Showing posts with label selling skills. Show all posts
Showing posts with label selling skills. Show all posts

Wednesday, August 27, 2014

வாழ்க்கை எனும் பூங்காவில் வெற்றி விழுவதுகளில் ஊஞ்சலாடுவதற்கு அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கிய மானது

வாழ்க்கை எனும் பூங்காவில்
வெற்றி மலர்களைப் பறிப்பதற்கு
திட்டம் என்கிற செயல்கரங்கள் நீளட்டும்!
வெற்றி விழுவதுகளில் ஊஞ்சலாடுவதற்கு அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கிய மானது செயல்திட்டம் ( Action Plan ).
எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புவதோடு அதை எவ்வாறு சாதிப்பது என்ற திட்டமும் வேண்டும். திட்டமில்லாமல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கின்ற எவரும் வெற்றி யூரை அடைவதில்லை.
திட்டமே வெற்றிக்கு விதை. விதையில்லாமல் விருட்சம் இல்லை. அதுபோல திட்டமில்லாமல் உறுதியான வெற்றியில்லை. ஆகவே திட்டமிடும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்தவொரு செயலானாலும் அதை திட்டமிட்டே முடிக்க முயலுங்கள். முயற்சித்தால் முடியாத்து இல்லை.
நேரமே வாழ்க்கை
உங்களுடைய வாழ்க்கை என்பது மனித்துளிகளின் தொகுப்பாகும். ஆகவே மணித்துளிகள் தோறும் செயல் ஏணிகளில் முன்னேறிக் கொண்டே இருங்கள். ” சும்மா ” இப்பதே சுகம் என்று இருந்து விட்டால் வறுமைதான் உங்களின் விலாசம் ஆகும்.
உழைப்புக் காற்றைச் சுவாசிக்கின்றவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். திட்டமிட்ட உழைப்பும் செயல் வேகத்தோடு கூடிய முயற்சியும் உங்களிடம் இருக்குமானால் உங்களால் சாதிக்க முடியாத்து எதுவுமில்லை.
சுய ஆய்வு
ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் முன்னர், அன்றைய நிகழ்வுகளை ஆய்வு செய்துடன் அடுத்த நாளுக்கான நேரத்திட்டத்தையும் தயார் செய்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களுடைய வெற்றிப் பயணம் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் அதிகாலை 5.00 மணிக்குத் தொடங்க பட்சம் அதிகாலை 5.00 மணிக்குத் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
சோம்பலுக்கு மறந்தும் இடம் கொடுக்காதீர்கள். காலையில் படுக்கையை விட்டு எழுவதில் முந்திக் கொள்கிறவர்களே வாழ்க்கையில் முந்திக் கொள்கின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை.
வெற்றிக்கு முதல் தேவை
வெற்றியாளர்களிடம் பொதுவாகக் காணப்படும் முக்கியமான பண்பு அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுவதுதான். அதிகாலை நேரம் ஆற்றல் மிகுந்த அரிய பொழுதாகும். அப்போழுது மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆகவே, அதிகாலையிலேயே உங்கள் உற்சாகமான செயல்பாடுகளைத் தொடங்குங்கள்.
முடங்கில் கிடந்தால் நமது வாழ்வும், முன்னேற்றமும் முடங்கிவிடும் என்பதை எப்பொழுதும் நெஞ்சில் வைத்துச் செயல்படுங்கள். அதிகாலையில் எழுவது ஒன்றும் கடினமான செயல் அல்ல. உங்களுடைய ஐம்புலன்களை அறிவின் ஆட்சிக்குள் வைத்து கொண்டீர்கள் என்றால் உங்களால் முடியாத்து எதுவுமில்லை.
இரவு உறங்கும் முன்னர் நீங்கள் தயார் செய்கின்ற அடுத்த நாளுக்கான செயல் திட்டத்தில் முதல் நிகழ்வாக ‘ அதிகாலையில் ‘ எழுதல் என்பது இடம் பிடிக்கட்டும். காலைச் செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் கைகள்.
முழுநாளுக்கான செயல்திட்டத்தோடு அதிகாலையில் எழுந்திருக்கும் போது, உங்கள் எதிரில் தோன்றும் சவால்களும் பணிகளும் உங்களுக்கு எளிதானதாகத் தோன்றுகின்றது. அதாவது, நீங்கள் ஒவ்வொரு பணியைச் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே உங்கள் மனம் அவற்றைச் செய்து முடித்து விடுகின்றது. அதாவது ஆழ்மன ஈடுபாடும் ஒத்துழைப்பும் உங்களை இயக்கும் உன்னத சக்தியாக மாறி விடுகின்றது.
ஆகவே, வெற்றி பெறுவதற்கு செயல்திட்டம் தீட்டுங்கள். திட்டமிடுவதோடு நின்றுவிடாமல், திட்டமிட்டவாறே செயல்களை முடித்து வெற்றி வாகை சூடுவதற்கு இப்பொழுதே தயாராகுங்கள்.
