Showing posts with label leadership skills training. Show all posts
Showing posts with label leadership skills training. Show all posts

Monday, June 6, 2016

மனதையும் நெகிழச்செய்யும்...

Please   Read....

சற்று பெரிது.   சுருக்க முடியவில்லை.   படியுங்கள். அருமை மட்டுமல்ல .  மனதையும் நெகிழச்செய்யும்......

ஆசிரியை....கல்லூரி.மாணவர்....  உரையாடல்..
ஆசிரியை   ,  ஒரு மாணவனைக்   கூப்பிட்டு    BOARD  ல்   
அவனுக்குப் பிடித்த  3O   பேர்களின்     பெயர் எழுதச்சொன்னார்.

அவனும்   எழுதினான்.    குடும்பம், அப்பா,  அம்மா,  மகன்,மகள்,   மனைவி, நண்பர்கள்,   தோழர்கள்,  
உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள்,  போன்ற பெயர்களை.
அதில்  மூன்று   பேர்களை    எடுத்துவிடச் சொன்னார். 
அவனும் எடுத்துவிட்டான்பக்கத்து வீட்டுக்காரர்கள் பெயரை.......
மீண்டும்  சில எடுக்கச் சொன்னார் .  அவனும் தோழர்கள் பெயரை எடுத்து விட்டான்....இப்படி ஆசிரியர் சொல்ல சொல்ல  ,  எல்லா
பெயர்களும் எடுத்த பின் மீதம் இருந்தது அப்பா,  அம்மா,  மகன், மகள், மனைவி,    தான்...
அதிலும் இரு பெயர்களை எடுக்கச் சொன்னார்.   
மிகவும் வேதனையுடன் தன் அப்பா,  அம்மா  பெயர்களை எடுத்தான்.    இப்போ இருப்பது BOARD  ல்    மகனும், மகளும், மனைவியும் தான்..  
மீண்டும் ஆசிரியர் இதில்   ஒரு பெயரை எடுக்கச் சொன்னார்....
கல்லூரி வகுப்பறையே    TENSION   ஆகி விட்டது.   அவன்
என்ன செய்யப்போகிறான் என்று.  ஏன்    என்றால்    இருப்பதோ
மகன்,  மகள்    மற்றும்    மனைவிதான்......
மாணவனும் மிகவும் வருத்தப்பட்டு,  மனம் கலங்கி  
தன்   மகன்,  மகள்,    பெயரை எடுத்து விட்டான்...

ஆசிரியை ஆடிப்போய் விட்டாள்....என்ன செய்கிறாய் நீ.. என்று...
அப்பா,  அம்மா  , பரவாயில்லை  வயதானவர்கள்.  மகனோ,  மகளோ,    உன்னால் பிறந்தவர்கள்    .   ..  அதையும் எடுத்துவிட்டு மனைவி பெயர் மட்டும்  வைத்திருக்கிறாயே  ஏன்.....என்று    மனம் கலங்கி கேட்டாள்........அந்த மாணவன் சொன்னான்:::::::

அப்பா,  அம்மா    ,  சரி பெரியவர்கள்.      என் மகனோ ,வளர்ந்து, 
திருமணம் செய்து கொண்டு மனைவியுடனும்,  குழந்தைகளுடனும், பிறகு தன்  தொழிலைப்பார்த்துக் கொண்டும்
இருந்து விடுவான்.........அதனால் அதுவும் சரி...மகளும்  திருமணம் ஆன பின்   வேறு  ஒருவருக்கு  சொந்தம்.,.ஆனால்  
என் மனைவி பெயர் எடுக்காத காரணம்.......

எனக்கு எல்லாமே அவள்தான்.   என் சகல வாழ்விலும்    பங்கு கொள்கிறாள்....உறுதுணையாகவும்  இருக்கிறாள்...நான் ஒருவனே
தெய்வம்  என்று  எண்ணுகிறாள்....அவள் வாழ்க்கையே
எனக்காகத்தானே..  ...................என்றான்....

மொத்த வகுப்பறையும் எழுந்து நின்று      கை   தட்டியது...

நண்பர்களே இது   ........... கணவர்களுக்கும்,   ..........
மனைவிகளுக்கும்......... பொருந்தும்.......

நான் இப்பதிவினைப்   போட்டு     பரிகாரம் தேடிக்கொண்டேன்.

எனக்கே புல்லரித்தது........

Wednesday, March 9, 2016

நிலவேம்புக் குடிநீர் பொடி

நிலவேம்பு குடிநீர் கசாயம் குடித்தால் 6 மாதங்களுக்கு வீட்டுப் பக்கம் காய்ச்சல் எட்டிப் பார்க்காதுனு தினமணியில் தொடர்ந்து எழுதினோம். அதை அரசு மருத்துவமனைகளிலும் கசாயமாக தருகிறார்கள். அதற்கு தினமணியின் பங்கும் முக்கியம்.
இந்தக் கசாயம் காய்ச்சலுக்கு எமன். தலை தலையா அடிச்சுகிட்டேனே ... என கிராமத்தில் சொல்வார்கள். அப்படித்தான் தினமணியில் நாங்களும் சொன்னோம். இப்பவும் சித்த வைத்தியர்களும் சொல்கிறார்கள். தயவுசெய்து நிலவேம்பு கசாயம் போட்டுக் குடியுங்கள். வீட்டில் எல்லோரும். மூன்று நாள். 6 மாசம் நிச்சயம் காப்பாற்றும். எந்தக் காய்ச்சலும் எட்டிப் பார்க்காது. சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு ஸ்பூன் பவுடருக்கு ஒரு டம்ளர் தண்ணீர். பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, வடிகட்டி, குடிக்கிற பதத்துக்கு ஆற வைத்து குடியுங்கள். கசக்கும். கசப்பு தாங்க முடியாதென்றால் பனங்கற்கண்டு, கருப்பட்டி ஏதாவது கொஞ்சம் வாயில் போட்டுக்கலாம்.
இதெல்லாம் விவேக்கிற்கு தெரியாமலா போயிருக்கும் என விதண்டாவாதம் பேச வேண்டாம். அவசரத்தில் மறந்து இருக்கலாம் பாவம் பெற்ற மகனை இழந்து தவிக்கிறார். எவ்வளவு பணம் இருந்தும் கண் எதிரே இழந்துவிட்டாரே.... படத்தைப் பாருங்கள். இப்படியொரு மகனின் இழப்பை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?
நிலவேம்பு சாவை தடுக்கும்னு சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான காய்ச்சலைத் தடுக்கும். வெறும் ரூ.100 தான் ஒரு பாக்கெட். இந்த விஷயத்தில் தயவுசெய்து இங்கிலீஷ் டாக்டர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அவர்களைப் பொருத்த வரை நாம் எல்லாம் பணம் காய்க்கும் மரம். மருந்து மாத்திரைகள் வாங்க நாம் செலவழித்தால்தான் அவர்களுக்கு பொழப்பு.
அடுத்த முதல் வேலை நிலவேம்புக் குடிநீர் பொடி வாங்குவதாக இருக்கட்டும்

