Showing posts with label money making workshop at tripur. Show all posts
Showing posts with label money making workshop at tripur. Show all posts

Wednesday, March 9, 2016

'லக்ஷ்மி கட்டு' அறுபட சூட்சுமமான பரிகாரம்

'லக்ஷ்மி கட்டு' அறுபட சூட்சுமமான பரிகாரம்


வெள்ளிகிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குன்மதினால் 'ஸ்ரீம்' என எழுதி அதை சுற்றிலும் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி 'ஸ்ரீம்' மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு நிவேதனம் செய்யவும். பின்பு நிவேதனத்தை அப்படியே வைத்திருந்து மறு நாள் 9 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களுக்கு அதை கொடுக்கவும். மீதம் இருப்பதாய் வீட்டில் உள்ள அனைவரும் உண்ணலாம். தொடர்ந்து வீட்டில் உள்ள எவரேனும் இதை 21 வெள்ளிகிழமைகள் செய்து வர 'லக்ஷ்மி கட்டு' எனப்படும் சதா பணகஷ்ட நிலைமை அடியோடு அழிந்து நிதி நிலை மேம்படும். இந்த 21 வாரங்களும் அசைவ உணவு சேர்க்காமல் இருப்பின், ஆரம்பித்த ஓரிரு வாரங்களிலேயே மிக நல்ல முன்னேற்றம் தெரியும். 'லக்ஷ்மி கட்டு' ஏற்பட்டு அழிந்த பல குடும்பங்களை மீண்டும் முன்னேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது சக்தி வாய்ந்த இந்த பரிகாரம்.

Monday, November 2, 2015

வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தன ஆகர்ஷணம்

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது
வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என
ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என
சித்தவைத்தியர்கள்
கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள்
மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய
ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும்
தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில்
பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச
அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை
வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்து
விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை
செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை
பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு
பட்டையை நூலுக்குப் பதில்
விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல
பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு
வடவேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர்
செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு
வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை
அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த
வெள்ளெருக்கு விநாயகர். விநாயகர் வழிபாடு அளப்பரிய
பலன்களை தருகிறது. இதை அவரவர்கள்
அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி
மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை
வழிபட்டால்,தனம் ஆகர்ஷணம்
ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல
இடங்களில் விற்பனை செய்கின்றார்கள்.
வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில்
விநாயகர் செய்து விற்கின்றாகள் அதனால் அது
விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்து
விடுகின்றது.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால்
இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர்
வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர்
மகிமை உணரலாம்.
விநாயகர் அருளை பெறசெவ்வாய் மற்றும்
சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த
நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர்
சாற்றி வணங்கினால் மிக சிறப்பு. சுக்கில
சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி
வணங்கினால் வெற்றி நிச்சயம்.
வலம்புரி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில்
வணங்கினால் வெற்றி கிடைக்கும்.
திருமண காலத்தை விரைவில் காண மஞ்சள்
விநாயகரை48 நாட்கள் பித்தளை தட்டுக்குள்
மூடி வைத்து பூஜை செய்தால் பலன்
கிடைக்கும்.
குடும்ப வறுமையை போக்க, முற்றிலும்
அகற்ற வெள்ளெருக்கு  திரிபோட்டு தீபம் ஏற்ற
வேண்டும்.
நவக்கிரக தோசம் நீங்க விநாயகர் பின்புறம் தீபம்
ஏற்ற பலன் கிட்டும்.உங்களுக்கு
நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக
வெள்ளெருக்கு செடியை அடையாளம்
கண்டு,அதன் வேரை எடுத்து உள்ளூர்
ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர்
செய்து கொள்ளவும்.ஒரு வெள்ளிக்கிழமை
காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு
காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத்
தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை
காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில்
சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல்
தடவி,நிழலில் காய வைக்கவும்.இப்பொழுது
அதன் கதிர்வீச்சுக்கள்
கட்டுப்படுத்தப்பட்டு,நன்மையான கதிர்கள் நம்
வீட்டில் பரவும்படி தயார் செய்து
விட்டோம்.இனி,அவரவர் இஷ்டம் போல வழிபாடு
செய்யலாம்;தூப தீப நைவேத்தியம்
செய்யலாம்;ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம்
சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை
வழிபட்டால்,தன ஆகர்ஷணம் உண்டாகும்.
for வெள்ளெருக்கு விநாயக - Rs,350 + 50 call - 9894624425

Thursday, October 15, 2015

ஆழ்ந்த அன்பு.

