Showing posts with label Marketing Training. Show all posts
Showing posts with label Marketing Training. Show all posts

Sunday, July 26, 2015

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம் - www.v4all.org

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும்.

02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம்.

03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

05. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.

 06. நமக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 07. நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

 08. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

 09. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் : அ. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம். ஆ. நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய். இ. உன் உதவி எனக்கு தேவை. ஈ. நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

10. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம். 11. மக்கள் எப்போதுமே அரசை குறை சொல்வார்கள் அவர்கள் அரசால் அனுபவிக்கும் இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்காக அரசுக்கு நன்றி கூறுவதில்லை.

12. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.

 13. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.

14. நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன், நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

15. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் இலிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.

16. நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

17. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

18. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

19. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

 20. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

 21. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

22. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

23. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

 24. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

25. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

Saturday, July 18, 2015

அசாதரண சக்தி, தெய்வ சக்தி, மாபெரும் சக்தி

ு, ''அசாதரண சக்தி, தெய்வ சக்தி, மாபெரும் சக்தி, இவை எல்லாமே மனிதனின் மனதில் எண்ணங்களின் வடிவில் பதிந்து கிடக்கின்றது. வெளியே கண்களுக்குப் புலப்படாமல் இயங்கும் பிரபஞ்ச மனதின் ஒரு சிறிய பகுதியே மனிதனின் மனமாகும். ஒவ்வொரு மனித மனமும், அது யாரிடத்திலிருந்தாலும், அது வெளி உலகத்தோடு உண்மையாகவே தொடர்பு உடையதே ஆகும்'' என்கிறார். எண்ணங்கள்கட்டுப்பாடற்ற நிலையில் கடல் அலைகளைப் போலக் காரணமின்றி அலைமோதிதன் ஆற்றலை, மனதின் சக்தியை விரையம் செய்கின்றன. அலை பாயும் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஒரு முனையில் நிலை நிறுத்தும் பொழுது எண்ணங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு சக்தியை பெற்று விடுகின்றன. இதை நன்கு தெரிந்து கொண்டிருந்த நம் முன்னோர்களின் அதற்கான முயற்சிகளே சரியை, கிரியை, யோகம், ஞானம் எல்லாம். அப்படி சக்தி வாய்ந்த எண்ணங்களை எவ்வளவு தொலைவில் வேண்டுமானாலும் செலுத்தி,கற்பனைக்கும் எட்டாத சாதனைகளை, அற்புதங்களைச் செய்யலாம் என்பது உண்மை.உதாரணமாக ஒரு ஏரி ஒன்றில் நாம் ஒரு கல்லைப் போடும் பொழுது, அந்த இடத்திலிருந்து நீரில் அலைகள் கிளம்பி வட்டமாக நாலா திசைகளிலும் பரவி போய்க் கொண்டேயிருக்கும்.கொஞ்ச தூரம் போனதும் அவை மறைந்து விடும். கல்லை எரியும் விசையின் அளவுக்கு அலைகள் போகும். அலை பரவப் பரவ விசை செலவாகி பிறகு முழுவதுமாக விசை தீர்ந்து விடும் பொழுது அலை ஓய்ந்து விடும். ஆனால், ஒரு நீர் நிரம்பிய சிறிய தொட்டியில் ஒரு மிதக்கும் பொருளை போடும் பொழுது, அதிலிருந்து கிளம்பும் அலை பக்க வாட்டில் உள்ள தொட்டியின் சுவரில் மோதி, திரும்பி வந்து மிதக்கும் பொருளை கொஞ்சம் மேலே தூக்குவதைக் காணலாம். எந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதோ, அந்த இடத்திற்கே விசை செலவாகாமல் வலுவுடன் வந்து சேர்கிறது. இது போலவே மனதில் இருந்து கிளம்பும் எண்ணங்களைப் பரவ விடாமல் நாம் தடுத்து விட்டால் மீண்டும் மனதிடமேவந்து மனதிற்கு வலிவு சேர்க்கிறது. அதாவது எண்ணங்கள் எழுந்து பரவுவதினால் மனம் இழந்த சக்தியானது, மீண்டும் மனதிடமே வந்து விடுவதினால் மனம் வலிமை பெறுகிறது. இழந்த சக்தியை மீண்டும் பெற்ற மனதில் வலிமை பெருகுகிறது.மனம் வேறு எண்ணங்கள் வேறு அல்ல. எண்ணங்களின் மொத்தத் தொகுப்பே மனம். மனதிலிருந்துதான் எண்ண அலைகள் கிளம்புகின்றன. ஆனால், எண்ண அலைகளைப் பரவ விடாமல் தடுத்து, அந்த எண்ண அலைகளை ஒரு நிலைப்படுத்தித்தேக்கும் பொழுது, அவ்வெண்ண அலைகளின் வீச்சுக்குத் தக்கவாறு மனமானது வலிவு பெறும். ஒரு மனிதன் தன் ஆசைகளையும், மனதின் அசைவுகளையும் கட்டுப்படுத்தி,ஒருமுகப்படுத்தும் பொழுது மனமானதுபேராற்றல் கொண்ட ஒரு கருவியாக மாறி விடுகிறது. அந்நிலையில் அவன் நினைத்தால் வில்லிருந்து அம்பை செலுத்துவது போல எண்ணத்தை செலுத்தி, குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி தன் வசப்படுத்த முடியும். எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் பொழுது அவை அவ்வளவு சக்தி வாய்ந்தவைகளாக ஆகி விடுகின்றன. மின்னல் போன்று பாய்ந்து சொல்லும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. எனவே மனிதனுக்குத் தன் மனதை ஆளத் தெரிய வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்காகஅலட்டிக் கொண்டு மனோ சக்தியை விரையம் செய்யக் கூடாது. மனதை ஒரு குறிக்கோளை நோக்கிச் செலுத்த வேண்டும். தன் இலக்கிலேயே மனதை ஒருமுகப்படுத்திநிலை நிறுத்த வேண்டும்.வேறு எண்ணங்கள் எதுவுமில்லாமல்,ஒரே சிந்தனையோடு செயல்படுபவர்கள்வெற்றியடைவது உறுதியாகும். பலவீனமான மனம் ஆன்மாவிலிருந்துவிலகிக் கிடக்கிறது. வலிமையான மனம் ஆன்மாவை நெருங்கி அதில் லயிக்கிறது.

