Showing posts with label Sales Consultancy. Show all posts
Showing posts with label Sales Consultancy. Show all posts

Sunday, December 13, 2015

கடவுள் ஒரு நாள் மாறுவேடத்தில்

கடவுள் ஒரு நாள் மாறுவேடத்தில் உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது தாகம் ஏற்பட்டதாம்.
அப்போ அங்கு அருகில் இருந்த ஒரு பால்காரரின் வீடு கண்ணில் தென்பட்டவுடன் அங்கு சென்று குடிக்க சிறிது தண்ணீர் கேட்டாராம். அதற்கு அந்த பால்காரர் "பாலில் கலக்கவே தண்ணி பத்தல இதுல உமக்கு குடிக்க தண்ணியா"கிடையாது, கிடையாது வேற இடம் பார்த்து கிளம்பு என்றாராம் பால்காரர்.
கடவுள் தாகத்துடன் வேறு எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கு ஒரு சோமபான கடை தென்பட்டதாம். கடவுள் அங்கே சென்று தண்ணீர் கேட்டபோது, அவர் மூச்சி முட்டும் அளவுக்கு குடிங்க குடிங்க என்று குடுத்தார்களாம்.
அதில் மனம் மகிழ்ந்த கடவுள் "தண்ணீர் கேட்டால் குடிக்க கொடுக்காத பால்காரனை தேடி யாரும் வரமாட்டார்கள் இனி அவன் வீடு வீடாய் போய் தான் பால் ஊற்ற வேண்டும், எனக்கு வயிறு முட்ட குடிக்க கொடுத்த சோமபான கடை எங்கே இருந்தாலும் தாறுமாறாய் கும்பல் கும்பலாய் அவர்களே வந்து குடித்து விட்டு போவார்கள்" என்று சாபம் கொடுத்தாராம்.
இதுதான் டாஸ்மாக்கின் கதை 
🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍹

Saturday, April 18, 2015

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ? நாம் தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில் பல தொழில்கள் இருக்கும் . அதை நாம் சந்தை ஆய்வு செய்தோ அல்லது சந்தையில் உள்ள அதிகப்பட்ச தேவையின் அடிப்படையிலோ தேர்தெடுத்து வைத்திருப்போம் . இதிலிருந்து நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பதில் நமக்கு மிகுந்த குழப்பம் இருக்கும் .நமக்கு தகுந்தாற் போல் சரியான தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகள் பயன்படும் .

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?

நாம்  தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில்  பல தொழில்கள்  இருக்கும் . அதை நாம்  சந்தை ஆய்வு செய்தோ அல்லது சந்தையில் உள்ள அதிகப்பட்ச தேவையின் அடிப்படையிலோ தேர்தெடுத்து வைத்திருப்போம் .    இதிலிருந்து நமக்கு பொருத்தமான தொழிலை  தேர்தெடுப்பதில் நமக்கு  மிகுந்த  குழப்பம் இருக்கும்  .நமக்கு தகுந்தாற் போல் சரியான தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகள் பயன்படும் .

1.தொழில்களை  பட்டியலிடுங்கள் :-

நம் மனதில் பு துப்  புது  தொழில்கள் தோன்றிக்  கொண்டே  இருக்கும். நம் மனதில் தோன்றிய தொழில்களை முதலில் பட்டியலிட (List )வேண்டும். தொழில்களை ஒரு தாளிலோ அல்லது கணினியிலோ வரிசையாக பட்டியலிடுங்கள் .   சந்தை ஆய்வு(Market Survey) அல்லது சந்தையில் உள்ள  தேவையின்(Market Demand) அடிப்படையிலோ இந்த தொழில்ப்பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

2.தகுதி(Competence) மற்றும் சந்தையில் தேவைகளை (Market Demand) பொருத்திப் பாருங்கள் :  

பல தொழில்களுக்கு சந்தையில் தேவை நிறைய இருக்கும் .நீங்கள் பட்டியலிட்ட தொழில்களில் அதிகபட்ச சந்தை தேவையுள்ள (Huge Market Demand) தொழில்களை தேர்ந்தெடுங்கள் . அதில் உங்கள் தகுதி (Competence),ஆற்றல் (Ability) ,திறமைகளை(Skills) பொருத்திப்  பாருங்கள் . உங்கள்  தகுதி மற்றும் திறமைகளுக்கு  அதிகம் ஒத்துப்  போகிற தொழில்களை தேர்ந்தெடுங்கள் .

3.பேரார்வம் மற்றும் உணர்ச்சிகளை சோதித்து பாருங்கள் (Check Passion and Emotions ):-

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் உங்களுக்கு பேரார்வம் (Passion) உள்ளதா என்பதை சோதித்து  பாருங்கள்.  தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் தீராத காதல்(Passion) இருக்குமா அல்லது மேலோட்டமான பார்வையால் தேர்ந்தெடுத்தீர்களா  என்பதை சோதித்து பாருங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் உங்கள் உணர்ச்சிக்குட்பட்டு(Emotions) இருக்குமா என்பதை சோதித்து பாருங்கள் .

4.குறிக்கோள்(Objectives) மற்றும் நோக்கத்திற்கு(Purpose) இடமளியுங்கள் :

உங்கள் குறிக்கோள்கள்  மற்றும் நோக்கங்களுக்கு  இடம் தருகிற தொழில்களை தேர்ந்தெடுங்கள். நம் சிலரின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை  எளிமையாக்குவது ,சேவை ,வாழ்க்கை மற்றும் உடலுக்கு நலம் தரக்கூடிய ,சூற்றுச்சூழல் பாதுகாப்பு ,பாதிப்பில்லா சமூகம் போன்றவையாக இருக்கலாம் . நாம் தேர்ந்தெடுக்கும்  தொழில் நமது  குறிக்கோள்கள்  மற்றும் நோக்கங்களுக்கு இடமளிக்கிறதா என்பதை சோதித்துப்  பார்க்க வேண்டும் .


Wednesday, April 15, 2015

ரகசிய மாந்திரீக முறைகள்

ரகசிய மாந்திரீக முறைகள்
(share) செய்யுங்கள்)
அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்