தஷ்ரத் மான்ஜி (Dashrath Manjhi) என்பவரின் துணைவியார், ஃபால்குனி தேவி (Falguni Devi) அவர்கள், சரியான நேரத்தில், மருத்துவ உதவி பெறாததால், 1959ம் ஆண்டு மரணமடைந்தார். அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு அருகிலிருந்த மருத்துவமனையை அடைய ஒரு கிலோமீட்டர் தூரமே என்றாலும், நடுவே ஒரு குன்று வழிமறித்து நின்றதால், அவர்கள் அந்தக் குன்றைச் சுற்றி, ஏறத்தாழ 70 கி.மீட்டர் பயணம் செய்து மருத்துவமனையை அடையவேண்டியிருந்தது. அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியாமல், ஃபால்குனி தேவி அவர்கள் இறந்தார்.
தன் மனைவியைப் பறிகொடுத்த தஷ்ரத் மான்ஜி அவர்கள், அடுத்த ஆண்டுமுதல் (1960), ஒவ்வொருநாளும், அந்த குன்றைத் தகர்க்கத் துவங்கினார். ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அவர் அந்தப் பணியைத் துவக்கியபோது, கிராமத்து மக்கள் அனைவரும் அவரை மதியிழந்தவர் என்று கேலி செய்தனர். மான்ஜி அவர்கள் மதியிழக்கவில்லை, மனமும் தளரவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பின், 1982ம் ஆண்டு, அவர் அந்தப் பணியை முடித்தபோது, குன்றின் சிகரத்திலிருந்து 25 அடி ஆழத்தில், 360 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட ஒரு பாதையை மான்ஜி அவர்கள் தனியொருவராக உருவாக்கியிருந்தார். அவர் அமைத்தப் பாதையால், அடுத்த ஊருக்குச் செல்லும் தூரம், 70 கி.மீ.லிருந்து, 1 கி.மீ.ஆகக் குறைந்தது.
தன் சொந்த நலனையும், குடும்பத்தையும் மறந்து, மனம் தளரும்படி ஊர் மக்கள் சொன்ன கேலிப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தஷ்ரத் மான்ஜி அவர்கள், 22 ஆண்டுகள், அதாவது, 8000த்திற்கும் அதிகமான நாட்கள், ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அந்தக் குன்றைக் கரைத்ததற்குக் காரணம்... அவர் தன் மனைவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு.

