Showing posts with label Coimbatore Corporate Training Company in tripur. Show all posts
Showing posts with label Coimbatore Corporate Training Company in tripur. Show all posts

Sunday, February 7, 2016

பத்திரகிரியார்

சித்தர்களில் மிகவும் வசதியான நிலையினில் இருந்து 
ஞான நிலையினை அடைந்தவர்கள் பத்திர கிரியாரும் 
பட்டினத்தாரும் மட்டுமே. 
பத்திரகிரியார் நாட்டின் மன்னனாக இருந்து பட்டினதாரால் 
ஞானத்தை அடைந்தார்.
* பட்டினத்தார் மிக பெரிய வியாபாரியாக இருந்து 
இறைவனின் கருணையினால் ஞானியாக மாறினார். 
பட்டினத்தாரின் சீடனாக இருந்தும் பத்திரகிரியார் 
முக்தியினை பட்டினத்தாருக்கு முன்பே அடைந்து விட்டார். 
காரணம் அவர் நிராசை என்னும் நிலையினை குரு சொன்ன உடன் 
அக்கணமே நிராசை நிலையினை அடைந்தார்.
ஆகவே அவருக்கு முக்தி மிக சீக்கிரமே வாய்த்தது.
* பட்டினத்தாருக்கு இறைவன் அசரீரியாக 
பேய் கரும்பு எங்கு இனிக்கின்றதோ அங்கோ உனக்கு முக்தி கிடைக்கும் 
என்று என்று கூறினார்.
* பேய் கரும்பு என்பது உவர்ப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. 
பேய் கரும்பு என்பது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை கரும்பை போல்தான் 
இருக்கும். இருப்பினும் இனிப்பு சுவை இல்லாதது. 
பட்டினத்தார் நடை பயணமாக பல இடங்களுக்கும் சென்று 
பின்னர் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார் 
அங்கு நிறைய பேய் கரும்பு விளைந்து இருந்தது. 
அவர் அதில் ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தார் 
பேய் கரும்பு இனித்தது.
* இந்த இடம் தான் முக்தி அடைவதற்கான இடம் என்பதனை உணர்ந்து 
அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் 
என்னை குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் அதிலிருந்து 
வெளியில் வந்து உங்களுக்கு இனிப்புகள் தருகிறேன் 
என்று கூறினார். அதே போல் சிறுவர்களும் அவரை குழியில் 
புதைத்தார்கள். 
அவரும் சித்தின் மூலம் வெளியில் வந்து 
சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 
அதே போல் மறுமுறையும் செய்தார். 
மூன்றாவது முறையாக உள்ளே சென்றவர் திரும்ப வரவில்லை. 
சிவத்தோடு கலந்து விட்டார்.
* இதில் இறைவன் பேய் கரும்பு இனிப்பு சுவை ஏற்ப்படும் இடத்தில் 
முக்தி அடைவாய் என்று கூறியதற்கு காரணம் 
முக்தி அடைவதற்கு முன்பு நமது அண்டத்திலிருந்து 
வருகின்ற அமுதம் தேனை போல சுவை கொண்டதாக இருக்கும். 
தேனோடு எந்த பொருளை சேர்த்தாலும் அந்த பொருளின் சுவை போய் 
தேனின் சுவையாக மாறி விடும்.
* அதே போல்தான் மேலிருந்து வரும் ஐந்தாவது அமுதம் 
தேனின் சுவையோடு இருக்கும். 
அந்த சுவையோடு பேய் கரும்பை சுவைத்தால் 
உவர்ப்பு சுவை போய் இனிப்பு சுவை மட்டுமே தெரியும். 
இது இறைவனால் பட்டினத்தார்க்கு கொடுக்கப் பட்ட 
முக்திக்கான அடையாளம்.
* நமது வள்ளல் பெருமானும் அமுதத்தை பற்றி
குறிப்பிடும் போது அமுதம் ஐந்து நிலை உடையது என்று கூறி இருக்கிறார்கள். 
ஐந்தாவது வரும் அமுதமானது வரும்போது 
இறைவனோடு ஐக்கியம் ஆகும் தகுதியை நாம் பெற்றிருப்போம்.
* அனைத்து அமுத நிலையினை அடைய வேண்டும் என்றால் 
ஒருமை மற்றும் ஜீவகாருண்ய மயமானால் 
நாமும் இறை நிலையினை அடையலாம்.
#AmmuNisha

Wednesday, October 28, 2015

மகாலட்சுமி கூட நரசிம்மர்

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்...