Friday, March 20, 2015

நினைவாற்றலை அதிகரிக்கும் ஆல்பா தியானம் - www.v4all.org

தூங்காமல் தூங்குவது எக்காலம் என்று சொன்னார் பட்டினத்தார். தூக்கத்துக்கும் தூக்கமின்மைக்கும் இடைப்பட்ட நிலைதான் அது. நமது மூளை செயல்படும் தன்மையை ஆல்பா, பீட்டா, டெல்டா, தீட்டா என வகைப்படுத்துகிறார்கள். இதில், ஆல்பா நிலை மிக முக்கியமானது.
அமைதி ததும்பும் இந்த ஆல்பா நிலையில், நமது ஆழ்மனம் விழித்திருக்கும். ஆழ்மனதின் அளப்பரிய ஆற்றல்களையும், ஆல்பா தியானநிலைப் பயிற்சியையும் பிரபல மனோதத்துவ நிபுணரும், ஆல்பா மைன்ட் பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் விஜயலட்சுமி பந்தையன் விளக்குகிறார்.
“ஆல்பா தியான நிலையில், ஆழ்மனதால் சிந்திக்க முடியும். படிப்படியாகப் பயிற்சி கொடுத்து மனதையும் உடலையும் லகுவாக்கி ஆல்பா தியான நிலைக்கு கொண்டுவந்துவிடுவோம். இந்த நிலையை எட்டும்போது மனம் அமைதியாகிவிடும். உடல் லகுவாகிவிடும்.
நாம் என்னென்ன செய்ய நினைக்கிறோமோ அவற்றை எல்லாம் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும். நமது விருப்பம்,ஒரு குறிக்கோளை அடைவதாகவோ, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதாகவோ அல்லது ஒரு விற்பனை இலக்கை எட்டுவதாகவோ இருக்கலாம்.
எல்லோருக்கும் ஆழ்மனம் உண்டு. ஆனால், அது சரிவர செயல்படாமல் இருக்கும். ஆல்பா தியான பயிற்சியால் ஆழ்மனதை செயல்பட வைக்கிறோம். இதனால், மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். மொத்தத்தில் மனம் லயித்துவிடும்.
ஒருசில மாணவர்கள் நன்றாக படித்திருப்பார்கள். ஆனால், தேர்வு எழுதும் அறைக்குள் சென்றதும், படித்தது எல்லாம் மறந்ததுபோல் தோன்றும். இன்னும் சிலர் விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். மேடை பயம் காரணமாக, மைக்கை தொட்டவுடன் பேச திணறுவார்கள். போதியப் பயிற்சி கொடுத்தால் போதும் அவர்களின் படைப்பாற்றல் மேலோங்கும். ஆல்பா தியான நிலையை அடுத்து, செல்லொளி தியானம், சக்கரா தியானம், சித்த குண்டலினி என 9 தியான நிலைகள் இருக்கின்றன.
ஆல்பா தியானம் மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதன் காரணமாக, படிப்பில் நன்றாக கவனம் செலுத்த முடியும். நினைவாற்றல் அதிகரிக்கும். பாடங்களை ஆழ்ந்து படிக்கலாம். தேர்வின்போது, படித்த பாடங்களை நன்கு நினைவுபடுத்தி எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் நடத்தை மிக நன்றாக இருக்கும். நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் குறையும்.
வயதுக்கோளாறுகளால் தோன்றும் பிரச்சினைகளில் ஒரு தெளிவு பிறக்கும். இந்த வயதில் படிப்புதான் முக்கியம் என்ற நல்ல சிந்தனை மனதில் மேலோங்கும். மனதில் ஈகோ வராது. கோபப்பட மாட்டார்கள். பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் நன்றாக நடந்துகொள்வார்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
அடிப்படை தியான நிலையான ஆல்பா உள்பட மனதின் பல்வேறு நிலைகள் குறித்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும், புதுச்சேரியிலும், டெல்லியிலும் மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். பயிற்சி விவரங்களை எங்கள் இணையதளத்தில் (www.alphamindpower.net) தெரிந்துகொள்லாம். தொலைபேசி மூலமாகவோ, இ-மெயில் வழியாகவோ முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்கிறார் விஜயலட்சுமி பந்தையன்.
விஜயலட்சுமி பந்தையன்

Wednesday, March 4, 2015

பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - ஈரோடு

ஈரோடு
1. அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்,
பவானி
அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்
மூலவர்:சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்)
அம்மன்/தாயார்:வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் பவானி இருக்கிறது.
போன்:+91- 4256 - 230 192, +91- 98432 48588
பிரார்த்தனை:குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் ...
சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. ...
2. அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்,
கொடுமுடி
அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்
மூலவர்:மகுடேஸ்வரர்
அம்மன்/தாயார்:திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.
இருப்பிடம்:ஈரோடு - கரூர் ரோட்டில் கொடுமுடி உள்ளது. ஏராளமான பஸ்வசதி இருக்கிறது. ஈரோட்டிலிருந்து 47 கி.மீட்டரும், கரூரிலிருந்து 34 கி.மீட்டர் தூரமும் உள்ளது.
போன்:+91- 4204-222 375.
பிரார்த்தனை:ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை ...
சிறப்பு:இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. ...
3. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்,
பண்ணாரி
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்
மூலவர்:மாரியம்மன்
இருப்பிடம்:சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. சத்திய மங்கலத்திலிருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சத்தியமங்கலம் 15 கி.மீ., ஈரோடு 77 கி.மீ., கோவை 82 கி.மீ., சேலம் 170 கி.மீ., மைசூர் 127 கி.மீ., திருப்பூர் 65 கி.மீ.,
போன்:+91-4295-243366, 243442, 243 289
பிரார்த்தனை:கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை ...
சிறப்பு:இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் ...
4. அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்,
பிரப் ரோடு
அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்
மூலவர்:பெரிய மாரியம்மன்
இருப்பிடம்:ஈரோடு பிரப் ரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
போன்:+91-424-2258670
பிரார்த்தனை:வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.

பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து ...
சிறப்பு:இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. ...
5. அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்,
சென்னிமலை
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
மூலவர்:சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
அம்மன்/தாயார்:அமிர்த வல்லி, சுந்தர வல்லி
இருப்பிடம்:ஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 18 கி.மீ., திருப்பூர் 40 கி.மீ.,
போன்:+91-4294 - 250223
பிரார்த்தனை:கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், ...
சிறப்பு:கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் ...
6. அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்,
பாரியூர்
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்
மூலவர்:ஆதிநாராயணர்
அம்மன்/தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் கோபி சென்று அங்கிருந்து 5 கி.மீ., தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ்வசதி உண்டு.
போன்:+91- 4285 - 222 010, 222 080.
பிரார்த்தனை:இங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் ...
சிறப்பு:இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் ...
7. அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்,
பாரியூர்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்
மூலவர்:காளியம்மன் (கொண்டத்துக்காரி )
இருப்பிடம்:கோபிசெட்டிபாளையத்துக்கு மிக அருகில் பாரியூர் இருப்பதால் கோபியிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. கோபிசெட்டிபாளைம் 3 கி.மீ.,
போன்:+91-4285-222 010
பிரார்த்தனை:இத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லிசூன்யம், செய்வினை ஏவல் பகை ஆகியவற்றால் ...
சிறப்பு:இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் ...
8. அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்,
ஈரோடு
அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்
மூலவர்:மகிமாலீஸ்வரர்
அம்மன்/தாயார்:மங்களாம்பிகை
இருப்பிடம்:ஈரோடு நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
போன்:+91-424- 2267578
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு:இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல்சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. 63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு ...
9. அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்,
திண்டல்மலை
அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்
மூலவர்:வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது.
போன்:+91-424-2430114, 94439 44640
பிரார்த்தனை:செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய ...
சிறப்பு:கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ...
10. அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்,
பவளமலை
அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்
மூலவர்:முத்துகுமார சுவாமி
அம்மன்/தாயார்:வள்ளி தெய்வானை
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 35 கி.மீ., தூரம் கோபிசெட்டிப்பாளையம். அங்கிருந்து அந்தியூர் டவுன் பஸ்சில் 3 கி.மீ., சென்றால் முருகன்புதூர் பஸ் ஸ்டாப். அருகில் கோயில்.
போன்:+91 97157 40960
பிரார்த்தனை:திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு கிடைக்க,  அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல், செவ்வாய் தோஷம் நீங்க, நோய் குணமடைய இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு:இங்குள்ள கைலாசநாதர் லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பது ...

