Showing posts with label how to solve problem. Show all posts
Showing posts with label how to solve problem. Show all posts

Monday, October 5, 2015

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.
அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம்.
தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை.
எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.
வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,
"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.
நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?"என்று கேட்டார்.
"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம்.
பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன்.
பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன்.
இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.
நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

Friday, August 21, 2015

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

வியாபார காட்சிகள், அரங்குகள், கூட்டங்கள் மற்றும் பிற பொருட்காட்சிகளில் வெளிக்காட்டுவது உங்களுக்கு தனிப்பட்ட விற்பனை வாய்ப்புகளை அளிக்கும், மேலும் இவற்றால் புதிய முதலீடுகள், விநியோகத்தர்கள் ஆகியவற்றை உருவாக்கவும், உங்களுக்கான போட்டியை அறிந்து கொள்ளவும், நெட்வொர்க்கிங் செய்வது போன்றவற்றால் விளம்பரம் பெற முடியும். சுருக்கமாக சொல்வதானால், பல வாரங்கள் அல்லது மாதங்கள் வீட்டிலிருந்து நீங்கள் செய்யக்கூடியவைகளை ஒரே வியாபாரக் காட்சியில் நீங்கள் செய்து முடிக்க முடியும். மேலும் அது உங்கள் பணத்தையும் சேமிக்கும் -- Center for Exhibit Industry Research –இன் ஆய்வின்படி நேரடியாக களச் செயற்பாட்டில் முதலீடு பெற செலவாவதை விட 62% குறைவாக வியாபாரக் காட்சிகளில் செலவாகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் பெறுவதற்கு நீங்கள் கவனமாக திட்டமிட வேண்டும். அதாவது சரியான வியாபாரக் காட்சியைத் தேர்ந்தெடுப்பது, தெளிவான இலக்குகளை அமைப்பது, செயல்திறமிக்க காட்சியை உருவாக்குவது மற்றும் உங்கள் இருப்பை விளம்பரப்படுத்துவது போன்றவையாகும். இவை அனைத்துமே நீங்கள் வியாபாரக் காட்சிக்கு செல்வதற்கு முன்பே செய்யப்பட வேண்டும். உங்கள் வியாபாரக் காட்சியிலிருந்து அதிகமான பயன்களைப் பெறுவது பற்றி அறிய பின்வரும் படங்களை கிளிக் செய்யவும்.
ஆயிரக்கணக்கான வியாபாரக் காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்படுகின்றன, அதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் முதலீடு, நேரம் மற்றும் பணத்துக்கு சிறந்தப் பயனைப் பெறுதல் மிகவும் கடினமான ஒன்றாகும்.
உங்கள் உற்பத்திப் பொருளுக்கு அல்லது சேவைக்கு பொருந்தும் வியாபாரக் காட்சிகளைத் தெரிவு செய்ய தொடங்குங்கள். இணையத்தளத்தில், பின்வருவதில் ஒன்றைப் போன்ற வியாபாரக் காட்சி தேடல் தளங்களை முயற்சிக்கவும்:
வியாபாரக் காட்சிகளைப் பற்றி அறிவதற்கான மற்றொரு வழி, உங்களுடைய தொழிற்துறையின் வியாபாரச் சங்களாகும், ஏனெனில் பெரும்பாலான காட்சிகள், கூட்டங்கள் தொழிற்துறை குழுக்களால்தான் நடாத்தப்படுகின்றன.
சரியானதைத் தேர்ந்தெடுக்க இதோ மேலும் சில தகவல் குறிப்புகள்:

எண்களின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காதீர்கள்

உங்கள் உற்பத்தி அல்லது வாடிக்கையாளர்களைச் சேர்க்காத வரை, பெரிய வியாபாரக் க்காட்சிகளுக்கு வரும் மக்கள் உங்கள் வியாபாரத்திற்கு நேர விரயமாக இருக்க வாய்ப்புண்டு. கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களை உன்னிப்பாக நோக்கி, அங்கு வரும் நபர்கள் உங்கள் வாடிக்கையாளர்களாக இருக்க முடியுமா என்பதை மதிப்பிடுங்கள். காட்சி முகாமையாளர் உங்களுக்கு இந்த தரவுகளைத் தரக்கூடும்.

உங்கள் வாடிக்கையாளர்களை உதவும்படி கோருங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டு அவர்கள் எந்த வியாபாரக் காட்சிகளில் பங்கேற்கிறார்கள் என்று அறியுங்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வியாபாரக் க்காட்சிகளில் பிற வாய்ப்புடைய வாடிக்கையாளர்களும் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. உங்கள் போட்டியாளர்களிடமும் பேசி அவர்களுக்கு எந்தெந்த வியாபாரக் காட்சிகள் அதிக பயன் தந்தது என்று அறியவும்.

அதிக நேரத்துக்கு முன்பே இவற்றை செய்து முடியுங்கள்

ஒரு வியாபாரக் காட்சியை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி, நேரடியாக சென்று பார்ப்பதுதான். நீங்கள் பதிவு செய்வதற்கு முன்பு வியாபாரக் காட்சிக்கு ஒரு பார்வையாளாராக செல்லுங்கள். வியாபாரக் காட்சி செயல்திறமிக்கதாகவும் சிறப்பாகவும் இருக்கிறதா? வியாபாரக் காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் வாடிக்கையாளர்களாகும் வாய்ப்புள்ளவர்களா? பிற வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்கள் யார், மேலும் உங்கள் உற்பத்திகள்/சேவை இதில் எங்கு பொருந்தும்? அங்குள்ள மக்களை அணுகி நுணுக்கமாக கண்காணியுங்கள்.

கவனமாக மதிப்பிடுங்கள்

வியாபாரக் காட்சியின் சாத்தியங்களைப் பட்டியலிட்ட பின்னர், உங்கள் நோக்கங்களுக்கு இந்த வியாபாரக் காட்சி சரியானதா என்பதைத் தீர்மானிக்க பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:
  • அனைத்து வகையான வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை கவரும் அளவுக்கு இது பெரிதான வியாபாரக் காட்சியா – ஆனால் அதே நேரம் உங்கள் தொழிலின் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய அளவுக்கு பெரிதாக இல்லையா?
  • உங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புவியியல் ரீதியாக சரியான இடத்தில்தான் அமைந்துள்ளதா – அவர்கள் உள்ளூரா, வட்டாரம் சார்ந்தவர்களா, தேசிய அளவில் உள்ளவர்களா, அல்லது சர்வதேச அளவில் உள்ளவர்களா?
  • புதிய வியாபாரத்தை ஈர்க்கக்கூடிய மற்றும் புதிய முதலீடுகளைப் பின் தொடரக் கூடிய காலத்தில்தான் அது திட்டமிடப்பட்டுள்ளதா?
  • வியாபாரக் காட்சியின் விளம்பரதாரர்கள் நம்பகமானவர்களா மற்றும் நிர்வாகத்துக்கு வெற்றிகரமான முன்னைய நிகழ்வுகள் உள்ளனவா?
கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீர்கள்

சில பிரபலமான வியாபாரக் காட்சிகள் விரைவில் பூர்த்தியாகிவிடும் நீண்ட நேரம் காத்திருந்தால், காத்திருப்பு பட்டியலில் நீங்கள் இடம்பெறும் வாய்ப்பு அதிகம். மேலும், விரைவில் வியாபாரக் காட்சிக்காகப் பதிவு செய்தால், உங்கள் அரங்கில் நல்ல சிறந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பும் அதிகம்.
தெளிவான இலக்குகளை அமைத்தல்

