Showing posts with label leadership skills. Show all posts
Showing posts with label leadership skills. Show all posts

Wednesday, March 9, 2016

நிலவேம்புக் குடிநீர் பொடி

நிலவேம்பு குடிநீர் கசாயம் குடித்தால் 6 மாதங்களுக்கு வீட்டுப் பக்கம் காய்ச்சல் எட்டிப் பார்க்காதுனு தினமணியில் தொடர்ந்து எழுதினோம். அதை அரசு மருத்துவமனைகளிலும் கசாயமாக தருகிறார்கள். அதற்கு தினமணியின் பங்கும் முக்கியம்.
இந்தக் கசாயம் காய்ச்சலுக்கு எமன். தலை தலையா அடிச்சுகிட்டேனே ... என கிராமத்தில் சொல்வார்கள். அப்படித்தான் தினமணியில் நாங்களும் சொன்னோம். இப்பவும் சித்த வைத்தியர்களும் சொல்கிறார்கள். தயவுசெய்து நிலவேம்பு கசாயம் போட்டுக் குடியுங்கள். வீட்டில் எல்லோரும். மூன்று நாள். 6 மாசம் நிச்சயம் காப்பாற்றும். எந்தக் காய்ச்சலும் எட்டிப் பார்க்காது. சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு ஸ்பூன் பவுடருக்கு ஒரு டம்ளர் தண்ணீர். பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, வடிகட்டி, குடிக்கிற பதத்துக்கு ஆற வைத்து குடியுங்கள். கசக்கும். கசப்பு தாங்க முடியாதென்றால் பனங்கற்கண்டு, கருப்பட்டி ஏதாவது கொஞ்சம் வாயில் போட்டுக்கலாம்.
இதெல்லாம் விவேக்கிற்கு தெரியாமலா போயிருக்கும் என விதண்டாவாதம் பேச வேண்டாம். அவசரத்தில் மறந்து இருக்கலாம் பாவம் பெற்ற மகனை இழந்து தவிக்கிறார். எவ்வளவு பணம் இருந்தும் கண் எதிரே இழந்துவிட்டாரே.... படத்தைப் பாருங்கள். இப்படியொரு மகனின் இழப்பை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?
நிலவேம்பு சாவை தடுக்கும்னு சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான காய்ச்சலைத் தடுக்கும். வெறும் ரூ.100 தான் ஒரு பாக்கெட். இந்த விஷயத்தில் தயவுசெய்து இங்கிலீஷ் டாக்டர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அவர்களைப் பொருத்த வரை நாம் எல்லாம் பணம் காய்க்கும் மரம். மருந்து மாத்திரைகள் வாங்க நாம் செலவழித்தால்தான் அவர்களுக்கு பொழப்பு.
அடுத்த முதல் வேலை நிலவேம்புக் குடிநீர் பொடி வாங்குவதாக இருக்கட்டும்

