Monday, June 30, 2014

யார் நிஜமான ஆல் ரவுண்டர்...? Real life all rounder - must read

யார் இந்த ஏ பி டி வில்லியர்ஸ்..?
அனைவருக்கும் தெரிந்த பதில் அவர் ஒரு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்.
பெங்களூரு அணிக்காக ஆடுகிறார் என்பது மட்டுமே. ஆனால் அவர் அது மட்டும் அல்ல.


1.தேசிய ஜூனியர்
ஹாக்கி அணிக்கு தேர்வு செய்ய பட்டவர்.
2.தேசிய ஜூனியர் கால் பந்து அணிக்கும்
தேர்வானவர்.
3.தேசிய ஜூனியர் ரக்பி அணியின் தலைவர்,
4.தேசிய நீச்சல் ஜூனியர் பிரிவில் 6 தேசிய
சாதனைகளை படைத்தவர்.
5.தேசிய தடகள போட்டியில் ஜூனியர் பிரிவில்
வேகமாக 100 மீட்டர் ஓடிய
சாதனைக்கு சொந்தக்காரர்.
6.19 வயதிற்கு உட்பட்டோருக்கான
பூ பந்து போட்டியில் சாப்பியன் பட்டம்
வென்றவர்.
7.தன்னுடைய அறிவியல் ஆராய்சிக்காக
நெல்சன் மண்டேலாவிடம்
விருது வாங்கியவர்.
இப்போது சொல்லுங்கள் யார் நிஜமான ஆல் ரவுண்டர்...?

Yours Happily 
Dr.Star Anand
www.v4all.org 

Sunday, June 29, 2014

தன்னம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள…. TWOS

தன்னம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள…. TWOS



T ‘ Trust Yourself (உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்)
வெற்றிகளை வரிசையில் நிற்க வைக்க “என்னால் முடியும்” என்றநம்பிக்கை உங்கள் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கட்டும்.
W ‘ Weakly review (வாரந்தோறும் உங்கள் வளர்ச்சியை மதிப்பீடு செய்தல்)
பலம், வாய்ப்புக்களைப் பெருக்கி, பலகீனம் தடைகளைத் தகர்த்து எறிந்ததன் மூலம் உண்டான உங்களது முன்னேற் றத்தை வாரந் தோறும் மதிப்பீடு செய்து, அது மென்மேலும் மேல்நோக்கிச் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
O ‘ Observing your target schedule (இலக்கை எட்டுவதற்கான திட்டங்களைக் கடைப்பிடித்தல்)
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற் கான திட்டங்களை முறை யாகக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களது அதிகரிக்கப்பட்ட தன்னம்பிக்கை இதற்குப் பெரிதும் உதவும்.
S ‘ Setting your Sub-Conscious Mind (ஆழ் மனதை முறைப்படுத்துதல்)
“”என்னால் முடியும்”
“”என் இலக்கை அடையத் தேவையான முயற்சியும் தெம்பும் என்னிடம் உள்ள தன்னம் பிக்கையினால் கைகூடும்”.
“என் தன்னம்பிக்கை குறைவதில்லை”
இவைகள் அடிக்கடி உங்கள் ஆழ்மனதில் படிய வையுங்கள். மேற்கண்டவை உங்கள் அதிகரிக் கப்பட்ட தன்னம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள உதவும்.
வீழ்வது இழிவன்று! வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு.
எழுந்து நில்லுங்கள் – மீண்டும் முயலுங்கள்.
தன்னம்பிக்கை உங்களைத் தைரியப்படுத்தட்டும்
எடுத்த காரியங்கள் யாவினும் ஏற்றமிகு வெற்றி கிட்டும்.
வாழ்த்துக்கள்!!!

www.v4all.org 

Saturday, June 28, 2014

தன்னம்பிக்கையை வளர்க்க முடியுமா? முடியும். இதோ சில ஆலோசனைகள்:

வெற்றியின் ரகசியம் என்ன …..

வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், இதோ கீழே ….
தன்னம்பிக்கை!



புயலில், மரத்தைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் போல், வாழ்க்கைப் புயல் நம்மைச் சாய்த்து விடாமல் காப்பது தான் தன்னம்பிக்கை. உலகமே ஏசினாலும், தூற்றினாலும், நம்மைத் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை, நம் சுயத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை; நம் பலத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

எது நம் தன்னம் பிக்கையை தீர்மானிக்கிறது?