Thursday, September 3, 2015

அறிமுகமற்ற அழைப்புகளைப் (Cold Calls) பயன்படுத்துவது

அறிமுகமற்ற அழைப்புகளைப் (Cold Calls) பயன்படுத்துவது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
அறிமுகமற்ற அழைப்புகள் என்பவை, உங்களை யாரென்று தெரியாத வாடிக்கையாளர்களிடம், தொலைபேசி அழைப்பு அல்லது நேரில் செல்வது மூலமாக விற்பனை செய்ய முயற்சி செய்வதாகும். அறிமுகமற்ற அழைப்புகளின் நோக்கம், வாடிக்கையாளரின் வலிமையைப் பற்றிய தகவலைச் சேகரிப்பது ஆகும், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் நன்மைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்கிக்கூறுவது, மற்றும் சில நேரங்களில், அவர்களைச் சந்திக்க அனுமதி வாங்குவது ஆகியவை ஆகும். அறிமுகமற்ற அழைப்புகளில் சில சவால்கள் உள்ளன, அவை: ஐயம், கடந்தகால உதவியாளர்களைச் சந்திப்பது, செயலாளர்களைச் (secretaries) சந்திப்பது, மற்றும் பிற வாயில் காப்பாளர்களைச் சந்திப்பது, சரியான நபர்களைக் கண்டறிவது, விற்பனைச் செயல் முறையை விரைவாக நிறைவு செய்ய உதவும் தளத்தைக் கண்டறிவது ஆகியவை.
இந்த சவால்களை முறியடிக்க, பின்வரும் தகவல் குறிப்புகள் உங்களுக்கு உதவும்:
சற்றும் "அறிமுகமற்ற" தன்மை கொண்ட அறிமுகமற்ற அழைப்புகளைத் தவிர்க்கவும்.
உங்கள் நடப்பு வாடிக்கையாள்களிடம் இருந்து மேற்குறிப்புகளைப் பெறுங்கள், பின்னர், அந்த நபர்களிடம் பேசுங்கள், இதனால் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள அறிமுகமற்ற தன்மை சற்றுக் குறையும். உங்கள் வாடிக்கையார்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக பெயர் மற்றும் இலக்கங்களைக் கேட்காமல், அவர்களே அதைக் கூறும் வகையில் அவர்களிடம் உரையாடுங்கள். உதாரணமாக, நீங்கள் தனக்குத் தெரிந்த ஒருவருக்கு காப்பீடு வாங்கும் ஆர்வம் இருப்பது தெரிந்த ஒருவர் பெரும்பாலும், அவர்களைப் பற்றிக் கூற மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அந்த நேரத்தில் யாரைப் பற்றியும் சிந்திக்க முடியாது. ஆனால், நீங்கள் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்பது பற்றியும் அவரது நண்பர்களுக்கும் குழந்தைகள் இருகிறார்களா என்பது போல கேட்கும்போது, அவர்கள், தங்கள் நண்பர்களுக்கும் எதிர்காலத் திட்டமிடும் அவசியம் இருந்தால் அவர்களைப் பற்றிக் கூறலாம் என உணர்வார்கள்.
இப்போதே செய்யுங்கள்
விற்பனை அழைப்புகளைச் செய்ய நீங்கள் எப்போதும் தயாராகப் போவதில்லை, ஆகவே, சரியான நேரத்திற்காகக் காத்திருக்காதீர்கள். உங்கள் ஐயம் எப்போதும் இல்லாமல் போகாது, ஏனெனில், நீங்களாகவே ஒருவரை அழைத்து, அவர்கள் உங்களிடம் பேச மறுப்பதை எதிர்கொள்ள யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆகவே, தள்ளிப்போட வேண்டாம் காரணங்களைத் தேடுவதற்குப் பதிலாக, இப்போதே செய்துவிடுங்கள்.
வெளிப்படையாக இருங்கள்
நீங்கள் ஒரு காவலாளி, ஒரு உதவியாளர் அல்லது தொலைபேசியில் எதிர்பார்ப்பவர் ஆகிய எவரைச் சந்தித்தாலும், வெளிப்படையாக எதற்கு நீங்கள் அழைக்கிறீர்கள் என்று கூறுங்கள். உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் அழைப்பின் அவசியத்தைக் குறிப்பிடுங்கள். நேர்மையாகவும் விவரமாகவும் இருங்கள். அழைப்பது எதற்கு என்று கூறுவது, சரியாக இல்லாவிட்டால், மக்கள் உங்களைத் தவிர்க்கலாம், அல்லது சந்தேகப்படலாம். பேசுவதற்கு இது சரியான நேரம்தானா எனக் கண்டறியுங்கள் – அதிக தகவலைக் கொடுங்கள், அப்படி முடியாவிட்டால், பின்னர் மீண்டும் அவர்களை எப்போது அழைக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளுங்கள்.
விரைவில் மற்றும் தாமதமாக அழையுங்கள்
உதவியாளர் தொலைபேசியை எடுப்பதால், செயலாளர் பதிலளிப்பதால் அல்லது அழைக்கும்போதெல்லாம் குரல் அஞ்சல் பதிலளித்தால், ரு சிலரைத் தொடர்பு கொள்வது கடினமாக இருந்தால், வழக்கமற்ற நேரங்களில் அழையுங்கள். நாம் எதிர்பார்ப்பவர், காலை 8.00 மணி அல்லது மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே தானாகவே தொலைபேசியை எடுக்கலாம். மேலும் அவர்கள் தளர்வாகவும் பேசுவதற்கு நேரத்தோடும் இருப்பார்கள், ஏனெனில், இப்போது அவர்கள் 9 –இலிருந்து 5 வரை இருக்கும் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கவில்லை. நேரடியாகவே விற்பனை அழைப்புகளைச் செய்தால், வழக்கமற்ற நேர அழைப்புகளைச் செய்ய, காலையை விட மாலை நேரம் சிறந்தது.
மக்கள் மீண்டும் உங்களை அழைப்பார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.
அவர்கள் உங்களை அழைக்க காத்திருக்கக்கூடாது. அவர்களுக்கு ஆர்வமிருந்தாலும் கூட அவர்கள் அழைக்காமல் போகலாம். அவர்கள் மீண்டும் உங்களை அழைப்பதாகக் கூறினால், அப்படியே செய்வார்கள் என நம்பிக்கொண்டு இருக்காதீர்கள். உங்கள் மமதையை தள்ளிவிட்டு நீங்களே அவர்களை அழையுங்கள். அப்படிச் செய்யும் போது, இனிமையாக நடந்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களை மீண்டும் அழைக்காததால், நீங்கள் எவ்வளவு வெறுப்படைந்திருந்தாலும் பரவாயில்லை.
மனிதனாக நடந்துகொள்ளுங்கள்
விற்பனையாளர்கள் பொதுவாக அவர்கள் சொல்வதை மூச்சு கூட விடாமல் சொல்லிவிடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். இப்படிச் செய்யாதீர்கள். அது இயல்பாக இருக்காது, மற்றும் உதவாது. மக்கள் அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களிடமிருந்தே வாங்குவார்கள், அவர்களையும் அவர்களுடைய வியாபாரத்தையும் புரிந்து கொள்பவர்களிடம் இருந்தே வாங்குவார்கள். நீங்கள் அணுகுபவர்களை, பல கேள்விகளைக் கேட்டு பதில் பெறுங்கள், அவர்களிடம் உண்மையாகவே ஆர்வம் கொண்டிருங்கள்.
குறைவாகப் பேசுங்கள், அதிகம் பேசாதீர்கள்
நீங்கள் அணுகுபவர்களின் தேவைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க, அறிமுகமற்ற அழைப்புகளைப் பயன்படுத்துங்கள். அந்த நபர் உங்களிடம் பேச, நீங்கள் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் நன்மைகளைக் பற்றிய அதிகமான தகவல்களை நிச்சயம் வழங்க வேண்டும். ஆனால் அதிகமாகப் பேசாதீர்கள். நீங்கள் அணுகுபவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறியாமல், நீங்களாக பேசிக்கொண்டே இருந்தால், அவர் வெறுப்படைவார். நீங்கள் அணுகுபவரை, அவரது சிக்கல்கள் மற்றும் தேவைகள் பற்றி ஒரு கேள்வி கேட்டு (நீங்கள் இந்த கேள்விகளை ஏற்கனவே எழுதி வைத்துக் கொள்ளலாம்) அவர்களின் பதில்களைக் கூர்ந்து கவனியுங்கள். பின்னர், அவர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் உதவும் தயாரிப்பின் நன்மை பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டுக் கூறுங்கள். நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள்
ஒருவர் உங்களை, எழுத்து தகவலை அனுப்ப வேண்டினால், அவரிடம் நேரில் சென்று 15 நிமிடம் விளக்கமாகக் கூறலாமா எனக் கேளுங்கள். இந்த முறை அவர்களுக்கு, உங்கள் வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மிக செயல்திறனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் தகவல்களைச் சிறப்பாகப் பெறலாம், மற்றும் அவர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளிக்கலாம். மேலும், ஒருவரைச் சந்திக்கும் போது, அவர்களிடம் இனிமையான குணத்தோடு பழகுங்கள், இதனால், அவர் உங்களையும் அவர் உங்கள் தயாரிப்பை வாங்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவில் வைத்திருக்க உதவும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Sunday, July 26, 2015

