Showing posts with label team building program in chennai. Show all posts
Showing posts with label team building program in chennai. Show all posts

Sunday, November 1, 2015

தேர்ந்தெடுக்கும் திறன்

தேர்ந்தெடுக்கும் திறன்.

தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன். அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.

நடு ரோடு, காருக்கு அடியில், வீட்டு வாசல் போன்ற இடங்களையே அது தேர்ந்தெடுக்கிறது.

இது போன்ற இடங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது இயலாது. ஒவ்வொரு சப்தத்திற்கும் தலை உயர்த்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.  நீண்ட நிம்மதியான தூக்கம் என்பது அந்த நாய்க்குக் கிடையாது.  

கேட்டைத் திறந்தால், காரை ஸ்டார்ட் செய்தால், ஏதாவது வண்டிகள் வந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வாண்டுகள் கல்லெடுத்து அடித்தால் என எப்போதும் ஏதாவது ஒரு ஆபத்து அதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் நாய் அதுபோன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கிறது.   இங்கு தெரு நாய்களைப் போன்ற பாவப்பட்ட ஜீவன்கள் வேறெதுவும் கிடையாது.

“நாய அடிக்கற மாதிரி அடிச்சுப்போட்டுடுவேன்” என்பது சொல் வழக்கு. இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் பிராணிகளில் நாய்தான் முதலிடத்தில் உள்ளது. அதை அடித்தால் கேட்பதற்கு யாருமே இல்லை.   

குடல் சிதறி, மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் நாயின் உடல் மேல் அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி, பனிரண்டாம் வகுப்பில் ஹெர்பேரியத்திற்காக செம்பருத்தி போன்ற சில பூக்களைப் பறித்து, நோட்டுப் புத்தகத்தில் வைத்து அழுத்தி தட்டையாக்கி விடுவதைப் போல, அந்த நாயின் உடல் தரையோடு தரையாக தட்டையாக்கப்பட்டு தார் ரோட்டில் ஒட்டிக் கிடக்கும் காட்சிகள் நாம் அன்றாடம் காண்பவை.

இதற்குக் காரணம் நாயிடம் தேர்வு செய்யும் திறன் இல்லாததே. எந்த இடத்தைத் தேர்வு செய்தால் யாருடைய தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கலாம் என அதற்குத் தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.

நாம் மட்டும் என்ன, இளைத்தவர்களா?

மனிதர்களில் கூட பலருக்கு தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போவதால் அந்த நாயைப் போலவே நிம்மதியின்றி அலைகின்றனர்.

அந்தத் திறன் இல்லையானால் அது கிட்டத்தட்ட நாய் வாழ்க்கைதான்.   கடந்தகால அனுபவம், தற்கால சூழ்நிலை இவற்றைக் கொண்டு எதிர்கால விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதைக் கணித்து சரியானவற்றை தேர்ந்தெடுத்தால் அந்த நாயைப் போல துன்பப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்தத் திறன் இல்லாததால் மனிதன் செய்யும் தவறுகள் ஏராளம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய தவறு செய்கிறான். பின்பு வாழ்க்கையையே போர்க்களமாய் மாற்றிக் கொள்கிறான்.  

காதலின் போது இது தெரிவதில்லை. ஒரு சாத்வீக குணம் கொண்டவன் ரஜோ குணப்பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறான். ஆண்-பெண் கவர்ச்சி மறைந்தவுடன் அங்கு உண்மை முகம் வெளிப்படத் தொடங்குகிறது.  வாழ்வு நரகமாகிறது.

ஒரு தொழில் துவங்கும்போது யாரோடு பார்ட்னர் சேரலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் பார்னர்ஷிப் தொழில் செய்து பின்னர் ஏமாந்துபோய் புலம்புகிறான்.

சிட்பண்ட்டில் யாரிடம் பணம் போடலாம் என்பதை தேர்ந்தெடுக்கத்தெரியாமல் யாரோ ஒருவரிடம் போட்டு ஏமாந்து போகிறான்.

சிட்பண்டில் யாரைச் சேர்க்க வேண்டும் எனத் தெரியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடி விடும் நபர்களைச் சேர்த்து அவதிப்படுகிறான்.

10 ரூபாய் வட்டி தருகிறேன் எனச் சொல்பவனிடம் பணம் கொடுக்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கத் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாறுகிறான்.

ஒருவரிடம் எந்த அளவுக்குப் பழகலாம் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகப் பழகி முடிவில் அது விரோதத்தில் முடிகிறது.

வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் கயவர்களை அனுமதித்து துன்பத்தில் சிக்கிக் கொள்கிறான்.

இதுபோல இன்னும் ஏராளமாய் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாய் எப்படி தூங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடத்தை தவறாகத் தேர்ந்தெடுக்கிறதோ, விளைவுகளை அறியாமல் தேர்ந்தெடுக்கிறதோ, அதே போல்தான் நாமும் விளைவுகளை அறியாமல் பல விஷயங்களை செய்துவிட்டு விழிக்கிறோம்.

தேர்ந்தெடுக்கும் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக்கொள்ளவேண்டும். நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலே தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  

நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலானவை நாமே தேர்ந்தெடுத்துக்கொண்டவையே யொழிய இறைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.  

எந்த அளவுக்கு நம் மனதில் பேராசை, சினம், பொறாமை, கடும்பற்று, உயர்வு-தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்கள் அதிகமாக உள்ளனவோ, அந்த அளவுக்கு நம் தேர்ந்தெடுக்கும் திறன் குறைந்து போய் துன்பத்தில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.  

உதாரணமாய் மிகக் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது பேராசை.  இந்தப் பேராசை பத்து ரூபாய் வட்டி தருபவனை நிச்சயமாய் உங்களிடம் ஈர்க்கும்.  மனம் முழுக்க பேராசை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போய்விடும். பின்பு தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து துன்பத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  பத்து ரூபாய் வட்டி தருகிறேன் என்பவனே தவறான ஆள்தானே...

ஆகவே நிதானத்தின் மூலம் நல்ல சிந்தனைத் திறனையும், நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொண்டால், தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  துன்பத்திற்கும் வாய்ப்பில்லை.

குழந்தைகளுக்கு இந்த நுட்பத்தை இப்போதிருந்தே கற்றுக்கொடுப்போம்.

Wednesday, October 28, 2015

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.
இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.
அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !!
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!

Monday, October 26, 2015

உங்களுடைய ஆசை என்ன? எதைத் தொட்டாலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பது தானே?

☆☆☆☆ வெற்றி ☆☆☆☆☆

உங்களுடைய ஆசை என்ன? எதைத் தொட்டாலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பது தானே?

நீங்கள் வெற்றியை மட்டுமே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராளமான பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக் கொள்ளும்.

இலக்கின் மீது ஒரு கண்ணை பதித்துக் கொண்டால், அவன் பாதி குருடனாகிறான் என்கிறது ஜென் தத்துவம்.மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்?

அப்படி அரைகுறை கவனத்துடன் செயலாற்றாதீர்கள்.இந்த கணம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட்டிபிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாக தொட்டுவிட முடியும்.

புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை.இதை விளக்க ஜென்னில் ஒர் அழகான சம்பவம் உண்டு.

சான்ஸூ  என்றொரு ஜென் குரு இருந்தார்.மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம்  புதிதாய் சேர்ந்திருந்தச் சீடன் ஒருவன் " இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா? " என்றான்.
                  
       அதற்கென்ன பத்து வருடங்களில் தயார் செய்து விடுகிறேன் என்றார் குரு.என்னது பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே மற்றவர்களை விட இரண்டு மடங்கு உழைக்கத் தயாராயிருக்கிறேன்.

" அப்படியானால் இருபது வருடங்களாகும் " என்றார் சான்ஸூ.

சீடன் திகைத்தான். போதாது என்றால் இன்னும் நான்கு மடங்கு கடுமையாக உழைக்கிறேன் என்றான்.

அப்படிச் செய்தால் நாற்பது வருடங்களாகுமே என்றார் குரு. ஆம்! உங்களை வருத்திக் கொள்ள வருத்திக் கொள்ள...நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலமாகும். இதைத் தான் சான்ஸூ அந்த சீடனுக்கு புரிய வைத்தார்.

கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம் ஆனால், அதன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.

உலகின் அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்த பொழுது தான் நிகழ்ந்திருக்கின்றன.

மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான் ஆப்பிள் கீழே தரையில் விழுவதைக் கலனித்த நியூட்டன் புவிஈர்ப்பு பற்றிய விதியைக் கண்டு பிடித்தார்.

'பாத் டப்'பில் ஓய்வாகக் குளித்துக் கொண்டிருக்கும் போதுதான், மிதப்பது பற்றிய விதிகளைக் கண்டுணர்ந்த்தார் ஆர்க்மிடீஸ்.

கவனித்துப் பாருங்கள் விளையாட்டில்கூட வெற்றியை நினைத்து அதிகப் படபடப்புடன் விளையாடும் குழுதான் பெரும்பாலும் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

வெற்றி...வெற்றி...என்று உங்களை நீங்களே வருத்திக்கொள்ளும் சந்தர்பங்களில் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.

" வெற்றியைப் பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு மன அமைதியுடன் ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்யும் போது தான் மூளை தன் உச்ச திறனுடன் செயலாற்றி வெற்றியை சுலபமாய் ஈட்டித்தரும் என்கிற உண்மையை நீங்கள் உணரமுடியும் "

Saturday, October 24, 2015

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே

ஒருநாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று
கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் 
உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி 
ஏசினான். 
-
அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் 
சென்று கொண்டிருந்தார். பின்னாலேயே வந்து 
திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க 
முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் 
இருந்தது. 
-
என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா 
இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு 
சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று 
கேட்டான்.
-
கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு 
பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் 
அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் 
யாருக்குச் சொந்தம்?"
-
"கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். 
இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத்
திட்டியவன்.
-
"ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய 
ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே 
அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய 
கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, 
அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான். ,
தகுதியில்லாதவன் நம்மை ஏளனம் செய்யும் பொழுது
புத்தரைப் போல புன்னகை செய்து நகர்வதே நலம்
துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

- சுவாமி விவேகானந்தர்.
www.v4all.org

Thursday, October 15, 2015

"ரயிலில் கிடைத்த பாடம்..." ஒரு உண்மை சம்பவம்.

"ரயிலில் கிடைத்த பாடம்..."
ஒரு உண்மை சம்பவம்.

கன்னியாகுமரி முதல் மும்பை செல்லும் அதிவிரைவு புகைவண்டி...

இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில், குப்பை பொறுக்கும் ஆள் போன்று, கையில் ஒரு கோனிப்பையுடன் ஒருவர் பெட்டிக்கு வெளியே, பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து பயணிக்க...

சந்தேகத்துடன், 
“என்னங்க! பக்கத்து நிலையத்தில இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன்..."

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல?”

“இல்ல சார், அங்க இருந்தா நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று டிக்கெட்டை காட்டினார்.

"என்ன தொழில் பண்றீங்க?”

அவரது தொழிலை பற்றி விளாவாரியாக சொல்ல சொல்ல நான் பிரமித்துப் போனேன்...

அவர் சொன்னதின் சுருக்கம்...

'அண்ணன் ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார்...

வேலை என்னவென்றால்... 

கன்னியாகுமரியில் ரயிலில் ஏறி, முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும், வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும்.

முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள், எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள்.

இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது...

அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம் (ரூ.4,000)...


எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம் (ரூ.32,000)...

மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ.2,40,000)...

செலவு நாப்பதாயிரம் (ரூ.40,000))...

மாதவருமானம் இரண்டு லட்சம் (ரூ.2,00,000)...

வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ.24,00,000)...

இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும், இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன...' என்றார். 

நான் மலைத்து நின்றேன்...

கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான்,  ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன்.

ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து, கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்...

அன்று நான் இருந்த ஏ சி பெட்டி, கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது.

எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம்...

அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்...

மேற்படி பதிவு உணர்த்தும் நீதிகள்...

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்...

Thursday, September 3, 2015

How does a Desire arise?

How does a Desire arise?
1. A desire arises with the memory of a pleasant experience and past impressions.
2. A desire might arise through listening.
3. A desire can be triggered through the association of certain people and a place.
4. Someone else's need or desire may manifest in you as your own desire, e.g. when someone is hungry, you get a desire to feed them or someone wants to talk to you and you get a desire to talk to them.
5. The destiny or a happening in which you have a part to play may trigger a desire of which you have no idea. For example, a gentleman in Quebec, Canada kept making roads and working on a farm for 30 years, not knowing for what -- for it was destined to become our Canadian Ashram.
www.v4all.org