நாம் இதுவரை சாதித்த சாதனைகள், பெற்ற விருதுகள், கிடைத்த பாராட்டுக்கள், நம் குடும்ப மற்றும் சமூகப் பின்னணி, நாம் படித்த பள்ளி மற்றும் கல்லூரியின் தரம், நம்மைப் பற்றி நாம் வரைந்து வைத்திருக்கும் சுயசித்திரம், எல்லாவற்றிக் கும் மேலாக, “நான் சாதிக்கப் பிறந்தவன், எப்படியும் சாதித்துக் காட்டுவேன்’ என்கிற வைராக்கியம், இவையெல்லாம் நம் தன்னம்பிக்கையைத் தீர்மானிக்கிறது.

தன்னம்பிக்கை எதற்கு வேண்டும்?

தன்னம்பிக்கை ஊன்று கோல் போன்றது. கால் தடுக்கும்போது, கீழே விழுந்து விடாமல் ஊன்று கோல் தாங்கிப் பிடிப்பது போல, நாம் தோல்வியைச் சந்திக்கும் போதும், நம்முடைய முயற்சி, நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராத போதும், நம்மைச் சுற்றியுள்ள உலகம், நம் தகுதிக்கும், திறமைக்கும் உரிய அங்கீகாரம் தராத போதும், நம்மை மனம் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தன்னம்பிக்கைதான்.

தன்னம்பிக்கையை வளர்க்க முடியுமா? முடியும். இதோ சில ஆலோசனைகள்:


* இன்னொரு மனிதனால் சாதிக்க முடிந்த எந்தச் செயலையும், நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை, நம் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மோதுவதற்காக, மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருந்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், “வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், அசுரத்தனமாகப் பந்து வீசுவர்… நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னதற்கு, சுனில் கவாஸ்கர், “என்னால் பந்தைப் பார்க்க முடியும்தானே…’ என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம். என்ன ஒரு தன்னம்பிக்கை பாருங்கள்.

* பொறுத்தார் பூமி ஆள்வார். நம் இலக்கை அடையும் வரை, பொறுமை காக்க வேண்டும். முதல் முயற்சியிலேயே சோர்ந்து விடக்கூடாது. மலை உச்சியை அடைவதற்கு, படிப்படியாகத்தான் ஏற முடியும். ஒரே தாவலில் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல முடியாது.

* நம்முடைய இலக்கை நோக்கி முன்னேறும் வெற்றிப் பாதைகளில், ஒவ்வொரு மைல் கல்லை கடக்கும்போது, முதுகில் தட்டிக் கொடுக்கலாம். வெற்றியை அடக்கமாகவும், எளிமையாகவும் கொண்டாடலாம். அப்போது உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

* நாம் எடுத்த முயற்சியில் பலன் கிட்டும் வரை, உறுதியாக இருக்க வேண்டும். மொபைல் போனை தினமும் ரீசார்ஜ் செய்வது போல, தினமும் பத்து நிமிடம், தனியே அமர்ந்து நம் முயற்சி, வெற்றியில் முடியும் என்று திரும்பத் திரும்ப நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.

* நம்முடைய பலம் மற்றும் பலவீனத்தை சீர்தூக்கிப் பார்த்து, ஒரு செயலில் இறங்கிய பின், “என்னால் முடியுமா?’ என்ற சந்தேகம் எழக்கூடாது.

* நம்முடைய உடை, சூழ்நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஆள்பாதி, ஆடைபாதி. உடை நம் வேலையை, பதவியை, அந்தஸ்தை, எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கையை பிரதிபலிக்கட்டும்.

* நம்முடைய முயற்சியில் தடங்கல் ஏற்படும்போது, தலையில் கையை வைத்து, “ஐயோ இப்படி ஆகிவிட்டதே!’ என்று புலம்பும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

குழந்தைகளிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்க, இதோ சில யோசனைகள்:

* குழந்தை ஆசைப்படுகிறதே, பிடிவாதம் பிடிக்கிறதே என்ற ஒரே காரணத்திற்காக, எதையும் வாங்கித் தரக் கூடாது. குழந்தையின் வயதிற்கேற்ப, வளரும் சூழ்நிலைக்கேற்ப, அத்தியாவசிய தேவைக்கேற்ப வாங்கித் தர வேண்டும்.

*”நான் பட்ட கஷ்டம், என் பிள்ளை படக்கூடாது’ என்று சில பெற்றோர் பிள்ளையைக் கஷ்டமே தெரியாமல் வளர்க்கின்றனர். வயதிற்கேற்ப பொறுப்பும், சுதந்திரமும் கொடுத்தால் தான், குழந்தைக்குப் பக்குவமும், முதிர்ச்சியும் வளரும். ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும், பின்னர் அவற்றை திருத்திக் கொண்டு, தாமே தனித்து இயங்கக்கூடிய தன்னம்பிக்கை, இளமைப்பருவத்தில் வர வேண்டும்.