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

 தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

 ""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.

 அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

 தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.
 ""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.
 அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.
 ""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.

 ""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.
 இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
 ""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான். 

 பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.
 குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.

 ""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.

 பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன், ""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.

 நரசிம்மர் அவனிடம்,""பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.

 நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.

Wednesday, September 2, 2015

நியூரோபிளாஸ்டிசிடி

நியூரோபிளாஸ்டிசிடி - www.happy4all.org 
நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி
விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள்
இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு
பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை
நியூரான்கள் கற்பதை ஒருபோதும்
நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும்
ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள்
மாறுகின்றன.இது வயதானாலும்
தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல
கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும்
புதிய துறையின் பெயர்
நியூரோபிளாஸ்டிசி.
ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக
திறன் ஏற்படுகிறது. Cognition. Communication
creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத்
திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும்
அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக
ஆன்மாவை அறியச் செய்கிறது!
ஒழுங்கான முறையான விரதம், தியானம்,
பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள்
ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு
விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை
காண்பிக்கிறது.
ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்
ஆகவே
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள்.
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது
அறிவும் அனுபவமும்,
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது
கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய
மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக்
கொள்ளும் அமைப்பு
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில்
கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும்
நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும்
சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக
அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற
உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை
எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே
அடித்தளமாக அமைகிறது.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள்
உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God
Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள்
விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட்
வால்ட்மேன் என்பவருடன் இணைந்து
எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!
இதன் ஆழமான பொருள் அறிவியல்
ஆராய்ச்சியால் அல்லவா இப்போது
விளங்குகிறது.அவன் அருளாலே அவன் தாள்
வணங்குவோம்!!

Tuesday, September 1, 2015

யாரையும் குறைவாக.s

இன்றைய சிந்தனை..www.v4all.org
......................................

யாரையும் குறைவாக..
......................................

மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..

கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், 
அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..

ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..

ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..

மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..

இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..

நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,

ஆம்..நண்பர்களே..,

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;

உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.

அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்

எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

நல்லதையே நினைப்போம்..

நாளும் நல்லதையே செய்வோம்.

