Wednesday, June 29, 2016

அன்னதானத்தின் மகிமைகள் அன்னம் பரப்பிரம்மம்' என்பர்

🌺 அன்னதானத்தின் மகிமைகள்

"அன்னம் பரப்பிரம்மம்' என்பர். ஆம்... உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.
அன்னத்தின் பெருமையை விளக்கும் கதையைக் கேளுங்கள்...
முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ... அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, "கடமுடா' என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது.
"அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே... நேற்று விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே... என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்' என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார்.
"யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது...இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை...' என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை!
முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார்.
ராஜா அவரிடம், "நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே... அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?' எனக் கேட்டான்.
"மன்னா... நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்...' என்றார்.
"சுவாமி... திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது...' என்றான்.
"பார்த்தாயா... திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது...' என்றார் முனிவர்.
"அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி...' என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான்.
உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பிரசாதத்தை "ப்ர+சாதம்' என சொல்ல வேண்டும். "சாதம்' சாதாரண உணவு; "ப்ர' என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, "பிரசாதம்' ஆகி விடுகிறது. 

Sunday, June 26, 2016

இதயத்தில்

1)முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

2)ஒருவரை வாதத்தில் வெல்வது வெற்றியல்ல, அவரின் மனதை வெல்வதே வெற்றியாகும்.

3)அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.

4)அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்.

5)நமக்கோ, பிறருக்கோ தற்காலத்திலும், பிற்காலத்திலும் உடலாலும், மனதாலும், சமூகத்தினாலும், ஊறு விளையாத எந்த ஒரு ஆசையும், நியாயமான ஒரு ஆசைதான்.

6)அறிவுக்கு அடிமையாவதே பக்தி,
அறிவை அறிவால் அறியப் பழகுதல் யோகம்.

7)மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,
மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்

8)எண்ணம், சொல், செயலால் எவருக்கும்
எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிருங்கள்.

9)அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்
மூன்று வகையிலும் அறிவு வறுமை அடைகிறது.

10)சிந்தனை, ஒழுக்கம், சீர்திருத்தம், சிக்கனம், சேவை
இவை ஐந்தும், செழிப்பான வாழ்வளிக்கும்

11)உறவிலே கண்ட உண்மை நிலையே, தெளிவு.. துறவு

12)பகைமை வைத்துக் கொண்டு ஒருவரை வாழ்த்த முடியாது,
வாழ்த்தும் போது பகைமை நிற்காது.

13)உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர,
உண்மையை நாம் ஒரு போதும் மாற்ற முடியாது.

14)எப்போதும் விழிப்போடும், சிந்தனையோடும்
ஆற்றும் செயல்களினால், முன் வினையின் தீமைகள் தடுக்கப்படும்.

15)அன்பு என்பது, எந்த ஒன்றையும் உடலாலோ மனதாலோ,
இணைத்துப்பிடித்துக் கொண்டு இருப்பது.

agent of CHANGE,

GOOD ONE NOT TO MISS.

Kindly excuse, I'd already posted in this group.



At the point of death a man, Tom Smith, called his children and after praying for them, he advised them to follow his footsteps so_  that they can have peace of mind in all that they do.

The youngest child, Immaculate, a female, looked at others and yelled, "Daddy, its unfortunate you are dying without a penny in your bank account, personally, I can't emulate you. Other father's that you tag as being corrupt, thieves of public funds left houses and properties for their children; even this house we live in is a rented apartment, sorry, i can't emulate you, just go, let's chart our own course, let's paddle our own canoe."

Few moments later, their father gave up the spirit.

Three years later, Immaculate went for an interview in a Multinational Company. The interview panel had already penciled down a candidate for the highly coveted post but wanted to complete the formality of interviewing all applicants on the list.

As soon as Immaculate sat before the interview panel, the Chairman of the Committee asked, "Which Smith is your's" and  Immaculate replied, "I am Immaculate Smith. My Dad Tom Smith  is now late, he died as a poor man..."

But the Chairman cuts in, "Oh my God, you are Tom Smith's daughter?" He turned to other members and said, "This Smith man was the one that signed my membership form into the Institute of Chartered Administrators and his recommendation earned me where I am today. He did all these free. I didn't even know his address, he never knew me from Adam. He just did it for me."

He turned to Immaculate, "I have no question for you, consider yourself as having gotten this job, resume tomorrow, your letter will be waiting for you".

Immaculate Smith became the Corporate Affairs Manager of the Company with two cars, one official and one for private use, attached to the office, with a duplex and two drivers and a salary of £100,000 per month excluding allowances and other costs when she travelled outside England.

After two years of working in the Company, the Group Managing Director of the Company came from America to announce his intention to resign and needed a replacement. A personality with high integrity was sought after, again the Company's Consultant nominated Immaculate Smith.

In an interview, she was asked the secret of her success and the sudden sky rocketing profile and in tears, she replied, " My Daddy paved these ways for me. It was after he died that I knew that he was financially poor but stinkingly rich in integrity, discipline and honesty.

She was asked again, why she is weeping since she is no longer a kid as to miss her dad still after a long time. She replied, "At the point of death, I insulted my dad for being an honest man of integrity. I hope he will forgive me in his grave now. I didn't work for all these, he did it for me to just walk in".

So finally she was asked, "Will you follow your father's foot steps as he requested?" And her simple answer was, "l now adore the man, I have a big picture of him in my living room and at the entrance of my house. He deserves whatever I have after God.

Are you like Tom Smith?
It pays to build a name, the reward doesn't come quickly but it will come however long it may take and it lasts longer. Integrity, discipline, self control and fear of God makes man wealthy, not the fat bank account. Leave a good heritage for your children.

Are you building a good name for your children & not a fat bank account? 

As an agent of CHANGE, please share this true life story with your loved ones!

27 Ways to Respect your children and ways to know them in a better way.

27 Ways to Respect your children and ways to know them in a better way.

Every parent Must read:

1. Put away your phone in their presence.

2. Pay attention to what they are saying.

3. Accept their opinions and point of view.

4. Engage in their           
conversations.

5. Look at them with respect.

6. Always praise them.

7. Share good news with them.

8. Speak well of their friends and loved ones to them.

9. Keep in remembrance the good things they did.

10. If they repeat a story, listen like it's the first time they tell it.

11. Don't bring up painful 
 memories from the past.

12. Avoid side conversations in their presence.

13. Don't belittle/criticize their opinions and thoughts.

14. Respect their age.

15. Avoid cutting them off when they speak.

16. Give them the power of  
leadership when they are present.

17. Avoid raising your voice at them.

18. Avoid walking in front or 
 ahead of them.

19. Fill them with ur 
 appreciation even when 
 they don't think they 
 deserve it. (Most Imp. one)

20. Avoid putting your feet up in front of them or sitting with your back to them.

21. Don't speak ill of them  to the point where others 
speak ill of them too.

22. Keep them in your prayers as much as possible.

23. Avoid seeming bored or 
tired of them in their 
presence.

24. Avoid laughing at their 
faults / mistakes.

25. Choose your words carefully when speaking with them.

26. Call them by names they like.

27. Make them your priority 
above anything n everything...

Children are parents treasure and their most precious gift on this land

They must have seen the world lesser than you but they see it in a different way which you need to appreciate

Listen to them and try giving them as much time as you can. 

These moments are more precious thann anything in this world...

 Parenting is an art not a job
...Thought for the day for all parents...

விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள்

திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. 

ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதாவது *கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும்* என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர்.  ஆண்களின்  முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.

ஆண்களின்  முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். 

கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்.

மனம் #என்றால் #என்ன?🌹

🌹 #மனம் #என்றால் #என்ன?🌹

              மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது. 
   
               ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது. 

              இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

ஓர் அறிவாய் இருக்கின்றபோது உணர்வை பெறுகிறது.

ஈரறிவாய் இருக்கின்றபோது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

3வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

4வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

5வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

6வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

               இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது. ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இதுதான் ஆறாவது அறிவு. 

                 இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

                ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். 

                 இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது. 

                ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

                 ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும். மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான். 

                  ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது. 

                  இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் 

               தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான். 

ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத்தன்மையை அறியமுடியாமல் தவிக்கிறது.வாழ்க வளமுடன்✋🏻

ஏன் குண்டலினியை எழுப்ப வேண்டும்?

🌹 #கேள்வியும் #பதிலும்🌹

🌴 ஏன் குண்டலினியை எழுப்ப வேண்டும்?

💐நாம் பல பிறவிகளை கடந்து இந்த சென்மத்தை அடைந்துள்ளோம். 
இதுவரை நாம் எல்லா பிறவிகளிலும் சேகரித்த கர்ம பதிவுகள் நம் ஆன்மாவில் பதிந்துள்ளது. 

அதில் இருந்து நம் ஆன்மாவை பிரித்தால் ஒழிய பிறவி என்பது தொடர்கதைதான். 
அந்த கர்மாவின் அதிர்வுகள் ஆக்ஞாவில் அதிர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
அப்படி இருக்க அந்த அதிர்வுகளை ஒருநிலைக்கு கொண்டுவர அபரிமிதமான சக்தி தேவைப்படுகிறது.
அந்த சக்திதான் குண்டலினி, 

அதை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லோர்க்கு ஊழ்வினை செயல்படுவதும் இல்லை, உறுத்துவந்து ஊட்டுவதும் இல்லை.
மூளை என்கிற மீடியம் மனம் என்கிற பிரபஞ்ச பதிவுகளை தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சமாதி நிலை.
மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளதால் அது நமக்கு மட்டும் சொந்தமானது இல்லை.
எனவேதான் குண்டலினியை எழுப்ப வேண்டும்.

🌴 *ஏன் முக்திக்காக அலைய வேண்டும்?*

💐அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
இந்த அரிய வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றால் அலைவதில் தவறில்லை.