Wednesday, September 2, 2015

சித்தர்கள் அழியா தேகத்துடன் மரணமில்லா

சித்தர்கள் அழியா தேகத்துடன் மரணமில்லா
பெரு வாழ்வை அடைவதற்கு மந்திரம்(ஓலி),
தந்திரம், யந்திரம், ஔசதம் என்கிற நான்கு
உபாயங்களைக் கடை பிடித்தனர் என்பது
குறிப்பிடத் தக்கது. ஒலி அலைகளை
முறையாகப் பயன்படுத்தினால் அளவற்ற காந்த
ஆற்றலைப் பெற முடியும். 11 மனிதர்கள்
எழுப்பும் ஒலி அலைகள் மூலம் பெறப்படும்
காந்த சக்தியினால் 150 கிலோ எடையுள்ள ஒரு
கல் உருண்டையை 15 வினாடிகள் அந்தரத்தில்
நிற்கச் செய்ய முடியும். இதற்கு ஆதாரம்
இருக்கிறது. விஞ்ஞானிகள் ஆராய்ந்து ஒத்துக்
கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பூனாவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள சிவபூர் மலைச்சரிவில் அமைந்துள்ள
குவாமர் அலிதர்வேஷ் என்ற தர்காவில் பீரங்கிக்
குண்டு போன்ற வடிவமுள்ள ஒரு 150 கிலோ
எடையுள்ள கல் இருக்கிறது. ஒரே நேரத்தில் 11
பேர் சூழ்ந்து நின்று கொண்டு தங்கள் கை
விரல்களால் அந்தக் கல்லை தொட்டபடி, மூச்சு
விடாமல் குவாமர் அலிதர்வேஷ் என்று சத்தமாகச்
சொல்லும் பொழுது அந்தக் கல்லானது
தலைக்கு மேல் எழும்பி 15 வினாடிகள் நின்று
விட்டு விழுகிறது. ஒலி அலைகள் மூலம் எழும்
காந்த ஆற்றலும், புவியீர்ப்பு விசை எனும் காந்த
ஆற்றலும் மோதும் பொழுது இது நிகழ்கிறது.
&v=MjCVsHhnX6U
அது போலவே நாம் விடாமல் உச்சரிக்கும்
மந்திரங்கள் மூலம் அளப்பரிய காந்த ஆற்றல்
கிடைக்கிறது. காந்த ஆற்றலே ப்ரம்ம
சக்தியாகும். மனச் சலனத்திற்கு காரணமாக
இருப்பது ப்ரம்ம சக்தியாகிய ப்ராணனின்
குறைபாடே ஆகும். இதைத்தான் ப்ராணனின்
சலனம் மனதின் சலனம் என்பார்கள். மந்திரங்களை
உச்சரித்து ப்ராண சக்தியை பெருக்கிக்
கொள்ளும் பொழுது மனமும் வலிமை பெற்று
சலனமற்ற நிலைக்குச் செல்கின்றது. எளிதில்
சித்தத்தின் ஏகாக்ரதை வாய்க்கிறது. எனவே
மந்திரங்களுக்கு வலிமை இருக்கிறது என்பது
ஆதார பூர்வமான உண்மையாகும். மந்திரங்கள்
மூலம் நம் ஊழ் வினைகளுக்கு பரிகாரங்கள்
செய்து கொள்ள முடியும் என்பது உண்மையே
ஆகும். இந்த ஓலி தத்துவ அடிப்படையில்தான்
தற்காலங்களில் பெயர் மாற்றம் செய்து மேன்மை
அடையலாம் என்று சொல்கிறார்கள்.

Saturday, August 29, 2015

தன் மீதான முழு நம்பிக்கை

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 சங்கதிகளே காரணமாக இருக்கின்றன.


1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி 
2.வரையறுக்க்ப்பட்ட இலக்கு
3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4.சரியான கண்ணோட்டம்
5.தன் மீதான முழு நம்பிக்கை

1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி:

நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும்.உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம்தான் இறுதியில் ஜெயித்தது.

2.வரையறுக்கப்பட்ட இலக்கு:

தீர்க்கதரிசனமான குறிக்கோளை(clearly defined goal)மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்.'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி,திறமை,ஆர்வம்,ஈடுபாடு,ஞானம்,உழைப்பு மற்றும் நம்மால் எம்பக்கூடிய உயரத்திற்குள்(சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும்.

3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:

நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத்தான் குறை சொல்கிறோம்.இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும்.அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன்.ஹானஸ்டாக இன்றோ,நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன்.சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால்,அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று.மாற்று வழி புலப்படும்.இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.

4.சரியான கண்ணோட்டம்:

நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திற்கு சமமானது. அந்த பயணத்தை தொடங்கும் போதும்,பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.

5.தன் மீதான முழு நம்பிக்கை:

வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள். 'நம்மால் முடியும்' என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள்.

' இது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமில்லை; நான் நினைத்தது நடக்கப் போகிறது; என்னை சுற்றி உள்ளவர்கள் எனது வெற்றிக்கு துணை புரிகிறார்கள், எனது வெற்றிகளை பாராட்டுகிறார்கள்' என்று திரும்பத் திரும்ப மனக்கண் முன்பாக உங்களது இலக்கை நிறுத்தி வைத்து கற்பனை செய்யுங்கள்.

-jesu raj-chennai

Thursday, August 27, 2015

உங்களுடைய விற்பனைகள் பற்றி முன்வைக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