* தனக்குத் தகுதியிருந்தால் அல்லது இன்றியமையாத தேவையிருந்தால் மட்டுமே, பெற்றோரிடமிருந்து எதுவும் கிடைக்கும் என்பதை, குழந்தை உணர வேண்டும். தகுதி இல்லாமல், உழைக்காமல் கிடைக்கும் எதையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன், குழந்தைக்கு இருக்க கூடாது.
தன்னம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அதை எப்படிக் களைவது:

* அவநம்பிக்கை, என்னால் எப்படி முடியும்? நான் எடுத்த காரியம் கைக்கூடாமல் போய் விடுமோ என்கிற எண்ணங்களை மனதிலிருந்து அறவே அகற்ற வேண்டும்.

* தாழ்வு மனப்பான்மை, வறுமை மற்றும் வளர்ந்த சூழ்நிலையால் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், முதல் தலைமுறை செல்வந்தர்களின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். பெரும்பாலானோர் சிறுவயதில், கடும் வறுமையில் வாடியிருப்பர். பல அவமானங்களைச் சந்தித்திருப்பர். ஆக, வறுமை நம்முடைய வளர்ச்சிக்கு உத்வேகமாக இருக்க வேண்டுமே தவிர, முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது. அதுபோல, குறைவான கல்வியறிவு, எளிமையான குடும்பச் சூழ்நிலை, வழி நடத்த யாரும் இல்லை போன்ற காரணங்கள், நம்முடைய வைராக்கியத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டுமே தவிர, நம்மை பலவீனப் படுத்தக் கூடாது.

* வறுமை – நம்மையும், நம் அடுத்த தலைமுறையினரையும் வளர விடாமல் வாட்டி வதைக்கும் ஒரு நோய். இந்த நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து, அதிலிருந்து மீள வழிகளை ஆராய வேண்டும்.

* தோல்வி – நாம் எடுக்கும் முயற்சிகளில், சில தோல்வியடையலாம். ஆனால், நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றோமா என்பதில் தான், கவனம் இருக்க வேண்டும்.

* நாம் வளர்ந்த சூழ்நிலை – இது முடியும், இது முடியாது என்று சொல்லி வளர்க்கப்படும் போது, சிலருக்குத் திறமையும், தகுதியும் இருந்தும், முயற்சி செய்யாமல் இருந்து விடுகின்றனர்.

நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பது – தன்னம்பிக்கை:

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்மை ஏளனப்படுத்தலாம், உதாசீனப்படுத்தலாம், நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம், நம்மைப் பலவீனப்படுத்தலாம், நமக்கு உதவிக் கரம் நீட்டத் தயங்கலாம், நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சன்மானம், பாராட்டு, அங்கீகாரத்தைக் கொடுக்க மறுக்கலாம். ஆனால், நம் தன்னம்பிக்கை, ஆசை, கனவு, வைராக்கியம், சுயமரியாதையை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.
மனித மூளை அற்புதமானது. நாம் யாராக வேண்டும் என்று திரும்பத் திரும்ப நினைக்கிறோமோ அவராக மாறுவது உறுதி. “நம்மால் இயலாதது’ என்று தான் நமக்கு நாமே எல்லைக் கோட்டைக் கிழித்துக் கொள்கிறோம்.
தன்னம்பிக்கையுடன் இருப்போம். ஒரு பிரகாசமான எதிர்காலம் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

yours

www.v4all.org 

Friday, June 27, 2014

ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். (OM the Scientifically proven truth)

 ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாகப் பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும்.


‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது சமஷ்கிருத மொழியின் எழுத்துக்களான அ. உ. ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை.



மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை. மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்கள் சேர்ந்து ‘ஓ’ என்று ஒலிக்கப்படுகிறது. முருகப்பெருமான் பிரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்ட போது, அறியாமல் விழித்தவரைச் சிறைக்கு அனுப்பி, ‘என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா’ என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும். ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம்.
ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்திருந்த ஓம் காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப் புலத்தை உண்டாக்குகிறது.

நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும் பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய இந்த இயங்கு சக்தியைத் தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின்சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூக்கும சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது.

உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும். இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத, காணவும் இயலாத ஒரு சூக்குமமான அலை வரிசையில் தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூக்குமமான பிணைப்பினை உருவாக்குகிறது.

அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூக்குமமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டு விட்டால் அந்தப் பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.

இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கு அல்ல என்பது நமக்குத்தெரிய வரும்.

இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாகப் பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்து  உச்சரிக்கலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்துவர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுவதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.

இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு இடத்திற்குச் சென்று விட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும் பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும்.

நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும் போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலை வரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.

இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்துச் செய்யும் பொழுதும் அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது.

வள்ளலார் கூறிய ஆன்ம நேய ஒருமைப்பாடு வழிக்கும் இது தான் மூலம். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம் புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.

கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சுவாமி சந்நிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர உல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

urs - www.v4all.org 

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...



கௌதம புத்தர் மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும் போது கையில் ஒரு துணியுடன் வந்தார். அவர்கள் முன் பேச அமர்ந்தவர் பேச்சைத் துவங்காமல் கையில் கொண்டு வந்திருந்த அந்த்த் துணியில் முடிச்சுகளைப் போட ஆரம்பித்தார். மற்ற சீடர்கள் அவர் பேசக் காத்திருக்கையில் சாரிபுத்தன் என்கிற சீடன் மட்டும் அவர் செய்கையும் அவர் உரையின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்திருந்தான். அவன் உன்னிப்பாக அவர் செயலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
விதவிதமாக சில முடிச்சுகளைப் போட்டு விட்டு தலை நிமிர்ந்த புத்தர் கேட்டார். “இந்த முடிச்சுகளை விரைவில் அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?
மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க உடனடியாக சாரிபுத்தன் சொன்னான். “குருவே! முடிச்சுகள் எப்படி போடப்பட்டுள்ளன என்பதை அறியாத வரை அவற்றை விரைவில் அவிழ்க்க வழியில்லை. முடிச்சு போடப்பட்ட முறையை அறிந்திருந்தால் மட்டுமே அதை விரைவில் அவிழ்க்க முடியும்” .
புத்தர் சொன்னார். “சரியாகச் சொன்னாய் சாரி புத்தா. நினைவோடு போடப்படும் முடிச்சுகளை அவிழ்ப்பது எளிது. நினைவின்றி போடும் முடிச்சுகள் சிக்கலானவை. அவை சில சமயங்களில் அவிழ்க்க முடியாமலும் போகலாம். நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். விழிப்புணர்வு இல்லாமல் நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல்களில் இருந்து தான் மீள வழி தெரியாமல் திண்டாடுகிறோம்
துணியில் போட்ட முடிச்சுகள் போட்ட விதத்திலேயே பிரிக்க சுலபமானவை. கவனத்துடன் போட்டிருந்தால் பொறுமையுடன் பிரிக்கலாம். இல்லாவிட்டால் பிரிக்க நாம் செய்யும் உத்திகளும் கூடுதல் முடிச்சுகளாகி விடும். கடைசியில் துணியையே கிழிக்காமல் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போகும் நிலை கூட ஏற்படலாம்.
வாழ்க்கையிலும் அப்படித்தான். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்கிற விழிப்புணர்வோடு செய்தால் தவறுகள் அதிகம் நிகழ வாய்ப்பே இல்லை. அப்படித் தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை விரைவிலேயே சரிப்படுத்திக் கொள்ள முடிபவையாகவே இருக்கும். 
ஆனால் விழிப்புணர்வில்லாமால் நம் வாழ்வில் செய்து கொள்ளும்   சிக்கல்கள் ஆபத்தானவை. அந்தந்த நேர உந்துதல்களில் நாமாகவே ஏற்படுத்திக் கொள்பவை. உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னிலை இழந்து என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் செய்து கொள்பவை. இந்த சிக்கல்களில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல சமயங்களில் சிக்கல்களை அதிகப்படுத்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். பல சமயங்களில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தாமல் சிக்கல்களில் இருந்து விடுபட முடியாது.
துணியின் முடிச்சுகள் அவிழ்க்க முடிந்த பின் துணி பழைய நிலைமைக்கே வரலாம். வாழ்க்கையின் சிக்கல்கள் அப்படி அல்ல. பல சமயங்களில் சிக்கல்கள் தீரும் போது வாழ்க்கை முன்பு போல திரும்பி மாற வாய்ப்பு இல்லை. எல்லாமே தலைகீழாக மாறிப் போகும் அபாயம் கூட உண்டு. மேலும் சிக்கல்கள் அனைத்தும் நாமே தான் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான சிக்கல்களில் நம் பங்கு கண்டிப்பாக ஓரளவாவது இருக்கக் கூடும் என்றாலும், சில சமயங்களில் மற்றவர்களாலும் சிக்கல்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட்டு விடலாம்.
நம் செயல்களால் ஆனாலும் சரி, மற்றவர்கள் செயல்களால் ஆனாலும் சரி, விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்துபவன் வரும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனால் கவனமாகவும், வேகமாகவும், ஆரம்ப நிலையிலேயே, அவ்வப்போதே அவற்றைத் தவிர்க்கவோ, சரி செய்து கொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாத போதோ அவை பூதாகரமாகும் வரை கவனிக்கப்படுவதில்லை. பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாட வேண்டி வரும். சில சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போகலாம், தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை, நாம் ரசிக்க முடியாததாக மாறியும் போகலாம்.
எனவே விழிப்புணர்வோடு இருங்கள். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருங்கள். கண்டிப்பாக நீங்கள் 90 சதவீத சிக்கல்களை விழுப்புணர்வோடு இருப்பதால் மட்டும் தவிர்த்து விட முடியும்.

