Showing posts with label STRESS RELIEF YOGA. Show all posts
Showing posts with label STRESS RELIEF YOGA. Show all posts

Saturday, July 18, 2015

மந்திர தந்திர ரகசியங்கள்

மந்திர தந்திர ரகசியங்கள் 
ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் காராமணிப் பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிக் கீழே உள்ள மந்திரத்தை 7 தடவை ஜெபித்து
அந்தக் காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை வேண்டிகே கிளம்பிச் செல்ல காரியத்தடைகள் நீங்கி வெற்றியுண்டாகும்.ஒரு குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும் போது பலரின் எதிர்ப்பு,பொறாமை,திருஷ்டி இருந்தால் அந்த மாதிரி நேரங்களில் இந்தப் பிரயோகத்தை உபயோகிக்க நிச்சயம் வெற்றி கிட்டும்.
இதை செய்த வெளியூர்,வெளிநாடு பயணம் கிளம்ப வெற்றியுடனும் பாதுகாப்புடன் திரும்பலாம்.
மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ ||
----------------------------------------------------------------------
:2. செல்வவளம் பெற ஸ்ரீ புவனேஸ்வரி வித்யா பிரயோகம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன் குளித்து வெண்ணிற ஆடை அணிந்து சூரியனைப் பார்த்தபடியே ஹ்ரீம் என்று 108 தடவை ஜெபிக்கவேண்டும்.ஜெபத்திற்கு மாலைகள் அவசியம் இல்லை.
பயன்படுத்த வேண்டும் என்றால் ஸ்படிகம் அல்லது ருத்ராக்ஷ மாலை பயன்படுத்தவும்.
ஜெபித்து முடித்த பின் வெண்சந்தனப் பொடி அல்லது வெண்சந்தனக் கட்டையை அரைத்து ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் அணிந்து கொள்ளவும்.பின் மற்ற நாட்களில் ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் வெண்சந்தனம் அணிந்து வரவும்.இதை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்து வர செல்வம், புகழ் இவற்றில் படிப்படியாக உயர்ந்த அந்தஸ்தை அடையலாம்
-------------------------------------------------------
அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம்
ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமன வேளையில் ஊருக்கு வெளியில்,காட்டில், அல்லது மயானத்தில் உள்ள ஒரு அரசமரத்தடியில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி, விளக்கிற்கு குங்குமம்,மஞ்சள் வைத்து பாயசம் படைத்து வழிபடவும்.பின்னர் பிரதட்சிணமாக அதாவது இடமிருந்து வலமாக 11 தடவை வலம் வரவும்.வலம் வந்து முடிந்தவுடன் விளக்கின் முன் நின்று கவலை, பிரச்சனை என உங்கள் மனக்குறை என்னவோ அது விரைவில் தீர வேண்டிக்கொள்ளவும்.பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடவும்.இதைக் குறைந்தது 3 வாரம் செய்யவும்.துன்பங்கள் நீங்கும்,சுபகாரியத்தடைகள் தீரும்.தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ,பணப்பற்றாக்குறை என வேண்டிக்கொண்ட பிரச்சனை என்னவோ அது தீரும் அல்லது அதைத் தீர்க்கும் வழி மனதில் தோன்றும்.
-------------------------------------------------------------------------
சர்வ க்ரஹ தோஷ நிவாரண பரிகாரம்!!!
செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர் அல்லது 1 மீட்டர் நீளமுள்ள சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை) ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக்
கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.
பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும்.இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
மந்திரம் :-
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||
----------------------------------------------------------------------
.வீட்டில் நிம்மதி நிலவ துரதிர்ஷ்டம் நீங்க
ஒரு பௌர்ணமி அன்று நல்ல தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் வரையவும்.பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றவும்.பின்னர் அதைக் கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும் வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றவும்.முடித்தபின் ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் கழற்றிவிட்டுவெறும்
காலுடன்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று 11 தடவை ஜெபித்து
மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம்,துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விடவும். இதன் மூலம் வீட்டில் வளமும்,நலமும்,மகிழ்ச்சியும் உண்டாகும்
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand

Thursday, July 16, 2015

பொய் அறிவுஇன்றி மெய் அறிவால் ஈசனை வெகுவிரைவில் அடைந்த கண்ணப்ப நாயனார்

பொய் அறிவுஇன்றி மெய் அறிவால் ஈசனை வெகுவிரைவில் அடைந்த கண்ணப்ப நாயனார் ( கொஞ்சம் பெரிய பதிவு, படித்து இன்புற விண்ணப்பம் )
திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தின் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார். கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர். வேடுவ குல மைந்தன் பொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர். இவ்வூரில் வேடுவ சாதியினர் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப்போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேடுவ குல முதலியாக்கினார். முன்னைத்தவத்தின் பயன் குலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார். அவருடன் வேட்டுவ மறவரெல்லாம் திரண்டனர். கடி நாய்கள் முன்னே பாய்ந்து சென்றன. வேட்டுவரோடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும், தலைதுணிவனவும், குடர்சரிவனவுமாயின. அவ்வேளையில் கடியதோர் பன்றி வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று. அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடிவழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைச் சேர்ந்த நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர். திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்கே உள்ளது? எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்குமரத்தைக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான். பன்றியைக் காவிக்கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் அம்மலைக்குச் செல்வோம் என்றார். 'மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்' என நாணன் சொன்னான். மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம்புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது. மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. தேவர் இருக்கும் இடம் செல்வோம் என விரைந்து நடந்தார். பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவதுந்துபி எழுதும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. "இது என்ன இசை" என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன்வண்டின் இரைச்சலாகவே தோன்றியது. திண்ணனாரது முன்னைத் தவத்தின்பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப்போலச் சென்றுகொண்டுருந்தார். இவ்வண்ணம் சென்றுகொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேற் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாயுள்ள தேவரைக் கண்டார். அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக்கொண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ" என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன. "நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்; இன்றும் அவனே இச்செய்கை செய்தான்" என நாணன் கூறினான். "இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை" என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார். நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவரிற்கு இறைச்சி கொண்டுவரவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் ஏவவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவுகொண்டு கைகூப் ப்பித் தொழுதுவிட்டு வில்லெடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர். திண்ணப்பார் கல்லையிற் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகமாடினார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற் சாமமானபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது.
அந்தணரின் அவதி
அன்று பகற்போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரங் கற்ற ஆசாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே. வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு என்பனவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகலமிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வில்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினங் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார். பூசைக்கு நேரம் தாழ்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின் பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார். குடுமித்தேவருக்கு அன்பர் சுவை கண்ட ஊனமுது இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார். அதிற் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார். இவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் இருந்தனர். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் ஒழுகினார். நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன் வந்த நாகனாரும், கிளையினரும் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமற் கைவிட்டுச் சென்றனர். "அவன் நமக்கினியன்" - காளத்திநாதர் சிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையிற் பெருமான் கனவில் தோன்றி 'இச்செய்கை செய்பவனை நீ இகழவேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாயமைவது; அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெலாம் நமக்கினியன். இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை யிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். சிவகோசாரியார் பெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது. அப்பர் கண்ணை நிரப்ப தன் கண்ணை அப்பி கண்ணப்பரானார் திண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற் பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழமைபோன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்துகொண்டிருந்தார்.அவருக்குத் தோன்றிய சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன. தீய பறவைகளின் ஒலி கொண்டு 'இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணிற் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்கமெய்தினார். அவரது வாயினீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித்தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது. செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ? என்று எங்கும் தேடிச்சென்றார். எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் பறித்துவந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார். மருந்து பலன் தராமையால் நொந்தார். "ஊனுக்கு ஊன்" என்றோர் மருந்து நினைவு வரவே கண்ணுக்குக் கண் என்றோர் புத்தி புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். நன்று நான் செய்த இந்த மதி என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார். மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்டமுனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையாற் தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க"என்று அமுத வாக்கு அருளினார். இதனை ஞானமா முனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ. "இதுவோ கடவுட்பற்று"
ஆதி சங்கரர்
சிவபெருமான் பெருமையை 100 சுலோகங்களில் பறை சாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுடைய (வடமொழி) நூலில் ஆதி சங்கரர் 61 வது சுலோகத்தில் கடவுட்பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் சொல்கிறார். அவ்விலக்கணத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் 63 வது சுலோகத்தில் கண்ணப்பரின் உள்நிறைந்த அன்பின் மூன்று செய்கைகளையும் குறிப்பிட்டுவிட்டு இதுவன்றோ பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வேடுவனே இலக்கணம் என்கிறார். அச்சுலோகத்தின் உரை கீழ்வருமாறு: வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது; வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது; சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது; பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு எவர்? இந்த சுலோகத்திற்கு உரையாசிரியர்கள் உரை எழுதும்போது, இதனில் தீவிர பக்தியின் மூன்று படிகள் சித்தரிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். சுலோகத்தின் மூன்றாவது வரி முதல் படி. தான் சிறிது சுவைத்துவிட்டு மீதமுள்ளதும் அதே விதத்தில் தேனொழுக இனிக்கும் என்று சொல்வதில் ஒருவித நம்பிக்கைதான் இருக்கிறதே தவிர முழுமையாக அறுதிப்படுவது இயலாது. அதனால் இது தீவிர பக்தியில் ஒரு சாமானியப்படிதான். சுலோகத்தின் இரண்டாவது வரி அடுத்த படி. வாயிலிருந்து உமிழ்ந்த நீர் ஆண்டவனுக்கு அபிஷேகமாகிறது. ஆனால் 'அது' என்னும் ஆண்டவனின் ஆனந்தத்தில் சங்கமமாகும் 'இது' என்னும் இந்த ஜீவனின் உமிழ்நீர் இன்னும் 'அது', 'இது' என்ற இரட்டையின் மயக்கத்தில்தான் இருக்கிறது. அதனால், இது தீவிரபக்தியின் அடுத்த மேல் படி என்று சொல்லலாமே தவிர தீவிரபக்தியின் உச்சகட்டமாகச்சொல்லமுடியாது. சுலோகத்தின் முதல் வரியை தீவிரபக்தியின் உச்சநிலையாகச் சொல்லலாம். ஏனென்றால், பக்தன் தன் மிதியடியையே தேவனின் கண்ணில் வைக்கும்போது, அங்கு தேவன் வேறு தான் வேறு என்ற பாகுபாடெல்லாம் பறந்து போய்விட்டது. 'தத் த்வம் அஸி' (அதுவே நீ) என்ற உபநிஷத்து மகாவாக்கியப்படி, அந்தப் பரம்பொருளே இந்த ஜீவன் என்ற இலக்கணம் ருசுவாகிறது!
மாணிக்கவாசகர்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை "வா" என்ற வான் கருணை சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்துபி கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.