ஸ்ரீரங்கம் கோயிலில் புதையுண்ட யானை சிலை...

ஸ்ரீரங்கம் கோயிலில் புதையுண்ட யானை சிலை...! - www.v4all.org

கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சில மாதங்களாக கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தொல்லியல் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கோயில் கோபுரங்களுக்கு வண்ணம் பூசுவது, கோயில் சிற்பங்கள், மண்டபங்களை புதுப்பிப்பது என வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயிலில் பல இடங்கள் சுமார் ஏழு அடிக்கும் மேலாக மண்ணால் மூடப்பட்டு இருந்தது. 

அனைத்தையும் தொல்லியில் துறையின் துணையோடு ஶ்ரீரங்கநாதர் கோயில் அப்புறப் படுத்தியுள்ளனர். அப்போது மண்ணில் புதையுண்ட யானை சிலை, தேர் சிற்பங்களில் தேரின் சக்கரங்கள் என பல சிற்பங்கள் வெளிவந்திருக்கின்றன...இதுவரை சுமார் 80 சதவிகித பணிகள் முடிவடந்து விட்டதாகவும் அனைத்து வேலைகளையும் நமது பாரம்பரிய முறைப்படியே சுண்ணாம்புக் கலவைகள் கொண்டு நடைபெறுவதாகவும்  அரசிடமிருந்து உத்தரவு வந்ததும் பாலாலயம் செய்து கும்பாபிஷேகத்திற்கான அனைத்து வேலைகளையும் தொடங்கிவிடலாம் எனவும் கோயில் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்..

திருப்பணி வேலைகளின்போது புதையுண்ட  சிற்பங்கள் போலவே சந்நதிகளுக்கு பின்னால் சில காலியான அறைகளும் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீரங்கம் கோயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...

பூ லோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்), 108 வைணவத் தலங்களுள் முதன்மையானது. வைணவர்கள், ‘கோயில்’ அல்லது ‘பெரிய கோயில்’ என்று குறிப்பிட்டால் அது ஸ்ரீரங்கம் ஆலயத்தையே குறிக்கும். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப் பெற்ற வைணவத் தலம் இது மட்டுமே. ஸ்ரீரங்கம் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர்.

 உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங் கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே போதும்; இந்தத் தலத்துக்கு நேரில் வந்து, இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும்.

 ஒரு முறை கங்கை, காவிரி, யமுனை உட்பட புண்ணிய நதிக் கன்னியர்கள், இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வான்மார்க்கமாக சென்ற கந்தர்வன் ஒருவன், இவர்களைப் பார்த்து வணங்கினான். உடனே, ‘கந்தர்வன் வணங்கியது தன்னையே!’ என்று நதிக் கன்னியர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் வாதிட்டனர். இது வீண் விவாதம் என்றுணர்ந்த சிலர் விலகிக் கொள்ள... காவிரியும், கங்கையும் மட்டும் விவாதம் தொடர்ந்தனர். முடிவை தெரிந்து கொள்ள திருமாலை நாடினர். அவர், ‘‘கங்கை என் திருப்பாதத்தில் தோன்றியவள் ஆதலால் அவளே பெரியவள். கந்தர்வனின் வணக்கம் அவளையே சாரும்!’’ என்றார். இதனால் வருந்திய காவிரி, தான் கங்கையை விட மேன்மை நிலை பெற வேண்டும் என்று திருமாலைக் குறித்து தவம் இருந்தாள். அதனால் மகிழ்ந்த பகவான் அவள் முன் தோன்றி, ‘‘எதிர்காலத்தில் நான் உன் மடியில் சயனிப்பேன். அப்போது நீ கங்கைக்கு மேற்பட்டவளாவாய்!’’ என்றருளினார்.

அதன்படியே பிற்காலத்தில் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், சந்திர புஷ்கரணியும், அனந்த பீடமும் தோன்றின. ஆற்று நீர் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதிக்கு அரங்கம் என்று பெயர். அதன்படி இந்த தீவு, இரு ஆறுகளின் (காவிரி மற்றும் கொள்ளிடம்) மத்தியில் இருப்பதாலும் லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வதாலும் ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.

 திருவரங்கத்தில் பாயும் காவிரி நதி, பரம பதமான ஸ்ரீவைகுண்டத்துக்கு வெளியே ஓடும் ‘விரஜா’ நதிக்கு ஒப்பானது.

 பெயர், கோயில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம், மற்றும் பலகாரங்கள் அனைத்தும் ‘பெரியது’ என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இந்தத் தலத்துக்கு மட்டுமே உண்டு.

