Showing posts with label money making workshop at erode. Show all posts
Showing posts with label money making workshop at erode. Show all posts

Monday, October 10, 2016

வெற்றியை கொண்டாடும் விஜயதசமி நாளில் பெற்ற வெற்றியும்

வெற்றியை கொண்டாடும் விஜயதசமி நாளில் பெற்ற வெற்றியும் ?? பெறவிருக்கும் வெற்றியும் !! வெற்றி அருளியது யார் ?? என்பது குறித்தே இப்பதிவு ஈசன் திருவருளால் ( கொஞ்சம் பெரிய பதிவு தான் படித்தால் பயனுண்டு என்று எண்ணம் )
நமசிவாய
வெற்றி பெற்றதால் தான் வாழ்கிறோம் ??
பல லட்சம் விந்து அணுவில் முந்திசென்று தாயின் கருமுட்டை அடைந்ததே முதல் வெற்றி !! நீ வாழ காரணமான வெற்றி !!
நாளும் நமது கழிவுகள் நமது உடலில் தங்காது வெளியேறுகிறது அதுவும் வெற்றி தானே !!
பல கோடி பேரில் உனக்கான அடையாளமும் அங்கமும் பெற்றது வெற்றி தானே !!
பலர் மனதை வெல்லும் ஆற்றல் பெற்று பலரும் மதிக்கும்படி வாழ்கிறோம் அதுவும் வெற்றிதானே !!
உனக்கான அனைத்தையும் உன் விருப்பப்படியே அமைத்துக்கொண்டு வாழ்கிறோம் அதுவும் வெற்றிதானே !!
இதுபோல் நீ இயங்க ஒரு உலகம், வாழ வீடு, அரவணைக்க உறவு, தோள்கொடுக்க தோழன், பயணிக்க வாகனம், உன் சுவைக்கு ஏற்ற உணவு, என்று எத்தனையோ வெற்றி தினம்தினம் பெற்று கொண்டே வாழ்கிறோம் !!
( மற்றவனோடு உன்னை ஒப்பிட்டு கொண்டு வாழ்வதால் பெற்ற வெற்றி தெரிவது இல்லை !! வாழ்கிறாயே அதுதானே அடிப்படை வெற்றி )
பெறவிருக்கும் வெற்றி ??
நாளும் தினமும் உன்னுடைய செயலில், எண்ணத்தில், கையாளும் விதத்தில், பக்குவபட்டுகொண்டே தானே இருக்கிறாய் !! நீயே உன் வாழ்கையை ஒரு வருடம் பின்நோக்கி பார்த்தல் உனக்கே தெரியும் !! அதுபோல ஒவ்வொரு நாளும் வெற்றிபெற்று அடுத்தநாள் அதைவிட பக்குவப்பட்டு வெற்றிபெற்றுகொண்டு தான் இருகிறாய்,
ஆனால் உன் வெற்றியை பிறர் வெற்றியோடு ஒப்பிடும்போது உன்னுடைய வெற்றி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாம் உணர்வது இல்லை !! நீ ஒப்பிடும் ஒருவரும் இன்னொருவர் வெற்றியை தானே பார்கிறார் அவர் வெற்றியை நீ பார்க்கிறாய் !! இதுதான் இயக்கம் !!
உன் வெற்றியை உணர்ந்தால் இயக்கத்தின் இயக்கமாக வெற்றியின் இயக்கமாக உன்னை உணர்வாய் !!
சரி இவ்வளவு வெற்றி பெற்று விட்டோம் !! இந்த வெற்றிக்கு வித்திட்டவன் யார் ?
வெற்றி என்ற உணர்வை உணரவைத்து !!
அதன்மூலம் கிட்டும் இன்பத்தை இன்பமாக அனுபவிக்க வைத்து!!
அந்த வெற்றியை அடைய உடல் அருளி !! உறுப்பு அருளி !!
நீ உன்னுடையதாக எண்ணும் அனைத்தும் தன்னுடையது என்று தன்னை காட்டாமல் அருளி !!
உன்னை அனுபவிக்கவிட்டு, ஆனந்தப்பட வைத்து, துன்பம் என்று நீயாக நினைப்பதை நீ நினைத்தவழிய போக்கும் வழியும் காட்டி !!
மற்றவனை காட்டி அவனை போல் வாழவேண்டும் என்ற எண்ணும் காட்டி!!
உனக்கான அண்டத்தையே இயக்கி, அதன்வழியே அகிலத்தையே இயக்கி, அதில் வாழும் உன்னை இயக்கி, உனக்கு தேவையென்று கருதும் அனைத்தையும் இயக்கி !!
உன்னை வெற்றிபெற வைக்கவே இத்தனையும் செய்யும் ஒருவன் மாபெரும் கருணையாளன் ஈசனே, அப்படி வாழ்விக்கும் வள்ளல் ஈசனை தவிர வேறு யார் இருக்க முடியும் !!!!!
இந்த நாள் முதலாவது நீ பெற்ற அனைத்திலும் தானே இருந்து அவை அனைத்திலும் வெற்றியே அருளி உன்னை வாழ்விக்கும் வள்ளலை உணர்ந்துகொள் !!
சிக்கன பற்று சிந்தையே சிவமாக கொண்டு வாழு !! வேறெவர் முன்னும் கையேந்தி பிச்சை கேட்டு !! வாழ்விக்கும் வள்ளலை கேவலபடுத்தாதே !!
வெற்றியானவன் திருவடி பணிந்து பெற்ற, பெற்றுக்கொண்டு இருக்கும், பெறப்போகும் வெற்றியாவும் ஈசன் திருவருளே என்று போற்றி கொண்டாடி வெற்றியை – ஈசனை அனுபவித்து வாழ்வோம் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமசிவாயவே
- Fb Anantha kumar

