Showing posts with label TEAM BUILDING program at tripur. Show all posts
Showing posts with label TEAM BUILDING program at tripur. Show all posts

Monday, January 4, 2016

இராமாநுச நாற்றந்தாதி

இராமாநுச நாற்றந்தாதி

13. செய்யும் பசும்துளவத் தொழில் மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் * பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் * இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.

விளக்கவுரை - தனது சீரீய தன்மையால் கட்டப்பட்டதும், தன்னுடைய கரம் பட்டதால் புதுப்பொலிவுடன் விளங்கியதும் ஆகிய திருத்துழாய் மாலைகள்; வேதங்கள் போன்று மூன்று வர்ணத்தினர் மட்டுமே கற்க முடியும் என்ற கட்டுப்பாடு வேதம் ஓத அதிகாரம் இல்லாத பெண்களும்-அறியாமையால் மூழ்கியவர்களும் கற்கலாம்படி தமிழ் மொழியில் உண்டாக்கப்பட்ட வேதம் என்று போற்றப்படும் திருமாலை என்ற திவ்யப் பிரபந்தம் அருளிச் செய்தவர்; ஈறில வண் புகழ் நாரணன் என்று கூறுவதற்கு ஏற்ப, என்றும் உள்ள திருக்கல்யாண குணங்கள் உடையவனாக, தாய் தந்தை இவனே என்று கூறும்படியாக, அனைத்துப் பந்துக்களும் இவனே என்று தோன்றும்படியாக திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளை, "ஜயனே அரங்கா”, என்று கூறி அழைத்து நின்றவர்; திருவடிகளைக் காட்டிலும் மேற்பட்ட பொருள் வேறு ஏதும் இல்லை என இருந்தவர் - இப்படிப்பட்டவர் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆவார். அத்தகைய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருவடிகளைக் காட்டிலும் வேறு ஒரு பொருளை 
விரும்பாத உத்தமரான எம்பெருமானாரின் திருவடிகள் மட்டுமே எனக்குச் சரணாகும், வேறு ஏதும் இல்லை. மெய்யன் என்று கூறுவதன் பொருள் என்ன? ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்களை எம்பெருமானார் ஆதிசேஷனாக எப்போதும் அவனுடன் இருந்தபடி அறிந்தவர்; அதனைத் தனது ஸ்ரீபாஷ்யத்தில் உள்ளது உள்ளபடி அருளிச் செய்தார்.

Monday, December 28, 2015

ஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்!..

ஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்!..
நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள நான்கு
முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும். கவனமான பார்வை,ஆர்வம்,
அக்கறை,புதிதாகச் சிந்தித்தல் இந்த
நான்கிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப்
பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும்
செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே
பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில
பயிற்சி முறைகளைப் பார்ப்போம்....
முதல் பயிற்சி
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள்.
பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக
எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக,
100, 98 96, என்று இரண்டு இரண்டாகக்
குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு
நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7
வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள்.
இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக்
கொண்டீர்கள் என்றால், உங்களுடைய
நினைவுத் திறன் நல்ல அளவில்
வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இரண்டாம் பயிற்சி
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை
எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில்
எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக்
கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று
பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம்
எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது
மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள்
என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை
எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று
தெரியவரும். அதை வைத்து உங்கள்
நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து
கொள்ளலாம்.
முன்றாவது பயிற்சி
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை
வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப்
பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம்
ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி
இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதை விட
நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப்
பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின்
சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு
நினைவாற்றலும் பெருகும். முயன்று
பாருங்கள்.
நான்காவது பயிற்சி
உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6
அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு
அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி
புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள்.
(உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை
சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக
எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை
இழுத்து மூடுங்கள். இதே போன்று
இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு
புரோகிராம் எழுதிப் போடுங்கள்.
அதே போன்று அடுத்தடுத்த நான்கு
அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு
படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே
ஆச்சரியமாக இருக்கும். இந்த 6
புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை
அறியாமலே உங்கள் மனதில் தோன்றும்.
இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய
புதிய முறைகளைக் கையாண்டு உங்கள்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம்.
அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத
இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக்
கொண்டால் வாழ்க்கை நின்று விடும்.
மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது
துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று
வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும்
வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள்.
நினைவாற்றலை மேம்படுத்துங்கள்.
நினைத்ததைச் சாதியுங்கள்...!
நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும்
நுட்பங்கள்:
1. உடற்பயிற்சி:
உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கும்,
ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, மூளையை
சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும்,
நினைவாற்றல் பெருக்கத்திற்கும் மிக மிக
அவசியமாகும். எனவே தினமும் குறைந்தது
15 முதல் 20 நிமிடங்களை யாவது
உடற்பயிற்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க
வேண்டும்.
ஒன்றை நாம் தெளிவாக அறிந்து
கொள்ளாதபோது நம்மால் அதனை
நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது.
மிகச் சிறிய விஷயம் ஒன்றை பதிவு செய்ய
நம்முடைய மூளை குறைந்தது எட்டு
நொடிகளை எடுத்துக் கொள்கிறது. எனவே,
வலிந்து நினைவில் செய்திகளை
பதிக்கும்போது அமைதியான
இடையூறில்லாத சூழலை உருவாக்கிக்கொள்
ள வேண்டும்.
2. தையல்காரர் அணுகுமுறை:
மேலோட்டமாய் தகவலைக் கேட்டுக்
கொள்வது, போகின்ற போக்கில் பார்த்து
வைப்பது என நுனிப்புல் மேய்வது போல்
இல்லாமல் ஒரு தையல்காரர் எவ்வாறு
அளவுகளை சரியாகக் குறித்துக் கொள்கிறாரோ
அவ்வாறு தகவல்களைப் பதிவு செய்து
கொள்வது என்றைக்குமே மறந்துபோகாது.
3. பல்வேறு புலன்களை பயன்படுத்துதல்:
கண்டிப்பாக நினைவில் வைக்கவேண்டிய
விஷயங்களை வாய்விட்டு சொல்லிப்பார்த்தல்
நல்லது. படித்தறியும்போதுகூட
பார்வையிலேயே படிப்பதைக் காட்டிலும்
வாய்விட்டு (முடிந்தால் சத்தமாக)
படித்தலும், சற்று முயற்சி செய்து ரிதம் போல்
வரிசைப்படுத்திக்கொள்ளுதலும் சிறந்தது.
கேட்பதன் மூலமாக அறிந்து கொள்ளும்போது
தொடர்புடைய நிறம், சொற்கள், வாசம்,
தன்மையோடு பதிவுசெய்து கொள்வதும்
நல்ல பலனைத் தரும்.
4. முன்பே அறிந்தவற்றோடு தொடர்புபடுத்தி
வைத்தல்:
புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு
தொடர்புடையது எனும்போது அவற்றை
நினைவுபடுத்திப் பார்த்து இணைத்து பதிவு
செய்யலாம்.
5. படம் வரைந்து வைத்துக்கொள்ளுதல்:
எழுதிவைக்கும் தகவல்களோடு அதற்குரிய
படங்களையும் (கோட்டுப் படம் போல்)
சின்னச் சின்னதாய் பக்கத்திலேயே
வரைந்துவைத்து எழுதிக் கொண்டால்
நினைவுபடுத்திப் பார்க்கும் போது தன்
கருத்துக்களை தன் நினைவுக்கும், பிறருக்கு
தகவலாகவும் மனிதன் பதிவு செய்துள்ளான்.
இது இன்றைக்கும் சிறந்த முறையாகும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க பிராமி,
சங்குபுஷ்பி, வல்லாரைக் கீரை போன்ற
ஆயுர்வேத மருந்துகள் உதவுகிறது.மிளகை
எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து
தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக
மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல்
அதிகரிக்கும்.
பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம்
செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி
வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு
வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில்
சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்
பாதாம் பருப்பு, வெண்டைக்காய்,
உருளைக்கிழங்கு, தக்காளி இலை
ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை
நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு,
வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத்
தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம்
செய்து கொடுத்து வர நினைவாற்றல்
அதிகரிக்கும்
நினைவாற்றலை அதிகரிக்க பாதம்
சாப்பிடுங்கள்!!
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு
அதிகமான புரதச்சத்து கிடைக்கும்.
அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு
சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும்
என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
அதுபோல் பாதாம் நினைவாற்றலை
அதிகரிக்கும் சக்தி கொண்டது.
குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட
கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல்
அதிகரிக்கும். இரத்தத்திற்கு நன்மை செய்யும்
எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும்
கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும்
தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட
வேண்டும். நீண்ட நேரம் உழைக்க
வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால்
தேவை. வேலையும் கவலையும் அதிகம்
எனில், அப்போது பாதாம் பருப்புகளையே
கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால்
போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக்
கிடைக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும்
குளுட்டாமிக் அமிலம் உள்ள
உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட
வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள்:
1. ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம்
ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை,
மாதுளை,ஆரஞ்சு முதலியன.
2. சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை
கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை
மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்
கொள்கின்றன.
3. பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும்
நினைவாற்றலை அதிகரித்து கொள்வது
மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில்
12 பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு
காலையில் அதை அரைத்து சாப்பிட
வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால்
நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன்
பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100
கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ்,
தாதுஉப்பு இருக்கிறது. குளுட்டாமிக்
அமிலமும் இதில் உள்ளது.
4. கோதுமை, சோளம், பார்லி, காராமணி,
பீட்ரூட், சோயாபீன்ஸ், வெங்காயம்,
வெள்ளைப்பூண்டு, புதினா ஆகியவற்றிலும்
பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதை தவிர பால்,
தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க
வேண்டும்.
5.பிறந்த குழந்தைகளின் உணவில்
நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால்
வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன்
திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது
உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்
கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மைய
ை ஏற்படுத்தும்.
6.அறிவை அதிகரிக்கும் வெண்டைக்காய்:
மூளை சுறுசுறுப்பாய் செயல்பட
வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள
உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை
அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான
பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய
ஒருவிதமான தாவர பசைப்பொருளும்,
நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது;
எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு
சக்தியாக மாறும் மாவுச்சத்தும்
வெண்டைக்காயில் உள்ளன.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர்,
ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன்
பூர்வீகம் எத்தியோப்பியா.
கொழுப்பை கரைக்கும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்
பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில்
இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும்
மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.
100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும்
கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால்
வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத்
திகழ்கிறது.
கொழ கொழ காய்
வெண்டையின் விசேஷ குணமே
கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித
அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது.
நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே
வருகின்றன. சில வகையான வெண்டையில்
மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.
இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து
விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில்
போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில்
இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி
சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
வாய் நாற்றம் அகலும்
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய
அனைத்துமே மருத்துவக் குணங்கள்
நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால்
கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய்
நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு
வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல்,
காய்ச்சல் போன்றவற்றால் யாராவது
அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க்
குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக்
கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன்,
சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து
அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல்
முதலியவை தணியும்.
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக்
குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை
நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும்
அரிய மருந்தாகவும் வெண்டைக்காய்
திகழ்கிறது.
இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம்
உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த
பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி
காணப்படுகிறது. வெண்டைக்காயை
குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து
தரலாம்.
வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ்
(laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு
ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது.
வாய்வு கோளாறுகளை தடுக்கிறது.
வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த
தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல்
உதிர்தலை தடுக்கும்.
இது குழந்தைகளின் நினைவாற்றலை
அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.
எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து
வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது
மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக்
கொள்ள வேண்டும். இதன் மூலம்
மினுமினுப்பான தோலையும் பெறலாம்.
சுறுசுறுப்பாகவும் வாழலாம்.
மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும்
ஆறு உணவுகள்…
1) வால் நட்ஸ்:
இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ
என்னவோ தெரியவில்லை… இந்த வால்
நட்ஸின் தோற்றமே சின்ன
மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிரு
க்கிறது.
2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்
இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்ப
ோது அது மூளையின் வயதாகும் தன்மையை
2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின்
செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின்
தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
2010ல் நடந்த ஒரு ஆய்வில் வால் நட்ஸ்
தொடர்ந்து உண்ணப்படும்போது அல்சைமர்
நோய் இருக்கும் மூளையில்கூட
செயல்பாடுகள் முன்னேற்றம் காண்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.
(அல்சைமர் என்பது வயதாகும்போது
மூளையில் ஏற்படும் ஒருவிதமான நோய். இது
மெல்ல மெல்ல வாய் குளறலில் ஆரம்பித்து
முற்றிய நிலையில் ஓரிரு வார்த்தைகள்
மட்டுமே பேசுமளவில் குறைந்தும்,
நினைவிழப்பு ஏற்படுதல் மற்றும் மூளையின்
கட்டளையிடும் திறன், செயல்பாடு ஆகியன
முழுவதுமாய் குறைந்தும் இறுதியாய் இறப்பு
வரை இழுத்துச்செல்லக்கூடியதுமாகும்…)
2) கேரட்:
நீண்டகாலமாகவே கேரட் என்றாலே
அனைவருக்கும் நினைவில் வருவது அது
கண்ணுக்கு நல்லது என்பதுதான்… அது
இப்போது மூளைக்கும் மிக நல்லது என்பது
கூடுதல் செய்தி.
கேரட்டில் நிறைந்திருக்கும் லுயுட்டோலின்
(Luteolin) காம்பவுன்டானது வயது
சம்பந்தப்பட்ட நினைவாற்றல் குறைபாடுகளை
நீக்குவதிலும், மூளையின் நோய் எதிர்ப்பு
சக்தியை தூண்டும் தன்மையை
அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஆலிவ் ஆயில் மற்றும் பெப்பர் ஆகியவற்றிலும்
இந்த லுயுட்டோலின் நிறைந்திருப்பது
கூடுதல் தகவல்.
3) பெர்ரீஸ்:
விட்டமின்கள் நிறைந்திருக்கும் பெர்ரீஸ்
பழங்கள் தொடர்ந்து உணவில்
சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல்
மிக அதிகமாக அதிகரிக்கும்.
2010ம் ஆண்டில் நினைவாற்றல்
குறைபாடுள்ள ஒத்த வயதினரை இரு
பிரிவாகப்பிரித்து ஒரு பிரிவுக்கு மட்டும் 12
வாரங்கள் பெர்ரி பழ ஜீஸ் கொடுத்தும் ஒரு
பிரிவுக்கு பெர்ரி சேர்க்காமலும் சோதிக்கப்பட்ட
ஆய்வின் முடிவில், பெர்ரி உட்கொண்ட
பிரிவினருக்கு நினைவாற்றல் மிக அற்புதமான
அளவில் முன்னேறியிருப்பது கண்டுபிடிக்கப்ப
ட்டுள்ளது. அது மட்டுமின்றி இது
டிப்ரஷனுக்கான அறிகுறிகளையும் வெகுவாக
குறைத்திருக்கிறது.
2009ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு
ஆய்வுகளின் முடிவில் ஆண்ட்டி
ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி
மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதாகும்
தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட செல்களில்
ஏற்படும் ஒருவித ஸ்ட்ரெஸ்சை
குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை
அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுவது
நிரூபிக்கப்பட்டுள்ளது.
4) மீன்:
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்திருக்கும்
பலவகை மீன்கள் உணவில் சேர்க்கப்படும்ப
ோது மூளையின் செயல்திறன் குறைபாடுகள்
குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. (மீன்
எண்ணெய் மாத்திரை போன்ற சப்ளிமெண்ட்
ஐயிட்டங்கள் உபயோகமற்றவை என்றும்
நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
2005ம் ஆண்டு 65 வயதுக்கு
மேற்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு
ஆய்வின் முடிவில் வாரத்துக்கு இரண்டு
முறை மீனை உணவில் சேர்க்கும்
பழக்கமுடையவர்களுக்கு மூளை செயல்திறன்
குறைபாடு 13% வரை குறைந்த்தும்,
வாரத்துக்கு ஒரு முறை மீனை உணவில்
சேர்ப்பவர்களுக்கு 10%வரை குறைந்ததும்
கண்டறியப்பட்டிருக்கிறது.
விட்டமின் B-12 நிறைந்திருக்கும் சில
மீன்களை உண்ணும்போது அது அல்சைமர்
நோய்க்கு எதிராக போராடுவதாகவும் சில
ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
5) காஃபி மற்றும் டீ:
காப்பியும் டீயும் வெறுமனே நாம் காலையில்
குடிக்கும் பானங்கள் மட்டும் இல்லை. அவை
அல்சைமர் நோய் தாக்காமல் தடுக்கவும்,
செயல்திறன் குறைபாட்டை குறைக்கவும்
பெருமளவு உதவுவதாக பலவித ஆய்வு
முடிகளும் அறிவித்திருக்கின்றன.
காப்பி குடிக்கும் பழக்கம் அல்சைமர் நோயை
வராமல் தடுக்கவும், வரும் வாய்ப்பை
குறைக்கவும் உதவுதாக சில ஆராய்ச்சிகளின்
முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
நினைவு மற்றும் தகவல்கள் சோதனை
ஆராய்ச்சிகளில் டீ குடிப்பவர்கள் டீ குடிக்கும்
பழக்கம் இல்லாதவர்களைவிட அற்புதமாக
செயல்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
6) ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை:
சின்ன வயதிலிருந்து நமது அம்மாக்கள் கீரை
சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று
அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி
வற்புறுத்துவார்கள். இந்தக்கீரையில்
விட்டமின் C மற்றும் E நிறைந்திருக்கிறது.
விட்டமின் Eயை உடம்பில் வழங்கி
செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும்
நெர்வ் திசுக்கள் 500 முதல் 900% வரை
வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து
உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை
கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம்
சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள
்ளது.
தண்ணீர்
மூளையில் 4/3 பங்கு தண்ணீர் உள்ளது.
எனவே தண்ணீர் குறைவானால் மூளையில்
செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி
ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும்.
எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால்,
மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச்
செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
ஒமேகா-3 உணவுகள்
ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள
உணவுகளான முழு கோதுமை தயாரிப்புகள்,
பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோயா பீன்ஸ் மற்றும்
பருப்பு வகைகள், முட்டை, பால், தயிர், சீஸ்,
நட்ஸ், காய்கறி எண்ணெய்கள் முதலியன
ஆகும். மேலும் ஆளி விதைகள் மற்றும் மீன்
கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள
உணவிற்கு நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.
முதுமையிலும் நினைவாற்றல் அதிகரிக்க ..???
1) உணவுப் பழக்கங்கள்:
உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள்
ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத்
தவிர்ப்பதும் நல்லது.
2) உடற்பயிற்சி:
தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான
உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல்
குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன
என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக்
கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும்
பெருமளவு உதவுகின்றன என்பது
நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
3) புதிய முயற்சிகள்:
எப்போதும் வழக்கமான செயல்களையே
செய்து கொண்டிராமல் புதிய புதிய
முயற்சிகளிலும், செயல்களிலும்
ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும்
இளமையாகவும் திறனுள்ளதாகவும்
இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
4) ஓய்வு:
சுறுசுறுப்பாக இருப்பது போலவே
தேவையான அளவு ஓய்வும், உறக்கமும்
மூளையின் திறன் குறையாமல் இருக்க
மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள்.
5) மூளைக்கு வேலை:
மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள்
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள்,
புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல்
ஆகியவை மூளைக்கு முறையாக வேலை
தந்து அதன் திறனைத் தக்க வைத்துக்
கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள்
கூறுகின்றன.
6) படித்தல்:
புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல
பொழுது போக்கு மட்டுமல்ல அது
மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்க
ள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே
புத்தகங்கள் படிப்பதும் உதவும்.
7) நல்ல பழக்க வழக்கங்கள்:
புகைபிடித்தல் மற்றும் அதிகமாய்
மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள்
நாளடைவில் மூளைத் திறனை
மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி
முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய
பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க
வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக
முக்கியம்.
ஞாபக சக்தி அதிகரிக்க மருத்துவக் குறிப்பு :
ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும்
மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக
வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம்,
பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு
ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம்
போல செய்து காலை, மாலை குடித்து
வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி
குறையும்.
வெண்ணீரில் தேனை கலந்து தினமும்
காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி
செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி
சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து
போகுதல் குறைந்து நினைவாற்றல்
அதிகரிக்கும்.
பாதாம் பருப்பு, வெண்டைக்காய்,
உருளைக்கிழங்கு, தக்காளி இலை
ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம்
செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி
வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு
வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில்
சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை
நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு,
வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத்
தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம்
செய்து கொடுத்து வர நினைவாற்றல்
அதிகரிக்கும்.
4 வெந்தயம், 15 கொண்டைக்கடலை இவற்றை
இரவு ஊற வைத்து காலையில் மசித்து
சர்க்கரை போட்டு தினமும் சாப்பிட ஞாபக
மறதி குறையும்.
முளைக்கீரை, வல்லாரை கீரை சேர்த்து
பருப்புடன் சமைத்து உண்ண நினைவாற்றல்
அதிகரிக்கும்.
சிறுகீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து
சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில்
போட்டுஅடிக்கடிசாப்பிட நினைவாற்றல்
அதிகரிக்கும்.
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
சாப்பிட்டால், நினைவாற்றல் பெருகும்.
தூதுவளை பொடியை தினமும் உணவுக்கு
பின் காலை, மாலை சாப்பிட்டு வர ஞாபக சக்தி
வளறும்
பப்பாளிப் பழத்தை தினமும் சிறு அளவு
மட்டும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
பெருகும்.
தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுவதை
பழக்கமாக கொள்ளவும்
வல்லாரை இலையைக் காயவைத்து அரை
கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள்
சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக்
கொள்ளவும். இதில் காலை, மாலை
உணவுக்கு பின்பு இரண்டு கிராம் அளவில்
சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர,
நினைவாற்றல் பெருகும்.
கரிசலாங்கண்ணி பொடி, திரிபலா பொடி,
பிரம்மி பொடி, வல்லாரை, கீழாநெல்லி
எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து
41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
துளசி இலையை தினசரி காலையில்
சிறிதளவு மென்று தின்ன ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பிடித்திருந்தால் share & Like செய்யுங்கள்..
மட்றவர்களுக்கு பயனுறும்...!