Wednesday, July 8, 2015

Lucky Life

நாம் எல்லோரும் வெற்றி பெறும் போது அதற்கு நாம் தான் காரணம் என்று பறை சாற்றிக் கொள்வோம். ஆனால் தோல்வி ஏற்படும் போதோ பழியைக் கூசாமல் வேறு யார் மீதாவது போட்டு விடுவோம். வியாபாரத்தில் லாபம் வந்தால் அதற்கு நம் முயற்சியும், உழைப்பும், திறமையும் தான் காரணம் என்போம்.அதுவே நஷ்டம் ஏற்பட்டு விட்டால் நஷ்டத்திற்கு அவர் தான் காரணம், இவர் தான் காரணம் என்போம். ஒருவர் மீதும் பழி சுமத்த முடியா விட்டால் துரதிர்ஷ்டம் தான் நஷ்டத்தைத் தந்தது என்போம்.
உண்மையான தலைவன் தோல்விக்கு முழு பொறுப்பேற்பான். தைரியமானவர்கள் , தன்னம்பிக்கையுடையவர்கள் ஒரு போதும் தோல்விக்கோ, நஷ்டத்திற்கோ பிறர் மீது பழி சுமத்த மாட்டார்கள். தவறுக்குப் பொறுப்பேற்பார்கள். தவற்றை திருத்திக் கொண்டு மீண்டும் முயற்சிப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள்.
எதற்கெடுத்தாலும் மற்றவர் மீது பழிப் போடுவது சரியாகுமா? என்ன வெயில், என்ன கொடுமையான போக்குவரத்து நெரிசல், அவன் கேட்டவன், இவன் மோசமானவன், அவன் முட்டாள், இவன் ஏமாற்றுக்காரன் என்று குறை சொல்வதை நிறுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
மன தைரியமும், தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் தான் மற்றவரைக் குறை சொல்லுவர்.
அடுத்தவரைக் குறை சொல்லுவதையும், பழிப்பதையும், அவர்கள் இல்லாத போது அவர்களை விமர்சிப்பதையும் என்று நிறுத்துவோம்?
மற்றவர்கள் மீது பழி சுமத்தும் நேரத்தில் உருப்படியாக ஏதாவது நல்ல காரியத்தை பண்ணுவோமே? வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Tuesday, June 9, 2015