உங்களுடைய விற்பனைகள் பற்றி முன்வைக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
ஒரு நபராக நீங்கள் விற்பனை விளக்கக்காட்சியை முன்வைக்கும் போது, உங்களுடைய வளங்களை வாடிக்கையாளர்களிடம் பல நிலைகளில் ஒரே நேரத்தில் கூறுவதற்கு அபூர்வ வாய்ப்பு கிடைக்கிறது. உங்களுடைய புறத்தோற்றம், சொற்களை கையாளுதல், உங்களின் பொதுவான நடத்தை, ஆர்வ நிலை ஆகிய அனைத்தும் நீங்கள் திறனும் ஆளுமையும் உடையவரா அல்லது பலவீனமான செயல்திறமற்றவரா என்பதை நிர்ணயிக்க மிகவும் உதவும். எந்நேரமும் இரு விற்பனை விளக்கக்காட்சிகளும் ஒன்று போலவே இருப்பதில்லை (அல்லது இருக்க வேண்டும்). ஆனால், அனைத்து வெற்றிகரமான விளக்கக்காட்சிகளிலும் பொதுவான விடயங்கள் சில உள்ளன. உங்களுடைய அடுத்த விளக்கக்காட்சியை மிகவும் சிறந்ததாக ஆக்க இவற்றை பின்பற்றவும்:
சுறுசுறுப்பாக இருங்கள்
உங்களை நீங்களே கவர முடியாவிட்டால், வேறு யாரையும் உங்களால் கவர முடியாது. நீங்கள் வழங்குவதை நம்புங்கள் மற்றும் அந்த நம்பிக்கையை உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்காக வேகமாக அல்லது சத்தமாக பேச வேண்டிய அவசியமில்லை. உயிரோட்டம் மிக்கதாகவும் துல்லியமாகவும் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் மற்றும் கேள்விகளைக் கேளுங்கள்.
எளிமையாக பேசுங்கள்
தெளிவற்ற அல்லது கவர்ச்சியான சொற்களைப் பயன்படுத்தி உங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பிரகாசிக்க முயற்சிக்காதீர்கள். உடனடியாக புரியாத மொழியை பெரும்பாலும் மக்கள் அதிகம் விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலும் அவர்கள் குழப்பமடைகிறார்கள், வெறுப்படைகிறார்கள், அல்லது சலிப்படைகிறார்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை முடிந்த அளவுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் சொல்லுங்கள். நீங்கள் நீங்களாகவே இருந்து வழக்கமாகப் பயன்படுத்தும் சொற்களையே பயன்படுத்தி கதையுங்கள்.
தொடர்ந்து கவனித்துக் கொண்டிருங்கள்
திறன் மிக்க மற்றும் வெற்றிகரமான விளக்க காட்சி கேள்விகளும் கருத்துப்பரிமாற்றம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து வழங்கி வரும்போதே உங்கள் தொடர்பு முறைகளை தொடர்ந்தும் கண்காணித்து வாருங்கள், "அது இதுவரை தெளிவாக இருக்கிறதா?" "பின்வருபவை மிகவும் முக்கியமானவை, இவை சரியாக உள்ளதா?"
முகத்தைப் பார்த்து பேசுங்கள்
யாரேனும் ஒருவரின் முகத்தைப் பார்த்து பேசும்போது அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் எளிதாக இருக்கும். விளக்கக்காட்சி என்பது உரையாடலைப் போன்றதே என்பதை மறக்காதீர்கள். முக்கிய நபர்கள் என்று நீங்கள் கருதும் ஓரிரு நபர்களை மட்டும் நோக்கி பேசாமல் அறையில் உள்ள அனைவரின் முகங்களையும் பார்த்து பேசுங்கள். யார் முடிவெடுப்பதில் அதிக அதிகாரம் உடையவர், அல்லது மற்றவர்கள் அதற்கு எந்த அளவுக்கு பங்களிக்க முடியும் என்பதையெல்லாம் நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள் என்பது சந்தேகம். உங்கள் பார்வையாளர்களில் சிலரை மட்டும் பிரித்து நோக்குவது எந்த அளவுக்கும் நன்மைளிக்காது.
கேட்பவர்களாக சிந்தியுங்கள்
உங்கள் விளக்கக்காட்சியானது இனிமையானதாகவும், தகவல்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும், நீங்கள் பேசும் நேரத்திலும் கவனமாக இருங்கள். ஒரு பார்வையாளராக உங்களைக் கருதி, "நான் இப்போது எதனை கேட்டுக் கொண்டிருக்கிறேன் மற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்?" உங்கள் வாடிக்கயாளருக்கு உங்களைப் பற்றி எதுவும் சுவாரஸ்யமாக இருக்கப் போவதில்லை அல்லது நீங்கள் விற்பனை செய்வது சுவாரஸ்யமாக இருக்கப் போவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அவர் தனக்குள்ளே கேட்டுக்கொள்ளக் கூடிய பின்வரும் கேள்விகளை நீங்களே கேட்டு அவருக்காக அக்கறை கொள்வதை வெளிப்படுத்துங்கள்: "அதனால் என்ன?" "இதனால் எனக்கு என்ன பயன்?" மற்றும் "நான் எப்படி நன்மையடைவேன்?" போன்ற கேள்விகளைக் கேட்டு.
சிறந்த முறையில் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள்
உடனடியாக வெற்றிகரமான விளக்கக்காட்சியை வழங்க முடியும் என்று நினைக்காதீர்கள். உங்கள் விளக்கக்காட்சிகளை கவனமாக திட்டமிடுங்கள், உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், நுட்பங்களை வளர்த்துக் கொள்ளவும் முன்னரே பல முறை ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை கவனியுங்கள். ஸ்லைடுகளையும் சார்ட்களையும் பயன்படுத்தினால், அவை சரியான வரிசையில் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் கேட்க வாய்ப்புடைய சிக்கல்கள் அல்லது கேள்விகளை நீங்களாகவே எழுப்ப முயற்சியுங்கள். அவற்றுக்கு முன்கூட்டியே பதில்களை தயாரித்து கொள்ளுங்கள்.
நேர்த்தியாக உடையணியுங்கள்
இன்று, அலுவலகங்களுக்கே உடை கட்டுபாடுகள் இல்லாத நிலையில் சரியான ஆடையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். குறைந்தது நீங்கள் சந்திக்கவிருக்கும் மக்கள் அணிந்திருக்கும் அளவுக்கு நேர்த்தியான உடையையாவது நீங்கள் அணிந்திருக்க வேண்டியது அவசியம். அளவுக்கதிக நேர்த்தியுடன் உடையணிந்திருப்பதைத் தவிர்ப்பது எப்போதும் நல்லது. குழப்பமாக இருந்தால், பாரம்பரிய வியாபாரச் சூழலில் அணியும் வழக்கமான ஆடையை அணிந்து செல்லுங்கள்.
இனிமையாக முடித்துவையுங்கள்
வெற்றிகரமாக முடித்தாக நினைத்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், மேலும் தொடர்புகளுக்கான பிரவேசங்களைத் திறந்து விடுங்கள். உங்கள் பார்வையாளர்கள் கழித்த நேரத்துக்கு நன்றி செலுத்தியே எப்போதும் விளக்கக்காட்சியை முடியுங்கள்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.www.v4all.org


