Sunday, August 31, 2014

உஷார் தமிழா உஷார்! சதுரங்க வேட்டை மோசடிகள்

உஷார் தமிழா உஷார்!
சதுரங்க வேட்டை மோசடிகள்

மானாட மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும் ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு. அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி தமிழகம் தழுவிய மோசடிகளின் சமீபத்திய அப்டேட் இங்கே...
சிங்கிள் அண்ட் ஐ'யம் யங்!
இது, 'நம்பினால் நம்புங்கள்’ பாணி மோசடி. கை-கால்களில் தங்க மினுமினுப்புடன், பளபள கார்களில் வலம்வரும் 'ரிச் ஓல்டு மேன்’தான் இந்த மோசடியின் டார்கெட். நண்பருக்கு நண்பர் மூலம் அறிமுகம் ஆகும் இந்தப் பேர்வழிகள், பேச்சுவாக்கில் ஒரு கதையை எடுத்துவிடுவார்கள். அதாவது, முதுமையைத் தடுக்கும் மூலிகையைத் தேடி சித்த வைத்தியர் ஒருவரும் அவரது உதவியாளரும் காட்டுக்குள் செல்கிறார்களாம். அந்த உதவியாளர் மிக வயதானவர். அதனால் ஓர் எல்லை வரை சென்றதும், உதவியாளரை சமையல் செய்யச் சொல்லிவிட்டு வைத்தியர் மட்டும் மூலிகையைத் தேடிப் போய்விட்டார். சாப்பாடு செய்துகொண்டிருந்த உதவியாளர், அதனைக் கிளறிவிட அருகில் கிடந்த ஒரு குச்சியைப் பயன்படுத்தியிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் சாதம் முழுவதும் கறுப்பாக மாறிவிடுகிறது. 'வைத்தியர் வந்தால் திட்டுவாரே’ என்ற பயத்தில் அந்த உதவியாளர் சாப்பாட்டை முழுமையாகச் சாப்பிட்டுவிட்டு, புதிதாகச் சமைத்துவைக்கிறார். சற்று நேரத்தில் அங்கு வந்த வைத்தியர், 'தம்பீ.. இங்கே ஒரு பெரியவர் இருந்தாரே!’ என்று கேட்டிருக்கிறார். அட, நம்புங்கள் சாமி... அந்த முதிய உதவியாளர்தான் இளமைப் பொலிவுடன் நின்றிருக்கிறார். தனக்கு என்ன நடந்தது என்று புரியாமல், உதவியாளர் நடந்ததைச் சொல்ல, சாதம் கிளறிய குச்சியே தாங்கள் தேடி வந்த மூலிகைச் செடி என்று பரவசமாகி, அந்தக் குச்சியின் மரத்தைத் தேடி, கண்டுபிடித்தும்விட்டார்கள். ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறது அந்த மரம். அதன் பேர்கூட மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். அப்படி ஒரு மரத்தில் இருந்து குச்சியைக் கொண்டுவந்திருக்கும் நபரைத் தனக்குத் தெரியும் என்று சொல்வார் அந்தப் பேர்வழி. அதைக் கேட்ட மாத்திரத்தில் உங்கள் உடல் சிலிர்த்தால், உள்ளம் குதூகலித்தால், நீங்கள் லட்சாதிபதியாக இருந்தால், அதில் பாதியாகிவிடுவீர்கள். 'காதும் காதும் வெச்ச மாதிரி பேரத்தை முடிச்சுக்குவோம்’ என்று  'எவர்கிரீன் யூத்து’ கனவை ஏற்றிவிட்டு சாத்து சாத்து என்று சாத்திக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். ஏமாந்த சோணகிரிகள் கடைசி வரை கறுப்பு சாதத்தைச் சாப்பிட்டுக்கொண்டு, கண்ணாடியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
நடுக்கடலுல கப்பலை இறங்கித் தள்ள முடியுமா?    
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஏரியா. 'தோடா’ என்று வியக்கும் கெட்டப்பில் ஸ்கோடா காரில் வலம் வந்திருக்கிறார் ஒருவர். 'பழைய கப்பல்களை விலைக்கு வாங்கி, அதை உடைச்சு கோடிக்கோடியா பணம் சம்பாதிக்கிறேன்!’ என்று தங்க முலாமிட்ட 'விசிட்டிங் கார்டு’ நீட்டுவார். 'பில்கேட்ஸுக்கு பிரதரா இருப்பாரோ!’ எனப் பயந்து பயந்து ரெஸ்பெக்ட் கொடுத்திருக்கிறார்கள். 'ரஷ்யக் கப்பல் ஒண்ணு சல்லிசு விலைக்கு வந்திருக்கு. ஆனா, '2.5 c’ சொல்றான். உடைச்சு வித்தா '10 c’ தேத்திப்புடலாம். கையில கொஞ்சம் பணம் முடை. அதான் தெரிஞ்சவங்ககிட்ட கைமாத்தாக் கேக்கலாம்னு யோசிக்கிறேன். இப்போ ஒரு லட்சம் கொடுத்தா, அஞ்சு மாசம் கழிச்சு மூணு லட்சம் கொடுக்கிறேன்னு சொன்னா சொந்தக்காரங்க காசு கொடுப்பாங்களா?’ என்று ஊரின் பிரபலப் புள்ளிகளிடம் ஆலோசனை கேட்பதுபோல கேட்பார்.  'அப்பு... என்ன நீங்க... அவுங்ககிட்ட எதுக்கு கேட்டுக்கிட்டு? நானே தர்றேன்!’ என்று தூண்டிலில் ஆசை ஆசையாகப் போய் சிக்கிக்கொள்வார்கள். ஆரம்பத்தில் சிலர் ஒரு லட்சம் கொடுக்க, சொன்னபடி மூணு மடங்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார் தோடா பார்ட்டி. 'ஆஹா... நம்ம கண்ணு முன்னாடியே பக்கத்து வீட்டுக்காரன் பணக்காரன் ஆகுறானே!’ என்று பதற்றம் ஆகும் பலர், வீடு, நிலத்தை எல்லாம் விற்று லட்சத்தைக் கொட்ட, கோடிகள் சேர்ந்ததும் 'கப்பல் யாவாரி’ கம்பி நீட்டியிருப்பார். சொந்த வீட்டை விற்றுவிட்டதில், பலரும் இப்போது கவலையோடு வாடகை வீட்டில் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்!
செம்பு வம்பு!
இது திகில் மர்மம் நிறைந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட மோசடி!