Friday, August 21, 2015

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

வியாபார காட்சிகள், அரங்குகள், கூட்டங்கள் மற்றும் பிற பொருட்காட்சிகளில் வெளிக்காட்டுவது உங்களுக்கு தனிப்பட்ட விற்பனை வாய்ப்புகளை அளிக்கும், மேலும் இவற்றால் புதிய முதலீடுகள், விநியோகத்தர்கள் ஆகியவற்றை உருவாக்கவும், உங்களுக்கான போட்டியை அறிந்து கொள்ளவும், நெட்வொர்க்கிங் செய்வது போன்றவற்றால் விளம்பரம் பெற முடியும். சுருக்கமாக சொல்வதானால், பல வாரங்கள் அல்லது மாதங்கள் வீட்டிலிருந்து நீங்கள் செய்யக்கூடியவைகளை ஒரே வியாபாரக் காட்சியில் நீங்கள் செய்து முடிக்க முடியும். மேலும் அது உங்கள் பணத்தையும் சேமிக்கும் -- Center for Exhibit Industry Research –இன் ஆய்வின்படி நேரடியாக களச் செயற்பாட்டில் முதலீடு பெற செலவாவதை விட 62% குறைவாக வியாபாரக் காட்சிகளில் செலவாகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் பெறுவதற்கு நீங்கள் கவனமாக திட்டமிட வேண்டும். அதாவது சரியான வியாபாரக் காட்சியைத் தேர்ந்தெடுப்பது, தெளிவான இலக்குகளை அமைப்பது, செயல்திறமிக்க காட்சியை உருவாக்குவது மற்றும் உங்கள் இருப்பை விளம்பரப்படுத்துவது போன்றவையாகும். இவை அனைத்துமே நீங்கள் வியாபாரக் காட்சிக்கு செல்வதற்கு முன்பே செய்யப்பட வேண்டும். உங்கள் வியாபாரக் காட்சியிலிருந்து அதிகமான பயன்களைப் பெறுவது பற்றி அறிய பின்வரும் படங்களை கிளிக் செய்யவும்.
ஆயிரக்கணக்கான வியாபாரக் காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்படுகின்றன, அதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் முதலீடு, நேரம் மற்றும் பணத்துக்கு சிறந்தப் பயனைப் பெறுதல் மிகவும் கடினமான ஒன்றாகும்.
உங்கள் உற்பத்திப் பொருளுக்கு அல்லது சேவைக்கு பொருந்தும் வியாபாரக் காட்சிகளைத் தெரிவு செய்ய தொடங்குங்கள். இணையத்தளத்தில், பின்வருவதில் ஒன்றைப் போன்ற வியாபாரக் காட்சி தேடல் தளங்களை முயற்சிக்கவும்:
வியாபாரக் காட்சிகளைப் பற்றி அறிவதற்கான மற்றொரு வழி, உங்களுடைய தொழிற்துறையின் வியாபாரச் சங்களாகும், ஏனெனில் பெரும்பாலான காட்சிகள், கூட்டங்கள் தொழிற்துறை குழுக்களால்தான் நடாத்தப்படுகின்றன.
சரியானதைத் தேர்ந்தெடுக்க இதோ மேலும் சில தகவல் குறிப்புகள்:

எண்களின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காதீர்கள்

உங்கள் உற்பத்தி அல்லது வாடிக்கையாளர்களைச் சேர்க்காத வரை, பெரிய வியாபாரக் க்காட்சிகளுக்கு வரும் மக்கள் உங்கள் வியாபாரத்திற்கு நேர விரயமாக இருக்க வாய்ப்புண்டு. கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களை உன்னிப்பாக நோக்கி, அங்கு வரும் நபர்கள் உங்கள் வாடிக்கையாளர்களாக இருக்க முடியுமா என்பதை மதிப்பிடுங்கள். காட்சி முகாமையாளர் உங்களுக்கு இந்த தரவுகளைத் தரக்கூடும்.

உங்கள் வாடிக்கையாளர்களை உதவும்படி கோருங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டு அவர்கள் எந்த வியாபாரக் காட்சிகளில் பங்கேற்கிறார்கள் என்று அறியுங்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வியாபாரக் க்காட்சிகளில் பிற வாய்ப்புடைய வாடிக்கையாளர்களும் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. உங்கள் போட்டியாளர்களிடமும் பேசி அவர்களுக்கு எந்தெந்த வியாபாரக் காட்சிகள் அதிக பயன் தந்தது என்று அறியவும்.

அதிக நேரத்துக்கு முன்பே இவற்றை செய்து முடியுங்கள்

ஒரு வியாபாரக் காட்சியை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி, நேரடியாக சென்று பார்ப்பதுதான். நீங்கள் பதிவு செய்வதற்கு முன்பு வியாபாரக் காட்சிக்கு ஒரு பார்வையாளாராக செல்லுங்கள். வியாபாரக் காட்சி செயல்திறமிக்கதாகவும் சிறப்பாகவும் இருக்கிறதா? வியாபாரக் காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் வாடிக்கையாளர்களாகும் வாய்ப்புள்ளவர்களா? பிற வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்கள் யார், மேலும் உங்கள் உற்பத்திகள்/சேவை இதில் எங்கு பொருந்தும்? அங்குள்ள மக்களை அணுகி நுணுக்கமாக கண்காணியுங்கள்.

