Thursday, March 31, 2016

உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்

💥ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.
💥"அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
" ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன்.
💥சில விநாடிகளுக்குப் பிறகு,
"பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.
அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!"
என்று சொன்னான் அர்ஜுனன்.
💥மேலும் சில விநாடிகள் கழித்து
"அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!"
கிருஷ்ணர் சொல்ல,
கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.
💥இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
"அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.
அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.
"நிஜம் தான் கிருஷ்ணா...அது 
காகமே தான்...சந்தேகமே இல்லை.!"
பதிலளித்தான் அர்ஜுனன்.
💥" என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத் 
தெரியாதா.?"
கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
"கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,அது பருந்தோ,காகமோ,
புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.
தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.
இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் ,நம்பிக்கை வையுங்கள்.
அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணருங்கள்.
உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள்

100000 ரூபாய்

ஒரு இரும்பு துண்டின் விலை 250 ரூபாய்

அதை ஒரு குதிரை லாடமாக மாற்றினால் அதன் மதிப்பு 1000 ரூபாய்

ஊசிகளாக மாற்றினால் அதன் மதிப்பு 10000 ரூபாய்

விலையுயர்ந்த கடிகாரத்தின் கம்பி சுருளாக மாற்றும் போது அதன் மதிப்பு 100000 ரூபாய்

உங்கள் சொந்த மதிப்பு நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ அதை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால் உங்களிலிருந்து நீங்கள் எதை உருவாக்கிறீர்களோ அதைக் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது. 

நீங்கள் எப்படி உருவாக்கி உங்கள் மதிப்பை தீர்மானிக்கப்போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான் உள்ளது

இனிய காலை  வணக்கம்

ஒரு தந்தை மகளின் உரையாடல் - பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க.

ஒரு தந்தை மகளின் உரையாடல் - 
பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க.
--------------------------------------------------
அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் “குளிர் காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலேல துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம். 

அவ , ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , “அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” அப்படின்னாள்...

“மாட்டேன், தாராளமாச் சொல்லு”

”அந்த 304-ல இருக்கானே, ராகுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கறான்”

“சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக. 

அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும். 12ம் வகுப்பு.

”மொதல்ல அந்த பையங்கிட்ட ஒழுங்காத்தான்ப்பா பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்டு’ன்னான்.”

“நீ என்ன சொன்னே?”

“ம்ம். .. நானும்..  Shut Up-னு முதல்ல சொல்லிட்டேன். ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி படபடன்னு வருதுப்பா. “

நான் மவுனமாக இருந்தேன்.

“இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயம்ம்மா இருக்கு. நான் தப்பு பண்றேனோ?”

நான் இன்னும் அமைதியாக நடந்தேன்.

“அப்பா” என்றாள். பெண் குரல் உடைந்து, ரோடு என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்கொண்டு “சாரிப்பா, நான் தப்பா ஏதேனும் சொல்லிட்டேனோ? சாரி..  சாரி” என்று அழுதாள்.

“இல்லேம்மா., நினைச்சுப் பாத்தேன். நீ ஒன்ணாங் கிளாஸ்ல இருக்கறச்சே, ஸ்கூல்ல க்ளாஸ்லயே உச்சா போயிட்டே. ஸ்கர்ட் எல்லாம் நனைஞ்சு .. It was a mess you know?. 
அந்த வயசுக் குழந்தைக்கு இயற்கை உபாதையை அடக்கத் தெரியாது. இப்ப நீ எவ்வளவு பெரிய , பொறுப்பான பெண்ணாயிட்டன்னு நினைக்கறச்சேயே, பெருமையா இருக்கு”

“அப்பா?” என்றாள் அவள் குழம்பிப்போய். இதுக்கும், அவள் சொன்னதுக்கும் என்ன தொடர்பு?ன்னு நினைச்சிருக்கலாம்.
“இப்போ கிளாஸ்ல இருக்கறச்சே பாத்ரூம் வந்ததுன்னு வைச்சுக்கோ. 
அது இயற்கைன்னு க்ளாஸ்லேயே போயிட முடியுமா? “

“சீ. ச்சீய்” என்றாள் அவள். 
வெட்கமாக, என் கையைக் கிள்ளினாள்.
“கிளாஸ் முடியற வரை அடக்கி வைச்சிருந்து, இண்டெர்வெல்ல ஓடிப்போறேல்ல? அதுமாதிரிதான். இந்த பையன் பத்தின உணர்ச்சியெல்லாம், இயற்கையோட வேலை. 

நாம படிக்கறச்சே இதைத் தவிர்த்திடணும். அப்புறம் காலம் வந்தப்போ அதும்பாட்டுக்கு நடக்கும்.”

அவள் கலங்கிய கண்களோடு ஒரு நிம்மதியுடன் என்னைப் பார்த்தாள்.

“So, இனிமே அந்தப் பையனைப் பார்த்தா பாத்ரூம்னு ஞாபகம் வரும் இல்லையா?”

“உவ்வே” என்றாள் போலியாக வாந்தி எடுப்பதாகக் காட்டி. பஸ் திருப்பத்தில் வந்திருந்தது. 

எப்படி ஒரு நாசூக்கான விஷயத்தை,”நாயே, அதுக்குள்ள காதல் கேக்குதோ?” என்றெல்லாம் பொங்காமல், மிக அமைதியாக ஒரு பொறுப்புணர்வுடன் கையாண்டு இருக்கிறார்?

வளர்ப்பதில் நாமும் வளர்கிறோம்...

கடவுள் பக்தி என்றால் என்ன?

கடவுள் பக்தி என்றால் என்ன? 

          பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். 

செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.  செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

      ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.  அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.

 அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். 

அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.

 அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர்.  கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. 

இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று  பற்றுவதே ”உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.

யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.

அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.

லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.

பின்தொடர்ந்த நாய்

மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.

பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”

சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் “சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். “தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.

அர்ச்சுனன் வீழ்ந்தான்

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.

அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.

தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். “உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.

ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.

மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.

அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் மறைந்தார்...