நீங்கள் முதலீடு செய்யும் நேரம், பணம் மற்றும் திறனுக்கான அதிகமான பயனைப் பெற, அங்கு இருப்பதற்கு உங்களுக்கான நோக்கம் மற்றும் அளவிடக்கூடிய இலக்குகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதே ஆகும். வியாபாரக் காட்சிக்கு முன்னர், அது நிகழும்போது மற்றும் அதற்கு பின்பு நீங்கள் செய்யும் அனைத்தும் இந்த இலக்குகளை அடைவதற்கு எவ்வகையில் பயன்படும் என்ற அடிப்படையில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

வியாபாரக் காட்சிககு சாத்தியமான இலக்குகள்

வியாபாரங்கள் வியாபாரக் காட்சியில் பங்கேற்பதற்கான சில காரணங்கள் பற்றி இங்கு விவரிக்கப்படுகின்றன. இவற்றில் பலவற்றை உங்கள் இலக்குகள் உள்ளடக்கியிருக்கலாம், அல்லது உங்கள் சிறுவியாபாரத்திற்கு முக்கியமான பிறவற்றைக் கொண்டிருக்கலாம்:
  • விற்பனை கட்டளைகளைப் பதியுங்கள்
  • போட்டி பற்றி ஆராயுங்கள்
  • இட மாதிரிகளைக் கண்டறியுங்கள்
  • எதிர்கால விற்பனைக்கான முன்னேற்பாடுகளை உருவாக்குங்கள்
  • சரியான நபர்களின் பெயர்களுடன் மெயிலிங் லிஸ்ட்டை உருவாக்குங்கள்
  • சிறந்த அல்லது மலிவான விநியோகத்தர்களைக் கண்டறியுங்கள்
  • நடைமுறை வாடிக்கையாளர்களுடன் உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள்
  • ஊடகச் செய்திகளைப் பெறுங்கள்
  • புதிய உற்பத்திப் பொருளை நோக்கிய ஆர்வத்தை உருவாக்குங்கள்
  • தொழிற்துறையில் உங்கள் நிறுவனத்தைப் பிரபல்லியப்படுத்துங்கள்
உங்கள் அரங்கின் பணியாளர்கள் போதுமான அளவுக்கும் நேர்த்தியானவர்களாகவும் இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்

இதை தனியாக செய்ய முடியாது. உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், நீங்கள் அரங்கை விட்டு வெளியேறும்போது, இடைவேளைக்கு வெளியே செல்லும்போது, அல்லது போட்டியை அவதானிக்க வெளியே செல்லும்போது குறைந்தது ஒரு நபராவது உங்கள் "இடத்தை" நிரப்ப இருக்க வேண்டும். ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் ஒரு நபரை வைத்திருப்பது சிறந்த வழியாகும். சிறந்த தோற்றத்தில், சிறந்த பயிற்சியுடன், சிநேகிதபூர்வமாகவும் அறிவுடனும் உங்கள் பணியாளர்கள் இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை அடைவதற்கான அவர்களின் பங்கை அறிந்திருக்க வேண்டும். சம்பளம் பெறும் பணியாளர்களாக உங்களிடம் பணியாளர்கள் இல்லையென்றால், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பகுதி நேர ஊழியர்கள் போன்றோரை நாடலாம்.

உங்கள் செய்தியைத் துல்லியமாக வெளிப்படுத்துங்கள்

இரண்டு அல்லது மூன்று முக்கிய யோசனைகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் நீங்களும் உங்கள் பணியாளர்களும் அதிகமான பயிற்சிகளைக் கொண்டிருங்கள், இதனால் "செய்தியில் குறிப்பாக இருக்கலாம்". கிராஃபிக்ஸ், காட்சிக்கு முன்பான விளம்பரம், மற்றும் விபரக்கொத்து விளம்பரம் போன்றவற்றை உங்கள் செய்திச் சுருக்கத்தில் திட்டமிடுங்கள்.

பாதீட்டைத் தயாரியுங்கள்

எந்த வியாபாரக் காட்சியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் மற்றும் உங்கள் இலக்கு ஆகியவற்றைத் தீர்மானித்த பின்னர் ஒரு பாதீட்டைத் தயாரியுங்கள். ஒரு பாதீடு இல்லையெனில் செலவுகள் எளிதாக கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடும் (உதாரணமாக, கடைசி நேர நெருக்கடியான கொள்வனவு செய்யும் கூட்டம்). மேலும் இவை உங்களுடைய சிறந்த திட்டங்களை அழிக்கக் கூடும். உங்களுடைய மொத்த பாதீட்டில் நான்கிலொரு பங்கு இடத்துக்கான செலவில் உள்ளபடி திட்டமிடுவது சிறந்ததாகும். எனவே இடத்துக்கான வாடகையாக நீங்கள் என்ன செலவழிக்கிறீர்கள் என்று தெரியும்போது, அதனை நான்கால் பெருக்கி உங்கள் செலவுகளைப் பற்றி தூர சிந்தனையைப் பெறுங்கள். இதில் உங்கள் தனிப்பட்ட செலவுகளைச் சேர்க்காதீர்கள்.
உங்கள் அரங்கு எங்கு அமைந்துள்ளது என்பதும் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதும் உங்கள் வியாபாரக் காட்சியின் வெற்றியைப் பாதிக்கும். பின்வரும் தகவல் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

அதிக மக்கள் வரும் அமைவிடத்தைக் கண்டறியுங்கள்

உங்களுக்கான இடத்தைத் தரிவு செய்யும் முன்னர் நடைபாதை வழியை கவனிக்கத் தவறாதீர்கள். பொதுவான ஒரு வியாபாரக் காட்சி தளத்தில் சில இடங்களில் அதிக அளவிலான நபர்கள் வருவார்கள். நுழைவாயில்கள். உணவகங்கள், ஓய்வகங்கள், அல்லது பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் உள்ள இடங்களில் அரங்கினை அமைக்க முயற்சியுங்கள். வழிமுடியும் இடங்கள், சரக்கு ஏற்றி இறக்குமிடம், முறையற்ற வழிகள், அல்லது பிற குறைவாக மக்கள் வரக்கூடிய இடங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு அரங்கினைப் பகிர்ந்து கொள்வதை கருத்தில் கொள்ளுங்கள்

புதிதாக வியாபாரக் காட்சியில் பங்கேற்போர் அதிகம் விரும்பாத இடங்களைத்தான் நாடுவார்கள். இதனைத் தவிர்க்க நல்லதொரு வழி இடத்தில் உள்ள ஒரு அரங்கினை தொடர்புடைய ஒரு தொழிலில் இயங்கும் சக நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுவதாகும். உங்கள் விற்பனை பிரதிநிதிகள், அல்லது உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைப் போல விரிவாக நிலைப்பெற்ற வியாபாரக் காட்சியாளர் ஆகியோரிடம் கதைக்க முயற்சியுங்கள்.

உணர்வுப்பூர்வமாக ஊக்கப்படுத்துங்கள்

உங்கள் அரங்குக்கு வரும் மக்கள் உங்கள் உற்பத்திப் பொருளை அல்லது சேவையை அனுபவித்து பார்க்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் தொட்டு, கண்டு, உணர்ந்து, கேட்டு அல்லது சுவைத்துப் பார்க்க அனுமதியுங்கள். அலங்காரமான தலையணிகளை விற்கிறீர்களா? அதனை முறையான அமைப்பில் காட்சிப்படுத்துங்கள், மேலும் வாங்குபவர்கள் தொட்டு பார்ப்பதற்கான மாதிரிகளையும் வைத்திருங்கள். ஒரு புது மென்பொருள் தொகுப்பை உருவாக்கியிருக்கிறீர்களா? அந்த மென்பொருளை சோதித்து பார்க்க பல கணனிகளை வைத்திருங்கள்.

எளிமையாக வைத்திருங்கள்

அரங்கு அலங்காரத்தில் மிகவும் பகட்டாக காண்பித்து கொள்ளாதீர்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய ஒரு பெரிய படமானது பல சிறிய படங்களை விட சிறந்தது. பெரிய உரைகளை விடவும், உங்கள் வியாபாரத்தை விவரிக்கும் ஒரு வாசகம் சிறந்ததாகும்.

