Monday, July 27, 2015

சிரிப்பு யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சிரிப்பு யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
www.happy4all.org

சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்வதால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும். சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. 

சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுவதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள். சிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதிக அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. 

இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும். சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்க முடிகின்றது.

No comments:

Post a Comment