கவனமாக மதிப்பிடுங்கள்

வியாபாரக் காட்சியின் சாத்தியங்களைப் பட்டியலிட்ட பின்னர், உங்கள் நோக்கங்களுக்கு இந்த வியாபாரக் காட்சி சரியானதா என்பதைத் தீர்மானிக்க பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:
  • அனைத்து வகையான வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை கவரும் அளவுக்கு இது பெரிதான வியாபாரக் காட்சியா – ஆனால் அதே நேரம் உங்கள் தொழிலின் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய அளவுக்கு பெரிதாக இல்லையா?
  • உங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புவியியல் ரீதியாக சரியான இடத்தில்தான் அமைந்துள்ளதா – அவர்கள் உள்ளூரா, வட்டாரம் சார்ந்தவர்களா, தேசிய அளவில் உள்ளவர்களா, அல்லது சர்வதேச அளவில் உள்ளவர்களா?
  • புதிய வியாபாரத்தை ஈர்க்கக்கூடிய மற்றும் புதிய முதலீடுகளைப் பின் தொடரக் கூடிய காலத்தில்தான் அது திட்டமிடப்பட்டுள்ளதா?
  • வியாபாரக் காட்சியின் விளம்பரதாரர்கள் நம்பகமானவர்களா மற்றும் நிர்வாகத்துக்கு வெற்றிகரமான முன்னைய நிகழ்வுகள் உள்ளனவா?
கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீர்கள்

சில பிரபலமான வியாபாரக் காட்சிகள் விரைவில் பூர்த்தியாகிவிடும் நீண்ட நேரம் காத்திருந்தால், காத்திருப்பு பட்டியலில் நீங்கள் இடம்பெறும் வாய்ப்பு அதிகம். மேலும், விரைவில் வியாபாரக் காட்சிக்காகப் பதிவு செய்தால், உங்கள் அரங்கில் நல்ல சிறந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பும் அதிகம்.
தெளிவான இலக்குகளை அமைத்தல்

நீங்கள் முதலீடு செய்யும் நேரம், பணம் மற்றும் திறனுக்கான அதிகமான பயனைப் பெற, அங்கு இருப்பதற்கு உங்களுக்கான நோக்கம் மற்றும் அளவிடக்கூடிய இலக்குகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதே ஆகும். வியாபாரக் காட்சிக்கு முன்னர், அது நிகழும்போது மற்றும் அதற்கு பின்பு நீங்கள் செய்யும் அனைத்தும் இந்த இலக்குகளை அடைவதற்கு எவ்வகையில் பயன்படும் என்ற அடிப்படையில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

வியாபாரக் காட்சிககு சாத்தியமான இலக்குகள்

வியாபாரங்கள் வியாபாரக் காட்சியில் பங்கேற்பதற்கான சில காரணங்கள் பற்றி இங்கு விவரிக்கப்படுகின்றன. இவற்றில் பலவற்றை உங்கள் இலக்குகள் உள்ளடக்கியிருக்கலாம், அல்லது உங்கள் சிறுவியாபாரத்திற்கு முக்கியமான பிறவற்றைக் கொண்டிருக்கலாம்:
  • விற்பனை கட்டளைகளைப் பதியுங்கள்
  • போட்டி பற்றி ஆராயுங்கள்
  • இட மாதிரிகளைக் கண்டறியுங்கள்
  • எதிர்கால விற்பனைக்கான முன்னேற்பாடுகளை உருவாக்குங்கள்
  • சரியான நபர்களின் பெயர்களுடன் மெயிலிங் லிஸ்ட்டை உருவாக்குங்கள்
  • சிறந்த அல்லது மலிவான விநியோகத்தர்களைக் கண்டறியுங்கள்
  • நடைமுறை வாடிக்கையாளர்களுடன் உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள்
  • ஊடகச் செய்திகளைப் பெறுங்கள்
  • புதிய உற்பத்திப் பொருளை நோக்கிய ஆர்வத்தை உருவாக்குங்கள்
  • தொழிற்துறையில் உங்கள் நிறுவனத்தைப் பிரபல்லியப்படுத்துங்கள்
உங்கள் அரங்கின் பணியாளர்கள் போதுமான அளவுக்கும் நேர்த்தியானவர்களாகவும் இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்

இதை தனியாக செய்ய முடியாது. உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், நீங்கள் அரங்கை விட்டு வெளியேறும்போது, இடைவேளைக்கு வெளியே செல்லும்போது, அல்லது போட்டியை அவதானிக்க வெளியே செல்லும்போது குறைந்தது ஒரு நபராவது உங்கள் "இடத்தை" நிரப்ப இருக்க வேண்டும். ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் ஒரு நபரை வைத்திருப்பது சிறந்த வழியாகும். சிறந்த தோற்றத்தில், சிறந்த பயிற்சியுடன், சிநேகிதபூர்வமாகவும் அறிவுடனும் உங்கள் பணியாளர்கள் இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை அடைவதற்கான அவர்களின் பங்கை அறிந்திருக்க வேண்டும். சம்பளம் பெறும் பணியாளர்களாக உங்களிடம் பணியாளர்கள் இல்லையென்றால், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பகுதி நேர ஊழியர்கள் போன்றோரை நாடலாம்.

உங்கள் செய்தியைத் துல்லியமாக வெளிப்படுத்துங்கள்

இரண்டு அல்லது மூன்று முக்கிய யோசனைகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் நீங்களும் உங்கள் பணியாளர்களும் அதிகமான பயிற்சிகளைக் கொண்டிருங்கள், இதனால் "செய்தியில் குறிப்பாக இருக்கலாம்". கிராஃபிக்ஸ், காட்சிக்கு முன்பான விளம்பரம், மற்றும் விபரக்கொத்து விளம்பரம் போன்றவற்றை உங்கள் செய்திச் சுருக்கத்தில் திட்டமிடுங்கள்.