Wednesday, December 16, 2015

பணவளக்கலை - MONEY ATTRACTION WORKSHOP

Dear Divine,Golden Sunrise,

ஆனந்தம் ,வணக்கம், 

பணவளக்கலை - MONEY ATTRACTION WORKSHOP

பல நபர்களின் வாழ்க்கையை மாற்றிய பயிற்ச்சி....ஆன்மீகமும், அறிவியலும் இணையும் வெற்றிகரமான பயிற்ச்சி... இப்போது உங்கள் ஊரில்.. வாருங்கள் செல்வந்தர் ஆகலாம்..

Date - 27th December Sunday @ Erode 


பணம் மீதான விருப்பமும் பணம் மீதான அதீத ஆர்வமும் பணம் மீதான அளவூக்கு அதிகமான அன்பும் பணம் மீதான மிரட்டலான
காதலும் பதிலுக்கு உங்களை பணத்தின் அருகே கொண்டு சென்று விடும்.படிப்படியாக அல்ல.ஒரேயடியாக.அலேக்காக உங்களை
துரக்கிக் கொண்டு போய் மிகுந்த பணத்தின் அருகே கொண்டு போய் வைத்து விடும்.அதனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
வேட்கையை ஆர்வத்தை உழைப்பை விட பணத்தின் மீதான உண்மையான விருப்பத்தை முதலில் உங்கள் மனதில் விதையூங்கள்.அதை தினமும் பணத்தின் மீதான ஆசை என்ற தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள்.வளர்வீர்கள் பெரிதாக.