வாய்ப்புகளை எதிர்நோக்குங்கள்
நம்பிக்கையே நமது வாழ்க்கை என்பதைப் புரிந்து கொண்டு, எதையும் ஆக்க சிந்தனையோடு அணுகத் தொடங்குகள். அது அப்படி நடந்து விடுமோ, இப்படி நடந்து விடுமோ என்ற அச்சத்தை விட்டுவிட்டு, எது எப்படி நடந்தாலும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளத்துக் கொள்ளுங்கள்.
அதாவது, நாம் நமது முழுஆற்றலையும் பயன்படுத்தி முயற்சி செய்த பின்னர் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையவில்லை என்றால் அதற்காக மனம் கலங்கி விட்க்கூடாது. உங்களுடைய முழுசக்திக்கும் அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்வுக்காக கவலைப்படத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் கவலைக் கடலில் மூழ்க வேண்டியதுதான்.
மனதால் கலக்கப்படுவதாலோ, கவலைப்படுவதாலோ எந்தவிதப் பயனும் இல்லை என்கிற நிலையில், கவலைப்பட்டு பொன்னான நிகழ்காலத்தை வீண்செய்வது விவேகமான செயல் ஆகாது.
திட்டத்தை மாற்றுங்கள்
எதிர்நோக்கோடு தீட்டப்படுகின்ற திட்டத்தை செயல்படுத்தும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், திட்டத்தை மாற்றியமைத்து உங்களுடைய செயல்பாட்டைத் தொடர வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொட்டதும் தொல்வியாகிவிட்டதே என்று மனம் தளர்ந்து செயல் இழந்து முடங்கி விடக்கூடாது. எதற்கும் மாற்று உள்ளது என்ற நம்பிக்கையும் அதை உணர்ந்து அறியும் அறிவும் மிக்க முக்கியம்.
ஒரு மருத்துவரிடம் செல்கின்றீர்கள், உங்களுடைய நோயின் காரணத்தையும் தன்மையையும் பரிசோதித்த பின்னர், அவர் சில மருந்துகளையும் தொடக்கத்தில் கொடுக்கின்றார். ஒரிரு தினங்கள் கழித்து மீண்டும் உங்களை பரிசோதித்துப் பார்க்கும் போது எதிர்பார்த்தவாறு நோய் குணமாகி வரவில்லை என்றால், உடனே மருந்தையும், சிகிச்சையையும் மாற்றுகின்றார். அதாவது நோயைக் குணமாக்குவதே நோக்கமே தவிர, ஏற்கனவே போட்ட சிகிச்சைத் திட்டத்தை செயலாக்குவது அல்ல. அதுபோலத் தான் உங்கள் இலக்கை அடைவதே நோக்கமே தவிர உங்கள் செயல் திட்டத்தை அமுலாக்குவது அல்ல. ஆகவே எதையும் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் அணுகுங்கள்.
தோல்விகளே பாடங்கள்
வெற்றியிலிருந்து கற்றுக் கொள்வதைக் காட்டிலும் தோல்விகளிலிருந்துதான் நாம் அதிகமாகக் கற்றுக் கொள்கின்றோம். ஆகவே தோல்வி நேர்ந்தாலும் அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்ற மன உறுதியும் வலிமையும் வேண்டும். திட்டமிடுகின்றபோதே, திட்டத்தை எதிர்பார்த்தவாறு நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதற்கு மாற்றுத்திட்டமும் செயல் முறைகளையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு எதையும் எதிர்நோக்குங்கள். ஏனென்ன்றால் நம்பிக்கை தான் வாழ்வின் அஸ்திவாரம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்வதோடு, நல்லன அல்லாதவை நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுவதற்கு எப்பொழுதும் உங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
வெற்றியின் விதைகள்
செயல்களே வெற்றியின் விதைகள், செயல்படாமல் இருப்பவர்கள் எப்பொழுதும் வெற்றியின் வெளிச்சத்திற்கு வருவதில்லை. உறங்கிக் கொண்டிருக்கும் யானையை விட செயல்படும் எறும்பே உயர்வானது. உங்களுடைய செயல்களை சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதால் வேலையில் சலிப்பு ஏற்படாது அத்துடன் தள்ளிப்போடும் எண்ணத்தையும் தவிர்த்து விடலாம்.
எண்ணங்களைச் செயல்திட்டமாக மாற்றுங்கள். செயல்திட்டத்தை உத்வேகத்தோடும் ஆழ் மன ஆற்றலுடனும் நிறைவேற்றுங்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள். வெற்றி வானில் உங்களாலும் சிறகுவிரித்து மகிழ முடியும். ஆம் முடியும் என்று நினைப்பவர்களே வென்று காட்டுகின்றார்கள்.
நெஞ்சக் கழனியில்
நம்பிக்கை மலரட்டும்
எதிர்காலக் கனவுகளெல்லாம்
எதிர்ப்பின்றிக் கனியட்டும்!! சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