Saturday, July 18, 2015

அசாதரண சக்தி, தெய்வ சக்தி, மாபெரும் சக்தி

ு, ''அசாதரண சக்தி, தெய்வ சக்தி, மாபெரும் சக்தி, இவை எல்லாமே மனிதனின் மனதில் எண்ணங்களின் வடிவில் பதிந்து கிடக்கின்றது. வெளியே கண்களுக்குப் புலப்படாமல் இயங்கும் பிரபஞ்ச மனதின் ஒரு சிறிய பகுதியே மனிதனின் மனமாகும். ஒவ்வொரு மனித மனமும், அது யாரிடத்திலிருந்தாலும், அது வெளி உலகத்தோடு உண்மையாகவே தொடர்பு உடையதே ஆகும்'' என்கிறார். எண்ணங்கள்கட்டுப்பாடற்ற நிலையில் கடல் அலைகளைப் போலக் காரணமின்றி அலைமோதிதன் ஆற்றலை, மனதின் சக்தியை விரையம் செய்கின்றன. அலை பாயும் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஒரு முனையில் நிலை நிறுத்தும் பொழுது எண்ணங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு சக்தியை பெற்று விடுகின்றன. இதை நன்கு தெரிந்து கொண்டிருந்த நம் முன்னோர்களின் அதற்கான முயற்சிகளே சரியை, கிரியை, யோகம், ஞானம் எல்லாம். அப்படி சக்தி வாய்ந்த எண்ணங்களை எவ்வளவு தொலைவில் வேண்டுமானாலும் செலுத்தி,கற்பனைக்கும் எட்டாத சாதனைகளை, அற்புதங்களைச் செய்யலாம் என்பது உண்மை.உதாரணமாக ஒரு ஏரி ஒன்றில் நாம் ஒரு கல்லைப் போடும் பொழுது, அந்த இடத்திலிருந்து நீரில் அலைகள் கிளம்பி வட்டமாக நாலா திசைகளிலும் பரவி போய்க் கொண்டேயிருக்கும்.கொஞ்ச தூரம் போனதும் அவை மறைந்து விடும். கல்லை எரியும் விசையின் அளவுக்கு அலைகள் போகும். அலை பரவப் பரவ விசை செலவாகி பிறகு முழுவதுமாக விசை தீர்ந்து விடும் பொழுது அலை ஓய்ந்து விடும். ஆனால், ஒரு நீர் நிரம்பிய சிறிய தொட்டியில் ஒரு மிதக்கும் பொருளை போடும் பொழுது, அதிலிருந்து கிளம்பும் அலை பக்க வாட்டில் உள்ள தொட்டியின் சுவரில் மோதி, திரும்பி வந்து மிதக்கும் பொருளை கொஞ்சம் மேலே தூக்குவதைக் காணலாம். எந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதோ, அந்த இடத்திற்கே விசை செலவாகாமல் வலுவுடன் வந்து சேர்கிறது. இது போலவே மனதில் இருந்து கிளம்பும் எண்ணங்களைப் பரவ விடாமல் நாம் தடுத்து விட்டால் மீண்டும் மனதிடமேவந்து மனதிற்கு வலிவு சேர்க்கிறது. அதாவது எண்ணங்கள் எழுந்து பரவுவதினால் மனம் இழந்த சக்தியானது, மீண்டும் மனதிடமே வந்து விடுவதினால் மனம் வலிமை பெறுகிறது. இழந்த சக்தியை மீண்டும் பெற்ற மனதில் வலிமை பெருகுகிறது.மனம் வேறு எண்ணங்கள் வேறு அல்ல. எண்ணங்களின் மொத்தத் தொகுப்பே மனம். மனதிலிருந்துதான் எண்ண அலைகள் கிளம்புகின்றன. ஆனால், எண்ண அலைகளைப் பரவ விடாமல் தடுத்து, அந்த எண்ண அலைகளை ஒரு நிலைப்படுத்தித்தேக்கும் பொழுது, அவ்வெண்ண அலைகளின் வீச்சுக்குத் தக்கவாறு மனமானது வலிவு பெறும். ஒரு மனிதன் தன் ஆசைகளையும், மனதின் அசைவுகளையும் கட்டுப்படுத்தி,ஒருமுகப்படுத்தும் பொழுது மனமானதுபேராற்றல் கொண்ட ஒரு கருவியாக மாறி விடுகிறது. அந்நிலையில் அவன் நினைத்தால் வில்லிருந்து அம்பை செலுத்துவது போல எண்ணத்தை செலுத்தி, குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி தன் வசப்படுத்த முடியும். எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் பொழுது அவை அவ்வளவு சக்தி வாய்ந்தவைகளாக ஆகி விடுகின்றன. மின்னல் போன்று பாய்ந்து சொல்லும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. எனவே மனிதனுக்குத் தன் மனதை ஆளத் தெரிய வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்காகஅலட்டிக் கொண்டு மனோ சக்தியை விரையம் செய்யக் கூடாது. மனதை ஒரு குறிக்கோளை நோக்கிச் செலுத்த வேண்டும். தன் இலக்கிலேயே மனதை ஒருமுகப்படுத்திநிலை நிறுத்த வேண்டும்.வேறு எண்ணங்கள் எதுவுமில்லாமல்,ஒரே சிந்தனையோடு செயல்படுபவர்கள்வெற்றியடைவது உறுதியாகும். பலவீனமான மனம் ஆன்மாவிலிருந்துவிலகிக் கிடக்கிறது. வலிமையான மனம் ஆன்மாவை நெருங்கி அதில் லயிக்கிறது.

