Showing posts with label stress managements training. Show all posts
Showing posts with label stress managements training. Show all posts

Thursday, July 16, 2015

கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி

கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இருந்தாலும் நிறைய பேர் அடிக்கடி கோபப்படுகிறார்கள். அவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்தமுடிவதில்லை.
அது சரி, கோபம் ஏன் வருகிறது?
எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் உங்களுக்கு கோபம் வரும். நீங்கள் விரும்பாதது உங்களுக்குக் கிடைத்தாலும் உங்களுக்கு கோபம் வரும். நீங்கள் விரும்பிய விஷயம் நடக்காமல் போனால் அல்லது விரும்பாத விஷயம் நடந்தால் உங்களுக்குக் கோபம் நிச்சயம் வரும்.
நீங்கள் ஒருவரைக் காதலிக்கிறீர்கள். ஆனால் அவர் உங்களைக் காதலிக்கா விட்டால் உங்களுக்குக் கோபம் வரும். கோபம் மட்டும் அல்ல, மனம் வெகுவாகக் காயப்படும். துன்பத்தில் நரக வேதனை அனுபவிப்பீர்கள். பொறாமையினால் கூட கோபம் வரும். நீங்கள் பாதுகாப்பற்று உணரும்போதும் கோபம் வரும்.
நீங்கள் வசதியாக பிரயாணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது கோபம் வருகிறது. ஏன், ஒரு முக்கிய விஷயமாக வெளியே செல்லும்போது மழை வந்தால் இயற்கையின் மீது கூட நமக்கு கோபம் வரும்.
சில நியாயமான விஷயங்களுக்காக சில சமயங்களில் கோபம் வரலாம். அது தப்பில்லை. ஆனால் அடிக்கடி கோபப்படுவது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் கெடுதல் ஆகும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதி முதலில் வர வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காக கோபப்படுவது தவறு என்று உணர வேண்டும். உதாரணமாக மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் இவற்றிற்கு கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்தால் கோபம் வராது.
கோபம் உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தால் கோபம் வராது. எல்லாவற்றிற்கும் மேலாக யோகா மற்றும் தியானம் தவறாமல் செய்தால் கோபம் நிச்சயம் குறையும்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Friday, June 5, 2015

விடிகாலையில் எழவேண்டிய அவசியம்

விடிகாலையில் எழவேண்டிய அவசியம் சிலபேருக்கு எப்போதாவது ஏற்படுவது உண்டு!
பஸ், அல்லது ரெயிலை பிடிக்க, முடிக்கவேண்டிய கடமைகளை முடிப்பதற்கு, அதிகாலையில் பரீட்சைக்கு அவசரமாக படிப்பதற்கு, உறவினர்களின் விசேடங்களில் கலந்துகொள்வதற்கு, கோவில் திருவிழாக்களில் கலந்துகொள்ள, நண்பர்களை போய் வழியனுப்பி விட என ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காரணங்கள் இருக்கும்.
இவற்றில் பெரும்பாலானவை மறுபடியும் வாய்க்காத சந்தர்ப்பங்களாகவே இருக்கும். கை விட்டால் கைவிட்டதுதான்.
அலாரம் வைத்து எழ முயல்பவர்கள் மேஜைக்கடிகாரத்தை ஏதோ தமது குழந்தைகள்போல பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். இது மகா தவறு!!
அலாரம் குறித்த நேரத்தினுள் அடிக்க தொடங்கியதும் ஏதோ எங்களை கடிக்க வந்த கொசுவை அடிப்பதுபோல அதன் தலையில், அல்லது பொத்தானில் அடித்துவிட்டு மீண்டும் தூங்குபவர்களே நூற்றுக்கு தொண்ணூறு வீதத்தினர்.
அலாரம் என்பது படுக்கையில் இருந்து சிறிது தூரத்தில் எழுந்து சென்று நிறுத்தக்கூடிய அளவில் இருக்கவேண்டும். சுத்தம் கேட்டு, திடீரென விழித்து, எழவேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து, சோம்பல் முறித்து எழுந்து சென்று அதை அணைக்கும் ஒரு காலக்கெடுவை அது வளங்கிவிடுகின்றது என்பது குறிப்படத்தக்கது.
அந்தக்குறிப்பிட்ட செக்கன்களே மிக முக்கியமான நேரங்களாகும்.
முன்னேற்றமாவது மண்ணாவது, நீ முன்னேறித்தான் என்னத்தை கிழிக்கப்போறாய்? அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது எல்லாம் தூக்க அரக்கனின் கட்டளைகள்.
மறுபடியும் வந்து படுத்து இதோ இன்னும் ஒரு நிமிடத்தில் ஏழுந்திருப்போம், என உடல் கெஞ்ச மனமும் அதற்கு உடன்படும். படுத்துவிட்டு திரும்பி எழுந்து பார்த்தால், வழக்கமாக சாதாரணமாக எழும் நேரத்தைவிட தாமதமாகத்தான் கண்வழிக்கமுடியும்.
ஐயோ போச்சே.... போச்சே என்று மனம் பேதலித்து ரென்ஸனாகவேண்டியதுதான் மிச்சம்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்,
என்ன நோக்கத்திற்காக அதிகாலை எழ வேண்டும் என்று அலாரம் வைக்கின்றோமோ, அந்த எழுச்சியால் எழும் சிறந்த பலாபலன்களையும், அவற்றின் மூலம் நாம் அடையப்போகும் நன்மைகள், பாராட்டுக்கள், வெற்றிகள் எல்லாவற்றையும் நாம் பெறுவதாக கற்பனை செய்துகொண்டு தூங்கவேண்டும். அலாரம் எப்போ அடிக்கும் என் புதிய செயல் தொடங்க என்ற வைராக்கியத்துடன் தூங்கவேண்டும்.
இதுமட்டும் நடந்துவிட்டால் அலாரச்சத்தம் கேட்டவுடனேயே, மனம் மகிழ்வுடன் உந்த, உடல் துள்ளி எழுவதையும், மனதில் மகிழ்ச்சிமிக்க ஆனந்த தருணம் உருவாவதையும் சாதிக்கும் எண்ணம் முழுமையாக இருப்பதையும் நீங்கள் உணரலாம். அந்த உறுதியே முழுமையான வெற்றிகளையும் உங்களுக்கு தந்துவிடும்.