பாதீட்டைத் தயாரியுங்கள்

எந்த வியாபாரக் காட்சியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் மற்றும் உங்கள் இலக்கு ஆகியவற்றைத் தீர்மானித்த பின்னர் ஒரு பாதீட்டைத் தயாரியுங்கள். ஒரு பாதீடு இல்லையெனில் செலவுகள் எளிதாக கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடும் (உதாரணமாக, கடைசி நேர நெருக்கடியான கொள்வனவு செய்யும் கூட்டம்). மேலும் இவை உங்களுடைய சிறந்த திட்டங்களை அழிக்கக் கூடும். உங்களுடைய மொத்த பாதீட்டில் நான்கிலொரு பங்கு இடத்துக்கான செலவில் உள்ளபடி திட்டமிடுவது சிறந்ததாகும். எனவே இடத்துக்கான வாடகையாக நீங்கள் என்ன செலவழிக்கிறீர்கள் என்று தெரியும்போது, அதனை நான்கால் பெருக்கி உங்கள் செலவுகளைப் பற்றி தூர சிந்தனையைப் பெறுங்கள். இதில் உங்கள் தனிப்பட்ட செலவுகளைச் சேர்க்காதீர்கள்.
உங்கள் அரங்கு எங்கு அமைந்துள்ளது என்பதும் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதும் உங்கள் வியாபாரக் காட்சியின் வெற்றியைப் பாதிக்கும். பின்வரும் தகவல் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

அதிக மக்கள் வரும் அமைவிடத்தைக் கண்டறியுங்கள்

உங்களுக்கான இடத்தைத் தரிவு செய்யும் முன்னர் நடைபாதை வழியை கவனிக்கத் தவறாதீர்கள். பொதுவான ஒரு வியாபாரக் காட்சி தளத்தில் சில இடங்களில் அதிக அளவிலான நபர்கள் வருவார்கள். நுழைவாயில்கள். உணவகங்கள், ஓய்வகங்கள், அல்லது பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் உள்ள இடங்களில் அரங்கினை அமைக்க முயற்சியுங்கள். வழிமுடியும் இடங்கள், சரக்கு ஏற்றி இறக்குமிடம், முறையற்ற வழிகள், அல்லது பிற குறைவாக மக்கள் வரக்கூடிய இடங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு அரங்கினைப் பகிர்ந்து கொள்வதை கருத்தில் கொள்ளுங்கள்

புதிதாக வியாபாரக் காட்சியில் பங்கேற்போர் அதிகம் விரும்பாத இடங்களைத்தான் நாடுவார்கள். இதனைத் தவிர்க்க நல்லதொரு வழி இடத்தில் உள்ள ஒரு அரங்கினை தொடர்புடைய ஒரு தொழிலில் இயங்கும் சக நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுவதாகும். உங்கள் விற்பனை பிரதிநிதிகள், அல்லது உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைப் போல விரிவாக நிலைப்பெற்ற வியாபாரக் காட்சியாளர் ஆகியோரிடம் கதைக்க முயற்சியுங்கள்.

உணர்வுப்பூர்வமாக ஊக்கப்படுத்துங்கள்

உங்கள் அரங்குக்கு வரும் மக்கள் உங்கள் உற்பத்திப் பொருளை அல்லது சேவையை அனுபவித்து பார்க்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் தொட்டு, கண்டு, உணர்ந்து, கேட்டு அல்லது சுவைத்துப் பார்க்க அனுமதியுங்கள். அலங்காரமான தலையணிகளை விற்கிறீர்களா? அதனை முறையான அமைப்பில் காட்சிப்படுத்துங்கள், மேலும் வாங்குபவர்கள் தொட்டு பார்ப்பதற்கான மாதிரிகளையும் வைத்திருங்கள். ஒரு புது மென்பொருள் தொகுப்பை உருவாக்கியிருக்கிறீர்களா? அந்த மென்பொருளை சோதித்து பார்க்க பல கணனிகளை வைத்திருங்கள்.

எளிமையாக வைத்திருங்கள்

அரங்கு அலங்காரத்தில் மிகவும் பகட்டாக காண்பித்து கொள்ளாதீர்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய ஒரு பெரிய படமானது பல சிறிய படங்களை விட சிறந்தது. பெரிய உரைகளை விடவும், உங்கள் வியாபாரத்தை விவரிக்கும் ஒரு வாசகம் சிறந்ததாகும்.

தந்திரங்கள்

தந்திரங்கள் மற்றும் சிறு பரிசுகள் தந்து உங்கள் அரங்குக்கு மக்களை வரவழைக்கலாம். ஒரு நேர்காணலை நடாத்துங்கள், சத்தமாக உற்பத்திப் பொருளின் விளக்கக்காட்சிகளை மேற்கொள்ளுங்கள், மிட்டாய்களைத் தாருங்கள். இந்த தந்திரம் உங்கள் நிறுவனத்தின் மதிப்பையும், உங்கள் வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறதா என்பதை மட்டும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதை யாருக்கும் தெரிவிக்காவிட்டால் சிறந்த வியாபாரக் காட்சி திட்டமிடல் பயனளிக்காது போகலாம். ஏறத்தாழ மூன்றிலொரு வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பது, வியாபாரக் காட்சிக்கு அவர்கள் வருவதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்று CEIR அவதானிக்கப்பட்டுள்ளது. உறுதியாக முன்னரே காண்பிக்கப்படும் விளம்பரங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன காண்பிக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றி தெரிவிக்கிறன. இந்த தகவல் குறிப்புகள் உதவக்கூடும்.

தொலைபேசிகளைத் தொழிற்படச் செய்யுங்கள்

வியாபாரக் காட்சிக்கு 6 வாரங்கள் அல்லது ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, உங்களுடைய முதன்மை வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புடைய வாடிக்கையாளர்கள் போன்றோரை அழைத்து சந்திப்புகளைத் திட்டமிடுங்கள். பெரும்பாலான நபர்கள் காட்சிக்கு அதிகமான வேலைகளுக்கு மத்தியில் வருவார்கள், பிற அரங்குகளை காண்பதற்கு அவர்களுக்கு மிக குறைவான நேரம் அல்லது நேரமே இல்லாமல் இருக்கும். அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் ஒரு வாரம் அல்லது காட்சிக்கு முன்பாகவே நிச்சயப்படுத்திக் கொள்ள மறக்காதீர்கள்.