தேனி பங்களாமேடு பகுதியில் வியாபாரி ப்ளஸ் சம்சாரி முத்துப்பாண்டியனை அணுகி இருக்கிறது வெள்ளையும் சொள்ளையுமான ஒரு கும்பல். 'ராஜராஜ சோழன் காலத்து மந்திரச் செம்பும், அவர் பயன்படுத்தின பஞ்சாரக் கூடையும் எங்கிட்ட இருக்கு. (ராஜராஜ சோழனுக்கு எதுக்குய்யா பஞ்சாரக் கூடை?) மந்திரச் செம்பில் பணம் வைத்து பஞ்சாரக் கூடைக்குள் போட்டா, மறுநாளே ரெண்டு மடங்கு ஆகும். உங்க கண்ணு முன்னாடியே ரெட்டிப்பு ஆக்கிக் காட்டுறோம்’ என்று ஆசையைக் காட்ட, 35 லட்ச ரூபாயைக் பஞ்சாரக் கூடைக்குள் கொட்டியிருக்கிறார் முத்துப்பாண்டியன். பஞ்சாரக் கூடைக்கு சந்தனம் அப்பி, அத்தர், பன்னீர் தெளித்து பாலபிஷேகம் செய்து தீபம் காட்டி பூஜை செய்திருக்கிறார்கள். பூஜைக் கும்பலில் பட்டுச் சேலை கட்டிய குடும்பக் குத்துவிளக்குகளும் இருந்ததால் தங்கபாண்டிக்கு டவுட் வரவில்லை. ஏதேதோ செய்தும் பூஜை முடிவில் பஞ்சாரக் கூடைக்குள் பணம் வரவில்லை. 'இன்னைக்கு ஏதோ தடங்கல். நாளைக்கு ரிப்பீட் பண்ணுவோம்!’ என்று தாவா சொல்லி, பணத்தோடு பறந்தோடிவிட்டது கும்பல். 'ராஜராஜ சோழன் நான்...’ பாடலைக் கேட்டால் வெறியாகிக்கொண்டிருக்கிறார் முத்துப்பாண்டி.
இது க(£)ட்டுக் கதை!
நெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதியில் வைடூரியம் கிடைப்பதாக எப்போதும் ஒரு வதந்தி நிலவுகிறது. இதனை நம்பி வனத் துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மலைக்குள் வைடூரியத்தைத் தேடி கும்பலாகப் போவதும், வனத் துறையில் பிடிபடுவதும் அவ்வப்போது நடக்கும் சடங்கு. இதையும் தங்கள் ஸ்கிரிப்டில் சேர்த்துவிட்டது மோசடி கோஷ்டி.
'களக்காடு மலையில் தோண்டி எடுத்த வைடூரியம் இருக்கு. கஷ்டப்பட்டு எடுத்து வந்தேன். இப்போ கொஞ்சம் பணமுடை. அவசரம்கிறதால கோடிகளில் விற்க வேண்டியதை லட்சத்துல விற்க வேண்டிய நிலைமை. சில லட்சங்கள் கொடுத்து வாங்கிக்கோங்க. சின்னச் சின்னதா அதை உடைச்சு வித்தா, கோடியைத் தொட்டுரலாம்!’ இப்படிப் பரிவாகப் பேசினால், பர்ஸில் கை வைப்போம்தானே? அப்படி ஆசைப்பட்டு பளபள வைடூரியம் வாங்கி, வீட்டின் ஸ்டோர் ரூமில் உட்காந்து உடைத்தால், அது சில்லு சில்லாக உடையும். 'கண்ணாடியைக் காமிச்சு ஏமாத்திட்டானுங்களே!’ என்று கண்ணு வியர்க்கிறார்கள் தெக்கத்திப் பணக்காரர்கள் சிலர்.  
எண்ணெயெல்லாம் எதுக்கு?  
மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை இலக்கு வைத்துக் கிளம்பியிருக்கிறது ஒரு கும்பல். 1,000 ரூபாய் விலை உள்ள சைனா மேடு குக்கர் ஒன்றை 10 ஆயிரம் ரூபாய் விலை சொல்வார்கள். 'இதுல சமைக்க எண்ணெயே தேவை இல்லை. இதனால வருஷத்துக்கு நீங்க எண்ணெய் வாங்குற பணம் 50 ஆயிரம் ரூபாய் மிச்சம் பண்ணலாம்!’ (அடேங்கப்பா!) என்று வழுக்கலாகப் பேசுவார்கள். கண் முன் மடமடவென எண்ணெய் இல்லாமலேயே மட்டன் குழம்பைச் சமைத்துப் பரிமாறுவார்கள். முடிந்தால் ஊட்டியும் விடுவார்கள். உண்ட மயக்கம் கண்களைச் சுழற்றும்போது இன்னொரு ஆஃபர் வரும். 'மூன்று குக்கர்களை விற்றுக்கொடுத்தால், ஒரு குக்கருக்கான விலையை நீங்கள் கமிஷனாக எடுத்துக்கொள்ளலாம்’. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு லாபமாக வரும். தலையாட்டும் 'ஹோம் மேக்கர்’களை குக்கர் விற்கவைத்துவிடுவார்கள். சரியாக ஒரு வாரம். அவர்கள் ஊரைக் காலி பண்ணியதும், விற்ற குக்கர் மக்கர் பண்ண ஆரம்பிக்கும். 'சிக்கன் தீய்ஞ்சுபோச்சு... வெங்காயம் கருகிப்போச்சு!’ எனப் புகார் பறக்கும். அப்புறம் என்ன... உங்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சண்டைகள் சிறக்கும்.
செய்முறையின்போது பார்சல் மட்டன் குழம்பை நைஸாகக் கலந்துகொடுத்து சாப்பிட்ட மர்மம் பின்னர்தான் தெரிய வரும்!
ஆடு போச்சே!
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு கேரளாவில் இருந்து ஆடு வியாபாரிகள் சிலர் லாரியில் வந்திருக்கிறார்கள். 'தமிழ்நாட்டு ஆடுகளுக்கு கேரளாவுல செம கிராக்கி. அங்க போதுமான ஆடு இல்லை. ரெண்டு மடங்கு விலை தர்றோம். தர்றேளா?’ என்று கேட்டால், மனசு கேட்குமா? மொத்த ஆட்டையும் கொடுத்துவிட்டார்கள் சம்சாரிகள். பேசினதுக்கு மேலாகவே அவர்கள் பணத்தைக் கொடுக்கும்போது, சந்தேகம் வந்திருக்க வேண்டும் அல்லவா? வராது! மறுநாள் வங்கியில் பணத்தைச் செலுத்தப்போனால், அத்தனையும் அச்சு அசல் கள்ள நோட்டுகள். ஆடுகள் இழப்பு போதாது என்று, கள்ள நோட்டைப் புழக்கத்தில்விட்ட குற்றத்துக்காக விவசாயிகளையும் போலீஸ் அள்ளிச் செல்ல, 'போச்சே... போச்சே’ என்று கண்ணைக் கசக்குகிறார்கள் விவசாயிகள்.
சங்குத் தேவன்கள்!
ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி பக்கம் நடக்கிறது இந்த மோசடி. கடலில் கிடைப்பதில் வலம்புரி சங்கு மிக அபூர்வம். இந்த வலம்புரி சங்கை வட இந்தியர்கள் கடவுளாக வழிபடுவார்கள். அதனால், நல்ல விலைபோகும். இந்தியக் கடல் பகுதியில் பிடிக்கப்படும் வலம்புரி சங்குகளுக்குத்தான் அவ்வளவு மதிப்பு. ஆனால், அதே சாயலில் இருக்கும் ஒரு வகையான சங்குகள் குவியல் குவியலாக ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றன. அதை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் கொஞ்சம் பாலீஷ் மாலீஷ் போட்டு, இந்திய வலம்புரி சங்கு என்று ஏமாற்றி விற்றுவிடுகிறார்கள். இதாவது பரவாயில்லை. இடம்புரி சங்குகளையே சில ஜிக்ஜாக் வேலைகள் செய்து வலம்புரி சங்கு என்றும் விற்கிறார்களாம் சில ஜித்தன்கள். ஏமாந்தது எல்லாம் வட இந்தியர்கள் என்பதால் இந்த டகால்ட்டி பிசினஸ், இப்போது வரை 100 சதவிகித லாப உத்தரவாதத்தோடு, சக்கைப்போடு போடுகிறது!
மல்லு லொள்ளு!