நிம்மதியாக இருக்க முடியவில்லையா?

நிம்மதியாக இருக்க முடியவில்லையா?
நிம்மதியாக இருக்க!!!
பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.
வாழ்க்கையில் நிம்மதி என்பது எங்கே இருக்கிறது. நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லையே என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதுண்டு. மனதில் எழும் இந்த ஆதங்கம் சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதே எண்ணம் தொடருமானால் வாழ்வில் விரக்தியும், சலிப்புமே மிஞ்சும். ‘எதுவாக இருந்தாலும் வாழ்க்கையை நேசித்து வாழ்ந்து விடு’ என்றான் ஒரு தத்துவ ஞானி. வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?
இதற்கான விடையை சீனதத்துவ ஞானியான லா வோ த் ஸ வின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.
‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.
‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா’ என்று ஞானி கேட்டார்.
‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை’ என்றான்.
‘அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு’ என்றார் ஞானி.
‘எடுத்துக் கொள்ளுங்கள்’என்றான் மன்னன்.
‘நீ என்ன செய்வாய்’ என்றார் ஞானி.
‘நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்’ என்றான் அரசன்.
‘எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.’ என்றார். சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.
‘அது கிடக்கட்டும்’ என்ற ஞானி ‘நீ இப்போது எப்படி இருக்கிறாய்’ என்று கேட்டார்.
‘நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்’
‘முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?’
‘இல்லை’
‘அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?’ விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.
‘அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல.. (இது) எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்’ என்று கூறி விடைபெற்றார் ஞானி.
ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை. மூலாதாரத்தில் ஒருமுகப்படுத்தி மென்மையான சக்தியை எழுப்புகிறான் அவன். விருப்பு, வெறுப்பு அற்ற அவனது மனம் சிறு குழந்தையினுடையது போன்றது. இயேசுவிடம் சீடர்கள் கேட்கின்றனர். ‘விண்ணரசு யாருக்கு உரியது. நாங்கள் விண்ணுலகில் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று.’
‘ஒன்றும் செய்ய வேண்டாம். ‘ என்கிறார் இயேசுநாதர். ஒரு குழந்தையை சுட்டிக்காட்டி ‘உங்கள் மனம் இந்த குழந்தையினுடையது போல் ஆகி விட்டால் விண்ணரசு உங்களுடையது’ என்றார்.
குழந்தை அனைத்தையும் நம்பும். அனைத்தையும் ஏற்கும். கண்டதை அப்படியே சொல்லும். குழந்தையிடம் அறியாமை உண்டு. நாம் அறியாமையில் இருந்து அறிந்த நிலைக்கு வந்தோம். பின்பு அதையும் கடந்து விடல் வேண்டும். அதுவே ஞானத்திற்கு மேலான நிலை.
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார் ‘காலில் ஒரு முள் தைத்தால் மற்றொரு முள்ளால் அதனை அப்புறப்படுத்துவோம். அந்த முள் இருந்த இடத்தில் இந்த முள்ளை வைப்பதில்லை. இரண்டையும் தூக்கி தூரப் போடுவோம். அது போல் அஞ்ஞானம் என்ற முள்ளை ஞானத்தால் எடு. பிறகு இரண்டையுமே தூக்கி எறிந்து விடு’ என்று.
அத்தகையவன் செயல்படுவான். ஆனால், அவன் செயல்களால் அவனுக்கு எந்த பலனும் இருக்காது. அவன் தகுதி அவனை தலைமையிடத்தில் வைக்கும். ஆனால் அவன் ஆதிக்கம் செலுத்த மாட்டான். அவனிடம் நேசித்தல் என்பது மட்டும் இருக்கும்.
ஆழ்ந்த உள்ளுணர்வினால் அவன் அனைத்து மாசுகளும் நீங்கியவனாக இருப்பான். ‘இத்தகையவன் தான் சுவர்க்கத்தின் கதவுகளை மூடித்திறக்கும் தாய் பறவை போன்றவன்’ என்று லா வோத் ஸ கூறுகிறார். நான்கு திக்குகளையும் ஊடுருவும் பிரகாசம் அவனிடம் உண்டு. உள்ளும், புறமும் ஊடுருவிய ஒரு வெட்டவெளியை உணர்ந்தவன் அவன். இதையே சிவவாக்கியரும் சொல்கிறார். அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைத்த வாசலும் சொல்லு வாசல் ஓரைந்தும் சொம்மி விம்மி நின்றதும் நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பதில்லையே.
ஆழ்ந்த தியானம் அமைதியை கொடுக்கும். அது புதிய கதவுகளை திறக்கும்.

