Wednesday, July 30, 2014

அன்பால் வெற்றி கொள்!- சாய்பாபா



எதை எதிர்பார்க்கிறாயோஅதை கடவுளிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி நம்பிக்கைக்கு உண்டு.
சந்தேகம் என்னும் அரக்கனை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். நம்பிக்கை முன்வாசலில் நுழைந்தால்சந்தேகம் பின்வாசலில் வெளியேறி விடும்.


சந்தோஷச் சிறகுகளை வெட்டி விடும் சந்தேகத்தை தூக்கி எறியுங்கள். நம்பிக்கையை நலிவடையச் செய்யும் சந்தேகம் நமக்கு வேண்டவே வேண்டாம்.
தேடும் இயல்புள்ளவர்கள் தடைகள் பலவற்றை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.ஒவ்வொன்றும் ஒரு சவால் போலத் தான். இருந்தாலும் முயற்சியைத் தொடர்ந்தால்வெற்றி கிடைத்து விடும்.
ஒருமுறை கோபம் வந்தால் மூன்று மாத ஆரோக்கியம் போய் விடும். கோபத்தை தைரியத்தாலும்பொறாமையை அன்பாலும் வெற்றி கொள்ள வேண்டும்.
- 
சாய்பாபா

No comments:

Post a Comment