Thursday, July 30, 2015

கலாமின் இறப்பு பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது..

கலாமின் இறப்பு பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது....
1. சரியாக வாழ்ந்தால் எந்த சாமன்யனும் கூட இந்திய நாட்டில் ஜனாதிபதியாக முடியும் என்பதனை....
2. ஏழையாக இருப்பது சாதனைக்குத் தடை இல்லை என்பதனை....
3. புரிந்து படிப்பதனால் விரும்பிய துறையில் உச்சத்தினை தொட முடியும் என்பதனை....
4. ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்தாலும் மதங்களனைத்தையும் கடந்தும் மனிதர்களின் இதயங்களை அன்பால் தொட முடியும் என்பதனை...
5. ஒரு இறப்பு என்பது எத்தனை சிறப்பானதாக மதிப்பு மிக்கதாகவும் புகழ்மிக்கதாகவும் இருக்க முடியும் என்பதனை....
6. காசு கொடுத்தல்ல, சாராயம் வாங்கிக் கொடுத்தல்ல, ,பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொடுத்தல்ல, நேர்மையான வாழ்வின் மூலம் மக்களின் அபிமானத்தைப் பெற முடியும் என்பதனை.....
7. இதனையெல்லாம் கண்கொண்டு பார்க்க முடிகிற அரசியல் வாதிகள் அனைவரும் மனம்கொண்டு பார்த்தால் திருந்திவிட முடியும் என்பதனை.....
குறிப்பு:
மீடியாவுக்காக அழகான வசனம் பேசிவிட்டு ஒரு நாள் அஞ்சலியோடு மறந்துவிட்டு வழக்கமான சுரண்டல் வாழ்கையை வாழ்வோம் என அரசியல் வாதிகள் வாழ்ந்தால்... எத்தனை கலாம்கள் வந்தாலும் இந்த நாடு இப்படியேதான் இருக்கும்.... கலாமின் கனவு கனவாகவே இருக்கும்...

No comments:

Post a Comment