Wednesday, June 3, 2015

யானைகள்

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில்கட்டி இருக்கிறது,
இவ்வளவு பெரிய உருவம் கொண்டயானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.
அருகில் இருந்த பாகனிடம் இந்த
யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான்.
இந்த யானைகள் சிறியதாக இருக்கும் போது இந்த கயிற்றால் தான் கட்டினோம்.
அப்போது அது இழுக்கும் போது இந்த கயிறுகள் அறுகவில்லை.
யானைகள்
பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான்.
அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள்
கட்டுண்டு கிடக்கின்றன.
இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகின்றோம்.
தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படியே தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்…!
முயற்சிக்க மறந்தாலும் பகிர மறக்காதே ..! -www.v4all.org 

Thursday, March 5, 2015

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான பன்னிரு பெருமாள்

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான
பன்னிரு பெருமாள்
ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
கடவுளின்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
எனும் பஞ்ச காரியங்களில்
காக்கும் செயலை செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான பெருமாளின்
அவதாரத்தில் ஏந்த அவதாரம் ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன அவதார பெருமாளின் கோவிலுக்கு உங்கள் நட்சத்திர நாளில் சென்றோ அல்லது
அந்த அவதார மூர்த்தியின் திருவுருவ படம் வைத்து
அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!

Thursday, October 16, 2014

ஆறு உணர்வுகளையும் ஆறு உணர்வுகள் என்று ஏன் சொல்லக்கூடாது ?

மனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்களின் அறிவு ஐந்து   என்றும் பகுத்தறிவு ஆறாம் அறிவு என்பதும்  வழக்கு. ஐந்து  அறிவு என்பது ஐந்து  புலன்களின உணர்வு. உணர்வுகளை பிரித்துப்  பார்த்து உணர்வது பகுத்தறிவு.

அப்படியானால் ஆறு உணர்வுகளையும் ஆறு உணர்வுகள்  என்று ஏன் சொல்லக்கூடாது ?
         உணர்வு என்பது தன்னால் இயற்க்கையாக  இயங்குவது. அது உள்ளுணர்வு. யாரும்   சொல்லிகொடுத்து செய்வதில்லை. பிறந்த கன்று  தாயைத தேடி ஓடுவதும் பால் குடிப்பதும இயற்க்கை. அது அறிவாகாது. உணர்வு.

      அறிவு என்பது எப்பொருள் யார் யார் வாய் கேர்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.  மெய்ப் பொருள் காண்பது எப்போது ? உணர்வுகளின் அனுபவமும் மற்றவர்களிடம்  பார்ப்பதும்  கேட்பதுவும் மனிதனுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது  தனக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னேறுவதை மனிதன் விரும்புகிறான். அவற்றைப் பற்றிக்கொள்கிறான். அது அறிவு.  அதையும்  விழ்ப்புணர்வு என்றும் சொல்லலாம்.

