Tuesday, April 30, 2013

வியர்வை நாள்' வாழ்த்துக்கள்



வியர்வை நாள்' வாழ்த்துக்கள்




1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது - என்பதுகூட மேதினம் கொண்டாடும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.




========================================================================


மே 1
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------\





வானம் 
தனது கிரீடத்தை 
அவனுக்குச் சூட்டுகிறது 

மலை 
அவனைப் பணிந்து வணங்குகிறது

கடல்
அவன் பாதங்களை முத்தமிடுகிறது

வியர்வையால் எழுதும்போதுதான்
அழகு பெறுகிறது
நம் ஒவ்வொரு பெயரும்

அனைவருக்கும் 'வியர்வை நாள்' வாழ்த்துக்கள்
-அன்புடன் பழநிபாரதி..


மே தின வாழ்த்துக்கள்.

Yours Happily
Star Anand
Corporate Trainer

Friday, April 26, 2013

உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!''

உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' 


அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.


உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது


எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.


About - ராக்ஃபெல்லர் 


ராக்ஃபெல்லர் – II
தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர். நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை.
ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார்.
கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872ம் வருடம் அமெரிக்க முழுவதும் ஆயில் வியபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ராக்ஃபெல்லரின் '‘ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனிதான்”. போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார்.
“கோடிக் கோடியாகப் பணம் குவித்து விட்டீர்கள் இப்போது சந்தோஷம்தானா?” என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, “சந்தோசம் என்பது பணத்தில் இல்லை; வெற்றியில்தான் இருக்கிறது!” என்றார்.

Yours Happily
Rtn.Jc.Star Anand
Self motivation Trainer & Business Consultant 

Tuesday, April 23, 2013

Zen says If you decide to become spectator then you have no problem.


Zen says If you decide to become spectator then you have no problem.



சிலர் அந்த மைதானத்தில் இருந்தார்கள் , என்னிடம் ஒரு மட்டையை தந்து எதிராளி வீசும் பந்தை தடுக்க சொன்னார்கள் , என்னை மீறி பந்து பின் இருந்த குச்சிகளில் பட்டுவிட்டது , மைதானத்தை விட்டு வெளியேற சொன்னார்கள் , ஆட்டம் புரிந்த பொழுது நான் வெளியில் ,
வாழ்க்கையும் இது போலவே அடிக்க வேண்டும் , இல்லையேல் தடுக்க வேண்டும் எதற்கும் அவகாசமில்லை இங்கு , யோசித்தால் வெளியேற்ற படுவீர்.


Yours 

Star Anand
Self Motivation Coach
Coimbatore. 

கஷ்டபடுவது எல்லாம் பக்குவப்படதான்..


  • கஷ்டபடுவது எல்லாம் பக்குவப்படதான்..



  • ஆம்லெட்டு போடணும்னா முட்டைய உடைச்சுதான் ஆகணும்..

  • சாம்பார் வைக்க காயை நறுக்கிதான் ஆகணும்...

  • பிரியாணி செய்ய கோழிய பலி கொடுத்துதான் ...

  • பஜ்ஜி போட எண்ணையில சுட்டுத்தான் ஆகணும்..

  • இப்படி பக்குவமா சமையல் செய்ய வெந்து,கொதிச்சி,வெட்டி..



               ...கஷ்டப்பட்டுதான் கடைசியா வாய்க்கு வருது.



வாழ்கையும் இப்படிதான்..நல்லா கஷ்டபட்டா பக்குவமா வெளில வர முடியும். எனவே கஷ்டபடுவது எல்லாம் பக்குவப்படதான்..


Yours Happily
Star Anand


இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை! அசுரத்தனமான நம்பிக்கை


இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை! அசுரத்தனமான நம்பிக்கை

நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிக்

வாழ்க்கை வாழ்வதற்கே….வெற்றி நிச்சயம் எனக்கே….பெற்றேனே சுவாசப் புத்துணர்ச்சி அப்படின்னு ஒரு கோல்கேட் விளம்பரப் படத்துல வருகிற? ஒரு இளைஞன் பாடுவதை நீங்கள் பார்த்து/கேட்டு இருக்கலாம்.அதே வரிகளை நீங்களோ, நானோ பாடினால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை என்பதே உண்மை.ஆனால் அதே பாடலை இவர் பாடினால் உலகம் பேச்சற்று போய்விடுகிறது.