- www.moneyattraction.in

Wednesday, May 18, 2016

புதையல் மற்றும் எதிர்பாராத பண வரவை தரும் எள்

புதையல் மற்றும் எதிர்பாராத பண வரவை தரும் எள்


புகழ் பெற்ற 'திறந்திடு 'சீசேம்' (ஆங்கிலத்தில்) வாசகத்திற்கு பெயர் பெற்ற எள்ளிற்கு எதிர்பாராத பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தால் பண வரவை ஏற்படுத்தும் தன்மை உண்டு. சிறிய கண்ணாடி குப்பியில் எள் நிரப்பி வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் திறந்த படி வைத்திருக்க மேற்கண்ட நன்மைகளை எதிர்பார்க்கலாம். மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் விட்டு புதிதாக மாற்றி வரவும்.

Thursday, October 15, 2015

ஆழ்ந்த அன்பு.

தஷ்ரத் மான்ஜி (Dashrath Manjhi) என்பவரின் துணைவியார், ஃபால்குனி தேவி (Falguni Devi) அவர்கள், சரியான நேரத்தில், மருத்துவ உதவி பெறாததால், 1959ம் ஆண்டு மரணமடைந்தார். அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு அருகிலிருந்த மருத்துவமனையை அடைய ஒரு கிலோமீட்டர் தூரமே என்றாலும், நடுவே ஒரு குன்று வழிமறித்து நின்றதால், அவர்கள் அந்தக் குன்றைச் சுற்றி, ஏறத்தாழ 70 கி.மீட்டர் பயணம் செய்து மருத்துவமனையை அடையவேண்டியிருந்தது. அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியாமல், ஃபால்குனி தேவி அவர்கள் இறந்தார்.
தன் மனைவியைப் பறிகொடுத்த தஷ்ரத் மான்ஜி அவர்கள், அடுத்த ஆண்டுமுதல் (1960), ஒவ்வொருநாளும், அந்த குன்றைத் தகர்க்கத் துவங்கினார். ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அவர் அந்தப் பணியைத் துவக்கியபோது, கிராமத்து மக்கள் அனைவரும் அவரை மதியிழந்தவர் என்று கேலி செய்தனர். மான்ஜி அவர்கள் மதியிழக்கவில்லை, மனமும் தளரவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பின், 1982ம் ஆண்டு, அவர் அந்தப் பணியை முடித்தபோது, குன்றின் சிகரத்திலிருந்து 25 அடி ஆழத்தில், 360 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட ஒரு பாதையை மான்ஜி அவர்கள் தனியொருவராக உருவாக்கியிருந்தார். அவர் அமைத்தப் பாதையால், அடுத்த ஊருக்குச் செல்லும் தூரம், 70 கி.மீ.லிருந்து, 1 கி.மீ.ஆகக் குறைந்தது.
தன் சொந்த நலனையும், குடும்பத்தையும் மறந்து, மனம் தளரும்படி ஊர் மக்கள் சொன்ன கேலிப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தஷ்ரத் மான்ஜி அவர்கள், 22 ஆண்டுகள், அதாவது, 8000த்திற்கும் அதிகமான நாட்கள், ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அந்தக் குன்றைக் கரைத்ததற்குக் காரணம்... அவர் தன் மனைவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு.

