Showing posts with label employee motivation class. Show all posts
Showing posts with label employee motivation class. Show all posts

Tuesday, March 8, 2016

பெண் கடவுள் சிலை

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்
சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்

உடனே பணக்காரர் ” ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? ” இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே “இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் ” என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே ” எனக்கேட்டார்

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி

“ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர்

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி

பணக்காரர் வியப்புடன் ” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்.

Saturday, September 12, 2015

உடற்பயிற்சி செய்தால் ஆயுள் கூடும்..

உடற்பயிற்சி செய்தால் ஆயுள் கூடும்...


தினமும் ஒரு 15 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் 3 ஆண்டுகள் நம் ஆயுள் கூடுகிறது என்று ஜெர்மனி நரபியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமும் முறையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஸ்ட்ரோக், இருதய ரத்தக்குழாய் நோய்கள், புற்று நோய் மற்றும் நீரிழிவு ஆகியவை  ஆகியவை ஏற்படும் சந்தர்ப்பங்கள் பெருமளவு குறைவதாக இவர்கள் கூறுகின்றனர்.

4 லட்சம் பேரை ஆய்வு செய்ததிலிருந்து இந்த உண்மை தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 8 ஆண்டுகளாக தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியே செயாமல் இருப்பவர்களைக் காட்டிலும் பயிற்சி செய்பவர்களின் மரண விகிதம் 14% குறைவாக இருப்பதாகவும் இந்த நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, September 2, 2015

மன வேதனை அதிர்ச்சி பகிர்வு...கவனம்

இது ஒரு மன வேதனை அதிர்ச்சி பகிர்வு...கவனம்.www.happy4all.org
கலப்படம்...தலை முடி அவுட்...
உணவில் சேர்த்தால் வியாதி....

தற்போது பாக்கெட்டுகளில்அடைத்து விற்கப்படும் சில கம்பெனி தேங்காய் எண்ணெய், தேங்காயில் இருந்து தயாரிக்கப்பட்டதில்லை.

தேங்காய் எண்ணெய் என்றாலே அதற்கு முழுமையான மூலப்பொருள் தேங்காய்தான். பருத்த தேங்காய் களை உடைத்து, காய வைத்து செக்கில் ஆட்டி எடுத்து எண்ணெய் பெறப்படுகிறது. தலை முடிக்கு தேய்ப்பது மட்டுமல்லாது, சித்தா உள்ளிட்ட பலதரப்பட்ட மருந்துகள் தயாரிப்பிலும், உணவிலும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயனாகிறது. 

ஆனால் சமீப காலமாக பெரும்பாலான கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயே இல்லை. 

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .

பின் எப்போது தான் கூடுகிறது ?

கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும், தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

பல கம்பெனிகள் தேங்காய் எண்ணெயை மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்கிறார்கள்.

அவர்கள் பொய் சொல்வதில்லை.

உண்மையை அவர்களின் தயாரிப்புக்களின் மேல் அட்டையிலேயே (லேபிள்) அச்சடித்தும் இருக்கிறார்கள்.நாம்தான் பார்த்துப் படித்து புரிந்து கொள்வதில்லை.

மினரல் ஆயில் என்றால் என்ன ?..

பொதுவாக கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகைப் பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதில் பெட்ரோலியப் பொருட்களின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ‘அமெரிக்க மண்ணெண்ணெய்’ இதை இப்படியும் சொல்வார்கள்”சீமை எண்ணெய் – சீமெண்ணெய்” . 
இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .

எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .

மினரல் ஆயிலில் உருவாகும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் தோல் வறண்டு போகும். தலைமுடி தன் ஜீவனை இழக்கும். பலருக்கும் ஒவ்வாமையில் முடி கொட்டும். சீக்கிரமே நரைத்துப் போகும். அரிப்பு வரும், குழந்தைகளுக்கு பயன்படுத்துவது மேலும் ஆபத்தானது. இந்த மினரல் தேங்காய் எண்ணெய்யை உணவுக்குப் பயன்படுத்துவது இன்னும் கொடுமையானது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.