தந்திரங்கள்

தந்திரங்கள் மற்றும் சிறு பரிசுகள் தந்து உங்கள் அரங்குக்கு மக்களை வரவழைக்கலாம். ஒரு நேர்காணலை நடாத்துங்கள், சத்தமாக உற்பத்திப் பொருளின் விளக்கக்காட்சிகளை மேற்கொள்ளுங்கள், மிட்டாய்களைத் தாருங்கள். இந்த தந்திரம் உங்கள் நிறுவனத்தின் மதிப்பையும், உங்கள் வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறதா என்பதை மட்டும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதை யாருக்கும் தெரிவிக்காவிட்டால் சிறந்த வியாபாரக் காட்சி திட்டமிடல் பயனளிக்காது போகலாம். ஏறத்தாழ மூன்றிலொரு வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பது, வியாபாரக் காட்சிக்கு அவர்கள் வருவதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்று CEIR அவதானிக்கப்பட்டுள்ளது. உறுதியாக முன்னரே காண்பிக்கப்படும் விளம்பரங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன காண்பிக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றி தெரிவிக்கிறன. இந்த தகவல் குறிப்புகள் உதவக்கூடும்.

தொலைபேசிகளைத் தொழிற்படச் செய்யுங்கள்

வியாபாரக் காட்சிக்கு 6 வாரங்கள் அல்லது ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, உங்களுடைய முதன்மை வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புடைய வாடிக்கையாளர்கள் போன்றோரை அழைத்து சந்திப்புகளைத் திட்டமிடுங்கள். பெரும்பாலான நபர்கள் காட்சிக்கு அதிகமான வேலைகளுக்கு மத்தியில் வருவார்கள், பிற அரங்குகளை காண்பதற்கு அவர்களுக்கு மிக குறைவான நேரம் அல்லது நேரமே இல்லாமல் இருக்கும். அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் ஒரு வாரம் அல்லது காட்சிக்கு முன்பாகவே நிச்சயப்படுத்திக் கொள்ள மறக்காதீர்கள்.

அஞ்சல்களை அனுப்புங்கள்

முன்கூட்டியே பதிவு செய்த பங்கேற்பாளர்களின் அஞ்சல் பட்டியலை வாங்கி வியாபாரக் காட்சியின் நிர்வாகம் வழங்கக்கூடும். உங்கள் அரங்குக்கு வருவதால் உண்டாகக்கூடிய நன்மைகள் இரண்டை விவரிக்கும் எளிமையான அஞ்சலைப் பயன்படுத்த முயற்சியுங்கள். உங்களுடைய அரங்கு இலக்கத்தையும் சேர்த்து சில தொடர்பு விவரங்களும் அதில் இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பத்திரிகைகளைப் பயன்படுத்துங்கள்

வியாபாரப் பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் போன்றவற்றில் வியாபாரக் காட்சியை உள்ள்டக்கிய செய்திக்கட்டுரைகளை பிரசுரியுங்கள். உங்கள் செய்திக்குறிப்புகளில் உங்கள் அரங்கைப் பற்றிய மதிப்புடைய செய்திகள் இருக்கலாம் – ஒரு புதிய உற்பத்திப் பொருள் அறிமுகம் அல்லது விசேட விளக்கக்காட்சி போன்றவை. வியாபாரக் காட்சிக்காக பல ஊடகவியலாளர் தொகுப்புகளையும் தயார் செய்து கொள்ள வேண்டும், மேலும் ஊடகவியலாளர்களின் அறைகளுக்கு அனுப்பி வையுங்கள், இதனால் ஊடகவியலாளர்களிடம் அவை எளிதில் சென்றடையும்.

வியாபாரக் காட்சிக்கான வெளியீடுகளை தேடுங்கள்

வியாபாரக் காட்சி மட்டுமே பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது அதிக செலவாகக்கூடியதாகவும், செயல்திறமற்றதாகவும் இருக்க கூடும். இந்த வெளியீடுகள் குறைவான கவனத்தையே பெறும், மேலும் வியாபாரக் காட்சிக்கு வருகைதரும் மக்கள் வீணாக்கும் காகிதங்களின் அளவில் எளிதில் தொலைந்து போய்விடும்.
உங்கள் பின் தொடர் திறமுறைத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கான உகந்த நேரம் வியாபாரக் காட்சி தொடங்குவதற்கு முன்புள்ள நேரமாகும். இம்முறையில், உங்களுடைய வாய்ப்புடைய வாடிக்கையாளர்களுக்கு வியாபாரக் காட்சி மறப்பதற்கு முன்பே உங்கள் பின்னூட்டல் செய்தி அவா்களை சென்றடையலாம். பின் தொடருதல் பற்றி நீங்கள் அறியவேண்டிய விடயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

பின் தொடருதலை முதன்மையானதாகக் கருதுங்கள்

Center for Exhibition Industry Research –இன் கருத்துப்படி 80% காட்சி வருகைகள் பின் தொடரப்படுவதில்லை. வருகை தந்தவர்களை பின் தொடருவது வியாபாரக் காட்சிக்கு பின் உங்களுடைய முதல் பணியாக இருக்கும். – நீங்கள் அலுவலகத்துக்கு வராத நாட்களில் என்னென்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வது போன்ற வேறு எந்த பணியை விடவும் இதை முதன்மையானதாக கருதுங்கள்.

பின் தொடருதல் அஞ்சலை வியாபாரக் காட்சிக்கு முன்பாகவே பதியுங்கள்

வியாபாரக் காட்சிக்கு பின்னருள்ள அஞ்சலானது ஒரு நன்றி குறிப்பு அல்லது அட்டைக்குறிப்புடன் கூடிய ஒரு கைந்நூல் போன்றவையாகவும் இருக்கலாம். வியாபாரக் காட்சிக்கு புறப்பட முன்னர் இதனை பதிந்து அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரக் காட்சியிலிருந்து திரும்பிய உடனே அதனை அனுப்பி வைக்க முடியும்.

வியாபாரக் காட்சியின் போதே முதன்மை வாடிக்கையாளர்களை தகுதிப்படுத்துங்கள்

முக்கியத்துவம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் வருகை தந்தவர்களை வரிசைப்படுத்துங்கள், இந்த முக்கியத்துவங்களை காட்சிக்கு பின்னரான செயல்பாடுகளின் அடிப்படையில் நோக்குங்கள் வியாபாரக் காட்சி முடிந்து ஒரு வாரத்துக்குள் உங்களுடைய முதன்மையான வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழையுங்கள் – நீண்ட காலம் கடத்தினால் அவர்கள் வாடிக்கையாளர்களாக மாறும் வாய்ப்புகள் அரிதாக்கூடும். அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையான பின் தொடர் அஞ்சலை அனுப்புங்கள்.

உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்

அரங்கில் நீங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் காப்பாற்றுங்கள். போதுமான அளவு கைந்நூல்களையும், உற்பத்திப் பொருட்கள் பற்றிய தாள்களையும் வைத்திருங்கள், இதன் மூலம் கோரப்படும் தகவல்களை கூறியது போலவே நீங்கள் அனுப்பலாம்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Monday, July 27, 2015

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்


அ-
+
Temple images

காசி: காசியே சிவனின் தலைமைக்காவலரான பைரவரின் பிரதான தலமாகும்.  காசி விஸ்வநாதர் கோயிலின் வடக்கே பைரவநாத்தில் உள்ள காலபைரவர் சன்னதியே பைரவரின் தலைமையிடம் ஆகும். இந்த சன்னதி பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். காசியில் இறப்பவர்களின் பாவபுண்ணியக்கணக்குகளை சித்ரகுப்தன் எழுதாமல், காலபைரவரே எழுதி பலன்களை அளிக்கின்றாராம்.
ராமகிரி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி கால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது. இந்த பைரவ ஆலயத்தில் கால பைரவர் தனது சக்தியான காளி தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவொற்றியூர்: சென்னை - பாரிமுனையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தியாகராஜசுவாமி ஆலயத்தில் (மாணிக்கத் தியாகர் - வடிவுடையம்மை) வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சன்னதிக்கு எதிரே சூர சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது.
சீர்காழி சட்டநாதர் ஆலயம்: சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும். திருஞான சம்பந்தர் அவதரித்த  மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்திலுள்ள மலைக்கோயில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது.
காஞ்சிபுரம் வைரவேச்சுரம்: திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது. இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான். இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது.
÷க்ஷத்ரபாலபுரம் கால பைரவர்: பைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.
தில்லையாடி கால பைரவ விநாயகர்: மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில் பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.
அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்: காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.
வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர். தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.
வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த வைரவன்பட்டியில் மகா பைரவர் சிவகுமரனாகத் தனிச்சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.
சென்னிமலை: ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது.
திருப்பத்தூர் யோக பைரவர்: யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இலுப்பைக்குடி வடுக பைரவர்: காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள இந்த இலுப்பைக்குடித் தலத்தில் தான்தோன்றீஸ்வரர் - வடிவுடையம்மன் மூலவர் வடிவங்களாகத் திகழ்ந்தாலும் பரிவாரத் தெய்வமாகத் திகழும் வடுக பைரவரே சிறப்புத் தெய்வமாக வழிபடப்படுகிறார். புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோயில் வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், திருமயிலை கபாலீஸ்வரர், திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்: திருப்பதி
ஏழுமலையான் சக்கரம் ஸ்வர்ண ஆகர்ஷண சக்கரம் என்பதால் பொன் பொருள் குவிகிறது.
சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார்.
விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார்.
ஆடுதுறை: ஆபத் சகாயேச்வரர் கோயிலில் கால பைரவர் மட்டுமல்லாது ஸ்வர்ண பைரவரும் இருக்கிறார்.
தபசுமலை: புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தபசு மலையில் கௌசிக முனிவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து ஸ்வர்ண பைரவர், பைரவி உற்சவ மூர்த்தங்களை அமைத்துள்ளார்.
காரைக்குடி: இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
படப்பை: தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் ஸ்தலமுள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோயில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
தாடிக்கொம்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ÷க்ஷத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.
பஞ்சமுக பைரவர்: முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள்பாலிக்கிறார்.
முக்கிய பைரவர் ஸ்தலங்கள்:
வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.
திருக்கோஷ்டியூர்: பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்
பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்
இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.
பைரவபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது.
சிவபுரம்: இது கால பைரவ ÷க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
எமனேஸ்வரம்: எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
காளையார் கோயில்: இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருநாகை: நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.
மதுரை: இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும்,  கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.
திருவண்ணாமலை: இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.
திருமயம்: இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.
பொன்னமராவதி புதுப்பட்டி: இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
சேந்தமங்கலம்: இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.
முறப்ப நாடு: எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.
திருவாஞ்சியம்: தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.
திருச்சேறை: கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.
திருப்பாச்சேத்தி: மதுரை - ராமேஸ்வரம் சாலையில்  உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
நாகை: இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம்: வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.
காளஹஸ்தி: இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.
பழநி: அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.
சீர்காழி: சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.
சேலம்: இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.
திருவான்மியூர்: சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.
இலுப்பைக்குடி: இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.
அந்தியூர்: ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
திருவியலூர் (திருவிசநல்லூர்): கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.


Sunday, July 26, 2015

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம் - www.v4all.org

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும்.

02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம்.

03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

05. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.

 06. நமக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 07. நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

 08. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

 09. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் : அ. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம். ஆ. நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய். இ. உன் உதவி எனக்கு தேவை. ஈ. நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

10. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம். 11. மக்கள் எப்போதுமே அரசை குறை சொல்வார்கள் அவர்கள் அரசால் அனுபவிக்கும் இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்காக அரசுக்கு நன்றி கூறுவதில்லை.

12. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.

 13. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.

14. நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன், நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

15. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் இலிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.

16. நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

17. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

18. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

19. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

 20. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

 21. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

22. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

23. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

 24. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

25. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

Friday, July 10, 2015

பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்....!

பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்....!
ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்து விடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்..!
இப்படி நிறைய பிரச்சினைகள் இருக்குங்கறதுக்காக, ஒட்டு மொத்தமா ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்து விடுவது நல்லது என்றோ, ஃபேஸ்புக்கினால் கிடைக்கும் சில நல்ல விஷயங்களை அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டும் என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது! அதைப்பற்றிய சில நுணுக்கங்களை அலசத்தான் இந்தப் பதிவு…..!!!
ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!
ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல்களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சில வலைப்பின்னல் துறை வல்லுனர்கள். அவை….
1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password) பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம்..! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது!
ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!
2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது (Leaving Your Full Birth Date in Your Profile)
இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்த தேதி தான் முதன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா? உங்க பிறந்த தேதியை வச்சி, உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்க வங்கி கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும்?!
அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க ஃபேஸ்புக் கணக்கை திறந்து, profile பக்கத்துக்கு போய், Info tab-அ கிளிக் பண்ணி, Basic Information பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா பிறந்ததேதியே குறிப்பிடாம விட்டுடுங்க. சரிங்களா?!.
3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)
உங்க ஃபேஸ்புக் பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம்.
இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தேதி, மத பார்வை மற்றும் குடும்ப விவரங்கள், இது எல்லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வைங்க! மிக முக்கியமா, உங்க தொலைபேசி எண், முகவரி போன்ற தொடர்பு விவரங்கள மத்தவங்க பார்க்குற மாதிரி வைக்காதீங்க!!
4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child’s Name in a Caption) உங்க குழந்தைங்க பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்க குழந்தைங்க பெயரை பயன்படுத்தியிருந்தா, Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கிடுங்க இல்லைன்னா அவங்கள நீக்கச் சொல்லுங்க!
5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You’ll Be Away From Home) அதாவது, வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, “no one’s home” அப்படீங்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க! நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா எப்படி இருந்ததுன்னு சொல்லிக்கலாம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை மறந்தும் குறிப்பிடாதீங்க!!
6. கூகுள் போன்ற தேடியந்திரங்களின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)
பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, ஃபேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn’t checked)
7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use Facebook Unsupervised) இது வரைக்கும் பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான்!
அதாவது, ஃபேஸ்புக் பக்கம் 13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஃபேஸ்புக்கை பயன்படுத்தவேண்டும் என்று விதி முறைப்படுத்தி இருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க குழந்தை/குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்துகொள்வதுதான்!
“குழந்தைகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் எழுதும் சிலவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்கிறார், இணையதளத்தின் குற்றப்புகார் மைய மேற்பார்வையாளர் சார்லஸ் பேவலிட்ஸ் (Charles Pavelites, a supervisory special agent at the Internet Crime Complaint Center). உதாரணமாக, “அம்மா வர நேரமாச்சு, நான் சீக்கிரம் வீட்டைச் சுத்தப்படுத்தியாகனும்” அப்படீன்னு எழுதும் ஒரு குழந்தைக்கு, தினமும் தம் பெற்றோர் அலுவலகம் செல்லும் அல்லது வீடு திரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, தங்களையறியாமலேயே ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிடுகிறார்கள் என்று உணர்வதில்லை அப்படீங்கிறாரு சார்லஸ். இதுல இருக்குற சாதக பாதகம் என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.