Monday, October 5, 2015

வெற்றிகரமான வாழ்வியல் முறைக்கு மாற்றுத்திறன் ஒரு தடையல்ல

ஜெசிக்கா காக்ஸ் (Jessica Cox, நான் படித்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக் குறிப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர். பிறப்பு: அரிசோனாவில் 1983-ம் ஆண்டு) உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர், கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர். இவர் பிறக்கும் போது இரு கைகளும் இன்றி பிறந்தார். இது பிறவிக் குறைபாடு ஆகும். மூன்று ஆண்டுகள் கடின பயிற்சிக்குப் பிறகு தன்னுடைய விமான ஓட்டுநர் உரிமத்தை அக்டோபர் 10, 2008 அன்று பெற்றார்.
தன் மழலை பருவம் முதற்கொண்டு தன் இரு கைககள் இல்லாது அவர் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள அதிக நிர்பந்தங்களுக்கு ஆளாகி இருக்கக் கூடும். பிறர் உதவியின்றி தன்னுடைய தேவையை செய்ய துணிச்சலாய் கற்றதின் நிமித்தம் அவர் தன் மன வலிமையைக் காப்பாற்றிக்கொண்டார். வெற்றிகரமான வாழ்வியல் முறைக்கு மாற்றுத்திறன் ஒரு தடையல்ல என்பதற்கான மற்றும் ஒரு எடுத்துக்காட்டு இவர்.
இவர் இலகுரக விமானம் (10,000 அடி வரையிலும்) ஓட்டுவதில் பயிற்சியும், ஆப்பிள் ப்ளைட் நிறுவனத்தின் உதவித்தொகையையும் பெற்றார். தன்னுடைய பதினான்காவது அகவை வரையிலும் தன்னுடைய செயற்கைக் கையை உபயோகப்படுத்தவில்லை. . தன்னுடைய கைகளுக்குப் பதிலாக, கால்களையே பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இவர் கார் ஓட்டுநர் உரிமமும் வைத்துள்ளார் (தடையற்ற கார் ஓட்டுநர் உரிமம்). இவருடைய கார்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உபயோகப்படுத்தி வருகிறார். இவர் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்வதிலும் தேர்வு பெற்றுள்ளார். தன்னுடைய காஸ் இணைப்பது, மூக்குக் கண்ணாடியில் உள்ள குவியங்களை மாற்றுவது உள்ளிட்டவைகளைப் பிறருடைய உதவிகளை நாடாமல் தானே செய்கிறார். இவர் ஒரு பயிற்சிபெற்ற சுகூபா என்னும் ஒரு வகையான நீர் மூழ்குதல் வீராங்கனை ஆவார். காக்ஸ், அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது உணர்ச்சிமயமான பேச்சாளராக இருந்து வருகிறார்..
உண்மையிலேயே இவர் பல்வேறு மாற்றுத்திறன்களைக் கொண்டவர் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

Tuesday, September 22, 2015

பணம் இருந்தால் மகிழ்ச்சியாய் வாழ முடியுமா?