அதைப் பற்றித்தான் இப்போது சொல்லித் தர விரும்புகிறேன்.

வாழ்க பணமுடன்!


உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும்.

பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி

Jc.Dr.Star Anand Ram
Money attraction Consultant
9790044225 
www.happy4all.org  


Sunday, December 6, 2015

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!

Monday, November 16, 2015

கடவுள் ஒரு நாள் மாறுவேடத்தில்

கடவுள் ஒரு நாள் மாறுவேடத்தில் உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது தாகம் ஏற்பட்டதாம்.
அப்போ அங்கு அருகில் இருந்த ஒரு பால்காரரின் வீடு கண்ணில் தென்பட்டவுடன் அங்கு சென்று குடிக்க சிறிது தண்ணீர் கேட்டாராம். அதற்கு அந்த பால்காரர் "பாலில் கலக்கவே தண்ணி பத்தல இதுல உமக்கு குடிக்க தண்ணியா"கிடையாது, கிடையாது வேற இடம் பார்த்து கிளம்பு என்றாராம் பால்காரர்.
கடவுள் தாகத்துடன் வேறு எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கு ஒரு சோமபான கடை தென்பட்டதாம். கடவுள் அங்கே சென்று தண்ணீர் கேட்டபோது, அவர் மூச்சி முட்டும் அளவுக்கு குடிங்க குடிங்க என்று குடுத்தார்களாம்.
அதில் மனம் மகிழ்ந்த கடவுள் "தண்ணீர் கேட்டால் குடிக்க கொடுக்காத பால்காரனை தேடி யாரும் வரமாட்டார்கள் இனி அவன் வீடு வீடாய் போய் தான் பால் ஊற்ற வேண்டும், எனக்கு வயிறு முட்ட குடிக்க கொடுத்த சோமபான கடை எங்கே இருந்தாலும் தாறுமாறாய் கும்பல் கும்பலாய் அவர்களே வந்து குடித்து விட்டு போவார்கள்" என்று சாபம் கொடுத்தாராம்.
இதுதான் டாஸ்மாக்கின் கதை 
🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍹

Tuesday, November 3, 2015

அதிகமான நேர்மறை எண்ணங்கள் தேவை

அதிகமான நேர்மறை எண்ணங்கள் தேவை


கடந்த வாரத்தில் “எதை வேண்டாம்னு நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும்!” என்று நான் எழுதியது பல பெற்றோர்களைக் கலக்கத்தில் தள்ளியது தெரிகிறது. பொதுவாக, நாம் அனைவருமே நல்ல நோக்கத்தோடுதான் பேசுகிறோம். ஆனால், அச்சம் பல எதிர்மறை எண்ணங்களை வரவழைத்துவிடுகிறது. இது மனதின் இயல்பு. இதற்குக் குற்ற உணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.
நல்ல உள்நோக்கத்தை, நேர்மறை எண்ணங்களில், நல்ல சொற்களில் எப்படி தெரிவிப்பது என்பதுதான் சூட்சுமம். அதற்கு முன்பாக, நல்ல உள் நோக்கத்துடன் ‘எதை வேண்டும்’ என்று எண்ணுகிறோமோ, அது எப்படி நடக்கிறது என்பதை நம் மூளையின் செயல்பாட்டை வைத்துப் புரிந்து கொள்வோம்.
மூளையின் பயணம்
நாம் பேசும் மொழியைப் படங்களாய்த்தான் நம் மூளை உள்வாங்கிக்கொள்ளும். எழுத்து களாய் அல்ல.
“நான் சென்ற முறை சிக்கிம் போனபோது ஒரு சிலிர்ப்பான அனுபவம் நிகழ்ந்தது. குறுகிய சாலையில் எங்கள் வண்டி போகிறது. நானும் ஓட்டுநரும்தான். ஒரு புறம் திரும்பினால் பள்ளத்தாக்கு. இன்னொரு புறம் மலை மேடுகள். இடையில் ஆபத்தான முறையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.
இருட்டிக்கொண்டு மழை வேறு வரும் போலத் தெரிகிறது. ஆனால், வழியெங்கும் பல நிறங்கள் கலந்த மலர்க் கூட்டங்கள் மனதைக் கொள்ளை கொண்டன. இவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்த போதே திடீரென எதிரில் ஒரு லாரி வேகமாக வந்தது...”
இப்போது உங்கள் மனத்தில் என்ன காட்சிகள் வந்தன? நான் சென்ற வண்டி எது? எந்த நிறத்தில் பூக்களைப் பார்த்தீர்கள்? எந்தப் பக்கம் பள்ளத்தாக்கு? எந்தப் பக்கம் மலைமேடு? எதிரில் வந்த லாரி எப்படி இருந்தது? என் ஓட்டுநர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேனா அல்லது பின் சீட்டில் இருந்தேனா? எதிரில் வந்த லாரி என்ன செய்திருக்கும்?
இவை அனைத்துக்கும் உங்கள் மூளை தானாக விடையைத் தேடி நிரப்பிக்கொள்ளும். நிஜத்தில் உங்கள் மூளை உங்களை சிக்கிம் பயணத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்த அச்சு வரிகள் நினைவில் இருக்காது. ஆனால் ஒரு மலைப் பிரதேசக் காட்சியை உங்கள் மூளை வடிவமைத்துக்கொள்ளும்.
நிஜத்தின் பாவனை
நிஜமாகவே நான் சிக்கிம் போனேனோ அல்லது கதை விடுகிறேனோ, எதுவாக இருந்தாலும் உங்கள் மூளை தரும் உங்கள் அனுபவம் நிஜம். அதை விபத்து என்றோ சாகஸம் என்றோ நீங்கள் கூடுதலாகக் கற்பனை செய்யும்போது உங்கள் உணர்வுநிலையும் அந்தக் காட்சியை மேன்மைப்படுத்தும்.
காணாததை இப்படிக் காட்சிப்படுத்தி, அதற்கு ஏற்ப எண்ணங்களையும் உணர்வுகளையும் உருவாக்கி, அதை நிஜம் போலப் பாவிப்பது நம் மன இயல்பு. அதனால்தான் இத்தனை கற்பனை சந்தோஷங்களும், கற்பனை பயங்களும்!
இதில் ஒன்று முக்கியமானது. நீங்கள் காட்சிப்படுத்துவது நிஜமா, பொய்யா, நேர்மறையா, எதிர்மறையா என்றெல்லாம் மூளை கவலைப்படாது. அது செய்ய வேண்டிய வேலையைச் செய்யும்.
கிறக்கத்தின் காரணம்
அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரின் பின்னாலிருந்து நம்பியார் தாக்க வந்தால் பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு, “வாத்தியாரே..பின்னால பாரு!” என்று கத்துவது இதனால்தான். அதே போல மல்லிகா ஷெராவத்தைப் பார்த்துக் கிறங்குவதும் இதனால்தான். படத்திலிருப்பதையும் தாண்டி, உங்கள் கற்பனைகள் உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்.
உங்களுக்குப் பிடித்த கோதுமை அல்வாவை அவசர அவசரமாய் விழுங்குகையில் ஒருவர் ஓடி வந்து, “ சர்க்கரைப் பாகில் ஒரு பல்லி விழுந்துடுச்சாம். சமையல்காரர் சொல்லிட்டிருந்ததை இப்பத்தான் கேட்டேன்!” என்கிறார்.
இப்போது உங்களால் தொடர்ந்து அல்வாவை ரசிக்க முடியுமா? பல்லி விழுந்த காட்சி மனதில் வரும். அதன் விஷம் உங்களைத் தாக்கி நீங்கள் வாந்தி எடுப்பதாகக் காட்சி வரும். பிறகு நிஜத்தில் வாந்தி வரும் உணர்வு வரும்.
கற்பனையின் கத்தல்
பொய்யா, நிஜமா என்று மூளை கேள்வி கேட்காது. கொடுத்த காட்சிக்கு ஏற்ற உணர்வுகளையும் உடல் நிலை மாற்றங்களையும் உடனே கொண்டு வரும்.
இதேபோலத்தான் கண்ணாடி டம்ளரைக் குழந்தை எடுத்துப் போகும்போது, அது கீழே போடுவதை மனம் கற்பனை செய்யும். உடைந்து கையில் குத்துவதைக் கற்பனை செய்யும். உங்கள் கத்தலில் பதற்றப்பட்டு குழந்தை டம்ளரைக் கீழே போடும்.
இதேபோலத்தான் எல்லா உறவுகளிலும். “அவன் அப்படி இருக்கக் கூடாது” என்று எண்ணுகையில் அவனை நம் எண்ணத்துக்கு ஏற்ப மாற்ற ஆரம்பித்துவிடுகிறோம்.
வன்முறையின் ஆதாரமே இதுதான். “அவன் நம்மைத் தாக்கக் கூடாது!” என்ற எண்ணம்தான் நம்மைத் தற்காப்புத் தாக்குதலுக்குத் தயார் செய்கிறது. அதன் முனைப்பை எதிராளி உணர்ந்ததும் அவனும் தற்காப்புக்குத் தயாராக, அதை ஆரம்பமாக நினைத்துக் கொண்டு, “பயந்த மாதிரியே நடக்குது” என்று முதல் அடியை (தற்காப்பாக நினைத்து) கொடுக்க...பின் யுத்த மயம் தான். இருவரும் எதிராளி தான் யுத்தம் துவங்கியதாக நினைத்துக் கொள்வார்கள்.
நேர்மறையின் சப்ளை
சரி, டம்ளரைக் கீழே போடாமல் குழந்தை போவதற்கு எப்படிச் சொல்லலாம்?
“ பாப்பா.. ஒரு கையைக் கீழே கொடுத்து டம்ளரைப் பத்திரமா எடுத்திட்டுப் போ! ஆ...அப்படித்தான் சபாஷ்!” என்றால் அதைக் குழந்தை நன்றாகக் கற்கும்.
ஆனால், இதைச் சொல்லத் தெளிவான மனமும், நேர்மறையான கற்பனை வளமும், உற்சாகமும், நம்பிக்கையும் அதிக அளவில் தொடர்ந்து மனதுக்குத் தேவைப் படுகிறது.
தினசரி அவ்வளவு எண்ணங்களை நாம் சப்ளை செய்கிறோமா? அத்தகைய அளவில், நேர்மறை எண்ணங்கள் தொடர்ந்து வர என்ன செய்யலாம்?

Monday, November 2, 2015

CHINESE ADVICE TO 50-YEARS & 50 PLUS YEARS OLDER

CHINESE ADVICE TO 50-YEARS & 50 PLUS YEARS OLDER
Because none of us have many years to live, and we can't take along anything when we go, so we don't have to be too thrifty.  
Spend the money that should be spent, enjoy what should be enjoyed, donate what you are able to donate, but don't leave all to your children or grandchildren, for you don't want them to become parasites who are waiting for the day you will die!!
  
DON'T WORRY about what will happen after we are gone, because when we return to dust, we will feel nothing about praises or criticisms. The time to enjoy the worldly life and your hard earned wealth will be over!
  
DON'T WORRY too much about your children, for children will have their own destiny and should find their own way. Don't be your children's slave. Care for them, love them, give them gifts but also enjoy your money while you can. Life should have more to it than working from the cradle to the grave!!
  
DON'T EXPECT too much from your children. Caring children, though caring, would be too busy with their jobs and commitments to render much help.
  
Uncaring children may fight over your assets even when you are still alive, and wish for your early demise so they can inherit your properties and wealth.
  
Your children take for granted that they are rightful heirs to your wealth; but that you have no claims to their money.
50-year olds, don't trade in - your health for wealth, by working yourself to an early grave anymore. Because your money may not be able to buy your health.
  