வெற்றிகரமாக வலையமைப்பை மேற்கொள்வது எவ்வாறு

வெற்றிகரமாக வலையமைப்பை மேற்கொள்வது எவ்வாறு

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
வலையமைப்பு என்பது தொடர்புகளை உருவாக்கு பயன்படும் கலையாகும். ஒரு மக்கள் தொகுப்பு மற்றும் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் மதிப்பை நேரடியாக உயர்த்தும் தகவலை உருவாக்குவது, வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் குறைப்பது, மற்றும் மிக முக்கியமாக, உங்கள் போட்டியாளர்கள், அவர்கள் ஒரு போதும் அடைய முடியாது என நினைத்த ஒன்றை நீங்கள் அடைந்தது எப்படி என்று ஆச்சரியப் படவைப்பது ஆகியவையே, வலையமைப்பு என்பதன் நோக்கங்கள் ஆகும்.
பல சிறு வியாபார உரிமையாளர்கள் வலையமைப்பு செய்வதை விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் அது, உங்கள் வர்த்தக அட்டையை எவரிடமாவது கொடுத்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று விளக்குவது பற்றியது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில், வலையமைப்பு என்பது உண்மையில், நீங்கள் உதவக்கூடிய மற்றும் உங்களுக்கு உதவக்கூடியவர்களை அறிந்து கொள்வதைப் பற்றியதே ஆகும்.
வலையமைப்பு நிபுணரான, ஸ்டீவன் M. க்ராஷர், நெட்வொர்க் அஸ்ஸோஸியேட்ஸ் தலைவர், ஹிக்ஸ்வில்லி, நியூயார்க்,பல வியாபாரிகள், வலையமைப்பு என்பதை ஒரு செயல்திறன் மிக்க ஒரு வர்த்தகக் கருவியாக எவ்வாறு மாற்றுவது என்பதை அறியவில்லை என வலியுறுத்துகிறார். "உங்கள் மேசை ட்ராயரில், வர்த்தக அட்டைகள் குவிந்து கிடப்பதே, உங்கள் வலையமைப்பின் முடிவுகள் மற்றும் வியாபாரத்தில் மேலதிக நல்ல விளைவுகள் எதுவும் இல்லையெனில், நீங்கள் உங்கள் முறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் அது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்".
க்ராஷர், சிறு வியாபார உரிமையாளர்கள், தாங்கள் சந்திக்கப் போகும் மக்களை இரண்டு குறிக்கோள்களுடன் அணுக வேண்டும் என்கிறார்: கூடுமான வரை அதிகமான மக்களைத் தெரிந்து கொள்வது, மற்றும் அவர்களுக்கு உங்களைப் பற்றித் தெரியவைப்பது. மேலும் அவர், உங்கள் வலையமைப்பு, சிறந்த விளைவை உண்டாக்க, பின்வரும் நான்கு படிகளை சிபாரிசு செய்கிறார்:
தகவல் கொடுத்து தகவல் பெறுங்கள்

வலையமைப்பு என்பது இரு வழிப் பாதையாகும். நீங்கள் எவரையாவது சந்திக்கும் போது, நீங்கள் அவர்களின் வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மற்றும் அவர்களிடம் உங்கள் வியாபாரத்தைப் பற்றியும் கூற வேண்டும். அடிப்படைகளில் தொடங்குங்கள் – பெயர், கம்பனி, சேர்ப்பு, நிலை, வியாபாரத்தின் தன்மை போன்றவை. நீங்கள் அடுத்ததாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, நீங்கள் ஒருவருக்கொருவர் உதவ முடியுமா என்பது ஆகும். இந்த தலைப்புகளை முயற்சி செய்யுங்கள்:
  • உங்கள் கம்பனி என்ன செய்கிறது?
  • எந்த விதமான வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் சேவையை வழங்குகிறீர்கள்?
  • உங்கள் நிறுவனத்தில், ஒவ்வொரு சேவை அல்லது தயாரிப்புகளை வாங்குவது குறித்து முடிவு செய்வது யார்?
  • போட்டிச் சூழலில் உங்கள் தனித்துவம் என்ன?
தொடர்பின் மதிப்பை மதிப்பீடு செய்யவும்

நீங்கள் அனைவரிடமும் முழுமையாக வலையமைப்பு செய்ய முடியாது. நீங்கள், முதன்மையான தகவல்களைப் பெற்றவுடன், இந்த நபரை மறு முறை தொடர்பு கொள்வதும் உறவைத் தொடர்வதும் பயனுள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுக்கு உதவ முடியுமா மற்றும் அவர்கள் உங்களுக்கு உதவ முடியுமா? இரண்டிற்கும் பதில் "ஆம்" என்று இருக்க வேண்டும்.
மற்றொரு கோட்பாடு, ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் மற்றவர்களுக்கு உதவுவதில் உண்மையான ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிவது, எந்த வேண்டுகோளும் இல்லாமல். இன்னும் கூறப்போனால், உங்களை நீங்களே ஒரு வலையமைப்பாளராகவும் சிக்கல் தீர்ப்பவராகவும் நினைத்துக் கொள்ளாதீர்கள், மற்றும் உங்கள் தனிப்பட்ட வலையமைப்பில் சேர்க்க விரும்பும் எவரிடமும் அதே குணாதிசியங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்காதீர்கள்.
ஒரு திறமுறையான கூட்டை உருவாக்குங்கள்