அஞ்சல்களை அனுப்புங்கள்

முன்கூட்டியே பதிவு செய்த பங்கேற்பாளர்களின் அஞ்சல் பட்டியலை வாங்கி வியாபாரக் காட்சியின் நிர்வாகம் வழங்கக்கூடும். உங்கள் அரங்குக்கு வருவதால் உண்டாகக்கூடிய நன்மைகள் இரண்டை விவரிக்கும் எளிமையான அஞ்சலைப் பயன்படுத்த முயற்சியுங்கள். உங்களுடைய அரங்கு இலக்கத்தையும் சேர்த்து சில தொடர்பு விவரங்களும் அதில் இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பத்திரிகைகளைப் பயன்படுத்துங்கள்

வியாபாரப் பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் போன்றவற்றில் வியாபாரக் காட்சியை உள்ள்டக்கிய செய்திக்கட்டுரைகளை பிரசுரியுங்கள். உங்கள் செய்திக்குறிப்புகளில் உங்கள் அரங்கைப் பற்றிய மதிப்புடைய செய்திகள் இருக்கலாம் – ஒரு புதிய உற்பத்திப் பொருள் அறிமுகம் அல்லது விசேட விளக்கக்காட்சி போன்றவை. வியாபாரக் காட்சிக்காக பல ஊடகவியலாளர் தொகுப்புகளையும் தயார் செய்து கொள்ள வேண்டும், மேலும் ஊடகவியலாளர்களின் அறைகளுக்கு அனுப்பி வையுங்கள், இதனால் ஊடகவியலாளர்களிடம் அவை எளிதில் சென்றடையும்.

வியாபாரக் காட்சிக்கான வெளியீடுகளை தேடுங்கள்

வியாபாரக் காட்சி மட்டுமே பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது அதிக செலவாகக்கூடியதாகவும், செயல்திறமற்றதாகவும் இருக்க கூடும். இந்த வெளியீடுகள் குறைவான கவனத்தையே பெறும், மேலும் வியாபாரக் காட்சிக்கு வருகைதரும் மக்கள் வீணாக்கும் காகிதங்களின் அளவில் எளிதில் தொலைந்து போய்விடும்.
உங்கள் பின் தொடர் திறமுறைத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கான உகந்த நேரம் வியாபாரக் காட்சி தொடங்குவதற்கு முன்புள்ள நேரமாகும். இம்முறையில், உங்களுடைய வாய்ப்புடைய வாடிக்கையாளர்களுக்கு வியாபாரக் காட்சி மறப்பதற்கு முன்பே உங்கள் பின்னூட்டல் செய்தி அவா்களை சென்றடையலாம். பின் தொடருதல் பற்றி நீங்கள் அறியவேண்டிய விடயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

பின் தொடருதலை முதன்மையானதாகக் கருதுங்கள்

Center for Exhibition Industry Research –இன் கருத்துப்படி 80% காட்சி வருகைகள் பின் தொடரப்படுவதில்லை. வருகை தந்தவர்களை பின் தொடருவது வியாபாரக் காட்சிக்கு பின் உங்களுடைய முதல் பணியாக இருக்கும். – நீங்கள் அலுவலகத்துக்கு வராத நாட்களில் என்னென்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வது போன்ற வேறு எந்த பணியை விடவும் இதை முதன்மையானதாக கருதுங்கள்.

பின் தொடருதல் அஞ்சலை வியாபாரக் காட்சிக்கு முன்பாகவே பதியுங்கள்

வியாபாரக் காட்சிக்கு பின்னருள்ள அஞ்சலானது ஒரு நன்றி குறிப்பு அல்லது அட்டைக்குறிப்புடன் கூடிய ஒரு கைந்நூல் போன்றவையாகவும் இருக்கலாம். வியாபாரக் காட்சிக்கு புறப்பட முன்னர் இதனை பதிந்து அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரக் காட்சியிலிருந்து திரும்பிய உடனே அதனை அனுப்பி வைக்க முடியும்.

வியாபாரக் காட்சியின் போதே முதன்மை வாடிக்கையாளர்களை தகுதிப்படுத்துங்கள்

முக்கியத்துவம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் வருகை தந்தவர்களை வரிசைப்படுத்துங்கள், இந்த முக்கியத்துவங்களை காட்சிக்கு பின்னரான செயல்பாடுகளின் அடிப்படையில் நோக்குங்கள் வியாபாரக் காட்சி முடிந்து ஒரு வாரத்துக்குள் உங்களுடைய முதன்மையான வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழையுங்கள் – நீண்ட காலம் கடத்தினால் அவர்கள் வாடிக்கையாளர்களாக மாறும் வாய்ப்புகள் அரிதாக்கூடும். அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையான பின் தொடர் அஞ்சலை அனுப்புங்கள்.

உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்

அரங்கில் நீங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் காப்பாற்றுங்கள். போதுமான அளவு கைந்நூல்களையும், உற்பத்திப் பொருட்கள் பற்றிய தாள்களையும் வைத்திருங்கள், இதன் மூலம் கோரப்படும் தகவல்களை கூறியது போலவே நீங்கள் அனுப்பலாம்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Thursday, July 16, 2015

இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம்

தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம்.  அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும். ஆயிரம் பொன் பரிசு மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு கேள்வி எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி.    “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார். முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர். அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார். அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. “இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு  எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர் இராஜராஜ சோழர், அடுத்தாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார். அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே “அன்பே சிவம்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார் மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். “நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம். “அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள். இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும்  அன்பு. அன்புதான் இறைவன். அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து, ”அன்பே சிவம்” என்று எழுதி வைத்தேன்.” என விளக்கினார் சிற்பி. இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். “உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற  என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம். நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்.” என்று கூறி ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர். அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?. அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. அன்பே சிவம்.!