தொழில் ரகசியம்: முடிவு உங்கள் கையில்

உங்கள் மனதில் தோன்றுகிறது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று கண் மூடித்தனமாய் இருக்காதீர்கள். முடிவெடுக்க தேவையான அனைத்து செய்திகளையும் சேகரிக்கிறீர்களா என்று பாருங்கள். உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் செய்திகளுக்கு மட்டுமே இடம் கொடுக்காதீர்கள். 

முடிவெடுக்கும் போது நடக்கும் தவறுகள் குறித்து மூன்றாவது வாரமாகத் தொடர்கிறோம். முடிவுகளில் தவறுகள் ஏற்படுவது பெரும்பாலும் முடிவெடுப்பவர் மனதில்தான் என்கிறார்கள் ’ஜான் ஹேமண்ட்’, ‘ரால்ஃப் கீனி’ மற்றும் ‘ஹோவர்ட் ரைஃபா’. ’ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘The hidden traps in decision making’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் நிர்வாகங்கள் தவறான முடிவெடுப்பதிலுள்ள உளவியல் ரீதியான புதைகுழிகளை பட்டியலிடுகின்றனர். அதில் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம். 

கன்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப் (Confirming-evidence trap) 

தாம் நினைத்ததே சரி, தாம் நினைத் ததையே மற்றவர் சொல்லவேண்டும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். மாற்று கருத்து சரியானதாக இருந்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். மனதில் இருப்பதை உறுதி (கன்ஃபர்ம்) செய்யும் சாட்சிகளை (Evidence) மட்டுமே நாடுவதால் இதற்கு கம்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப் என்று பெயர். 

மணி பத்திருக்கும் என்று நினைக் கிறோம். வாட்ச் இல்லை. அருகிலுள்ள நண்பரிடமும் வாட்ச் இல்லை. அவரிடம் ‘மணி பத்திருக்கும் இல்ல’ என்று கேட்கிறோம். அவர் ‘சே இருக்காது’ என்கிறார். ‘அட போய்யா கண்டிப்பா பத்திருக்கும்’ என்று அடித்துக் கூறுகி றோம். கூறியது ஞாபகம் வருகிறதா! 

அமெரிக்க ஆராய்ச்சி ஒன்றில் தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஒரு அணியையும் அதை எதிர்க்கும் ஒரு அணியையும் அழைத்து அவர்களிடம் இரண்டு ஆராய்ச்சி அறிக்கைகள் தரப்பட்டன. ஒரு அறிக்கை அறிவியல் பூர்வமாக தூக்கு தண்டனை சரியே என்று விளக்கும் அறிக்கை. இன்னொரு அறிக்கை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து தூக்கு தண்டனை தவறு என்று விளக்கும் அறிக்கை. இரண்டு அறிக்கைகளையும் இரு குழுக்களும் படித்தபின் அவர்களிடம் அந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று ஆராயப்பட்டது. இரு குழுக்களும் தங்கள் எண்ணத்தை பிரதிபலித்த அறிக்கையிலுள்ள காரணங்களை மட்டுமே கணக்கிலெடுத்து ‘பார் நாங்கள் சொல்வதைத் தான் கூறியிருக்கிறார்கள்’ என்று சாதித்தது. என்னதான் அறிவியல் பூர்வமாக ஆதாரங்களும், மாற்றுக் கருத்தும் அளிக்கப்பட்டாலும் தங்கள் எண்ணத்தை கைவிட இரு குழுக்களும் தயாராக இல்லை. 

நிர்வாகங்களிலும் இதே கதைதான். எக்ஸ்போர்ட் கம்பெனி உரிமையாளர் ரூபாயின் மதிப்பு அடுத்த சில மாதங் களில் குறையும் என்று நினைக்கிறார். அதைக் கொண்டு உத்தி அமைக்க வேண்டும் என்பதால் இதைப் பற்றி ஏற்றுமதித் துறையில் உள்ள தன் நண் பரிடம் கேட்கிறார். அவர் ‘இல்லையப்பா, ரூபாயின் மதிப்பு கூடுமே ஒழிய குறையாது’ என்கிறார். ஏற்றுமதி நிறுவன உரிமையாளரோ கம்பெனி ஓனரோ ‘இந்தாளுக்கு என்ன தெரியும்’ என்று தான் நினைத்தபடி ரூபாய் மதிப்பு குறையும் என்றே உத்தி அமைக்கிறார். கன்ஃபர்மிங் எவிடென்ஸ் ட்ராப்பில் தொபுக்கடீர் என்று விழுகிறார்! 

கண்மூடித்தனம் வேண்டாம் 

உங்கள் மனதிற்கு சரியென்று பட்டதை, பட்டென்று தோன்றுவதை செய்யக்கூடாது என்றில்லை. பல சமயங்களில் உங்கள் அனுபவத்தின் காரணமாக அது சரியாகவே இருக்கலாம். உங்கள் மனதில் தோன்றுகிறது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று கண் மூடித்தனமாய் இருக்காதீர்கள். முடிவெடுக்க தேவையான அனைத்து செய்திகளையும் சேகரிக்கிறீர்களா என்று பாருங்கள். உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் செய்திகளுக்கு மட்டுமே இடம் கொடுக்காதீர்கள். 

ஆலோசகர் அவசியம்

நீங்கள் எடுக்கும் முடிவில் தவறு இருந்தால் அதை உங்களிடம் கூற உங்கள் ஊழியர்கள் தயங்குவார்கள். படியளப்பவரிடம் பயம் இருக்காதா. இதற்கும், பொதுவாகவே உங்கள் மனசாட்சியாய் திகழ்வதற்கும் நல்ல நிர்வாக ஆலோசகரை நியமியுங்கள். உங்களுக்கு ஆமாம் போடும் ஆசாமியாய் இல்லாமல் நீங்கள் தவறான முடிவெடுக்கும் போது தட்டிக்கேட்கும் திறன் உள்ளவரை தேர்ந்தெடுங்கள். 