urs - www.v4all.org 

அமானுஷ்ய இரகசியங்களை அறிந்துகொள் - ஆதார சக்தி

''சித்தர்கள்''
சித்தர்கள் என்றால் யார் ?
சிந்தை தெளிந்திருப்பான் அவனே சித்தன். (வால்மீகர் ஞானம். செ-2).
சிந்தை அதாவது சித்தம்.
சித்தம் என்றால் மனம்.
மனதை வென்றவர்கள் என்று சொல்லலாமா ?
மனம் என்றால் என்ன ?
இந்த மனம் எவ்விதமாக செயல் படுகிறது ?
மனதை வசப்படுத்துவது எப்படி ?
மனித உடலின் இயக்கும் சக்தி எது ?
உயிர் என்றால் என்ன ?
உயிர் எங்கிருந்து வருகிறது ?
முடிவில் எங்கே செல்கிறது ?
அது எவ்விதம் இயங்குகிறது ?
உணர்வுகள் எவ்வாறு உருவாகின்றன ?
இப்படி பல விதமான கேள்விகளுக்கு மனதைக் கொண்டு ஆராய்ந்து விடை கண்டறிந்த விஞ்ஞானிகள்.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாதரசத்தை திடப்படுத்தி, கடினநிலைக்கு உட்படுத்தி பல உபாயங்கள் செய்து, 8 விதமான குளிகைகள் செய்து அசத்தியவர்கள். குளிகைகள் பற்றி விளக்க தனிப் பதிவு போட்டால்தான் முடியும். 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்கள் இயற்றினார் திருமூலர்.
இதெல்லாம் சாத்தியமா ?
போகர் சொல்லுகிறார்,
''காணவுமே குளிகையுட மகிமை சொல்ல
கடல்புளுகோ வென்பார்கள் சவங்கள்தானும்.'' போகர்7000 - பாடல்2559.
இது போன்றனஅமானுஷ்ய இரகசியங்களை அறிந்துகொள்ள நாம் ஆர்வம் அதிகம் கொள்வோம். ஆனால் நம்மால் அதை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. என்ன வென்றால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் மனித உடலைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து துல்லியமாகச் சொல்லி விட்டார்கள். ஆனால் அவர்களால் அதை இயக்கும் ஆதார சக்தி குறித்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே நமக்கும் அமானுஷ்ய விஷயங்களை நம்பத் தயக்கமாக இருக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய விஞ்ஞானிகள் தொடக்கூட முடியாத விஷயத்தை நம் ரிஷிகளும், சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். நம் வேதங்கள் உயிர், சூக்கும உடல்கள், சக்கரங்கள், நாடிகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதுவும் அதர்வண வேதத்தில் இது குறித்த தகவல்கள் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உபநிடதங்களில் இது குறித்த விளக்கங்கள் அதிகம் காணப்படுகின்றது. நம் சித்தர்கள் உடலியல், மனஇயல், வைத்தியம், வானியல் என்று அவர்கள் தொடாத விஷயங்களே இல்லை எனலாம்.
இதெல்லாம் எப்படி சாத்தியம் ?
அப்படி என்றால் இதெல்லாம் அவர்களுக்கு பிறகு வந்தவர்களிடம் ஏன் மறைக்கப்பட்டது? தவறான, பேராசைக்காரர்களுடைய கைகளில் கிடைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால்தான். அணுவைப் பிளக்கும் இரகசியமே சித்தர்கள் சொன்னதுதான். அது மோசமானவர்கள் கைகளில் கிடைத்ததன் விளைவை நாம் எல்லோருமே அறிவோம்.