Ankhamuthu Kumar's photo.

கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி

கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இருந்தாலும் நிறைய பேர் அடிக்கடி கோபப்படுகிறார்கள். அவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்தமுடிவதில்லை.
அது சரி, கோபம் ஏன் வருகிறது?
எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் உங்களுக்கு கோபம் வரும். நீங்கள் விரும்பாதது உங்களுக்குக் கிடைத்தாலும் உங்களுக்கு கோபம் வரும். நீங்கள் விரும்பிய விஷயம் நடக்காமல் போனால் அல்லது விரும்பாத விஷயம் நடந்தால் உங்களுக்குக் கோபம் நிச்சயம் வரும்.
நீங்கள் ஒருவரைக் காதலிக்கிறீர்கள். ஆனால் அவர் உங்களைக் காதலிக்கா விட்டால் உங்களுக்குக் கோபம் வரும். கோபம் மட்டும் அல்ல, மனம் வெகுவாகக் காயப்படும். துன்பத்தில் நரக வேதனை அனுபவிப்பீர்கள். பொறாமையினால் கூட கோபம் வரும். நீங்கள் பாதுகாப்பற்று உணரும்போதும் கோபம் வரும்.
நீங்கள் வசதியாக பிரயாணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது கோபம் வருகிறது. ஏன், ஒரு முக்கிய விஷயமாக வெளியே செல்லும்போது மழை வந்தால் இயற்கையின் மீது கூட நமக்கு கோபம் வரும்.
சில நியாயமான விஷயங்களுக்காக சில சமயங்களில் கோபம் வரலாம். அது தப்பில்லை. ஆனால் அடிக்கடி கோபப்படுவது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் கெடுதல் ஆகும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதி முதலில் வர வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காக கோபப்படுவது தவறு என்று உணர வேண்டும். உதாரணமாக மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் இவற்றிற்கு கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்தால் கோபம் வராது.
கோபம் உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தால் கோபம் வராது. எல்லாவற்றிற்கும் மேலாக யோகா மற்றும் தியானம் தவறாமல் செய்தால் கோபம் நிச்சயம் குறையும்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Sunday, May 3, 2015

ரிலாக்ஸ் டெக்னிக்!

ரிலாக்ஸ் டெக்னிக்! - www.v4all.org 

நீங்கள் இருக்கும் சூழலை பிடித்தமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். தோழியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்லலாம். குழந்தைகள் நிறைந்த இல்லங்களுக்கு சென்று சிறு உதவிகள் செய்யலாம். இயற்கையான சூழலில் பேசியபடியை காலாற நடக்கலாம். பசுமையும், அழகும் டென்சன் குறைக்கும். வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் நேரம் செலவளித்தால் மனதில் மகிழ்ச்சி ததும்பும். * வீட்டில் நீண்ட நாள் அடுக்கப்படாத அலமாரியை சுத்தம் செய்தல், தோட்ட வேலைகள், வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி தோற்றத்தை புதிதாக்குவது என உடலுக்கு வேலை கொடுக்கும் போது மனம் அமைதி அடைகிறது. வீட்டின் அல்லது தோட்டத்தின் புதிய தோற்றம் மனதை அழகாக்கும். * இசைப்பிரியர்கள் பிடித்த பாடல்களை ஓட விட்டு கண்களை மூடியபடி இசையில் கரையலாம். மாற்றுச் சிந்தனை உள்ள புத்தகங்கள் படிக்கலாம். இதன் மூலம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்னையின் தீவிரம் குறையும். * எந்த ஒரு பிரச்னையையும் நேர்மறையாக அணுகுவது கூடுதல் பலன் தரும். அப்போது தான் பிரச்னையை முழுமையாகப் புரிந்து கொண்டு அதனை