பணம் இருந்தால் மகிழ்ச்சியாய் வாழ முடியுமா?
பணம் மனித வாழ்க்கையின் பிரதான தேவைகளில் ஒன்றாகி விட்டது. பணம் நம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அவசியம் தேவைப்படுகிறது.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று சொல்லுவார்கள். இன்று குணம் உள்ளவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணம் உள்ளவர்கள் முன் வரிசையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
பணத்தால் பல விஷயங்களை வாங்க முடியும் என்பது உண்மை தான். பணத்தால் கார் வாங்க முடியும். வீடு வாங்க முடியும். ஏன், மகிழ்ச்சியைக் கூட ஓரளவுக்கு வாங்க முடியும். நல்ல வாழ்க்கைத் துணையை கூட அடைய முடியும். புகழைக் கூட பெற முடியும்.
ஆனால் பணத்தால் உண்மையான மகிழ்ச்சியை, இயற்கையான ஆரோக்கியத்தைத் தர முடியுமா?
உணவு, உடை, இருப்பிடம் இல்லாதவருக்கு பணம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். ஆனால் அதே பணம் அந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆன
பின் அதே மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஒரளவக்கு மேல் பணத்தால் அதிக மகிழ்ச்சியை தர முடிவதில்லை.
பில் கேட்ஸ் ஒரு நாளைக்கு 10 முறை சாப்பிட முடியுமா? அல்லது ஒரே நேரத்தில் 3 காரில் தான் செல்ல முடியுமா?
பணத்தால் நிறைய விஷயங்களை வாங்க முடியும் தான். ஏன் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கூட ஓரளவுக்கு வாங்க முடியும். ஆனால் உண்மையான மகிழ்ச்சியை, நிரந்தரமான சந்தோஷத்தை பணத்தால் நிச்சயம் வாங்கவே முடியாது என்பது தான் நிஜம்.
வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பணம் சம்பாதிப்போம். ஆனால் சம்பாதிப்பதற்ககாகவே வாழ்க்கையை ஒரு போதும் வாழ வேண்டாம்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Friday, September 11, 2015