ஒரு வலையமைப்பு என்பது, வர்த்தக அட்டைகளைச் சேகரிப்பது அல்ல, மக்களைச் சேகரிப்பதாகும். உங்கள் வலையமைப்பில் உள்ளவர்களுடைய வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள போதிய நேரம் நுகரும். நீங்கள் அங்கத்தவர்களை புத்திசாலித்தனமாகத் தெரிவு செய்தால், அது மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் அவர்களுக்கு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் யாருக்காக செய்கிறீர்கள் என்பது பற்றி எல்லாம், விளக்கமாகக் கூறுகிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் புதுப்பித்தல்களையும், ஊக்கத்தையும் பரிமாறிக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், விற்பனை நபர்களாகிறீர்கள்.
வலையமைப்பு செய்வதன் நோக்கம், உங்கள் தொடர்பின் வியாபாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், அவருக்குத் தெரிந்த அனைவரின் வியாபாரத்தையும் பெறுவதற்கு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அவர்களை உங்கள் மேலாண்மை சிந்தனைகள், அறிவுரை, லீட்கள், மேலும் விற்பனையாளர் சிபாரிசுகள் ஆகியவற்றுக்கான வலையமைப்பில், அவர்களையும் சேர்க்க முடியும். நீங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் நிறைய அறிகிறீர்கள், இருவரும் இலாபம் மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டிலும், ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்காகப் பங்களிக்கிறீர்கள்.
பராமரிப்பு

உங்கள் தொடர்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, உங்கள் தகவல் வளையத்தில் (loop) உள்ளவர்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டும். செயல்திறன் மிக்க நேர நிர்வாகத் திறமைகளைப் பயன்படுத்துங்கள், உங்கள் தொடர்புகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். உங்களுக்கு அதிக பயனுள்ளவர்களிடம் அவ்வப்போது தொடர்பு வைத்துக்கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். அவர்கள், உங்கள் உள் வட்டம் ஆகிவிடுவார்கள்.
எப்போதும் உறவுக்கு பங்கம் ஏற்படாதவாறு கவனமாக இருங்கள், நீங்கள் ஒருவரிடமிருந்து எப்போது உதவி பெற வேண்டியிருக்கும், உங்கள் உதவி எப்போது ஒருவருக்கு தேவைப்படும் என தெரியாது. தற்போது ஒருவர் உங்களுக்குப் பயனற்றவராக இருந்தாலும் ,நீங்கள் அவரை மீண்டும் மீண்டும் அவ்வப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் உதவலாம். வேறு முறையில் கூறினால், அனைவரிடமும் இனிமையாக இருங்கள் ஏனெனில், எப்போது அவர்களின் உதவி தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியாது.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Saturday, August 1, 2015

பைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்

பைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்

Temple images

கும்பகோணம் - திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது.
விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே
பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதனருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்: பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்களாம்.
பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்
ஞாயிற்றுக்கிழமை: (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.
திங்கட்கிழமை: (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.
செவ்வாய்க்கிழமை: (மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.
புதன்கிழமை: (மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.
வியாழக்கிழமை: (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.
வெள்ளிக்கிழமை: (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.
சனிக்கிழமை: (மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.
குழந்தைச் செல்வம் பெற: திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.
சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க: சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.
தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
மாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:
சித்திரை அம்சுமான்  சண்ட பைரவர்
வைகாசி தாதா  ருரு பைரவர்
ஆனி ஸவிதா  உன்மத்த பைரவர்
ஆடி அரியமான்  கபால பைரவர்
ஆவணி விஸ்வான்  ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன்  வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன்  ÷க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா  பீஷண பைரவர்
மார்கழி மித்திரன்  அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு  குரோதன பைரவர்
மாசி வருணன்   ஸம்ஹார பைரவர்
பங்குனி பூஷா   சட்டநாத பைரவர்.

Friday, July 31, 2015

How To Be A Morning Person – Wake Up In A Good Mood!