அந்த இளைஞருடைய பெயர் நிக். இருபத்தெட்டு வயது. நடக்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார், வாசிக்கிறார், கால்ஃப் விளையாடுகிறார். கீழே விழுகிறார், மீண்டும் அவரே சிரமப்பட்டு எழுந்து நிற்கிறார்
கொஞ்சம் பொறுங்க சார். 28 வயது ஆள் இதையெல்லாம் செய்யறது ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் மகா அதிசயம் மாதிரி சொல்ல வந்துட்டீங்களே!
அதிசயம்தான் சார். இவ்வளவையும் சர்வசாதாரணமாகச் செய்கிற நிக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை!
1982-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நிக் பிறந்தபோதே அவருக்குக் கைகள், கால்கள் இல்லை.
நிக்கோலஸ் சேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமாக நிக் வோய்ச்சிச் ( பிறப்பு: 4 டிசம்பர் 1982),இவர் பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயால் (இரு கைகளும், இரு கால்களும் இல்லாதவர்) பாதிக்கப்பட்டவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பல இன்னல்களுக்கு ஆளான இவர், தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது அகவையில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார். 2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. தற்போதுஐக்கிய அமெரிக்காவில்கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். 2012-ம் ஆண்டுபிப்ரவரி 12-ம் நாள், கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வெறும் உடம்பு மட்டும்தான். இதற்கு என்ன மருத்துவக் காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
காரணம் கிடக்கட்டும்.
இந்தக் குழந்தையை இப்போது என்ன செய்வது?நிக்கின் பெற்றோர் துடித்துப்போனார்கள். உடம்பில் ஒரு சின்ன ஊனம் உள்ளவர்கள்கூட இயல்பாக வாழமுடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம், இந்தப் பிள்ளை கையும் காலும் இல்லாமல் எப்படி வளரப்போகிறது?

ஆனால் பெற்றோர் அவனை நல்லவிதமாக வளர்க்க முடிவு செய்தார்கள். ஊனமுற்றோர் பள்ளியில் சேர்க்காமல், வழக்கமான பள்ளியில் சேர்த்தார்கள். அப்படி சேர்ப்பதற்கே நிறைய போராட வேண்டியதாயிருந்தது. ஆனால் பள்ளியில் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளானான் சிறுவன் நிக். இந்த கேலியைப் பார்த்த சிறுவன் நிக் தற்கொலை செய்ய முடிவு செய்தான்.
நல்லவேளையாக, நிக் தற்கொலை செய்துகொள்ளவில்லை. எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ட எங்க அம்மா, அப்பாவை நினைச்சுப் பார்த்தேன். சாகறதுக்கு மனசு வரலை!அதன்பிறகு, நிக் நிறையப் படிக்க ஆரம்பித்தார். அவரைப்போலவே உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டவர்கள், அதைத் தைரியமாக எதிர்த்து நின்று ஜெயித்தவர்களைப் பற்றியெல்லாம் வசித்து, கேட்டுத் தெரிந்துகொண்டார்.
அப்போதும், அவருக்கு ஒரு சந்தேகம் மட்டும் தீரவில்லை. என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் நான் ஏன் வாழணும்?’
விரைவில், அந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது. நிக் தன்னுடைய ஊனத்தைப்பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதைக் கவனித்த சிலர், “நீங்க இந்த விஷயத்தை மேடையேறிப் பேசணும்என்றார்கள். அது நல்ல யோசனையாகப் பட, இப்போது நிக் மேடைப் பேச்சாளராகிவிட்டார். மிகப்பிரபல்யமான பேச்சாளராகவும் உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவருடன் உரையாற்றியுள்ளார். அவரது வாழ்க்கை புத்தகமாகவும் வந்திருக்கிறது. லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்என்ற தலைப்பில் 2010-ம் ஆண்டு வெளியானது.. வோய்சிச் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார்.பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில் செய்யும் செயல்களை லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார். இதனுடைய இரண்டாம் பாகம், பிரிஸ்பேனில் உள்ள ஒரு தேவாலயத்தில் படமானது; இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும். இளைஞர்களுக்காகநோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ் (No Arms, No Legs, No Worries: Youth Version) என்ற தொகுப்பினையும் வெளியிட்டார்.
மார்ச் 2008, பாப் கம்மிங்கிசுடன், 20/20 என்ற அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணலில் பங்குபெற்றார். இவர் தி பட்டர்பிளை சர்க்கஸ் என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார், அது 2009-ம் ஆண்டு டோர்போஸ்ட் திரைப்பட திட்டத்திலும், மெத்தேட் பெஸ்ட் திரைப்பட விழாவிலும், தி பீல் குட் பிலிம் விழாவிலும் (2010) சிறந்த திரைப்படத்திற்கான பரிசு பெற்றது. சம்திங்க் மோர், என்னும் காணொளியை யூடியூபில் வெளியிட்டார்.


ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனமில்லீங்கோ….உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனமில்லீங்கோஎன்னும் பொற்காலம் திரைப்படத்தில் வரும் பாடற்காட்சியின் வரிகளுக்கு நிகழ்கால உதாரணமாய், எல்லோரின் விழிகளையும் ஆச்சரியத்தில்/வியப்பில் ஆழ்த்தி அவர் செய்யும் பல செயல்கள் காண்போரை சமயங்களில் கண்ணீர் விடவும் செய்துவிடுகிறது! 
வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பெயர்,பணம்,புகழ் இப்படி எதுவும் தேவையில்லை.ஆனால் ஒன்று மட்டும் மிக மிக அவசியம், அதுதான் தன்னம்பிக்கை.அது மட்டும் நிரம்ப பெற்றுவிட்டால் எதுவுமே, அதாங்க நிக் போல கை, கால்கள் இல்லாமலேகூட உலகை வலம் வர முடியும்.வெறுமையாக அல்ல, மிகவும் பெருமையாக
Yours Happily
STAR ANAND
Self motivation Trainer 

Coimbatore