urs Happily 

www.v4all.org 

Thursday, July 24, 2014

நல்லி குப்புசாமி செட்டியாரின் (Nalli Silks) நிர்வாகவியல் விதிகள்

நல்லி குப்புசாமி செட்டியாரின் (Nalli Silks) நிர்வாகவியல் விதிகள்



வெற்றியின் அடிப்படை  நிர்வாகவியல்  அம்சங்கள் என்ற தலைப்பில் சென்னைஎலும்பூரில் உள்ள Indian Institute Of Planing And Management   என்ற
நிர்வாகவியல் கல்லூரி M.B.A  மாணவர்களுக்கு   நல்லி குப்புசாமி செட்டியார்கருத்துரை வழங்கினார்.

நல்லி குப்புசாமி செட்டியார் இன்று  பட்டுப் புடவைக்கு மிகவும் பிரபலமாக உள்ளநல்லி சில்க்ஸ்(Nalli Silks) நிறுவனத்தின்  உரிமையாளர் அவர் தனது தொழில்அனுபவத்திலிருந்து  கற்றுக் கொண்ட நிர்வாகவியல் உத்திகளை (Management Techniques) மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் எடுத்துச் சொன்ன முக்கிய
நிர்வாகவியல்   கூறுகள் ( Management Techniques) :

1. பொருளின் தரம்(Quality of Product),

2.நேரத்தே பணி (Timed Task) ,

3.நேர்மை (Integrity) ,

4. வாடிக்கையாளர் மீதான அக்கறை (care with on  customer ),

5. புதுமையில் நாட்டம்( Propensity Of Innovation) ,

6.மாற்றங்களில் கவனம் (Focus on changes),

7.  பிறரது தோல்விகளிலிருந்து பாடம் பெறும் புத்திக் கூர்மை (Learn Lessons
from the failures of others ) ,

8. தன்னம்பிக்கை (Self Confident),

9. சாதகமில்லாத சூழ்நிலைகளிலும் சாதனை புரிவதில் நாட்டம் (Pursuit Of
Achievement in the  Unfavorable Situation)   ,

10. வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்வது (Take Advantage of
opportunities ) ,

11. ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது (Providing Training to Employees).

போன்றவை ஒவ்வொரு தொழில் முனைவோரும் (Entrepreneurs)  பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான நிர்வாகவியல் அம்சங்கள் (Management Strategy) 

Yours Happily 
Dr.Star Anand Ram
www.v4all.org 

Tuesday, July 22, 2014

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவது எப்படி?

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவது எப்படி?