மலையாளிகளைக் குறிவைத்து சிவகங்கை பகுதியில் ஆட்டையைப் போடுகிறார்கள் சிலர். மலையாளப் பத்திரிகைகளில் 'தொழில்முனை வோர்களுக்குக் குறைந்த வட்டியில் நிதி உதவி செய்யப்படும்’ என்று விளம்பரம் கொடுப்பார்கள். அதையும் நம்பி சிலர் கிளம்பிவருவார்கள். காரைக்குடியில் இருக்கும் பிரமாண்ட பங்களாவை வாடகைக்குப் பிடித்து, கடன் கேட்டு வருபவர்களிடம் பிசினஸ் ஷோ காட்டுவார்கள். அறைகளில் 10, 15 லாக்கர்கள் இருக்கும். பார்ட்டி இருக்கும்போது அதில் இருந்து கத்தைக்கத்தையாக டூப்ளிகேட் பணத்தை எண்ணி, டூப்ளிக்கேட் தொழில்முனைவோருக்குக் கொடுப்பார்கள். ஒரு கோடிக்கு ஐந்து லட்சம் சர்வீஸ் சார்ஜ். அதையெல்லாம் கண் முன் பார்க்கும் நிஜத் தொழில்முனைவோர் பரவச நிலைக்குச் சென்றுவிடுவாரே! 'இத்தனை வருடத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று அக்ரிமென்ட் எல்லாம் பக்காவாகப் போட்டுக்கொண்டு, எத்தனை கோடி கடனோ, அதற்கான சர்வீஸ் சார்ஜைப் பணமாகப் பெற்றுக்கொள்வார்கள். கடன் தொகையை செக் ஆகக் கொடுப்பார்கள். அதை வங்கியில் கொடுத்தால், 'யோவ்.. இது டூப்ளிக்கேட் செக்’ என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள். திரும்ப காரைக்குடிக்கு வந்தால், காலி வீடு வரவேற்கும்!
தங்கமே தங்கம்!
தங்கப் புதையல் ஏமாற்று மோசடியில் லட்சங்களை ஏமாந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் அனுபவம் இது. 'கொஞ்ச மாசம் முன்னாடி எங்க ஊர்ல ஒரு ஆளு சுத்திட்டு இருந்தான். கட்டட வேலை பாக்குறதா சொன்னான். ஒருநாள் 'ஒரு உதவி வேணும்’னு கேட்டான். 'மைசூர்ல நாங்க கட்டட வேலை பார்த்தப்போ, குழி தோண்டினோம். அப்போ தங்கப் புதையல் கிடைச்சது. அது மகாராஜா வசிச்ச பகுதி. அரண்மனைலாம் இருந்து இடிஞ்சு சிதிலமான பகுதி. அதனால எங்களுக்குப் புதையல் கிடைச்சதுபோல. அதை வித்துத் தர முடியுமா?’னு கேட்டான். முதல்ல நான் நம்பலை. 'நம்பலைனா இந்த  நியூஸ் பாருங்க’னு பேப்பர்ல தங்கப் புதையல் சம்பந்தமா வந்த செய்தி கட்டிங்கை எடுத்துக் காமிச்சான். அப்பவும் முழுசா நம்பலை. 'இன்னும் நம்பலைல... நாளைக்கு புதையல்ல இருந்து ஒரு காசு கொண்டுவர்றேன். நீங்க பாத்துட்டுச் சொல்லுங்க’னு போனான். சொன்ன மாதிரி, தங்கக் காசு ஒண்ணு கொண்டுவந்தான். ஏதோ ராஜா சின்னம், பட்டயம்லாம் போட்டு இருந்துச்சு. நான் நகைப் பட்டறையில கொண்டுபோய்க் கொடுத்தேன். சொக்கத் தங்கம்னு சொன்னாங்க. அப்போதான் அவனை நம்பினேன். 'என்கிட்ட ரெண்டு கிலோ நகை இருக்கு. உங்களுக்குனா கிராமுக்கு 750 கொடுத்தா போதும். 15 லட்சம் மட்டும் கொடுங்க’னு கேட்டான். அடிச்சுப் பிடிச்சு 10 லட்சத்துக்குப் பேசி முடிச்சேன். 3 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். அன்னையில இருந்து... தோ இன்னைக்கு வரைக்கும் காத்துட்டு இருக்கேன். ஆளைக் காங்கலை!'' என்கிறார் சோகமான குரலில்.
கல்லு கல்லு... தள்ளு தள்ளு!
என்றைக்குமான எவர்கிரீன் மோசடி நாகமாணிக்கக் கல்தான். இன்றும் அதை நம்பி ஏமாறும் ஆட்களுக்கும் குறைவு இல்லை. '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்பின் விஷம் அப்படியே உறைஞ்சு கல்லா மாறிடும். நிறைஞ்ச பௌர்ணமி அன்னைக்கு பாம்பு அதைக் கக்கிட்டுப் போயிரும். அந்தக் கல்லோட பிரகாசத்துக்கு, அதைக் கண்ணால பார்க்க முடியாது. சாணியால கல்லை மூடித்தான் கொண்டுவரணும். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்’ என டெரர் 'பில்ட்-அப்’ கொடுப்பார்கள். நாகமாணிக்கக் கல்லின் பெருமைகளைப் பற்றி அவர்களே எழுதிப் பதிந்திருக்கும் வலைப்பூவை (ப்ளாக்)  அப்போதுதான் தேடிப் பிடிப்பதைப்போல க்ளிக்கி படித்துக் காட்டுவார்கள். 'அட அமெரிக்காக்காரனே எழுதியிருக்கான்ப்பா’ என்று உங்களையும் சிலாகிக்கவைப்பார்கள். இன்னும் சில புத்தகங்களைக் காட்டுவார்கள். 'நாகமாணிக்க கல் வெச்சிருந்தா, அதோட சக்தியால எல்லா தீமையும் ஓடிப்போயிடும். தொழில் நல்லா நடக்கும். உடல் உபாதைகள் எதுவும் வராது’ என்று அடுக்குவார்கள். உங்களுக்கு முழு நம்பிக்கை வரும் நாளில், ஒரு காட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி பணத்தை வாங்கிக்கொண்டு பஞ்சு நிரப்பிய பெட்டியில் வைக்கப்பட்ட மினுங்கும் சிவப்பு நிறக் கல்லை மிகச் சில நொடிகள் மட்டும் கண்ணில் காட்டுவார்கள். (உபயம்: எல்.இ.டி பல்புகள்) காடு, இருட்டு, மினுங்கும் கல், பாம்பு எல்லாம் சேர்ந்து உங்களைக் குழப்பும். அப்போதும் நீங்கள் சுதாரிப்பாக இருந்தால், சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் நீங்கள் இருக்கும்போதே உங்களிடம் கல்லைத் திணித்துவிட்டு,  சிட்டாகப் பறந்துவிடுவார்கள். அந்தப் போலீஸும் அவர்களின் செட்டப்தான் என்று உங்களுக்குப் புரியும்போது, இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...’ என்று கதைசொல்ல ஆரம்பித்திருப்பார்கள்.
'குற்றவுணர்ச்சி இல்லாம செய்ற எதுவுமே தப்பு இல்லை’ - என 'சதுரங்க வேட்டை’ படத்தில் ஒரு வசனம் வரும். திட்டமிட்டு ஏமாற்றும் மோசடி பேர்வழிகளுக்கு, குற்றவுணர்ச்சி வர வாய்ப்பே இல்லை. அதனால், நீங்கதான் உஷாராக இருக்க வேண்டும் மக்களே!
இருப்பீர்களா, நீங்கள் இருப்பீர்களா?
Nanri - பி.ஆண்டனிராஜ், செ.சல்மான், ச.ஜெ.ரவி, ஓவியங்கள்: ஹரன் & vikatan 