Janarthanan Jana's photo.

Sunday, May 17, 2015

சோர்வை போக்க பத்து வழிகள்;

சோர்வை போக்க பத்து வழிகள்;


வெற்றி என்பது எப்போதோ ஏற்படும் ஒன்றாயிருந்தால் போதாது. தொடர்ந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அத்தகைய வெற்றிக்கு வாழ்வை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் எட்டு வழிகள்


1. எதைப்பற்றி யோசிக்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். துன்பம், உடல்நலக்குறைவு, தோல்வி பற்றிய எண்ணங்கள் வரும்போதெல்லாம், உங்கள் எண்ண ஓட்டங்களை மாற்றுங்கள்.

2. எதிர்பாராமல் ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து பின்பற்றி பயன்படுத்திக்கொள்ளுங்கள் எதேச்சையாக நிகழ்வதை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனத்திற்குத்தான் இந்த உலகம் அதிர்ஷ்டம் என்று பெயர் கொடுத்திருக்கிறது.

3. நல்லது நடக்கும் என்று திடமாக நம்புங்கள். தீவிரமான நம்பிக்கைகள் பொய்க்க வழியே இல்லை.

4. தவறுகள் ஏற்பட்டால் அவற்றை சரியான கோணத்தில் பார்த்துப் பழகுங்கள். அதிலிருந்து படித்த பாடமென்ன, அந்தத் தவறு மீண்டும் நேராமல் பார்ப்பது எப்படி என்றெல்லாம் ஆராயுங்கள்.

5. செத்த பாம்பை அடிக்காதீர்கள். மீட்கவே முடியாத திட்டம் என்று ஒன்று முடிவாகிவிட்டால், அதில் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாதீர்கள்.

6. மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்தது. உங்களுக்கு வழங்கப்பட்டிக்கும் வாழ்க்கையை முழு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அதனை மேம்படுத்தப் பாருங்கள். தன்னிரக்கம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுக்கு எக்காரணம் கொண்டும் இடம் தராதீர்கள்.

7. தோல்வி என்பது, தங்களைத் தயார் செய்து கொள்ளாதவர்களின் விருப்பத் தேர்வு. திட்டமிடாமை, தயக்கம், செயல்படுவதில் சுணக்கம் எல்லாம் கொண்டவர்களுக்கே தோல்வி வருகிறது.

8. மகிழ்ச்சி – சோர்வு, இரண்டுமே எங்கிருந்தோ வந்து உங்களைத் தொற்றிக் கொள்கிற விஷயமல்ல. இரண்டுமே நீங்களாக உங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்கிற விஷயங்கள்தான். எதைப் படிக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்தே இவை ஏற்படுகின்றன.

9. நல்ல நண்பர்களின் பழக்கம் நல்ல புத்தகம் படிபடர்க்கு சமம் .

10.ஏதேனும் லட்சியம் ஒன்றின் உங்களுக்குள் ஏற்படுத்தி கொள்ளுங்கள் 

Saturday, April 18, 2015

அலுவலகத்தில் உண்டாகும் டென்ஷனை குறைக்க எளிய வழிகள்

அலுவலகத்தில் உண்டாகும் டென்ஷனை குறைக்க எளிய வழிகள்

அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள்.