 இங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்றும் பெரிய பெருமாள் என்றும் திருநாமங்கள் உடையவர். உற்சவ மூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும் அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார். ஸ்ரீரங்கம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிர க்ஷேத்திரமாகவும் கருதப்படுகிறது  வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப்பாதத்தை சுட்டிக் காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீரங்கநாதர்.

 திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானது. இதைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கே இருந்தாலும், முக்தி நிச்சயம். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வும், அது வாயருகில் சென்று சேர்ந்தால் உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

 பங்குனி மாதம், வளர்பிறை, சப்தமி திதி, சனிக்கிழமை அன்று சந்திரன் ரோகிணியிலும், குரு ரேவதியிலும் இருக்கும்போது திருவரங்கன் இங்கு வந்து சேர்ந்தார்.

பல ஆயிரம் ஆண்டுகள் பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்து, பாற்கடலிலிருந்து பெறப்பட்டது ரங்க விமானம். நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ஸ்ரீரங்கநாதரை இக்ஷவாகு மன்னர் தன் குல தெய்வ மாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார். இக்ஷவாகு வம்ச குலத் தோன்றலான ராமபிரான், சீதையை மீட்க உதவிய விபீஷணனுக்கு ரங்கநாதர் விக்கிரகத்தை பரிசாக அளித்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மூர்த்தத்தை காவிரி நதியின் கரையில் தன் அரசான இலங்கையை நோக்கி அருள் தரும் முகமாக பிரதிஷ்டை செய்ததாக ரங்க மகாத்மியம் கூறுகிறது.

 தர்மவர்மனின் காலத்துக்குப் பிறகு ஒரு முறை காவேரியில் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக ஸ்ரீரங்கத்தில் கோபுர உச்சி வரை மணல் மேடிட்டு மூடி யது. காடுகள் உண்டாகி ஸ்ரீரங்கம் கோயிலும், அதன் பிராகாரங்களும் புதைந்தன.

ஒரு நாள்... சோழ மன்னன் ஒருவன் வேட்டையாட வந்து, ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்தான். அப்போது மரத்தின் மேலே இருந்து ஒரு கிளி, ஸ்ரீரங்க விமானத்தைப் பற்றியும் ரங்கநாதப் பெருமாளைப் பற்றியும் (ஸ்லோகமாகச்) சொன்னது.
அதைக் கேட்டு வியந்த மன்னன் ஆட்களைக் கொண்டு அங்கே தோண்டிப் பார்த்தான். பலனில்லை. அன்றிரவு அவன் கனவில் திருவரங்கர் காட்சி கொடுத்து, தான் அங்கே பூமியில் புதையுண்டு கிடப்பதை அறிவித்தார். அரங்கன் சொன்னதை அறிந்த அரசன் காட்டை அழித்து, மணலை நீக்கினான். கோயில் வெளிப்பட்டது. திருவீதி உட்பட அனைத்தையும் முதலில் இருந்தபடியே நிர்மாணித்தான். தன் நினைவுச் சின்னமாகக் ‘கிளி’ மண்டபத்தைக் கட்டி, திருப்பணிகள் பலவற்றையும் செய்தான். கிளியைக் கண்டு அதன் வாக்கின் மூலம் இறையருள் பெற்ற இந்த மன்னன் ‘கிளிச்சோழன்’ எனப்பட்டான்.

 ஸ்ரீரங்க விமானத்தின் வெளியில் விக்னேசுவரர் இருந்து காவல் புரிகிறார். கீழ்ப்பக்கத்தில் மகா விஷ்ணுவின் யோக மாயையான துர்கை இருக்கிறாள். ஸ்ரீரங்க விமானத்துள்ளே ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர்.

 ஆலயத்தில் உள்ள கோபுரங்கள் 21. திருவரங்கத் திருத்தலம் பற்றி அகநானூறு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவ அரசர்கள், 10-ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள், கி.பி.1223-25-ல் கலிங்க அரசர்கள், 1225-ல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 14-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்கள், 17-ஆம் நூற்றாண்டு மற்றும் 18-ஆம் நூற் றாண்டுகளில் விஜயநகர ராஜா மற்றும் மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர்கள் முதலானோர் இந்தக் கோயிலின் சுவர்கள் மற்றும் கோபுரங்களைக் கட்டியும், பழுதுபார்த்தும் வந்துள்ளனர்!

 அரங்கநாதரைச் சுற்றி இருக்கும் ஏழு (ஸப்த) பிராகாரங்களும் ஏழு (ஸப்த) லோகங்களாகக் கருதப் படுகின்றன. பொதுவாக ஆலயம், அதைச் சுற்றி ரத வீதிகள் என ஒரு நகரம் அமைந்திருக்கும். ஆனால், வீதிகளே பிராகாரங்களாக, நகரை தனக்குள் கொண்டிருக்கும் ஆலயம் இது.

 7-ஆம் பிராகாரம் மாட மாளிகை பிரதட் சணம் எனப்படுகிறது. இந்த பிராகாரத்தின் தெற்கு வாயிலாக இருந்த மொட்டை கோபுரம் அகோபில மடம் 44- வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயரால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 236 அடி. உலகிலேயே அதிக உயரமானது.