விலங்குகளில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது ஐம்புலன்களும் அதன் ஒருமித்த வளரர்ச்சியுமே. ஐம்புலன்களுக்கும் ஆதாரமாக இருப்பது மூளையாகும். மூளை குறித்து விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக ஒருதீர்வுக்கு வரமுடியவில்லை. என்றாலும் அடிப்படையான நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்று சொல்லலாம். அதில் ஒரு ஆராய்ச்சியின் முடிவு என்ன வென்றால், மனித மூளை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு செயல்திறன் கொண்டது என்பதாகும். மேலும், ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 4% மூளைத்திறனையே பயன்படுதந்துகிறான் என்றும், பெரிய மேதைகள் கூட 10% மூளையின் திறனையே தன் வாழ்நாளில் பயன்படுத்துகிறார்கள் என்ற அதிசயமான உண்மையாகும்.
அப்படி என்றால் அதை முழுமையாகப் பயனபடுத்தினால் என்ன வாகும் ? இதுவரை நம் கண்ணுக்கு புலப்படாத பல உலகங்களைக் காண முடியும். அதைப் பயன்படுத்தாத வரை இதெல்லாம் அக்மார்க் புரூடாக்கள் என்றே சொல்லப்படும். நம் சித்தர்கள் மூளையின் செயல்திறனை முழுமையாகப் பெற்றவர்கள். அதற்கு அவர்கள், தியானம், யோகாசனம், ப்ராணாயாமம், பந்தனம், மந்திர உச்சாடனம் என்று பல உபாயங்களைக் கைகொண்டார்கள். மூளையின் செயல்திறனை முழுமையாகப் பெற்று ஞானமும், அஷ்டமாசித்திகளும் கைவரப் பெற்றார்கள். உதாரணமாக ஒரு காட்டுக்குள் போனால் பல இலட்சக்கணக்கான தாவரங்களைக் காணுகிறோம். இவற்றில் இந்தத்தாவரம்(மூலிகை) இந்த நோய்க்கான மருந்து என்று எப்படி சொல்ல முடிந்தது ? பெயர்களை நினைவில் வைத்திருப்பது கூட கடினம். அதாவது 84 இலட்சம் ஜீவராசிகள், 4448 வியாதிகள், இந்த வியாதிகளைப் போக்கும் மருந்தாக 20 இலட்சம் மூலிகைகள், தலையைச் சுற்றுகிறதல்லவா ? அதுதான்,
மூளையின் செயல் திறனை முழுமையாகப் பெற்று சித்திகள் கைகூடிவிட்ட காரணத்தினால் அதனுள்ளேயே நுழைந்து அதைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கு வேணெடுமானாலும் வான சஞ்சாரம் செய்ய முடிந்தது, எந்த உருவமும் எடுக்கமுடிந்தது, எதற்குள்ளும் நுழைய முடிந்தது, கூடுவிட்டு கூடுபாயமுடிந்தது, 3000 என்ன 30000 ஆண்டுகள் கூட வாழமுடியும் என்று சொல்ல முடிந்தது. சித்தர்கள் இந்த சக்திகளையெல்லாம் அடைய கடுந்தவம் மட்டுமல்ல, மூன்று வகையான அடக்கங்களையும் கடைபிடித்தார்கள். நம்மால் அதில் ஒன்றையாவது அடக்க முடியுமா என்று பாருங்கள். அது என்ன மூன்று வகையான அடக்கம்.
1. மூச்சை அடக்குதல்.
2 . விந்துவை அடக்கி காமத்தை வென்று ஆசையற்ற நிலையைப் பெறுதல்.
3 . மனதை அடக்குதல்.
இதைத்தான் தமிழ் சித்தர் வள்ளுவர் அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார். எனவே நீங்களும் உங்கள் மூளையின் செயல் திறனை அதிகரிக்கச் செய்து எல்லா வளமும், நலமும் பெற்று நீண்ட நெடுங்காலம் நீடூழிவாழ்க என எல்லாம் வல்ல சித்தர்கள் பெயராலும், சித்தர்களின் தலைவரான ஆதி சித்தர் சிவசித்தர் பெயராலும் வாழ்த்தி வணங்குகிறேன்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