நாம் முன்பெல்லாம் பனிக்காலங்களில் நம் வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் உறைந்து போய் விடும். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெய் உறைவதில்லை. இதை யோசித்திருக்கிறோமா? 

ஆனால் அதே சமயம் பெரும்பாலான எல்லாக் கம்பெனி எண்ணெய் பாட்டில்களின் மேலே லேபிளில் ஒரு முக்கியமான விஷயம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது இதுதான். 

“STORE IN A COOL & DRY PLACE PROTECTED FROM SUN LIGHT”

புரிந்து கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயாக இருந்தால் குளிர் காலத்தில் உறைந்து போகும். வெயிலில் வைத்து உபயோகிப்போம். ஏனெனில் அது உண்மையான தேங்காய் எண்ணேய். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெயை குளிர்ந்த, வறட்சியான இடத்தில் வைக்க சொல்கிறான். கூடவே வெயில் படாமல் வைக்கவும் சொல்கிறான். 

ஏனெனில் வெயில் பட்டால் மண்ணெண்ணெய் ஆவியாக ஆரம்பித்து விடும். 
என்ன ஜாக்கிரதை பாருங்கள்!?.

இதை விட இன்னொரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கை. 

Warning : For External use only .

Keep out of reach of children to avoid

accidental drinking; and inhalation

which can cause serious injury.

Discontinues use if skin irritation occurs

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

எச்சரிக்கை: 
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

தற்செயலாக குடிப்பதையோ, நுகர்வதையோ தவிர்க்கவும்,

ஏனெனில் அவை மோசமான தீங்கை உண்டாக்கும்.

தோலில் எரிச்சல் ஏற்பட்டால் உபயோகிப்பதை நிறுத்தவும்.

இரண்டு எலும்பும், ஒரு மண்டை ஓடும் போட்டு அபாயம்னு சொல்லவில்லை. அவ்வளவுதான். இது நான் சொல்லவில்லை குழந்தைகளுக்கென்றே பிர்த்யேகமாக பொருட்களை தயாரித்து விற்கும் புகழ்பெற்ற ஜான்ஸன்ஸ் & ஜான்ஸன்ஸ் கம்பெனி அதன் ஹேர் ஆயில் லேபிளில் சொல்கிறது.

# குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஆயிலையே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க சொல்கிறது. 
# எண்ணை வாய்க்குள் போகவும், சுவாசிக்கும் போது மூச்சுக் காற்றோடு உள்ளே போகவும் வாய்ப்பிருக்கும்போது அது மோசமான தீங்கை உண்டாக்கும் என்கிறது. 
# எரிச்சல் வந்தால் நிறுத்துஎன்கிறது. 

நம்ம பாப்பா எரிச்சல்னு சொல்லி பேசத் தெரியுமா? யோசியுங்கள் நண்பர்களே!.

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள். 

மாய வலையில் வீழாதீர்கள்...
இந்த எண்ணை மட்டுமல்ல.
எல்லா எண்ணெய்யும் இதே 
கதைதான்!?

வாழ்க கலப்பட தமிழகம்...
வளர்க சுகாதாரத் துறை...

அழிக மக்கள்!!!???

இதை மீண்டும் மீண்டும் ப[truncated by WhatsApp]
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