Monday, October 20, 2014

சோதனையை வென்ற சாதனை! ஆனந்த தாண்டவம்

சோதனையை வென்ற சாதனை!
ஆனந்த தாண்டவம்


குமரன் 24 வயது இளைஞர். உளவியல் ஆலோசகர், எழுத்தாளர், முனைவர் பட்டத்துக்கான பயணம், குறும்பட முயற்சி, திரைப்பட இயக்குநராகும் கனவு எனப் பன்முகம் கொண்டவர். ஆரோக்கியமாக இருப்பவர்களே ஆயிரம் காரணங்கள் சொல்லி முடங்கிக் கொண்டிருக்கும் உலகில், மூளை முடக்குவாதம் (Cerebral palsy) என்ற பாதிப்புடன்தான் இத்தனை பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார் குமரன்.
உடல் உறுப்புகளின் செயல்களைச் சிக்கலாக்கும் இந்த மூளை முடக்குவாதத்துக்கு தெரபி, சிகிச்சை என்று வாழ்நாள் முழுவதும் மருத்துவத்தின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். ஆனாலும், அந்த சிரமங்களின் சாயல் எதுவும் குமரனின் பேச்சில் இல்லை. அதைவிட நம்மை ஆச்சரியப்படுத்துகிறது குமரனின் அழகான தமிழ்...
‘‘அப்பா நாகர்கோவில் வானொலி நிலைய அறிவிப்பாளர். அம்மா இல்லத்தரசி. நான் பிறந்ததிலிருந்தே மருத்துவமனை வாழ்க்கைதான். குறை மாதக் குழந்தை என்பதால் ஆரம்பத்திலேயே இன்குபேட்டரில் வைத்து அடைகாத்திருக்கிறார்கள். அதன் பிறகும் நான் மற்ற குழந்தைகள் மாதிரி இயல்பாக இல்லாத தால் ஏதோ பிரச்னை என்று சிகிச்சை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். சென்னைக்கு குடி வந்த பிறகுதான் மூளை முடக்குவாதம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சென்னையில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையின் மருத்துவர் ‘உங்கள் மகன் காய்கறி மாதிரி இருக்கிறான்’ என்று அலட்சியமாகச் சொன்னதைக் கேட்டு என் பெற்றோர் உடைந்துபோயிருக்கிறார்கள். ஆனாலும், தங்கள் காதல் திருமணத்தின் சாட்சியாக முதல் குழந்தையாக பிறந்தவன் என்பதால் முன்னைவிட என் மேல் கூடுதல் அன்பு காட்டி வளர்க்க ஆரம்பித்தார்கள்.
ஐந்தாம் வகுப்பு வரை எல்லோரையும் போலத்தான் படித்தேன். இந்தக் குறைபாடு காரணமாக ஆறாம் வகுப்பில் பள்ளியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை. மற்ற பள்ளிகளிலும் இடம் கிடைக்கவில்லை. ‘நம் பிரச்னை சீக்கிரம் சரியாகிவிடும்... மற்றவர்கள் மாதிரி நாமும் கிரிக்கெட் விளையாடலாம்’ என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.
ஆனால், என்னை நிராகரித்த பள்ளிகள்தான் எனக்கு பல விஷயங்களைப் புரிய வைத்தன. ‘மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற பக்குவம் வந்தது. கிரிக்கெட் ஆட முடியாது... ஆனால், கிரிக்கெட் பற்றி நிறையத் தெரிந்து கொள்ளலாமே! நிஜவாழ்வில் நண்பர்கள் இல்லை. அதனால் என்ன... ஃபேஸ்புக், ட்விட்டர் இருக்கின்றனவே! இப்படி மாற்று வழிகளில் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்தே 8ம் வகுப்பு எழுத முடிவு செய்தேன்.
‘உனக்கு நம்பிக்கை இருந்தால் 10ம் வகுப்புத் தேர்வையே வீட்டிலிருந்து எழுதலாம்’ என்று என் குடும்பத்தினர் ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு உளவியலில் ஆர்வம் இருந்ததால், அதை முக்கியப் பாடமாக எடுத்துத் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே 12ம் வகுப்பு, சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., எம்.எஸ்.சி. முடித்தேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில். முடித்துவிட்டு, இப்போது பி.ஹெச்.டி. பண்ணிக் கொண்டிருக்கிறேன். உளவியல் ஆலோசகராக கிளினிக்கும் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
இது உலகமகா சாதனை என்று நினைக்கவில்லை. ஆனால், என்னைப் போல ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையே இவ்வளவுதான் என்று முடிவுக்கு வந்தவர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. அதனால், இத்தனை வருடங்களாக நான் கடந்து வந்த வலிகளையும் அதைத் தாண்டி நான் பயணித்துக் கொண்டிருப்பதையும் புத்தகமாக எழுத விரும்பினேன்.
நான் சிவபக்தன். உலகநலனின் பொருட்டு ருத்ர தாண்டவம் ஆடுபவரும் அவர்தான். ஆனந்த தாண்டவம் ஆடுபவரும் அவர்தான். என் கால்களால் நடனம் ஆட முடியாவிட்டாலும் மனது எப்போதும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்ததால் புத்தகத்துக்கு ‘ஆனந்த தாண்டவம்’ என்று பெயர் வைத்தேன்.
2013 டிசம்பரில் வெளியான இந்தப் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆங்கிலத்தில் எழுதினால் இன்னும் பலரிடம் போய்ச் சேருமே என்று சிறி to CP (Cerebral Palsy to Counselling Psychologist) என்ற தலைப்பில் எழுதினேன். இந்த ஆங்கிலப் பதிப்பு எனக்கு நிறைய மனிதர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.
‘எங்களுக்குக் கிடைத்த பரிசு நீ’ என்றுதான் என்னிடம் என் பெற்றோர் சொல்வார்கள். மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போதும் அப்படியே அறிமுகப்படுத்துவார்கள். சைக்கிள் ஓட்டக் கூட பயப்படுகிற என் அம்மா என்னை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக கார் ஓட்டக் கற்றுக் கொண்டார்.
கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் ஷார்ஜாவில் நடந்த மேட்ச் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கினார் அப்பா. மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் குழந்தைகளை சுமைகளாக, சாபமாக நினைக்கிற சில பெற்றோர் மத்தியில் என் பெற்றோர் உண்மையில் எனக்குக் கிடைத்த பரிசு.
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன். சமூகம் மாற்றுத்திறனாளிகளை நடத்துவது ஒருபக்கம் இருக்கட்டும். குடும்பத்தைச் சேர்ந்த வர்களே என்னைப் போன்றவர்களையும்
மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் வெளியில் சொல்வதை கவுரவக் குறைவாக நினைக்கிறார்கள்.
‘நீ எங்களோட சாபக்கேடு’ என்று குழந்தைகளை திட்டுபவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது ஒன்றுதான்... ஒரு நோயாளியாகப் பிறப்பதோ, மாற்றுத்திறனாளியாக இருப்பதோ நாங்கள் செய்த தவறு இல்லை. காலத்தின் ஓட்டத்தில் யார் வேண்டுமானாலும் நோயாளியாகலாம். யார் வேண்டுமானாலும் ஊனமாகலாம்.
எனக்கு பரதன் என்று ஒரு தம்பி இருக்கிறான். ராமாயண பரதன் போலவே அன்பில் பெரியவன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவனைப் பற்றி யாரிடமாவது சொன்னால், ‘அவன் நார்மலா?’ என்றுதான் உடனே கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் குறைபாட்டோடு பிறந்தால் எல்லோரும் அதேபோலத்தான் இருக்க வேண்டுமா என்ன?
‘மாற்றுத்திறனாளிகளைப் படிக்க வைக்க வேண்டியதில்லை... வேலை கொடுக்க வேண்டியதில்லை...
திருமண வாழ்க்கையும் கிடையாது’ என்றே பலரும் முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள். எல்லோரையும் போலத்தான் நாங்களும். உடல் செயல்பாடுகளில் சிறிய வேறுபாடு தவிர,... படிக்கவும்.வேலைசெய்யவும் ஏன் வாழவும் உரிமை உண்டு எங்களுக்கு

இப்படிக்கு குமரன்.

Thursday, October 16, 2014

ஆறு உணர்வுகளையும் ஆறு உணர்வுகள் என்று ஏன் சொல்லக்கூடாது ?

மனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்களின் அறிவு ஐந்து   என்றும் பகுத்தறிவு ஆறாம் அறிவு என்பதும்  வழக்கு. ஐந்து  அறிவு என்பது ஐந்து  புலன்களின உணர்வு. உணர்வுகளை பிரித்துப்  பார்த்து உணர்வது பகுத்தறிவு.

அப்படியானால் ஆறு உணர்வுகளையும் ஆறு உணர்வுகள்  என்று ஏன் சொல்லக்கூடாது ?
         உணர்வு என்பது தன்னால் இயற்க்கையாக  இயங்குவது. அது உள்ளுணர்வு. யாரும்   சொல்லிகொடுத்து செய்வதில்லை. பிறந்த கன்று  தாயைத தேடி ஓடுவதும் பால் குடிப்பதும இயற்க்கை. அது அறிவாகாது. உணர்வு.

      அறிவு என்பது எப்பொருள் யார் யார் வாய் கேர்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.  மெய்ப் பொருள் காண்பது எப்போது ? உணர்வுகளின் அனுபவமும் மற்றவர்களிடம்  பார்ப்பதும்  கேட்பதுவும் மனிதனுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது  தனக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னேறுவதை மனிதன் விரும்புகிறான். அவற்றைப் பற்றிக்கொள்கிறான். அது அறிவு.  அதையும்  விழ்ப்புணர்வு என்றும் சொல்லலாம்.

       கற்கால மனிதன் இப்படித்தான் நாகரிக மனிதனாக மாறி இருப்பான். கற்கால மனிதன் உணர்வுகளால் உந்தப்பட்டு செயல் பட்டான். அதில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டான்.