Friday, August 21, 2015

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு

இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற ஒரு தமிழர் நோபல் பரிசு வாங்கிய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா?
தன்னுடைய மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை “மரணத்தின் வர்த்தகன் மரணம்” என்று பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக தவறாக அவரது மரணச் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியை முழுவதும் ஆல்ப்ரட் நோபல் படித்துப் பார்த்தார்.
“மனிதர்களை விரைவாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டு பிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்டர் ஆல்ப்ரட் நோபல் நேற்று காலமானார்” என்பது தான் அந்தச் செய்தியின் முக்கியக் கருவாக இருந்தது. ஆல்ப்ரட் நோபலை அந்தச் செய்தி மிகவும் பாதித்தது. “நான் இறந்த பின் உலகம் என்னை இப்படியா நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்?” என்ற ஒரு கேள்வி அவர் மனதில் பிரதானமாக எழுந்தது. அவர் மனம் தன் வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.
அவருடைய தந்தை இம்மானுவல் நோபலும் மிகச் சிறந்த அறிவாளி. இப்போது நாம் உபயோகிக்கும் ‘ப்ளைவுட்’டைக் கண்டுபிடித்தது இம்மானுவல் நோபல் தான் என்று சொல்கிறார்கள். அத்தகைய தந்தைக்குப் பிறந்த ஆப்ல்ரட் நோபல் தந்தையைக் காட்டிலும் பலமடங்கு அறிவு படைத்தவராக விளங்கினார். பதினேழு வயதிற்குள் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், ப்ரெஞ்சு, ரஷிய, ஜெர்மன், சுவீடிஸ்) நல்ல புலமை பெற்றிருந்தார். (பிற்காலத்தில் இத்தாலிய மொழியையும் படித்தார்) வேதியியல், பௌதிகம் இரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு ஆங்கில இலக்கியத்திலும் நல்ல புலமை இருந்தது. மகனின் இலக்கிய தாகம் அவருடைய தந்தைக்கு அவ்வளவாக ரசிக்காததால் வேதியியல் பொறியாளராக மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு பல்கலைகழகத்தில் அவருடன் படித்த இத்தாலிய மாணவர் அஸ்கேனியோ சொப்ரேரோ கண்டுபிடித்த நைட்ரோக்ளிசரின் என்ற வெடிமருந்து திரவம் ஆல்ப்ரட் நோபலை மிகவும் ஈர்த்தது. தன் அறிவுத் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிறகு ஆல்ப்ரட் நோபல் வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு முறை அவருடைய தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் அவருடைய இளைய சகோதரர் உட்பட பலர் மரணமடைந்தனர். ஆனாலும் அவருடைய ஆர்வம் அந்தத் துறையில் குறையவில்லை. பின்னர் அவர் டைனமட்டைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு வெற்றியும், செல்வமும் அவரிடம் பெருக ஆரம்பித்தன.
இத்தனை சாதனைகள், வெற்றிகளுக்குப் பின்னால் தன் மரணத்திற்குப் பிறகு “மரணத்தின் வர்த்தகன்” என்று தானா தன்னை உலகம் நினைவுகூர வேண்டும் என்ற கேள்வி அவரை நிறையவே நெருடியது. குறுகிய காலமே அவருக்குக் காரியதரிசியாக இருந்த பெர்தா வோன் சட்னர் என்பவரும் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள். பலர் அந்த ஆஸ்திரியப் பெண்மணியை அவருடைய காதலி என்று கூறினாலும் அந்தப் பெண்மணி அவரைப் பிரிந்து வேறு ஒருவரை விரைவிலேயே மணந்து கொண்டாள். ஆனாலும் அவர்களுடைய நட்பு கடிதப் போக்குவரத்து மூலம் அவருடைய மரணகாலம் வரை நீடித்தது. அந்தப் பெண்மணியும் அமைதியின் முக்கியத்துவத்தையும், போரின் கொடுமைகளையும் குறித்து அவரிடம் உறுதியாக சொல்பவராக இருந்தார். அந்தப் பெண்மணி எழுதிய “ஆயுதங்களைக் கைவிடுங்கள்” என்ற புத்தகம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்றது.
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு
அந்தக் கேள்வியும், அந்தத் தோழியின் நட்பும் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய ஆல்ப்ரட் நோபலைத் தூண்டியது. உலகம் தன்னை ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகவே நினைவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை சேர்த்த சொத்துகளை உலக நன்மைக்குப் பயன்படும் மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அளிக்கும் நோபல் பரிசுகளாக வருடாவருடம் அளிக்கப் பயன்படுத்துமாறு உயிலை எழுதினார். 1896ஆம் ஆண்டு ஆல்ப்ரட் நோபல் காலமானார். ஆரம்பத்தில் வேதியியல், பௌதிகம், மருத்துவம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அமைதிக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக பொருளாதாரமும் நோபல் பரிசிற்கான துறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1901 முதல் ஆரம்பமான நோபல் பரிசுகள் இன்றும் உலகத்தின் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகின்றன. (ஆல்ப்ரட் நோபலின் தோழியும், அமைதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்தவருமான பெர்தா வோன் சட்னர் 1905 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றது ஒரு சுவாரசியமான விஷயம்.) உலகம் ஆல்ப்ரட் நோபலை அவர் நினைத்தபடியே இன்று நல்ல விஷயத்திற்காகவே நினைவு வைத்திருக்கிறது.
ஒரு மனிதரை ஒரு கேள்வி அழியாப் புகழ் பெற வைத்ததென்றால் அந்தக் கேள்வி மிக உன்னதமானது தானே. இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக் கொண்டாலென்ன? உலகம் நம்மை நம் மறைவிற்குப் பின்னும் எப்படி நினைவு வைத்திருக்க வேண்டும்? இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில் நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம். நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா?