urs Happily 
www.v4all.org 

Some very good and interesting points..ABOUT JAPAN


I NEVER KNEW THIS ABOUT JAPAN ... ??
Some very good and interesting points.. Read it till the end.
1 - Did you know that Japanese children clean their schools every day for a quarter of an hour with teachers which has led to the emergence of a Japanese generation who is modest and keen on cleanliness.
2 - Did you know that any Japanese citizen who has a dog must carry a special bags to pick up dog droppings. Hygiene and their eagerness to address cleanliness is part of Japanese ethics.
3 - Did you know that hygiene worker in Japan is called "health engineer" and can command salary of USD 5000 to 8000 per month, and a cleaner is subjected to written and oral tests!!
4 - Did you know that Japan does not have any natural resources, and they are exposed to hundreds of earthquakes a year, but it did not prevent her from becoming the second largest economy in the world.
5 - Did you know that Hiroshima returned to what it was, economically vibrant before the fall of the atomic bomb in just ten years.
6 - Did you know that Japan prevents the use of mobiles in trains and restaurants.
7 - Did you know that in Japan , students from the first to sixth primary years must learn ethics in dealing with people.
8 - Did you know that the Japanese, even though they are one of the richest people in the world, do not have servants and the parents are responsible for the house and children.
9 - Did you know that there is no examination from the first to the third primary level; because the goal of education is to instill concepts and character building, not just examination and indoctrination. -
10 - Did you know that if you go to a buffet restaurant in Japan you will notice people only eat as much as they need without any waste. No wasteful food.
11 - Did you know that the rate of delayed trains in Japan is about 7 seconds per year!!
They appreciate the value of time, very punctual to minutes and seconds
12 -. Did you know that children brush their teeth after a meal at school; They maintain their health from an early age.
13 - Did you know that students take half an hour to finish their meals to ensure right digestion. When asked about this concern, they said: These students are the future of Japan
I NEVER KNEW THIS ABOUT JAPAN ................Do Forward pls as maximum Indians Should learn about these good points ..