தீர்ப்பதற்கான வழி வகைகளை உருவாக்க முடியும். பிரச்னை என்பது இயல்பானது என்ற புரிதல் தைரியத்தை அளிக்கும். பிரச்னைகளே நம்மை அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றன என்ற பார்வை நம்மை வெற்றியை நோக்கி நகர்த்தும். பிரச்னைகள் வேலையில் அல்லது நமது திறமையில் நம்மை ஒரு படி அதிகமாக வளர வைக்கின்றன. பிரச்னையை சமாளிப்பதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் முன்னோக்கித் தள்ளுகின்றன. தான் என்கிற எண்ணம் மனிதர்கள் மத்தியில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. தன்னை மிகச்சாதாரணமான விஷயத்துக்காக யாராவது குறை கூறினாலும் அதை அவமானமாகக் கருதி கோபம் கொள்ள இந்த எண்ணம் வழிவகுக்கிறது. இன்றைய குட்டிச் செல்லங்களிடம் இந்தப் போக்கைக் காணலாம். இதுவே மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த மன அழுத்தம் மூளையின் ரசாயன சுரப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் உடலைத் தாக்கும் நோய்களுக்கு அடித்தளம் இடுகிறது. மன அழுத்தம் ரத்த அழுத்தத்துக்கு காரணம் ஆவதுடன் மாரடைப்பு போன்ற பாதிப்புகளை உருவாக்கும் அளவுக்கு கொடுமையானது. இந்த மன அழுத்தம் எனும் வில்லனை ரிலாக்ஸ் டெக்னிக் மூலம் கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைக்கலாம். தான் என்ற எண்ணத்தை விட்டு கீழே இறங்கி வாருங்கள். ஆம் நீங்கள் இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவர். இந்த உலகம் தோன்றியதில் இருந்து உருவான புல், பூண்டு, பூச்சிகள் வரிசையில் நீங்கள் எத்தனையாவது பிறப்பு என்று யோசித்திருக்கிறீர்களா? நாம் அவ்வளவு சாதாரணமானவர்களே. எதற்கு இவ்வளவு ஈகோ! உங்கள் முன் நடக்கும் எந்த விஷயத்தையும் எளிமையாக எடுத்துக் கொள்ளுங்கள். * ஓரளவுக்கு மனம் சமாதானப்படுவதற்கான இது போன்ற செயல்முறைகளை பின்பற்றலாம். பிரச்னையின் விளைவாக உடலில் உண்டான சோர்வினைப் போக்க தரையில் மல்லாந்து படுத்து கைகளை விரித்தும் சேர்த்தும் எளிய பயிற்சிகள் செய்யலாம். மன உளைச்சல் ஏற்படும் போது கழுத்து, மேல்முதுகு ஆகியவற்றின் தசைகள் மன அழுத்தத்தின் காரணமாக இறுகி விடுகிறது. கழுத்துப் பகுதி தசைகளைப் பிடித்து விடுவதன் மூலம் மன அழுத்தம் குறைந்து இதமாக உணரலாம். * யோக பயிற்சிகள் மூலம் உடலில் சேர்ந்த சோர்வை விரட்டலாம். தியானப் பயிற்சி செய்து மனதை ஒருநிலைப் படுத்தலாம். மனம் சிறகடிப்பதன் மூலம் மீண்டும் உற்சாகத்துடன் நம் செயல்களைத் துவங்கலாம். இப்போது திரும்பிப் பாருங்கள் பிரச்னை துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் எடுத்திருக்கும். புன்முறுவலுடன் அதனை எதிர்கொள்ளுங்கள். மிகப்பெரிய பிரச்னைகள் கூட உங்களைப் பார்த்து பயப்பட ஆரம்பிக்கும். எல்லாம் புரிகிறது. என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியலையே என்று தவிப்பவர்களுக்கு இருக்கவே இருக்கு ரிலாக்ஸ் டெக்னிக். * மனசு குழப்பமா இருக்கா? உங்களுக்கு நம்பிக்கையான நண்பர் மற்றும் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். இப்போது மனதின் பாரம் கொஞ்சம் குறைந்த மாதிரித் தோன்றும். அவர்கள் அளிக்கும் யோசனை பிரச்னையின் இறுக்கமான பிடியில் இருந்து உங்களை தளர்த்திக் கொள்ள உதவும். * நீங்கள் இருக்கும் சூழலை பிடித்தமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். தோழியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்லலாம். குழந்தைகள் நிறைந்த இல்லங்களுக்கு சென்று சிறு உதவிகள் செய்யலாம். இயற்கையான சூழலில் பேசியபடியை காலாற நடக்கலாம். பசுமையும், அழகும் டென்சன் குறைக்கும். வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் நேரம் செலவளித்தால் மனதில் மகிழ்ச்சி ததும்பும்.