ஓவர் கான்ஃபிடன்ஸ் ட்ராப் (Over-confidence trap) 

பல நேரங்களில் முடிவெடுக்கையில் ஓரளவேனும் வருங்காலத்தை கணித்து முடிவெடுக்க வேண்டியிருக்கும். நம் கணிப்புகள் அனைத்துமே சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பல நேரங்களில் நம் கணிப்புகள் தவறாக அமைந்து அதனால் முடிவுகளும் தவறாகிப் போவதுண்டு. இது தெரிந்தும் பலர் வருங்காலத்தை கணிப்பதில் தான் கில்லாடி கிருஷ்ணன் என்று தங்களுக்கு தாங்களே கூறிக்கொண்டு தங்கள் கணிப்பில் அபரிமிதமான நம்பிக்கை வைத்து முடிவெடுக்கின்றனர். இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது. கம்பெனிக்கும் ஆகாது. சமயங்களில் கணிப்புகள் தவறாகிப் போய் முடிவுகள் அநியாயத்திற்கு தவறாகி கம்பெனியையே பாதித்துவிடுகின்றன. ‘நம்பியவன் கழுத்தறுத்தான்’ என்று கேள்விப்பட்டிருப்போம். தன்னையே ஓவராய் நம்பி கழுத்தறுபடுவது இந்த வகை! 

அன்றாட வாழ்க்கையில் ஓவர் கான்ஃபிடன்ஸ் ட்ராப்பில் எத்தனை தரம் விழுகிறோம் என்று நினைத்துப்பாருங்கள். வண்டி ஓட்டும் போது டிராஃபிக்கில் கிடைத்த கேப்பில் புகுந்து போய்விடலாம் என்று மற்றவர்கள் செல்லும் வேகத்தை குறைவாய் கணித்து நம் திறமை மீது ஓவர் கான்ஃபிடன்ஸ் வைத்து புகுந்து செல்ல முயற்சிக்கிறோம். சின்னதாய் இடித்து பெரியதாய் சண்டையில் இறங்குகிறோம். 

ரீகாலபிலிடி ட்ராப் (Recallability trap)

வருங்காலத்தையோ, நடக்க இருப்பதையோ கணிக்கும் போது நம்மையும் அறியாமல் கடந்த காலத்தில் அதை சார்ந்த, நம்மை மிகவும் பாதித்த விஷயத்தை கொண்டு கணிக்கிறோம். வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்து (ரீகால்) அதன் தாக்கத்தில் முடிவெடுப்பதால் இதற்கு ரீகாலபிலிடி ட்ராப் என்று பெயர். 

நம்மில் பலர் உடற்பயிற்சி, வாக்கிங் செய்வதில்லை. சேனலை எழுந்து மாற்றச் சோம்பேறித்தனப்பட்டு ரிமோட்டோடு டீவி பார்க்க உட்காரும் கேஸ் தான் பலரும். ஆனால் நமக்கு மிகவும் நெருங்கியவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் மல்லாக்க மூக்கில் குழாயுடன் மூச்சை தவணை முறையில் விடுவதை பார்த்தால் போதும், அடுத்த நாள் முதல் அலாரத்தை நாமே எழுப்பி, அதுவரை வாழ்க்கையில் நடந்ததே கிடையாது என்பது போல் நடக்கிறோம். வீட்டிலுள்ளவர்கள் துரத்தி வந்து ‘போதுங்க, ப்ளீஸ் வீட்டுக்கு வந்திடுங்க’ என்று காலை பிடித்து கெஞ்சும் வரை அசுர வேகத்தில் வாக்கிங் போவோம். சிரிக்காதீர்கள், உண்டா இல்லையா! 

கணிப்புகள், பாதிப்புகள் 

மனதை பாதிக்கும் நிகழ்வுகள் அதைச் சார்ந்த வருங்கால கணிப்புகளை பாதிக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு ஆராய்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெயர்கள் கொண்ட லிஸ்டுகள் தயாரிக்கப்பட்டன. எல்லா லிஸ்டுகளிலும் சரிசமமான பெயர்கள் இருந்தாலும் சில லிஸ்ட்டுகளில் பிரபலமான ஆண்களின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தது. வேறு சில லிஸ்ட்டுகளில் பிரபலமான பெண்களின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தது. லிஸ்டில் உள்ள பெயர்கள் படிக்கப்பட்டு ஆண்கள் பெயர் அதிகமா, பெண்கள் பெயர் அதிகமா என்று மக்களிடம் கேட்கப்பட்டது. எல்லா லிஸ்டிலும் ஆண்கள், பெண்கள் பெயர்கள் சம அளவில் இருந்தாலும் பிரபலமான ஆண்கள் பெயர் அதிகமிருந்த லிஸ்ட்டை படிக்கக் கேட்டவர்கள் அந்த லிஸ்ட்டில் ஆண்களின் பெயர் அதிகம் இருப்பதாய் கூறினர். பிரபல பெண்கள் பெயர் அதிகம் இருந்த லிஸ்ட்டை கேட்டவர்கள் பெண்கள் பெயரே அதிகம் என்றனர். நம் மனமே நம்மை எப்படி ஏமாற்றுகிறது பார்த்தீர்களா? 

நிர்வாக முடிவெடுக்கும் போது ரீகாலபிலிடி ட்ராப்பில் விழாமல் இருக்க ஒரே வழி முடிவெடுக்க தேவையான செய்திகளில் நம் பழைய நினைவுகளின் தாக்கம் அதிகம் இருக்கிறதா என்று சரிபார்த்து முடிந்த வரை முடிவெடுக்க சேகரித்த செய்திகளின் உண்மைத் தனத்தை உறுதி செய்வது தான். 

முடிவெடுக்கும் போது நம்மை முட்டித் தள்ள முயற்சிக்கும் புதைகுழி களில் விழாமல் இருப்பது எளிதல்ல. எடுத்தவுடன் எல்லாருக்கும் இது வந்து விடாது. பிரம்மப் பிரயத்தனப்பட வேண்டும். பாடுபடவேண்டும். இல்லை, இத்தனை கஷ்டப்பட முடியாதென்றால் இருக்கவே இருக்கிறது பல்லாங்குழி போல் புதைகுழிகள். அதில் விழுவது ரொம்பவே ஈசி! 

சாய்ஸ் இஸ் யுவர்ஸ்! 

satheeshkrishnamurthy@gmail.com


லோகோ வெறும் வார்த்தையாகவோ, உவமையாகவோ

லோகோ வெறும் வார்த்தையாகவோ, உவமையாகவோ, படமாகவோ, வண்ணமாகவோ, கதாபாத்திரமாகவோ அல்லது இதன் கலவையாகவோ இருக்கலாம். ‘சோனி’ பிராண்டுக்கு தனியாக லோகோ என்று விஷுவலாக எதுவும் கிடையாது. அது எழுதப்பட்டிருக்கும் ஸ்டைல் தான் லோகோ. ‘பேனாசோனிக்’, ‘ஷார்ப்’ போன்ற பிராண்டுகளும் அவ்வண்ணமே. 