இன்றைய நவீன காலத்தில்எந்த வியாபாரத்தையும் தொடர்ந்து இலாபகரமாக நடத்துவது என்பது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்களை சரியான விதத்தில் திருப்திபடுத்தாத எந்த ஒரு வியாபாரமும் அதிக காலம் நீடிப்பதில்லை.

சேவையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறமுதலில் மற்றவர்களிடம்நல்லமுறையில் பணிவாக நடக்கக்கூடியவராக இருக்க வேண்டும்அனைவரிடமும் நல்ல முறையில் பணிவாக நடந்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. போட்டிகள் நிறைந்த உலகச் சந்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதத்தில் சிறந்த வாடிக்கையாளர் சேவையாளராக மாற என்னென்ன யுக்திகளைக் கையாள வேண்டும் என்பதை பார்ப்போம்.

கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை பயனுள்ள விதத்தில் செலவழிப்பதற்கு நம் ஸ்தாபனத்திற்கு வந்துள்ளார்கள் என்ற நல்ல எண்ணத்துடன் வாடிக்கையாளர்களை பார்க்கவேண்டும். நாம் எவ்வாறு ஒரு பொருளை வாங்கும் முன் பலமுறை சிந்தித்து அது பயனுள்ளதா அல்லது பயனற்றதா என்று பார்த்த பிறகுதான் வாங்குவோமோ,அதைப்போல்தான் நம் வாடிக்கையாளர்களும். எனவேஅவர்களின் தேவையை சரியாக புரிந்து அவர்களிடம் நல்லமுறையில் நடந்துக் கொள்ளவேண்டும். இவ்வாறுவாடிக்கையாளர்களிடம் நல்லெண்ணம் கொண்டு நடப்பதால் அவர்களை எளிதில்கவர்ந்துவிடலாம்.

முகபாவனையும்கண்கள் தொடர்பும் வாடிக்கையாளர் சர்வீஸில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் கடைசிவரை நிலவ முதல் சந்திப்பு மிக முக்கியமானது. இந்த முதல் சந்திப்பின் முதல் சில வினாடிகளே 55%கவர்தலுக்கு காரணமாகிறது. இந்த 55% எதைப் பொறுத்தது என்றால் முகபாவனையும்,கண்களின் தொடர்பும்சொல்லுக்கேற்ற உடலசைவும் உங்களின் ஆடையுமாகும். மீதமுள்ள45% கவர்தல் உங்களின் பேச்சாகும்அதிலும் 38% உங்கள் குரலின் ஒலியேநிர்ணயித்துவிடுகிறது.

எந்த ஒரு கஸ்டமரும் முதல் சில வினாடிகளில் உங்களிடம் கவரப்பட்டுவிட்டால்மற்ற வியாபாரப் பேச்சுக்கள் மிக எளிதாக அமைந்துவிடும்அதனால் எப்பொழுதும் புன்னகை பூத்த முகமாக அவர்களின் கண்களை பார்த்தவாறு அவர்களை வரவேற்றுப் பேசவும். (கண்களை பார்த்தவாறு என்றால் அவர்களின் முகத்தை உற்று முறைத்தவாறு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

வாடிக்கையாளர்களின் பெயரை தெரிந்துக் கொள்ளுங்கள்

சில வினாடி சந்திப்புகளில் அவர்களின் பெயரை தெரிந்துக் கொள்ளுங்கள்இதனால்வாடிக்கையாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு-தொடர்பு ஏற்படுகிறது. அதே போன்று உரையாடலின் தொடக்கத்திலேயே உங்கள் பெயரையும் தெரியப்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்களின் பெயர்களை மட்டுமில்லாமல் அவர்களின் அடுத்தடுத்த சந்திப்பின்போது மற்ற அவசியமான-தேவையான விபரங்களை அறிந்து அதற்கேற்றவாறு அவர்களை திருப்பதிபடுத்தலாம்.