How To Be A Morning Person – Wake Up In A Good Mood!  - www.v4all.org

Pin It
good mood
Share Button
Not everybody is born a morning person, but anybody can become one! Find out how to change your grumpy morning routines into good mood ones.
There are two types of people in this world: those that wake up in a good mood, and those who don’t. If you are part of the latter group, your early hours of every day may seem unproductive and may put you into a bad mood. If you believe, just like I once did, that morning people are creepy and unnatural, try becoming one of us. Even if you were not born like one it does not mean that you can’t become one!
Being a morning person has its up sides: they have been proven to be happier, nicer, more productive and less prone to depression. However, transforming oneself in a night riser is not an easy task. You don’t just wake up someday and find that you are one of us. To be like us, you must adopt our habits: so here are 6 ways to wake up in a good mood and become a morning person!

1. Early To Bed, Early To Rise

The fact that you wake up and wish to stay in bed more by hitting that sweet snooze button may be a clear indicator of the fact that your body needs more sleep to feel regenerated. Try going to sleep earlier, and avoid overstimulation in the hours before that – no TV, no mail, no exercise. The next morning you will notice if you were actually sleeping too little before.

2. Switch Off Your Phone

Turn off all electronics as soon as you enter your bedroom. This is a place for sleeping and for darkness! To your brain, light means that it is time to wake up; staring at your screen will disrupt your natural rhythm and wake you up.

3. Wakeup Light

Wake up to some light – even if artificial! The best choice would be to wake up to to natural light, but not everybody wants or needs to get up at dawn, do they? If that is your case, you can use an artificial wakeup light, that is to say an alarm with an integrated light that gradually increases the light in your bedroom as you approach your wakeup time.

4. No Booze

Nothing worse in the morning than having a hangover. It turns out, however, that even a little amount of alcohol can influence your sleep in a negative way. When drunk even in modest amounts, it can cause disruption of your sleeping patterns and make you wake up exhausted.

5. Respect Your Schedule

The secret to wake up in a good mood is staying true to your schedule. Having some habits reduces the negative effects of stress and helps our body set into their natural rhythm.

6. Exercise

There are countless reasons to exercise, and I am not going through each one of them. The one reason that interests us in regards to this article is that by exercising a couple of hours every week you will have better quality of sleep and you will feel more rested when you wake up. People that do sports regularly report less tiredness in respect to those that do not!
Here you go! 6 tips on how to be a morning person and change your grim morning into positive ones! Follow them, and you will never experience the bitterness of waking up not in a good mood ever again.

