக்கப் பெறுவர் என்பதும் குமாரப் பெருமான் திருவருளும், பாம்பனடிகள் குருவருளும், சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வையும் தந்தருளும் என்பதும் திண்ணம்.
"பாம்பனடிகள் பதமலர்க்கே அடைக்கலம்"
"ஓம் குமாராய நம : 

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம்நீங்கிவிடும்

பசு வழிபாடு !


இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும்புண்ணியமாகக

 கருதுகின்றனர்இந்தப் பசுவை கோமாதாஎன்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.பசுவின் உடலில்
ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.
*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன்,திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலியபுண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர்சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும்சுக்கிலத்திலும் – யாகத் தொழில்முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்காநிறையுடைய
 கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் 
இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டனஅவைநந்தாபத்திரைசுரபி
சுசீலைசுமனை ஆகியவை. . இவைபொன்னிறம்கருமைவெண்மைபுகைசிவப்பு நிறம்கொண்டிருந்தனஇவற்றின் சந்ததிகளே பூலோகத்தில்நமக்கு உதவியாக இருந்து வருகின்றனஇவற்றில்இருந்துவரும் கோமயம்(சாணம்),  
மூத்திரம்(கோமியம்), பால்தயிர்வெண்ணெய் ஆகியஐந்தும் புனித
மானவைஇவற்றை குறிப்பிட்ட அளவில்கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது
இப்பசுக்களில் மும்மூர்த்திகள்சத்தியம்தர்மம்என்று எல்லா தேவதைகளும்வசிக்கின்றனர்செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்வசிக்கிறாள்இப்பகுதியைதொட்டு வழிபட்டால் 
முன்ஜென்ம பாவங்கள்விலகும்காலையில் எழுந்ததும் பசுவைத் 
தொழுவத்தில்காண்பது சுபசகுனம் தெருக்களில் கூட்டமாகப் 
பார்த்தால்இன்னும் விசேஷம்பாற்கடலில் பிறந்த 
ஐந்துபசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து
அருள்பாலிப்பதாக ஐதீகம்பசுவைத் தெய்வமாகவழிபட்டால் 
கோலோகத்தை அடையும் பாக்கியம்உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின்வாசஸ்தலம்.
வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவதுகோலோகம்.

கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும்தெய்வங்களும்
1. முகம் மத்தியில்                       சிவன்

2. வலக் கண்                               சூரியன்

3. இடக் கண்                               சந்திரன்
4. மூக்கு வலப்புறம்                     முருகன்
5. மூக்கு இடப்புறம்                     கணேசர்
6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம்                     ராகு
8. கழுத்து கீழ்புறம்                        கேது
9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதிவிஷ்ணு
11. முன்வலக்கால்                         பைரவர்        
12. முன் இடக்கால்                        ஹனுமார்
13. பின்னங்கால்கள்                      ப்ராசரர்விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி             நாரதர்வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம்                கங்கை
16. பிட்டம் - மேல்புறம்                லக்ஷ்மி
17. முதுகுப்புறம்                           பரத்வாஜர்குபேரர் வருணன்,அக்னி    
18. வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி                     நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு                            வீமன்
22. இடக்கொம்பு                            இந்திரன்
23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை
24. முன்இடக்குளம்பு                      இமயமலை
25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை
26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை
27. பால்மடி                                      அமுதக்கடல் 

பசு வழிபாடு வகை

வழிபாடு இரண்டு வகைப்படும்.

1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்அலங்கரித்து

எல்லா மந்திரங்களும் கூறிமலர்களால் அர்ச்சித்துதூப,தீபநிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனைவிக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபடமுடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்துவழிபடுவது போலவீட்டில்கோமாதாவின் படத்தைமட்டும் வைத்து 

வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்

2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடாவிட்டாலும்வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கேஉதவுவதாக அவற்றின் நலனைப் 
பாதுகாத்துப்பராமரிப்பதும் பசுவழிபாடேஇரண்டாம் வகை பராமரிப்புவழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடுநடக்க முடியும்.கோமாதாவில் (பசுமுப்பத்து முக்கோடிதேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்அதன்பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக 
ஐதீகம்.எனவேகோமாதா பூஜை செய்யும் போதுபசுவைமுன்புறமாக
 தரிசிப்பதைவிடபின்புறம் தரிசனம் செய்வதுமிகவும் நன்மை தரும்
பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் 
சந்தனம்குங்குமம் வைத்துமலர் அணிவித்துவழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும்எனவேதான்அதிகாலையில் 
சாணத்தைவீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வதுபராசக்திக்கு பூஜை செய்வதற்குச்சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலானமும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் 
என்றொருதெய்வம் உண்டு.
சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்திஇருக்கிறார்.

இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாகமனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்திஇருக்கிறாள்.இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,
உயிர்கள்என அனைத்தையும் படைத்து,காத்து,
ரட்சிப்பவளாகஇருக்கிறாள்
இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன்வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயே,முப்பத்துமுக்கோடிதேவர்களும்,

நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சிசெய்கின்றன.

கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்தஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.
(உருவ வழிபாடுஇல்லை என சொல்லும் மதத்தினர் கூட 

கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம்நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்டசக்திகள் நெருங்காதுமுற்பிறவியில் செய்த பாவங்கள்நீங்கிவிடும்

பணவளக்கலை  program - 97900  44225