When to stop making money, and how much is enough  ?                
(A HUNDRED thousand, One million, ten million,One billion )?  
Out  of thousand hectares of good farm land, you can consume only three quarts (of rice) daily; out of a thousand mansions, you only need eight square meters of  space to rest at night. 
So, as long as you have enough food and enough money to spend, that is good enough. You should live happily.
Every family has its own problems.
Just DO NOT COMPARE  with others for fame and social status and see whose children are doing better etc., but challenge others for happiness, health, enjoyment, quality of  life and longevity.  
DON'T WORRY about things that you can't change because it doesn't help and it may spoil your health.
  
You have to create your own well-being and find your own place of happiness. 
As long  as you are in good mood and good health, think about happy things, do happy things daily and have fun in doing, then you will pass your time happily every day.
  
One day passes WITHOUT happiness, you will lose one day.
One day passes WITH happiness and then you gain one day.
      
In good spirit, sickness will cure; 
In a happy spirit, sickness will cure faster;
in high and happy spirits, sickness will never come.
With good mood, suitable amount of exercise, always in the sun, variety of foods, reasonable amount of vitamin and mineral intake, hopefully you will live another 20 or 30 years of  healthy life of pleasure. 
 -   ABOVE ALL -  Learn to cherish the goodness around.
.. and FRIENDS........... They all make you feel young and "wanted"... without them you are surely to feel lost !!  
Wishing you all the best for the years to come.
  
Please share this with all your friends who are 50 plus and those who will be 50 plus  after some time and also with your children.

Sunday, November 1, 2015

துணிவே தொழில்: விற்பனை செய்தலே தாரக மந்திரம்



Ads by Magical FindAd Options
நிறைய சிந்தனை, பலருடன் ஆலோசனை, நீண்ட நெடிய ஆராய்ச்சி ஆகியவற்றுக்குப் பிறகு நீங்கள் விரும்பிய தொழிலைத் தொடங்கிவிட்டீர்கள். வெறும் வாய்மொழி விளம்பரத்தில் தொடங்கி இன்று பிரலமான தயாரிப்பாக இருந்தாலும் உங்கள் தொழிலை விரிவாக்க இது போதாது.
இது போட்டிகள் நிறைந்த உலகம். உங்களது தயாரிப்பைப் போன்று குறைந்தபட்சம் நான்கு பேராவது தயாரிப்புகளை அளிப்பர். இத்தகைய சூழலில் உங்களது தயாரிப்புக்கு ஒரு தனித்தன்மை தேவைப்படுகிறது. பொருள் தரமாக இருந்தாலும், அது வாடிக்கையாளர் மனதில் பதிவதற்கு விளம்பரம் அவசியம்.
ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் விற்பனை செய்வதற்கு கோடிக் கணக்கில் விளம்பரம் செய்கின்றனர். 50 காசு மதிப்புடைய பாக்கை விற்கவும் விளம்பரம் தேவைப் படுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன?
உங்கள் தயாரிப்பை தொடர்ந்து வாடிக்கையாளர் மனதில் இருத்துவதற்கு விளம்பரம் அவசியம். பொருள் தரமாக இருப்பது மட்டும் போதாது, அது தரமாக உள்ளது என்பதை தொடர்ந்து விளம்பரம் மூலம் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி விளம்பர போட்டி மூலம் பொருள்கள் பிரபலமாகிவரும் வேளையில் மக்கள் வாய் மூலமான விளம்பரமே போதும் என நீங்கள் காத்திருக்கக் கூடாது. எனவே விளம்பர திட்டங்களை வகுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வந்துள்ளன. குறைந்த செலவில் இவற்றின் மூலமும் வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பெறச் செய்ய முடியும்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு நிறுவனத்துக்கு உயிர் நாடியே சந்தைப் பிரிவுதான். எந்த ஒரு புதிய நிறுவனத்துக்கும் தயாரிப்புகள் புதிய தாக இருக்க வேண்டும் என்பதோடு மிகச் சிறப்பான சந்தைப்படுத்துதலும் அவசியம்.
வாடிக்கையாளர்களின் நாடியை பிடித்து அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் மட்டுமே போட்டிகளைச் சமாளிக்க முடியும். சந்தைப்படுத்துதல் மட்டும்தான் உங்கள் தொழிலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
மிகச் சிறந்த தயாரிப்பு லட்சக்கணக்கில் வருவாயை ஈட்டும் என்று யூகித்துவிடாதீர்கள். தயாரிப்பு நன்றாக இருக்க வேண்டும், அதை சிறப்பாக சந்தைப்படுத்த (marketing) வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். மிகச் சிறந்த தயாரிப்புகள் மிகச் சிறந்த சந்தை உத்திகளின் மூலம்தான் வெற்றி பெறுகின்றன. இதற்குத்தான் விளம்பரம் அவசியமாகிறது.
சந்தைப்படுத்தியதற்குப் பிறகு பொருள் விற்பனை (sales) மிகவும் அவசியம். நான் நடத்தும் பல்வேறு பயிலரங்குகளிலும் இளம் தொழில்முனைவோர் பலரும் கேட்கும் கேள்வி இதுதான்.
இவ்வளவு படித்துவிட்டு விற்பனையில் இறங்குவதா? என்பதே.
பெரும்பாலானவர்கள் விற்பனை என்பது உண்மையை பலமடங்கு சித்தரித்து கூறி வாடிக்கையாளர்களை பொருள்கள் வாங்க வைப்பது என்று நினைக்கின்றனர். ஆனால் இதுமாதிரியான விற்பனை உத்தியை ஒருபோதும் பின்பற்றக் கூடாது.
இதுபோன்ற குறுக்கு வழி உத்திகள் விரைவிலேயே உங்கள் தொழிலை காணாமல் செய்துவிடும். உங்கள் தயாரிப்பை விற்பனை செய்ய நீங்களே தயங்கினால் அவற்றை நீங்கள் உங்கள் அலுவலகத்திலேயே வைத்திருக்க வேண்டியதுதான்.
பன்னாட்டு நிறுவனங்களின் தலை மைப் பொறுப்பிலிருக்கும் பெரும் பாலானவர்கள் ஆரம்ப காலத்தில் விற்பனையில் ஈடுபட்டவர்கள்தான். ஐஐஎம் போன்ற நிர்வாகவியல் கல்வி மையங்களில் முதுகலை நிர்வாகவியல் பட்டம் பெற்று பெரிய நிறுவனங்களில் நிர்வாகவியல் பயிற்சியாளராக சேருவோர் குறைந்தபட்சம் 3 மாதங்களாவது குக்கிராமங்களில் விற்பனை பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.
பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனையை முடுக்கி விட வேண்டும். உங்களது பொருள் சிறப்பாக இருக்கும்போது அதை விற்பனை செய்ய நீங்கள் தயங்குவதில் அர்த்தமில்லையே?
விற்பனை என்பது பரஸ்பர பலனளிக்கும் விஷயம். வாங்குபவரும் விற்பவரும் பலனடைய வேண்டும். உங்களது தயாரிப்பு மூலம் வாடிக்கையாளரது நம்பிக்கையை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை உள்ளார்ந்த விஷயமாகக் கருத வேண்டும்.
உங்கள் பொருள் மூலம் வாடிக்கையாளரது வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறீர்கள், அதன் மூலம் புதிய தொழில்முனை வோரை உருவாக்குகிறீர்கள் என நம்பவேண்டும். இந்த நம்பிக்கை இல்லாமல் தொழில் செய்யும் எந்த தொழில்முனைவோரும் வெற்றி பெற்றது கிடையாது.
இந்த சிந்தனையை அனைத்து பயிற்சியாளர்கள், ஊழியர்கள், விற்பனை பிரதிநிதிகளிடமும் ஆழமாக விதைக்க வேண்டும். இதன் மூலம்தான் உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் வேரூன்றும். இதன் மூலம் பொருள்கள் விற்பனை அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள் மத்தி யில் நம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த நம்பிக்கைதான் உங்கள் தயாரிப்பை பல காலம் வாழ வைக்கும்
urs