Sunday, July 26, 2015

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் - www.v4all.org

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

Monday, July 6, 2015

பணம் ஈர்ப்புத்தன்மை

நீங்கள் வாழும் இந்த பூமியே ஒரு காந்தத்தன்மை
கொண்டதுதான்.அதனால்தான் அதற்கு
வடதுருவம் தென்துருவம் என்று இரு
முனைகளைச் சொல்கிறார்கள்.நீங்கள் வாழும்
பூமி மட்டுமல்ல.இந்த பூமியில் தென்படும்
அனைத்துப் பொருட்களுமே ஈர்ப்புத்தன்மை
கொண்டதாகத்தான் படைக்கபட்டிருக்கிறது
அல்லது தானாகத் தோன்றியிருக்கிற
து.பொருட்கள் மட்டுமல்ல உயிருள்ள அத்தனை
ஜீவராசிகளும் ஈர்ப்புத்தன்மை
கொண்டதாகத்தான் இருக்கின்றன.அந்த
ஜீவராசிகளில் நீங்களும் உள்ளடங்கித்தான்
இருக்கிறீர்கள்.
ஆக ஈர்ப்புத்தன்மை உங்களிடமும்
இருக்கிறது.காந்தப் புலம் உங்களிடமும்
இருக்கிறது.ஆனால் நீங்கள் எதை ஈர்க்கிறீர்கள்.
எதை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள்
என்பதில்தான் விஷயமே இருக்கிறது.
எப்போதுமே சமபலம் கொண்ட இரண்டு
பொருட்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதில்தான்
சுவாரஸ்யம் இருக்கிறது.சிறிது தம் கட்டி
அவற்றில் ஒரு பொருள் இன்னொன்றை ஈர்த்து
விட்டால் ஆட்டம் முடிந்தது.ஆனால் ஒரு பலமற்ற
பொருளும் இன்னொரு பலமான பொருளும்
ஒன்றையொன்று ஈர்க்கவே முடியாது.வலிமை
அதிகமான பொருள் வலிமை குறைந்த
பொருளை வேண்டுமானால் தன் பக்கம் எளிதாக
இழுத்து விட முடியூம்.அது பரஸ்பர ஈர்ப்பினால்
அல்ல.பலத்தினால் நடைபெறும் அந்த ஈர்ப்பில் அந்த
இழுவையில் எவ்வித நன்மையூம் இருக்காது.
இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம்.
நீங்கள் உங்களது வீட்டைத் தாண்டி வெளியில்
வந்து விட்டால் யார் யாரையெல்லாம் உங்கள்பால்
ஈர்க்கிறீர்கள்.அலுவலகத்தில் யாரெல்லாம்
உங்களிடம் வலிய வந்து பேசுகிறார்கள்.உ
ங்களோடு சரிசமமாகப் பணிபுரியூம்
மற்றவர்களா அல்லது உங்களுக்கு கீழே
பணிபுரிபவர்களா அல்லது கூப்பிடு அந்த
ஆளை என்று உங்களது நிறுவன தலைமை
செயல் அதிகாரி(சிஇஓ) உங்களிடம் பேச
வேண்டுமென்று விரும்பி அழைக்கிறாரா?
இவற்றில் எது உங்களுக்கு நன்மை பயப்பதாக
அதிக நன்மை பயப்பதாக இருக்கும்.
உங்கள் நிறுவன அதிகாரி உங்களை அழைத்துப்
பேச விரும்புவதுதானே.இதை அப்படியே பணம்
சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு திருப்பிவிட்டுப்
பார்ப்போம்.
நீங்கள் எது போன்ற இடங்களில் எல்லாம்
புழங்குகிறீர்கள் என்று முதலில்
ஆராயூங்கள்.நீங்கள் சாதாரண டீக்கடையில்
அமர்ந்து டீ அருந்துகிறீர்களா?சாதாரண
மலிவான ஹோட்டல்களில் உணவருந்துகிறீர்
களா?சாதாரண பிரான்டட் சட்டைகளை
அணிகிறீர்களா?உங்களது நண்பர்கள் உங்களைப்
போலவே சாதாரணமானவர்களா?முக்கியமாக
திருட்டு டிவிடியில் படம் பார்க்கிறீர்களா?
பைரட்டட் சாப்ட்வேர்களை கம்ப்யூட்டரில் பதிந்து
வைத்திருக்கிறீர்களா? இலவச சேவைகள் எங்கு
கிடைத்தாலும் அங்கே முதல் ஆளாகப் போய்
நிற்பீர்களா?சில ஆயிரங்கள் வருமானமாகவோ
லாபமாகவோ வந்தாலே திருப்திப்பட்டுக்
கொண்டு விடுவீர்களா?
அப்படியானால் நீங்கள் சில்லரைகளை ஈர்த்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.பதிலுக்கு
சில்லரைகள்தான் உங்களை ஈர்த்துக்
கொண்டிருக்கும்.ஒரு பணக்குவியல் ஒரு
பணக்கார அந்தஸ்து ஒரு சுபிட்சமாக சொகுசு