Saturday, August 30, 2014

திறமையை வளர்த்துக் கொள்ள…. வளர்ச்சிக்கு அறிவு – பயிற்சி பாரம்பரியம் மூன்றும் அடிப்படைகளாக அமைகின்றன.

திறமையை வளர்த்துக் கொள்ள….

வளர்ச்சிக்கு அறிவுபயிற்சி பாரம்பரியம் மூன்றும் அடிப்படைகளாக அமைகின்றன. சிறந்த சூழ்நிலை வளர்ச்சிக்குத் துணையாகிறது. அறிவும் பயிற்சியும் ஒவ்வொரு துறையிலும் தேவைப்படுகிறது. பாரம்பரியம் தந்தை தாய்வழியே வருவதாகும். சிறந்த பாரம்பரியம்அறிவுபயிற்சி ஒருவனை திறமை மிக்கவனாக உருவாக்கும். திறமை ஒன்றே வளர்ச்சியின் அளவு கோல்.

திறமையின்றி ஒருவன் வளர நினைப்பது, புகழைக் கௌவ நினைப்பதுஒரு கனவு காண்பதைப் போன்றதாகும். கணித்தத்தில் திறமை பெற்றதால் இராமானஜம், கவிதையில் திறமை பெற்றதால் தான் பாரதியார், அரசியலில் திறமை பெற்றதால் இந்திராபேச்சில் திறமை பெற்றதால் அண்ணா. எழுத்தில் திறமை பெற்றதால் டாக்டர். மு.. இப்படி திறமை பெற்றவர்களின் பெயர் வரிசைப் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்
அவன் வளர்ந்துள்ளான். “எப்படியோவளர்ந்துவிட்டான் என்று எண்ணுவதை விட அவன் வளர்வத்கு உறுதுணையாக நின்ற அவன் திறமை என்ன என்பதை மட்டும் கூர்ந்து கவனியுங்கள். வளர நினைப்பவர்கள், செழிக்க நினைப்பவர்கள் பிறரைக் காட்டிலும் ஏதேனும் ஒரு துறையிலாவது நல்ல அறிவும் பயிற்சியும் பெற்று திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவும் பயிற்சியும் பெற்று ஒன்றை ஒழுங்கு செய்யும் நன்மையை திறமையென்று கொள்ளலாம்.
உங்கள் திறைமையை எந்த துறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அமைதியாக சிந்தித்து முழுமையாகத் தீர்மானியுங்கள். எந்தத் துறையைத் தேர்ந்து எடுக்கிறீர்கள். அந்தத் துறை நூல்களைப் படியுங்கள். குறிப்பெடுங்கள். கருத்துக்களை ஜீரணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதைப்பற்றி கேள்விகளை எழுப்புங்கள். பதில்களைப் பல முறைகளிலும் பெற முயலுங்கள். செய்தித்தாள் , வானொலி, தொலைக்காட்சி இன்னபிற வழிகளில் அறிவைப் பெருக்குங்கள். பயணம் செய்யுங்கள். பார்த்துகேட்டு அறிவைப் பெருக்குங்கள்.
பயிற்சிஒழுங்குற செய்வதாகும். பயிற்சி பெறப் பெறஅறிவுபொலிவு பெறும். பயிற்சி படிப்பதிலும், எழுதுவதிலும், எண்ணுவதிலும், செய்வதிலும், ஒழுங்குற அமைய வேண்டும். பயிற்சியில் நேரமும் வேண்டும். நேரத்தை ஒழுங்குறப் பயன்படுத்தி பயிற்சியைத் தொடரும்பது அறிவு தெளிவு பெறும். திறமை பிறக்கும். திறமை வெறியைத் தேடித்தரும் திறமைக்குத் திறவுகோல் அறிவுபயிற்சி, பாரம்பரியம் எனவேதிறமை பெற முயல்வீர்

நன்றி: தன்னம்பிக்கை

urs Happily 
Dr.Star Anand Ram 
www.v4all.org 

விவேகானந்தரின் தன்னம்பிக்கை வரிகளில் வாழ்க்கை விளக்கம்.........

விவேகானந்தரின் தன்னம்பிக்கை வரிகளில் வாழ்க்கை விளக்கம்.........



வாழ்க்கை ஒரு போட்டி, சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு, ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசமான செயல், சாதியுங்கள்

வாழ்க்கை ஒரு வேதனை, சமாளியுங்கள்

வாழ்க்கை ஒரு துன்பம், அதனைத் தோற்கடியுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை, அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதனை ஆடுங்கள்

வாழ்க்கை ஒரு ஆட்டம், அதை ஆடித்தான் பாருங்கள்

வாழ்க்கை ஒரு தருணம் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு பிரயாணம், அதை முடித்து வையுங்கள்

வாழ்க்கை ஒரு வாக்குறுதி, அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு சக்தி, அதை உணருங்கள்

வாழ்க்கை ஒரு புதிர், அதை விடுவியுங்கள்


வாழ்க்கை ஒரு லட்சியம், அதை அடைவதை இலக்காக்குங்கள்

Yours happily 

Dr.Star Anand Ram
Motivation Trainer 
www.v4all.org 

Friday, August 29, 2014

பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன்.

பிராங்க் பெட்கரின் வெற்றி

பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர் ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும் கூட அவரை டீமிலிருந்து விலக்கி விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை என்ற ஒரு காரணத்தால்.

அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை" என்றார்.

"நான் என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே! கடையிலா வாங்க முடியும் அதை? என்னிடம் இல்லை என்றால் அது இல்லைதானே?" என்றார் பிராங்க்.

"அப்படி இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள். உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன்
இருப்பதுபோல் நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்" என்றார் அவர்.
அப்படியே நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி, உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக உயர்ந்தார்.

உலகின் தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம் உற்சாகம்
என்கிறார் பிராங்க் பெட்கர்.

"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.

இருப்பது போல

"இருப்பது போல" (AS IF) என்னும் இயற்கை விதி ஒன்று உண்டு.

உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம் இருப்பது போல நீங்கள் நடக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம் தாமாக உங்களை வந்தடையும்.

ஜலதோஷம் போல எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக் கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.