நூறாவது குரங்கு - மன அலைகள் மூலமாகவே

எந்தப் புதிய பழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு
கணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள்
மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதிய பழக்கம் அல்லது
வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று
கண்டுபிடித்தனர். அந்தக் கணிசமான எண் என்ன என்று
துல்லியமாகச் சொல்லா விட்டாலும்
உதாரணத்திற்கு "நூறு" என்ற எண்ணைக் குறியீடாகச்
சொன்னார்கள்.
நூறாவது குரங்கு
**********************************
1952 ஆம் ஆண்டு சில ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்
கோஷிமா என்ற தீவில் ஒரு வகைக் குரங்கினத்தின் இயல்புகளை
ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக்
குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு தந்து
வந்தார்கள். அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்ட
வெளியில் போட குரங்குகள் அவற்றை எடுத்து சாப்பிட்டு
வந்தன. பெரும்பாலும் ஈர சகதியில் விழுந்திருந்த கிழங்கை
எடுத்து சாப்பிட்ட குரங்குகள் அந்த சகதியின் சுவையும் கிழங்கோடு
சேரவே, அதை சிரமத்துடன் சாப்பிட்டன. அதில் பதினெட்டு
மாதப் பெண் குரங்கு ஒன்று மட்டும் அந்தக் கிழங்கை
பக்கத்தில் இருந்த ஓடையில் அந்த சகதியை நீக்கி சாப்பிட்டது. அது
சுவை குறையாததாக இருக்கவே அப்படிக் கழுவி சாப்பிடும்
வித்தையை தன் தாயிற்குக் கற்றுத் தந்தது. அதைப் பார்த்த மற்ற
சில குரங்குகளும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட
ஆரம்பித்தன. ஆனால் வயதான குரங்குகள் மட்டும்
பழையபடி சகதியுடன் இருந்த கிழங்குகளையே சாப்பிட்டன
என்றாலும் இளைய குரங்குகள் கிழங்குகளைக் கழுவி சாப்பிடும்
வழக்கத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன.
கிட்டத்தட்ட 1958 ஆம் ஆண்டு ஒரு கணிசமான
எண்ணிக்கையுடைய குரங்கினம் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி
சாப்பிட ஆரம்பித்தவுடன் கிழங்கைக் கழுவாமல் சாப்பிடும்
குரங்கே இல்லை என்கிற நிலை வந்தது. அந்தக் குறிப்பிட்ட
சமயத்தில் அந்தத் தீவில் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட
எல்லா தீவுகளிலும் உள்ள குரங்குகளும் உடனடியாக இந்தப்
புதிய முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது தான் அதிசயம்.
அந்த ஆராய்ச்சியாளர்கள் எந்தப் புதிய பழக்கத்தையும்,
வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு கணிசமான எண்ணிக்கையை
எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப்
புதிய பழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும்
தானாகவும் பரவுகிறது என்று கண்டுபிடித்தனர். அந்தக்
கணிசமான எண் என்ன என்று துல்லியமாகச்
சொல்லா விட்டாலும் உதாரணத்திற்கு "நூறு"
என்ற எண்ணைக் குறியீடாகச் சொன்னார்கள்.
இந்த தத்துவத்தை "நூறாவது குரங்கின் விளைவு" (Hundredth
Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes)
என்பவர் எழுதி பிரபலமாக்கினார். அவரும் அவருக்குப் பின்
வந்த ஆராய்ச்சியாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களும்
இதே தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று
கருதினர். அந்த ஆரம்பக் கணிசமான தொகையை
எட்டுவது தான் கடினமான விஷயம். அந்தக் கணிசமான
தொகையை எட்டியபின் அந்த சிந்தனைகளும்,
செயல்களும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள
மனிதர்களிடையே தானாக ஏற்பட்டு பரவும் என்பது அவர்கள்
கருத்தாக இருந்தது.
இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide) என்ற புத்தகத்தில்
லயால் வாட்சன் (Lyall Watson) என்ற எழுத்தாளரும்
உதாரணங்களுடன் கூறுகிறார். இப்போது இந்தக் கருத்து
பரவலாகப் பலம் பெற்று வருகிறது.
எந்தப் புதிய நன்மையையும் சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும்
ஆரம்பத்தில் கடினம். அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை
யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை. மாறாக
சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்க
ள். ஆனாலும் தாக்குப்பிடித்து மனபலத்துடன் புதிய நல்ல
விஷயங்களை சிந்தித்துப் பின்பற்றுவோர் இருக்கத்தான்
செய்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே
எழுதப்படுகிறது என்று கூட சொல்லலாம்.
அவர்களுடன் ஒரு கணிசமான ஒத்த சிந்தனையுள்ளவர்கள்
சேர்ந்து செயல்படும் போது பெரிய மாற்றங்கள்
தானாக ஏற்பட ஆரம்பிக்கின்றன.
நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்ற ஆரம்பித்தவுடன் அதிசயம்
நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறது
என்ற கோட்பாடு சிந்தனைக்குரியது. எத்தனையோ நன்மைகள் நிகழ,
எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு
நபரின் உதவி அல்லது பங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன்
அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள்
இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள்
நிகழுமானால் அது மிகப்பெரிய பாக்கியம்
அல்லவா?
ஒவ்வொரு புதிய நல்ல சிந்தனை நடைமுறைப்படுத்தப்
படுவதை நீங்கள் காணும் போதும், ஒவ்வொரு நல்ல
மாற்றத்திற்காக சில முயற்சிகள் நடைபெறுவதை நீங்கள்
பார்க்கும் போது இந்த நூறாவது குரங்குத் தத்துவத்தை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏதாவது நல்ல
மாற்றங்களுக்கான வழிமுறைகள் புதியதாய் உங்கள்
மனதில் உருவாகுமானால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டு
ஆரம்பியுங்கள். அது சரியா, நடைமுறைக்கு ஒத்து வருமா,
யாராவது பரிகசிப்பார்களோ என்ற தயக்கம் வேண்டாம்.
அதில் குறைகள் இருக்குமானால் அதைப் போகப் போக சரி
செய்து கொள்ளலாம். ஏனென்றால்
இன்று நாம் பயன்படுத்தும் எல்லாமே உருவான விதத்திலேயே
இருப்பனவல்ல. காலப்போக்கில் மெருகூட்டப் பட்டவை
தான். மேம்படுத்தப்பட்டவை தான்.
அதே போல் மற்றவர்கள் ஆரம்பித்த நல்ல மாற்றங்களிலும்
உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். அதற்கு
வலுவூட்டுங்கள். முதல் நூறில் ஒருவராக இருந்து பெரிய
மாற்றங்களுக்கு வித்தாக இருக்க முடிந்தால் அதல்லவா
அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை? இன்று நாம்
அனுபவிக்கும் எத்தனையோ நன்மைகள் இது போன்ற ஒரு சிலரால்
ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா? நம்
பங்கிற்கு நாமும் ஏதாவது நன்மையை இந்த உலகில் ஏற்படுத்தி
விட்டுச் செல்வதல்லவா நியாயம்?