உங்கள் வாடிக்கையாளரை அவர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட சிறப்பான முறையில்நடத்துவதன் மூலம் நிரந்தர வாடிக்கையாளராக்கலாம். ஒவ்வொரு மனிதனும் மற்றவரிடம்ஒரு கட்டத்தில் மரியாதையும்நன்மதிப்பையும் எதிர்பார்க்கிறார்கள்வாடிக்கையாளராக வருபவரும் அதே உணர்ச்சியைப் பெற்றவர்தான்அவ்வாறு வரும் வாடிக்கையாளரை சாதாரண முறையில் நடத்துவதைவிட உங்கள் முதலாளியுடன் எப்படி நடந்துக் கொள்வீர்களோ அல்லது ஓர் நாட்டின் அதிபரிடம் எப்படி நடந்துக் கொள்வீர்களோஅவ்வாறு நல்ல மரியாதையுடனும் மதிப்புடனும் நடந்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் தற்பொழுது எந்த வியாபாரமும் செய்யாவிட்டாலும்பிற்காலத்தில் அவர்கள் உங்கள்வாடிக்கையாளராக மாறலாம் அல்லது மற்றவரிடம் உங்கள் வியாபாரத்தைவிளம்பரப்படுத்தலாம்.

வாடிக்கையாளரிடம் அவர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட சில அதிகமான சலுகைகளுடன் கவனிக்கவும்இதனால் அவர்களுக்கு உங்களிடம் ஏற்படுத்திக் கொண்ட வியாபாரத்தின் மதிப்பு கூடுகிறது இதனை ஆங்கிலத்தில் VALUE ADDED SERVICE என்று சொல்லப்படுகிறது.

வாடிக்கையாளரிடம் அன்பு காட்டக் கற்றுக் கொள்ளுங்கள். கிரேக்க மொழியில் அன்புச் செலுத்துவதை மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது அதாவது "அகேப்", "பிலியோ", "இராஸ்"என்பதாகும். இதில் "அகேப்தாய்-பிள்ளை பாசத்தை குறிக்கிறது. "இராஸ்கணவன்-மனைவியின் காதலை குறிக்கிறது. "பிலியோசகோதரப் பாசத்தை குறிக்கிறது. உங்கள் வாடிக்கையாளரிடம் "பிலியோ"-வுடன் நடந்துக் கொள்ளுங்கள் அதாவது அவர்களிடம் சகோதரதனமான அன்பை வெளிப்படுத்துங்கள்அவர்கள் புதியவர்கள் என்று பாராமல்,வெட்கப்படாமல் பழகுங்கள். நாம் அடுத்தவரிடம் அன்புடனும்உதவிகரமாகவும் நடக்கும்பொழுது ஓர் இனம் தெரியாக ஆனந்தம் மனதில் உண்டாகிறது.

உங்கள் தொழிலில் வெற்றிப் பெற முக்கிய பண்புகள் தேவைப்படுகிறது.

தொழிலில் நேர்மையாகவும்பொறுமையாளராகவும்கடின உழைப்பை கொண்டவராகவும் மாறிக் கொள்ளுங்கள்வெற்றி உங்களை தேடிவரும். உங்கள் கம்பெனியிலோதொழிலிலோ நீங்கள் ஓர் உதாரணப் புருஷராகவோ அல்லது சிறந்த ஊழியராகவோ மாற முயற்சி மேற்கொள்ளுங்கள். அடுத்தவர் சொல்லிச் செய்பவராக இல்லாமல் தானாக முன்வந்து உங்களுக்கு தரப்பட்ட வேலையை திறம்பட செய்யுங்கள். வருமான உயர்வை நீங்கள் யாரிடமும் கேட்கத் தேவையில்லைஅது உங்களை தேடிவரும். நீங்கள் நல்ல எண்ணங்களுடன் வியாபாரத்தை முன்னேற்றுவதற்காகவும்நேர்மையாகவும்,பொறுமையாகவும்கடின உழைப்பவராகவும் இருந்து சிறந்த வாடிக்கையாளர் சர்வீஸராகதிகழ்வதுடன் உங்கள் வருமானமும் வியாபாரமும் முன்னேறும்.