Thursday, July 9, 2015

கொகுடிக்கோவில்


            புனல் நாடு, நீர் நாடு என்ற திருப்பெயர்களைத் தாங்கி மிளிரும் நன்னாடுசோழவளநாடு. "செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற்கன்னியாம் காவிரி' பாய்ந்து வளப்படுத்தும் நாடு. இங்கே "ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடமானது ஏழு யானைகளுக்கு உணவளிக்குமளவு நெல்வளம் சான்றது' என்றனர் முன்னோர். இதன்கண் அமைந்த சிவபிரான் திருக்கோவில்கள் பல.

தமிழகத்தில் விளங்கும் கோவில்களில் சில பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற்கோவில், கொகுடிக்கோவில், இளங்கோவில், மணிக்கோவில், மாடக்கோவில், ஆலக்கோவில் எனும் சிறப்புப் பெயர்களைப் பெற்று விளங்குவதைக் காணலாம். இவற்றுள் "கொகுடிக்கோவில்' என்ற சிறப்புப் பெற்றதும்; தருமபுர ஆதினத்தின் அருளாட்சிக்குட்பட்டதும்; காவிரி வடகரைத் தலங்களில் 37-ஆவது தலமாகப் போற்றப்படுவதும்; பாவலர் மருதூர் அம்பலவாணரால் 298 பாடல்களை தலபுராணமாகக்கொண்டு பெருமை பெற்றதுமான பழம்பதிதான் தலைஞாயிறு. தேவாரப் பதிகத்தில் திருக்கருப்பறியலூர் என குறிக்கப்பட்டுள்ளது.

இறைவன்: குற்றம்பொறுத்தநாதர்;

இறைவி: கோள்வளைநாயகி;

தலவிருட்சம்: முல்லை;

தீர்த்தம்: விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

இத்தலத்தில் விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், அனுமன் தீர்த்தம், நிம்புட்கரணி, சங்கபுட்கரணி, பொற்றாமரை, செங்கழுநீர் தடாகம் என எட்டுத் தீர்த்தங்கள் இருப்பினும் விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம் மிகச் சிறப்புடையன.

தக்கன் யாகத்திற்குச் சென்ற தீமையால் பல்லையிழந்த சூரியன் ஒளி குன்றினான். அதனால் அவனியில் அவரவர்களும் தத்தம் கடமைகளையும் ஒழுக்கத்தையும் மறந்தனர். உலகமே இருண்டது. தேவர்கள் சூரியனிடம் சென்று, ""சிவநிந்தகன் செய்த யாகத்தில் சேர்ந்தமையால் வந்த கதி இது. நீ திருக்கருப்பறியலூர் சென்று குற்றம் பொறுத்த நாதரை வணங்கி, அவர்முன் தீர்த்தமுண்டாக்கி விதிப்படி மூழ்கி அர்ச்சித்தால் நோய் நீங்கும்'' 

என்றனர். சூரியனும் அவ்வாறே வழிபாடு செய்து, ஒரு ஞாயிறன்று ஈசனின் அருளைப் பெற்றான். 
ஞாயிற்றுக்கிழமை சூரிய தீர்த்தத்தில் நீராடி வழி படுவது மிகவும் சிறப்பு.

அருக்கன் அர்ச்சனை செய்ததால் ஆதித்தபுரி என்றும்; சூரியனால் அர்ச்சிக்கப்பெற்ற பாங்கினால் அமைந்ததால் தலைஞாயிறு என்றும்; கருமூலத்தைப் பறிப்பதனால்கருப்பறியலூர் என்றும்; "வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாக', "மறைவளர்க்கும் அந்தணர் தம் கருப்பறியலூர்' என்ற வாசகங்களால் அந்தணர்கள் பெருகியிருந்த திருத்தலம் என்றும் தலபுராணம் மூலம் தெளிவாக உணர முடிகிறது. மேலும் மலைக்கோவில் என்று சொல்லப்படும் ரத்தினகிரியில் சட்டைநாதரும், தோணியப்பர்- தோணியம்மையாய் உமாமகேஸ்வரர் வீற்றிருப்பதாலும், சீர்காழிக்கு மேற்கே உள்ளதாலும் மேலைக்காழிஎன்ற பெயரும் உண்டு. (இந்த சந்நிதி படியேறிச்சென்று தரிசிக்கும் அமைப்பிலுள்ளதால் மலைக்கோவில் எனப்படுகிறது)முனிவர்கள் வழிபட்டது கயிலை மலைச்சாரலில் ஒரு அழகிய வனம் உண்டு. அதில் அணுவளவு தவம் செய்தாலும் மேரு மலையைப்போல் வளர்ந்து பயன்தரும். அங்குள்ள தடாகத்தின் கரையில் அங்கீரசர், கௌதமர், வாமதேவர், கபாலி முதலான எழுபத் திரண்டு முனிவர்கள் செயற்கரிய பெருந்தவத்தைச் செய்தனர். 

இறைவன் எழுந்தருளி, ""உங்கள் தவத்திற்கு மகிழ்ந்தோம்; பூலோகத்தில் யூதிகா வனம் என்றொரு தலம் உண்டு. (தலைஞாயிறு). அங்கு சென்று தவம் செய்தால் எல்லா சித்திகளும் எய்தலாம்'' என்றருளினார். முனிவர்களும் அவ்வாறே இங்கு வந்து தவம் இயற்றினார்கள்.

இறைவன் அவர்களுக்கு அருள்வழங்குவதற்காக பூதகணம் புடைசூழ, தேவர்கள் வணங்கி நிற்க, அரம்பையர்கள் ஆட, சுயம்பு லிங்கத்திலிருந்து தோன்றியருளினார். இதனைக் கண்ட முனிவர்கள் பரவசப்பட்டு பாடிப் பரவிப் போற்றினர். 

பிறகு முனிவர்கள், ""இன்ப வீட்டினை அருளுதல் வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஈசனும் ""சில நாட்கள் தங்கி சிவப்பணி செய்யுங்கள். சிவகதி நேரலாம்'' என்றருளினார். முனிவர்கள் அவ்வாறே சில நாள் தங்கியிருந்து சித்தானந்த நிலையை அடைந்தனர்.

இராவணன் வழிபட்டது

இராவணன் மூவுலகையும் வென்று பலருக்கும் துன்பத்தை விளைவித்தான்.  அவனது மகன் மேகநாதன் தந்தையைப்போல் எல்லாரையும் வென்று, இந்திரனையும் வென்று இந்திரஜித் என்ற பெயரையும் பெற்றான். திக்விஜயம் முடித்து இலங்கை செல்வதற்காக புட்பக விமானத்தில் புறப்பட்டான். ஓரிடத்தில் விமானம் தடைப்பட்டு நிற்க, "என் விமானம் தடைப்படுவதா? இதைச் செய்தவர் யார்?' என்று சினந்தான். எங்கனும் தேடி யாரையும் காணாமல் தடுமாறினான். இறுதியில் கீழிருந்த ஆதித்தபுரீசரைக் கண்டான். சிவாலயத்தின்மீது விமானத்தின் நிழல்பட்டதனாலேயே இத்தடை ஏற்பட்டது என்றுவருந்தினான். விநாயக நதியில் நீராடி இறைவனைப் பூஜித்தான். 

விமானம் பறந்து செல்லத் தொடங்கியது. "இந்த அற்புத லிங்கத்தை இங்கேயே விட்டுச் செல்வதா? 
இலங்கைக்குக் கொண்டுபோவோம்' என்ற எண்ணம் இந்திரஜித்துக்குத் தோன்ற, திரும்ப வந்து சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயன்றான். 

இயலாமல் சோர்ந்துபோனான். அப்போது ஆகாயவாணி, "இறைவன் திருவருள் இருந்தாலன்றி எந்தக் காரியமும் நடவாது' என புத்தி புகட்டியது. அதைக் கேட்டதும் மயங்கி விழுந்து பிணமானான் இந்திரஜித்.