சில விஷயங்களை வளவளவென்று பேசுவதை விட விஷுவலாக காண்பிக்கும் போது பட்டென்று புரிகிறது. சட்டென்று தெரிகிறது. ஒரு பெண் காலில் மெட்டி அணிந்திருந்தால் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவளைக் கேட்காமலே தெரிந்து கொள்ள முடிகிறது. அஃப்கோர்ஸ் தாலி கட்டியிருந்தாலும் அதே அர்த்தம்தான். என்ன, தாலி இருக்கிறதா என்று கழுத் துக்கு கீழே உற்றுப் பார்த்துக் கொண் டிருந்தால் செருப்படி கிடைக்குமே என்று மெட்டியைச் சொன்னேன்! 

பிராண்டுகளும் அவ்வண்ணமே. பிராண்டை பொசிஷனிங் செய்து, பர்சனாலிடி கொடுத்து, அதற்கு ஒரு பெயரையும் வைக்கிறோம். அதை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல அந்த பெயரை விஷுவலாய், பிராண்டின் பொசிஷனிங்கிற்கேற்ப வடிவமைக்கவும் வேண்டும். அந்த வடிவமைப்புக்கு லோகோ என்று பெயர். லோகோ பொருத்தமாய் இருந்து பிராண்டின் தன்மையை தெளிவாய் சொன்னால் அது நம் மார்க்கெட்டிங் வேலையை எளிதாக்கிவிடும். 

தினம் ஷேவ் செய்ய எடுக்கும் ‘ஜில்லெட்’ பிராண்டை உதாரணத்திற்கு எடுப்போம். ஜில்லெட் ஷேவிங் மார்க் கெட்டின் தனிக்காட்டு ராஜா. தன் கூர்மை யான பிளேடுகள் மூலம் ரோம சாம்ராஜ் யத்தை பூண்டோடு அழித்து கன்னத்தை வழவழவென்று ஆக்கும் பிராண்ட். இதுவே அந்த பிராண்டின் சிறப்பம்சம். இதை தெளிவாக விளக்கும் வகையில் தன் லோகோவில் ’G’ துவங்கி ‘i’ மீதுள்ள புள்ளி வரை கூர்மையாய் வெட்டப்பட்டது போல் வடிவமைத்திருக்கும் சாமர்த்தியத் தைக் கவனியுங்கள். 

லோகோ வெறும் வார்த்தை யாகவோ, உவமையாகவோ, பட மாகவோ, வண்ணமாகவோ, கதாபாத் திரமாகவோ அல்லது இதன் கலவை யாகவோ இருக்கலாம். ‘சோனி’ பிராண்டுக்கு தனியாக லோகோ என்று விஷுவலாக எதுவும் கிடையாது. அது எழுதப்பட்டிருக்கும் ஸ்டைல் தான் லோகோ. ‘பேனாசோனிக்’, ‘ஷார்ப்’ போன்ற பிராண்டுகளும் அவ்வண்ணமே. 

லோகோ என்பது பிராண்டின் தன் மையை அல்லது பயனைக் குறிக்கும் வகையில் இருப்பது நலம். `டெட்டால்’ பிராண்டின் பொசிஷனிங் பாதுகாப்பு. பாதுகாக்கும் பிராண்ட் என்று வாடிக் கையாளருக்குத் தெளிவாக விளக்கத் தான் டெட்டாலுக்கு ‘வாள்’ லோகோவாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

லோகோ என்பது பிராண்டின் முக்கிய மான அம்சத்தை குறிக்கவேண்டுமே தவிர பிராண்டின் எல்லா அம்சங்களை யும் குறிக்கவேண்டிய அவசியமில்லை. அப்படிக் குறிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தப்பாட்டம். லோகோ வாடிக்கையாளர்களுக்கு எளிதில் புரிய வேண்டும். நம் பிராண்டை வாங்கப் போவது சாமானியர்கள். அவர்கள் டிசைனர்களோ, ஆர்டிஸ்டுகளோ, அவார்ட் வாங்கிய ஓவியர்களோ கிடையாது. அதனால் அவர்களுக்கு எளிதில் புரியும்படி லோகோவை டிசைன் செய்வது அவசியம். 

‘எங்கள் வெப்சைட்டில் எல்லா பொருட்களும் வாங்க முடியும். கனி வான சேவையும் தருகிறோம்’ என்பது ‘அமேஸான்’ பிராண்டின் பொசிஷனிங். அதனாலேயே தங்கள் லோகோவில் ‘A’ முதல் ‘Z’ வரை அம்புகுறி வரைந்திருக் கிறார்கள். A முதல் Z வரை அனைத்து பொருட்களும் எங்களிடம் கிடைக்கும் என்று குறிப்பதற்கு. அதோடு அந்த அம்புகுறி புன்னகை போல் இருப்பதை யும் கவனியுங்கள். எங்களிடம் கனிவான சேவையும் உண்டு என்பதை இதை விட எப்படி அழகாகக் கூற முடியும்! 

பிராண்ட் லோகோ போட்டியாளர்கள் லோகோக்களை விட வித்தியாசமாய் இருப்பதும் அவசியம். திறமையாக வடி வமைக்கப்படும் லோகோ வாடிக்கை யாளர் மனதில் பிராண்டை டக்கென்று ஞாபகப்படுத்தும். ‘ஃபெட்எக்ஸ்’ உலகின் லீடிங் கூரியர் பிராண்ட். சரியான விலா சத்திற்கு பொருட்களை வேகமாகக் கொண்டு சேர்க்கிறோம் என்பது அவர் கள் தரும் உத்திரவாதம். இதையே பல பிராண்டுகள் கூறினாலும் உலக மக்கள் மனதில் கூரியர் என்றாலே பட்டென்று நினைவிற்கு வரும் பிராண்ட் ஃபெட்எக்ஸ். மக்களின் ஏகோபித்த பேராதரவை ஃபெட்எக்ஸ் பெற அதன் லோகோ சிறிய அளவிலாவது உதவியிருக்கிறது. எப்படி? 