       கற்கால மனிதன் இப்படித்தான் நாகரிக மனிதனாக மாறி இருப்பான். கற்கால மனிதன் உணர்வுகளால் உந்தப்பட்டு செயல் பட்டான். அதில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டான்.

     அப்படியானால் மனிதனின் அடிப்படையானது உணர்வுகள் தான். அறிவு இல்லை. உணர்வு கொண்டு தான் இயங்குகிறான்.

    பொதுவான அனைத்து உயிர்களின் உணர்வுகள் --  புலன் உணர்வுகள் பார்த்தல்,கேட்டல்,நுகர்தல், சுவைத்தல், போக முதலில் பசி உணர்வு. அடுத்து பாதுகாப்பு உணர்வு, இச்சை உணர்வு.     பிரசனைகள் வரும் போது பய உணர்வு, பின் எச்சரிக்கை உணர்வு இப்படி உயரினங்கள் வாழத் தொடங்குகிறது.

  மனிதன் மட்டும் விழிப்புணர்வு கொண்டு இயங்குகிறான். முதலில் பார்த்து கேட்டு தெரிந்து கொள்கிறான். கண்டதையும் பார்த்ததையும் மனதில் பதித்து வைத்துக் கொண்டு எச்சரிக்கையாக அடுத்த நடவடிக்கைள் செய்கிறான்.