Saturday, April 18, 2015

அலுவலகத்தில் உண்டாகும் டென்ஷனை குறைக்க எளிய வழிகள்

அலுவலகத்தில் உண்டாகும் டென்ஷனை குறைக்க எளிய வழிகள்

அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள்.

வேலைக்கு செல்வது என்று முடிவெடித்துவிட்டால், நிச்சயம் சிலசமயங்களில் அங்கு அதிகப்படியான வேலையை செய்ய வேண்டிவரும். அப்படி அதிகப்படியான வேலையைச் செய்யும் போது, மனமானது சோர்ந்துவிடுவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த மன அழுத்தமானது வேலைப்பளுவினால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், எரிச்சலூட்டும் வகையில் உடன் பணிபுரிவோர் செய்யும் செயல்கள், எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் பாஸ் போன்றவற்றால் மூளையானது அதிக அளவில் அழுத்தத்திற்கு உள்ளாகிறது.

இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.

ஆகவே எவ்வளவு தான் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலும் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நிச்சயம் எவ்வளவு வேலை இருந்தாலும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர முடியும்.

இங்கு அலுவலகத்தில் ஏற்படும் டென்சன் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர ஒருசில சிம்பிளான வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றுங்கள், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதோடு, எவ்வளவு வேலைக் கொடுத்தாலும், சந்தோஷமாக செய்யலாம்.

ஆழ்ந்து சுவாசித்தல்

டென்சன் அதிகரிப்பது போன்று இருந்தால், உடனே சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பியுங்கள். இதனால் மனமானது அமைதி அடைந்து, அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, டென்சனால் எடுக்கப்படும் தவறான முடிவுகளைத் தவிர்க்கலாம்.

அமைதியாக இருக்கவும்

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும் போது, பெரும்பாலானோர் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று அமைதியை இழந்து, ஒருவித பதற்றத்துடன் வேலையை செய்வார்கள்.

ஆனால் அப்படி தான் இருக்கக்கூடாது. எவ்வளவு தான் வேலை அதிகமாக இருந்தாலும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறிது நேரம் தனியாகவோ அல்லது உடன் பணிபுரிவோருடனோ வாக்கிங் சென்று வாருங்கள்.

பாட்டு அல்லது பிடித்த வீடியோக்களை பாருங்கள்

மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால் அதற்கு முதலில் நன்கு சிரிக்க வேண்டும். ஏனெனில் சிரிப்பு ஒன்று தான் உடலுக்கும், மனதுக்கும் ஒரு நல்ல மருந்து. எனவே நல்ல குத்துப் பாட்டு கேட்பது அல்லது பிடித்த வீடியோக்களைப் பார்ப்பது, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

காபியை தவிருங்கள்

அனைவரும் காபி குடித்தால் டென்சன் குறையும் என்று நினைத்து அவ்வப்போது காபி குடிப்பார்கள். ஆனால் உண்மையில் காபி குடித்தால் டென்சன் தான் அதிகரிக்கும்.

ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைனானது மனதை அமைதிப்படுத்த உதவும் அடினோசைனை குறைக்கும். ஆகவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.

தியானம்

மனமானது அமைதியிழந்து இருக்கும் போது தியானம் செய்தால் மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் தியானம் செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது அதிகரித்து மனமானது அமைதியடையும்.

நல்ல உணவுகள்

மனதை அமைதிப்படுத்துவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகளை டென்சனாக இருக்கும் போது சாப்பிட்டால் அவை மனதை அமைதிப்படுத்து. அதிலும் பாதாம், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களாகும்.

வைட்டமின் சி அவசியம்

மன அழுத்தத்தை குறைப்பதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான ஆரஞ்சு, கேரட் மற்றும் இதர சிட்ரஸ் பழங்களை வேலை செய்யும் போது சாப்பிடுங்கள்.

தண்ணீர்

டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.


Wednesday, April 15, 2015

Stress Management class

This is for you..........A Psychologist walked
around a room while
teaching Stress Management to an
audience.
As she raised a
glass of water, everyone expected they'd be asked
the
"Half empty or Half full" question.
Instead, with a
smile on her face, she
inquired:
"How heavy is this glass of water?"
Answers called out ranged from 8 oz. to 20 oz.
She replied,
"The absolute weight doesn't matter.
It depends on how long I hold it.
If I hold it for a
minute,
it's not a problem.
If I hold it for an hour,
I'll have an ache in my arm.
If I hold it for a day,
my arm will feel numb and paralyzed.
In each case,
the weight of the glass
doesn't change,
But
The longer I hold it,
the heavier it becomes.
She continued,
"The Stresses and Worries in Life , are like that Glass of Water...
Think about them for
a while and nothing
happens.
Think about them
a bit longer and they begin to hurt.
And
If you think
about them all day long,
you will feel paralysed –
incapable of doing
anything."
Remember to put the Glass Down   

our services  - www.v4all.org

Wednesday, April 1, 2015

காய்கறிகளும் பயன்களும்.