உற்சாகம் இருப்பது போலச் செயல்படுங்கள். தானே உற்சாகம் வந்து சேரும்.

Thursday, August 28, 2014

ஆளுமைத் தன்மை வளர்ப்போம்

ஆளுமைத் தன்மை வளர்ப்போம்



நீங்கள் நல்ல ஆளுமையுள்ளவர்களாக மாற விரும்புகிறீர்களா? அதற்கு சில விசயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
மனிதர்களை விரும்புங்கள்
எந்த மனிதரும் முழுமையாக நல்லவரோ அல்லது கெட்டவரோ இல்லை. எனவே நாம் அவரிடமுள்ள நல்லவைகளை எடுத்துக் கொண்டு அவரை நம்ப வேண்டும். இப்படிச் செய்வதால் அவரும் நம்மீதுஅதே மனோ நிலை கொள்வார், நம்மை மிகவும் மதிப்பவராகவும் மாறுவார்.

புன்னகை செய்யுங்கள்
மென்மையான புன்னகையின் சக்தி வலிமையானது. யாரைச் சந்தித்தாலும் புன்னகை முகத்தோடு முகமன் கூறும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் புன்னகைத்தால் எதிரிலுள்ள மனிதரும் புன்னகை புரிந்தே தீருவார். ஒன்றிரண்டு பேரைத் தவிரை.
மனிதர்களின் பெயரை நினைவிலிருத்துங்கள்
நாம் சந்திக்கும் மனிதர்களிடம் அவர்களின் பெயரைச் சொல்லி கூப்பிடும் பழக்கம் வேண்டும்.. நாம் அவரின் பெயர் சொல்வதால் அவரிடம் நாம் நெருக்கமானவர் என்கிற ஆளுமை அவருக்குத் தோன்றும்.
தன்னைப் பற்றிப் பேசுவதை கைவிடுங்கள்
தன்னைப் பற்றிப் பேசுவதை விடுத்து எதிரிலிருப்பவரின் பேச்சை கேட்கும் பழக்கம் கொண்டால் எதிரிலிருப்பவர்க்கு நம்மை மிகவும் பிடிக்கும்.நல்ல கேட்பவராகுங்கள்.
எப்படிச் சொல்கிறோம் என்பதே முக்கியம்.
நாம் பேசும்போது, நம் பேச்சில் தவறு நேர்ந்தால் நாம் sorry என்போம். அதை உண்மையான வருத்தந் தோய்ந்த குரலில் நல்ல உடலசைவோடு சொன்னால் அது எதிரிலிருப்பவரை நிச்சயம் ஈர்க்கும். எனவே நம் உடலசைவுகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும், பணிவையும் நல்லமுறையில் பேணிக் காத்தல் மிக மிக அவசியம்.
மற்றவர்க்கு உதவுங்கள் .
ஒரு அலுவலகம் செல்லும் நேரத்தில் ஒரு விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் அலுவலகம் போக நேரமாகலாம், அதற்காக அவருக்கு உதவிடாமல் சென்றால் அது மனித நேயமாகுமா? சுயநலமற்ற உதவும் போகே ஆளுமைத் தன்மையை வளர்க்கும் அருமருந்து.
அழகாக தோற்றமளிங்கள்
நமது முதல் அறிமுகம் எதிரிலுள்ளவரைக் கவர வேண்டும். இது மிக மிக முக்கியமானது.
உடல் அழகு, ஆடை அழகு என்பதல்ல இதன் பொருள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் சூழ்நிலைக் கேற்றவாறு ஆடை அணியுங்கள். சுத்தமான சுகாதாரமான தோற்றமும், சீரான தலைமுடி அமைப்பும், நகங்களின் சுத்தமும், காலணிகளின் சுத்தமும் எப்போதுமே நமது ஆளுமையை உணர்த்தும்.
எதிரிலிருப்பவரைப் புகழத் தயங்காதீர்கள்.
புகழ்ச்சியை விரும்பாத மனிதரில்லை .எதிரிலிருப்பவரை மனதார உண்மையாய்ப் புகழ்ந்திடுங்கள். பொய்ம்மையாய், செயற்கையாய் இருத்தல்கூடாது.

Wednesday, August 27, 2014

வாழ்க்கை எனும் பூங்காவில் வெற்றி விழுவதுகளில் ஊஞ்சலாடுவதற்கு அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கிய மானது