இராவணனின் செவிக்கு இந்திரஜித்தின் இறப்புச் செய்தி எட்டியது. ஓடோடி வந்த இராவணன் இறைவன் திருவடியில் வீழ்ந்து வணங்கி, சிறப்பொடு பூசனை செய்து இந்திரஜித்தின் இறப்பினை நீக்குமாறு வேண்டிக்கொண்டான். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார். இதன் காரணமாக இத்தல இறைவனுக்கு குற்றம் பொறுத்தான் என்னும் திருநாமம் விளங்குகிறது.

அனுமன் வழிபட்டது


இராவணாதியர்களைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க சிவபூஜை செய்ய எண்ணிய ராமபிரான், அதற்கான லிங்கத்தைக் காசியிலிருந்து கொண்டுவருமாறு அனுமனைப் பணித்தார். குறித்த நேரத்தில் அனுமன் வராததால், மணலால் லிங்கம் செய்து பூஜையை முடித்துவிட்டார் ராமபிரான். அதன்பின் வந்த அனுமன் நடந்ததைக் கண்டு வருந்தி, மணல்லிங்கத்தை அகற்ற பெரிதும் முயன்று இயலாமல் சோர்ந்தான். அப்போது ராமபிரான். ""நீ செய்தது சிவ அபவாதம். அது நீங்க தவம் செய்வாயாக'' என்றார்.

அதன்படியே அனுமன் தவம் செய்ய, அவன்முன் தோன்றிய இறைவன், ""கன்மநாசபுரம் (தலைஞாயிறு) சென்று பூஜித்தால் உன் குற்றம் நீங்கும்'' என்றருளினார். அனுமனும் இத்தலம் வந்து வழிபட, சிவபெருமான் அருள்பாலித்தார்.

மகிழ்வுற்ற அனுமன் இத்தலத்துக்கு வடகிழக்கில் லிங்கம் அமைத்து, தீர்த்தம் ஏற்படுத்தி வணங்கினான். அத்தலம் திருக் குரங்குக்கா என வழங்கப்படுகிறது.

விசித்திராங்கன் வழிபட்டது


சிந்து தேசத்து அரசகுமாரன் விசித்திராங்கன். இவன் மனைவி சுசீலை. உலகெலாம் ஒரு குடைகீழ் அரசாளும் பெரும்பேறு பெற்றிருந்தும் குழந்தையில்லாக் குறையால் வாட்டமுற்றான் மன்னன். ஆயினும் தானதர்மங்கள் செய்தலிலும், விரதங்கள் அனுஷ்டிப்பதிலும் கொஞ்சமும் தவறவில்லை. அந்த புண்ணியப்பயன் காரணமாக சுசீலை கருவுற்றாள். மாதம் பத்து நிறைந்தது. ஒவ்வொரு நாளும் இன்று குழந்தை பிறக்கும் என்று எதிர்நோக்கியிருந்தனர். இப்படியே ஐந்தாண்டுகள் சென்றன. "நாம் செய்த புண்ணியப் பயன் இதுதானா? கருக்கொண்டது கனவாயிற்றோ?' என்று கவலைகொண்ட மன்னன் அரசாட்சியை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு, சுசீலையுடன் தலயாத்திரை புறப்பட்டான்.

காசி முதலாக பல சிவத்தலங்களை தரிசனம் செய்தபின், இறுதியில் திருப்புன்கூரிலுள்ள ஒரு வேப்பமரத்தடியில் மனைவியுடன் அமர்ந்தான். அப்பொழுது, "நீவீர் அருகிலுள்ள யூதிகாவனம் (தலைஞாயிறு) சென்று விநாயக நதியில் நீராடி பெருமானை வழிபடுங்கள். கவலை ஒழியும்' என்று ஒரு வாக்கு ஆகாயத்தில் எழுந்தது. மன்னனும் அவ்வாறே விநாயக நதியில் நீராடி, நீறுபூசி நித்திய வழிபாடாற்றினான். வழிபாட்டிற்கு மனமுவந்த பெருமான் கவலை நீங்க அருள்பாலித்தான். சுசீலையும் மகவீன்றாள். இருவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த மன்னனே சிற்பநூலின்படி இந்த ஆலயத்தை அழகுறஅமைத்தான். 

ராஜகோபுரத்தைக் கடந்ததும் தலவிநாயகர், முருகப் பெருமான், கஜலக்ஷ்மி ஆகியோரை வழிபட்டு, மூலவர் குற்றம்பொறுத்த நாதரை வணங்கியபின், தெற்கு நோக்கிய அம்பிகை கோள்வளைநாயகியை வணங்கி, பின்னர் நடராசப்பெருமானின் தரிசனத்தைக் காண்கிறோம். இதையடுத்து சூரியன், சனி, பைரவர் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்புரிகின்றனர். 

வெளிப்பிராகாரத்தில் தென்திசையில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இதனையடுத்து மலைக்கோவில் எனப்படும் ரத்தினகிரியில் சட்டைநாதரும், தோணியப்பர்- தோணியம்மையும் உமாமகேஸ்வரராய் வீற்றிருக்கின்றனர். அதன் துர்க்கை சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது. இதனையடுத்து சண்டிகேஸ்வரர் தனது மனைவி யாமினியுடன் அருள்புரிவது எங்குமில்லாத சிறப்பம்சமாகும். இக்கோவிலில் நவகிரகங்கள் இல்லை. நவக் கோள்களை வளையல்களாக அணிந்து அவற்றின் செயல்பாடுகளை கோள்வளை நாயகியே பார்த்துக்கொள்ளும் விதத்தில் நின்ற நிலையில் அருள்புரிகிறாள்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, மாணவமணிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறஅருளுகிறார் இத்தல தட்சிணாமூர்த்தி.

மூன்றாம் குலோத்துங்கச் சோழன், கோ நேரின்மை கொண்டான், திரிபுவன சக்கரவர்த்தி இராசராசதேவர், விஜயநகர அரசர் பிரதாப கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணி செய்த பெருமை பெற்ற தலமாக இது திகழ்கிறது.

""மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கி மறுபிறவியில்லாத பெரும்பேறு வழங்கும் குற்றம்பொறுத்த ஈஸ்வரரின் பேரருளும், கோள்வளை நாயகியின் பெருங்கருணையும் இத்தலத்தின் எழுச்சிக்குக் காரணங்கள். தலைஞாயிறு க்ஷேத்திரத்திற்கு வாழ்வில் ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டும்'' என்று உள்ளன்போடு உரைக்கிறார் தலத்தின் பரம்பரை ஆலய அர்ச்சகர் வெங்கடேச சிவாச்சார்யார்.

ஆலயத் தொடர்புக்கு: சந்திரமௌலீ சிவாச்சார்யார், அலைபேசி: 97865 37860.

மயிலாடுதுறையிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறை- மணல்மேடு சாலையில் பட்டவர்த்தி என்ற சிற்றூருக்கு வடகிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது தலைஞாயிறு.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்



           ந்த ஆண்டு ஆவணி மாதம் 6-ஆம் தேதியுடன் (22-8-2013) ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்து 342 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த மகான் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்பதற்கு சாட்சியாக பல அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவருடைய புண்ணிய தினத்தில் அவரை வணங்கி, அவருடைய அருளாசியைப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டுகிறோம்.