கத்தரிக்காய்

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.


அவரைக்காய்


இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.


வெண்டைக்காய்


இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.


புடலங்காய்


இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.


கொத்தவரங்காய்


இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.

இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.


வாழைத்தண்டு

இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.
இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.

வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.


தேங்காய்


இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.

தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.


சுரைக்காய்

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.

ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்கா என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மோகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.

Friday, March 20, 2015

மன அழுத்தம்

மன அழுத்தம்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன அழுத்தம் என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும்[1]. இந்த மன அழுத்தம் என்ற பதம் உயிரியல் மற்றும் உளவியல் அடிப்படையில் முதலில் 1930 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் அண்மைக் காலங்களில் இதுபற்றி மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மன, பழக்கவழக்கம் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் சோர்வு, எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல்தசைகளில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் இதயத் துடிப்புதலைவலி போன்ற சில உடலியங்கியல்பிரச்சனைகளும் காணப்படும்[2].

சொல்லியல் ஆரம்பம்[தொகு]

Hans Selye என்ற உட்சுரப்பியியலாளரால் முதன் முதலில் உயிரியலில் இந்த மன அழுத்தம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது[3]. பின்னர் எந்தவொரு தாக்கத்திற்கும் தவறான ஒரு உடற்றொழிலியல் எதிர் விளைவு கொடுக்கப்படும் நிலையை காட்டுவதாக இந்த பதத்தை விரிவுபடுத்தினார். மன அழுத்தத்தைத் தூண்டக்கூடிய காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான தொழிற்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடல் நலத்தில் செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார்.

அறிகுறிகள்[தொகு]

மன அழுத்தமானது வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதுடன், அறிகுறிகளும் வேறுபடும். இந்த அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நலம் பாதிப்படைவதுடன், மனச்சோர்வும் ஏற்படும்.
  • மனக்கவலை
  • அதிகாலை தூக்கமின்மை
  • மிகுந்த சோர்வு
  • பசியின்மை
  • எடை குறைவு
  • அடிக்கடி அழுதல்
  • தன்னம்பிக்கையின்மை
  • எதிலும் ஆர்வமின்மை
  • அதிகமான குற்ற உணர்வு
  • அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்
மனச்சிதைவு நோய் (Schizophrenia)
  • தொடர் துக்கமின்மை
  • தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்
  • தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல்
  • காதில் மாயக்குரல்கள் கேட்டல்
  • அதிகமாக சந்தேகப்படுதல்
  • அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
  • சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
  • உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்
மனப்பதட்ட நோய் - (Anxiety Disorder)
  • நெஞ்சுப் படபடப்பு
  • கை நடுக்கம்
  • அதிகமாக வியர்த்தல்
  • நெஞ்சுவலி
  • எதிலும் கவனம் செலுத்த இயலாமை
  • தூக்கக் குறைவு
  • அடிக்கடி எரிச்சல் அடைதல்
  • எதிர்மறையான எண்ணங்கள்
பய நோய் (Phobia)
  • தனிமையில் இருக்க பயம்
  • கூட்டத்தினைக் கண்டுபயம்
  • புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம்
  • உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம்
  • மூடிய இடங்களைக் கண்டு பயம்
  • இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை
  • எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய்
  • திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.
  • ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது
  • திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது
உதாரணமாக:
  • திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்
  • பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது
  • பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது
  • ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.
  • தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது.
  • குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.
ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)
  • அடிக்கடி கோபம் கொள்ளுதல்
  • குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
  • மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
  • உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல்
  • கலவரங்களில் ஈடுபடுதல்
  • சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
  • மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
  • பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை
  • எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்
  • எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்
பெண்களும் மன அழுத்தங்களும்
மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக
  • அதிக எரிச்சல்
  • கோபம்
  • சோர்வு
  • பதற்றம்
  • இவை, மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.
கர்பிணி பெண்களும் மனநோய்களும்
  • குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை
  • அடிக்கடி அழுதல்
  • தூக்கமின்மை
  • பசியின்மை
  • தற்கொலை எண்ணங்கள்
  • தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்
முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்
  • தொடர் தூக்கமின்மை
  • மறதி
  • பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்
  • நாள், கிழமை மறந்து விடுவது
  • உறவினர், நண்பர்களை மறந்து விடுவது
  • அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது
  • பசியின்மை
இதர மனநோய்கள்
  • சாமியாட்டம்
  • புகை பிடித்தல்
  • மது அருந்துதல்
  • கணவன் மனைவி பிரச்சனைகள்
  • மனரீதியான பாலியல் பிரச்சினைகள்
குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்
  • குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
  • படிப்பில் கவனம் குறைதல்
  • அதிக கோபம் கொள்ளுதல்
  • அடிக்கடி எரிச்சல் அடைதல்
  • படுக்கையில் சிறுநீர் கழித்தல்
  • மிக மிக அதிக சுறுசுறுப்போடு, ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)
  • கீழ்படியாமை
  • அடிக்கடி பொய் சொல்வது
  • திருடுவது
  • குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)
  • 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)
  • மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)
  • நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
  • குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Seperation anxiety disorder)

Wednesday, December 17, 2014

ராசிகளும் நோய்களும்!