 7-வது பிராகாரத்தில் விஜய நகர சமஸ்தான அரண்மனை இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் அச்சுதராயர், திருவனந்தபுரத்தின் மீது படையெடுத்தபோது, இந்த அரண்மனையைக் கட்டினார். அப்போது தன் மைத்துனனைப் படைகளுடன் திருவனந்தபுரம் அனுப்பினார். அவன் வெற்றி யுடன் திரும்பும் வரை ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருந்தார் அச்சுதராயர். ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி உற்சவத்தின் போது ஸ்ரீரங்க நாதனும், கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதிவுலாவாக எழுந்தருளினர். தனது அரண்மனைக்கு முன்னால் ஸ்வாமிக்கு ஓர் உபயம் ஏற்படுத்தி னார் அச்சுத ராயர். அதற்காக ஏராளமான மானியங்களை ஏற்படுத்தினார். அந்த உபயம் இன்றும் தொடர்கிறது. (அரண் மனை இருந்த இடத்தில் பின்னர் ‘வாணி விலாஸ் பிரஸ்’ செயல்பட்டது. ஏராளமான ஞான நூல்களை வெளியிட்ட அந்த அச்சகம் இப்போது அங்கு இல்லை. அங்கு அச்சுதப்பர் ஏற்படுத்தி வைத்த உபயம் இன்றும் நடக்கிறது).



 ஸ்ரீரங்கத்தின் சந்திர புஷ்கரணியைச் சுற்றி அதன் அங்கமாக தெற்கே- அசுவ தீர்த்தம், தென் கிழக்கில்- ஜம்பு தீர்த்தம், கிழக்கே- பில்வத் தீர்த்தம், வடமேற்கே- வகுள தீர்த்தம், வடக்கே- கதம்ப தீர்த்தம், வடகிழக்கில்- ஆம்ர தீர்த்தம், மேற்கே- புன்னாக தீர்த்தம், தென்மேற்கே- பலாச தீர்த்தம் ஆகிய எட்டு தீர்த்தங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 நூற்றுக்கணகான சந்நிதிகள் உள்ள இந்த ஆலயத்தில் கோதண்ட ராமர், பரமபதநாதர், பெரிய வீர ஆஞ்சநேயர் சந்நிதிகள் சிறப்பானவை.

 தாயார் சந்நிதிக்கு செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீமந் நாராயணனே தன்வந்திரியாகக் காட்சியளிக்கிறார். கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீருகிறது.

 சாதாரணமாக எல்லாச் சந்நிதிகளின் மேலும் விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி வைத்திய ராக இருப்பதால் நோயாளிகள், வியாதியஸ்தர்கள் அவரிடம் வருவார்கள் என்பதால் ஆகம விதிகளின்படி அவர் சந்நிதிக்கு மேல் விமானம் கட்டப்படவில்லை.

 உள் ஆண்டாள் சந்நிதிக்கு அருகிலும் வேணுகோபாலர் சந்நிதி மண்டபத்திலும் அழகிய சிற்பங்கள் பல காட்சி அளிக்கின்றன. வைணவ ஆச்சார்யர்யரான ஸ்வாமி வேதாந்த தேசிகன் சந்நிதி தனி ஆலயமாகத் தாயார் கோயில் அருகே அமைந்துள்ளது

 இங்குள்ள கருட பகவான் மிகப் பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார்.
 கம்ப ராமாயணம் அரங்கேறிய போது அதை அங்கீகரிக்கும் விதமாக சிரத்தை அசைத்து அதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் மேட்டு அழகிய சிங்கர்.
 முன்னொரு காலத்தில் வங் காள அரசன் பெரும் செல்வத்தை ரங்கநாதருக்குக் காணிக்கையாக அளித்தான். ரங்கநாதர் அவற்றை பெற்றுக் கொள்ளாததால் அந்த தனம் வாசலிலேயே வைக்கப்பட்டது. அதை வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் காவல் காத்தனர். அதனால் அந்த வாசல் ஆர்யபடாள் வாசல் என்று அழைக்கப்படுகிறது.

 பாண்டிய மன்னர்களில் சிறந்தவனான சுந்தர பாண்டியன் காணிக்கையாக அளித்த கிரீடம் பாண்டியன் கொண்டை என்று இன்றும் சிறப்பாக நம்பெருமாளுக்கு அணிவிக் கப்படுகிறது.
 வைணவ அந்தணர்களில் அரையர் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக நம்பெருமாள் முன்பு நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்களை இசைத்து அதற்கேற்ப நடனம் செய்வார்கள். அதற்கு அரையர் சேவை என்று பெயர்.

 ஸ்ரீரங்கம் ஆலயத்தின் நிர்வாகம், கோயிலொழுகு ஆகியவற்றை சீர்ப்படுத்திய பெருமை வைணவ ஆச் சார்யரான ராமானுஜரையே சாரும். 120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவ சம்பிரதாயத்துக்குத் தொண்டு புரிந்த ராமானுஜர் கி.பி 1137-ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத் தில் பரமபதம் அடைந்தார்.