     அப்படியானால் மனிதனின் அடிப்படையானது உணர்வுகள் தான். அறிவு இல்லை. உணர்வு கொண்டு தான் இயங்குகிறான்.

    பொதுவான அனைத்து உயிர்களின் உணர்வுகள் --  புலன் உணர்வுகள் பார்த்தல்,கேட்டல்,நுகர்தல், சுவைத்தல், போக முதலில் பசி உணர்வு. அடுத்து பாதுகாப்பு உணர்வு, இச்சை உணர்வு.     பிரசனைகள் வரும் போது பய உணர்வு, பின் எச்சரிக்கை உணர்வு இப்படி உயரினங்கள் வாழத் தொடங்குகிறது.

  மனிதன் மட்டும் விழிப்புணர்வு கொண்டு இயங்குகிறான். முதலில் பார்த்து கேட்டு தெரிந்து கொள்கிறான். கண்டதையும் பார்த்ததையும் மனதில் பதித்து வைத்துக் கொண்டு எச்சரிக்கையாக அடுத்த நடவடிக்கைள் செய்கிறான்.

URS -WWW.V4ALL.ORG 

Wednesday, October 1, 2014

உங்கள் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு மதிப்பு கூட்ட என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு மதிப்பு கூட்ட என்ன செய்ய வேண்டும்? 


மந்திரங்கள் இவைதான்:


உண்மையை எல்லா நேரத்திலும் சொல்லுங்கள். உங்கள் தனி நபர் முத்திரை அந்த சேவையில் தெரியும் வண்ணம் இருக்கட்டும். அவர்கள் எதிர்பார்ப்பையும்விட அதிகமாக, விரைவாக செய்யப் பாருங்கள். நகைச்சுவையும் உற்சாகமும் எப்போதும் இருக்கட்டும். எதையும் எளிமைப்படுத்துங்கள். உங்கள் சேவையை தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டே இருங்கள்.
சுலபமான பாடங்கள்தான். ஆனால் இங்கு வாடிக்கையாளர் சேவை என்பது பெரும்பாலும் கசப்பான அனுபவம்தான். மகிழ்ச்சியும் உற்சாகமும் இல்லாத பணியாளர் என்றும் தன் வாடிக்கையாளருக்கு நல்ல அனுபவம் தர இயலாது. உங்கள் பணியாளர்களை நன்கு பராமரித்தாலே அவர்கள் உங்கள் வாடிக்கையாளரை நன்கு பராமரிக்க வழி செய்வார்கள். தொழில் நுட்பம் எல்லாருக்கும் சமமாகக் கிடைக்கும் பட்சத்தில், ஒரு சேவையை தூக்கிப் பிடிப்பது அதன் பணியாளர்களின் நேர்மையும் உதவும் குணமும் உற்சாகமும் மட்டும் தான். 

urs Happily 

Dr.Star Anand ram
Sales Skills Trainer
Coimbatore
www.v4all.org
cell-9790044225

Wednesday, August 6, 2014

சிறந்த விற்பனையாளர் ஆவதற்கான தகுதிகள்:

சிறந்த விற்பனையாளர் ஆவதற்கான தகுதிகள்:

ஒரு சிறந்த விற்பனையாளருக்கு தோற்றம் முக்கியமான அம்சமாகும். சிலருக்கு பிறவியிலேயே நல்ல நிறம் மற்றும் உடலமைப்பு அமைந்துவிடுவதுண்டு. அப்படியில்லாதவர்கள் தங்களுடைய உடை மற்றும் நடைகளில் நன்கு கவனம் செலுத்தி பொலிவனா தோற்றதை உருவாக்கலாம்.

இரண்டாவது பேச்சுத்திறன். தம்முடைய விற்பனைப் பருட்களை வாடிக்கையாள் ஏற்குமாறு வெளிப்படுத்தும் பேச்சுத்திறன், அப்பொருட்ளின் நிற மற்றும் குறைகளை நன்கு அறிந்து அதனுடைய நிறைகளை சாமர்த்தியத்துடன் பரப்பும் ஆற்றலுக்கு தகவல் தொடர்புத் துறையில் (Communication skills) பயிற்சி பெறுதல்.



வாடிக்கையாளருக்கு எந்த மொழியில் பிடிக்குமோ அந்த மொழியில் நன்கு உரையாடுகிற பழக்கம்.

வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து, அவரின் உணர்வுகளை மதித்து, அவருடைய தேவைகள நிறைவேற்றவோம் என்ற நம்பிக்கையை உருவாக்குதல்.

எல்லா தரப்பு மக்களிடமும் சுமூகமாக பழகும் ஆற்றல் அத்துடன் மனதில் பணிவு.

வாடிக்கையாளர் கோபமாக பேசினாலும் நிதானமாக செயல்படும் சகிப்புத்தன்மை.

பொருளை பிறர் தாழ்த்திப் பேசினாலும், வாங்க மறுத்தாலும் மனத் தளராமல் உறுதியுடன் வலியுறுத்தும் விடாமுயற்சி.

கற்பனைத்திறன்; வாடிக்கையாளரின் மன உணர்வுகளை முன்னரே கணித்து அதற்கேற்ப செயல்படும் ஆற்றல்.

தொழிலில் தளராத ஆர்வம்

வாடிக்கையாளர்களை ஒன்றாகச் சேர்த்து அவர்களுக்கு விருந்தளித்தல்; அதன் மூலம் தம்முடைய பொருட்களை அறிமுகப்படுத்துதல். (Organising Ability)

வாடிக்கையாளர்களுக்கு ஒரு புறமும், உற்பத்தியாளர் அல்லது நிர்வாக இயக்குநருக்கு மறுபுறமும் பாலமாக இருந்து அந்த கம்பெனியின் வளர்ச்சிக்கு உதவுதல்.

பல்வேறு விளம்பர யுக்திகளின் மூலம் மக்களிடையே தம்முடைய வியாபாரத்தைப் பரப்புதல்.

இறுதியாக, பணத்த கையாளுதலில் நாணயம். அதிக தொகையை பார்க்கும்போது அதில் ஒரு சின்ன அளவு எடுத்து கொண்டாலென்ன? என்ற சபலம், மற்றும் கம்பெனி பணம்தானே, செலவழிப்போம் என்ற ஊதாரித்தனம், இவ்விரண்டும் இல்லாமலிருத்தல்.

இவையாவும் சிறந்த விற்பனையாளரின் தகுதிகளாகும்.