வாழ்க்கை எனும் பூங்காவில்
வெற்றி மலர்களைப் பறிப்பதற்கு
திட்டம் என்கிற செயல்கரங்கள் நீளட்டும்!
வெற்றி விழுவதுகளில் ஊஞ்சலாடுவதற்கு அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கிய மானது செயல்திட்டம் ( Action Plan ).
எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புவதோடு அதை எவ்வாறு சாதிப்பது என்ற திட்டமும் வேண்டும். திட்டமில்லாமல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கின்ற எவரும் வெற்றி யூரை அடைவதில்லை.
திட்டமே வெற்றிக்கு விதை. விதையில்லாமல் விருட்சம் இல்லை. அதுபோல திட்டமில்லாமல் உறுதியான வெற்றியில்லை. ஆகவே திட்டமிடும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்தவொரு செயலானாலும் அதை திட்டமிட்டே முடிக்க முயலுங்கள். முயற்சித்தால் முடியாத்து இல்லை.
நேரமே வாழ்க்கை
உங்களுடைய வாழ்க்கை என்பது மனித்துளிகளின் தொகுப்பாகும். ஆகவே மணித்துளிகள் தோறும் செயல் ஏணிகளில் முன்னேறிக் கொண்டே இருங்கள். ” சும்மா ” இப்பதே சுகம் என்று இருந்து விட்டால் வறுமைதான் உங்களின் விலாசம் ஆகும்.
உழைப்புக் காற்றைச் சுவாசிக்கின்றவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். திட்டமிட்ட உழைப்பும் செயல் வேகத்தோடு கூடிய முயற்சியும் உங்களிடம் இருக்குமானால் உங்களால் சாதிக்க முடியாத்து எதுவுமில்லை.
சுய ஆய்வு
ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் முன்னர், அன்றைய நிகழ்வுகளை ஆய்வு செய்துடன் அடுத்த நாளுக்கான நேரத்திட்டத்தையும் தயார் செய்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களுடைய வெற்றிப் பயணம் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் அதிகாலை 5.00 மணிக்குத் தொடங்க பட்சம் அதிகாலை 5.00 மணிக்குத் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
சோம்பலுக்கு மறந்தும் இடம் கொடுக்காதீர்கள். காலையில் படுக்கையை விட்டு எழுவதில் முந்திக் கொள்கிறவர்களே வாழ்க்கையில் முந்திக் கொள்கின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை.
வெற்றிக்கு முதல் தேவை
வெற்றியாளர்களிடம் பொதுவாகக் காணப்படும் முக்கியமான பண்பு அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுவதுதான். அதிகாலை நேரம் ஆற்றல் மிகுந்த அரிய பொழுதாகும். அப்போழுது மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆகவே, அதிகாலையிலேயே உங்கள் உற்சாகமான செயல்பாடுகளைத் தொடங்குங்கள்.
முடங்கில் கிடந்தால் நமது வாழ்வும், முன்னேற்றமும் முடங்கிவிடும் என்பதை எப்பொழுதும் நெஞ்சில் வைத்துச் செயல்படுங்கள். அதிகாலையில் எழுவது ஒன்றும் கடினமான செயல் அல்ல. உங்களுடைய ஐம்புலன்களை அறிவின் ஆட்சிக்குள் வைத்து கொண்டீர்கள் என்றால் உங்களால் முடியாத்து எதுவுமில்லை.
இரவு உறங்கும் முன்னர் நீங்கள் தயார் செய்கின்ற அடுத்த நாளுக்கான செயல் திட்டத்தில் முதல் நிகழ்வாக ‘ அதிகாலையில் ‘ எழுதல் என்பது இடம் பிடிக்கட்டும். காலைச் செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் கைகள்.
முழுநாளுக்கான செயல்திட்டத்தோடு அதிகாலையில் எழுந்திருக்கும் போது, உங்கள் எதிரில் தோன்றும் சவால்களும் பணிகளும் உங்களுக்கு எளிதானதாகத் தோன்றுகின்றது. அதாவது, நீங்கள் ஒவ்வொரு பணியைச் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே உங்கள் மனம் அவற்றைச் செய்து முடித்து விடுகின்றது. அதாவது ஆழ்மன ஈடுபாடும் ஒத்துழைப்பும் உங்களை இயக்கும் உன்னத சக்தியாக மாறி விடுகின்றது.
ஆகவே, வெற்றி பெறுவதற்கு செயல்திட்டம் தீட்டுங்கள். திட்டமிடுவதோடு நின்றுவிடாமல், திட்டமிட்டவாறே செயல்களை முடித்து வெற்றி வாகை சூடுவதற்கு இப்பொழுதே தயாராகுங்கள்.
வாய்ப்புகளை எதிர்நோக்குங்கள்
நம்பிக்கையே நமது வாழ்க்கை என்பதைப் புரிந்து கொண்டு, எதையும் ஆக்க சிந்தனையோடு அணுகத் தொடங்குகள். அது அப்படி நடந்து விடுமோ, இப்படி நடந்து விடுமோ என்ற அச்சத்தை விட்டுவிட்டு, எது எப்படி நடந்தாலும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளத்துக் கொள்ளுங்கள்.
அதாவது, நாம் நமது முழுஆற்றலையும் பயன்படுத்தி முயற்சி செய்த பின்னர் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையவில்லை என்றால் அதற்காக மனம் கலங்கி விட்க்கூடாது. உங்களுடைய முழுசக்திக்கும் அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்வுக்காக கவலைப்படத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் கவலைக் கடலில் மூழ்க வேண்டியதுதான்.
மனதால் கலக்கப்படுவதாலோ, கவலைப்படுவதாலோ எந்தவிதப் பயனும் இல்லை என்கிற நிலையில், கவலைப்பட்டு பொன்னான நிகழ்காலத்தை வீண்செய்வது விவேகமான செயல் ஆகாது.
திட்டத்தை மாற்றுங்கள்
எதிர்நோக்கோடு தீட்டப்படுகின்ற திட்டத்தை செயல்படுத்தும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், திட்டத்தை மாற்றியமைத்து உங்களுடைய செயல்பாட்டைத் தொடர வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொட்டதும் தொல்வியாகிவிட்டதே என்று மனம் தளர்ந்து செயல் இழந்து முடங்கி விடக்கூடாது. எதற்கும் மாற்று உள்ளது என்ற நம்பிக்கையும் அதை உணர்ந்து அறியும் அறிவும் மிக்க முக்கியம்.
ஒரு மருத்துவரிடம் செல்கின்றீர்கள், உங்களுடைய நோயின் காரணத்தையும் தன்மையையும் பரிசோதித்த பின்னர், அவர் சில மருந்துகளையும் தொடக்கத்தில் கொடுக்கின்றார். ஒரிரு தினங்கள் கழித்து மீண்டும் உங்களை பரிசோதித்துப் பார்க்கும் போது எதிர்பார்த்தவாறு நோய் குணமாகி வரவில்லை என்றால், உடனே மருந்தையும், சிகிச்சையையும் மாற்றுகின்றார். அதாவது நோயைக் குணமாக்குவதே நோக்கமே தவிர, ஏற்கனவே போட்ட சிகிச்சைத் திட்டத்தை செயலாக்குவது அல்ல. அதுபோலத் தான் உங்கள் இலக்கை அடைவதே நோக்கமே தவிர உங்கள் செயல் திட்டத்தை அமுலாக்குவது அல்ல. ஆகவே எதையும் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் அணுகுங்கள்.
தோல்விகளே பாடங்கள்
வெற்றியிலிருந்து கற்றுக் கொள்வதைக் காட்டிலும் தோல்விகளிலிருந்துதான் நாம் அதிகமாகக் கற்றுக் கொள்கின்றோம். ஆகவே தோல்வி நேர்ந்தாலும் அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்ற மன உறுதியும் வலிமையும் வேண்டும். திட்டமிடுகின்றபோதே, திட்டத்தை எதிர்பார்த்தவாறு நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதற்கு மாற்றுத்திட்டமும் செயல் முறைகளையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு எதையும் எதிர்நோக்குங்கள். ஏனென்ன்றால் நம்பிக்கை தான் வாழ்வின் அஸ்திவாரம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்வதோடு, நல்லன அல்லாதவை நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுவதற்கு எப்பொழுதும் உங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
வெற்றியின் விதைகள்
செயல்களே வெற்றியின் விதைகள், செயல்படாமல் இருப்பவர்கள் எப்பொழுதும் வெற்றியின் வெளிச்சத்திற்கு வருவதில்லை. உறங்கிக் கொண்டிருக்கும் யானையை விட செயல்படும் எறும்பே உயர்வானது. உங்களுடைய செயல்களை சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதால் வேலையில் சலிப்பு ஏற்படாது அத்துடன் தள்ளிப்போடும் எண்ணத்தையும் தவிர்த்து விடலாம்.
எண்ணங்களைச் செயல்திட்டமாக மாற்றுங்கள். செயல்திட்டத்தை உத்வேகத்தோடும் ஆழ் மன ஆற்றலுடனும் நிறைவேற்றுங்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள். வெற்றி வானில் உங்களாலும் சிறகுவிரித்து மகிழ முடியும். ஆம் முடியும் என்று நினைப்பவர்களே வென்று காட்டுகின்றார்கள்.
நெஞ்சக் கழனியில்
நம்பிக்கை மலரட்டும்
எதிர்காலக் கனவுகளெல்லாம்
எதிர்ப்பின்றிக் கனியட்டும்!! சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