Thursday, August 13, 2015

Use Creativity to Succeed

Now, more than ever, companies need creativity and creative thinking in the day-to-day operations in order to truly excel and rise above the competition.
We often think of the great innovators such as Thomas Edison or Steve Jobs as the “creatives”, the kind of people who had such revolutionary ideas that they changed the world. Or we read stories like that of Elizabeth Holmes, founder and CEO of Theranos, who developed a simpler, less painful way to test blood that has turned her into the youngest self-made female billionaire in the world and we think “I could never have an idea like that.”
These stories are great examples of game-changing creativity and innovation, but they overlook the everyday creativity and innovation that makes companies tick. And that is the kind of creativity you can use to drive sales, product development, or customer service improvements in your own company. You don’t need to have ideas that change the entire world, you just need ideas to change the world you live in.
Creativity and innovation in the day-to-day starts with looking at things differently and taking on the perspectives of others. Get inside the head of your customer, boss, partner, or supplier to determine how you can impact their outcome in a positive way. This is especially critical for your customers, thinking from their perspective to understand what they want and need. But even if you don’t interact with your company’s customers on a daily basis, think of your boss or partner as a customer, and find a way to delight them with your work.
After you’ve flipped your perspective and taken the view of those around you, start testing. New perspectives on a problem or process can give you lots of ideas about how to improve things or move the needle in terms of sales or growth, but until you try some of those ideas you will never know which is the best or right choice. Without the feedback you get from trying out your ideas, you can’t have enough data to move forward. Don’t get stuck analyzing all of your options without testing at least some of them first. If testing isn’t really feasible with your specific situation, make sure and talk to a number of different people about your ideas and options.
Once you have data and feedback from trying out your ideas, give yourself some space to think. One thing we can learn from some of the great “creative thinkers” of our time is that they took time away from work to ruminate and let their ideas float around and develop. There are stories of Edison having a pipe organ in his workshop and taking breaks to play it while others stopped work and sang along. Getting away from the office or your computer helps your brain make connections between all of the ideas and data points you’ve gathered, giving you those breakthrough Eureka! moments we hear so much about.
Creativity and innovation aren’t just for the special few who were blessed with the insight into customer’s future wants. We can’t all be like Henry Ford, knowing that while our customers say they want faster horses, what they really want are powered cars. But we can learn to develop creative and innovative thinking in everything that we do, including seemingly mundane tasks. As you develop these brain muscles and the associated skills, you begin to have more sales, develop better products, and improve customer service outcomes, and that gets noticed.
When your boss asks how you’ve been able to make such an improvement in the areas you are responsible for, talk to her about perspective and the importance of testing and feedback. Show your passion for innovating in all areas. That mindset, along with the ability to follow through, will accelerate your success in ways you can’t imagine.

Friday, July 31, 2015

பூசைக்குரிய புனிதமான மலர்கள்



பூசைக்குரிய புனிதமான மலர்கள்

இறைவன் பூமியின் மீது படைத்துள்ள அத்தனை பொருட்களும் அவனுக்கு உரியவை. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிது.
ஆகையால் கிடைக்கும் மலர்களையும், அதன் தன்மையையும், பயனையும் உணர்ந்து மனநிறைவோடு மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
செந்தாமரை மலர் – செல்வம், தொழில் மேன்மை ஆத்ம பலம் தரும். வெண்தாமரை மலர், வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக் குறையைப் போக்கும். மனதில் தைரியம் சேர்க்கும்.
அரளிமலர் – பெண்களுக்கு மாங்கல்ய பிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாமல் தடுக்கும்.
சிவப்பு அரளி, செம்பருத்தி – பெண்களுக்கு, மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமையை உருவாக்கும்.
நீலசங்கு புஷ்பம், நீலாம்பரம் ஆகியவை அவப்பெயரைப் போக்கும். தரித்திரம் நீக்கும். மனஅமைதி தரும். சனிபகவான் அருளைப் பெறவும் வழிவகுக்கும்.
மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன், மனைவிக்குள் அன்பை பெருக்கும்.
பாரிஜாதம் – அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக் கூடாது.
விநாயகர் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.
முருகப் பெருமானுக்கு முல்லை, சம்பங்கி, ரோஜா, செங்காந்தள் போன்றவை உகந்தவை. திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, துளசி, சாமந்தி, ஆகியவை உகந்தவையாகும்.
லட்சுமிக்குத் தாழம்பூ மிகவும் சிறந்தது.
பொதுவாக பூவிற்கும், பொட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மலர்கள் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே கிடையாது.
பூசைக்குரிய மலர்களைக் கொண்டு வழிபட்டால் பொருளும் பெருகும். புகழும் கூடும்.