Thursday, August 20, 2015

மூலதனமான தன்னம்பிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் மகளிர் மேனிலைப்பள்ளியில் உதவியாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது எனக்குள் ஒரு உறுதியை எடுத்துக் கொண்டேன். படிப்பை முடித்தவுடன் எந்தவித கஷ்டமும் இல்லாமல் அரசு பணி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்கு நன்றிக்கடனாக எந்த எதிர்பார்ப்பும் இன்று என்னிடம் பயிலும் மாணவர்களுக்கு சொல்லித் தருவதுடன் அவர்களை மேம்பாடையச் செய்ய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன்.
அந்தப் பள்ளியில் நான் பணியாற்றி 29 ஆண்டுகளில் நூறுசதவீதத் தேர்ச்சியையும், சராசரி மதிப்பெண்களில் அதிகபட்ச சராசரியையும் எனது பாடத்தில் வைத்திருந்தேன். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்த காலத்திலும் கூட என்னுடைய பாடத்தில் தேர்ச்சி சதவீதம் நூறுசதவீதமாக இருந்து கொண்டிருக்கிறது இன்றுவரை. மேலும் என் பாடத்தில் மாவட்ட அளவில் முதன்மையும், மாநில அளவில் முதன்மையும் கொடுத்திருக்கிறேன். இதற்குக் காரணம் என்னுடைய அர்ப்பணிப்பு உணர்வும், மாணவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு பாடம் எடுக்கும் திறமையும் தான்.
இப்படி 29 ஆண்டுகளைச் சிறப்பாகச் சென்று கொண்டிருந்த என் ஆசிரியப் பணியில் தலைமையாசிரியர் உயர்வு பெற்றேன். அப்போதே ஒரு முடிவெடுத்தேன். எந்த வகையிலும் முன்னேற்றமடையாத ஒரு பள்ளிக்குத் தலைமையாசிரியராகச் சென்று அந்தப் பள்ளியை பிரமாதமான பள்ளியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்று. அப்படி பார்த்தபோது தற்போது நான் பணியாற்றும் பள்ளி மிகவும் பின்தங்கிய தேர்ச்சி சதவீதத்தையும், மாணவர்கள் பலர் ஒழுங்கீனமாகவும் இருப்பதாக அறிந்தேன். நமக்கான பள்ளி இதுதான் என்று முடிவு செய்து தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து கொண்டேன்.
கோவை மாவட்டம் இராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர் திரு. ராமதாஸ் அவர்கள் இந்தாண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார். கோவை மாவட்டத்தில் சிறிய ஊரான இருகூர் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் அதே ஊரில் உள்ள மேனிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் உயர்கல்வியான கல்லூரிப் படிப்பை சென்னையில் உள்ள பிரசிடென்சி காலேஜில் முடித்தவர். ஆசிரியர் பணியை முடித்தவுடன் கோவை மாவட்டத்தில் இராமகிருஷ்ணாபுரம் மகளிர் பள்ளியில் உதவியாசிரியராகப் பணியில் சேர்ந்த அவர் 29 ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு, தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று இப்பள்ளிக்கு வந்து, இன்று பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை 58 சதவீதத்திலிருந்து 93 சதவீதத்திற்கு உயர்த்தி மாநகராட்சி பள்ளிக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றிக் காட்டியுள்ளார்.
இத்தகைய அளப்பரிய சாதனையைத் தொட எவ்வளவு தூரம் பயணம் செய்தார், அப்பயணத்தில் பெற்றஅனுபவங்கள் முதலியவற்றைநம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“முதலில் இந்த விருதை எனக்களித்த தமிழக அரசுக்கும், விருதுக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நமக்கு இது கிடைக்க வேண்டும் என்று எண்ணி செயல்பட மாட்டேன். அப்படித்தான் இந்த விருதுக்காக நான் உழைக்கவில்லை. நான் பெற்றகல்வியை, அறிவை என் மாணவர்கள் பெறவேண்டும் என்று தான் உழைத்தேன்.
நான் பள்ளியில் படிக்கும்போதே கல்லூரியை சென்னையில் உள்ள பிரசிடென்சி காலேஜில் தான் படிக்க வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அந்த இலக்கை அடையவேண்டும் என்று கடுமையாக உழைத்தேன். பலன் கைமேல் கிடைத்தது. என் எண்ணத்தைப் போல் அதே கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன் விவேகானந்தர் சொன்னதைப் போல் நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆவாய் என்றகூற்றை, கல்லூரி படிப்பு முடித்தவுடன் பி.எட். படிப்பில் சேர்ந்தேன்.
ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் சில மாதங்களிலேயே பள்ளியில் சேர்ந்தவுடன் உள்ளூர் பெருமக்களிடமும், மாணவர்களின் பெற்றோர்களிடமும் சில உறுதிமொழிகளை வாங்கிக்கொண்டு, கல்வித்துறையின் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கும் பள்ளியாக உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்து பல கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். குறிப்பாக அப்போது மாநகராட்சியின் கமிஷனராக இருந்த திரு. அன்சுவ் மிஸ்ரா அவர்களின் சீரிய வழிகாட்டலால் பல மாற்றங்களைப் பள்ளியில் புகுத்தினேன். அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி என்று ஒரு குறிக்கோளை அடிப்படையாக வைத்துச் செயல்பட ஆரம்பிதேன்.
பெரும்பாலான மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்வியின் அவசியம் தெரியாமல் இருந்தது. முதலில் அவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறினோம். மாணவர்களுக்கு அதுவரை இருந்த படிக்கும் சூழலையும், அவர்களின் மனநிலைக்கு ஏற்ப கற்பிக்கும் முறையையும் கொண்டுவந்தோம். மாணவர்களுக்கு படிக்கும் சூழலை உருவாக்கும் பொருட்டு எக்கோலஜிக்கல் பேலன்ஸிக்காக பள்ளியில் கிட்டத்தட்ட 500 மரக்கன்றுகளை வைத்து வளர்த்தோம். பள்ளியின் சூழல் இப்படி மாற்றியமைக்கப்பட்டதால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து படிக்க ஆரம்பித்தனர். அதற்கு முன்பு வரை இருந்த வருகைப் பதிவும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இப்படி மாணவர்கள் கல்வி பயில ஆர்வமூட்டியதுடன் மாலைவேலையில் தனிப்பயிற்சியைப் பின்தங்கிய மாணவர்களுக்குக் கொடுத்தோம். எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைக்குழந்தைகள் என்பதால் மாலை வகுப்புகளுக்கு இலவசமாக சுண்டல் கொடுத்து பசியைப் போக்கி பாடத்தில் கவனத்தைச் செலுத்த வைத்தோம்.
விளையாட்டுப் பருவத்தில் உள்ள குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து அவர்களுக்கு ஏற்றவாறு பள்ளிப்பாடத்தை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களை பழக்கப்படுத்தியதுடன், கற்றலில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினோம். அதில் முதல் படியாக மாணவர்களை தரம் பிரித்தோம். பள்ளிக்கு விடுமுறையின்றி வரும் மாணவர்கள், பள்ளிப் பாடங்களை ஆர்வமாய் படிக்கும் மாணவர்கள் என்று தனித்தனியாகத் தரம் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் பாடங்களை எங்கள் ஆசிரிய பெருமக்களைக் கொண்டு நடத்தினோம்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு, எங்களின் பள்ளி மாணவர்களைவிட ஆசிரியர்கள் அதிக ஆர்வத்துடன் பாடங்களில் எப்படி புதுமையைப் புகுத்தலாம் என்று யோசித்து, அவற்றைசெயல்படுத்தினார்கள். அத்தகைய புதுமைக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் பரிசாக தேர்ச்சி சதவீதம் 58 சதவீதத்தில் இருந்து 93 சதவீதமாக உயர்ந்தது.
தொடர்ந்து புதுமைப்படுத்துதலில் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலில் கவனத்தைத் திருப்பினோம். மாணவர்களைக் கொண்டே நாற்றங்காலில் விதைகளை போட்டு, வளர்த்தி, நிலத்தில் அவற்றைநட்டுவைத்து வளர்க்கச் செய்தோம். இதனால் பள்ளியைச் சுற்றியும் மரங்களாகவும், நல்ல சுற்றுச்சூழலும் ஏற்பட்டது. தற்போது கூட 2000 மரக்கன்றுகள் நாற்றங்காலில் வைத்திருக்கிறோம். மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். மழைக் காலத்தில் அத்தனை மரக்கன்றுகளையும் மாணவர்களை வைத்தே நட்டுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
இதைத்தவிர மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பொருட்டு என்.சி.சி., என்.எஸ்.எஸ். விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்துவதுடன் அவற்றைஎன் மேற்பார்வையிலேயே கவனித்துக் கொள்கிறேன். இத்தகைய பயிற்சியை மாணவர்களுக்குத் தருவதால் உடல் ரீதியாக அவர்கள் பலமிக்கவர்களாவதுடன் மன ரீதியாகவும் தின்மை பெறுகிறார்கள்.
இத்தகைய பயிற்சிக்குப் பின்னர் மாணவர்களின் ஒழுக்கம் அதிகரித்ததுடன் கற்றலிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் 40, 50 என்று மதிப்பெண்கள் பெற்றமாணவர்கள் 70, 80 என்று பெறுவதைக் காணும்போது மேலும் மகிழ்ச்சி பொங்குகிறது” என்று தன்னுடைய அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே சென்ற தலைமையாசிரியர் திரு. ராமதாஸ் அவர்கள் பல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முன்னுதாரணமாக காட்சியளிப்பதற்குக் காரணம் தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களான திரு. காமராஜ், திரு. குமாரசாமி மற்றும் திரு. விஸ்வநாதன் ஆகியவர்களின் ஆளுமையும், கற்பித்தலின் வடிவமும் தான் என்றார். தொடர்ந்து இத்தகைய வெற்றிக்குக் காரணம் இப்பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் தான் என்றவர், தனிப்பட்ட முறையில் தனக்கு ஊக்கம் கொடுத்த தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தவர் தன்னுடைய எதிர்கால கனவான இப்பள்ளியின் தேர்ச்சி 100% சதவீதமாகவும், மாணவர்கள் மாநில அளவில் ரேங்கும் பெற உழைக்கத் தயாரானார். அவரின் எதிர்கால கனவு நனவாகி இதுபோல் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெறமுன்னேற்றத்தின் மூலதனமான தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

Thursday, August 13, 2015

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..




உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

வியாபார வெற்றி, காரிய சித்தி பெற சக்கரம்

வியாபார வெற்றி, காரிய சித்தி பெற சக்கரம்








Wednesday, August 12, 2015

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் வழிமுறை

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் வழிமுறை- www.v4all.org



ஒருமுறை சுவாமி விவேகானந்தர்,தனது குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கோரிக்கை வைத்தார்;வீட்டில் பணக் கஷ்டம்,அப்பா இறந்ததில் இருந்து வறுமை வாட்டுகிறது;நானோ வீட்டில் கடைசிப் பிள்ளை;எல்லா அக்காக்களும் கஷ்டப்படுவதைப் பார்த்து என்னால் சகிக்க முடியவில்லை;நீங்கள் காளியிடம் எனக்காக வேண்டலாமே? என்றிருக்கிறார்;
அதற்கு ராமகிருஷ்ணபரமஹம்சர், நீயே காளிமாதாவிடம் உன் கஷ்டத்தைச் சொல்லிக் கேளேன் என்றார்;அதற்கு விவேகானந்தரும் சரி என்று சம்மதித்தார்;
ராமகிருஷ்ணர் காளிமாதாவிடம் விவேகானந்தரின் கஷ்டத்தைச் சொல்ல வருவதையும்,அவனுக்கு நீ காட்சியளித்து வரம் தா அம்மா என்றும் வேண்டியிருக்கிறார்;
ஒரு சிறப்பான நன்னாளில் ராமகிருஷ்ணர் அனுமதியோடு,தட்சிணேஸ்வரம் காளியை தரிசிக்கிறார் விவேகானந்தர்;காளியை தரிசித்ததும், அவரது குடும்பச் சிக்கல்கள்,பணக்கஷ்டங்களிலிருந்து மீட்கச் சொல்லி எதுவும் தோன்றவில்லை;
“அம்மா,உலகம் முழுவதும் இருக்கும் அப்பாவி மக்கள் நிம்மதியாக தினமும் வாழ வேண்டும்” என்றே வேண்டியிருக்கிறார்;
இப்படி மூன்று முறை காளியை தரிசித்தும் சுவாமி விவேகானந்தரால் தனக்கோ,தனது குடும்பத்தாருக்கோ என்று வேண்டிடத் தோன்றவில்லை;
இணையமும்,வண்ண அலைபேசிகளும் நம்மிடையே பரவலான பின்னர் நமது மனம் உலக வரலாற்றில் இதுவரை எந்த தலைமுறையினரும் அனுபவிக்காத இன்பங்களை அனுபவிக்கும் சாக்கில் மனமானது மிகவும் அழுக்காகிக் கொண்டிருக்கிறது;நமது ஆழ்மனமும் சரணாகதி தத்துவத்தில் இருந்து வெகு தூரம் சென்று கொண்டிருக்கிறது;
பார்ப்பதைவிட செய்வதே மேல் என்பதே இளைஞர்களுக்கும்,இளம் பெண்களுக்கும் கூறும் தாம்பத்திய அறிவுரை; என்ன காரணமாக இருந்தாலும் சரி! ஆண்கள் 27 வயதிற்குள்ளாகவும்,பெண்கள் 25 வயதிற்குள்ளாகவும் திருமணம் செய்து கொள்வது அவசியம்;இந்த வயதிற்கு மேல் எந்த காரணமாக இருந்தாலும் சரி; திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள்:
பார்ப்பதால் மனம் அழுக்காகிறது என்று மட்டும் எண்ண வேண்டாம்;நமது ஆத்ம சுத்தியை இழந்துவிடுவோம்;இந்த இழிவான செயல்களில் இருந்து என்னை மீட்டு காப்பாற்று அம்மா என்று அன்னையைச் சரணடைந்தால் நிச்சயமாக அன்னை அரசாலை(வராகி) நம்மை மீட்டுப் பாதுகாப்பாள்;வழிநடத்துவாள்;
உலகத்திலேயே குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிட ஒரு சமுதாயம் 20,00,000 ஆண்டுகளாக முயற்சி எடுத்திருக்கிறது எனில் அது நமது தமிழ்ச் சமுதாயம் தான்! அதை வெறும் 20 ஆண்டுகளில் இணையம் என்ற அரக்கன் மூலமாக சின்னாபின்னப்படுத்திட முயன்றுள்ளது மேற்கு நாடுகளும் அதன் அமைப்புக்களும்! சீனாவைப் போல நமது நாட்டிலும் இணையம் என்ற பகாசுரனுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்;
மறுபுறம்,அன்னை அரசாலையைச் சரணடைந்தால் போதும்;அன்னையிடம் தான் நம்மால் எதையும் கெஞ்சியாவது மன்றாடியாவது கேட்டு வாங்கிட முடியும்;
அம்மா வராகி! எனக்கு என்னை எல்லா விதத்திலும் புரிந்து கொள்ளும் மனைவி அமைய வேண்டும் என்று வேண்டலாம்;
அம்மா வராகி! என் மீது மட்டும் அன்பு செலுத்தும் கணவன் அமைய அருள் புரி தாயே!! என்று இளம் பெண்கள் வேண்டலாம்;
அம்மா அடியேனது வறுமையைப் போக்கி,தினமும் குடும்பத்தை நிர்வகிக்கத் தேவையான பணம் கிடைக்க வழி செய்;அது போதும் என்றும் கூட குடும்பஸ்தர்கள் வேண்டலாம்;
அம்மா வராகி! இப்பிறவியே போதும்;இனி ஒரு பிறவி வேண்டாம் என்று துறவிகள் வேண்டலாம்;சோகங்களை மட்டுமே இதுவரை சந்தித்து தினமும் அழுது கொண்டிருப்பவர்களும் வேண்டலாம்;
இது போல உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் (நியாயமாக இருந்தால் போதும்) வேண்டலாம்;
கருணைக் கடல் என்பது அன்னைதானே !
கருணைப் பிரபஞ்சமும் அவள்தானே!
கருணை உணர்ச்சியை நமக்குத் தந்தவள் அவள் தானே!!!
வாழ்க பைரவ அறமுடன் ! வளர்க வராகி அருளுடன்!!!