ஸ்ரீ ராமானுஜர் தன் உடலோடு சந்நிதி கொண்டது இங்குதான். இங்கு ஸ்ரீராமானுஜர் பத்மாசன கோலத்தில் தரிசனம் தருகிறார். இன்றும் அவரது சிகை மற்றும் நகங்கள் தரிசனம் செய்யக் கிடைக்கின்றன. வருடத்துக்கு இரு முறை பச்சை கற்பூரம், குங்குமப் பூ போன்றவை விழுதாக அரைத்து அவருக்குப் பற்றாக உடலில் பூசப்படுகின்றன.

ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார், திருப் பாணாழ்வார் ஆகியோர் இங்கு மட்டுமே தொண்டு புரிந்து வாழ்ந்தவர்கள்.

 நாதப்பிரம்மம் தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அவர் மேல் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

கி.பி. 1331-ல் மாலிக்காபூர் படை யெடுப்பின்போது அரங்கன் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது. அரங்கன் திரும்பவும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தது 1371-ஆம் ஆண்டு.

திருவரங்கனின் விக்கிரகம், இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு. அப்போது அரங்கனின் அழகில் மயங்கி அவனுக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும் அவளுக்காக அரங்கன், ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.

இங்கு உத்திரை வீதியில் இரண்டு பிரம்மோற்சவங்கள் சித்திரை வீதியில் இரு பிரம்மோற்சவங்கள் என வருடத்தில் நான்கு பிரம்மோத்சவங்கள் நடைபெறுகின்றன.

ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று ரத்னாங்கி அணிந்து உலா வரும் நம்பெருமாளை, படி தாண்டாத தாயார் தனது கோயிலிலிருந்து ஐந்து குழிகளிலும் தன் ஐந்து விரல்களை வைத்து மூன்று வாயில்கள் வழியாகக் கண்டு மகிழ்வாராம். அதைக் குறிக்கும் விதமாக தாயார் செல்லும் வழியில் ஐந்து குழிகள் தரையில் உள்ளன.

வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர், தசா வதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருகிறார்

 இங்கு ஒரு வருடத்தில் 114 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.

எல்லாப் பெருமாள் கோயில்களிலும் மூலவருக்கு ஆனி ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே தைலக் காப்பு சாத்தப்படும். ஆனால், ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்துடன் கூட ஆவணி பவித்ரோற்சவத்தின் இறுதி நாளிலும் தைலக்காப்பு சாத்தப்படும். எனவே, ஸ்ரீரங்க நாதருக்கு மட்டும் இரு முறை தைலக்காப்பு.

Friday, July 24, 2015

செல்வ வளம் தரும் மந்திரங்கள்


செல்வ வளம் தரும் மந்திரங்கள்


பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.

சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

செல்வ வளம் பெருக ஸ்ரீலக்ஷ்மி மந்திரம்
மனித வாழ்கையின் முக்கிய தேவை பணம். “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற திருவள்ளுவர் வாக்கு இதனை தெளிவுபடுத்துகிறது. நமது கடின உழைப்புக்கு ஏற்றவாறு செல்வ வளத்தை பெருக்கி கொள்ள சில மந்திரங்கள் உதவுகிறது. நல்ல உழைபிருந்தும் செல்வம் சேரவில்லை என்பர்களுக்கு இந்த மந்திரங்கள் சிறந்த பலனை தரும். அதிகாலை 5 முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை பிரம்மமுகுர்த்தம் என்பார்கள் மந்திர ஜபம் செய்ய இதுவே உகந்த காலம்.

மந்திரம்

‘ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு
லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’

பூஜை முறை

ஒரு வளர்பிறை வெள்ளிகிழமையன்று அதிகாலையில் குளித்து தூய ஆடை அணிந்து, மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு முகமாக அமர வேண்டும். அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, வடக்கு முகமாக மகாலட்சுமி படத்தை பொட்டிட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். நெய்வேத்தியமாக கற்கண்டு பால் அல்லது பால் பாயசம் படைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, ஏலக்காய், தேங்காய், பழம், ஊதுவத்தி, ஆகியவற்றை ஒரு பித்தளை தட்டில் வைத்து தீபாராதனை செய்து பூஜையை தொடங்க வேண்டும். இந்த பூஜைக்கு குத்து விளக்கே உகந்தது, பசு நெய்யில் மட்டுமே விளகேற்ற வேண்டும். இந்த மந்திரத்தை 108 முறை தினமும் தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். அல்லது ஒரு மண்டலம் 48 நாட்கள் ஜபம் செய்ய வேண்டும். வெள்ளிகிழமை தவிர மற்ற நாட்களில் லஷ்மி படம் வைக்க தேவையில்லை, அகல் விளக்கேற்றி மந்திர ஜபம் மட்டும் செய்தல் போதுமானது.

Tuesday, July 21, 2015

சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்

சாபம்
சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.:
பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம் : நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த
குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும்., அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்..இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண்குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
கோ சாபம் : பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம் : ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டுபண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், , மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
முனி சாபம்: எல்லை தெய்வங்கள், மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனிசாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.


