Thursday, May 21, 2015

ஜீரண சக்தியை அதிகரிக்கும் வழிகள்

ஜீரண சக்தியை அதிகரிக்கும் வழிகள்: www.v4all.org

*தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !:

*ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சி :


உணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர ஜீரணமாக வேண்டும். வாழ்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். உணவு, நல்லுறக்கம், ஒழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது. அஜீரண அறிகுறிகள் – வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். முன்பே கூறிய படி உணவை சத்தாக மாற்றும் சக்தியை ‘ஜாடராக்னி’ (ஜடரம் – வயிறு, அக்னி – நெருப்பு) என்கிறது ஆயுர்வேதம். இந்த ‘சூடு’ உணவு ஜீரணமாக உதவும். கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த “சூட்டை” குறையவிடுவதில்லை.
அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் இவற்றுக்கெல்லாம் முதலுதவி ‘வெந்நீர்’ குடித்தல். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் / நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீர் குடிக்கவும்.

வயிறு முட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவனத்தை நெய்யுடன் கலந்து 

உண்ணவும். நெய் ஜாடராக்கினியை தூண்டும். நெய்யில்லா உணவு 
அஜீரணத்தை போக்க:-

1. அதிகமான உண்ணுவது, அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் இவற்றை தவிர்க்க வேண்டும்.

2. ஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.

3. இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும்.

4. இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.

5. ஜீரகம் (ஒரு தேக்கரண்டி) கலந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம்.

6. ஓமம் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

7. பெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி, நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.

8. சில ஆயுர்வேத குறிப்புகள் – கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த ஜலமும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்கின்றன விவரங்கள் முன்பே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

9. பப்பாளி ஜீரணத்திற்கு உதவும். மேல் நாட்டில் மாமிச உணவு சமைக்கும் போது பப்பாளிப் பழ துண்டுகளுடன் சமைப்பது வழக்கம்.

10. ஒரு பெரிய கரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.

11. புதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம்.

12. இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது.

13. கறிவேப்பிலை சாறும் (எலுமிச்சை சாற்றுடன் கலந்து) ஜீரணத்திற்கு உதவும்.

14. கரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.

15. திராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.

16. சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவும்.

17. உணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம்.

18. மோர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

19. உலர்ந்த திராட்சையும் ஜீரணத்திற்கு உதவும்.

20. மகிழ்ச்சியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும்.

21. நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

22. பரக்க, பரக்க சாப்பிடாதீர்கள்.
ஆயுர்வேதத்தில் வயிற்றுக் கோளாறுகள், தீர ஜீரணசக்தி சீராக இருக்க, பல மருந்துகள்
உள்ளன. அஷ்டாங்க சூரணம், த்ரிபால சூரணம், திராச்ஷ ரிஷ்டம், ஹிரிடாக்கி சூரணம், அக்னிமுக சூரணம் போன்றவை. குறிப்பிடத்தக்க சில மருந்துகள், ஆயுர்வேத வைத்தியரை அணுகி, உங்கள் கோளாறுக்கேற்ற மருந்தை உபயோகியுங்கள்.
ஆயுர்வேத அறிவுரை- வயிற்றில் நான்கில் இரண்டு பகுதி அன்னமும், ஒரு பகுதியில் பானமும் நிரப்பவும். மற்ற ஒரு பகுதியை காலியாக விடவும்.
உபயோகிக்க வேண்டிய பாத்திரங்கள்-
நெய் – காரிரும்பு, அரிசி கஞ்சி, பாயசம், சூப், பழச்சாறுகள்- வெள்ளிப்பாத்திரம் காரம், உப்பு மிக்க ரஸம், குழம்பு – கற்சட்டி, நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் – தாம்ர பாத்திரங்கள் பானகம், மதுவினம் – மண் பானைகள் பழரசங்கள் – பீஸ்கான், கண்ணாடி, படிகக்கல் பாத்திரங்கள்.

இன்னும் சில ஜீரண மண்டல கோளாறுகள்

1. ருசியின்மை இதை ‘அன்னத்வேஷம்’ எனலாம். இந்த வியாதி உள்ளவர்களுக்கு பசி எடுக்காது. சாப்பாடு பிடிக்காது. இதை ‘மந்தக்னி’ என்று ஆயுர்வேதம் சொல்கிறது. இதனால் உடல் வளர்ச்சி குன்றி பல சிக்கல்கள் உண்டாகும். இவர்கள் தவறான உணவுகளை உண்டு, உடலுழைப்பு இன்றி, மனோரீதியான கோளாறுகள் உடையவர்களாக இருப்பார்கள்

