Monday, October 27, 2014

உலகின் 35 ஆவது கோடீஸ்வரர் எப்படி ஒரு நாளை செலவு செய்கிறார் ?

உலகின் 35 ஆவது கோடீஸ்வரர் எப்படி ஒரு நாளை செலவு செய்கிறார் ?
சற்றுமுன் ஹிஸ்டரி தொலைக்காட்சியில் முகநூல் நிறுவனர் மார்க் குறித்த ஒரு செய்திப்படம் ஒளிபரப்பப்பட்டது.
அந்த நிறுவனத்தினர் அவருக்கு தெரியாமலேயே பின் தொடர்கின்றனர்.
உலகின் 35 ஆவது கோடீஸ்வரர் எப்படி ஒரு நாளை செலவு செய்கிறார் ? என்ன காரில் செல்கிறார் ?எங்கு சாப்பிடுகிறார் ? என்று ஆராயும் போது அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது ....
மார்க் நடைபாதை கடையில் நண்பருடன் சென்று பர்கர் வாங்குகிறார். உட்கார நாற்காலி கிடைக்காததால் நடைபாதையிலேயே அமர்ந்து சாப்பிடுகிறார்.
அவரிடம் பெராரி கார் இல்லை. மிகச்சாதாரண கார்தான் இருந்தது.
அதை விடக்கொடுமை அவர் வசித்தது வாடகை வீட்டில்.
அடுத்த நாள் அவரை அதே தொலைக்காட்சி நிறுவனம் நேர்காணல் செய்கிறது.மிகச்சாதாரண உடையிலேயே அவர் வருகிறார்.
அவரைப்பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்படுகிறது.
அவர் செல்கிறார். ..பார்த்தேன்.என் பாத்திரத்தில் நடித்தவர் என்னைப்போலவே இருந்தார். அவர் அணிந்திருந்த டி.ஷர்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ளவே நான் பேஸ்புக் ஆரமித்ததாக சொல்வது தவறு.பிரசில்லாவை நான் பேஸ்புக் ஆரமித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டேன்.ஆனால் என்னை பலப் பெண்கள் ஒதுக்கி தள்ளி உள்ளனர்.
கடைசியில் அவர் பல கோடி மதிப்புள்ள புதிய வீட்டை வாங்குவதாக காட்சி முடிகிறது !!
urs 
www.v4all.org 

No comments:

Post a Comment