வாழ்க்கையை நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ
உங்கள்பால் ஈர்க்க மறந்து விட்டீர்கள்.அதற்கு
பதிலாக ஒரு மிடில்கிளாஸ்தனத்தையூம் ஒரு
நடுத்தர வர்க்க வாழ்வையூம் நீங்கள் ஈர்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்.அதனால்தான் உங்களிடம்
அதிகமாகப் பணம் புழங்குவதில்லை.
சில்லரைகளும் சில ரூபாய்களும் சில
ஆயிரங்களுமே உங்களிடம் நிரந்தரமாக தங்கி
விடுகின்றன.
ஒரு கார் வாங்க நினைத்தால் கூட மாருதி
தாண்டி நீங்கள் யோசிக்கவில்லை என்றால் எந்த
காலத்திலும் உங்களால் ஆடி காரையோ
பிஎம்டபிள்யூ காரையோ அல்லது ஒரு கோடி
ரூபாய்களுக்கு மேல் விலையூள்ள காரை
நீங்கள் வாங்கவே முடியாது.
உங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
உங்களிடம் உற்சாகக் குறைவை
ஏற்படுத்தவில்லை.சிறிய வட்டத்தை விட்டு
சில்லரை வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்
என்றுதான் திரும்பத் திரும்ப பணம் தொடர்பான
எனது ஒவ்வொரு கட்டுரையிலும் உங்களை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஒரு சொகுசான வாழ்க்கை.ஒரு ஆடம்பரமான
வாழ்க்கை.ஒரு மதிப்பான வாழ்க்கை.ஒரு
சந்தோஷமான வாழ்க்கை.ஒரு மேல்மட்ட
வாழ்க்கை உங்களுக்கு வேண்டவே வேண்டாமா?
வேண்டுமென்றால் சின்னச் சின்னதாய்
ஒவ்வொரு அடியாய் எடுத்து வையூங்கள்.அதற்க
ு முன்பாக சில்லரைத்தனமான சின்னத்தனமான
மிடில்கிளாஸ் என்ற வட்டத்தை விட்டு வெளியே
வாருங்கள்.இந்த கட்டுரையை பிரின்ட் எடுத்து
வைத்துக் கொள்ளுங்கள்.பிரின்ட் எடுத்து
உங்களது சட்டைப் பையில் மடித்து வைத்துக்
கொள்ளுங்கள்.உங்கள் ஊரிலுள்ள மிக உயர்ந்த
ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்லுங்கள்.அந்த
ஊரிலேயே அதுதான் நம்பர் ஒன் ஹோட்டலாக
இருக்க வேண்டும்.உங்களிடம் கார் இல்லாமல்
இருக்கலாம்.ஏன் டூவீலரில் கூட டிவிஎஸ்50தான்
இருக்கும் என்ற நிலை கூட இருக்கலாம்.ஒரு
நாள் மாலை நேரம் அந்த ஹோட்டலுக்கு
செல்லுங்கள்.அங்கேயூள்ள ரெஸ்டாரென்ட்டிற
்குச் செல்லுங்கள்.வேறு எதுவூம்
வேண்டாம்.ஒரே ஒரு காபி அல்லது டீ மட்டும் ஆர்டர்
செய்யூங்கள்.அதன் விலை பலநுரறு
ரூபாய்களாகக்க கூட இருந்து விட்டுப்
போகட்டும்.அதற்கான பணத்தை வைத்துக்
கொள்ளுங்கள்.
ஆர்டர் செய்த காபி டேபிளுக்கு வருவதற்குள்
அந்த இடத்தை நிதானமாக ஒரு பார்வை
பாருங்கள்.அங்கே அமர்ந்துள்ள மேல்தட்டு
மனிதர்களையூம் நிதானமாக ஒரு பார்வை
பாருங்கள்.அதன்பின் நீங்கள் பிரின்ட் எடுத்து
வைத்திருக்கிற இந்த கட்டுரையை மெதுவாக
உதடு முணுமுணுக்க சப்தமில்லாமல்
வாசித்துப் பாருங்கள்.மீண்டும் மடித்து சட்டைப்
பையில் வைத்துக் கொண்டு மறுபடியூம் அந்த
சுற்றுப் புறத்தை அந்த மேல்தட்டு மனிதர்களை
அங்கேயிருக்கிற உயர்ரக கார்களைப் பார்த்துக்
கொண்டே துளித்துளியாக அந்த காபியை
அருந்தி முடியூங்கள்.அதன்பின் பணமும்
டிப்ஸூம் வைத்து விட்டு மெதுவாக ஒரு கம்பீர
நடை போட்டு வெளியே வாருங்கள்.
நீங்கள் அந்த ஆடம்பர ஹோட்டலை விட்டு மட்டும்
வெளியே வரவில்லை.உங்களது மிடில்கிளாஸ்
என்னும் ஏழ்மை வட்டத்திலிருந்தும் வெளியே
வந்து கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
தொலைவில் உங்களுக்கான பெரும் பணம்
காத்துக் கொண்டிருக்கிறது.ஒரு மிகப் பெரிய
பணக்காரரான உங்களுக்காக.
மீண்டும் வாழ்த்துக்கள்!