Tuesday, July 1, 2014

விளம்பரம் ! விளம்பரம் ! விளம்பரம் ! - before advertise your product or brand read this & plan ur add.

விளம்பரம் !  - www.v4all.org

* ' நீங்கள் தொட விரும்பும் சருமம் ' ( The skin you love to touch ) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன் .

* உலகப் புகழ்பெற்ற நோவா கார் நிறுவனம் தயாரித்த புதிய மாடல் கார் ஸ்பானிஷ் நாட்டில் மட்டும் சரியாக விற்கவில்லை . என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது கிடைத்த
விடை.... அந்த மாடலின் பெயர் . நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் ' இது ஓடாது ' என்று அர்த்தமாம் !

* இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை... புவி வெப்பமயமாதல் . ' மரங்களை வெட்டாதீர்கள் . இயற்கையைப் பாதுகாப்போம் ' என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன . 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த
ஆரம்பித்திருக்கிறார்கள் !

* ' மைக்ரோசாஃப்ட் ' நிறுவனம் வின்டோஸ் Xp யை அறிமுகப்படுத்தியபோது , ஓர் ஆண் ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழற்ற முயற்சி செய்து , அதில் தோற்பதுபோல் விளம்பரம் செய்தது . " எங்களின் பாஸ்வேர்டு அவ்வளவு பாதுகாப்பானது ' என்பது கான்செப்ட் . மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தன் விளம்பரத்தை வாபஸ் வாங்கிக் கொண்டது .


* ஒரு பொருளின் அசைவு அல்லது விளைவின் மூலம் மற்றொரு பொருள் இயக்கப்படுவதற்கு டொமினோஸ் எஃபெக்ட் என்று பெயர் . சுருக்கமாகச் சொன்னால் ' அபூர்வ சகோதரர்கள் ' படத்தில் டெல்லி கணேஷை கமல் கோலிக் குண்டைப் பயன்படுத்திக் கொல்வாரே... அதுதான் டொமினோஸ் எஃபெக்ட் .

* ' 57 ஆயிரம் புகைப்படங்கள்.. இரண்டு மைல் நீளத்திற்கு இருக்கும் . பார்க்கக் கட்டணம் 3 அணா ' 1913 -ம் ஆண்டில் வெளியான இந்தியாவின் முதல் படமான ' ராஜா ஹரிச்சந்திரா '- வுக்கு தாதா சாகேப் பால்கே வெளியிட்ட விளம்பரம்தான் இது !

* கிரேக்க காலத்தில் விலை மாதுக்கள் தங்களை விளம்பரப்படுத்த அனுமதி இருந்தது . அம்புக் குறி பொறிக்கப்பட்ட காலணிகளில் சிவப்பு மை பதித்த விலை மாதர்கள் கிரேக்க வீதிகளில் வாடிக்கையாளர்களுக்குக்காகக் காத்திருப்பார்களாம் . அவர்கள் நகரும்போது செருப்புத் தடத்தின் சிவப்பு மையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் பின் தொடர்ந்ததாக வரலாறு !


* ' கோகோ கோலா , பெப்சி ' விளம்பர உலகின் தவிர்க்க இயலாத பாடங்கள் . 30 பைசா செலவில் ஒரு பானத்தைத் தயாரித்து ஏழு ரூபாய்க்கு விளம்பரம் செய்து 10 ரூபாய்க்கு விற்கும் விற்பனைத் தந்திரத்தை உலகுக்குக் கற்று தந்தது இந்த கோலாக்கள்தான் .