வேகம், துல்லியம் இரண்டையும் விஷுவலாக உணர்த்த அவர்கள் தேர்ந் தெடுத்தது அம்பை. இதை ஃபெட்எக்ஸ் எழுத்திலேயே அவர்கள் வடிவமைத்த அதிசயத்தை கவனித்திருக்கிறீர்களா? ‘E’, ‘x’ எழுத்துகளுக்கு நடுவில் ஒளிந் திருக்கும் அம்பு ஃபெட்எக்ஸின் உத்திரவாதத்தை உறுதி செய்கிறது. போட்டியாளர் பிராண்டுகளை போட்டும் தள்ளுகிறது! 

லோகோ பிராண்டின் அங்கம். பிராண்ட் பெயர் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் லோகோ தெளிவாக தெரியும்படி வடிவமைக்கவேண்டும். சில லோகோ கலரில் பார்க்க அழகாக இருக்கும். கருப்பு வெள்ளையில் அசிங்கமாக தெரியும். அதுபோல் லோகோவை வடிவமைப்பது தப்பாட்டம். சுவர் விளம்பரம், தட்டி, பிளெக்ஸ், பேனர் போன்றவற்றில் விளம்பரப்படுத்த வேண்டியிருக்கும். அதிலும் கூட லோகோ வடிவமைத்த விதத்தை போலவே தெரியவேண்டும். அதனால் லோகோவை வடிவமைக்கும் போதே கவனத்தோடு வடிவமைப்பது அவசியம். 

காலகாலத்திற்கும் லோகோ நிலைத் திருந்தால் தேவலை என்றாலும் அப்படி அமையும் என்று நினைப்பது ரொம்பவே ஓவர். கால மாற்றங்கள், மக்களின் மாறும் ரசனைகளுக்கேற்ப லோகோவின் ஒரு சில மாற்றங்கள் தேவைப்படும். அதை செய்யத் தயங்கக்கூடாது. ’ஏர்டெல்’, ‘கனரா வங்கி, ‘பெப்சி’ என்று பல பிராண்டு கள் தங்கள் லோகோவை காலத்திற் கேற்ப மாற்றியிருக்கின்றன. அதற்காக லோகோவை வருடத்திற்கொரு முறை வீட்டிற்கு வெள்ளையடிப்பது போல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேவைப்படும் போது மாற்றினால் போதுமானது. 

‘கோகோ கோலா’ 130 வருடங்களுக்கு முன் வடிவமைத்த தன் லோகோவை இன்று வரை மாற்றவில்லை. ‘உலகின் ஒரிஜனல் கோலா’ என்று தன்னை பெருமையாய் கூறிக்கொள்ளும் பிராண்ட் தன் ஒரிஜனல் லோகோவை பயன்படுத்துவது தானே முறை. 

லோகோவை சரியாக வடிவமைக்க வில்லை என்றால் லோலோ என்று அலைய வேண்டி வரும். இதை வடிவமைப்பதில் கவனம் தேவை. சும்மாவேணும் ஒரு டிசைனரை கூப்பிட்டு ‘என் பிராண்டுக்கு அர்ஜெண்டா ஒரு லோகோ டிசைன் போட்டுக் கொடுப்பா’ என்கிற சமாச்சாரமில்லை. இதை பார்த்துச் செய்யவேண்டும். முக்கியமாக நீங்களே செய்யக்கூடாது. தேர்ந்த டிசைன் நிபுணர்களைக் கொண்டு செய்யவேண்டும். 

‘மைக்ரோமேக்ஸ்’ பிராண்ட் தன் லோகோவை வடிவமைத்த விதம் அலாதியானது. 2012ல் தங்கள் பிராண்டுக்கு புதிய லோகோ டிசைன் செய்து தருமாறு டிசைன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போட்டி ஒன்றை நடத்தியது. உலகெங்கும் சுமார் 150 கல்லூரிகள் கலந்து கொண்டன. 2,500 டிசைன்கள் பெறப்பட்டன. இரண்டு மாதம் நடந்த போட்டி. தேர்வு செய்யப்பட்டது அமெரிக்க மாணவன் ஒருவன் வடிவமைத்த ‘பன்ச் டிசைன்’. 

இப்படி மக்களிடமிருந்து ஐடியாக்கள் பெறுவதற்கு கிரவுட்சோர்சிங் (Crowdsourcing) என்று பெயர். நாமும் இப்படி செய்து பார்க்கலாமே என்று சபலம் தட்டுகிறதா? சும்மா ஓசியில் வர வில்லை மைக்ரோமேக்ஸ் லோகோ. தேர்வு செய்யப்பட்ட டிசைனை வரைந்த மாணவனுக்கு விலையுர்ந்த மேக்புக் புரோ கம்யூட்டர் அளித்து தங்கள் வெப் சைட்டில் அவனைப் பற்றியும் பெருமை யாக அறிவித்தது மைக்ரோமேக்ஸ். 

லோகோ என்பது பிராண்டின் சொத்து. சொன்னதைச் செய்கிறோம் என்று வாடிக்கையாளர்களுக்கு ஸ்டாம்ப் பேப்பரில் போடும் உத்திரவாதக் கையெழுத்து. அதை கேஷுவலாய் இல்லாமல் கேர்ஃபுல்லாய் செய்து பிராண்டின் தன்மையை விஷுவலாய் விளக்கினால் லோகோ உங்கள் பிராண்டை ஓகோ என்று உயர்த்தும்!


Wednesday, March 30, 2016

50 New Rules of Work with the hope


Hi All 

For the performer thinking like a victim, there are messy times ahead. 

Geopolitical strife. Overleveraged economies. Climate transformation. Uber-volatility. 

Yet, for the producer thinking like a leader (no matter what their formal title and authority is), the future presents gorgeous opportunities. To innovate. To contribute rich streams of value. To enrich communities. To inspire teammates. To unleash potential. To uplift the world. 

To serve your rise to your best, I humbly offer you these 50 New Rules of Work with the hope that you quietly consider implementing them as well as discussing them at your next team meeting: 

1. You are not just paid to work. You are paid to be uncomfortable - and to pursue projects that scare you. 

2. Take care of your relationships and the money will take care of itself.

3. Lead you first. You can't help others reach for their highest potential until you're in the process of reaching for yours.

4. To double your income, triple your rate of learning.

5. While victims condemn change, leaders grow inspired by change.

6. Small daily improvements over time create stunning results.

7. Surround yourself with people courageous enough to speak truthfully about what's best for your organization and the customers you serve.