Monday, July 27, 2015

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்- WWW.HAPPY4ALL.ORG 

இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள்
அமாவாசைகளில் மிக விசேஷமானது மஹாளய அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.
நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா.
அதனால், மஹாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. மஹாளய அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருக்களும், யமதர்மரின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும்.
அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு, பிண்டம் தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பசியோடும், தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள். அந்த சமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்.
பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம்
அனைவரிடத்திலும் பகிரவும்(SHARE)

Tuesday, July 21, 2015

எதிர்ப்பு சக்தியை ஈர்க்கும் பிராணயாமா

தரையில் ஒரு விரிப்பின் மேல், நிமிர்ந்த நிலையில் சம்மணமிட்டு அமர்ந்து, மூச்சை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக, நிதானமாக (வயிறு வரை)உள்ளே இழுத்து, பின் மெதுவாக வெளியே விட வேண்டும். இதுவே, பிராணயாமப் பயிற்சி. தரையில் அமர முடியாதோர், நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். 

உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். உள்ளுறுப்புகள் ஆரோக்கியம் ஆகும். பிராணயாமா என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும். பிராணயாமாவை முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது. நுரையீரல் செயல்பாடு பிராணயாமாவால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். 

பிராணயாமா என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். எடை குறைப்பு பிராணயாமாவால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை. உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பிராணயாமா உதவுகிறது என்ற சந்தோஷமான விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள். 

பிராணயாமாவை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். நச்சுத்தன்மையை வெளியேற்றுதல் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிராணயாமா பயிற்சி. குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சி செய்யவும். அதற்கு, தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி செய்யவும். 

Saturday, July 18, 2015

எளிய பரிகாரங்களும், பலன்களும்!

எளிய பரிகாரங்களும், பலன்களும்!
(share) செய்யுங்கள்)
பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.
* துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.
* மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.
* ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.
* தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.
* பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.
* தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.
* காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.
* கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.
* உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand

Friday, July 17, 2015

இந்து சாஸ்திரம்

இந்து சாஸ்திரம் (share) செய்யுங்கள்)
1.அடிக்கடி புண்ணிய தர்ம காரியங்களைச் செய்யும் போது புத்தி வளரும். புத்தி வளரும் போது புண்ணியதிதைக் தவிர பாவத்தைச் செய்ய மனம் வராது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனதை அடக்கி, கோபத்தைக் குறைத்து தெய்வ நம்பிக்கையுடன் தான தர்ம புண்ணியங்களைச் செய்துவர வேண்டும்.
2. ஒருவன் நல்ல வழியில் சம்பாதித்த பணம் தனனைவிட்டுப் போவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு என்பதை அறிவாளிகள் உணர வேண்டும். அதில் ஒரு காரணம் நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும், மற்றொன்று அயோக்கியனுக்கு கொடுப்பதும் ஆகும்.
3.ஈரத்துண்யுடனும், துண்டுடனும், சாப்பிடுவது கூடாது. தெருக்கதவை சாத்தாமனும், சந்திரனின் நிழலிலும், கொள்ளிக் கட்டையின் வெளிச்சத்திலும், நடுநிசியிலும், பிரடதோஷ காலத்திலும், இருட்டிலும், திறந்த மாடியிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் பொளர்ணமியன்று நிலா சாப்பாடு தனியாக சாப்பிடாமல் பலருடன் கூடி சாப்பிடலாம்.
4.உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப் பற்றிப் பேச வேண்டாம். அது அவனை துன்புறுத்துவதற்கு ஒப்பாகும்.
5.ஸ்தீரிகள் ஆண்களுடனும், ஆண்கள் ஸ்தீரிகளுடனும் அருகருகே அமர்ந்து உண்ண்க் கூடாது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உண்ணக் கூடாது. கணவன் சாப்பிட்டு முடிந்த பின்பே மனைவி உல்கொள்ள வேண்டும். விகாக சமயத்திலும், பந்தியிலும், யாத்திரை சமயத்திலும், வழிப்பயணத்திலும், மனைவியுடன் சேர்ந்து உண்ணலாம்.
6.புயல் காற்று அடிக்கும் போது, இது அரசமரம் இதுஆலமரம் என்று அறிய முடியது. அது போல் தான் உண்மை ஞானம் என்னும் புயல் காற்று அடிக்கும் போது ஜாதி வித்தியாசத்தைக் காண முடியது. ஆத்மாஉவுக்கு ஜாதி கிடையது என்பதை அறியவும்.
7.பொய் சொல்லவே கூடாது என்ற போதிலும் மனைவியின் கற்பை காப்பாற்றும் பொழுதும், தன் உயிருக்கும், பிற உயிருக்கும், பொருளுக்கும் ஆபத்து வரும்போதும், பொய் கூறுவதில் தவறு இல்லை இப்படிப்பட்ட சந்தர்ப்ப்த்தில் பொய் சொல்லிவிட்டால், அதற்குப் பரிகாரமாக மீனுக்குப் பொரியும், பசுமாட்டிற்குப் புல்லும், ஏழைக்கு வஸ்திரமும் கொடுலக்க வேண்டும்.அதனால் அப்படிப் பொய் சொன்ன பாவம் நிவர்த்தியாகிவிடுகிறது
8.பல் துலக்கிய உடன் குச்சியை அலம்பி தென்மேற்கு மூலையில் அல்லது ஓடும் தண்ணீரில் விட வேண்டும். பல் துலக்க குச்சி கிடைக்காத சமயம் வாயை பத்து முறை கொப்பளித்தால் பல் துலக்கியதற்குஸச் சமமாகும்.கோவிலில், கொட்டிலில், யாகம், ஹோமம் செய்யுமிடத்தில், ஜலத்திற்குள், இருந்து பல் துலக்கக் கூடாது.
துளசி பத்திரதிதை பழிப்பவனும் துளசிச் செடியை காலால் மிதித்தவனும் விஷ்ணுவின் வருத்தத்துக்கு ஆளாகிறார்கள். துளசிச்
செடி இருக்கும் வீட்டில் விஷ்ணு பகவான் தன் தர்ம பத்தினியான சகல ஐஸ்வர்யங்களையும் கொண்ட் மகாலட்சுமியுடன் வாசம் செய்கிறார்.
9.கோவிலுக்குள் செல்லும் பக்தன், முதலில் கோபுரத்தை வணங்க வேண்டும்.பின்பு கொடி மரத்தை அண்ணார்ந்து பார்த்து வண்ங்க வேண்டும்.அதாவது மனிதனின் எண்ணங்கள் உயர்ந்து இருக்க வேண்டும்.தாழ்ந்த மனப்பான்மை கூடாது. பக்தர்களின் நிலையும் தாழ்ந்து விடாமல் உயர வேண்டும் என்ற தாத்பர்ய்மே கோபுர, கொடி மர தரிசனம் ஆகும்




Wednesday, July 8, 2015

லக்ஷ்மி கடாட்சம் பெருக உதவும் ஸ்தோத்ரம்

லக்ஷ்மி கடாட்சம் பெருக உதவும் ஸ்தோத்ரம்


 இந்த ஸ்தோத்திரம் தினம் ஜெபிக்கும் நபர்களுக்கு - செல்வம் அவர்களிடம் தங்க ஆரம்பிக்கும்...  இந்த ஸ்லோகத்தின் பெயர் -  கனகதாரா ஸ்தோத்ரம்
நான், தனிப்பட்ட முறையில் எனது சக நண்பர்களுக்கு - அதிக அளவில் பரிந்துரைத்த ஸ்லோகம் இது..  நமது வாசகர்களுக்காக... 
ஒரு ஏழைப் பெண்மணியானவள், வாசலில் வந்து பிச்சை கேட்டு நிற்கும் சன்னியாசிக்கு பிச்சையிட வீட்டில் எதுவுமில்லையே என்று வருந்தி, வீட்டு மாடத்திலிருந்த ஒரு நெல்லிக்கனியை எடுத்து வந்து, கண்ணீருடன் அந்த சன்னியாசியிடம்  சமர்ப்பித்தாள்.  