🌴 *போன சென்மமும் தெரியாது, அடுத்த சென்மமும் தெரியாது, கடந்த சென்மத்தில் எவனோ எங்கோ செய்த கர்மாவை நான் அனுபவிக்கும் போது, அடுத்த சென்மத்தில் எவனோ எங்கோ பிறப்பதற்கு நான் ஏன் சுகபோகங்களை தவிர்க்க வேண்டும்?*

💐இந்த ஐம்புலன்களின் மாயையில் இருக்கும் வரைதான் எதுவும் தெரிவதில்லை.
உண்மையில் வாழ்க்கை என்பது மிகக்குறுகிய காலமே.
ஆன்ம நிலையில்தான் நாம் நெடுங்காலம் அலைகிறோம்.
சில ஆன்மாக்கள் யுகங்கள் கூட இருக்ககூடியது.
எனவே ஓடம்(உடல்) உள்ளபோதே உறுதிபண்ணி கொள்ளக்கூடியது அவசியமாகிறது.
எவனோ எங்கோ என்பதைவிட ஆன்மாவாகிய நாம் என்பதே நிதர்சனம்.

🌴 *பரப்பிரம்மத்தில் ஐயிக்கமாகி சும்மா இருப்பதைவிட, நான் ஏன் பிறவிகள் எடுத்து  வாழக்கூடாது?*

💐நாம் இங்கு மிகப்பெரிய இன்பமாக கருதுவதைவிட பரப்பிரமத்தில் ஐயிக்கியமாவது பலகோடி மடங்கு பேரானந்தம் எனும்போது முக்திதானே சிறந்தது.

🌴 *நாளை கிடைக்கப் போகும் பலாக்காயைவிட, கையில் இருக்கும் கலாக்காய் சிறந்தது இல்லையா?*

💐இன்று கையில் இருக்கும் கலாக்காய் விஷமாகக்கூட மாறலாம். ஆனால் பலாக்காயை புசித்தவனுக்குத் தானே தெரியும் அதன் அருமை✋🏼


நோய் தீர்க்கும் அரியக்கலை

🌹 #நோய் #தீர்க்கும் #அரியக்கலை🌹

🌴நமக்கு வரும் நோய்களில் 99 சதவீதம் மன அழுத்தத்தாலேயே வருகிறது.

🌴ஆம் அனைத்திற்கும் மனமே பிரதானம்.

🌴ஹிப்னாடிசத்தின் மூலம் அரிய பல நோய்களை குணப்படுத்தலாம்.

🌴மன இருக்கம், தூக்கமின்மை, புகைப் பழக்கம், மதுப் பழக்கம், ஞாபக சக்தி குறைவு, தன்னம்பிக்கை இன்மை,

🌴திக்குவாய், நகம் கடித்தல், பயங்கள், ஊக்கம் குன்றுதல், படிப்பில் ஆர்வமின்மை, குறிக்கோளற்ற வாழ்க்கை, கோழைத்தனம்,

🌴தேர்வு பயம், நேர்க்காணல் பயம், மேடை பயம், தாழ்வு மனப்பான்மை, மன அமைதியின்மை, காரணமற்ற கவலைகள்,

🌴இரத்த அழுத்தம், இருதய நோய்கள், சீரண கோளாறுகள், வயிற்று வலி, வாத நோய்கள், முழங்கால் வலி, ஆஸ்துமா, சர்க்கரை நோய்

🌴போன்ற இன்னும் பல நோய்களை இந்த அற்புத ஹிப்னாடிச கலையின் மூலம் முற்றிலுமாக போக்கலாம்.

🌴தகவலை மாற்றினால் அனைத்தையும் மாற்றலாம்✋🏼


எண்ணமின் அலைகளின் பயணம்

🌹 #எண்ணமின் #அலைகளின் #பயணம் 🌹

🌴நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

🌴எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

🌴அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

🌴அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

🌴அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

🌴அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

🌴எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

🌴அப்படி செய்யும்போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

🌴எழுத்து வடிவத்தில் இதை விளக்குவது சற்று கடினம் என்பதால் முடிந்தவரை விளக்கியுள்ளேன். கூடிய விரைவில் இதனை காட்சிகளாக காண்பிக்கிறேன்✋🏼


தியானம் ஏன் எதற்கு எப்படி

🌹 #தியானம் #ஏன் #எதற்கு #எப்படி?🌹

🌴நம் அன்றாட வாழ்கையில் பல விதமான இடர்பாடுகளை சந்திக்கிறோம்.

🌴ஒவ்வொரு நாளும் சக மனிதர்களால் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கிறோம்.

🌴ஏன் இப்படி என்றால் பிரபஞ்சம் அப்படித்தான் உருபெற்றுள்ளது. ஆம் நேர் எதிர் ஆற்றல்கள் இரண்டும் சேர்ந்தது தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றது.

🌴இவை இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்தால் அந்த இடத்தில் இயக்கம் இருக்காது. ஆம் இன்பதுன்பம் இரண்டும் இல்லையென்றால் பற்றற்ற நியூட்ரான் தளத்தில் மோன நிலையில் இருந்துவிடுவீர்கள்.

🌴அங்கு காலம் இடம் இருப்பு அனைத்தும் உறைந்துவிடும். அதுதான் இன்பதுன்பம் அற்ற பிறவா நிலை.

🌴நாம் இன்பம் ஏற்படும்போது வாழ்வை வரமாகவும், துன்பம் ஏற்படும்போது அதையே சாபமாகவும் பார்க்கிறோம்.

🌴இந்த நிலையை போக்க ஒரே வழி தியானம். ஆம் தியானத்தின் போது மட்டுமே மனம் மூலத்தில் ஒடுங்குகிறது.

🌴தியானம் பழக ஆசைப்படுபவர்கள் சில சின்ன விடயங்களை கடைபிடிக்க தவறிவிடுகிறார்கள்.

🌴நம் உடல் மற்றும் மனதை ஒரே மாதத்தில் நம் விருப்பத்திற்கு மாற்றியமைக்க முடியும்.

🌴ஆம் அதற்கான குறிப்புகள் இதோ. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம் பழகுங்கள். இடத்தை மாற்றாதீர்கள். ஒருநாள் கூட தவறவிடாதீர்கள்.

🌴தடிமனான தடுப்பில் அமர்ந்து தியானியுங்கள். தினமும் ஒரே நேரத்தில் பழக மறக்காதீர்கள். படிப்படியாக நேரத்தை கூட்டுங்கள்.

🌴எந்த எண்ணம் வந்தாலும் பரவாயில்லை. ஆரம்பத்தில் நிறைய வரும் வரட்டும். அதைபற்றி கவலை கொள்ளாமல் வெருமனே மூச்சை கவனியுங்கள்.

🌴அவ்வப்போது கவனத்தை இழுத்துவந்து மூச்சில் நிறுத்துங்கள். ஒரு வாரத்தில் மெல்ல மெல்ல உங்களுக்குள் அமைதி பரவுவதை உணர்வீர்கள்.

🌴இரண்டு வாரத்தில் பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் பாய ஆரம்பத்திருக்கும். மூன்று வாரத்தில் உங்கள் முகம் பொலிவு பெற்றும் உங்களை சுற்றி நல்லதே நடப்பதையும் உணர்வீர்கள்.

🌴ஒரு மாதத்தில் நீங்கள் ஆழ்ந்த தியானநிலையை அடைந்திருப்பீர்கள். இவ்வளவுதான் தியானம். இது உங்களுக்கு நடக்கவில்லை எனில் நான் மேலே கூறியிருப்பதை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்றே அர்த்தம். வாழ்க வளமுடன்✋🏼


ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்

தனந்தரும் வயிரவன் தளிரடி
பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள்
வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1) 

வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென
வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2) 

முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச்
செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (3) 

நான்மறை ஓதுவார் நடுவினில்
இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4) 

பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (5) 

பொழில்களில் மணப்பான் பூசைகள்
ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (6) 

சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7) 

ஜெய ஜெய வடுக நாதனே
சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (8

சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீட்டில் செய்யும் சுலப முறை)

சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீட்டில் செய்யும் சுலப முறை)

தேவையானவை: ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படம்,கொஞ்சம் சந்தனம்,சந்தன ஊதுபத்தி ஒரு பாக்கெட்,இரண்டு கிண்ணங்கள்,தாமரை தண்டுத்திரி, அகல்விளக்கு எனப்படும் மண் விளக்கு,கலப்படமில்லாத,பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய்(இவற்றை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்)
*அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தும் மனவலிமை

தினமும் காலையில் குளித்துமுடித்துவிட்டு,அகல்விளக்கில் நெய்யை நிரப்பி தாமரைநூல் திரியை வைத்து தீபம் ஏற்றிட வேண்டும்.அப்படி ஏற்றிவிட்டு,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.இந்த தீபம் தினமும் சுமார் 30 நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானது.

தீபம் ஏற்றியப்பின்னர்,வீட்டில் சமைத்த உணவில் முதல் கரண்டியை எடுத்து,ஒரு கிண்ணத்தில் இவரது படத்தின்முன்பாக வைக்கவேண்டும்.சோறு எனில் ஒரு கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அந்த உணவின்மீது தாளித்த தயிர் அல்லது வெல்லம் தூவ வேண்டும்.பிறகு,சந்தனத்தை நீரில் கரைத்து,சொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும்,பைரவியின் நெற்றியிலும் வலது மோதிர விரலால் வைக்க வேண்டும்.அப்படி வைக்கும்போது,சந்தனம் பைரவர்,பைரவியின் கண்களை மறைக்கக் கூடாது;பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்தில் இதேபோல்,சந்தனத்தை வைக்க வேண்டும்.

பிறகு,சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும்.அப்படி ஆராதித்தப்பின்னர்,கீழ்க்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை தினமும் 33 முறை வாசிக்க வேண்டும்.தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் அமையும் இராகு காலத்தில் 330 முறை ஜபிக்க வேண்டும்.

மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

இத்துடன்,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாடு நிறைவடைந்தது.இரவு 7 மணிக்கு மேல் 10 மணிக்குள் காலையில் நிவேதனமாக வைத்தோமே? அந்த காலை உணவை எடுத்து,நமதுவீட்டின் வெளிப்புறம்,சற்று உயரமான இடத்தில்(கல்லில்!) ஒரு வாழை இலையில் அல்லது கிண்ணத்தில் அந்த உணவை வைக்க வேண்டும்.இப்படி தினமும் செய்துவரவேண்டும்.
இந்த தினசரி வழிபாட்டினால்,ஓரிரு நாள் அல்லது ஓரிரு வாரங்களில் நாம் இரவு வீட்டுக்கு வெளியே உணவை வைக்கும் போது,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ,பைரவர் வடிவத்தில் சாப்பிட வருவார்.
(இந்த நிவேதனத்தை நமதுவீட்டு வளர்ப்பு பைரவருக்குப் படைக்கக் கூடாது)
இந்த ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை 180 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவருவதால்,நமது கர்மவினைகள் தீரும்;அப்படி தீரும்போதே நமது பண வருமானம் நான்கு மடங்காக அதிகரிக்கும்;வேலை பார்ப்பவர்களுக்கு முறையான பதவி உயர்வு கிடைக்கும்;விரும்பும் இடமாற்றம் கிடைக்கும்;தொழில்பார்ப்பவர்களுக்கு விற்பனை இரு மடங்காகும்;அரசியலில் இருப்பவர்கள் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவார்கள்;உயிரைத்தவிர,அனைத்தையும் இழந்தவர்களுக்கு இழந்த அனைத்தும் கிடைக்கும்.

இந்த வழிபாடு செய்ய ஒரே ஒரு கட்டுப்பாடுதான் உண்டு.அது இந்த வழிபாடு செய்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.180 நாட்களுக்கு!!!இந்த வழிபாட்டை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் செய்துவந்தால்,நமது அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து,சொர்ணம் நம்மிடம் குவியத்துவங்கும்;(சொர்ணம் = தங்கம்)

இந்த வழிபாடு செய்பவர்களின் வீட்டில் இருப்போர்கள்,அசைவம் சாப்பிடலாம்;அசைவத்தை அவர்களும் கைவிட்டால்,அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்ட பலன்கள் வந்து சேரும்.ஆமாம்!

ஒரு குடும்பத்தில் ஒருவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தால்,அந்த குடும்பத்தினர் அசைவத்தை வீட்டிலும்,வெளியேயும்,விழாக்களிலும் சாப்பிடாமல் இருந்தாலே அவர்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறும்;பண வரவு அதிகரிக்கும்.

சிவனுடைய முதல் அவதாரம் பைரவர்! வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் மட்டுமே!!!
தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் வீடு என்று ஒரே ஒரு அறைதான் உண்டு.அந்த அறையில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வைத்து தாராளமாக வழிபாடு செய்யலாம்.அதே அறையில் குடும்ப தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்.தப்பில்லை;வழிபாடு செய்யும்போது உடல் சுத்தமாக இருக்க வேண்டும்;

Saturday, June 25, 2016

நமது வருமானம் பல மடங்கு

நமது வருமானம் பல மடங்கு
பெருக ஒரு ஆன்மீக வழிமுறை
பணம் நிறைய்ய்ய சேர ஒரு ஆன்மீக
வழி
உங்களது வீட்டில் அல்லது
பணிபுரியும் இடத்தில் அல்லது
உங்களது
தொழிற்சாலையில் ஒரு சிறு
சந்தன மரப்பெட்டி யை வாங்கி
வைக்க வேண்டும்.
அந்தப் பெட்டிக்குள் வில்வம்,
துளசி,
வன்னி,
ஆல இலை,
வெற்றிலை,
மஞ்சள்,
குங்குமம்,
மல்லிகை,
தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க
வேண்டும்.
இதில் பணத்தை வைத்தெடுக்கும்
பழக்கத்தை நாம்
கொண்டு வரவேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் வாரம்
அல்லது மாதம் ஒரு
வெள்ளிக்கிழமை முழுக்கவும்
நாம் சம்பாதிக்கும் பணத்தை
வைத்திருக்க வேண்டும்.மறுநாள்
அந்தப்பணத்தை மற்ற
காரியங்களுக்குப் பயன்படுத்திட
வேண்டும்.
இப்படி அடிக்கடி
செய்தால்,நமது பணம்
நியாயமாகவும், நல்ல
விதமாகவும் நம்மை வந்தடையும்;
நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில்
மட்டுமே செலவழியும்.
நடுத்தர மற்றும்
பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
சந்தன மரப்பெட்டிக்குப்
பதிலாக கருப்புப் புள்ளி
இல்லாத புது மண்பானை,
சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி
இவற்றில் ஏதாவது ஒன்றை
வாங்கி மேற்கூறியவாறு
பயன்படுத்தலாம்.
இதன்மூலம்,நமது பணம்
மது,காமம்,புகை,ஆடம்பரம்,
கேளிக்கை போன்ற வீண்
விரையமாகாமல்
தற்காத்துக்கொள்ளல
ாம்……….

The Abundance Principle*

*The Abundance Principle* 

Once a man got lost in a desert. The water in his flask had run out two days ago, and he was on his last legs. He knew that if he didn't get some water soon, he would surely die. The man saw a small hut ahead of him. He thought it would be a mirage or maybe a hallucination, but having no other option, he moved toward it. As he got closer, he realized it was quite real. So he dragged his tired body to the door with the last of his strength.

The hut was not occupied and seemed like it had been abandoned for quite some time. The man entered into it, hoping against hope that he might find water inside.

His heart skipped a beat when he saw what was in the hut - a water hand pump...... It had a pipe going down through the floor, perhaps tapping a source of water deep under-ground.

He began working the hand pump, but no water came out. He kept at it and still nothing happened. Finally he gave up from exhaustion and frustration. He threw up his hands in despair. It looked as if he was going to die after all.

Then the man noticed a bottle in one corner of the hut. It was filled with water and corked up to prevent evaporation.

He uncorked the bottle and was about to gulp down the sweet life-giving water, when he noticed a piece of paper attached to it. Handwriting on the paper read : "Use this water to start the pump. Don't forget to fill the bottle when you're done."

He had a dilemma. He could follow the instruction and pour the water into the pump, or he could ignore it and just drink the water.

What to do? If he let the water go into the pump, what assurance did he have that it would work? What if the pump malfunctioned? What if the pipe had a leak? What if the underground reservoir had long dried up?

But then... maybe the instruction was correct. Should he risk it? If it turned out to be false, he would be throwing away the last water he would ever see.

Hands trembling, he poured the water into the pump. Then he closed his eyes, said a prayer, and started working the pump.

He heard a gurgling sound, and then water came gushing out, more than he could possibly use. He luxuriated in the cool and refreshing stream. He was going to live!

After drinking his fill and feeling much better, he looked around the hut. He found a pencil and a map of the region. The map showed that he was still far away from civilization, but at least now he knew where he was and which direction to go.

He filled his flask for the journey ahead. He also filled the bottle and put the cork back in. Before leaving the hut, he added his own writing below the instruction: "Believe me, it works!"

_This story is all about life_.
It teaches us that *_We must_ GIVE  _before We can_ RECEIVE _Abundantly_*. 
More importantly, it also teaches that *FAITH  _plays an important role in_ GIVING*. The man did not know if his action would be rewarded, but he proceeded regardless. *_Without knowing what to expect, he made a_ Leap of Faith*.

Water in this story represents the *Good things in Life* - something that brings a _*smile to your face*_. It can be  _Intangible Knowledge_ or it can represent _Money, Love, Family, Friendship, Happiness, Respect, or any number of other things you Value_ - *Whatever it is that you would like to get out of life* - that's water.

The water pump represents the _*Workings of the Karmic Mechanism*_. 
Give it some *"Water"* to *Work with*, and it will *RETURN _far more than you put in_.........!!!*


குப்பைவண்டி டாட் காம் நடத்தும் எம்பிஏ பட்டதாரிகள்

குப்பைவண்டி டாட் காம் நடத்தும் எம்பிஏ பட்டதாரிகள்
–எல்.முருகராஜ்.
சந்திரகுமார் திருச்சியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி,படித்து முடித்துவிட்டு பல இடங்களில் பல ஊர்களில் வேலை பார்த்தாலும் இவருக்குள் ஒரு நிம்மதியின்மையும் பணியில் ஒரு நிரந்தர தன்மையும் இல்லாமல் இருந்தது.
இதே சஞ்சல மனதுடன் இனியும் இருக்கக்கூடாது சொந்தமாக ஏதாவது தொழில் துவங்கலாம் என எண்ணியபோது இவரைப்போலவே எண்ணங்களும், எம்பிஏ பட்டங்களும் கொண்டிருந்த காமராஜ் மற்றம் சதீஷ்குமார் ஆகியோர் இவருடன் இணைந்தனர்.

சந்திரகுமார் சிறுவயதில் வீடுவீடாக பேப்பர் போட்டு வந்த வருமானத்தில் கல்வி கற்றவர் பேப்பர் போடும் வீட்டில் அவ்வப்போது பழைய பேப்பரை எடுத்துக்கிறீயப்பா? என்று சொல்வார்கள்.

அப்போது அது அவருக்கு தேவைப்படவில்லை ஆனால் இப்போது அந்த நினைவு வர வீடுவீடாக பழைய பேப்பர் வாங்கி விற்போம் என்று முடிவு செய்தனர்.அதை நவீன பாணியில் செய்வது என முடிவு செய்து இணையத்தில் www.kuppavandi.comஎன்ற தனி வலைத்தளத்தை உருவாக்கினர்.

இந்த வலைத்தளத்தில் திருச்சியில் உள்ளவர்கள் தங்கள் வீட்டிற்கு எப்போது வரலாம் என்பதை பதிவு செய்துவிட்டால் இவர்கள் அந்த நேரத்தை உறுதி செய்து கொண்டு போய் பழைய பேப்பரை வாங்கிக்கொண்டு வந்துவிடுவர்.

ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு இல்லை சனி,ஞாயிறு மட்டும் ஒன்றிரண்டு அழைப்புவரும் ஆனால் மனதை தளரவிடாமல் உழைத்தார்கள்.கடந்த 2012ல் துவங்கப்பட்ட இந்த குப்பைவண்டி.காம் இப்போது வேகம் எடுத்து ஒடுகிறது.