URS -WWW.V4ALL.ORG 

Sunday, July 13, 2014

சர்வம் மார்க்கெட்டிங் மையம்

முதலில் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும்
சந்தையில் ஒரு பொருளை எடுத்துச் செல்பவர்கள் ஒரு வாடிக்கையாளரை திருப்திபடுத்திவிட்ட பிறகு அந்த வாடிக்கையாளரை எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது பொருளை வாங்கிய வாடிக்கையாளர் பொருளின் தரத்தைப் பற்றி என்ன நினைக்கின்றார் அதன் நிறைகள் யாவை குறைகள் யாவை
போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து கருத்துக்களை கேட்டும் அதற்கேற்றபடி மாற்றங்கள் ஏற்படுத்திக் கொடுத்தால் அந்த வாடிக்கையாளருக்கு மார்க்கெட்டிங் செய்யும் ஒரு தனி நபரின் மேல் ஒரு மரியாதையும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுகிறது. அதன் பின் அந்த தனி நபர் எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் அவர் எந்தப் பொருளை விற்பனைக்கு எடுத்துச் சென்றாலும் அவர் வாடிக்கையாளரால் அங்கீகரிக்கப்படுவார். அந்த அங்கீகாரம் ஒரு தனி மனிதனுக்கும் அவர் செய்யும் சேவைக்கும் கிடைக்கும் சான்றிதழாகும்.
இப்படி பல வகையான வாடிக்கையாளர்களை தன் வசத்தில் வைத்திருக்கும் பிரதிநிதிகள் பிற்காலத்தில் சொந்த தொழில் ஏற்படுத்தி அதிலும் தன்வசம் உள்ள வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு ஸ்திரமான தளத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். எனவே தொடர்ந்து ஒரு வாடிக்கையாளரிடம் நல் மதிப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்திக் கொள்வது இருவருக்கும் நல்லது. இதற்கு பணி புரியும் நிறுவனங்கள் எப்போதும் உதவும் என்று கூறமுடியாது. ஆதலால் அவரவர்களாக முயற்சி செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தில் எப்போதும் இருக்கும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். சிலர், வாடிக்கையாளர் பற்றிய முழு தகவல்களையும் வைத்துக் கொண்டு முக்கிய தினங்களில் வாழ்த்து தெரிவிப்பது மற்றும் புது பொருட்கள் சந்தையில் அறிமுகமான தகவல்களை அவ்வப்போது செய்தி அனுப்பியும் தம் சேவையை உணர்த்தலாம்.
மார்க்கெட்டிங் அணுகுமுறைகள் பலவிதமானவை. தம் பொருட்களுக்கு தகுந்தாற்போலும், நுகர்வோர்களுக்கு தகுந்தாற்போலும் அணுகுமுறைகளை கடைபிடிப்பது நல்லது. இதை ஒவ்வொன்றையும் பணிபுரியும் நிறுவனங்கள் கற்றுத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஒரு பொது அறிவின் மூலமே எது சிறந்த அணுகுமுறைஎன்று அனுமானிக்க வேண்டும். மார்க்கெட்டிங் அணுகுமுறைகள் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
முதலில் வாடிக்கையாளரின் மன நிலையைப்பற்றியும் அவரின் ஓய்வு நேரம், வேலை நேரம் போன்றவற்றைப் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டு வாடிக்கையாளரின் முழு அனுமதியின் பேரில் அவரை சந்திப்பது நல்லது. ஏனென்றால் நமக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை நாம் பயனுள்ளதாக முழுவதும் உபயோகப்படுத்தலாம். அப்போது வாடிக்கையாளரும் நாம் சொல்வதை கவனிக்கும் மனநிலையில் இருப்பார். இதுதான் உரையாடுவதற்கு சரியான நேரம். சில பொருட்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கு இந்த அணுகுமுறைபயணளிக்கிறது. குறிப்பாக குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்கள். அதற்கு நேரடியாக வாடிக்கையாளரை சந்தித்து பொருளைப்பற்றி விளக்கி விற்றுவிட வேண்டும். முன் அறிவிப்பின்றி இப்படி அணுகுவதை இர்ப்க் ஸ்ரீஹப்ப்ள் என்று கூறுவர். திடீரென்று பொருட்களைப் பற்றி எடுத்துக்கூறி விளம்பரம் செய்வதும் விற்பனை செய்வதை என்ங்ழ்ண்ப்ப்ஹ ஙஹழ்ந்ங்ற்ண்ய்ஞ் என்று கூறுவர்.
அடுத்த சில வகையான பொருட்களை பலர் கூடியிருக்கும் இடத்தில் விவரிக்கும் போது அந்தப் பொருள் பற்றிய தகவல் பலர் மனதில் செல்லும். பிறகு அவர்கள் வாயிலாக அது மேலும் பரவும். இதை யண்ழ்ஹப் ஙஹழ்ந்ங்ற்ண்ய்ஞ் என்று கூறுவர். இந்த அணுகுமுறைவிலை உயர்ந்த பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கு பெரிதும் உதவும்.
ஒரு சேவையை மையமாக வைத்து மார்க்கெட்டிங் செய்வதற்கு வேறுவிதமான அணுகுமுறைதேவைப்படுகிறது. உதாரணமாக இன்சூரன்ஸ் மற்றும் இதர நிதி சார்ந்த மார்க்கெட்டிங் செய்யும் போது, வாடிக்கையாளர்களின் தொலைநோக்கு பார்வையின் முக்கியத்தை சார்ந்து இருத்தல் அவசியம். அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளரிடம் சேவையின் தரத்தை விளக்கும் சான்றுகள் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நமக்காக நம்மைப்பற்றி பேசக்கூடிய ஒரு வாடிக்கையாளரின் விபரங்களை கொடுத்து நம் சேவையைப்பற்றி கருத்துக்களை அறிந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யலாம். சேவையை மையமாக வைத்து மார்க்கெட்டிங் செய்யும்போது மூன்றாவது நபரின் கருத்து எப்போதும் எடுபடும்.
ஆகவே மார்க்கெட்டிங் புரிபவர்கள் தம்மைப்பற்றி நல்ல ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்த எப்போதும் முயன்று கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றி நல்ல கருத்து நிலவும் நிலை வந்தால் நம் கையில் எந்தப் பொருள் கிடைத்தாலும் நம்பிக்கையுடன் அதை சந்தைக்கு எடுத்துச் செல்லலாம். (-பேரா. சதாசிவம்)


Yours Happily 

Dr.Star Anand
www.v4all.org