Sunday, September 6, 2015

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய தாந்த்ரீக பரிகாரம்

குருவே சரணம்
ஒம் அகத்தீசாய நம
நற்பவி நற்பவி நற்பவி
இன்று அனைவரையும் கலங்கடிக்கும் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய தாந்த்ரீக பரிகாரம்
எதற்க்கும் அஞ்சாதவர்கள் கூட கடனில் சிக்கினால் பல விஷயங்களுக்கு அஞ்சிவிடுவார்கள்
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன் பட்டவரின் நிலையின் கொடூரத்தை நம் முன்னோர்கள் கூறி விட்டார்கள்
இந்த கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க தாந்த்ரீக முறையில் பல வழிகளையும் அருளி உள்ளனர்
குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் இந்த பரிகாரத்தை செய்தால் போதும்
ஒரு செம்பு நிறைய பசும்பால் எடுத்து அதில் சிறிது மஞ்சள் கலந்து பதினோரு ஒரு ரூபாய் நாணயங்களை அதில் போட்டு கிழக்கு நோக்கி அமர்ந்து பால் செம்பில் வலது ஆட்காட்டி விரலால் எனக்கு ரின விமோசனம் கிடைக்க வேண்டும் என்று பாலில் எழூதி பின்பு கிழ்கண்ட மந்திரத்தை 108முறை கூறி பின்பு அந்த பாலை அரசனும் வேம்பும் ஒன்றாக வளர்ந்த மரத்திற்கு ஊற்றி சந்தன பத்தி ஏற்றி வழி பட்டுவர விரைவில் கடன் அடைபடும் வழி கிடைக்கும்
பாலை ஊற்றியபிறகு பதினோரு ஒரு ரூபாய் நாணயங்களை வீட்டிற்க்கு கொண்டு வந்து அடுத்த முறை அந்த நாணயங்களை பயன் படுத்தவும்
பாலின் அளவு உங்கள் வசதியை பொருத்தது
இந்த பரிகாரத்தை எந்த கிழமையிலும் செய்யலாம்
காலையில் செய்வது சிறப்பு
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும்
இரண்டும் இணைந்த மரம் கிடைக்கவில்லை என்றால்
கடக ராசிகாரர்கள் அரச மரத்திற்க்கும்
மீன ராசிகாரர்கள் வேப்ப மரத்திற்க்கும் இந்த பாலை ஊற்றலாம்
மற்ற ராசிகாரர்கள் இரண்டும் இணைந்த மரத்திற்க்கு ஊற்ற வேண்டும்
மந்திரம்
ஓம் வசி ஜெகவசி தனவசி ரின நசிநசி ஸ்வாகா
நவதுர்கா யந்த்ரம்
தாந்த்ரீக பரிகார மையம்


Thursday, September 3, 2015

ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!
மனிதர்களின் மன நிலை, யோசிக்கும் திறன், மூளையின் செயல் திறன், உடல் நலம், மன நலம் இவற்றுடன் தொடர்புள்ளவை நிறங்கள். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.
சிவப்பு நிறம் எதனையும் வெற்றி கொள்ளும் தன்மையையும் பாதுகாக்கும் தன்மையையும் அளிக்கிறது.
பழுப்பு நிறம் சுயநல எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.
பச்சை நிறம் ஒருவரின் மன உறுதியை வெளிப்படுத்தும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
மஞ்சள் நிறம் உயர்ந்த கொள்கைகளையும் நோக்கங்களையும் கொடுக்க வல்லது. மூளை செயல்திறன் குறைவாக உள்ளவர்கள் முன்னேற்றம் காண உதவும். ஆன்மிக எண்ணத்தைப் பிரதிபலிக்கும். மனோ தைரியத்தையும், அறிவுத் திறமையையும், சுறுசுறுப்பாக இயங்கும் செயல்திறனையும் அளிக்கும்.
நீல நிறம் உற்சாகத்தை வழங்கும். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தவும் பயன்படும். நட்புறவு, மகிழ்ச்சி, அமைதி நிலவ உதவும்.
ஊதா நிறம் மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கும் சுபாவத்தைக் கொடுப்பது. ஆராய்ச்சி எண்ணங்களையும் படைப்பாற்றலையும் அளிக்கும். தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்தி நிலைபெறச் செய்யும்.
வெள்ளை நிறம் தியாக சிந்தையையும் தன்னலமற்ற குணத்தையும் தருகிறது.

Thursday, August 20, 2015

நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்" பரிகாரம் !!!

நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்" பரிகாரம் !!!
சோம்பேறித்தனம்
என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை
நேரம் தவறுதல்- வேகமின்மை
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்
மன அழுத்தம்
திடீர் உடல் நிலை கோளாறுகள்
திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்
செய்வினை கோளாறுகள்
மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்
பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்றஅனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தேவையானவை :
---------------------------------
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும்,
சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.