ஏதோ பேப்பர் எடுக்க வர்ர பசங்க என்று ஆரம்பத்தில் நினைத்தவர்கள், இவர்களது பின்புலம் தெரிந்த பிறகு இப்போதெல்லாம் வீட்டினுள் உட்காரவைத்து காபி,டீ,ஜீஸ் கொடுத்து உபசரிக்கின்றனர்.

பழைய பேப்பர் மட்டும் என்றில்லாமல் வீட்டில் உள்ள பால்கவர்,மின்சார சாதனங்கள்,உபயோகமில்லாத பர்னிச்சர்கள்,துணிகள் என்று வேண்டாத பழைய பொருட்கள் எது என்றாலும் வாங்கிக்கொண்டு அதற்குரிய விலையை கொடுத்து ரசீதும் கொடுத்துவிடுகின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு ஏரியா என்று பிரித்துக்கொண்டு பத்தில் இருந்து பதினைந்து வீடுகளுக்கு செல்கின்றனர் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சேகரிப்பு வேலை மாலை 6 மணிக்கு முடிகிறது.

மாலை 6 மணிக்கு மேல் சேகரித்ததை தங்களது கிட்டங்கியில் கொண்டுவந்து தரம்பிரிக்கின்றனர் பின்னர் அதை தேவையானவர்களுக்கு விற்றுவிடுகின்றனர்.
நீலக்கலர் டிசர்ட் யூனிபார்ம் மற்றும் அடையாள அட்டையுடன் மினிலாரியில் போய் இறங்கினால் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து பிரித்து பில் போட்டு பணம் கொடுத்துவிட்டு பொருட்களை சேகரித்துக்கொண்டு அடுத்து அழைத்த வீட்டிற்கு செல்கின்றனர்.

இவர்களது அணுகுமுறை தொழிலில் உள்ள நேர்மை காரணமாக ஒரு முறை இவர்களிடம் வாடிக்கையாளராகிவிட்ட வீட்டுக்காரர்கள் பின்னர் பலமுறை அழைத்து அவ்வப்போது தங்களிடம் வேண்டாத பொருட்களை கொடுத்துவருகின்றனர் அதைவிட பெரிய விஷயம் பலருக்கு இவர்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

தங்களிடம் சேரும் பிளாஸ்டிக் டப்பா போன்ற பொருட்களில் செடிகள் வளர்த்து வாடிக்கையாளர்கள் வீட்டில் இலவசமாக கொடுத்து மரம் வளர்க்க ஊக்கப்படுத்துவது தொழிலுக்கு நடுவில் இவர்கள் இந்த சமூகத்திற்கு செய்யும் சேவையாகும்.

எம்பிஏ படித்துவிட்டு இப்படி குப்பை அள்ளுற வேலையை ஏன் செய்யணும் என்று கேட்டவர்களும், கிண்டல் செய்தவர்களும் நிறைய பேர், ஆனால் அப்படி சொன்னவர்கள் யாரும் எங்களுக்கு வேலையும் தரப்போவது இல்லை, சோறு போடப்போவதும் இல்லை, அறிவை வளர்த்துக்கொள்ள படித்தோம்,படித்த படிப்பு கொடுத்த அறிவை இப்போது இந்த தொழிலில் பயன்படுத்துகிறோம்.

நாங்கள் வேலை இல்லாமல் இருந்தது ஒரு காலம் இப்போது நாங்கள் நாமக்கல்,கோவை போன்ற ஊர்களில் எங்களது குப்பைவண்டி டாட்காமை துவங்கி நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தர இருக்கிறோம்.

இன்னோரு உண்மையையும் நாங்கள் இங்கே சொல்லியாகவேண்டும் நாங்கள் எம்பிஏ படிப்பிற்காக வேலை பார்த்தபோது கடைசியாக என்ன சம்பளம் வாங்கினோமோ அதைவிட அதிகமாகவே இப்போது சம்பாதிக்கிறோம் என்றனர் பெருமையோடு.

எந்த தொழிலாக இருந்தாலும் அதை நேசித்து செய்தால் நிச்சயம் உயர்வுதான் இனிமேல் நாங்கள் வேலை கிடைத்தாலும் போகமாட்டோம் இந்த குப்பைவண்டி டாட்காமை எப்படி எல்லாம் மேல எடுத்து செல்வது என்பதில்தான் எங்கள் எண்ணம் இருக்கிறது என்றனர்.

கடுமையாக உழைக்கும் இந்த நண்பர்கள் மூன்று பேர்களும் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் கிட்டங்கி வாடகைக்கும்,மினி லாரி வாடகைக்கும் கொடுத்துவருகின்றர், அந்த பணம் மிஞ்சினால் இவர்களது வாழ்க்கை இன்னும் பிரகாசிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக படித்த இளைஞர்கள் ஒயிட் காலர் வேலைதான் வேண்டும் என்று தேடாமல் பொழுதை தேய்க்காமல் எந்த தொழிலை செய்தாலும் அதில் நேர்மையையும் நேர்த்தியையும் காண்பித்துவிட்டால் படிப்படியாக முன்னேற்றம்தான் என்பதற்கான அடையாளம் இவர்கள்.

Wednesday, June 22, 2016

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்:–

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்:–

1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.
2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவன்.
3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்பவன்.
4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.
6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்பவன்.
7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
8) பலமில்லாதவனாக இருந்துகொண்டு, பலமுள்ளவனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
9) பிறரிடம் இருந்து உதவியோ அல்லது பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.
10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.
11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.
14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.
17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.
மகாபாரதத்தில் கௌரவ, பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ணன் திருதராஷ்டரரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார்.

கற்களின் தரம் அறிவது எப்படி??

கற்களின் தரம் அறிவது எப்படி??

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

Benefits of the OM Mantra

Benefits of the OM Mantra
★ Chanting of OM Mantra purifies the environment around the chanter and produces positive vibrations.
★ The OM not only gives positive results to the one who is chanting it but to the entire vicinity wherever its vibrations flow.
★ It cleanses your aura.
★ It takes you alpha, a meditational state which gives you deep relaxation.
★ Your concentration increases when you chant this universal hymn.
★ The ॐ chanting removes toxin from your body. It gives you better immunity and self-healing power.
★ It improves your concentration and helps you focus on your target.
★ The ॐ chanting improves your voice and gives a strength to vocal cord and muscles during old age.
★ The ॐ chanting produces a vibration and sound which is felt in your vocal cord and sinus. It opens pore which in turn helps in removal of sinus problems gradually and if done in complete faith.
★ Om Mantra has a cardiovascular benefit too which keeps blood pressure normal.
★ It helps in keeping your emotions controlled and thus by putting a control over emotions and leads you to excel in life.
★ It is just like any other supplement that will help in the overall development of your body and mind positively without any side effects.
★ It regular chanting helps in taking you to a spiritual journey and which will only result if it is done daily for a longer period of time.
★ When OM Mantra chanted in group produces immense positive vibrations which charge up the entire vicinity.
★ Even the attendants feel fully charged up even though a person is completely tired.
★ Some people also claims to lose weight through ॐ chanting As it puts your entire body in work and its vibrations affects you positively hence enhancing your metabolism which leads to weight loss.
★ Om cleanses your skin and gives a sunny glow on your face when you chant OM regularly.
★ When you tend to chant it regularly you start feeling stronger.
★ Spinal cord efficiency is also increased by vibrations caused by sound of Aaaa. As this sound is generated from abdomen and mainly supported by spinal cord.
★ The sound uuu is created by vocal cord which affects thyroid glands and throat.
★ Even a picture of OM purifies the environment around.
★ It is said that rubbing hands while ॐ chanting and putting those charged hands on different parts of body heals or activates those body parts.
★ If those rubbed hands are put on your eyes your eye sight will start improving.
★ And if rubbed on your face, it can give you a great personality.
★ It is proved that chanting this Mantra improvises quality of water. So before drinking if OM is chanted it puts water crystal in most beautiful sequence, which effects the body beautifully.😊🙏