* தேர்தல் சமயத்தில் தலைமுடியை இரட்டை இலைபோல வெட்டிக்கொள்ளும் தொண்டர்கள் நம் ஊரில் உண்டு . உலகம் முழுக்க உடம்பில் விளம்பரம் செய்து கொள்வது ஒரு வியாபாரம் . இவர்களுக்கு Human Billboards enRu peyar .


* ஆல் அவுட் கொசு மருந்தை வாங்கி வைத்துவிட்டு அது எம்பி நாக்கை நீட்டிக் கொசுவைப் பிடிக்கும் என்று காத்திருந்தவர்கள் பலர் . 1990 வரையிலும் ஆணுறை உபயோகம்பற்றி மக்களுக்கு விளக்க இந்தியாவில் சமூக சேவகர்களே கிடைக்கவில்லை . பீஹார் பகுதிகளில் ' விளக்கியே ஆக வேண்டும் ' என்று அரசால் அனுப்பப்பட்டவர்கள் கட்டை விரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டு ' இப்படி அணிந்துகொண்டால் எய்ட்ஸ் வராது ' என்றார்கள் . விளைவு , மக்களும் ஆளுக்கு ஒன்றை வாங்கி கட்டை விரலில் மாட்டிக்கொண்டார்கள் !

--- from - விளம்பரம் விகடன் 

தலைவராக இருக்க என்ன தேவை ? ' 9 சி '

தலைவர் ஆகலாம் .

தலைவராக இருக்க என்ன தேவை ?


ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும் ?



அதற்குத் தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது ?


இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்விதாமாக , " வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான் ? ' ( ' Where Have All The Leaders Gone ? ' ) என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது . இதை எழுதியிருப்பவர்கள் , பிரபல மேலாண்மை நிபுணர் , உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி .
இதற்கு , இவர்கள். 9 சி தேவை என்கிறார்கள் . ' 9 சி ' என்பது ' சி ' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது .
1 . Curiosity -- ஆர்வம் .
2 . Creativity -- படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை .
3 . Communication -- தகவல் தொடர்பு .
4 . Character -- ஒழுக்கம் .
5 , Courage -- தைரியம் .
6 . Conviction -- உறுதி .
7 . Charisma -- ஈர்ப்பு / கவர்சிகரமான ஆளுமை .
8 . Competence -- திறமை / தகுதி .
9 . Common Sense -- யதார்த்த அறிவு .
எப்பேர்ப்பட்ட தலைவரும் , அந்தரத்தில் கொடிகட்ட முடியாது . எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும் , எதார்த்தத்தைப் புரிந்து தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள் .
இந்த 9சியில் உங்க ஸ்கோர் என்ன ? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைப்படுகிறது ? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளூங்கள் , நீங்களும் தலைவராகலாம் .

urs - www.v4all.org 

Monday, June 16, 2014

எப்படி பேசுவது.

எப்படி பேசுவது.......... (:-)

தாயிடம் அன்பாக பேசுங்கள்..!
தந்தையுடன் பண்பாக பேசுங்கள்..!
ஆசிரியரிடம் அடக்கமாக பேசுங்கள்..!=
துணைவியுடன் உண்மையாக பேசுங்கள்..!
சகோதரனிடம்அளவாக பேசுங்கள்..!
சகோதரியிடம் பாசத்தோடு பேசுங்கள்..!
குழந்தைகளிடம் ஆர்வத்தோட பேசுங்கள்..!
உறவினர்களிடம் பரிவோடு. பேசுங்கள்..!
நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்..!
அதிகாரியிடம் பணிவோடு பேசுங்கள்..!
வியாபாரியிடம கறாராக பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம்....நேர்மையாக பேசுங்கள்..!
தொழிலாளரிடம் மனிதநேயத்தோடு..பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம்.....ஜாக்கிரதையாக.....பேசுங்கள்..!
இறைவனிடம் மெளனமாக பேசுங்கள்..!

Tuesday, April 23, 2013

அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்


இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?


01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.


06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.







உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்.


Urs 

Star Anand