Saturday, July 18, 2015

கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்

கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள்
(share) செய்யுங்கள்)
நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.
நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும். காத்து கருப்பை விரட்டும் கருப்புநிறம் வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது. உப்பு தண்ணீரின் மகிமை சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.
அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.
செப்பு காசின் மகிமை குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.
செங்கல்லின் மகிமை குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.
தண்ணீருக்கும் சக்தி யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.
பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.
திருஷ்டியை போக்கும் “மை” சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான் அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்கு அவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.
தோஷங்களை நீக்கும் பரிகாரம் பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.
எண்ணை தானம் உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.
குழந்தைகளை தாக்கும் தோஷம் ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன் இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான் இருக்க முடியுமா? ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது.
அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து அழைத்து வரும் வழக்கம் உள்ளது. இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.
பசுவின் பாத மண்ணுக்கு சக்தி வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். “உன்னை பின் பக்கம் வணங்குபவர்களுக்குதான் யோகம் கிட்டு“ என்று பசுவை பார்த்து சீதாபிராட்டி கூறியதாக புராணத்தில் இருக்கிறது. வாழும் வீட்டில் கண்களுக்கு தெரியாத தோஷங்கள், தீய சக்திகளும் நிறைந்து இருக்கும் என்கிறது சாஸ்திரம் அதனால் பசுவின் உடலில் பல தேவர்களும் ரிஷிகளும், தெய்வங்களும் இருப்பதாக புராணம் கூறுகிறது. அந்த பசுவின் பாதத்தில் ஒட்டி இருக்கும் மண், அந்த இல்லத்தில் பதிந்தால் தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும். பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும். அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும் ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் சக்தி இருக்கிறது.
திருஷ்டிபட்டு கட்டைவிரல் கருப்பானது பாண்டவர்கள் வனவாசத்தையும், யுத்தத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு வெற்றியுடன் எல்லோரிடத்திலும் ஆசி பெற்று கொண்டு இருந்தார்கள். துரியோதனனின் தாயான காந்தாரியிடமும் ஆசி பெறறார் தருமர். காந்தாரி கண்களை கட்டி கொண்டு இருந்தாலும் கண்களின் கீழ் அதாவது கண்களை கட்டிய துணியின் இடுக்குகளின் வழியாக தருமனின் கால் கட்டை விரலை பார்த்து, “இனி இந்த காலுக்குதான் பொன்னையும் – பொருளையும் கொட்டுவார்கள்” என்று கூறி கொண்டே பெருமூச்சுவிட்டாள். என்ன ஆச்சரியம்,? நிலகரியை போல தருமரின் கால் கட்டை விரல் கருப்பாக மாறியது. இப்படி பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். உடலுக்கு ரத்த ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் சிலர் அக்குபிரஷ்ர் செருப்பை போடுவார்கள். அதனால் நடக்கும்போது பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இயங்கும். பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இருந்தால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கும் ரத்த ஒட்டம் சீரானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோலதான், முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஸ்படிகத்தின் மகிமை சூரியனின் வெப்பம் பனியை உருக வைப்பதுபோல, தோஷங்களை அகற்றும் ஆற்றல் ஸ்படிக மணிக்கு இருக்கிறது. உடல் மெலிந்து முகத்தில் பொலிவு இழந்து இருப்பவர்கள் ஸ்படிக மணியை அணிந்தால் உடலில் நல்ல முன்னெற்றம் இருக்கும். உடலில் அளவுக்கு மீறிய உஷ்ணத்தையும் ஸ்படிக மணி கட்டுபடுத்தி சற்று குளிர்ச்சியாகவும் மாற்றும்.
ஒரு கைபிடி உணவு நன்றாக சாப்பிட்டு கொண்டு இருப்பவர் சில நாட்களாக சாப்பிடமுடியாத அளவுக்கு உடல் உபாதைகளால் சாப்பிடமுடியாமல் அவதிபடுவார்கள். இதற்கு காரணம், “என்னமா சாப்பிடுகிறான்.” என்று யாராவது சொன்னாலோ அல்லது நான் இன்று நன்றாக சாப்பிட்டேன் என்று, தனக்கு தானே சொல்லிக்கொள்வதாலும் கண்திருஷ்டியாக மாறும். இதனால்தான் பெரியோர்கள் சொல்வார்கள், “மண்ணை தின்றாலும் மறைவாக தின்னவேண்டும்” என்று. திருஷ்டிபட்டால் சாப்பாட்டில் பிடிப்பு இல்லாமலோ அல்லது சாப்பிடமுடியாத சூழ்நிலையோ ஏற்படும். இதற்கு பரிகாரம், ஞாயிற்று கிழமையில் தண்ணீரில் நன்றாக வாய் கொப்பளித்து, நல்லேண்ணையை ஒரு இரும்பு கரண்டியில் காய்ச்சி, அந்த இரும்பு கரண்டியில் இருக்கும் நல்லேண்ணையில், வாய் கொப்பளித்த தண்ணீரை துப்ப வேண்டும். இப்படி மூன்று முறை துப்பினால் திருஷடி கழிந்து, நன்றாக சாப்பிட முடியும். அதை தொடர்ந்து ஆறு ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும். அத்தடன் சாப்பிடும் முன் உங்கள் கைகளால் சாப்பிடும் உணவை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட்டால் தோஷங்கள் நீங்கும்.