ஜபமும் அதன் பயன்களும்
மந்திரம் ஜபம் ஆத்மார்த்தமாக செய்யபட்டு வந்தால் ஒருவது உடல், உள்ளம், செயல் மூன்றிலும் ஆக்கப்பூர்வ விளைவை உண்டாக்கும். ஜபம் யோகத்தில் ஒரு அங்கமானதால் ஜபயோகம் என்று அழைப்பர். கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம் என்கிறார். ஜபம் இறைவனையும் பக்தனையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. மனதோடு ஜபித்தால் மனம் தூய்மை அடையும். அது மெல்ல மெல்ல அடங்கி இறைவனிடம் லயிக்கிறது. விரைவில் வீண் எண்ணங்களிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் விடுபடுகிறது. மனம் சாந்தமாகி அகத்திலும் புறத்திலும் தெய்வ சாந்நித்தியத்தை உணர்கிறது.
தன்னை சுற்றியுள்ள அனைத்திலும் தெய்வீக சக்தி செய்லபடுவதை ஜபம் செயபவர்கள் உணர்கிறார்கள். ஜபத்தை ஆர்வத்துடன் செய்யும் சாதகன் தன் உலகியல் சார்ந்த கடமைகளை அதில் பற்றின்றி அமைதியாக நிறைவேற்றி பல நல்ல காரியங்களை சாதிக்கிறான்
ஜபம் ஒருவனின் பாவங்களையும் கர்ம வினைகளையும் எரித்து சாம்பலாக்கிவிடுகிறது. ஜபத்தின் மகத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் அதன் உயர் பலன்களை சாதகனுக்கு கொடுக்காமல் விடாது. பணம் இருப்பவர்கள் தான தர்மங்கள் செய்யட்டும் பணம் இல்லாதவர்கள் ஜப தவத்தின் மூலம் செவைகள் செய்யட்டும் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். தொடர்ந்து ஜபம் செய்யது வந்தால் புற சூழநிலையிலும் மாற்றம் பெரும். ஜபிக்க நேரமில்லை என்று ஜபம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டாம் நீங்கள் எந்த வேலை செய்தாலும் உங்களின் மூளையின் ஒரு ஒரத்தில் இறைவனின் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருங்கள். ஜபத்திற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை. உதாரணமாக இந்த பட்டினத்தார் பாடலை குறிப்பிடலாம்
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே – வித்தகமாய்க்
காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!!!
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே – வித்தகமாய்க்
காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!!!
நம் உலகியல் வாழ்கையில் எந்த தொழிலை செய்தாலும் எந்த துன்பங்களை பட்டாலும் மனம் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டுமாம். குளத்திலிருந்து நீர் எடுத்து வரும் பெண் அவள் தோழிகளுடன் எப்படி விளையாடிக் கொண்டிருந்தாலும் நீரை வீட்டிற்குள் சேர்க்கும் வரை அவள் நீரை தளும்பாமல் எடுத்து செல்வாள். அதுபோல் ஜபம் செய்ய நேரம் இல்லை என்று விட்டுவிடாமல் இறைவனை ஜபத்திக்கொண்டே உங்கள் உலகியில் வாழ்கை வேலைகளை தொடருங்கள்.
No comments:
Post a Comment