Yours happily

Dr.Star Anand Ram
www.v4all.org
cell- 9790044225 


Thursday, July 31, 2014

உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்

ஜாதக அடிப்படையில் ஒரு மனிதன் இந்த தொழிலுக்கு / வியாபாரத்திற்கு தான் பொருத்தமானவர் என்பதை நிர்ணயிப்பது பின்வரும் காரணிகள் தான்.
  • ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை போருந்தியிருகின்றதோ அதர்க்கேற்பவே அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது.
  • ஒருவனின் உத்தியோகம் சம்மந்தம்பட்ட விஷயங்கள் வலிமையாக அமைய ஜாதகனின் ஜென்ம லக்னம் வலிமை வாய்ந்ததாக அமைய வேண்டும். இந்த லக்னதைப் பெற்றவர்களுக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது, அதனை ஆராய வேண்டும்.
  • லக்னத்திற்கு பத்தாம் இடம் தான் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பத்தாம் இடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். எந்த ராசி பத்தாம் இடமாக அமைகின்றதோ அந்த ராசிக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது, அதனை ஆராய வேண்டும்.
  • பத்தாம் இடதில் இருகின்ற கிரகத்தின் வலிமையையும், அதன் காரகங்களையும் முக்கியமாக தொழில் சம்மந்தப்பட்ட காரகங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
  • பத்தாம் இடதின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
  • பத்தாம் இடதின் அதிபதி தங்கி இருக்கின்ற வீட்டின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
  • பத்தாம் வீட்டை யார் யார் பார்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. கால், அரை, முக்கால் மற்றும் முழு பார்வை என்று ஜாதகத்தில் உள்ளது. எந்த கிரகம் எந்த பார்வையில் பத்தாம் வீட்டைப் பார்கின்றது என்று அறிந்து அந்த கிரகத்தின் வலிமையையும், காரகதுவமங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன காரணிகளை ஆராய்ந்து அணைத்து தொழில் காரகங்களையும் பட்டியலிட்டுக் கொண்ட பிறகு, ஜாதகரின் மனது எந்தெந்த தொழில்களில் ஈடுபாடு கொள்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஜாதகர் ஏற்கெனெவே சில காலம் தொழில்/வியாபாரம் செய்திருப்பாரேயானால் அவற்றில் எவ்வேவ்வற்றில் அதிகம் சோபித்தார் என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக எந்த கிரகம் அல்லது கிரகங்கள் தொழிலுக்கு உகந்ததாக வலிமை பெற்று இருகின்றன என்று உறுதி செய்து அந்த கிரகத்தின் தொழில் காரகங்களை பரிந்துரைக்க வேண்டும்.
ஒவ்வொரு கிரகத்தின் காரகமும் கீழே விவரிக்கப் பட்டிருக்கின்றது.
சூரியனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • அரசியலில் ஈடுபடலாம்
  • அரசாங்க வேலை
  • மாணிக்க வியாபாரி ஆகலாம்
  • சிவப்பு வண்ண கற்களை விற்கலாம்
  • தங்க ஆபரணங்களை தாயாரிக்கலாம், விற்பனை செய்யலாம்.
  • தர்க்கம் செய்வதில் வல்லவராகலாம்
  • மாந்த்ரீகத்தில் ஈடுபடலாம்
  • நூற்பாலை சம்பந்தப் பட்ட வேலைகள் செய்யலாம்
  • கட்டுமான துறைகளில் ஈடுபடலாம்
  • மிளகாய் வியாபாரம்
  • வெங்காய வியாபாரம்
  • புகையிலை வியாபாரம்
  • மர வியாபாரம்
  • காகிதம் வியாபாரம்
  • விபூதி வியாபாரம்
  • தாவர பொருட்கள் வியாபாரம்
  • கற்பூரம் வியாபாரம்
  • மருந்து வியாபாரம்
  • இரசாயன வியாபாரம்
  • வழக்கரிஞ்சர்

சந்திரனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்க்குரியவனாக சந்திரனோ, பத்தாம் இடத்திற்கு உரியவன் உள்ள இடமானது சந்திரனின் வீட்டுக்கு உரியதாகவோ அமைந்திருந்தது என்றால் அது சந்திரனின் காரகத்துவத்தை பெற்றது என்று கூறலாம்.
சந்திரன் வெண்மையானவன். எனவே வெள்ளை நிறமுடைய பொருட்களை கொண்டு எந்த வியாபாரம் செய்தாலும் அது வெற்றியாக அமையும்.
  • முத்து வியாபாரம்
  • உப்பு வியாபாரம்
  • சுண்ணாம்பு வியாபாரம்
  • சங்கு வியாபாரம்
  • மீன் பிடித்தல்
  • பால், தயிர், மோர், வெண்ணை வியாபாரம்
  • படகு, பரிசல்
  • டிராவல் ஏஜென்சி
  • வேளாண்மை
  • நீர்பாசன துறை வேலைகள்
  • ஈரப்பசையுள்ள பழவகை வியாபாரம்
  • பெண்கள் விருப்பப்படும் எந்த தொழிலையும் செயாலாம்.
  • பேன்சி ஸ்டோர்
  • தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள்
  • சீட்டு பிடிகலாம்
  • அரசாங்க துறையில் வேலை கிடைக்கும், முயன்றால் பெறலாம்
  • டாக்டர் ஆகலாம்
  • புகழ்பெற்ற நடிகர்கள் ஆகலாம்
  • ஜோதிடம் கற்று தொழில் செய்யலாம்
  • எழுத்தாளர், பாடலாசிரியர் ஆகலாம்
  • எதற்கும் தகுதியற்றவராக கருதபடகூடியர் கூட சில பணக்கார வீடுகளில் அவ்வீட்டின் பெண்கள் இடக்கூடிய வேலைகளை செய்யக் கூடிய வேலைக்காரர்களாக ஆகின்றனர்.

செவ்வாயின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

செவ்வாய் காரகத்துவம் பெற்ற கிரகமாக இருக்குமேயாயின், அவர்கள் பின்வரும் தொழில் செய்ய ஏற்றவர்களாக மாறுகின்றனர்.
  • ரியல் எஸ்டேட் துறை இவர்களுக்கு சிறந்தது. வீடுகள், நிலபுலன்கள் விற்பனை செய்து வருமானம் பெறலாம்.
  • எங்கெங்கு நெருப்பின் துணை அவசியமோ அங்கெல்லாம் இவர்கள் உண்டு. உதாரணமாக செங்கல் சூளை, கொள்ளுப்பட்டறைகள், மின் வாரியங்கள், பயங்கர கருவிகள் தயார் செய்யும் இடங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்கும். அல்லது இவர்களே அவ்வேலையை செய்வார்கள்.
  • இவர்களில் மிகப்ப்ரும்பாலோர்க்கு சமையல் தொழில் செய்யத் தெரியும். ஹோட்டல் துறை இவர்களுக்கு வாய்க்கும்
  • குயவர்கள் ஆகலாம்
  • சிற்பிகள் ஆகலாம்
  • ஓவியர் ஆகலாம்
  • காவல்துறை / இராணுவத்தில் பனி கிடைக்கும்
  • விளையாட்டு வீரர்கள் ஆகலாம்.
  • சிலம்பம், குத்துசண்டை வீரர் ஆகலாம்.
  • பவள வியாபாரம்
  • மாயாஜாலம், ஏவல், பில்லி, சூன்யம் எல்லாம் சர்வ சதாரணமாக அமையும்
  • சர்கஸில் வேலை கிடைக்கும்
  • பெரிய தோப்புகள் மூலம் லாபம் பெறலாம்
  • விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை குத்தகைக்கு விடுவதாலும், துவரைப்பயிரிடுவதாலும் நன்மை அடையலாம்.

புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு பத்திரிகை துறை ஏற்றது. நிருபராகவோ, துணை ஆசிரியர், ஆசிரியர் ஆகா பணி ஆற்றலாம்
  • ஜோதிடத்தில் வல்லவர்களாக இருப்பார்கள்
  • இன்சூரன்ஸ் துறை சிறந்தது
  • இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் ஆதலால் கல்வித்துறை சம்மந்தமாக வேலை கிடைக்கும்.
  • புதன் காரகதுவம் பெற்றவர்கள் புகழ் பெற்ற ஏழுத்தாளர்களாக வருவார்கள்.
  • பட்டிமன்றம், கதா காலோட்சபம், சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர்கள்
  • வழக்கரிஞ்சர் ஆகலாம்
  • அக்ககௌடன்சி எனப்படும் கணக்குப் பதிவியல் துறை மிக சிறந்தது.
  • அமைச்சர்களுக்கு ஆலோசகராகவோ, அயல் நாட்டு தூதராகவோ ஆகலாம்.
  • மென்போருள் துறை மிக ஏற்றது.
  • ரேடியோ, தொலைக்காட்சி துறைகளில் நல்ல வேலை கிடைக்கும்
  • கடவுள் மேல் பக்தி உள்ளவர்கள் வேத சாஸ்திரங்களை கற்று அர்ச்சகர் ஆகலாம்.
  • வியாபாரியாக ஆகா விரும்புவோர்கள் இலைகள் பச்சை பயிறு போன்றவற்றை கொள்முதல் செய்து விற்றால் அதிக லாபம் பெறலாம்.
  • தபால் துறையில் வேலை கிடைக்கும்
  • ஆசிரியர் ஆகலாம்
  • கணித மேதைகளாக மாறலாம்.