Friday, July 24, 2015

செல்வ வளம் தரும் மந்திரங்கள்


செல்வ வளம் தரும் மந்திரங்கள்


பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.

சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

செல்வ வளம் பெருக ஸ்ரீலக்ஷ்மி மந்திரம்
மனித வாழ்கையின் முக்கிய தேவை பணம். “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற திருவள்ளுவர் வாக்கு இதனை தெளிவுபடுத்துகிறது. நமது கடின உழைப்புக்கு ஏற்றவாறு செல்வ வளத்தை பெருக்கி கொள்ள சில மந்திரங்கள் உதவுகிறது. நல்ல உழைபிருந்தும் செல்வம் சேரவில்லை என்பர்களுக்கு இந்த மந்திரங்கள் சிறந்த பலனை தரும். அதிகாலை 5 முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை பிரம்மமுகுர்த்தம் என்பார்கள் மந்திர ஜபம் செய்ய இதுவே உகந்த காலம்.

மந்திரம்

‘ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு
லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’

பூஜை முறை

ஒரு வளர்பிறை வெள்ளிகிழமையன்று அதிகாலையில் குளித்து தூய ஆடை அணிந்து, மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு முகமாக அமர வேண்டும். அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, வடக்கு முகமாக மகாலட்சுமி படத்தை பொட்டிட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். நெய்வேத்தியமாக கற்கண்டு பால் அல்லது பால் பாயசம் படைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, ஏலக்காய், தேங்காய், பழம், ஊதுவத்தி, ஆகியவற்றை ஒரு பித்தளை தட்டில் வைத்து தீபாராதனை செய்து பூஜையை தொடங்க வேண்டும். இந்த பூஜைக்கு குத்து விளக்கே உகந்தது, பசு நெய்யில் மட்டுமே விளகேற்ற வேண்டும். இந்த மந்திரத்தை 108 முறை தினமும் தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். அல்லது ஒரு மண்டலம் 48 நாட்கள் ஜபம் செய்ய வேண்டும். வெள்ளிகிழமை தவிர மற்ற நாட்களில் லஷ்மி படம் வைக்க தேவையில்லை, அகல் விளக்கேற்றி மந்திர ஜபம் மட்டும் செய்தல் போதுமானது.

Tuesday, July 21, 2015

சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்

சாபம்
சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.:
பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம் : நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த
குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும்., அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்..இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண்குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
கோ சாபம் : பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம் : ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டுபண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், , மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
முனி சாபம்: எல்லை தெய்வங்கள், மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனிசாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.


Saturday, July 18, 2015

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு ரகசிய பரிகாரங்கள்

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு ரகசிய பரிகாரங்கள்
(share) செய்யுங்கள்) - www.happy4all.org 
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.
கடன் தொல்லை :
6. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.
7. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
8. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.
9. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
10. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
11. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்.




கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்

கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்
(share) செய்யுங்கள்)
நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.
நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும். காத்து கருப்பை விரட்டும் கருப்புநிறம் வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது. உப்பு தண்ணீரின் மகிமை சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.
அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.
செப்பு காசின் மகிமை குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.
செங்கல்லின் மகிமை குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.
தண்ணீருக்கும் சக்தி யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.
பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.
திருஷ்டியை போக்கும் “மை” சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான் அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்கு அவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.
தோஷங்களை நீக்கும் பரிகாரம் பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.
எண்ணை தானம் உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.
குழந்தைகளை தாக்கும் தோஷம் ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன் இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான் இருக்க முடியுமா? ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது.
அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து அழைத்து வரும் வழக்கம் உள்ளது. இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.
பசுவின் பாத மண்ணுக்கு சக்தி வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். “உன்னை பின் பக்கம் வணங்குபவர்களுக்குதான் யோகம் கிட்டு“ என்று பசுவை பார்த்து சீதாபிராட்டி கூறியதாக புராணத்தில் இருக்கிறது. வாழும் வீட்டில் கண்களுக்கு தெரியாத தோஷங்கள், தீய சக்திகளும் நிறைந்து இருக்கும் என்கிறது சாஸ்திரம் அதனால் பசுவின் உடலில் பல தேவர்களும் ரிஷிகளும், தெய்வங்களும் இருப்பதாக புராணம் கூறுகிறது. அந்த பசுவின் பாதத்தில் ஒட்டி இருக்கும் மண், அந்த இல்லத்தில் பதிந்தால் தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும். பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும். அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும் ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் சக்தி இருக்கிறது.
திருஷ்டிபட்டு கட்டைவிரல் கருப்பானது பாண்டவர்கள் வனவாசத்தையும், யுத்தத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு வெற்றியுடன் எல்லோரிடத்திலும் ஆசி பெற்று கொண்டு இருந்தார்கள். துரியோதனனின் தாயான காந்தாரியிடமும் ஆசி பெறறார் தருமர். காந்தாரி கண்களை கட்டி கொண்டு இருந்தாலும் கண்களின் கீழ் அதாவது கண்களை கட்டிய துணியின் இடுக்குகளின் வழியாக தருமனின் கால் கட்டை விரலை பார்த்து, “இனி இந்த காலுக்குதான் பொன்னையும் – பொருளையும் கொட்டுவார்கள்” என்று கூறி கொண்டே பெருமூச்சுவிட்டாள். என்ன ஆச்சரியம்,? நிலகரியை போல தருமரின் கால் கட்டை விரல் கருப்பாக மாறியது. இப்படி பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். உடலுக்கு ரத்த ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் சிலர் அக்குபிரஷ்ர் செருப்பை போடுவார்கள். அதனால் நடக்கும்போது பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இயங்கும். பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இருந்தால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கும் ரத்த ஒட்டம் சீரானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோலதான், முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஸ்படிகத்தின் மகிமை சூரியனின் வெப்பம் பனியை உருக வைப்பதுபோல, தோஷங்களை அகற்றும் ஆற்றல் ஸ்படிக மணிக்கு இருக்கிறது. உடல் மெலிந்து முகத்தில் பொலிவு இழந்து இருப்பவர்கள் ஸ்படிக மணியை அணிந்தால் உடலில் நல்ல முன்னெற்றம் இருக்கும். உடலில் அளவுக்கு மீறிய உஷ்ணத்தையும் ஸ்படிக மணி கட்டுபடுத்தி சற்று குளிர்ச்சியாகவும் மாற்றும்.
ஒரு கைபிடி உணவு நன்றாக சாப்பிட்டு கொண்டு இருப்பவர் சில நாட்களாக சாப்பிடமுடியாத அளவுக்கு உடல் உபாதைகளால் சாப்பிடமுடியாமல் அவதிபடுவார்கள். இதற்கு காரணம், “என்னமா சாப்பிடுகிறான்.” என்று யாராவது சொன்னாலோ அல்லது நான் இன்று நன்றாக சாப்பிட்டேன் என்று, தனக்கு தானே சொல்லிக்கொள்வதாலும் கண்திருஷ்டியாக மாறும். இதனால்தான் பெரியோர்கள் சொல்வார்கள், “மண்ணை தின்றாலும் மறைவாக தின்னவேண்டும்” என்று. திருஷ்டிபட்டால் சாப்பாட்டில் பிடிப்பு இல்லாமலோ அல்லது சாப்பிடமுடியாத சூழ்நிலையோ ஏற்படும். இதற்கு பரிகாரம், ஞாயிற்று கிழமையில் தண்ணீரில் நன்றாக வாய் கொப்பளித்து, நல்லேண்ணையை ஒரு இரும்பு கரண்டியில் காய்ச்சி, அந்த இரும்பு கரண்டியில் இருக்கும் நல்லேண்ணையில், வாய் கொப்பளித்த தண்ணீரை துப்ப வேண்டும். இப்படி மூன்று முறை துப்பினால் திருஷடி கழிந்து, நன்றாக சாப்பிட முடியும். அதை தொடர்ந்து ஆறு ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும். அத்தடன் சாப்பிடும் முன் உங்கள் கைகளால் சாப்பிடும் உணவை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட்டால் தோஷங்கள் நீங்கும்.




Wednesday, July 15, 2015

அகத்தியர் மந்திரம்

அகத்தியர் மந்திரம் (share) செய்யுங்கள்)
தினமும் காலை அல்லது இரவில்
கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.
45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.
இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;
Mantric   மாந்திரீகம்'s photo.