8. Don't fall in love with your press releases.

9. Every moment in front of a customer is a moment of truth (to either show you live by the values you profess - or you don't).

10. Copying what your competition is doing just leads to being second best.

11. Become obsessed with the user experience such that every touchpoint of doing business with you leaves people speechless. No, breathless.

12. If you're in business, you're in show business. The moment you get to work, you're on stage. Give us the performance of your life.

13. Be a Master of Your Craft. And practice + practice + practice.

14. Get fit like Madonna.

15. Read magazines you don't usually read. Talk to people who you don't usually speak to. Go to places you don't commonly visit. Disrupt your thinking so it stays fresh + hungry + brilliant.

16. Remember that what makes a great business - in part - are the seemingly insignificant details. Obsess over them.

17. Good enough just isn't good enough.

18. Brilliant things happen when you go the extra mile for every single customer.

19. An addiction to distraction is the death of creative production. Enough said.

20. If you're not failing regularly, you're definitely not making much progress.

21. Lift your teammates up versus tear your teammates down. Anyone can be a critic. What takes guts is to see the best in people.

22. Remember that a critic is a dreamer gone scared.

23. Leadership's no longer about position. Now, it's about passion. And having an impact through the genius-level work that you do.

24. The bigger the dream, the more important the team.

25. If you're not thinking for yourself, you're following - not leading.

26. Work hard. But build an exceptional family life. What's the point of reaching the mountaintop but getting there alone? 

27. The job of the leader is to develop more leaders.

28. The antidote to deep change is daily learning. Investing in your professional and personal development is the smartest investment you can make. Period.

29. Smile. It makes a difference.

30. Say "please" and "thank you". It makes a difference.

31. Shift from doing mindless toil to doing valuable work.

32. Remember that a job is only just a job if all you see it as is a job.

33. Don't do your best work for the applause it generates but for the personal pride it delivers.

34. The only standard worth reaching for is BIW (Best In World).

35. In the new world of business, everyone works in Human Resources.

36. In the new world of business, everyone's part of the Leadership Team.

37. Words can inspire. And words can destroy. Choose yours well.

38. You become your excuses.

39. You'll get your game-changing ideas away from the office versus in the middle of work. Make time for solitude. Creativity needs the space to present itself.

40. The people who gossip about others when they are not around are the people who will gossip about you when you're not around.

41. It could take you 30 years to build a great reputation and 30 seconds of bad judgment to lose it.

42. The client is always watching.

43. The way you do one thing defines the way you'll do everything. Every act matters.

44. To be radically optimistic isn't soft. It's hard. Crankiness is easy.

45. People want to be inspired to pursue a vision. It's your job to give it to them.

46. Every visionary was initially called crazy.

47. The purpose of work is to help people. The other rewards are inevitable by-products of this singular focus.

48. Remember that the things that get scheduled are the things that get done.

49. Keep promises and be impeccable with your word. People buy more than just your products and services. They invest in your credibility.

50. Lead Without a Title. 

 

P.S. If you'd like to learn how to develop the leadership capacities of every one of your employees and grow a company that is undefeatable amid turbulent times, go ahead and read these details on a cutting-edge training program I've created for businesses based on the Lead Without a Title philosophy. 

Talk soon. Be great. 


Tuesday, March 29, 2016

மாசற்ற ஜோதி

மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம்  பற்று அறுத்து பாரிக்கும் ஆரியினே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட 
பேராது நின்ற பெருஞ்கருணை பேராறே.,,,,,

இனிய சிவராத்திரி நாளில் அப்பனை வணங்குவோம்

மங்கலம் தரும் மகாசிவராத்திரி விரதம் 

ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருட்ஜோதியான சிவபெருமானுக்குரிய பெரு விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி விரதம். சிவனுக்கு பிடித்தது சிவராத்திரி விரதம். இரண்டுமே இரவோடு தொடர்புடைய விரத வழிபாட்டு நாளாகும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள். சிவன், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி.

பிரம்மனும் நாராயணனும், சிவனது அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளும் இதுவே. தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது, அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார்.

சதுர்த்தசியன்று தேவர்கள் சிவனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி. ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார்.

அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

Stay blessed 🌹🌹

Observation... Road journey

Observation...

Road journey

Whether it is bicycle or a bike or a car
When we start, we have a destination in mind


When we travel we find lot of people traveling along with us
Some in front
Some behind
Some In opposite 
Some across
At different speeds

They 
overtake us
Will not give us way to overtake
People in opposite directions cross us irrationally
Never care about rules 

They are 
not known to us
Not competitors
Not enemies
Not against our destination

Bigger the vehicle, more Is the challenge


We see them so
They have different destinations
We are uncomfortable with them


Still we continue to travel towards our destination
If we understand the above and plan accordingly our journey will be relaxed


 our journey of life is also like this 
There are 
no enemies
No competitors 
Everyone has different Agenda or destination



If we understand and live accordingly

Our life journey will be smooth and enjoyable towards our destination

Let's travel a happily,...,...


😊 Good Morning
Have a great day🙏

நிச்சயமற்ற மனித வாழ்க்கை - வாழும் வரை சேவை செய்

நிச்சயமற்ற மனித வாழ்க்கை - வாழும் வரை சேவை செய்

அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம் ஏனெனில் கண நேரங்களிலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவளவு நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை, இதில் நானே பெரியவன் நானில்லையென்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான காரியங்களை செய்து கொண்டிருப்பதை விட்டு விட்டு எல்லாம் நானே என்று வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.

இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது. அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல், அதில், இறுமாப்பு, ஆணவம், அகங்காரம் என்று தன்னைத்தான் \புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.

நாளைக்கே நாம் இறந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இறந்த பின்பு நடப்பதெல்லாம் நமக்கே தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும், நம்மை நேசிப்பவர்கள் அழுது கொண்டிருப்பார்கள், வேண்டாதவர்கள் இறந்த  பின்பும் அவதூறு பேசி திரிவார்கள், எல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் தான்.

பின்னர் பார்த்தால் அனைவரும் அவரவர், வேலையை செய்து கொண்டிருப்பார்கள், 'அட நாம் இல்லையென்றாலும் எல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. என்னால் செய்ய முடியாத காரியங்களையும் மற்றவர்கள் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்களே! உலகம் அழகாக இயங்கிக் கொண்டிருக்கிறதே, நானில்லையென்றாலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது.