குரு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • ஆன்மீக துறையில் நாட்டம் கொண்டு அதன் வாயிலாக சிலருக்கு ஜீவனம் அமையும்.
  • சிலர் மாகத்துமாவாக மாறி பிறர் மூலம் காப்பாற்றப்படுகின்றனர்.
  • நகை வியாபாரமும், புஸ்பராக வியாபாரமும் ஏற்றது.
  • எலுமிச்சை, ஊதுவத்தி, தென்னை, பாக்கு, கரும்பு வெல்லம் வியாபாரம் ஏற்றது
  • பொதுவாக யாகங்கள், புரோகித தொழிலில் ஈடுபடுதல், கதா கலோட்சபம் செய்தல், தெய்வீக காரியங்களில் ஈடுபடுதல், மதப் பிரசாரம் செய்தல், ஆலயங்களில் மதப் பிரச்சாரம் செய்தல், ஆலயங்களில் அறங்காவல் துறையில் ஈடுபடுதல், மடங்களில் இருத்தல், தொண்டு செய்தல், ஆலய குருக்களாக இருத்தல் போன்ற முழுவதுமான ஆன்மீகத் தொழிலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தைப் பெருகிக் கொள்ளலாம்.
  • வேறு சிலர் குறிப்பட்ட இனம், மதம், பிராந்தியம் போன்றவற்றிற்க்கு தலைவராகி அதன் மூலம் வாழ்க்கை நடத்துவர்.
  • இன்சுரன்சு துறை ஏற்றது
  • எங்கெங்கு காசு, பணம் புழங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாக இருக்க தகுதி வாய்க்கும்.
  • இவர்கள் தேர்தலில் நின்றால் சட்டமன்ற உருப்பினராகவோ, மந்திரிகளாகவோ கூட ஆகலாம்.
  • இவர்களில் பலருக்கு வக்கீலாகவும், நீதிபதி ஆகவும் தகுதி உண்டு
  • அரசியலில் இவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • பிறர்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் பொது, அந்த விசாரணை கமிசனில் இவர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.
  • இவர்கள் நிர்வாக துறையில் சிறப்பாக ஈடுபட முடியும்.
  • மளிகை கடை வைத்தால் இலாபத்தை அடையக்கூடியவர்களாக சிலர் விளங்குவார்கள்.
  • தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தகுதி சிலருக்கு வாய்க்கும்.
  • தொழிலார்களின் தலைவர்களாகவும் சிலர் விளங்குவர்

சுக்ரன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • தங்க கடை வைக்கலாம்
  • வெள்ளி நகைகளை தயாரித்து விற்கலாம்
  • வெண்கல வியாபராம் செய்யலாம்
  • செயற்கை கற்கள் விற்பனை செய்யலாம்
  • ஆடைகள் வியாபாரியாகலாம்
  • மணல் லோடு ஏற்றி வந்துசப்ளை செய்யலாம்
  • பால் பண்ணை அமைக்கலாம்
  • லாண்டரி நடத்தலாம்
  • தறி போட்டு நெய்யும் தொழிலை செய்யலாம்
  • படங்களுக்கு கண்ணாடி சட்டமிட்டு தரும் கடையினை வைக்கலாம்
  • முகம் பார்க்கும் கண்ணாடி கடை நடத்தலாம்.
  • கோயில் வாசலில் தேங்காய், பூ, பழம் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம்.
  • தனியாக வெற்றிலைப் பாக்கு கடை வைக்கலாம்
  • பூ வியாபாரம் செய்யலாம்
  • சந்தன வியாபாரம் செய்யலாம்
  • புளி மண்டி வைக்கலாம்
  • கரும்பை விளைவித்து விற்கலாம்
  • மணிலாவை பயிர் செய்து விற்பனை செய்யலாம்
  • தோட்டங்கள் இட்டு இலாபம் அடையலாம்
  • விறகு கடை நடத்தலாம்
  • பலகார கடை நடத்தலாம்
  • சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் வியாபாரம் செய்யலாம்.
  • பாத்திர வியாபாரம் செய்யலாம்.
  • சங்கீதம் சம்பந்தப்பட்ட மேள, தாளங்களை விற்பனை செய்யும் கடை வைக்கலாம்.
  • இலவம் பஞ்சு வியாபாரம் செய்யலாம்
  • கட்டில், மெத்தை வியாபாரம் செய்யலாம்
  • பால், தயிர் போன்றவற்றை விற்பனை செய்யலாம்
  • கால் நடை பண்ணை வைக்கலாம்
  • சென்ட் வியாபாரம் செய்யலாம்
  • வாகனங்களை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தலாம்
  • இசை அமைக்கலாம்
  • கலைஞ்சர்கள் ஆகலாம்
  • பின்னணி பாடலாம்
  • கவிஞர்களாக ஆகலாம்.
  • பொதுவாக கலைத்துறையில் இவர்கள் பெரிதாக சாதிக்கலாம்
  • கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட இவர்களுக்கு கேளிகைகளின் மூலமே வாழ்க்கையானது நடை பெரும்

சனி காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • இரும்பு, இரும்பு சம்மந்தப் பட்ட தொழில்களில் தான் இவர்கள் வல்லுனர்கள் ஆக இருப்பார்கள்.
  • கடினமாக உழைக்க வல்ல இவர்களுக்கு அம்மாதிரியேதொழில் அமையும்.
  • இவர்கள் நீல வண்ணமுடைய சரக்குகளை விற்பனை செய்தால் இலாபம் உண்டு
  • தோல் வியாபாரம் செய்யலாம்
  • எண்ணெய் வியாபாரி ஆகலாம்
  • எள் பயிரிட்டு விற்பனை செய்யலாம்
  • தரகர்களாக தொழில் நடத்தலாம்
  • மர வியாபாரம் செய்யல்லாம்
  • இரும்பு வியாபாரம் ஏற்றது
  • அழுகும் பொருட்கள் வியாபாரம் செய்யலாம்
  • கசாப்பு கடை நடத்தலாம்
  • கால்நடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து இலாபம் பெறலாம்
  • காவல் துறை ரகசியப்பிரிவில், உளவுத்துறையில் பணியாற்றலாம்
  • மர வேலைசெய்யலாம்
  • விவசாயம் செய்யலாம்
  • கூலி வேலை செய்யலாம்
  • மறு சுழற்சி தொழில்களில் ஈடுபடலாம்
  • தண்டல், வரி வசூல் செய்யல்லாம்
  • மருந்தாளுனராகலாம்
  • அகழ்வாராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம்
  • பொறியியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உண்டு
  • வெடி குண்டு தயாரிப்பு கிடங்குகளில் வேலை கிடைக்கும் 

ராகு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • இவர்கள் உளவுத் துறையில் இரகசிய கண்காணிப்பாளராக விளங்ககூடிய பதவிகளைப் பெற்றிருப்பார்கள்
  • மிக சிறந்த மத போதகம் செய்து வாழ்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்
  • பழைய கிழிந்து போன ஆடைகளை வாங்கி, விற்று வியாபாரம் செய்யல்லாம்
  • அடகு வியாபாரம் செய்யலாம்
  • மாணிக்கம், கோமேதகம் போன்ற கற்களை விற்பனை செய்யலாம்
  • ஈய வியாபாரம் செய்யலாம்
  • கேப்பை, உளுந்து போன்ற தானியங்களை உற்பத்திசெய்து விற்கலாம்
  • ஒயின் ஷாப், கள்ளுக்கடை, சாராயக் கடை நடத்தலாம்
  • மருந்து கடை நடத்தலாம்
  • தரகர் ஆகலாம்
  • மூங்கில், கருங்கல் வியாபாரம் செய்யலாம்
  • கடலில் இருந்து எடுக்கப்படும் எப்பொருளையும் கொண்டு வியாபாரம் செய்யலாம்
  • தையல்காரர் ஆகலாம்
  • எருமை மாட்டின் மூலம் வியாபாரம் செய்யலாம்
  • தறி நெய்து தொழில் செய்யலாம்
  • கப்பல் படை, விமானப்படையில் வேலை கிடைக்கும்
  • மந்திரவாதம் கற்றுக் கொள்ளலாம் 