வேலைக்கு செல்வது என்று முடிவெடித்துவிட்டால், நிச்சயம் சிலசமயங்களில் அங்கு அதிகப்படியான வேலையை செய்ய வேண்டிவரும். அப்படி அதிகப்படியான வேலையைச் செய்யும் போது, மனமானது சோர்ந்துவிடுவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த மன அழுத்தமானது வேலைப்பளுவினால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், எரிச்சலூட்டும் வகையில் உடன் பணிபுரிவோர் செய்யும் செயல்கள், எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் பாஸ் போன்றவற்றால் மூளையானது அதிக அளவில் அழுத்தத்திற்கு உள்ளாகிறது.

இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.

ஆகவே எவ்வளவு தான் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலும் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நிச்சயம் எவ்வளவு வேலை இருந்தாலும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர முடியும்.

இங்கு அலுவலகத்தில் ஏற்படும் டென்சன் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர ஒருசில சிம்பிளான வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றுங்கள், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதோடு, எவ்வளவு வேலைக் கொடுத்தாலும், சந்தோஷமாக செய்யலாம்.

ஆழ்ந்து சுவாசித்தல்

டென்சன் அதிகரிப்பது போன்று இருந்தால், உடனே சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பியுங்கள். இதனால் மனமானது அமைதி அடைந்து, அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, டென்சனால் எடுக்கப்படும் தவறான முடிவுகளைத் தவிர்க்கலாம்.

அமைதியாக இருக்கவும்

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும் போது, பெரும்பாலானோர் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று அமைதியை இழந்து, ஒருவித பதற்றத்துடன் வேலையை செய்வார்கள்.

ஆனால் அப்படி தான் இருக்கக்கூடாது. எவ்வளவு தான் வேலை அதிகமாக இருந்தாலும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறிது நேரம் தனியாகவோ அல்லது உடன் பணிபுரிவோருடனோ வாக்கிங் சென்று வாருங்கள்.

பாட்டு அல்லது பிடித்த வீடியோக்களை பாருங்கள்

மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால் அதற்கு முதலில் நன்கு சிரிக்க வேண்டும். ஏனெனில் சிரிப்பு ஒன்று தான் உடலுக்கும், மனதுக்கும் ஒரு நல்ல மருந்து. எனவே நல்ல குத்துப் பாட்டு கேட்பது அல்லது பிடித்த வீடியோக்களைப் பார்ப்பது, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

காபியை தவிருங்கள்

அனைவரும் காபி குடித்தால் டென்சன் குறையும் என்று நினைத்து அவ்வப்போது காபி குடிப்பார்கள். ஆனால் உண்மையில் காபி குடித்தால் டென்சன் தான் அதிகரிக்கும்.

ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைனானது மனதை அமைதிப்படுத்த உதவும் அடினோசைனை குறைக்கும். ஆகவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.

தியானம்

மனமானது அமைதியிழந்து இருக்கும் போது தியானம் செய்தால் மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் தியானம் செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது அதிகரித்து மனமானது அமைதியடையும்.

நல்ல உணவுகள்

மனதை அமைதிப்படுத்துவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகளை டென்சனாக இருக்கும் போது சாப்பிட்டால் அவை மனதை அமைதிப்படுத்து. அதிலும் பாதாம், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களாகும்.

வைட்டமின் சி அவசியம்

மன அழுத்தத்தை குறைப்பதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான ஆரஞ்சு, கேரட் மற்றும் இதர சிட்ரஸ் பழங்களை வேலை செய்யும் போது சாப்பிடுங்கள்.

தண்ணீர்

டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லைஎன்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்,அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.
Yours Happily
Dr.Star Anand ram
9790044225
www.v4all.org 

Wednesday, April 15, 2015

Stress Management class

This is for you..........A Psychologist walked
around a room while
teaching Stress Management to an
audience.
As she raised a
glass of water, everyone expected they'd be asked
the
"Half empty or Half full" question.
Instead, with a
smile on her face, she
inquired:
"How heavy is this glass of water?"
Answers called out ranged from 8 oz. to 20 oz.
She replied,
"The absolute weight doesn't matter.
It depends on how long I hold it.
If I hold it for a
minute,
it's not a problem.
If I hold it for an hour,
I'll have an ache in my arm.
If I hold it for a day,
my arm will feel numb and paralyzed.
In each case,
the weight of the glass
doesn't change,
But
The longer I hold it,
the heavier it becomes.
She continued,
"The Stresses and Worries in Life , are like that Glass of Water...
Think about them for
a while and nothing
happens.
Think about them
a bit longer and they begin to hurt.
And
If you think
about them all day long,
you will feel paralysed –
incapable of doing
anything."
Remember to put the Glass Down   

our services  - www.v4all.org