2. சிகிச்சை
• ஜீரண மண்டல அவயங்களை சுத்திகரிப்பது முதல் ஆயுர்வேத நடவடிக்கை. பிறகு உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
• நாக்கு ருசியை உணராமல் போவதால், நாக்கை சுத்தப்படுத்துவது அவசியம். இதற்கு நெல்லிக்காய், இலவங்கப் பொடியை வாயில்போட்டு, உமிழ்நீரால் சுழற்றி பிறகு துப்பிவிடுதல், நாக்கில் மஞ்சள் பொடியையும் தேனையும் சேர்த்து தடவுதல் இவற்றை செய்யலாம்.
• பத்திய உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

3. அதீத பசி இது அனோரெக்ஸியாவிற்கு எதிர்மாறான நோய். இந்த நோய் உள்ளவர்கள் அதிகமாக, அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் உண்ட உணவை வெளிக்கொண்டு (வாந்தியானால்) வந்துவிடுவார்கள்.
மேற்சொன்ன இரண்டு நோய்களின் பாதிப்புகள்
• இந்த நோய்கள் இதயத்தை பாதிக்கும்
• சோகை உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம்.
• நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்
• மனோவியாதிகள் உண்டாகும்.

இவற்றுக்கான சில “டிப்ஸ்”

1. பசியை தூண்ட கிராம்பை நெய்யில் பொரித்து 2 வேளை உணவுக்குமுன் சாப்பிடவும். இதேபோல் பூண்டு, முருங்கக்காய், வெந்தயக்கீரையையும் நெய்யில் வறுத்து உண்ணலாம்.

2. திராட்சை மாதுளம், பழங்களின் 1/2 டம்ளர் ஜுஸ§டன், ஒரு தேக்கரண்டி இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். இதை உணவுக்குமுன் எடுத்து கொள்ளவும்.

3. ஆயுர்வேத மருந்துகளான ஏலாதி சூரணம், தாளிசாதி சூரணம் போன்ற மருந்துகள் பசியை தூண்டும்.

4. புலீமியாவிற்கு நவத குக்குலு போன்ற மருந்துகள் பயன்படும். ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.

ஜீரண சக்தியை, அதிகரிக்கும், வழிகள், ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள், உடலில், உணவு, நல்லுறக்கம், தாம்பத்ய உறவு, ஆயுர்வேதம், அஜீரண அறிகுறிகள், வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, மனஅழுத்தம், ஜீரண மண்டல, கோளாறுகள், சிகிச்சை, அனோரெக்ஸியாவிற்கு, பெண்களுக்கு,

மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், சிறுநீரகம், மனோவியாதிகள், புலீமியாவிற்கு, மருந்துகள், ஆயுர்வேத வைத்தியரை,
ஜீரண சக்தியை அதிகரிக்கும் வழிகள் உணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர ஜீரணமாக வேண்டும். வாழ்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். உணவு, நல்லுறக்கம், ஒழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது. அஜீரண அறிகுறிகள் – வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். முன்பே கூறிய படி உணவை சத்தாக மாற்றும் சக்தியை ‘ஜாடராக்னி’ (ஜடரம் – வயிறு, அக்னி – நெருப்பு) என்கிறது ஆயுர்வேதம். இந்த ‘சூடு’ உணவு ஜீரணமாக உதவும். கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த 
“சூட்டை” குறையவிடுவதில்லை. அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் இவற்றுக்கெல்லாம் முதலுதவி ‘வெந்நீர்’ குடித்தல். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் / நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீர் குடிக்கவும். வயிறு முட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவனத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும்.
நெய் 
ஜாடராக்கினியை தூண்டும். நெய்யில்லா உணவு அஜீரணத்தை போக்க:-

1. அதிகமான உண்ணுவது, அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் இவற்றை தவிர்க்க வேண்டும்.

2. ஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.

3. இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும்

.4. இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.

5. ஜீரகம் (ஒரு தேக்கரண்டி) கலந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம்.

6. ஓமம் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

7. பெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி, நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது

.8. சில ஆயுர்வேத குறிப்புகள் – கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த ஜலமும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்கின்றன விவரங்கள் முன்பே கொடுக்கப்பட்டிருக்கின்றன

.9. பப்பாளி ஜீரணத்திற்கு உதவும். மேல் நாட்டில் மாமிச உணவு சமைக்கும் போது பப்பாளிப் பழ துண்டுகளுடன் சமைப்பது வழக்கம்.

10. ஒரு பெரிய கரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.

11. புதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம்.

12. இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது

.13. கறிவேப்பிலை சாறும் (எலுமிச்சை சாற்றுடன் கலந்து) ஜீரணத்திற்கு உதவும்.

14. கரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்

.15. திராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்

.16. சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவும்

.17. உணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம்.

18. மோர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

.19. உலர்ந்த திராட்சையும் ஜீரணத்திற்கு உதவும்.

20. மகிழ்ச்சியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும்.

21. நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

22. பரக்க, பரக்க சாப்பிடாதீர்கள்.ஆயுர்வேதத்தில் வயிற்றுக் கோளாறுகள், தீர ஜீரணசக்தி சீராக இருக்க, பல மருந்துகள்உள்ளன. அஷ்டாங்க சூரணம், த்ரிபால சூரணம், திராச்ஷ ரிஷ்டம், ஹிரிடாக்கி சூரணம், அக்னிமுக சூரணம் போன்றவை. குறிப்பிடத்தக்க சில மருந்துகள், ஆயுர்வேத வைத்தியரை அணுகி, உங்கள் கோளாறுக்கேற்ற மருந்தை உபயோகியுங்கள்.ஆயுர்வேத அறிவுரை- வயிற்றில் நான்கில் இரண்டு பகுதி அன்னமும், ஒரு பகுதியில் பானமும் நிரப்பவும். மற்ற ஒரு பகுதியை காலியாக விடவும். உபயோகிக்க வேண்டிய பாத்திரங்கள்-நெய் – காரிரும்பு, அரிசி கஞ்சி, பாயசம், சூப், பழச்சாறுகள்- வெள்ளிப்பாத்திரம் காரம், உப்பு மிக்க ரஸம், குழம்பு – கற்சட்டி, நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் – தாம்ர பாத்திரங்கள் பானகம், மதுவினம் – மண் பானைகள் பழரசங்கள் – பீஸ்கான், கண்ணாடி, படிகக்கல் பாத்திரங்கள். இன்னும் சில ஜீரண மண்டல கோளாறுகள்1. ருசியின்மை இதை ‘அன்னத்வேஷம்’ எனலாம். இந்த வியாதி உள்ளவர்களுக்கு பசி எடுக்காது. சாப்பாடு பிடிக்காது. இதை ‘மந்தக்னி’ என்று ஆயுர்வேதம் சொல்கிறது. இதனால் உடல் வளர்ச்சி குன்றி பல சிக்கல்கள் உண்டாகும். இவர்கள் தவறான உணவுகளை உண்டு, உடலுழைப்பு இன்றி, மனோரீதியான கோளாறுகள் உடையவர்களாக இருப்பார்கள்2. சிகிச்சை• ஜீரண மண்டல அவயங்களை சுத்திகரிப்பது முதல் ஆயுர்வேத நடவடிக்கை. பிறகு உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும்.• நாக்கு ருசியை உணராமல் போவதால், நாக்கை சுத்தப்படுத்துவது அவசியம். இதற்கு நெல்லிக்காய், இலவங்கப் பொடியை வாயில்போட்டு, உமிழ்நீரால் சுழற்றி பிறகு துப்பிவிடுதல், நாக்கில் மஞ்சள் பொடியையும் தேனையும் சேர்த்து தடவுதல் இவற்றை செய்யலாம்.• பத்திய உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.3. அதீத பசி இது அனோரெக்ஸியாவிற்கு எதிர்மாறான நோய். இந்த நோய் உள்ளவர்கள் அதிகமாக, அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் உண்ட உணவை வெளிக்கொண்டு (வாந்தியானால்) 

வந்துவிடுவார்கள்.மேற்சொன்ன இரண்டு நோய்களின் பாதிப்புகள்• இந்த நோய்கள் இதயத்தை பாதிக்கும்• சோகை உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம்.• நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்• மனோவியாதிகள் உண்டாகும். இவற்றுக்கான சில “டிப்ஸ்”

1. பசியை தூண்ட கிராம்பை நெய்யில் பொரித்து 2 வேளை உணவுக்குமுன் சாப்பிடவும். இதேபோல் பூண்டு, முருங்கக்காய், வெந்தயக்கீரையையும் நெய்யில் வறுத்து உண்ணலாம்.

2. திராட்சை மாதுளம், பழங்களின் 1/2 டம்ளர் ஜுஸ§டன், ஒரு தேக்கரண்டி இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். இதை உணவுக்குமுன் எடுத்து கொள்ளவும்

3. ஆயுர்வேத மருந்துகளான ஏலாதி சூரணம், தாளிசாதி சூரணம் போன்ற மருந்துகள் பசியை தூண்டும்.4. புலீமியாவிற்கு நவத குக்குலு போன்ற மருந்துகள் பயன்படும். ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.

தினம் ஒரு தகவல்

தெரியாததை தெரிந்து கொள்வோம் 
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

No comments:

Post a Comment