ராசிகளும் நோய்களும்!
நோய்கள் பொதுவாக சூழல், மரபணு, லைஃப்ஸ்டைல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உருவாகிறது என்றாலும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான நோய்க்குறிகள் உண்டு என்கிறார் வாஸ்து நிபுணர் ரவி ஓஜஸ். அவர் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பிரத்யேகமான நோய்களாக சிலவற்றை அடையாளப்படுத்துகிறார்.
மேஷம்: தலைவலி, நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய், ஆழ்நிலை மயக்கம், நினைவிழந்த நிலை, மூளை நோய், மூளையில் ரத்தப்போக்கு, தூக்கமின்மை, வீக்கமுண்டாகும் நோய்கள், தலை முகம் பாதிக்கும் வலி, முகப்பரு, மூக்கில் வளரும் நீர்ச்சதை, ஒருபக்கத் தலைவலி, தலைசுற்றல், கிறுகிறுப்பு, மூளைக் காய்ச்சல், வட்டமான இள வழுக்கை போன்றவை.
ரிஷபம்: வறண்ட தொண்டை, கழுத்துச் சுரப்பிகளின் வீக்கம், டான்சில் வீக்கத்தால் சீழ் கட்டிப் போதல், மூச்சுக்குழாய் அடைப்பு, பொன்னுக்கு வீங்கி (எச்சில் ஊறும் கோளங்களில் கோளாறு), தைராய்டு சுரப்பிகளில் குறைபாடு, தொண்டை அடைப்பான் நோய், புலன்களின் தசைகளைத் தாக்கும் நோய், தலையில் உண்டாகும் தசை முண்டு, காற்றுக்குழாயில் சீழ் பிடித்தல், கண்டமாலை (கழுத்தில் ஏற்படும் வீக்கம்), நெஞ்சு வலி போன்றவை.
மிதுனம்: ஆஸ்துமா, சளியினால் காய்ச்சல், சுவாசக்குழாய் நோய், இருதய உறை, நுரையீரல் மேலுறையில் உப்புச்சத்துகள் மிகுந்து நீர் தங்கிப்போதல், நுரையீரல் நோய்கள், சளித் தொந்தரவு, வறண்ட இருமல், இருதயத்தை சூழ்ந்துள்ள தோலுறை வீக்கம், காசநோய், கைகளில் பாதிப்பு, சுவாச முறையில் பலவித கோளாறுகள், ரத்தம் கெட்டுப் போதல் போன்றவை.
கடகம்: வயிற்றுப்புற்றுநோய் மற்றும் வயிற்றுவலி, வாய்வுக்கோளாறு, நீர்கோத்துக் கொள்ளல், அஜீரணம், தீவிர இருமல், நோய் இருப்பதாகவே கலக்கமுற்று இருக்கும் மனோவியாதி, மஞ்சள் காமாலை, ரத்த சோகைக்கு முன் ஏற்படும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தோற்றம், பித்தப்பை கல், நீரிழிவு நோய் போன்றவை.
சிம்மம்: இருதய நோய், இருதய படபடப்பு, மூட்டு நோயினால் காய்ச்சல், தண்டுவடம் பாதிக்கும் கொடிய நோய், வெய்யில் தாக்க்ம், தளர்ச்சி, ரத்த ஓட்டத்தில் ரத்த வால்வுகளின் குறையினால் சீரற்ற கன்னம், தள்ளாட்டம், உயர் ரத்த அழுத்தம், தீவிர ஆனால் தற்காலிக நெஞ்சு வலி, தமனி வீக்கம், நெஞ்சடைப்பால் ஏற்படும் திடீர் மயக்கம், அடிக்கடி மயக்கம் ஏற்படல், கூன் முதுகு, பிளேக் போன்ற கொள்ளை நோய், ரத்த சோகை, ரத்தக் குழாய் சுவர் தடித்து போதல் போன்றவை.
கன்னி: இடுப்பு சம்பந்தமான இடையூறுகள், சில்லிட்ட உடல்நிலை, வயிற்றில் நாடாப்பூச்சி, பண்டப்பூச்சி, கொக்கிப் பூச்சி, வயிற்றுப் போக்கு, காலரா நோய், அடிவயிற்று வீக்கம், மலச்சிக்கல், கெடுதியான உணவுப்பழக்கம், வைட்டமின் பி குறைவு, உணவு செரிமான அமிலத்தை ஏற்காமை, குடல் சம்பந்தமான கோளாறுகள்.
துலாம்: நாசிக்குழாயில் கட்டி, சிறுநீரக நரம்புகளில் சீர்கேடு, சிறுநீரக குடல்வால் அழற்சி, சிறுநீர் வெளியேறாமல் அடைப்பு, குடல் இறக்கம், சிறுநீரக வீக்கம், மூத்திரக்காய் வீக்கம், கர்ப்பப்பை வீக்கம் வலி, வலுவற்ற கீழ் முதுகு, இடுப்பில் வாயுப்பிடிப்பு, வலி, இடுப்புப்பட்டை கோளாறு, மூட்டு வலி, சொறி சிரங்கு, தோல்வியாதி, கட்டளை நரம்பு மண்டல பாதிப்பு போன்றவை.
விருச்சிகம்: பித்தப்பை பாதிப்பு, பெருங்குடல் அழற்சி, கர்ப்பப்பை உபாதை, உற்பத்தி உறுப்பு உபாதை, மலக்குடல் உபாதை, கர்ப்பப்பை, சினைப்பை உபாதைகள், மாதவிலக்கு ஒழுங்கின்மைகள், வெள்ளைப்படுதல், ம்லவாயில் வெடிப்புகள், சிறுநீரகத்தில் கல், பவுத்திரம், மூல நோய், பால்வினை நோய், விதைப்பையில் காயம் போன்றவை.
தனுசு: இடுப்பு தொடைகளுக்கு பாதிப்பு, சுயமாய் நடமாடுவதில்-அசைவில் தடுமாற்றம், தொடை எலும்பில் உபாதை, சிறுகுடல் கேடால் காய்ச்சல், க்ணுமூட்டு வீக்கத்தால் வலி, இடுப்பு எலும்பு இடம்பெயர்ந்து போதல், ரத்த ஒழுங்கின்மை, சுவாச உபாதை போன்றவை.
மகரம்: முழங்கால் சில்லு எலும்பு, முழங்கால் பின்புற பள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்படல், தொழு நோய், வெண்குஷ்டம், ஜீரண உறுப்பு கோளாறு, மூட்டு நோய், மூட்டுவலி, நரம்பு சம்பந்தமான நோய், மனநிலை தளர்ச்சியால் விரக்தி மனப்பான்மை, கவலை, இரத்த பாதிப்பு, சொறி, சிரங்கு, தோல் தடிப்பு, ஒவ்வாமை, தோல் கறுத்துப் போதல், ஹிஸ்டீரியா போன்றவை.
கும்பம்: இருதய உபாதை, மாரடைப்பு, மூட்டு வலி, தோல்நோய், இரத்த அழுத்தம், இருதய சீர்நிலை பாதிப்பு, கல்வீக்கம், பல்வேறு நரம்பு வியாதிகள், கணுக்கால் பிசகுதல், கணுக்கால் வீக்கம், சுளுக்கு, இரத்த சோகை, கீழே விழுதல், இரத்தம் நஞ்சாகுதல், இருதய வலுவின்மை, கண் உபாதைகள் போன்றவை.
மீனம்: பாத நோய்கள், மற்றும் பாத ஒழுங்கின்மை, பாத வீக்கம், மூட்டுகளில் வீக்கம், ஆணுக்கு பெண் குரலும், பெண்ணுக்கு ஆண் குரலுமாக மாற்றம் ஏற்படல், நுரையீரல் சிக்கல் மற்றும் மலச்சிக்கல், தொற்று நோய்கள் குடல் பாதிப்பு, போதைவஸ்து, குடியினால் வரும் மன நோய் போன்றவை.
நன்றி: வாஸ்து- ரவி ஓஜஸ் டெக்னிக்
ஆசிரியர்: ரவி ஓஜஸ் ரமணா