ஆம்! நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை நாம் தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்

எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை மற்றவருக்கு நன்மையை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, எப்போதும் இயந்திரத்தனமாக வாழாமல், வாழ்வினை அனுபவித்து, நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்க்கையின் உண்மை நிலையினை அனுபவிக்கும் மனிதனே வாழ்க்கையை நன்றாக வாழ்பவனாவான்.

நிச்சயமற்ற மனித வாழ்க்கை  - வாழும் வரை சேவை செய்க.

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீரு

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.
இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பு நண்பர்களே .
எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.
எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உழைத்திடுங்கள்

வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... நிறைவேறியது ரியல் எஸ்டேட் மசோதா!

வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... நிறைவேறியது ரியல் எஸ்டேட் மசோதா!

நன்றி-விகடன்-கண்டிப்பாகப் படியுங்கள்.

 
வருமா , வராதா என்று தொக்கி நின்ற கேள்விக்கு இன்று பதில் கிடைத்துவிட்டது. ரியல் எஸ்டேட் மசோதா இன்று ராஜ்ய சபாவில் நிறைவேறி உள்ளது. 

நீங்கள் வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க ஆசைப்படுபவரா அல்லது அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்பவரா? இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்குத்தான். அடுக்கு மாடிக்குடியிருப்பு அல்லது வீடு வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் கதை ஏராளம். இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டார்கள் என்று ஒரு சின்ன சர்வே எடுத்து பார்த்ததில் இவை தெரிய வந்தது.

1. கொடுப்பதாகச் சொன்ன தேதிகளில் தாமதம்

2. கொடுக்கப்பட்ட ப்ளான் ஒன்று கட்டப்பட்டது வேறு

3. தரக்குறைவான கட்டடம்

4. தரகர்களின் ஏமாற்றுப்பேச்சு

5. கட்டப்பட்ட நிலம் பற்றின உரிமைத்தகராறு

6. வீடுகட்டித்தருவதாகச்சொல்லி முன் பணம் பெற்று பின் காணாமல் போவது

இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது நமக்குக்கிடைக்கும் ஒரே பாதுகாப்பு கோர்ட். ஆனால் நம்மை ஏமாற்றியவரை இழுத்துச்சென்று, தீர்ப்பு வாங்கி வருவதற்குள் நாம் இருப்போமா என்று தெரியாது. 
இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது மிகவும் அவசியம்.

தவிர நமது அரசாங்கத்தின் “அனைவருக்கும் வீடு 2020க்குள் “  என்பது நடக்க வேண்டும் என்றால் நுகர்வோர் பாதுகாக்கப்படவேண்டும்,  இந்த பாதுகாப்பை மனதில் கொண்டு ரியல் எஸ்டேட் (ரெகுலேஷன் அண்ட் டெவலப்மெண்ட்) மசோதா ஆகஸ்ட் 2013 ல் போடப்பட்டது. இன்று வரை அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் நேற்று விவாதத்திற்கு வரும் என்று சொல்லப்பட்டு, மறுபடியும் கிடப்பில் போடப்பட்டது

ஒரு கேள்வி எழ வாய்ப்புண்டு இது நாள் வரையில் இந்த செக்டர் எந்த நிபந்தனைக்கும் அல்லது யார் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமலா இருந்தது ?

இல்லை..........

ஹரியானா ,மேற்கு வங்காளம் ,மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்லள் இதை மாநிலச் சட்டமாக இயற்றியுள்ளன. நிலம் , மாநிலங்களின் கட்டுக்குள் இருக்கும் ஸ்டேட் லிஸ்டில் உள்ளது. ஆனால் ஒப்பந்தங்கள் மற்றும் சொத்துப்பரிமாற்றம் இவை  concurrent list ல் இருப்பதாலும்,  தற்போது இந்த The Real Estate (Regulation and Development) Bill போடப்பட்டுள்ளது. இது இன்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் இன்னும் மசோதாவாகவே இருக்கிறது.

இந்த The Real Estate (Regulation and Development) Bill வின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்

1. வாங்குபவர் ,விற்பவருக்குள்ளான எல்லா பரிவர்த்தனைகளையும் இந்தச்சட்டம் பாதுகாக்கும். பாதுகாக்கும் அதிகாரம் Real Estate Regulatory Authority ( RERA ) கைகளில்.

தாக்கம் : வெளிப்பாட்டுத்தன்மை அதிகரிக்கும். பில்டர்கள் நம்மை ஏமாற்ற முடியாது. அவர்கள் சொன்னது, செய்தது எல்லாம் பதிவில் இருக்கும். மாற்றிச் சொல்லி ஏமாற்ற முடியாது.

2.  வீட்டுமனைத்திட்டங்களோ அல்லது வணிகக்கட்டடங்களோ இந்த RERA வில் பதிவு செய்யப்படாவிட்டால் செயல்படுத்த முடியாது.

தாக்கம் :  ஒப்புதல் இல்லாமல் வீடு கட்டிக்கொடுப்பது, புறம்போக்கு நிலத்தில் வீடுகள் அமைப்பது, அங்கீகாரம் இல்லாத நிறுவனம் கட்டடம் கட்டுவது, மட்டரக வீடுகள் அமைப்பது இனி நடக்காது.

3. தரகர்களும் RERA வில் தங்களைப்பதிவு செய்து கொள்ளவேண்டும். அத்து மீறல்கள் அந்தத்திட்டத்தில் இருந்தால் இவர்களுக்கு அபராதம் ரூ 10,000.

தாக்கம் :  இல்லாத இடத்தை விற்பவர்களும்,சம்மந்தப்படாதவர் இடைத்தரகர்களாக இருந்து நம்மிடம் பணம் கறக்கும் நிலை மாறும். 

4. பதிவு செய்தவுடன் வீட்டு புரமோட்டர், சைட் லே அவுட் மற்றும் தேதி, வார திட்டத்தின் அட்டவணை இவைகளை RERA வின் வெப் சைட்டில் ஏற்றவேண்டும்.