வெற்றியின் சூத்திரம் ================ எல்லோரும் தம் வாழ்க்கையில் வெற்றி பெற

வெற்றியின் சூத்திரம் ================
எல்லோரும் தம் வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால்
அவ்வாறு நடப்பதில்லையே. ஒரு சிலர் தான்
வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கிறார்கள்.
சாதனையாளர்களாகிறார்கள். வாழ்வில்
பெயரும், புகழும் பெறுகிறார்கள்.
பலர் வெற்றி பெற முடியாமல் தோல்வியில்
துவண்டு போகிறார்கள். நொந்து நூலாகி
விரக்தியின் காரணமாகத் தங்கள் வாழ்க்கையை
முடித்துக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை.
கருணையுடைய கடவுள் ஒருசிலருக்கு
மட்டும் வெற்றியைத் தந்துவிட்டு,
மற்றவர்களிடம் ஓர வஞ்சனையுடன் நடந்து
கொள்கிறானா? இல்லையே
வெற்றி பெற முடியாமல் போவதற்குப் பல
காரணங்கள் இருக்கலாம். ஆனால், வெற்றி
பெறுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.
அதுதான் உழைப்பு, மன உறுதி,
விடாமுயற்சி. இக்கட்டுரையில் வெற்றிக்கான
பல படிக்கட்டுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கல்வி பயிலும் மாணவன், நன்றாகப் படித்து
நிறைய மதிப்பெண்கள் வாங்கினால்,
விரும்பிய கல்லூரியில் சேர்ந்து, விரும்பிய
பாடத்தை எடுத்துப் படிக்கலாம். யாரையும்
சிபாரிசுக்கென்று அணுகி அலையத்
தேவையில்லை. அப்படி மதிப்பெண்கள் பெற
முடியாதவர்கள் தான் கிடைத்த கல்லூரி,
கிடைத்த பாடம் என்று சேர்ந்து கொள்ள
வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
ஆளாகிறார்கள்.
நாம் செல்ல வேண்டிய பாதையைத்
தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு. அப்பாதை
இரண்டாகப் பிரிகிறது என்று
வைத்துக்கொள்வோம். வலப்புறம் திரும்பி
நடந்தால் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால்
போகப்போக அந்தப் பாதையில் பயணிப்பது
உற்சாகமாவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்
இன்னொரு பாதை இடப்புறமாகப் பிரிகிறது.
இந்தப்பாதையில் சென்றால் ஆரம்பத்தில்
மகிழ்ச்சி தருவதாகத் தோன்றினாலும்,
பின்னால் போகப்போகத் துன்பத்தைத்
தருவதாக அமைகிறது. இதில் எந்தப்
பாதையை நாம் தேர்ந்தெடுத்துக்
கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நமது
வெற்றியும், தோல்வியும் அமைகிறது.
வலப்புறப் பாதையானது உழைப்பு. இடப்புறப்
பாதை என்பது சோம்பல், ஆர்வமின்மை
என்பதாய் வைத்துக்கொள்வோம். இப்படிச்
சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கே எது சரி
என்று புலப்படும். விடாமுயற்சிக்குத்
திடமான, உறுதியான மனம் தேவை. நாம்
மேற்கொள்ளும் பணிக்கு ஏற்படக்கூடிய
இடையூறுகளையும், சிரமங்களையும்,
சிக்கல்களையும் சலிப்பு, சிறுசிறு
பிரச்சனைகளையும் இவை எல்லாவற்றையும்
புறம் தள்ளிவிட்டு வெற்றி காண வேண்டும்
என்று ஒரே எண்ணத்துடன், முனைப்புடன்,
நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி
நிச்சயம்.
இடையில் ஏற்படக்கூடிய தடங்கல்களைக் கண்டு
தளராத மனம், சலிப்படையாத உள்ளம், எந்தப்
பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை,
தீராத பிரச்சனை எதுவுமே கிடையாது.
எல்லாமே நமது மனப்பான்மையைப்
பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டு
வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து முயற்சிக்க
வேண்டும்.
எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்
என்று நமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார்
வள்ளுவர். நம்பினோர் கெடுவதில்லை.
எண்ணம்போல வாழ்வு. முயற்சி தம்
மெய்வருத்தக் கூலி தரும் என்றெல்லாம்
ஆன்றோர் சொல்லி வைத்திருப்பது இதன்
அடிப்படையில் தான்.
ஒருமுறை, இருமுறை என்று
முயன்றுவிட்டு, வெற்றி கிட்டவில்லையே
என்று துவண்டு போவோரே பலர். வெற்றி
கிட்டும் வரை விடாது முயற்சிப்பவனே பலன்
பெறுகிறான்.
நான்கு இடங்களில் கிணறு
தோண்டுவதைவிட, ஒரு இடத்தில் ஆழமாகத்
தோண்டினால் தண்ணீர் கிடைக்குமன்றோ
அதுபோல நம் முயற்சியை ஒருமுகப்படுத்தித்
தொடர்ந்து முயன்றோமானால் வெற்றி
பெறுவது நிச்சயம்.
அதற்கான தாரக மந்திரம் இதுதான் – உழைப்பு,
விடாமுயற்சி, குறிக்கோள், தன்னம்பிக்கை.
செம்மையான திட்டம் வேண்டும். எதனை,
எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை
நன்கு திட்டமிட்டுச் செயல்படும்போது, அந்தத்
திட்டத்தைச் செயல்படுத்துவதில் இடையே
ஏற்படக் கூடிய இடையூறுகளை எப்படிக்
களைவது என்று ஆராய்ந்து, தேவையானால்
வழிமுறைகளை மாற்றிக்கொண்டு,
தொடர்ந்து முயன்றால் வெற்றிதான்.
விளையாட்டுகளில் தடை ஓட்டம் என்ற ஒன்று
இருக்கிறது இடையிடையே உள்ள பல
தடைகளைத் தாண்டிக் குதித்துத் தான்
வெற்றிக்கம்பத்தை எட்ட வேண்டும். 10, 15 பேர்
பங்கு பெற்றாலும் ஓரிருவரே இறுதியில்
வெற்றி பெறுகிறார்கள். இடையே சோர்ந்து
போய் விலகுபவர்களும் உண்டு. கடைசியாக
வெற்றிக்கம்பத்தைத் தொடும்போது
தோல்வியுறுபவர்களும் உண்டு. தளரா
உறுதியுடன், கோப்பையைப் பெற்றே தீர்வது
என்ற உறுதியுடன் பெறுகிறவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏகலைவன் துரோணரிடம் சென்று வில்
வித்தையைக் கற்றுத் தருமாறு பணிவுடன்
கோரினார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
ஏகலைவன் மனம் சோரவில்லை. துரோணரைப்
போல ஒரு பதுமையைச் செய்து,
அச்சிலையையே தனது மானசீகக்
குருவாகக்கொண்டு வில் வித்தை
பயின்றான். கடைசியில் அவனது இடையறாத
முயற்சி, பயிற்சி அவனை அர்ஜுனனுக்கு
சமமான வில்லாற்றல் மிக்க வீரனாக ஆக்கியது
என்பது மகாபாரதக்கதை.
சரியான திட்டம் இல்லாவிட்டால் வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது. நமது இலக்கை
முதலில் நிர்ணயம் செய்துகொண்டு, ஆழ்ந்த
ஈடுபாட்டுடன் செயல்படுத்துவோமானால் நம்
எண்ணம் இறுதியில் பயனைத்தரும் என்பதற்கு
மேற்சொன்ன இரண்டு புராணக்கதைகளுமே
தக்க சான்றாகும்.
இல்லாத ஒன்றைக் குறித்து வருந்துவதைவிட,
இருக்கின்ற ஒன்றை வைத்து, கிடைத்த
வாய்ப்பினைப் பயன்படுத்தி, செம்மையாகத்
திட்டமிட்டு, நிறைந்த வாழ்க்கை வாழலாமே.
முயன்றால் முடியாததொன்றில்லை.
பெருமைக்குரிய நமது முன்னால்
குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம்
பிறந்தது சின்னஞ்சிறு ஊர். எளிமையான
குடும்பம். சாதாரண சூழலில் கிராமத்தில்
படிப்பு. செல்வச் செழிப்போ, வசதி வாய்ப்போ
இல்லை. ஆனால் அவரது கடின உழைப்பும்,
விடாமுயற்சியும், ஆர்வமும், தளராத மனமும்,
சாதிக்க வேண்டும் என்ற முனைப்பும் அவரைச்
சிகரத்தை எட்ட வைத்தது. அவரது உறுதிக்கும்,
உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கடவுளும்
துணையாக நின்றிருக்கிறார் என்பது
உண்மையல்லவா.
மதி இருந்தால்
விதி என்ன செய்யும்?
வெற்றி பெறாதவர்கள் தான் விதியின் மீது
பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள
முயல்கிறார்கள். பிரச்சனையே இல்லாத
வாழ்க்கை இல்லை. ஆனால் பிரச்சனையே
வாழ்க்கையாவது சிலரது சோகம்.
பிரச்சனையைக் கண்டு துவளாமல், அதனை
எப்படிச் சமாளிப்பது என்று தைரியமாக
எதிர்கொள்ளும்போது, அமைதியாக
சிந்திக்கும் போது வழி பிறக்கிறது.
அமெரிக்க தத்துவஞானி திரு. பிராண்ட்
ரயஸியின் “எம்பவர் மீ ஆன் லைன்” என்ற நூலில்
வெற்றிக்கான பதினெட்டுப் படிக்கட்டுகளைக்
குறிப்பிட்டுள்ளார். அவற்றை நாமும்
பின்பற்றி வெற்றி பெறலாமே.
1. முதலில் பெரிதாகக் கனவு காணுங்கள்.
2. வழி நடத்தும் அறிவை வளர்த்துக்
கொள்ளுங்கள். எப்படிச் செய்ய விரும்புகிறீர்க
ள். அந்த லட்சியக் கனவு நிறைவேறுவதற்கான
வழிவகை என்ன? என்பதை நன்கு தீர்மானித்துச்
செயல்படுங்கள். ஒரு வருடத்தில் நீங்கள் அடைய
வேண்டிய பத்து லட்சியங்களைக் குறித்து
வைத்துக்கொண்டு, அதனை ஒவ்வொன்றாக
நிறைவேற்ற முயலுங்கள்.
3. நீங்கள் உங்களைச் சுயதொழில்
முனைவோராக நினைத்துக் கொள்ளுங்கள்.
4. நீங்கள் செய்யும் வேலையைப் பெரிதும்
நேசியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான
வேலை எது என்பதைத் தீர்மானித்து, அதில்
திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
5. எந்த வேலையையும் மிகவும் நேர்த்தியாக,
சிறப்பாகச் செய்ய முயலுங்கள். தொழில்நுட்பம்
பற்றிச் சிந்தித்தால் இன்னும் வளர்ச்சியைக்
காண்பீர்கள்.
6. கடின உழைப்பே உங்கள் உயிர்மூச்சாக
இருக்கட்டும். முன்னேறும் வரை சோர்வுக்குச்
சற்றேனும் இடம் தராதீர்கள்.
7. தொடர்ந்து முன்னேற்றத்தின்
ஏணிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்லுங்கள்.
மேன்மேலும் அந்தத் தொழிலை எப்படித்
திறம்பட வளர்த்துக் கொள்வது என்பதை
அறிந்து செயல்படுங்கள். மேன்மேலும்
கற்றுக்கொள்பவராக, அதில் முழுமையாக
உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
தினமும் ஒருமணி நேரமாவது உங்கள் துறை
சம்பந்தப்பட்டவரைப் பற்றி படியுங்கள்.
மேன்மேலும் அது சம்பந்தமான பலப்பல
விஷயங்களையும், யுக்திகளையும்
தெரிந்து கொள்ளுங்கள்.
8. உங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட
தொகையை ஒன்று முதல் இரண்டு சதவிகிதம்
சேமியுங்கள் ‘நஹஸ்ங் ரட்ண்ப்ங் வர்ன் நல்ங்ய்க்’
என்பதை உங்களது தாரக மந்திரமாகக்
கொள்ளவும். அதற்குமேல் மீதியுள்ள
சம்பளத்தில் செலவழியுங்கள்.
9. உங்களது தொழில் அல்லது வியாபாரத்தின்
முழுநுணுக்கங்களையும் நன்கு தெரிந்து
கொள்ளுங்கள். இதுபோட்டிகள் நிறைந்த
உலகம். போட்டியைச் சமாளிப்பதற்கேற்ப உங்கள்
தொழில் அல்லது வியாபார யுக்தியை
அவ்வப்போது அபிவிருத்தி செய்து
கொள்ளுங்கள்.
10. மற்றவர்களுக்குச் சேவை செய்ய
முயலுங்கள். (வாடிக்கையாளர்களது தேவை
பற்றிய கவனம்) என்பது மிகமிக அவசியம்.
வாடிக்கையாளர் திருப்தி தான் உங்களுக்கு
வரப்பிரசாதம். வாடிக்கையாளர்களைத்
திருப்திப்படுத்த இன்னும் ஏதேனும் செய்ய
முடியுமா என்பதைக் கவனித்துச்
செயல்படுங்கள். இதுவே உங்கள் வளர்ச்சியின்
தாரக மந்திரம்.
11. உங்களது தொழில் வளர்ச்சியில்
தூய்மையும், நேர்மையும், தனித்தன்மையும்
என்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
12. உங்களைப் போல மற்றவர்களையும் உயர்வாக
எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும்,
மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
12. உங்களைப்போல மற்றவர்களையும் உயர்வாக
எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும்
மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
13. முக்கியமாக நிறைவேற்ற
வேண்டியவற்றை முன்னுரிமையுடன்
நிறைவேற்ற வேண்டியவை, அவசரமாக
செய்து முடிக்க வேண்டியவை என்பதை நன்கு
தீர்மானித்து, பட்டியலிட்டுக் கொண்டு
செயல்படுங்கள். என்பதைத் தெளிவாக
புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
14. ஒரு உயரத்திலிருந்து அடுத்த
உயரத்திற்குச் செல்ல உங்களைத் தயார்படுத்திக்
கொள்ளுங்கள். சுழற்சியையும்,
போக்கையும், மாற்றங்களையும் அடையாளம்
காணக் கற்றுக்கொள்ளுங்கள்.
15. உடன் பிறந்த கற்பனைத் திறனை
ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள். எந்த ஒரு
பிரச்சனையையும் எப்படி சரி செய்வது,
இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது
என்பதைத் தீர்க்கமாக ஆராய்ந்து

சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்

சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்

👍 முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

👍 புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

👍 வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

👍 கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

👍 வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

👍 வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும்.
அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399

👍 அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

👍 செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

👍 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

👍 வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

👍 ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

👍 படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும்.
தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

👍 வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

👍 உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..

👍 உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்

👍 சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

👍 வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

👍 கோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:-
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம், கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள்  நீங்கி நலம் ஏற்படும். மேற்கண்ட பாதிப்பு
உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று

👍 சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும். முகத்தில் தேஜஸ், கவர்ச்சி குறைந்து
நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை, அவமானம் உண்டாக்கும். பேய், பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:-
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்

👍 கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது
ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

பேலியோ டயட் எளிய தமிழில்

தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..

காலை : 100 பாதாம் கொட்டைகள்
மதியம் : 4 முட்டைகள்
இரவு     : சிக்கன்/மட்டன்/மீன்  
                 ( அளவில்லாமல்)

இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்?

"தினமும் இதுதான் உணவா?

ஆம்..

ஐயோ.. பத்தே நாளில் மாரடைப்பு வந்து செத்தே போய் விடுவோம்.."

இதுதான் நம் ஒவ்வொருவரின் பதிலாக இருக்கும்.

ஆனால்..

..

..

..

ஆனால்?

இந்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.

உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோஸின் அளவு நார்மலுக்கு வந்து விடும்.

ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்துவிடும். மாரடைப்பு அபாயம் நீங்கிவிடும்..

இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? 

மாட்டோம்.

ஆனால் அதுதான் உண்மை என்று "பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது. 

வாசிக்க வாசிக்க.. நாம் எவ்வாறு உணவு வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்கிற உண்மை என் முகத்தில் அடித்தது. 

ஒட்டகப் பால் குடித்தால் சுகர் சரியாகிவிடும்.. புரோட்டின் பவுடர் சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும்.. வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுகர்போய்விடும். 

உப்பை நிறுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்..

என்றெல்லாம் நம்பப்படுவதெல்லாம் பொய் என்பதை அக்கு வேறு ஆணி வேறாய் கிழித்தெரிகிறது இப்புத்தகம்.

மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.

எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது. 

ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்.. அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜேஜே என்று நடக்கும்.

இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது  80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

அதற்கு மேல் இருந்துவிட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்?

அதற்கு என்ன செய்ய வேண்டும்? 

எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..

எதில் சுகர் ஏறும்?

அரிசி மற்றும் கோதுமை..

அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.

கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை தீர்ந்தது ....,

எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா? 

சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? 

BMI அளவை மாற்று..

அதென்ன BMI? 

உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.

ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.

இதன்படி என்ன ஆனது? 

168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.

1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்துவிட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.

ஆனால் படுக்கும்பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.

புரிகிறதா வியாபார தந்திரம்?

தமிழகத்தில் சுகர்நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப்படுகிறது?

காலையில் 4 இட்லி

மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்

இரவு : சப்பாத்தி.

இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது? 

ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒருவேளையில் சாப்பிடுகிறோம். பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?

நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.

புரிகிறதா எங்கு பிழை வருகிறது என்று?

சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது. 

இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.

இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது. நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.

ஆக 4 இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?

ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்? அதுதானே முறை?

சுகர் துளியும் இல்லாத உணவு எது?

அதுதான் அசைவ உணவு.

மனிதன் ஆதியில் படைக்கப்படும் பொழுதே விலங்குகளை வேட்டையாடி அதையே உண்டு வந்தான். அதை உண்ணும் வகையில்தான் மனிதனின் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயல்பான உணவு.

அதில்தான் மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காலையில் இட்லிக்குப் பதிலாக 4 ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும்?

அதில் துளியும் சுகர் இல்லை. எனவே ரத்தத்தில் சுகர் அளவு கூடாது. உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத்துவங்கும். தொப்பை கரையும். நம் உடல் கொழுப்பை சேகரிக்காமல் எரிக்கத் தொடங்குவதால் முட்டையில் உள்ள கொழுப்பும் எரியத் தொடங்கும்.

காலை உணவாக முட்டை சாப்பிடும் பொழுது, நான்கு மணிநேரம் பசி எடுக்காது. சுகர் அளவு கூடாது. நொறுக்குத்தீனி திங்க மனசு ஏங்காது.

இதை எப்படி நம்புவது?

பாடி பில்டிங் துறையில் பளு தூக்கும் வீரர்களுக்கு அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் உணவு முறை என்ன?

தினமும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் மட்டுமே.

இப்பொழுது புரிகிறதா.. கொழுப்பு உணவு உடலுக்கு நன்மையே விளைவிக்கிறது என்று..

சுகர் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் திடீரென சுகரற்ற உணவிற்கு மாறாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழிறங்கும். 

முதல் ஒருவாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து வாருங்கள். பிறகு மாத்திரையே தேவைப்படாது.

இதைத்தான் பேலியோ டயட் புத்தகம் அழகாய் எளிய தமிழில் எடுத்துரைக்கிறது.

யோகா

#யோகா:

ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture )
கொண்டு இயங்குவதை 
கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக
வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில்
யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக
கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம்
ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில்
ஆகும்.இதை போன்றே பிற
உயிரினங்களை அடிப்படையாக கொண்ட
ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.
ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும்
அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன்
தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்டுள்ளன.

மகராசனம் (மகரம்–முதலை), 
சலபாசனம் (சலபம்– வெட்டுக்கிளி), 
சசாங்காசனம் ( சசாங்கம் –முயல் ), 
மச்சாசனம் ( மச்சம் – மீன் ),
கூர்மாசனம் ( கூர்மம் –ஆமை),
புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

இதைப் போன்று மரம் மற்றும்
மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :
பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )

பிறகு அன்றாடம் பயன்படுத்தும்
பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில
பின்வருமாறு,
நாவாசனம் ( நாவா – படகு ), 
தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக
கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும்
வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ்மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர்.
இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில்
ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.
இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள்
வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன்
பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற
இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும்
இந்த வழக்கம் மெல்ல மெல்ல
குறைந்து வருகின்றது.
பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத
மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில்
( இன்றைக்கு ஆங்கிலம்
செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த
இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத
மொழியில் அதிகமாக
பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத
மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள்,
யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.
இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில்
எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில்
அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள்
எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.
இதில் பதஞ்சலி முனிவர்
வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால்
அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.
பிறகு 15 ஆம் நூற்றாண்டில்,
யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய
நூலை எழுதுகின்றார்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்
சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம்
பற்றி விளக்குகின்றார்.
இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில்
இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர்
போன்றோர் ஆன்மீக ரீதியிலான
யோகாவை பரப்புகின்றனர்.
1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த
திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர்
ஆரோக்கிய ரீதியிலான
யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும்
இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள்
அமைந்த
சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர்
பல்வேறு யோக ஆசிரியர்களாலும்
கடைபிடிக்கப்படுகின்றது.
1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish )
எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின்
மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ
ஆய்வுகள் மூலம்
நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர்
யோகாவை கற்றவராவார்.
இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய
விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்றைய நிலையில் தமிழ்
வழி யோகா என்பது இல்லை.நாம்
இன்று பெறக்கிடைப்பது வட
நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொது.