www.v4all.org 

Monday, June 23, 2014

சிந்தனையாளர் பெர்னாட்ஷா! வெற்றியின் ரகசியம்!

வெற்றியின் ரகசியம்!


''நான் இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது, தோல்வியில் முடிந்ததையே
கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான், 'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று
யோசித்தேன். அப்போது, எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி
கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி
தனது வெற்றியின் ரகசியத்தைக் கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!

பெர்னாட்ஷா, ஒழுக்கமாக வாழ்ந்தவர். மது அருந்தாமல் இருந்ததோடு மதுவை வெறுத்தவர்.
 ""நீங்கள் ஏன் மது அருந்துவதில்லை?'' என்று நண்பர் ஒருவர் கேட்டபோது, ""என் குடும்பத்திலிருந்த முன்னோர், என் பங்கையும் சேர்த்துத் தாங்களே குடித்துவிட்டார்கள். எனவே எனக்கு பங்கு இல்லாமல் போய்விட்டது...'' என்று குறிப்பிட்டார்.
 பெர்னார்ட்ஷா போலிகளைச் சாடினார். உண்மைகளை வாழ்த்தினார்.
 ""இன்று சிறையில் அகப்பட்டுக் கிடக்கும் திருடன், மற்றவர்களைவிட நேர்மையற்றவன் என்று சொல்லமுடியாது. அறியாமையில் சமுதாய வழக்கத்திற்குப் பொருந்தாத வழியில் திருடியவனே பெரும்பாலும் திருடனாகக் கருதப்படுகிறான். அவனே சிறைக் கூடத்திற்குச் செல்கிறான். ஆனால் அவனைப் போன்ற மற்றொருவன் சமுதாயத்திற்குப் பொருந்திய முறையைப் பின்பற்றுவதால் பாராளுமன்றத்திற்குச் செல்கிறான்...'' என்பது ஷாவின் கருத்து.
பத்திரிக்கையாளர் ஒருமுறை அறிஞர் பெர்னாட்ஷாவைப் பார்த்து, தங்களை எல்லோம் சிந்தனையாளர் என்று அழைக்கிறார்களே ஏன்? தாங்கள் மட்டும் தான் சிந்திக்கின்றீர்களா? மக்கள் யாரும் சிந்திக்கவில்லையா? என்று கேள்வி கேட்டாராம்,

அதற்குப் பெர்னாட்ஷா,
எல்லோரும் சிந்திக்கிறார்கள்.... ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ தான் சிந்திக்கிறார்கள். நான் வாரத்துக்கு இருமுறை சிந்திக்கிறேன். அதனால் தான் என்னைச் சிந்தனையாளர் என்று அழைக்கிறார்கள்.என்று விடையளித்தாராம்.

எவ்வளவு சரியான விடை. ஆம் மனிதன் ஒரு சிந்திக்கத் தெரிந்த விலங்கு என்பதாலோ என்னவோ,மனித சிந்தனைகள் செக்கு மாடுபோல ஒன்றையே தான் சிந்தித்தவாறு இருக்கிறது.பணம் பணம் பணம் என அதை மட்டுமே மையமிட்டதாக மனித சிந்தனை அமைந்துவிடுவதால் மனிதம் செத்துவிடுகிறது. வேறு எதையும் அவனால் சிந்திக்க இயலவில்லை ஆண்டுக்கு ஒரு முறையோ,இரு முறையோ தான் தாம் செய்வது சரியா? தவறா? எனபதைக்கூட சிந்திக்க முடிகிறது.
தான்,தன் குடும்பம், தன் தலைமுறை என உண்டதையே உண்டு கண்டதையே கண்டு பேசியதையே பேசி.......... 
புதிதாகச் சிந்திக்க வேறு களம் இன்றி வாழ்ந்து மடியும் மானிடர்களை எவ்வாறு சிந்தனையாளர் என அழைப்பது..? என்ற பெர்னாட்ஷாவின் கேள்வி மிகவும் சரியாகவே எனக்குப் படுகிறது. 