கேது காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • ஆன்மீகத் துறையில் ஈடுபடலாம்
  • அறிவியல் துறையில் ஈடுபடலாம்
  • ஜோதிடத்தில் ஈடுபடலாம்
  • தொழில் நுட்பங்களை பிறருக்கு செய்வதன் மூலம் பலன் பெறலாம்
  • அலுமினிய பாத்திரங்கள் விற்கலாம்
  • ஈயம், தகரம் வியாபாரம் செய்யலாம்
  • தரகு வியாபாரம் செய்யலாம்
  • கோமேதகம், மாணிக்கம் விற்பனை செய்யலாம்
  • நீல நிற சரக்குகளாக வங்கி விற்கலாம்
  • பட்டாசு தயாரிப்பில் ஈடுபடலாம்
  • லாகிரி வஸ்துகளை கொண்டு வியாபாரம் செய்யலாம்
  • ஒயின் ஷாப் நடத்தலாம்
  • மீன் பிடிக்கலாம்
  • தூர் வாரலாம்
  • முத்துக் குளிக்கலாம்
  • கசாப்புகடை வைக்கலாம்
  • ரசவாதம் செய்யலாம்
  • மந்திரவாத தொழில் செய்து அதன் மூலம் பொருளை சம்பாதிக்கலாம்
  • இந்தக் காரகத்துவம் பெற்றவர்கள் திருட்டில் வல்லவர்களாக இருப்பார்கள்.
  • கொலை செய்வதில் அஞ்சாதவர்களாக இருப்பார்கள்
  • ஆண்டிப் பண்டாரமாகவும் மாற வாய்ப்பு உண்டு
  • மதப் பிரசாரம் செய்வார்கள்

பிறந்த லக்னத்தின் அடிப்படையில் தொழில் அமையக்கூடிய வாய்புகள்

மேஷ லக்னத்தைப் பெற்றவர்கள்

ஒரு மனிதன் மேஷ ராசியை தனது ஜென்ம லகினமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான்.
இந்த மேஷத்திற்கு பத்தாம் இடம் மகரம். பத்னோன்றாமிடம் கும்பம். இந்த இரண்டு வீடுகளையும் தனது வீடுகளாக கொண்டு சனி திகழ்கின்றார். ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி, பதினொன்றுக்குடைய இலாபாதிபதி சனி.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • இரும்பு சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணி கிடைக்கும்
  • விவசாயிகளாகவும் மாறலாம்
  • நெருப்பினால் எவை எல்லாம் இயங்குகின்றதோ அந்த இடங்களில் எல்லாம் எளிதில் வேலை கிடைக்கும்.
  • பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்களான தங்கம், வெள்ளி, கனிம பொருட்கள், நிலக்கரி, தாது உப்புகள் ஆகிய தொழிற்சாலைகளில் பணி கிடைக்கலாம்.
  • மருத்துவ துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
  • இராணுவத்திற்கு முயற்சி செய்தால் அதில் உத்தியோகம் பெறலாம்
  • காவல் துறையில் வேலை கிடைக்கும்
  • பொதுவாக பத்துக்கு உரியவர் சனியாக இருக்கும் பட்சத்தில் எத்தொழிலை செய்த போதிலும் அதில் கடினமான உழைப்பை செய்ய வேண்டியது வரும்.
  • பத்துக்குடைய சனி சரியான இடத்தில் அமர்ந்திருந்தாரேயானால் அவர்கள் பிறரிடம் அடிமைஉத்தியோகம் செய்யாமல் தங்களாகவே சொந்த தொழிலை செய்வார்கள்.

ரிஷப லக்னத்தைப் பெற்றவர்கள்

ஒரு மனிதன் ரிஷப லக்னத்தை தனது ஜென்ம லக்னமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக சுக்ரன் திகழ்கின்றான்.
ரிஷபத்திற்கு பத்தாம் இடம் கும்பம், பதினொன்றாம் இடம் மீனம். இந்த இரண்டு வீடுகளில் கும்பத்தை தனது சொந்த வீடாக கொண்டவர் சனி. மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி. பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • உணவு விடுதி வைத்து நடத்தலாம்
  • சினிமா, நாடகம் போன்ற கலை துறைகளில் ஈடுபடலாம்
  • அழகு சாதன பொருகள் சம்மந்தப்பட்ட துறைகளில் ஈடுபடலாம்
  • பெண்கள் விரும்பக்கூடிய ஆடைகள், ஆபரணங்கள், கற்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்

மிதுன லக்னத்தைப் பெற்றவர்கள்

மிதுன லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான்.
மிதுனத்திற்கு பத்தாம் இடம் மீனம். பதினொன்றாம் இடம் மேஷம். மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • கம்ப்யூட்டர் துறை இவர்களுக்க்கு மிகவும் ஏற்றது.
  • பொறியியல் துறை ஏற்றது
  • விமான துறை பிரிவுகளில் வேலை தேடலாம்
  • பதிப்பகத் துறையில் நூல் வெளியீடு செய்வது நல்ல பலன் தரும்
  • ரேடியோ, தொலைகாட்சி போன்ற துறைகளில் வேலை கிடைக்கும்
  • செய்தி ஸ்தாபனங்களில் பணி புரியலாம்.
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி கிடைக்கும்
  • எங்கெங்கு பணம் புலங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாகஇருக்க வாய்ப்பு கிட்டும்.
  • கணக்காளராக பணி கிடைக்கும்

கடக லக்னத்தைப் பெற்றவர்கள்

கடக லக்னத்திற்கு உரியவனாக சந்திரன் திகழ்கின்றான். கடகத்திற்கு பத்தாம் இடம் மேஷம். பதினொன்றாம் இடம் ரிஷபம். மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் சுக்கிரன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • தண்ணீர் சம்மந்தப்பட்ட எந்த தொழிலும் இந்த லக்னத்திற்கு நல்லது.
  • கப்பல் போக்குவரத்து துறையில் வேலை கிடைக்கும்
  • மீன் பிடி தொழில் ஏற்றது.
  • உப்பு வியாபாரம் ஏற்றது
  • இராணுவத்தில் வேலை கிடைக்கும்
  • காவல் துறையில் வேலை கிடைக்கும்
  • ஜவுளி வியாபாரம் பலன் தரும்

கடக லக்னத்தைப் பெற்றவர்கள்

சிம்ம லக்னத்திற்கு உரியவனாக சூரியன் திகழ்கின்றான். சிம்மத்திற்கு பத்தாம் இடம் ரிஷபம், பதினொன்றாம் இடம் மிதுனம். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் (ஜீவனாதிபதி) சுக்கிரன். மிதுனத்தை சொந்த வீடாக கொண்டவர் (லாபாதிபதி) புதன்,
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • போலிஸ், செக்யுரிட்டி முதலான காவல் பணி கிடைக்கும்.
  • வனத்துறை பணிகள் கிடைக்கும்
  • கணினி துறையில் வேலை கிடைக்கும். குறிப்பாக சிஸ்டம் அட்மினிஸ்டிரேடர், நெட்வொர்க் அட்மினிஸ்டிரேடர் போன்ற பணிகள் சுலபமாக கிடைக்கும்.
  • அரசாங்க துறையில் எளிதில் வேலை கிடைக்கும்
  • அரசியலில் இவர்கள் ஈடுபட்டால் வெகு விரைவில் முன்னுக்கு வருவர்
  • நிலத்துக்குக் அடியில் உள்ள நன்நீரை வரவழைத்தல், சுரங்கம் தோண்டுதல், அகழ்வாராய்ச்சி பணிகள் முதலானவை கிடைக்கும்

கன்னி லக்னத்தைப் பெற்றவர்கள்

கன்னி லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான். பத்துக்குடைய ஜீவானாதிபதி புதன், பதினோன்ருகுடைய லாபாதிபதி சந்திரன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • லக்னத்திற்கும், பத்திற்கும் உரியவனாக இரு வீட்டு ஆதிபத்தியம் பெற்ற புதன் முழுவதுமாக பிறரை அதிகாரப்படுத்தும் தொழிலையே பெற்றவனாகின்றான். எனவே மற்றவர்களை அதிகாரபடுத்தி வேலை வாங்கும் எத்தொழிலும் இவர்களுக்கு ஏற்றதாக அமைகின்றது.
  • மேலும் நுண்மையான கலைதொடர்புடைய பணிகள் பலவற்றைச் செய்யலாம்.
  • இசை பாடியோ, பயிற்றுவித்தோ வாழ்க்கை நடத்தலாம்.
  • எழுத்தாளர்கள் ஆகலாம்
  • நாட்டியம் ஆடுவதன் மூலம் ஜீவனம் செய்யலாம்
  • கலை சம்மந்தப்பட்ட தொழில்களை செய்யலாம்
  • கல்வி சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளிலும் இவர்கள் ஈடுபடலாம்.