- சித்தர்கள் தபோவனம்

Tuesday, June 21, 2016

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது.

💕💞💕
💃🏼ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று  நடப்பட்டது.  ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
 தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே? " 
தென்னங்கன்று சொன்னது, 
" ஒரு வருஷம் ".
"ஒரு வருஷம்னு சொல்றே ,  ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது.  
தென்னங்கன்றோ அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.

           ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக  இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது. 
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது.  தென்னங்கன்றோ எப்போதும் போல  சலனமில்லாமல் புன்னகைத்தது.

         வாழைக்கன்றை நட்டு  ஒரு வருடம்  ஆவதற்குள் தென்னங்கன்றைவிட  இருமடங்கு  உயரமாகி விட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
"கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ  இருக்குற மண்ணில் தான்  நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான்  எனக்கும் கிடைக்குது.  ஆனா பாரு , நான் மட்டும்  எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.  தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை. 
         இன்னும் சிறிது காலம் சென்றது.  அதிலிருந்து  அழகான குலை வெளிப்பட்டது.  அது பூவும் ,  காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானது.  இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக்  கழித்தது. 
        நல்ல  உயரம் .  பிளவுபடாத அழகிய இலைகள்,  கம்பீரமான குலை .  வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது.  இப்போது காய்கள் முற்றின .

        ஒரு மனிதன்  தோட்டத்துக்கு வந்தான்.  வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்.  வாழைக்காய்களைத் தட்டிப்  பார்த்தான்.  தென்னை மரத்தைத்  திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . இதை விட வேறென்ன  பெருமை வேண்டும்?  வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.  முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள ,  அதன் குலைகளை வெட்டி எடுத்தான்.  வாழை மரம் கதறியது.  அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது.  மரண பயம் வந்துவிட்டது.  அது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்தது.  ஆம் .  வாழைமரம் வெட்டி சாய்க்கப்
பட்டது.  ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத்  தோலுறிக்கப் பட்டது.  
                 தென்னை மரம்  இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது.  அதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம்  என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது. 

        செல்லமே!  ஒவ்வொரு நாளும் நமக்கும்  எத்தனை கேலிகள் இது போல?
கவலைப்படாதே. வேகமாக வளர்வதெல்லாம் ,  வேகமாகவே காணாமல் போகும்.  புன்னகை செய்.்.

" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது, பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...
✍🏽படித்ததில் பிடித்தது..✍🏽
💕💞💕

Ant and Wealthy man

Great story.

Ant and Wealthy man

 Truly Superb and a Big Eye opener.....

One Sunday morning, a wealthy man sat in his balcony enjoying sunshine and his coffee when a little ant caught his eye which was going from one side to the other side of the balcony carrying a big leaf several times more than its size. The man watched it for more than an hour. He saw that the ant faced many impediments during its journey, paused, took a diversion and then continued towards destination.

At one point the tiny creature came across a crack in the floor. It paused for a little while, analyzed and then laid the huge leaf over the crack, walked over the leaf, picked the leaf on the other side then continued its journey.

The man was captivated by the cleverness of the ant, one of God’s tiniest creatures. The incident left the man in awe and forced him to contemplate over the miracle of Creation. It showed the greatness of the Creator. In front of his eyes there was this tiny creature of God, lacking in size yet equipped with a brain to analyze, contemplate, reason, explore, discover and overcome. Along with all these capabilities, the man also noticed that this tiny creature shared some human shortcomings.

The man saw about an hour later the creature had reached its destination – a tiny hole in the floor which was entrance to its underground dwelling. And it was at this point that the ant’s shortcoming that it shared with the man was revealed. How could the ant carry into the tiny hole the large leaf that it had managed to carefully bring to the destination? It simply couldn't!

So the tiny creature, after all the painstaking and hard work and exercising great skills, overcoming all the difficulties along the way, just left behind the large leaf and went home empty-handed.

The ant had not thought about the end before it began its challenging journey and in the end the large leaf was nothing more than a burden to it. The creature had no option, but to leave it behind to reach its destination. The man learned a great lesson that day.

Isn't that the truth about our lives?

We worry about our family, we worry about our job, we worry about how to earn more money, we worry about where we should live – 5 bedroom or 6 bedroom house, what kind of vehicle to buy – a Mercedes or BMW or a Porsche, what kind of dresses to wear, all sorts of things, only to abandon all these things when we reach our destination – The Grave.

 We don’t realize in our life’s journey that these are just burdens that we are carrying with utmost care and fear of losing them, only to find that at the end they are useless and we can’t take them with us.....
👆👆👆
Pls read

Superb Attitude*.

*Superb Attitude*. 

This story is about a person working with a freezer plant.
It was almost the day end. Everyone had packed up to check out.
A technical snag developed in the plant and he went to check.
By the time he finished it was late. The doors were sealed and the lights were off.
Trapped inside the ice plant for the night without air and light, an icy grave was almost sure for him.
Hours passed thus. Suddenly he found someone opening the door.
Was it a miracle?
The security guard entered there with a torch and helped him to come out.
On the way back the person asked the security guard, “How did you know that I was inside? Who informed you?” the guard said, “No one sir; this unit has about 50 people. But you are the only one who says Hello to me in the morning and Bye in the evening.
You had reported in morning. But did not go out. That made me suspicious.”
He never knew a small gesture of greeting someone would prove to be a lifesaver for him.
You never know - it may work a miracle in your life too.

*Education is not a degree or certificate that can be shown to others as proof. It is our attitude, actions, language and behaviour with others in real life*
😊😊👍👍

நம் பிரச்சனை என்னவென்றால்

நம் பிரச்சனை என்னவென்றால் நேரம் கிடைக்கவில்லை என்பதல்ல.. வழி தெரியவில்லை என்பதுதான்.. ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தி நான்குமணி நேரம் உள்ளது.. நம்முடைய வேலை வழ்க்கைக்கான வழியை கண்டறிவதுதான்...

சிரியுங்கள் உங்களோடு இந்த உலகமே சிரிக்கும்...
அழுங்கள் நீங்கள் மட்டும்தான் அழுது கொண்டிருப்பீர்கள்...!

ஒரு கணவர் மனைவியிடம் சொன்னார். ”பதினாறு ஆண்டுகளாக நாம் தம்பதியராக இருந்தும். ஒன்றில் கூட நாம் ஒத்துப் போக முடியவில்லை“ என்றார். மனைவி சொன்னார்: “ இது பதினேழாவது”

எவ்வளவு விரைவில் அந்த வேலையை நீங்கள் முடித்து விட்டீர்கள் என்பதை மக்கள் மறந்துவிடுவார்க்ள. ஆனால் எவ்வளவு நன்றாக அதை செய்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருப்பார்கள்.

பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் ஜீவசமாதி -கோவை--பெரியநாயக்கன் பாளையம் :

பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் ஜீவசமாதி -கோவை--பெரியநாயக்கன் பாளையம் : 

                
            >> ஆதி- பதினெட்டு  சித்தர்களின் ஒருவரான பிண்ணாக்கீசர் காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற தெய்வீகத் திருத் தலமான சென்னிமலையில்  ஜீவசமாதி கொண்டுள்ளார் . இவர்க்கு தன்னாசியப்பர் என்ற நாமமும் உள்ளது . பிண்ணாக்கீசர் --பிளவு பட்ட நாக்கினால் யோக சித்தி பெற்றவர் . 

       சர்ப்ப யோகமான இலம்பிகா யோகம்  :: 
                      >>  இந்த யோகியால் பின்பற்ற பட்டது.சிலருக்கு இயற்கையாக நாக்கு பிளவு பட்டதாக இருக்கும் ..சிலர் நாக்கின் அடி பக்கத்தை அறுத்து விட்டுகொள்வர். பிண்ணாகீசர்க்கு இயற்கையாக நாக்கு பிளவு பட்டதாக இருந்தது பிளவு பட்ட நாக்கில் ஒன்றை தொண்டையின் மேல் பகுதியில் நுழைத்து தலை உச்சி பகுதியில் கொண்டு வந்து வைத்து கொள்வர் ..இதனால் பசி தாகம் இல்லாத சித்து நிலை வரும் ..இது சித்தர்களின் உன்னதமான நிலை ஆகும்.. இவ்வகை யோகிகள் ஒரு நாக்கால் மற்றொரு நாக்கை இழுத்து விட்டு கொண்டு சகச நிலைக்கு திரும்புவார்கள் . நாக்கை நடு நாடியில் செலுத்த கபாலதேன் எனும் அமுது சுரக்கப்படும் ..அதனால் மெய்ஞானம் பிறக்கும்.

   

          >> சென்னிமலையில்  ஜீவசமாதி பெற்ற பிண்ணாக்கீசர் எனும் தன்னாசியப்பர் கோவை--பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த செல்வபுரத்திலும் ஜீவ ஐக்கியம் பெற்று உள்ளார் .கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆளரவமே இல்லாத இந்த மலைக்கு அருகே  உள்ள சிறிய குகையில் தன்னாசி அப்பர் எனும்  சித்தர் ஒருவர் வசித்து வந்தார். இவர் தினமும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்திற்கு கீழ் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அப்பகுதியில் கால்நடை மேய்ப்போர் இவரிடம் பழகி வந்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல் அடிக்கடி நிஷ்டையில் இருந்த இவரின் முகத்தில் இருந்த தேஜஸக் கண்டு பின்னாளில் வணங்க ஆரம்பித்தனர். அத்துடன் தமக்கு வந்த கஷ்டங்களை சொல்லி அதனை போக்கவும் வேண்டினர். அவர் அருளாசி வழங்கியதால் நோய்கள் பறந்தோடின. இதனால் சித்தரின் புகழ் மற்ற கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.

