Thursday, November 20, 2014

நான் இவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேனே! - இயக்குனர் மிஸ்கின்

வாசிப்பின் அவசியம்?
கண் இருப்பவர்களுக்கும், கண் இல்லாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசம்தான்.
சினிமாக்களைப் பார்த்து மட்டுமே சினிமாவினைக் கற்றுக்கொள்ள முடியும் என்று எப்படி நினைக்கிறார்கள். தமிழ்ச்சினிமாவில் அதிகமாக படித்தவர் பாலுமகேந்திரா. அந்தப் பெரிய ஆலமரத்திலிருந்துதான் பாலா, ராம், சீனு ராமசாமி , வெற்றிமாறன் போன்றோரெல்லாம் வந்திருக்கின்றனர். ’ஸ்ரீதர்’, நிறைய படித்தவர். முதலில் தமிழ்ச்சினிமா எடுத்த ”எல்லீஸ் ஆர் டங்கன்”, மிகவும் படித்தவர். பாலச்சந்தர் நிறையப்படித்தவர். ஆகையால் படிப்பு மிகவும் அவசியம். உடலில் சிகிச்சை செய்பவர் மருத்துவர், ஆனால், மனதளவில் சிகிச்சை செய்பவர் தான் இயக்குனர். ஒரு கதாசிரியனை நான் சமூகத்தின் மருத்துவர் என்றுதான் சொல்வேன்.
இந்தச் சமூகம் ஏன் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறது. எதற்கு அனுப்புகிறார்கள்? யாருமே படிக்காதவர்களாகயிருந்தால் இந்த உலகம் எப்படியிருக்கும்? உங்களுக்கு வீடு கட்ட வேண்டுமென்றால், அந்த வீட்டிற்கு கட்டுமானப் பொறியியலாராக ஒரு படித்தவரைத் தேடுகின்றனர். வீட்டிலிருக்கின்ற கர்ப்பிணியின் பிரசவத்தின் போது ரோட்டில் போய்க்கொண்டிருக்கின்ற யாரோ ஒருவரை பிரசவம் பார்க்க அழைப்பதில்லை. இது மாதிரியான இக்கட்டான சூழலில் மட்டும் ஏன் படித்தவர்களிடம் செல்கிறோம். பின்னர் சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் படிக்க கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்?.
எனக்குத்தெரிந்த இயக்குனர்கள் சிலர் சொல்வார்கள், குமுதமும், ஆனந்தவிகடனும் மட்டுமே படித்தால் போதும் என்று. இயக்குனர்களுக்கு படிப்பு அவ்வளவு அவசியம். நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை இந்தப் படிப்பு எனக்கு ஒவ்வொரு நாளும் சொல்லித்தருகிறது. ஒவ்வொரு நாளும் படித்து முடித்த பின்பாக நான் இவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேனே! என்று என்னை அடையாளம் கண்டுகொள்கிறேன். படிப்பு அவ்வளவு அவசியம்.
-இயக்குனர் மிஸ்கின்
me 2 same idiot முட்டாளாக - day by day

No comments:

Post a Comment