தாக்கம் : அப்ரூவ் செய்யப்பட்ட ப்ளானிலிருந்து விலகுதல், கால வரையின்றி தாமதம், கட்டட மாற்றங்கள் போன்றவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

5. வாங்குவோரிடமிருந்து பெறப்பட்ட பனத்தில் 70% ஒரு தனி வங்கிக்கணக்கில் வைக்கப்படவேண்டும். நுகர்வோரிடமிருந்து அக்ரிமென்ட் போடுவதற்கு முன் அந்தச் சொத்தின் விலையில் 10% மேல் அட்வான்ஸ் வாங்கக்கூடாது.

தாக்கம் :  தற்போது கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட பின்னும் பணத்தேவையால் வேலை நிறுத்திவைக்கப்படுகிற பிரச்னை தீரும். இதனால் சொன்ன தேதிகளில் ப்ராஜக்ட் முடியாததற்கு  பணத்தேவை காரணம் இல்லை என்பது வாங்குவோருக்குப்பெரும் நிம்மதி. ஒரு ப்ராஜக்டின் பணம் இன்னொரு ப்ராஜக்டுக்கு உபயோகிக்கப்படும் நிலையும் மாறும்.

6. இனி இந்த வீட்டுப்பிரச்னைகள் சிவில் கோர்ட்டுக்குச்செல்ல வேண்டியது இல்லை. எல்லாம் RERA தான் இதை ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்

தாக்கம்: லட்சக்கணக்கில் உள்ள மற்ற வழக்குகளின் இடையே ஒளிந்து கிடக்கும் இந்தப் புகார்கள் இனி உடனடியாக தீர்வைக்காணும்.

7. அனுமதிக்கப்பட்ட ப்ளானிலிருந்து மாற்றங்கள் செய்ய வேண்டுமானால், மூன்றில் இரண்டு பங்கு வாங்குபவர்களின் சம்மதம் கிடைத்தால் மட்டுமே செய்ய முடியும்.

தாக்கம்:  சொல்வது ஒன்று கட்டித்தருவது ஒன்று என்கிற நிலை மாறும்

8. புரமோட்டர்,  வீட்டை வாங்குபவரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்து தராவிட்டால் திட்டச் செலவில் 10% அபராதம் செலுத்த வேண்டும். RERA விலிருந்து நோட்டீஸ் வந்த பின்னும் செய்யாவிட்டால் மூன்று வருட சிறைத்தண்டனையும், திட்டச் செலவில் 10% அபராதமும் செலுத்தவேண்டும்.ரெஜிஸ்டர் செய்யப்பட்ட விதிகளில் மாற்றம் இருந்தால் திட்டச்செலவில் 5% அபராதமுண்டு.

தாக்கம்:    பணத்தைக்கொடுத்துவிட்டு, வட்டியும் இல்லாமல்,  இருக்க இடமும் இல்லாமல் நாம் படும் அவஸ்தை மாறும்.

9. கார்பெட் ஏரியா net usable area  என்னவென்று சொல்லப்படும்.

தாக்கம்: தற்போது நாம் எந்த அளவுக்குப்பணம் கொடுக்கிறோம் என்பது தெரியாமல் இந்த ஏரியா கணக்கில் ஏமாற்று வேலை நடக்கிறதே, அது கட்டுப்படும்

10. கட்டடத்தில் ஏதேனும் structural defects இருக்குமானால், ஒதுக்கீடு செய்யப்பட்ட தினத்திலிருந்து இரண்டு வருடத்துக்குள் சரி செய்யப்பட வேண்டும்.

11. ப்ரமோட்டர், நிறைவுச்சான்றிதழ் மற்றும் நுகர்வோருக்கு சங்கம் அமைத்துக் கொடுத்தல் ஆகிய சேவைகள் செய்து தரவேண்டும். குறிப்பிட்ட தேதியில், குடியிருப்பை கொடுக்க முடியாவிட்டால், வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்தவேண்டும். இந்த  வட்டியின் விகிதம்,  வீடு வாங்குவோர் தவறிழைத்தால் செலுத்த வேண்டிய அதே வட்டி விகிதம்.

தாக்கம்: தற்போது ஒதுக்கீடு ஆனவுடம் கை கழுவி விட்டு விடுகிறார்கள் . நிறைய இடங்களில் தண்ணீர் கனெக்ஷன், டிரெய்னேஜ் அனுமதி ஏதும் வாங்காமல்  இருப்பது பின்னர்தான் தெரியவருகிறது. ஆனால் அப்போது பில்டர் அங்கே இருப்பதில்லை. இந்த நிலை இனி மாறும். கொடுத்த பணத்தை, வட்டியுடன் திரும்பிப் பெற முடியும்.

இனி இந்த Real Estate (Regulation and Development) Bill 2013 ல் உள்ள சில குறைபடுகள்......

முதலாவதாக 70% பணம் வங்கியில் கட்டப்பட வேண்டும், இதற்கு வட்டி கிடையாது. ஆக அதிகமாகும் செலவு நுகர்வோர் மீதுதான் திரும்பும். 

அடுத்து, சென்னையில் வந்தது போல் வெள்ளமோ அல்லது டெல்லி ஓக்லா பறவைகள் காப்பகம் அருகே கட்டுமானங்கள் கூடாது என்கிற நிலை போன்றோ வந்தால், அப்போது என்ன செய்யப்படும் என்பது யோசிக்கப்படவில்லை.

கடைசியாக Real Estate (Regulation and Development) Bill இறுதி அதிகாரம் பெற்றுள்ளது. மாநிலங்கள் அமைத்த ஒழுங்குமுறை மசோதாவிற்க்கும், இந்தச் சட்டத்திற்கும் மாறுதல் வருமேயானால், Real Estate (Regulation and Development) Bill சொல்வதுதான் செல்லும்

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.

நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.

தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.

இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,
உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,
நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.

இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,

ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!..

ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.

தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,

தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்த
காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.

திறந்த வெளியில் தரையைத்தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள்.

அங்கே வாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்
பறந்துவரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள் “கா…
கா…’

என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும்,

அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.
காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.

காக்கையிடம் உள்ளதந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.

எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை     அறிவாராம்.
அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்
எமன்மகிழ்வாராம்.

எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும்சனியும்
திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.

தந்திரமானகுணம்கொண்டகா
காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.

நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.

வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே
எனவே,

காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப்பெற்று மகிழ்வுடன்வாழலாம்