Read More at: bhakthiplanet.com/2013/02/article-new/ © BHAKTHIPLANET.COM

Wednesday, July 15, 2015

வாழ்வது என்பது ஒரு அற்புதமான கலை

வாழ்வது என்பது ஒரு அற்புதமான கலை ஆகும். வாழும் கலையை அறிந்தவர் ஒரு சிலரே. எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கவே விரும்புகின்றனர். பணம் இருந்தால் எப்பொழுதும் இன்பமாக வாழலாம் என்று எல்லா மனிதர்களும் நினைக்கின்றனர். கடுமையாக உழைத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று பொதுவாக எல்லோரும் நம்புகிறார்கள். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.
நீங்கள் கடினமாக உழைப்பது மிகவும் முக்கியமா?
மேற்கத்திய சுய முன்னேற்றக் குருக்கள் எல்லோரும் பரிந்துரைக்கும் வாழ்வியல் பாடங்கள் என்ன தெரியுமா?வாழ்க்கையில் பெரிய, பெரிய இலக்குகளை மேற்கொள்ளுங்கள். பின் அவற்றை அடைய மிகவும் கடினமாக உழையுங்கள் என்பது தான். உழைத்தால் பணம் வரும். பணம் வந்தால் சந்தோஷமாக வாழலாம் என்பது தான் அவர்களது உறுதியான கருத்து ஆகும்.
உண்மையில் நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமாக உழைக்கத் தேவையேயில்லை என்பது தான் சரியான வாழ்வியல் உண்மையாகும். அது எப்படி என்பதை உங்களுக்கு விளக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
பெரிய இலக்குகள் நிர்ணயித்து, கடினமாக உழைக்கும் போது அதிக மன உழைச்சல் ஏற்படும் என்பதை மறுக்க முடியுமா? அப்போது, உங்கள் சந்தோஷம் காணாமல் போகும் என்பது தானே நிஜம்? எந்த சந்தோஷத்தை அடைய கடினமாக உழைக்கிறார்களோ அந்த சந்தோஷத்தை அவர்கள் எளிதில் இழந்து விடுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. எதை இறுதியில் அடையலாம் என்று நினைத்தார்களோ அதை முதலிலேயே இழந்து விடுகிறார்கள்.
பண்டைய இந்திய முனிவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? உனக்கு எது மிகவும் பிடிக்குமோ, எந்த துறையில் உனக்குத் திறமை இருக்கிறதோ அந்த வேலையை செய் என்றார்கள். இஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்யும்போது அதில் கஷ்டம் தெரியாது. உங்கள் வேலை எளிதாகி விடும். மேலும் நீங்கள் அந்தத் துறையில் நிபுணர் என்பதால் அந்த வேலையை எளிதில் செய்து முடித்து விடுவீர்கள்.
ஆக, கடினமாக நீங்கள் உழைக்கத் தேவையே இல்லை என்பது தான் நிஜம். நீங்கள் பெரிய வெற்றிகளை எளிதில் பெற்று விடுவீர்கள்.
இஷ்டப்பட்ட வேலையை செய்யுங்கள். உங்களுக்கு நன்றாக வரும் வேலையை செய்யுங்கள். இலக்குகள் தேவையில்லை. இலக்குகள் மன அழுத்தத்தையே உண்டாக்கும். உங்கள் செயல் திறன் குறைந்து விடும்
வாசி அறிந்தவன் பதிவை முதலில் படித்து பின் (லைக்) செய்து மறக்காமல்(ஷேர்) செய்து மற்றவர் பயனடைய உதவுங்கள் நன்றி - www.v4all.org




வாசியை அறிந்தவன்'s photo.

Sunday, July 12, 2015

கனவுகள் எதுவாக இருந்தாலும் அவைகளை அடைய நீங்கள்

எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெறவே விரும்புகிறோம். அதற்காகவே போராடுகிறோம். ஒவ்வொருவருக்கும் சில கனவுகள், குறிக்கோள்கள் இருக்கும். அவை நிறைவேறும்போது வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம்.
உங்கள் குறிக்கோள்கள் மற்றும் கனவுகள் எதுவாக இருந்தாலும் அவைகளை அடைய நீங்கள் போராட வேண்டியிருக்கும். நோகாமல் நோன்பு கும்பிடுவது என்பது இதில் நடவாத காரியம். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய, அல்லது நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் இரண்டு அடிப்படையான விஷயங்கள் உங்களுக்குத் தேவை.
1. நல்ல உடல் ஆரோக்கியம்: சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பர். அது போல் தான் நல்ல உடல் ஆரோக்கியம் இல்லாமல் நீங்கள் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது.
நல்ல உடல் ஆரோக்கியம் பெறுவது எப்படி? சிறந்த வாழ்க்கை முறைகளைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம். சரியான உணவுப் பழக்கங்கள், உடல் பயிற்சி, யோகா மற்றும் தியானம் மூலம் மேன்மையான ஆரோக்கியத்தைப் பெறலாம்.
2. நல்ல மன ஆரோக்கியம்: நீங்கள் எதை வெற்றிகரமாக செய்ய விரும்பினாலும் உங்கள் மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மனோ பலம் சிறப்பாக இருந்தால் தான் எடுத்த காரியத்தை முடிக்க முடியும். அதற்கு வலிமையான, ஆரோக்கியமான மனம் வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான மனதைப் பெறுவது எப்படி? சிலர் பிறப்பிலேயே மன வலிமைப் பெற்று இருப்பார்கள். அவர்கள் பாக்கியசாலிகள் என்றே சொல்ல வேண்டும். பெற்றோர்கள் வளர்க்கும் முறையிலும் மன வலிமை பெறவோ அல்லது இழக்கவோ முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக யோகா மற்றும் தியானம் தொடர்ந்து செய்தால் நிச்சயம் மன வலிமை பெற முடியும்.
யோகப் பயிற்சிகளையும், தியானத்தையும் தொடர்ந்து செய்தால் உடலும் மனமும் வலிமை அடையும்.
ஆக வாழ்க்கையில் வெற்றி பெற யோகா செய்தால் போதும் என்று சொல்லி முடிக்கிறேன். வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Tuesday, April 21, 2015