Thursday, October 29, 2015

மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார்

மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.
ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார். யார் அவர்.?
சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.

மஹாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.
எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள் பக்கத்தில் — 
பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல். இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்..? ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் "வேலை" இருந்திருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

இதோ ஒரு கேள்வி:
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற பாராட்டைப் பெறும்.?

1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர,
3) துரோணர் கர்ணன்,
4) ஜயத்ரதன்,
5) துரியோதனன்
6) விதுரர்...

அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் - இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான்.

இது என்ன புதுக் கதை? விதுரர் எங்கே சண்டை போட்டார்.? அவரை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் ஏன் 
திட்டம் போட வேண்டும்.?
கேள்விக்கு விடை சொல்லும் முன் ஒரு சிறு பயணம் .

யார் இந்த விதுரர்.?
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் 
சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் . பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட 
முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம். 
கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி.
சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும், 
மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.?
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்அதற்கான தண்டனை — யுத்தத்தில் மரணம்.
சரி, இப்போது கேள்வி. விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்.?
விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன்  சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும். 
மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை - தர்மராஜர் (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?
எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா.?
விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை. 
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட 
மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது.
எப்படி தடுப்பது.?
இதோ ஸ்ரீ கிருஷ்ணனின் யுக்தி ....
ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப சிம்பிள். Human Psychologyஐ நன்கு பயன்படுத்தி 
செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்த திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின 
இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணன் தன் விருந்தினராக 
வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது — விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.
மறுநாள், அரச சபையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக வாதாடினான். துரியோதனன் ஒரு ஊசி முனை 
நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன், 
கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது. 
ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு.
அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப் படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
(ஏற்க்னவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார். 
யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை.
இப்பொழுது உங்களுக்கு 
புரிந்து இருக்கும் 
ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், 
விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.?  துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.?
விதுரர் வைத்திருந்த வில் மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.! இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து., விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது..!!
இதுதான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்திர யுக்தி.....
படித்து ரசித்[WhatsApp]

Wednesday, October 28, 2015

மகாலட்சுமி கூட நரசிம்மர்

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்...

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

 தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

 ""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.

 அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

 தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.
 ""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.
 அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.
 ""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.

 ""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.
 இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
 ""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான். 

 பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.
 குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.

 ""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.

 பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன், ""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.

 நரசிம்மர் அவனிடம்,""பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.

 நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.

Monday, October 26, 2015

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் -- தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் -- தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்...! - www.happy4all.org 

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.

Saturday, October 24, 2015

ரசமான விவாதம் - பெரியவாளின் சமையல் விளக்கம்


‘ரசமான விவாதம்’ : பெரியவாளின் சமையல் விளக்கம்.
"குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும்
சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே
எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.

அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப்
போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக
இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும்
குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு,
ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?

இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன்
மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான
குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.

இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது
தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை,
ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின்
வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது
உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப்
பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து
நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர்
தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு
எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து
விட்டார் மஹான்.

குழம்பு-குழப்பம்
தான்-அகங்காரம்
ரசம்-தெளிவு
பாயஸம்-இனிமை
மோர்-ஆனந்தம்

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை,
இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை.
What a melody song. I like very much.
‘ரசமான விவாதம்’ : பெரியவாளின் சமையல் விளக்கம்.
"குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும்
சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே
எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.

அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப்
போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக
இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும்
குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு,
ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?

இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன்
மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான
குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.

இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது
தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை,
ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின்
வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது
உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப்
பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து
நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர்
தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு
எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து
விட்டார் மஹான்.

குழம்பு-குழப்பம்
தான்-அகங்காரம்
ரசம்-தெளிவு
பாயஸம்-இனிமை
மோர்-ஆனந்தம்

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை,
இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை.
நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...!
ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.
இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, 
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
---
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்". தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, 
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
---
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".
- www.v4all.org