வாடிக்கையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது பின்வரும்செயல்களில் கவனம் செலுத்தவும்:

• 
குறைந்தது மூன்று ரிங்கிங் ஒலிக்குள் தொலைபேசியை எடுத்துவிடுங்கள்.
• வாடிக்கையாளருக்கு முகமன்/வாழ்த்து தெரிவித்துவிட்டு உங்கள் ஸ்தாபனத்தின் பெயரையும்உங்கள் பெயரையும் தெரிவியுங்கள்.
• தெளிவாகவும்நிதானமாகவும்பொறுமையாகவும் பேசுங்கள்.
• 
வாடிக்கையாளருடன் பேசும்பொழுது மன உறுதியுடனும்உற்சாகத்துடனும்,சந்தோஷத்துடனும் பேசுங்கள்.
• 
வாடிக்கையாளர் குறிப்பிடும் தகவல்களை உடனே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
• 
கஸ்டமரின் தேவைகளை அறிய தக்க கேள்விகளை கேட்டுக் கொள்ளவும்.
• 
வாடிக்கையாளர் தெரிவித்த குறிப்புகளை சரிபார்க்கும் விதமாக நீங்கள் ஒரு முறை மீண்டும் அவர்களிடம் கூறவும்.
• 
தொலைப்பேசியில் வாடிக்கையாளருடன் பேசும்பொழுது ஏதேனும் குடித்துக் கொண்டோ,சாப்பிட்டுக் கொண்டோ பேசாதீர்கள்.
• 
வாடிக்கையாளருடன் தொலைபேசியில் பேசும்பொழுது அடுத்த தொலைப்பேசி அழைப்புவந்தாலோ அல்லது வேறு அவசர வேலை இருந்தாலோ வாடிக்கையாளரிடம் அனுமதி கேட்டபின் உரையாடலை சிறிது நேரம் நிறுத்தலாம்.
• 
உரையாடலின் முடிவில் நன்றி சொல்லுங்கள்.
• 
வாடிக்கையாளர் தொலைபேசி தொடர்பை துண்டிக்கும்முன் நீங்கள் துண்டித்துவிடாதீர்கள்.
• 
வாடிக்கையாளரிடம் நேரிலோதொலைபேசியிலோ பேசும்பொழுது சரியான வார்த்தைகோர்வையோடு பேசுங்கள். உங்கள் குரலின் தொனி 38% பங்கினை வகிக்கிறது என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்சரியானநேர்த்தியான சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளை பயன்படுத்தவும். வார்த்தைகளுக்கேற்ற உச்சரிப்பும்அழுத்தமும் மிக முக்கியமானது.

உதாரணமாக உங்கள் வாடிக்கையாளருடன் சோம்பலானசரத்தில்லாத வார்த்தைகளைஉபயோகிக்கும்பொழுது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படலாம். எனவேவார்த்தைகளைபயன்படுத்தும்பொழுது பார்த்து பயன்படுத்துங்கள். இது பயிற்சி மற்றும் அனுபவத்தில் மூலம் வந்துவிடும்.

• 
வாடிக்கையாளரை திருப்திபடுத்தி வெற்றிகரமான வியாபாரம் நடத்த உங்கள்ஸ்தாபனத்தின் அனைத்து சகதொழிலாளியின் பங்கும் கூட்டு முயற்சியும் மிகமுக்கியமாகும். ஒவ்வொரு தொழிலாளியும் தத்தம் பணிகளை கடமையுடனும்,ஒற்றுமையுடனும் செய்யும்பொழுது வியாபார வெற்றி எளிதாகிறது. தொழிலில் வெற்றிபெற சகதொழிலாளர்களுடன் ஒற்றுமையாகவும்நேர்மையாகவும்நல்லவிதமாகவும் நடந்துக் கொள்ளுங்கள்.

அதிருப்தியடைந்த வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது எப்படி?

வாடிக்கையாளருக்கு குறை அல்லது பிரச்சினை ஏற்பட்டு உங்களிடம் கோபமாக வரும்பொழுது அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பார்ப்போம். முதலில் இவ்வாறு வரும் குற்றச்சாட்டுக்கள் உங்களையோஉங்கள் ஸ்தாபனத்தையோ குறைகூறும்குற்றச்சாட்டு என்று எண்ணாமல் அவை ஒருவிதத்தில் மேன்மைப்படுத்த வந்ததாகஎண்ணுங்கள். உங்களிடம் தவறு வெளிப்பட்டிருந்தால் ஸ்தாபனத்தின் முன்னேற்றத்திற்காக திருத்திக் கொள்ளலாம்அது மட்டுமில்லாமல் அப்படி கோபப்பட்டு வரும் வாடிக்கையாளரை தவறாக எண்ணிவிடவும் கூடாதுஅப்படி எண்ணிவிட்டால் அவரிடம் மேற்கொண்டு திருப்தி அளிக்கும் விதத்தில் கையாளுவதில் மிகவும் கடினமாகிவிடும்.