Saturday, September 6, 2014

பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் ! ஃபாஸ்ட் ஃபுட் பிரியர்களுக்கு... ஒரு முறை இதைப் பாருங்கள். ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடவே மாட்டீங்க... இத்தனை கொடுமையானதா இது... *** பார்த்து முடிச்சதும், லைக் பண்ணிட்டு, அப்புறமா ஷேர் பண்ணுங்கப்பா... ப்ளீஸ்..

பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !
1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக உபயோகிக்கிறோம்.. அதை வினிகரில் கழுவி உபயோகிக்கும் போது அந்த கேட்டு போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை …
2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை உபயோகிக்கிறோம்.. பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???
3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே உபயோகிப்பதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் உபயோகித்த .. என்னையோ கலந்து செய்றோம் ..
4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை உபயோகிப்பதில்லை .. .. பாமாயில் தான் உபயோகிக்கிறோம்.
5) ரைஸ் கடாயில் உபயோகிக்கும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..
6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..
7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக உபயோகிக்கிறோம் .. அது உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..
8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..
9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை உபயோகிக்கிறோம்..
10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும் ..
இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு என் உடலும் கெட்டு விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரோமேனு என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …
நன்றி – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

Urs - Dr.Star Anand Ram
Naturopathy Dr
Happy welnes Center
www.v4all.org