தொழில்முனைவோர்களின் தலைமை பண்புகள் ( 9Cs Leadership Characteristics )

தொழில்முனைவோர்களின் தலைமை பண்புகள் ( 9Cs Leadership Characteristics )

leadership characteristics ,leadership qualities,       ஒவ்வொரு தொழில்முனைவோரும்(Entrepreneur) சிறந்த தலைவர்களை போல் செயல்படுவது அவசியமாகும். தலைவர்களுக்கு(Leader) உள்ள பொதுவான தலைமைப் பண்புகள்(Leadership Characteristics )  தொழில் முனைவோர்களுக்கு தேவைபடுகின்றன. தலைவர்களின் பொதுவான தலைமைப் பண்புகளை(Leadership Characteristics ) ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அவற்றில் சிலவற்றை C என்று ஆரம்பமாகும் எழுத்துகளில் வரிசைபடுத்தியுள்ளனர் .

தொழில்முனைவோர்களுக்கு(Entrepreneurs) தேவையான தலைமைப் பண்புகளில்(Leadership Qualities)  சில :

1.Curiosity (ஆர்வம்)
எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் . ஆர்வம் என்ற ஒரு பண்பு தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) தேவையான ஒன்றாகும் . தொடர்ச்சியான கற்றல், செயல்களை செய்தல் போன்ற பலவற்றிக்கு ஆர்வம் என்ற பண்பு தேவை .

2.Creativity (புதுமை)
புதுமையாக செய்வதில் நாட்டம் ,மாறுபட்டு சிந்திக்கும் திறன் ஒரு தொழிமுனைவோருக்கு(Entrepreneurs) தேவையான தலைமை பண்பாகும்(Leadership Qualities).

3.Communication( தொடர்பு)
பேச்சு, எழுத்து ,சைகை போன்றைவை பிறரை தொடர்புகொள்ளும் வழியாகும். அவை சரியானதாகவும், தெளிவானவானதாகவும் அமைய வேண்டும். பிறரை நமக்கு சாதகமாக இணங்கவைக்கும் ஆற்றல் கவனிக்கவைக்கும் ஆற்றல் போன்றவை தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) தேவையான பண்பாகும்.

4.Character (நற்குணம்)
நற்பண்பு , நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற பண்புகள் தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) மிகவும் அவசியம்.

5.Courage(துணிவு)
நாம் எந்த செயலை செய்து முடிக்கவும் தைரியம் மிகமுக்கியமானது. இடையில் ஏதாவது தடைகள் ஏற்பட்டாலும் எடுத்துக்கொண்ட செயலை செய்து முடிக்க துணிவு அவசியமாகிறது . இதுபோன்ற பலவற்றை நிறைவேற்ற தைரியம் என்ற பண்பு தேவைப்படுகிறது.

6.Conviction (நம்பிக்கையும்,பிடிமானமும் வைத்திருப்பது)
நமது குறிக்கோள்கள்,செயல்கள் போன்ற பலவற்றிலும் நம்பிக்கையும்,பிடிமானமும் வைத்திருப்பது .

7.Charisma (வசீகரித்தல்)
பிறரை வசீகரிக்கும் ஆற்றல் வசீகரிக்கும் ஆற்றல் என்பது முக அழகை சார்ந்ததல்ல.அது நமது பேச்சின் மூலமாகவும் இருக்கலாம் , நடவடிக்கைகளின் மூலமாகவும் இருக்கலாம், நற்குணங்களின் மூலமாகவும் இருக்கலாம்.

8.Competence (ஆற்றல்,திறமை)
நிர்வாக ஆற்றல்,செயல் ஆற்றல் ,பேச்சு ஆற்றல் போன்ற பல ஆற்றல்கள் தொழில்முனைவோருக்குத் தேவைப்படுகின்றன.

9.Common Sense(இயல்பறிவு)
பொது புத்தி, புத்திசாலித்தனம் ,இயல்பறிவு ,அறிவுக் கூர்மை போன்றவை தொழில்முனைவோருக்கு அவசியம் . தொழில்முனைவோர்கள்(Entrepreneurs) இப்படிப்பட்ட தலைமைப் பண்புகளை(Leadership Characteristics )  வளர்த்துகொள்ள வேண்டும். இந்த தலைமைப் பண்புகளை(Leadership Characteristics )  கொண்ட தொழில்முனைவோர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார்கள்.

Yours Happily
Dr.Star Anand Ram

Saturday, March 7, 2015

சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை

சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோச காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பாலு, இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம். இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும். மனச்சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்போருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரமான, “ஓம் வ்ஜர நாகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும். 

மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1

மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1

நாயுருவி : திருஷ்டி கழிப்பிற்க்கு மிக பயனுள்ள ஒன்று இந்த செடியின் வேர். தீய கண் பார்வைகளால் பாதிக்கப்பட்டோர் இந்த செடியின் வேரை தலையனை அடியில் வைத்து உறங்கி வர, திருஷ்டி தோஷங்கள் விலகும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் இதே முறையை பின்பற்றி பயன் பெறலாம்.

குழந்தைகள் அல்லது பெண்கள் மற்றும் தீய சக்திகளால் இருட்டை கண்டு பயப்படுவோர் இந்த செடியின் வேரை கழுத்தில் சிகப்பு நூலில் கட்டி கொள்ள பயம் விலகும்.
திருமண தடை மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்று போதல் போன்றவைகளுக்கு இந்த செடியின் வேரை வலது கை மணிக்கட்டில் ஒரு வருடம் வரை கட்டி கொள்ள திருமண தடைகள் விலகும்.