வாடிக்கையாளருடைய கோப-தாபங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள் எந்ததருணத்திலும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டுவிடாதீர்கள் அவர்களின் பிரச்சினையை முழுமையாக பொறுமையுடன் கேளுங்கள். என்ன பிரச்சினை என்று சரிவர தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப கேள்விகளை கேளுங்கள். அந்த பிரச்சினை சரிசெய்யும் விதமாக ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளை வாடிக்கையாளரிடம் முன் வையுங்கள். அவர்களிடம் பேச்சை துவங்கும்முன் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக மன்னிப்பு கேளுங்கள்.

இதனால் அவர்கள் சற்று மென்மையும் சாந்தமும் அடைய வாய்ப்புண்டு. அதோடு உங்களுக்கும் அவர்களை மேற்கொண்டு கையாளுவதில் எளிதாகிவிடுகிறது. இச்சந்தர்ப்பங்களில் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் மிக கவனம் தேவை. இவ்வாறாக கோபத்துடன் வந்த வாடிக்கையாளரிடம் உணர்ச்சிவசப்படாமல் சரியான முறையில் கையாண்டால் அவர்களை நீங்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றிவிடலாம்.

Yours Happily 
Dr.Star Anand Ram 
www.v4all.org 
cell- 9790044225 

Sunday, July 13, 2014

பென்சில் தத்துவம்

கைபிடித்தபோது பென்சில் எமக்கு காட்டியவை!

எம் கரங்கள் அகரம் தேய்த்து அடுத்ததாக பேனாபிடிக்கு முன்னர் எம் கைபிடித்தது பென்சில் தானே! அந்தப்பென்சில் எமக்;கு காட்டித்தந்த ஐந்து முக்கியமான விடயங்களை நாம் கற்றுக்கொண்டோமா?

பென்சில்....... 
பல விடயங்களை எழுதுவதற்கும் வரைவதற்கும் முழுமையாக அது தன்னை நமது கைகளில் ஒப்படைகின்றது.

அவ்வப்போது அதை நாம் சீவுகின்றோம். நாம் சீவும்போதெல்லாம் அது தன்னை கூர்மையாக்குகின்றது.

தவறுகள் செய்தாலும் அவற்றை அழிப்பதற்கும், திருத்தி எழுதவும் இடம் கொடுகின்றது.

வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே உடையாமல் சீராக இருகின்றது.

சின்னம்சிறு பென்சிலாகும் அளவுக்கு சீவப்பட்டாலும் எழுதிக்கொண்டிருக்கின்றது. கடைசிவரை தன் சுவட்டினை காகிதத்தில் பதிக்கின்றது.

Nதுபோல..............

பல அரிய நகழ்வுகளை நிகழ்த்த நான் ஒரு கருவிதான் என்கின்ற அடக்க உணர்வோடு உங்களை கடவுளின் கைகளில் ஒப்படைத்துப்பாருங்கள்.

சோதனை வரும்போதெல்லாம் மேலும் மேலும் கூர்மையாகிக்கொள்ளுங்கள்.

தவறுகள் செய்திருப்பதாக தெரிந்தால் அதை ஏற்று உடனடியாக அதை திருத்திக்கொள்ளு;கள்.

வெளிச்சூழலால் புகழ்வந்தாலும், பழிதான் வந்தாலும் உள்ளே எப்போதும் உறுதியாகவே இருங்கள்.

கடைசிவரை உழைத்துக் கொண்டிருக்கவேண்டும் காலச்சுவட்டில் உங்களது பெயரை பதிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

இதுவே நீங்கள் பிடித்த பென்சில் உங்களைப்பிடித்து சொல்லிவிட்டுப்போன தத்துவம்