துலாம் லக்னத்தைப் பெற்றவர்கள்

துலாம் லக்னத்திற்கு உரியவனாக சுக்கிரன் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் கடகம். பதினொன்றாம் இடம் சிம்மம். பத்துக்குடைய ஜீவனாதிபதி சந்திரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சூரியன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • பெண்கள் எவை எல்லாம் விரும்புகின்றார்களோ, அத்தகைய பொருட்களை வியாபாரம் செய்யலாம்.
  • பேன்சி ஸ்டோர் வைக்கலாம்.
  • வீட்டுக்கு உபயோகமான அரிசி, பருப்பு, புளி விற்கும் மளிகை வியாபாரம் செய்யலாம்.
  • காய்கறி, பூ வியாபாரம் செய்யலாம்
  • மாட்டின் மூலம் கிடைக்க கூடிய பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்பனை செய்யலாம்.
  • வெள்ளை நிறமுள்ள பொருட்களை விற்பனை செய்யலாம்.

விருச்சிக லக்னத்தை பெற்றவர்கள்

விருசிக லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் சிம்மம். பதினோன்றாம் இடம் கன்னி. பத்துக்குடைய ஜீவனாதிபதி சூரியன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி புதன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • ஜோதிடம் சொல்லி இவர்கள் சம்பாதிக்கலாம்
  • மந்திரவாதங்கள் செய்து, மந்திரவாதிகள் என்று புகழ் பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம்
  • செப்படி வித்தை, மாயா ஜாலம், கண்கட்டு வித்தைகள் ஆகியவற்றை செய்தும் வருமானம் பண்ணலாம்.
  • நீதி துறையில் இவர்களுக்கு வேலை கிடைக்கும்
  • மக்களுக்கு பயன்படும் எதையாவது கண்டுபிடித்து புகழ் அடைந்து அதன் மூலம் பலன் பெறுவர்.
  • ரசாயன துறைகளில் ஈடுபடுவர்.
  • மருத்துவ துறையில் இவர்களில் பலர் ஈடுபடுபவர்.

தனுசு லக்னத்தை பெற்றவர்கள்

தனுசு லக்னத்திற்கு உரியவனாக குரு திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் கன்னி ஆகும். பதினோன்றாம் இடம் துலாம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி புதன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சுக்ரன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • இவர்கள் மரத்தினாலான பொருட்களை இலாபகரமான முறையில் விற்பனை செய்யலாம்.
  • ரசாயான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.மருத்துவ சம்மந்தபட்ட தொழிலில் பணியாற்றலாம்.
  • கட்டடம் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடலாம்,
  • கட்டடம் சம்மந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடலாம்.

மகர லக்னத்தை பெற்றவர்கள்

மகர லக்னத்திற்கு உரியவனாக சனி திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் துலாம் ஆகும். பதினோன்றாம் இடம் விருசிகம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி சுக்ரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி செவ்வாய்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • இவர்கள் இரசாயன சம்மந்தப் பட்ட துறைகளில் பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள்
  • சட்டத்தால் குற்றம் என்று ஒதுக்கப்படும் பலவித பணிகளை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
  • தண்ணீர், திரவம் போன்ற பொருட்களினால் தங்கள் நடத்தலாம்.
  • இவர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருக்க வாய்ப்பு உண்டு.

கும்ப லக்னத்தை பெற்றவர்கள்

கும்ப லக்னத்திற்கு உரியவானக சனி திகழ்கின்றான். லக்னதிற்கு பத்தாம் இடம் விருசிகம் ஆகும். பதினோன்றாம் இடம் தனுசு ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி செவ்வாய். பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதன் மூலமாக பொருள் குவிப்பர்.
  • காவல் துறையில் உத்தியோகம் கிடைகின்றது.
  • இராணுவத்தில் சேர முயற்சித்தால் பலன் கிடைக்கும்.
  • குத்து சண்டை முதலான பல்வேறு சண்டைகளின் மூலம் பலன் கிடைக்கும்.
  • முரட்டுத் தனத்தின் மூலம் வருவாயை பெறக் கூடிய பாக்கியத்தை இவர்கள் அடைகின்றனர்.

மின லக்னத்தை பெற்றவர்கள்

மீன லக்னதிறகு உரியவனாக குரு திகழ்கின்றார், லக்னதிற்கு பத்தாம் இடம் தனுசு ஆகும். பதினோன்றாம் இடம் மகரம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி குரு. பதினோன்றுக்குடைய லாபாதிபதி சனி.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • இவர்கள் எத்தொழில் செய்தாலும், மற்றவர்கள் கௌரவமாக கருதும் தொழிலாகவே அது அமையும்.
  • ஆசிரியர்களாக இருக்கலாம்
  • மதபோதனையாளராக இருக்கலாம்
  • பிறரை வழிகாட்டி செல்லலாம்
  • ஆன்மீக துறையில் செல்லலாம்
  • இவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாகவே வாழ்க்கை நடத்துவார்கள்.
  • புனிதமான வேலையே கிடைக்கும்

பத்தாம் இடதில் கிரகங்கள் நிற்கும் பலன்

சூரியன் நிற்கில் :- வேந்தனாய், தனாவானாய், தேவப் பிராம்மண பக்தி விசுவாசமுள்ளவனாயிருப்பார். தாய்க்கு வியாதியால் தொந்தரவு.
சந்திரன் நிற்கில் :- புத்திமான், சூரன், சுகித்து வாழ்வான். புண்ணிய காரியங்களில் சிந்தை, பந்துக்களால் சுகம், ராசமூலதனம், ப்ராப்தி, தாய்க்கு தோஷி, தீர்த்த யாத்திரை செய்வான். எடுத்த காரியம் முடிப்பார்.
செவ்வாய் நிற்கில் :- பூமியை ஆளுவான், பிரதானி, சூரன், சுகவான், பராகிரமம், சகல காரியசித்தி, சிப்பந்திகளை வைத்து ஆளுவான். அயிஸ்வரியன், வெகுஜன பூஜிதன், ஆயுத அக்கினியால் பயமுள்ளவனாம்.
புதன் நிற்ககில் :- சிற்ப வித்தை அறிவான். ஞானமறிவார், சத்திவாசகர், காவிய கணித மறிந்தவன். குசல வித்தை அறிந்தவர், வினோத வஸ்திர அலங்காரன், ஆசார சீலன், மிதமான வார்தையுரைபான்.
குரு நிற்கில் :- செல்வமுடையவன், அபிமானி, குல வித்தை, [பறிக்கும் குணம் உள்ளவன், ராஜ சேவை, பிரதாப முடையவன், சபையில் புகழ் பெற்றவர். விசேச தனத்தை சேகரிப்பான். புதிரகளிடத்தில் அற்பது வேஷம்.
சுக்ரன் நிற்கில் :- சூரன், அபிமானி, கீர்திவான், புதியுள்ளவன், நாளுக்கு நாள் விருத்தியடைவார், தனவான், பிரதாப சீலன், சுகமனுபவிபவன், சந்தான விருத்தியில்லை, நீதி, குணம், கல்வி, ஸ்திரி, மூலதன லாபமுடையவன்.
சனி நிற்கில் :- தன்வான், சூரன், பிரபு செவையுடையவன், பக்திவைராக்கிய முள்ளவன். தனம் தேடுவதில் சமர்த்தன். தாய்க்கு கண்டம். அற்பகுணம், பரஹிம்சை செய்வார்.
ராகு நிற்கில் :- நீச கர்மத்தை செய்வான். புத்திர சுகமில்லான். குரூர குணத்தால் அதிக ஆசை. அற்பசுகம். அஜாகிரதையால் தன நஷ்டம். நடன சங்கீதங்களில் ஆர்வம். சபையில் கர்வ குணமுடையவன்.
கேது நிற்கில் :- உற்சாகமுள்ளவான். ஞானப்பெருஞ்செல்வன், சௌக்கிய குறைவு, துக்கம், பிதாவுக்கு வறுமை. ரிசபம், மேஷம், கன்னி, விருசிகம் இதில் ஒன்று லக்கினத்திற்கு பத்தாம் இடம் ஆனால் சத்துரு ஜெயம்; விரோதியிஸ்தன்

Yours Happily
'விஸ்வயோக ஸ்ரீ டாக்டர் ஸ்டார் ஆனந்த்ராம்' 
Life Skills Trainer 
www.v4all.org 
cell -9790044225