urs Happily 

www.v4all.org 

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்
அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க
வேண்டும்.


2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்
முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்
தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய
கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்
பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்
அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்
இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்
பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும்
போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்
குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்
திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்
என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!
நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்

your Happily

Dr.Star Anand Ram
www.v4all.org 

Monday, August 25, 2014

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும் இதை அதிகமாகப் பகிருங்கள்...........

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
இதை அதிகமாகப் பகிருங்கள்...........
ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...
தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது
தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்த...ு வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.
அந்நிய மோகத்தில் சில காலம் இந்த பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும் விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள், பெப்ஸி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்டனர். அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.இதனை மக்களும் ஏமாந்து குடித்து வருகின்றனர்.
ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக வாடிக்கையாளர்களிடம் `BOVONTO' அதிகளவில் விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..
குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால் தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள் கார்ப்பரேட் மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன் முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனையான BOVONTO வின் காலி பாட்டில்களை கடைகடையாக ஏறி வாங்கி குவித்தனர். அந்த பாட்டிலின் விலையை(ரு.12) விட அதிக அளவு நம் வியாபாரிகளுக்கு கொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக வாங்கிய பாட்டில்களை உடைத்துவிட்டனர்.
இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை. தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல் போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். உள்ளூர் பியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன.
இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான் பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க வைத்துக்கொண்டது. பின்பு தனக்கென ஒரு பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக் கொண்டு முன்னேறியது.இன்றளவிலும் குளிர்பான சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம் காளிமார்க் தான்.
ஆனால் ,இன்றளவிலும் தனது தரத்தில் சிறு குறையில்லாமல் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க் நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை) வாங்கவே மாட்டிர்கள்.
கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை முறியடித்த ஒரு தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு தமிழ் நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம் பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் தமிழனாய் ஒரு பெருமை உண்டு.அதே போல் நமது செலவாணியும் உள்ளூர் வியாபாரியிடமே இருக்கும்.
ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம் சென்று விடும்.
மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடியவை.
பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும். ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
இதை அதிகமாகப் பகிருங்கள்

இந்தியாவில் வைரலாகும் ''ரைஸ் பக்கெட் சேலஞ்ச்''

இந்தியாவில் வைரலாகும் ''ரைஸ் பக்கெட் சேலஞ்ச்''

சில நாட்களாக இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற வீடியோ வைரலாக பரவி வந்தது. ஏஎல்எஸ் நோய்க்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட சேலஞ்ச் சுய விளம்பரமாகவும், வைரல் பொழுதுபோக்காகவும் மாறியது. உலக பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலம் வரை அனைவரது ஐஸ் பக்கெட் வீடியோக்களும் யூடியூபில் வழிந்தன. இந்நிலையில் இந்தியாவில் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் வைரலாக தொடங்கியுள்ளது.
ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்றால் என்ன?
இந்தியாவில் பல ஏழை மக்கள் உணவுக்காக தடுமாறுவதால் அதனை தடுக்கும் நோக்கத்துடன் அருகில் இருக்கும் உணவு தேவைப்படும் ஒருவருக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் உங்களது நண்பர்களை டேக் செய்ய வேண்டும். இதனை # குறியீட்டுடன் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்று ட்ரெண்ட் செய்ய வேண்டும்.
இதனை ஹைத்ராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா என்பவர் இதற்காக சமூக வலைதளங்களில் தனி பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல் இந்தியாவில் வைரலாக தொடங்கியுள்ளது.தேசிய மக்களின் தேசிய தேவை என்ற டேக் வார்த்தையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலம் ஒருவரது தேவை நிறைவேற்றப்படுகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் தண்ணீர் தேவையில்லாமல் கொட்டப்படுவது போன்ற செயல்கள் இதில் இல்லை என சமூக ஆர்வளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவரது உணவு தேவையை பூர்த்தி செய்வது சரிதான் ஆனால் இதனையும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் விளம்பரமாக்கி விடாதீர்கள் என்ற கோரிக்கையும் இவர்கள் மீது விழத்தான் செய்கிறது.
இதில் ஆச்சர்யம் என்னவெனில் இதுவரை எந்த பிரபலமும் இதனை செய்ததாக பதிவு செய்யவில்லை. சாதாரண மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் பதிய துவங்கியுள்ளனர். விரைவில் பிரபலங்கள் களமிறங்கினால் இந்தியாவில் பெருபாலான மக்களின் உணவு பிரச்னை ஓரளவிற்கு தீரும் என்கிறார்கள் ரைஸ் பக்கெட் சேலஞ்சர்கள்.nanri - vikatan 

urs Happily 

www.v4all.org