            >>   இந்நிலையில் ஒருநாள் குகைக்குள் சென்றவர் மீண்டும் வெளியில் வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் அவரின் வரவிற்காகக் காத்திருந்தனர். குகைக்குள் செல்லவும் பயம். ஆனால் இறுதிவரை அவர் வெளியில் வரவே இல்லை. பெரும்பாலும் வெகு அமைதியாக வனவிலங்குகள் சுற்றித் திரிந்த அந்த பகுதியில் அவரை வணங்கக் காத்திருந்தவர்கள் அவர் வராமல் போகவே வருத்தமடைந்தனர். அவர் தவம் செய்த ஆலமரத்திற்கு கீழ் சிலை வைத்து அவரை வணங்க ஆரம்பித்தனர். பிற்காலத்தில் பலர் தங்கள் நோய் தீர அங்கேயே தங்கி வணங்கினர். வனவிலங்குகள் அதிகமிருந்ததால் ஆண்டிற்கொரு முறை மட்டும் அங்கு விழா நடத்திக் கொண்டாடினர். தற்போது பல்வேறு பக்தர்களின் பணியினால் இன்று மிகப் பெரிய ஆலயமாகத் திகழும் இக்கோயிலில் இரு வேளை பூஜை நடக்கிறது.

          >>  பக்தர்களின் அருட்கொடையால் தற்போது கருவறை,விமானம், முன்மண்டபம் கட்டப்பட்டு சிறப்புறக் காட்சியளிக்கிறது. கருவறையில் தன்னாசி ஈசர் மிகப் பெரிய மீசையுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் தெற்குப் பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. வடக்குப் பகுதியில் பெருமாள் கோயிலும், அதற்குப் பின்னால் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன. மேற்குப் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது.
பதினெட்டு சித்தர்களுக்கும் கோவில் அமைத்து உள்ளனர் 

       >> மருத்துவ சிகிச்சைகளால் தீர்க்க முடியாத  புத்திசுவாதீனம் இல்லாதவர்கள்,பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் தங்கி மூலிகை சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தற்போது உள்ள அர்ச்சகர் இதனைச் செய்கிறார். இந்நோய்களால் பாதிக்கப்பட்ட பலர் இங்கே தங்கி தன்னாசி ஈசரின் அருளால் குணமாகிச் செல்வது காலங்காலமாக நிகழ்ந்து வரும் அற்புதம்.

அமைவிடம்: கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே திருமலைநாயக்கன்பாளையம் வழியாக 5 கி.மீ. தொலைவில் உள்ள செல்வபுரம் கிராமத்திற்கு வரவேண்டும். இதுவரை பேருந்து வசதி உள்ளது. இதற்கு பின் மீண்டும் மேற்கே 2 கி.மீ. தொலைவு தோட்டங்களினூடே செல்லும் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். தங்குவதற்கு வசதியுண்டு.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை.மாலை 4 மணிமுதல் 7 மணிவரை.

அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன்

அருகம்புல் சாறு காலை
உணவுக்கு முன்
குடிக்கவும். செவ்வாழை
பழம் மதிய உணவுக்கு பின்
சாப்பிடவும் . மாதுளம்பழச்
சாறு இரவு உணவுக்கு
பின் குடித்து வர
குழந்தை பேறு
கிடைக்கும் .
பூனைக்காலி விதை ,
சாதி பத்திரி ,
சமுத்திரப்பச்சை , சூடம்,
வசம்பு இவற்றை
குறிப்பிட்ட அளவு
எடுத்து உலர வைத்து,
சூரணம் செய்து காலை
மாலை இரு வேளை
பாலுடன் அருந்தி வர
ஆண்மை உண்டாகும் .
நீர் முள்ளி விதை 30
கிராம் , பாதாம்பருப்பு 10
கிராம் , கசகசா 10 கிராம்
ஒரு மணி நேரம் நீரில்
ஊறவைத்துக் காய்ச்சி
பாலுடன் சேர்த்துக்
குடித்து வர விந்து
உற்பத்தி அதிகரிக்கும் .
புளிச்ச
கீரைகளை, வெங்காயம்
சேர்த்து சமைத்து நெய்
சேர்த்துச் சாப்பிட்டு
வந்தால் விந்து உற்பத்தி
அதிகரிக்கும் .
இலவங்கப் பட்டை கஷாயம்
செய்து அருந்தி வந்தால்
தாதுவிருத்தி
உண்டாகும் .
அரச இலைக் கொழுந்தை
அரைத்து சிறிது சூடான
பாலில் கலந்து காலை
வெறும் வயிற்றில் ஓரிரு
மாதங்கள் குடித்து
வந்தால் விந்துக் குறை
நீங்கி விந்து
உற்பத்தியாகும்.
செம்பருத்தி பூ உலர்த்திய
சூரணத்துடன்
முருங்கைப்பூ உலர்த்திய
தூளும்
சேர்த்துச்சாப்பிட்டு
வந்தால் ஆண்மை
குறைபாடு நீங்கும் .
கானா வாழை சமூலம் ,
தூதுவளைப்பூ ,
முருங்கைப்பூ
ஆகியவற்றை ஒரு
குவளை தண்ணீரில்
போட்டுப் பாதியாகக்
காய்ச்சிப் பாலும்
கற்கண்டும் கலந்து 40
நாட்கள் சாப்பிட தாது
பலப்படும்.
முருங்கை , ஆப்பிள் ,
முந்திரி , பாதாம்பருப்பு ,
உலர்திராட்சை, பேரீட்சை,
தேன் , நெல்லி , மா , பலா ,
செவ்வாழை , கொத்தமல்லி ,
முளைதானியங்கள் ,
திராட்சை , அன்னாசி,
தேங்காய்பால் இவைகளை
சாறு எடுத்து
சாப்பிட்டுவர ஆண்மைக்
குறைவு நீங்கும்.
அத்திப்பழத்தை உலர்த்திப்
பொடி செய்து
சூரணமாக பாலில்
போட்டு சாப்பிட ஆண் ஆண்
மலடு அகலும் .
தொட்டால் சிணுங்கி
இலையை 15 கிராம்
எடுத்து இரவு பாலில்
கலந்து சாப்பிட ஆண்மை
பெருகும் .
அரசமரத்தின் பட்டை, வேர் ,
விதை இவற்றை பாலில்
கொதிக்கவைத்து ஆறிய
பின் அதில் தேன் கலந்து
தொடர்ந்து 1 மண்டலம்
அருந்தி வந்தால் தாது
விருத்தியடையும் .
அரச மரத்தின் இலை , பட்டை,
வேர் , விதை இவற்றை
இடித்துபொடியாக்கி
வைத்துக்கொண்டு
கஷாயம் செய்து அருந்தி
வந்தால் கருப்பைக்
கோளாறுகள் குறையும்.
முருங்கைப் பூ
பொடியை தேனில்
கலந்து ஒரு மண்டலம்
சாப்பிட்டு வந்தால்
ஆண்மை பெருகும் .
நிலபூசணிக்கிழங்குச்
சாறுபிழிந்து , பசும்பால்
விட்டு , சர்க்கரை காலை,
மாலை சாப்பிட்டுவர
ஆண்மைக் குறைவு
நீங்கும் .
இரவு படுக்கைக்குச்
செல்லும் முன் தினசரி
ஒரு மாதுளம் பழம்
சாப்பிட்டுவர ஆண்மைக்
குறைவு நீங்கும்.
செம்பருத்திப் பூவைச்
சுத்தம் செய்து நிழலில்
உலர்த்தி நன்றாக இடித்துத்
இரவில் ஒரு சிட்டிகைத்
எடுத்து வாயில்போட்டு
பசும்பாலைச்
சாப்பிட்டுவர ஆண்மைக்
குறைவு நீங்கும்.
அரை கைப்பிடியளவு
கொத்தமல்லி இலையை
வாயில் போட்டு மென்று
தின்று வந்தால் தாது
விருத்தி
உண்டாகும் .தொடர்ந்து 40
நாட்கள் சாப்பிட்டு வர
வேண்டும்.
தவசிக்கீரை , முருங்கைக்கீரை
சாப்பிட்டுவர ஆண்மைக்
குறைவு நீங்கும்.
மாதுளம்பழம் தினமும்
இரவு உணவுக்கு பின்
சாப்பிட விந்து
விருத்தியாகும் .
வால் மிளகு,
வாதுமைப்பருப்பு ,
கற்கண்டு , கசகசா இவற்றை
சம அளவு எடுத்து
அரைத்து நெய்யையும்
சேர்த்து அடுப்பில்
வைத்து பதமாக
வேகவைத்து தினமும்
இரு வேளை சாப்பிட்டு
வர விந்து வலிமை
பெறும்.
தேங்காய்ப்பால் எடுத்து
அரை டம்ளர் தினமும்
காலையில் வெறும்
வயிற்றில்அருந்தி வர
விந்து விருத்தியாகும் .
முறைப்படி,
யோகாசனங்களை
மேற்கொள்ளுவதன்
மூலமும் ,
குறைபாடுகளை சரி
செய்ய முடியும் என்பது
கண்டறியப்பட்டுள்ளது .
யோகாசனங்களை
மேற்கொண்டால்
முழுப்பலனை பெறலாம் .
புரதம் அதிகமுள்ள
உணவுகளை உட்கொள்ள
வேண்டும் ( மீன் ,
வெண்மாமிசம்,
முட்டைகள் ) . வெங்காய
சாற்றுடன் , தேன் / நெய்,
நெல்லிக்காய் பொடி ,
பால் , வெண்ணை
இவைகளை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டிய
யோகாசனங்கள்
( முறையாக பயின்ற பின் )
1. சூர்ய நமஸ்காரம்
2. ஹாலாசனம்
3. சிரசானம்
4. பத்த கோனாசனம்
5. கூர்மாசனம்
6. அர்த்த மத்ஸ்யேந்திர
ஆசனம்
7. பரியாங்காசனம்
8. பஸ்சிமோத்ஸானம்
9. மூலபந்தாசனம்
10. சர்வாங்காசனம்
11. புஜங்காசனம்
12. தநுராசனம்
13. உபவிஷ்ட கோனாசனம்
14. கந்தாசனம்
15. சவாசனம் .
கூடிய விரைவில் ,
குறைகள் நீங்கப் பெற்று -
மழலை இன்பம் உங்களுக்கு
கிடைக்க , இறைவன்