Friday, July 31, 2015

பூசைக்குரிய புனிதமான மலர்கள்



பூசைக்குரிய புனிதமான மலர்கள்

இறைவன் பூமியின் மீது படைத்துள்ள அத்தனை பொருட்களும் அவனுக்கு உரியவை. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிது.
ஆகையால் கிடைக்கும் மலர்களையும், அதன் தன்மையையும், பயனையும் உணர்ந்து மனநிறைவோடு மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
செந்தாமரை மலர் – செல்வம், தொழில் மேன்மை ஆத்ம பலம் தரும். வெண்தாமரை மலர், வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக் குறையைப் போக்கும். மனதில் தைரியம் சேர்க்கும்.
அரளிமலர் – பெண்களுக்கு மாங்கல்ய பிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாமல் தடுக்கும்.
சிவப்பு அரளி, செம்பருத்தி – பெண்களுக்கு, மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமையை உருவாக்கும்.
நீலசங்கு புஷ்பம், நீலாம்பரம் ஆகியவை அவப்பெயரைப் போக்கும். தரித்திரம் நீக்கும். மனஅமைதி தரும். சனிபகவான் அருளைப் பெறவும் வழிவகுக்கும்.
மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன், மனைவிக்குள் அன்பை பெருக்கும்.
பாரிஜாதம் – அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக் கூடாது.
விநாயகர் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.
முருகப் பெருமானுக்கு முல்லை, சம்பங்கி, ரோஜா, செங்காந்தள் போன்றவை உகந்தவை. திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, துளசி, சாமந்தி, ஆகியவை உகந்தவையாகும்.
லட்சுமிக்குத் தாழம்பூ மிகவும் சிறந்தது.
பொதுவாக பூவிற்கும், பொட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மலர்கள் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே கிடையாது.
பூசைக்குரிய மலர்களைக் கொண்டு வழிபட்டால் பொருளும் பெருகும். புகழும் கூடும்.

No comments:

Post a Comment