urs 
www.v4all.org 

சர்வம் மார்க்கெட்டிங் மையம் -

சர்வம் மார்க்கெட்டிங் மையம்
-பேரா. சதாசிவம்
முதலில் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும்
சந்தையில் ஒரு பொருளை எடுத்துச் செல்பவர்கள் ஒரு வாடிக்கையாளரை திருப்திபடுத்திவிட்ட பிறகு அந்த வாடிக்கையாளரை எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது பொருளை வாங்கிய வாடிக்கையாளர் பொருளின் தரத்தைப் பற்றி என்ன நினைக்கின்றார் அதன் நிறைகள் யாவை குறைகள் யாவை
போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து கருத்துக்களை கேட்டும் அதற்கேற்றபடி மாற்றங்கள் ஏற்படுத்திக் கொடுத்தால் அந்த வாடிக்கையாளருக்கு மார்க்கெட்டிங் செய்யும் ஒரு தனி நபரின் மேல் ஒரு மரியாதையும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுகிறது. அதன் பின் அந்த தனி நபர் எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் அவர் எந்தப் பொருளை விற்பனைக்கு எடுத்துச் சென்றாலும் அவர் வாடிக்கையாளரால் அங்கீகரிக்கப்படுவார். அந்த அங்கீகாரம் ஒரு தனி மனிதனுக்கும் அவர் செய்யும் சேவைக்கும் கிடைக்கும் சான்றிதழாகும்.
இப்படி பல வகையான வாடிக்கையாளர்களை தன் வசத்தில் வைத்திருக்கும் பிரதிநிதிகள் பிற்காலத்தில் சொந்த தொழில் ஏற்படுத்தி அதிலும் தன்வசம் உள்ள வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு ஸ்திரமான தளத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். எனவே தொடர்ந்து ஒரு வாடிக்கையாளரிடம் நல் மதிப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்திக் கொள்வது இருவருக்கும் நல்லது. இதற்கு பணி புரியும் நிறுவனங்கள் எப்போதும் உதவும் என்று கூறமுடியாது. ஆதலால் அவரவர்களாக முயற்சி செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தில் எப்போதும் இருக்கும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். சிலர், வாடிக்கையாளர் பற்றிய முழு தகவல்களையும் வைத்துக் கொண்டு முக்கிய தினங்களில் வாழ்த்து தெரிவிப்பது மற்றும் புது பொருட்கள் சந்தையில் அறிமுகமான தகவல்களை அவ்வப்போது செய்தி அனுப்பியும் தம் சேவையை உணர்த்தலாம்.
மார்க்கெட்டிங் அணுகுமுறைகள் பலவிதமானவை. தம் பொருட்களுக்கு தகுந்தாற்போலும், நுகர்வோர்களுக்கு தகுந்தாற்போலும் அணுகுமுறைகளை கடைபிடிப்பது நல்லது. இதை ஒவ்வொன்றையும் பணிபுரியும் நிறுவனங்கள் கற்றுத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஒரு பொது அறிவின் மூலமே எது சிறந்த அணுகுமுறைஎன்று அனுமானிக்க வேண்டும். மார்க்கெட்டிங் அணுகுமுறைகள் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
முதலில் வாடிக்கையாளரின் மன நிலையைப்பற்றியும் அவரின் ஓய்வு நேரம், வேலை நேரம் போன்றவற்றைப் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டு வாடிக்கையாளரின் முழு அனுமதியின் பேரில் அவரை சந்திப்பது நல்லது. ஏனென்றால் நமக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை நாம் பயனுள்ளதாக முழுவதும் உபயோகப்படுத்தலாம். அப்போது வாடிக்கையாளரும் நாம் சொல்வதை கவனிக்கும் மனநிலையில் இருப்பார். இதுதான் உரையாடுவதற்கு சரியான நேரம். சில பொருட்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கு இந்த அணுகுமுறைபயணளிக்கிறது. குறிப்பாக குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்கள். அதற்கு நேரடியாக வாடிக்கையாளரை சந்தித்து பொருளைப்பற்றி விளக்கி விற்றுவிட வேண்டும். முன் அறிவிப்பின்றி இப்படி அணுகுவதை இர்ப்க் ஸ்ரீஹப்ப்ள் என்று கூறுவர். திடீரென்று பொருட்களைப் பற்றி எடுத்துக்கூறி விளம்பரம் செய்வதும் விற்பனை செய்வதை என்ங்ழ்ண்ப்ப்ஹ ஙஹழ்ந்ங்ற்ண்ய்ஞ் என்று கூறுவர்.
அடுத்த சில வகையான பொருட்களை பலர் கூடியிருக்கும் இடத்தில் விவரிக்கும் போது அந்தப் பொருள் பற்றிய தகவல் பலர் மனதில் செல்லும். பிறகு அவர்கள் வாயிலாக அது மேலும் பரவும். இதை யண்ழ்ஹப் ஙஹழ்ந்ங்ற்ண்ய்ஞ் என்று கூறுவர். இந்த அணுகுமுறைவிலை உயர்ந்த பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கு பெரிதும் உதவும்.
ஒரு சேவையை மையமாக வைத்து மார்க்கெட்டிங் செய்வதற்கு வேறுவிதமான அணுகுமுறைதேவைப்படுகிறது. உதாரணமாக இன்சூரன்ஸ் மற்றும் இதர நிதி சார்ந்த மார்க்கெட்டிங் செய்யும் போது, வாடிக்கையாளர்களின் தொலைநோக்கு பார்வையின் முக்கியத்தை சார்ந்து இருத்தல் அவசியம். அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளரிடம் சேவையின் தரத்தை விளக்கும் சான்றுகள் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நமக்காக நம்மைப்பற்றி பேசக்கூடிய ஒரு வாடிக்கையாளரின் விபரங்களை கொடுத்து நம் சேவையைப்பற்றி கருத்துக்களை அறிந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யலாம். சேவையை மையமாக வைத்து மார்க்கெட்டிங் செய்யும்போது மூன்றாவது நபரின் கருத்து எப்போதும் எடுபடும்.
ஆகவே மார்க்கெட்டிங் புரிபவர்கள் தம்மைப்பற்றி நல்ல ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்த எப்போதும் முயன்று கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றி நல்ல கருத்து நிலவும் நிலை வந்தால் நம் கையில் எந்தப் பொருள் கிடைத்தாலும் நம்பிக்கையுடன் அதை சந்தைக்கு எடுத்துச் செல்லலாம்.