வேரை எடுக்கும் முன் செடிக்கு மஞ்சள் நீர் ஊற்றி வேரை எடுக்க அனுமதி கோரி தூப தீபம் காண்பித்து பின்பு ஆணி வேர் அறுபடாமல் ஆயுதம் படாமல் சிறிது வேரை எடுத்து பின்பு மீண்டும் செடியை மண்ணில் புதைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும்- வேறு மந்திரங்கள்,திசைகள் என எதுவும் இல்லை 

Thursday, March 5, 2015

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான பன்னிரு பெருமாள்

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான
பன்னிரு பெருமாள்
ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
கடவுளின்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
எனும் பஞ்ச காரியங்களில்
காக்கும் செயலை செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான பெருமாளின்
அவதாரத்தில் ஏந்த அவதாரம் ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன அவதார பெருமாளின் கோவிலுக்கு உங்கள் நட்சத்திர நாளில் சென்றோ அல்லது
அந்த அவதார மூர்த்தியின் திருவுருவ படம் வைத்து
அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.
அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.
பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.
இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.
இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.
இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!
பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.
இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,
பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.
இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.
"எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"
அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,
"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில்
சேர்த்துக்கொள்ளவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால்
நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.
ஆமாம்,
நண்பர்களே, நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர
இடையில் வரும், கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.!
திருச்சிற்றம்பலம்.


Sunday, July 20, 2014

நற்பண்புகள் வாழ்க்கையின் அஸ்திவாரம்.

நற்பண்புகள் வாழ்க்கையின் அஸ்திவாரம்.



நான் மிகவும் நேர்மையாகவும்நாணயமாகவும் வேலை செய்வேன். அதுதான் எனக்கு பிடிக்கும். அது தான் என் கொள்கை’ என்று சிலர் சொல்வார்கள்.
அவர்களே சில நாட்களில், `நான் அப்படி எல்லாம் நீதிநியாயம் மாறாமல் வேலை பார்த்து என்ன லாபம்மற்றவர்கள் எல்லாம் எப்படி எப்படியோ இருக்கிறார்கள். பொய் சொல்கிறார்கள்… 
ஏமாற்றுகிறார்கள்.. அரைகுறையாகத்தான் வேலைபார்க்கிறார்கள். உண்மையாகஉழைத்து என்ன கிடைக்கப்போகிறது. அதை யாரேனும் பாராட்டவா போகிறார்கள்நாணயத்திற்கும்நேர்மைக்கும் இந்த காலத்தில் மதிப்போ,மரியாதையோ இல்லவேஇல்லை. நான் மட்டும் யோக்கியமாக இருந்து பலனில்லை. ஊர் எப்படி போகிறதோ அப்படியே நானும் போய்விடலாம் என்று நினைக்கிறேன்’ என்று நீண்ட விளக்கம் கொடுப்பார்கள்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள். நாணயமாக இருக்கிறீர்கள். உண்மையாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
நேர்மைநாணயம்உண்மையின் மதிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அதனால் அப்படி வாழ்கிறீர்கள். விலை மதிப்பற்ற அந்த நற்குணங்கள் உங்களுக்கு சுயமரியாதையையும்சுய கவுரவத்தையும் கொடுக்கும். மிகச் சிறந்த ஆத்ம திருப்தியையும் அது தரும்.
உங்களுக்கு இத்தனையும் கிடைக்கும்போது மற்றவர்கள் பாராட்டினால் என்ன.. தூற்றினால் என்ன! அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்.
நற்பண்புகள் என் வாழ்க்கையின் அஸ்திவாரம்அதை நான் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அதன் மூலம் என் மனதிற்கு அமைதியும்,மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அந்த நற்குணங்கள் இன்னமும் இந்த உலகத்தில் மறைந்துவிடாமல் என்னால் காப்பாற்ற முடிகிறது என்ற திருப்தியும் ஏற்படுகிறது.
ஒரு சிலர் 500, 1,000 ரூபாய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாணயமாகவும்,நேர்மையாகவும் இருப்பார்கள். அதுவே ஒரு சில லட்சங்கள் என்றாகும்போது அந்த நாணயத்தையும்நேர்மையையும் விட்டு கொடுத்து விடுவார்கள்.நேர்மைக்கும்நாணயத்திற்கும் என்னால் விலை நிர்ணயிக்க முடியாது. நான் நானாக வாழ விரும்புகிறேன்” என்று உங்களுக்குள்ளே தினமும் கூறிக்கொள்ளுங்கள். அதன்படி வாழ்ந்து பாருங்கள்எல்லையற்ற இன்பத்தோடு உங்களால் வாழ முடியும். அதற்குரிய பலனும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
**********
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.
**********
உள்ளத்தின் ஒழுங்கு முற்றிலும் குலைந்திருந்தால்நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

Yours Happily
Dr.Star AnandRam 
www.v4all.org 

Tuesday, July 1, 2014

தலைவராக இருக்க என்ன தேவை ? ' 9 சி '

தலைவர் ஆகலாம் .

தலைவராக இருக்க என்ன தேவை ?


ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும் ?



அதற்குத் தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது ?


இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்விதாமாக , " வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான் ? ' ( ' Where Have All The Leaders Gone ? ' ) என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது . இதை எழுதியிருப்பவர்கள் , பிரபல மேலாண்மை நிபுணர் , உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி .
இதற்கு , இவர்கள். 9 சி தேவை என்கிறார்கள் . ' 9 சி ' என்பது ' சி ' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது .
1 . Curiosity -- ஆர்வம் .
2 . Creativity -- படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை .
3 . Communication -- தகவல் தொடர்பு .
4 . Character -- ஒழுக்கம் .
5 , Courage -- தைரியம் .
6 . Conviction -- உறுதி .
7 . Charisma -- ஈர்ப்பு / கவர்சிகரமான ஆளுமை .
8 . Competence -- திறமை / தகுதி .
9 . Common Sense -- யதார்த்த அறிவு .
எப்பேர்ப்பட்ட தலைவரும் , அந்தரத்தில் கொடிகட்ட முடியாது . எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும் , எதார்த்தத்தைப் புரிந்து தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள் .
இந்த 9சியில் உங்க ஸ்கோர் என்ன ? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைப்படுகிறது ? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளூங்கள் , நீங்களும் தலைவராகலாம் .

urs - www.v4all.org