தர்மபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாப்பாரப்பட்டி எனும் சிற்றூரில், ஸ்ரீராகவேந்திர சுவாமி பிரத்யட்சமாய் காட்சியளித்தார் என்கிற செய்தியைப் படிக்க நேர்ந்தது. அன்று முதல் எனக்கும் பாப்பாரப்பட்டி ஸ்ரீராயர் மடத்தை தரிசிக்கவேண்டும் என்கிற அவா பல்லாண்டுகளாக இருந்துவந்தது. ஆனால் அந்த  பாக்கியம் கிட்டவில்லை. விமானத்தில் ஹைதராபாத் செல்லமுடிகிறது; சதாப்தியில் அடிக்கடி பெங்களூர், மைசூர் என்று போகமுடிகிறது. ஆனால் பாப்பாரப்பட்டி மட்டும் பல்லாண்டுகளாக வாஷிங்டனாகவே எனக்கு இருந்தது. திடீரென்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு தர்மபுரி செல்ல நேர்ந்தது. அன்று மாலையே நான் பாப்பாரப்பட்டி சென்றுவிட்டேன். 

பாப்பாரப்பட்டி ஊரின் உள்ளே நுழைந்து, கடைத் தெருவைத் தாண்டி பாப்பாரப்பட்டி அக்கிரகாரம் என்னுமிடத்தில் அமைந்திருந்தது ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம். ஊரிலிருந்து தனிமைப்பட்டுக் காட்சியளித்தது அந்த இடம். நான்கைந்து மெலிதான வீதிகள்; சுத்தமான சிமெண்ட் சாலைகள்; குட்டை குட்டையான ஓட்டு வீடுகள்; நடுவில் ஓரிரு மச்சு வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பக்கமும் சுகமான திண்ணைகள். மொத்தம் அறுபது வீடுகள்; அனைத்தும் ஒரே மாதிரியாக பளிச்சென்று இருந்தன. அந்த அறுபது வீடுகளிலும் மாத்வ பிராமணர்களே வசித்துவந்தனர்.

என்னுடைய கார் பிருந்தாவனம் அருகே நின்றது. திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்கள் சிலர் என்னைப் பார்த்தார்கள். பல ஆண்களின் உடம்பில் கோபிசந்தன நாமம் அவர்களின் பக்திப் பெருக்கைக் காட்டியது.

என்னோடு பலரும் ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்கள். 

சுமார் எண்பது வருஷத்து பிருந்தாவனம் இது. 

பாப்பாரப்பட்டியில்- மைசூர் சமஸ்தானத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற ஒரு குடும்பத்தில், அண்ணன்- தம்பியாகப் பிறந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீனிவாசன் ஆகியோர். திருமணமாகி நீண்டகாலமாகியும் மக்கட்பேறு இல்லாததால், அண்ணனும் தம்பியும் மந்திராலயம் போய் ஸ்ரீராக வேந்திரரை தரிசித்து, 

அவரிடம் மக்கட்பேறுக்காக வேண்டிக்கொள்ள முடிவு செய்தனர். கடைசியில் தம்பி சீனிவாசனும் அவர் குடும்பமும் மந்திராலயம் சென்று சுவாமிகளை வழிபட்டனர். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், தன் அண்ணனான கிருஷ்ணமூர்த்தியை உடனே மந்திராலய சேவையில் கலந்துகொள்ள வரச்சொல்லி கடிதம் எழுதினார் தம்பி ஸ்ரீனிவாசன். கிருஷ்ணமூர்த்தி மறுநாள் மந்திராலயம் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.  அன்றிரவு அவருக்கு ஒரு கனவு தோன்றியது.

"கிருஷ்ணமூர்த்தி... நீ மந்திராலயம் வரவேண்டாம். நானே பாப்பாரப்பட்டிக்கு வருகிறேன்' என்று கனவில் ராயர் சொல்ல, புளகாங்கிதம் அடைந்தார் அவர். இதை தன் மூத்த சகோதரரான அச்சுதனிடம் சொல்ல, 1933-ஆம் ஆண்டு அச்சுதன் மந்திராலயம் சென்றார். அப்போது பட்டத்தில் இருந்த ஸ்ரீசுவாமிகளிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, பாப்பாரப்பட்டியில் பிருந்தாவனம் அமைக்க மகிழ்வுடன் இசைந்த ஸ்ரீசுவாமிகள், தன் திருக்கரத்தாலேயே புனித மண்ணை (மிருத்திகை) மூல பிருந்தாவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். என்ன அதிசயம்! புனித மண்ணோடு ஒரு சிறிய சாளக்கிராமமும் அதிலிருந்தது. உடனே அச்சுதன்மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, ஸ்ரீசுவாமிகளிடம் அந்த அற்புதத்தைக் காட்டினார்.

சுவாமிகளும் அகமகிழ்ந்து, ""ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபோது (1671-ஆம் ஆண்டு), பிருந்தாவனத்தில் எழுநூறு சாளக்கிராமங்களைக் கொட்டி அதை மூடினார்கள். அதிலொன்று உனக்குக் கிடைத்திருக்கிறது. பாப்பாரப் பட்டியில் இதை வைத்து பிருந்தாவனம் பிரதிஷ்டை செய். எதிர்காலத்தில் உங்கள் ஊர் "தக்ஷிண மந்திராலயம்' என்று புகழ்பெறும்'' என்றார்.

23-5-1935, வியாழக்கிழமை, வைசாக சுத்த சப்தமி அன்று பாப்பாரப்பட்டி முள்பாகல் ஸ்ரீ தயாநிதி தீர்த்தர் என்கிற மகானின் திருக்கரங்களால் பிருந்தாவனம் வெகுவிமரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஸ்ரீராகவேந்திரர் இந்த பிருந்தாவனத்தில் வாசம் செய்கிறார் என்பது பல அற்புத நிகழ்வுகளால் தெரியவந்தது. ஒரு சிறிய கிராமம்மந்திராலயத்தைப்போலவே திகழ ஆரம்பித்தது.

பாப்பாரப்பட்டி ஸ்ரீராயரின் பக்தர்களோடு பேசியபோது, அவர்களுடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்ததை கண்களில் நீர்மல்க விவரித்தார்கள். 


சுமார் 60 வயதுள்ள ஒருவரின் மனைவிக்கு கை கால்கள் விளங்காமல் போய்விட்டது. உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தவித்த தன் மனைவியை பல பெரிய மருத்துவமனைகளில் சேர்த்தும் குணமாக்க முடியவில்லை. இறுதியாக பாப்பாரப்பட்டி பிருந்தாவனத்திற்கு வெகு கஷ்டப்பட்டு அழைத்து வந்தாராம். மனைவியை ஒரு மூலையில் படுக்க வைத்துவிட்டு அவர் பிருந்தாவன தரிசனம் செய்து கொண்டிருந்தாராம். பெரிய கோவில் மணி, ஜாங்கடை, பூஜை மணி ஒலிக்க, ராயருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பக்தியோடு வேண்டிக்கொண்டே மனைவி கிடந்த மூலையைப் பார்த்தாராம். அடுத்த நொடி "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று அலறிக்கொண்டே ஓடினாராம் அவர். காரணம், அவர் மனைவி மற்றவர்களைப்போலவே நின்றுகொண்டு, மங்கள ஆரத்தியை கைகூப்பிய வண்ணம் தரிசித்துக் கொண்டிருந்தார்! எல்லாம் ராயரின் அனுக்கிரகம்.

""இங்கே முத்தூர் வெங்கட்ராவ் என்கிற பக்தருக்கு ராயர் காட்சி தந்தாராமே? அவர் வீடு எது?'' என்று கேட்டேன்.

""இப்போது அவர் இல்லை. அவரது மகன் கோபாலகிருஷ்ணன் இருக்கிறார். என்னோடு வாருங்கள்'' என்றார் ஒருவர்.

ஒரு சிறிய தாழ்வான ஓட்டு வீடு. வாசல் திண்ணையில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். 

என்னை கோபாலகிருஷ்ணனிடம் அறிமுகப் படுத்தினர். 80 வயதுக்குமேல் ஆனவர் அவர்.