Monday, August 10, 2015

அன்புவாதி



“யார் யார் சிவம் ? நீ நான் சிவம்.. - WWW.HAPPY4ALL.ORG
வாழ்வே தவம்... அன்பே சிவம்”
என்று சொல்லும் கமல் , ஒரு கோணத்தில் பார்த்தால் ரஜினி போல....ஆன்மிகவாதியாகவே தோன்றுகிறார்...
ஒரு சிலருக்கு...ஆன்மீகவாதி என்ற சொல் சற்று இடறினால் கமலை “அன்புவாதி” என்று வைத்துக் கொள்ளலாம்...
# அது இருக்கட்டும்....
“இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...” பாடலைக் கேட்டிருக்கிறீர்களா..?”
ஆன்மீக விஷயமாக நண்பர்களோடு பேசும்போது , அடிக்கடி நான் இந்தப் பாடலை உதாரணமாக எடுத்துச் சொல்வதுண்டு...
“பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்”
இதை விட சிறப்பாக இறைவனைப் பற்றி எப்படி எடுத்துச் சொல்ல இயலும்..?
# “பல நூல் படித்து நீ அறியும் கல்வி...”
பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை என்றாலும் ..பல நூல் படித்து கமல் கற்றுக் கொண்ட உலக அறிவு ஏராளம்... “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியில் கமலின் உலக அறிவைக் கண்டு வியந்தவன் நான் ...
# அடுத்து.... “பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்..”
இன்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற அமைப்பிற்கு கமல்ஹாசன் எத்தனையோ நிதி உதவிகளை செய்து வருகிறார்...
# மூன்றாவது ...” பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்..."
இதற்கு ரஜினி ஒரு விழா மேடையில் சொன்னதையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்..
ரஜினி சொன்னார் இப்படி :
“இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் என்னை நடிக்க சிபாரிசு செய்தவரே கமல்தான். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்க விடாமல் செய்திருக்க முடியும்...”
ஆம்...ரஜினியின் உயர்வில் கமலுக்கு இன்பம் இருந்திருக்கிறது....இப்போது மூன்றாவது பாயிண்டும் ஓகேதானே... மொத்தத்தில் இவை அனைத்திலுமே இருப்பது தெய்வம்தானே...அப்போ கமல் தெய்வ நம்பிக்கை ..அல்லது ஆன்மிக நம்பிக்கை ...அல்லது அன்பில் நம்பிக்கை உடையவர்தானே..?
“ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்..”
# ரஜினி ஆன்மீகவாதியாக இமயத்தில் தேடும் ஆன்மிக அமைதியை ...
கமல் அன்புவாதியாக தன் இதயத்தில் தேடுகிறார் ..அவ்வளவுதான்...!
“ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்...
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்.."
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே”
-திருமூலர்-
from - FB John 

எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில்

எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.
1. நல்லோர் மனதை நடுங்கச் செய்வது.
2. வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரை தடுத்து நிற்பது.
4. கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வது.
6. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்வது.
7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
8. தர்மம் பாராது தண்டஞ் செய்வது.
9. மண்ணோரம் பேசி வாழ்வழிப்பது.(தன் நிலத்திற்கு அருகில் உள்ள பிறர் நிலத்தை அபகரித்தல்)
10. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்வது.
11. களவு செய்வோர்க்கு உளவு சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசஞ் செய்வது.
14. வரவுபோக் கொழிய வழியடைப்பது.
15. வேலையிட்டுக் கூலி குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது.
17. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லி குடும்பங் கலைப்பது.
19. நட்டாற்றில் கையை நழுவ விடுவது.
20. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பழிந்தவளைக் கலந்திருப்பது.(கற்பு என்பதை மனம் சார்ந்த விஷயம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.)
22. காவல் கொண்டிருந்த கன்னியை அழிப்பது.
23. கணவன் வழி நிற்போரைக் கற்பழிப்பது.
24. கருப்பமழித்துக் களித்திருப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறப்பது.
27. கற்றவர் தம்மைக் கடுகடுப்பது.
28. பெரியோர் பாட்டிற் பிழை சொல்வது.
29. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
30. கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பது.
31. ஊன் சுவை உண்டு உயிர் வளர்ப்பது.
32. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
33. அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வது.
34. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்ப்பது.
35. வெயிலுக்கொதுங்கும் விருட்சமழிப்பது.
36. பகை கொண்டு அயலார் பயிர் அழிப்பது.
37. பொது மண்டபத்தைப் போயிடிப்பது.
38. ஆலயக் கதவை அடைத்தே வைப்பது.
39. சிவனடியாரைச் சீறி வைப்பது.
40. தவஞ் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
41. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்வது.
42. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பது.
43. தெய்வமிகழ்ந்து செருக்கடைவது.
என்று பாவங்களைப் பட்டியலிடுகிறார். படித்துப் பார்த்தால் பெரும்பாலான பாவங்களை நாம் செய்திருக்கிறோம் என்பது புலப்படும்.
இதை சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்றால், இதற்கு முன்னால் போனது போகட்டும். இனிமேலும் இது போன்ற பாவங்களைச் செய்யாமல் வாழும் வாழ்வைத் தா என்று இறையாற்றலிடம் வேண்டிக் கொள்வதற்குத்தான்.
ஏனென்றால் வேண்டுதல் என்பதே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு சங்கல்பம் தான்.

Friday, July 31, 2015

Ten tips to bring wealth and prosperity into your life


Ten tips to bring wealth and prosperity into your life


What you see you create. Knowledge of feng shui was available for the well-established people at one point of time. Now, anyone can use it to get the best results. The term feng shui literally means wind and water in Chinese.
Creating more wealth in life is possible with the implementation of few valuable tips of feng shui. Though you are able to get the desired results, the greatness of each tip is that you don’t have to spend huge amounts of money.
Prepare a wealth board.
1. Assess the importance of wealth in your life with the creation of a comprehensive list. Check the ways in which you are going to spend money on a general basis. Organise your spending and earning priorities in a manner to obtain the desired results according to your expectations besides getting the best effects of feng shui.
2. Feng shui represents money in the form of water. If you have leaky pipes, faulty toilets, damaged showers, and improper sinks, then it is better to get all of them repaired because the more water overflows, the more money will be wasted.
  1. Water fountains have to be properly set up in order to maintain the direction of flow into your home. This represents that you have the potential of earning more money. You will lose money in case the fountain direction is exactly opposite to your main entrance. Maintain clean water in the fountain always.
Your stove means wealth 1. According to feng shui, stove directly represents wealth. Ensure that the stove is in a working condition and is clear of dust and dirt. Using all the burners is necessary, which symbolically states that the wealth is being spread all over. Those stoves that are damaged or broken need to be set right immediately.
2. Include plants in your home as they are considered to be great Chi enhancers. This is why removing dead plants proves to be crucial. Watering plants regularly is essential. Your failure to do so will mean that the plants drying up and your money too.
3. Removing leaky batteries, and replacing expired tube lights and bulbs need to be done. Get the repairs done for all the articles that are not in working condition. You will be able to start earnings when all things are in place. Realise fire energy in this manner that helps in evoking acts.
4. Fixing broken items is very important. According to feng shui, you are broke in case if you find any articles that are broken. Replace the items or fix them in order get the best performance.
Articles that make you feel wealthy
1. Fill your fridge with all kinds of stuff. Ensure that the racks and containers are filled and not empty. Maintaining empty things in your vicinity means that your wallet too is empty. Have a wealthy feeling by working out on things.
2. Remove clutters that block free flow of energy. Stagnant situations arise because of the clutters. With the process of de-cluttering, you can have a fresh leash of life all again. Clearing the rubble will help you in maintaining a perfect life. Be in a financially sound state.
A neat home is where money has its immense effects. This is the reason why luxury homes are seen with a lot of cleanliness and perfect maintenance. Imagine those homes that are enabled with poor living standards. Comparing both of them will help you realise the best sources of living for you.
3. Make use of those things that make you feel wealthy. This kind of approach helps you in increasing your income earning opportunities. Stay away from those things that make you feel cheap or invaluable. Include those things that represent entirety.