Showing posts with label Soft skills trainer. Show all posts
Showing posts with label Soft skills trainer. Show all posts

Wednesday, August 6, 2014

சிறந்த விற்பனையாளர் ஆவதற்கான தகுதிகள்:

சிறந்த விற்பனையாளர் ஆவதற்கான தகுதிகள்:

ஒரு சிறந்த விற்பனையாளருக்கு தோற்றம் முக்கியமான அம்சமாகும். சிலருக்கு பிறவியிலேயே நல்ல நிறம் மற்றும் உடலமைப்பு அமைந்துவிடுவதுண்டு. அப்படியில்லாதவர்கள் தங்களுடைய உடை மற்றும் நடைகளில் நன்கு கவனம் செலுத்தி பொலிவனா தோற்றதை உருவாக்கலாம்.

இரண்டாவது பேச்சுத்திறன். தம்முடைய விற்பனைப் பருட்களை வாடிக்கையாள் ஏற்குமாறு வெளிப்படுத்தும் பேச்சுத்திறன், அப்பொருட்ளின் நிற மற்றும் குறைகளை நன்கு அறிந்து அதனுடைய நிறைகளை சாமர்த்தியத்துடன் பரப்பும் ஆற்றலுக்கு தகவல் தொடர்புத் துறையில் (Communication skills) பயிற்சி பெறுதல்.



வாடிக்கையாளருக்கு எந்த மொழியில் பிடிக்குமோ அந்த மொழியில் நன்கு உரையாடுகிற பழக்கம்.

வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து, அவரின் உணர்வுகளை மதித்து, அவருடைய தேவைகள நிறைவேற்றவோம் என்ற நம்பிக்கையை உருவாக்குதல்.

எல்லா தரப்பு மக்களிடமும் சுமூகமாக பழகும் ஆற்றல் அத்துடன் மனதில் பணிவு.

வாடிக்கையாளர் கோபமாக பேசினாலும் நிதானமாக செயல்படும் சகிப்புத்தன்மை.

பொருளை பிறர் தாழ்த்திப் பேசினாலும், வாங்க மறுத்தாலும் மனத் தளராமல் உறுதியுடன் வலியுறுத்தும் விடாமுயற்சி.

கற்பனைத்திறன்; வாடிக்கையாளரின் மன உணர்வுகளை முன்னரே கணித்து அதற்கேற்ப செயல்படும் ஆற்றல்.

தொழிலில் தளராத ஆர்வம்

வாடிக்கையாளர்களை ஒன்றாகச் சேர்த்து அவர்களுக்கு விருந்தளித்தல்; அதன் மூலம் தம்முடைய பொருட்களை அறிமுகப்படுத்துதல். (Organising Ability)

வாடிக்கையாளர்களுக்கு ஒரு புறமும், உற்பத்தியாளர் அல்லது நிர்வாக இயக்குநருக்கு மறுபுறமும் பாலமாக இருந்து அந்த கம்பெனியின் வளர்ச்சிக்கு உதவுதல்.

பல்வேறு விளம்பர யுக்திகளின் மூலம் மக்களிடையே தம்முடைய வியாபாரத்தைப் பரப்புதல்.

இறுதியாக, பணத்த கையாளுதலில் நாணயம். அதிக தொகையை பார்க்கும்போது அதில் ஒரு சின்ன அளவு எடுத்து கொண்டாலென்ன? என்ற சபலம், மற்றும் கம்பெனி பணம்தானே, செலவழிப்போம் என்ற ஊதாரித்தனம், இவ்விரண்டும் இல்லாமலிருத்தல்.

இவையாவும் சிறந்த விற்பனையாளரின் தகுதிகளாகும்.

Yours happily

Dr.Star Anand Ram
www.v4all.org
cell- 9790044225 


Tuesday, July 22, 2014

Holiday Inn ன் கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.
4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
8. “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம்பாதி அறிவு.
11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.
12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.
13. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.
14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
15. எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது
16. கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.
17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும்  கிடைக்காது.
19. சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.
20. கடவுளை நம்புங்கள்.

Yours Happily 
Dr.Star Anand Ram
www.v4all.org 

Thursday, July 17, 2014

தொழில் வெற்றி பெற பிசினஸ் மொழி...கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்



ஓர் ஆடு வழிநடத்தும் சிங்கப் படையைக் குறித்து நான் கவலைப்படவில்லை;என் கவலையெல்லாம் ஒரு சிங்கத் தலைமையிலான ஆட்டு மந்தை படை குறித்தே!
-
மாவீரன் அலெக்சாண்டர்

எனக்கு எப்போதுமே தெரியும்நான் பணக்காரனாக போகிறேன் என்று. ஒரு நிமிடம் கூட அதை நான் சந்தேகித்ததில்லை.
வாரன் பபெட்

உங்களிடம் வரும் மகிழ்ச்சி இல்லாத வாடிக்கையாளரேநீங்கள் படிக்க வேண்டிய மிகப் பெரிய கல்வி கூடம்!
பில்கேட்ஸ்

ஒரு மனிதனுக்கு ஒரு மீனை விற்றால்அவன் ஒரு நாள் சாப்பிடுவான். அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால்நீ ஓர் அருமையான தொழில் வாய்ப்பை இழக்கிறாய்.
காரல் மார்க்ஸ்

Friday, June 20, 2014

கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.


கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.


ஏன்? காரணம்--" தேனெடுத்து திரும்பி வரும் தேனீக்கள், தங்கள் கூட்டிற்குத் திரும்புவதில்லை.நடுவழியில் இறந்து விடுகின்றன."
வேலைக்காரத் தேனீக்கள்,பூக்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் முறையும் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் முறையும் அதிசயமானது.ஒரு வேலைக்காரத் தேனீ மட்டும் அலைந்து திரிந்து--பூக்களின் இருப்பிடத்தை கண்டறிந்து வரும்.அதன் பின் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் விதமாக நடனமாடும்.அந்த நடனத்தை வைத்து பூக்கள் தேன் கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என துல்லியமாக மற்ற தேனீக்கள் புரிந்து கொள்ளும் .அந்நடனத்தில் சூரியனை நோக்கிப் பறந்தால் சூரியன் இருக்கும் திசையிலும், சூரியனுக்கு எதிர் திசையில் பறந்தால் எதிர் திசையிலும் பூந்தோட்டங்கள் இருக்கின்றன என்று பொருள்.அவ்வாறு கடினப்பட்டு சேகரித்து வரும் தேனை சேமிக்கும் முறை பற்றியும், அதைக் கெடாமல் பாதுக்காக செய்யப்படும் வேலைகளைப் பற்றியும் ஒரு 1000 பக்கத்திற்கு தனி புத்தகமே எழுதலாம்.அவ்வளவு விஞ்ஞானம்,அவ்வளவு நுணுக்கம்.
Bees are the claasic example for Colonial and Communal system of living.கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.ஒரு தேனீ கூட்டத்தில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும்.மற்றவை ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள்.இதில் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே ராணித் தேனீயின் பணிஆண் தேனீயின் வேலை பற்றி சொல்ல வேண்டியதில்லை.இதில் வேலைக்காரத் தேனீக்கள் தான் தேன்கூட்டிற்கு முழுமுதல் பொறுப்பு.
இந்த தேனீக்கள் கூட்டத்தால் தான், அது தேனைச் சேகரிக்கும் பொழுது அதன் கால்களில் ஓட்டிச் செல்லும் மகரந்த சூல்களால் தான் தாவரங்கள்,மரங்கள்,காடுகளே உருவாகின்றன.
இவ்வளவு பயன் உள்ள தேனீக்கள் சமீபகாலமாக வெகு வேகமாக அழிந்து வருகின்றன.ஐரோப்பாவில் 42% தேனீக்கள் அழிந்து விட்டன.காரணம்-மலட்டுத் தன்மை கொண்ட பூக்கள்.அவற்றை நல்ல பூக்கள் என்று நம்பி தேனெடுக்க வரும் தேனீக்கள் அமர்கின்றன.அப்பூக்களில் உள்ள Neonicotinoids- நீயோ நிகோட்டினாய்ட்ஸ் என்னும் ஒரு வேதிப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கி,அதனால் இயற்கையிலேயே மிகப் புத்திசாலியானதும்,நல்ல ஞாபகதன்மைக் கொண்டதுமான தேனீக்கள் தங்கள் கூட்டை மறந்து--குழம்பி இறந்து விடுகின்றன.இவற்றை நம்பி கூட்டில் காத்திருக்கும் ராணித் தேனீ--இறுதியில் தானும் இறக்கிறது.அதோடு அந்த சமுதாயமே அழிகிறது.
இந்தப் பேரழிவிற்கு முழுமுதல் காரணம்: மரபணு மாற்றப் பட்ட விதைகள்.அவையே மலட்டுத் தன்மை கொண்ட பூக்களை உரிவாக்குகின்றன.வான் பொய்த்ததால், வாழ்வு பொய்த்த விவசாயியின் வாழ்வில்,குறுகிய காலத்தில் நல்ல மகசூல் என்ற பெயரில், மரபணு மாற்றப்பட்ட B.T கத்திரிக்காய்களும், வாழைப்பழங்களும்,மாம்பழங்களும்- Monsanto மான்சான்ட்டோ எனப்படும் மரபணு மாற்றப் பற்ற விதைகளும் இந்திய விவசாய சந்தைகளுக்குள் ஊடுருவத் துவங்கியுள்ளன.இவற்றை ஆரம்ப நிலையிலேயே, வேரோடும்--வேரடி மண்ணோடும் விரட்டியடிக்க வேண்டியது நம் பொறுப்பு.ஏனெனில் நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,
மனிதனின் துணையின்றி தேனீக்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து விடும்.ஆனால் தேனீக்கள் இல்லையேல் மனித இனம் நான்கே ஆண்டுகளில் துடைத்தெறியப்பட்டு விடும்.
பி.கு: " Bee Movie " என்றொரு Animated English Movie உள்ளது.அதை பாருங்கள்.ஒரு தேன்கூட்டின், தேனீயின் வாழ்வை மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் படம்.


Yours Happily 

Jc.Dr.Star Anand Ram
www.v4all.org 

Tuesday, April 23, 2013

அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்


இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?


01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.


06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.







உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்.


Urs 

Star Anand