""உள்ளே வாங்கோ...'' என்றழைத்துப் போனார். ஸ்ரீராகவேந்திரரை நேரில் தரிசித்த தன் தந்தை ஸ்ரீமுத்தூர் வெங்கட்ராவின் படத்தைக் காட்டினார். மனைவியோடு அவர் இருந்த புகைப்படம் அது. கண்களில் ஒற்றிக் கொண்டேன். என்ன புண்ணியம் செய்த ஆத்மா அது!

வெங்கட்ராவ் அந்த மடத்தின் சமையல் கலைஞர். ஓர் ஏகாதசி அன்று மடத்தினுள்ளே போய், மறுநாள் காலை துவாதசி என்பதால், ஏழு மணிக்குள் ராயருக்கு நைவேத்தியம் படைக்க வேண்டுமே என்று இரவே அங்கு படுத்துக்கொண்டார்.

""வெங்கிட்டு... கார்த்தால நாலு மணிக்கு வீட்டிலேர்ந்து ஸ்னானம் செஞ்சுட்டுப் போயேன்... பக்கத்துலயே பாம்பு, புழு, பூச்சின்னு எல்லாம் இருக்கு... ஏதாவது ஏடாகூடமாயிடக் கூடாதே?'' என்று நண்பர்கள் தடுத்தார்களாம்.

வெங்கட்ராவ் சிரித்துக்கொண்டே  ""பாம்பா? எல்லாம் ராயர் இருக்கார். பாத்துப்பார்...'' என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஓர் லாந்தர் விளக்கோடு படுத்த வெங்கட்ராவ், இருள் விலகாத அதிகாலையில் கண்விழித்தபோது, எதிரிலிருந்த கிணற்றருகேயிருந்து காவி வஸ்திரங்களோடு ஈரம் சொட்டச் சொட்ட நடந்துபோன ஸ்ரீராகவேந்திரரை அந்த லாந்தர் விளக்கொளியில் பார்த்து பிரமித்துப் போனாராம்!

""இதோ... இதுதான் அப்பா கொண்டுபோன லாந்தர் விளக்கு'' என்றார் கோபாலகிருஷ்ணன்.

அவரோடு பேசிவிட்டு விடைபெற்றபோது, ஓர் மாநிறமான இளம்பெண் என்னை வணங்கினாள்.

""இவள் என் மருமகள்'' என்றார் கோபால கிருஷ்ணன்.

""நீ ஏனம்மா என்னை வணங்குகிறாய். ராயரை நேரில் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த வள் நீ. ஏழு தலைமுறைக்கும் அந்தப் புண்ணியம் உன்னைக் காப்பாற்றும்'' என்று வாழ்த்தினேன்.

""பல வருஷங்கள் மந்திராலயம் போனதாகவும், 1962-லிருந்து பல புத்தகங்களில் ராய ரைப் பற்றி எழுதி வருவதாகவும் மாமாவிடம் நீங்கள் சொன்னதைக் கேட்டேன். அதனால் உங்களை வணங்கத் தோன்றியது...'' என்றாள்.

எல்லாம் அவரின் அருள்.

ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!

Friday, June 27, 2014

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...



கௌதம புத்தர் மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும் போது கையில் ஒரு துணியுடன் வந்தார். அவர்கள் முன் பேச அமர்ந்தவர் பேச்சைத் துவங்காமல் கையில் கொண்டு வந்திருந்த அந்த்த் துணியில் முடிச்சுகளைப் போட ஆரம்பித்தார். மற்ற சீடர்கள் அவர் பேசக் காத்திருக்கையில் சாரிபுத்தன் என்கிற சீடன் மட்டும் அவர் செய்கையும் அவர் உரையின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்திருந்தான். அவன் உன்னிப்பாக அவர் செயலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
விதவிதமாக சில முடிச்சுகளைப் போட்டு விட்டு தலை நிமிர்ந்த புத்தர் கேட்டார். “இந்த முடிச்சுகளை விரைவில் அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?
மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க உடனடியாக சாரிபுத்தன் சொன்னான். “குருவே! முடிச்சுகள் எப்படி போடப்பட்டுள்ளன என்பதை அறியாத வரை அவற்றை விரைவில் அவிழ்க்க வழியில்லை. முடிச்சு போடப்பட்ட முறையை அறிந்திருந்தால் மட்டுமே அதை விரைவில் அவிழ்க்க முடியும்” .
புத்தர் சொன்னார். “சரியாகச் சொன்னாய் சாரி புத்தா. நினைவோடு போடப்படும் முடிச்சுகளை அவிழ்ப்பது எளிது. நினைவின்றி போடும் முடிச்சுகள் சிக்கலானவை. அவை சில சமயங்களில் அவிழ்க்க முடியாமலும் போகலாம். நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். விழிப்புணர்வு இல்லாமல் நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல்களில் இருந்து தான் மீள வழி தெரியாமல் திண்டாடுகிறோம்
துணியில் போட்ட முடிச்சுகள் போட்ட விதத்திலேயே பிரிக்க சுலபமானவை. கவனத்துடன் போட்டிருந்தால் பொறுமையுடன் பிரிக்கலாம். இல்லாவிட்டால் பிரிக்க நாம் செய்யும் உத்திகளும் கூடுதல் முடிச்சுகளாகி விடும். கடைசியில் துணியையே கிழிக்காமல் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போகும் நிலை கூட ஏற்படலாம்.
வாழ்க்கையிலும் அப்படித்தான். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்கிற விழிப்புணர்வோடு செய்தால் தவறுகள் அதிகம் நிகழ வாய்ப்பே இல்லை. அப்படித் தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை விரைவிலேயே சரிப்படுத்திக் கொள்ள முடிபவையாகவே இருக்கும். 
ஆனால் விழிப்புணர்வில்லாமால் நம் வாழ்வில் செய்து கொள்ளும்   சிக்கல்கள் ஆபத்தானவை. அந்தந்த நேர உந்துதல்களில் நாமாகவே ஏற்படுத்திக் கொள்பவை. உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னிலை இழந்து என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் செய்து கொள்பவை. இந்த சிக்கல்களில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல சமயங்களில் சிக்கல்களை அதிகப்படுத்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். பல சமயங்களில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தாமல் சிக்கல்களில் இருந்து விடுபட முடியாது.
துணியின் முடிச்சுகள் அவிழ்க்க முடிந்த பின் துணி பழைய நிலைமைக்கே வரலாம். வாழ்க்கையின் சிக்கல்கள் அப்படி அல்ல. பல சமயங்களில் சிக்கல்கள் தீரும் போது வாழ்க்கை முன்பு போல திரும்பி மாற வாய்ப்பு இல்லை. எல்லாமே தலைகீழாக மாறிப் போகும் அபாயம் கூட உண்டு. மேலும் சிக்கல்கள் அனைத்தும் நாமே தான் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான சிக்கல்களில் நம் பங்கு கண்டிப்பாக ஓரளவாவது இருக்கக் கூடும் என்றாலும், சில சமயங்களில் மற்றவர்களாலும் சிக்கல்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட்டு விடலாம்.
நம் செயல்களால் ஆனாலும் சரி, மற்றவர்கள் செயல்களால் ஆனாலும் சரி, விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்துபவன் வரும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனால் கவனமாகவும், வேகமாகவும், ஆரம்ப நிலையிலேயே, அவ்வப்போதே அவற்றைத் தவிர்க்கவோ, சரி செய்து கொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாத போதோ அவை பூதாகரமாகும் வரை கவனிக்கப்படுவதில்லை. பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாட வேண்டி வரும். சில சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போகலாம், தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை, நாம் ரசிக்க முடியாததாக மாறியும் போகலாம்.
எனவே விழிப்புணர்வோடு இருங்கள். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருங்கள். கண்டிப்பாக நீங்கள் 90 சதவீத சிக்கல்களை விழுப்புணர்வோடு இருப்பதால் மட்டும் தவிர்த்து விட முடியும்.

urs - www.v4all.org