இவளுடைய உண்மையான பக்தியையும், அவளுடைய ஏழ்மை நிலையையும் கண்டு கொண்ட சன்னியாசி  வேடத்திலிருந்த ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லி, பொன்மழை பெய்ய வைத்தார் என்பது சரித்திரம்.  அந்தப் பெண்மணியை போல் மனமுவந்து, இருப்பதை கொடுத்து, நிறைய கொடுக்க இயலவில்லையே என்று வருத்தப்படுபவர் இருந்தால், பொன்மழை பெய்யலாம்



கனகதாரா ஸ்தோத்ரம் 


அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:


முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:


ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:


பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:


காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:


ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:


விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:


இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:


கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை


ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை


நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை


நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே


யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே


ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்


திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்


கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:


ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:

Saturday, July 4, 2015

மறதியை மறக்க 7 வழிகள்

மறதியை மறக்க 7 வழிகள்


ரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும்ஆனால்பாடலின் பல்லவிமட்டும் நினைவுக்கு வராதுபடத்தின் பெயர்பாடலைப் பாடியவர்இசை அமைத்தவர்என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்பாடலின் முதல்வரியைத் தவிர

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால்பாடலின் முதல் வரிநமக்குத் தெரியும்ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை.நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம்.நினைவாற்றல் என்றால் என்னஅது எப்படி வருகிறதுஅதை அதிகரிப்பதற்கானவழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.

நினைவாற்றல்   என்றால் என்ன?

நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம்கணினியில் தகவலைப்பதிவுசெய்கிறோம்அதேபோல்மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம்இதை'என்கோடிங்’ என்போம்பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது.இதை 'ஸ்டோரேஜ்’ என்போம்தேவையானபோது கணினியில் உள்ள தகவலைஎடுக்கிறோம்அதேபோல்மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலைஎடுக்கிறதுஇதை 'ரெட்ரிவல்’ என்போம்தகவலைக் கொண்டுசேர்ப்பதுசேமிப்பது,தேவைப்படும்போது எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல்இந்தமூன்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல்பாதிக்கப்படும்.

எப்படி வேலை செய்கிறது?

என்கோட்காட்சிசமிக்ஞைமொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக்கொண்டுசெல்லப்படுகிறதுஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போதுஅனைத்தும் மூளைக்குக் கொண்டுசெல்லப்படும்.  
ஸ்டோரேஜ்மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய நினைவாற்றல்மிகக்குறுகிய நினைவாற்றல்நீண்ட கால நினைவாற்றல் என்று மூன்று விதங்களில்சேமிக்கப்படுகிறதுகுறுகிய நினைவாற்றல் என்பது உடனுக்குடன் மறந்துவிடுவது.சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே செல்கிறோம்அடுத்த சிலநிமிடங்களில்என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம்இது மிகக் குறுகியநினைவாற்றல்ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம்மைக் கவரும்அதைப் பற்றிசிந்தித்துக்கொண்டே செல்வோம்அந்த விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சிலநாட்கள் வரை நம் நினைவில் இருக்கும்இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம்.நம்முடைய பெயர்அப்பா பெயர்வீட்டு முகவரிசெல்போன் எண் போன்றவற்றைத்திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம்அதனால் அது பல காலத்துக்கு நினைவில்இருக்கும்இது நீண்ட கால நினைவாற்றல்.


ரெட்ரிவல்நம்முடைய பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்குவந்துவிடும்ஆனால்நீங்கள் இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார்என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம்அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது.கூகுள் சர்ச் இன்ஜின் தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும்படித்த பள்ளிக்கூடம்,நண்பன்முக்கியச் சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்துகடைசியில் ஆசிரியர் பற்றிய நினைவு வரும்நினைவாற்றல் பெருகக் கவனம்செலுத்துதல் முக்கியம்கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகிஇருக்க வேண்டும்மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்''என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப்பெருக்குவதற்கான விஷயங்களையும் பட்டியலிட்டார்.


 மறதி நல்லது!


 மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டேஇருக்கின்றனஇதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு,தேவையற்றதை மறந்துவிடுகிறது மூளைஅப்படி மறக்கவில்லை என்றால்மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும்அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் பிரச்னைஅப்போதுதான் அதுமறதிநோய் (டிமென்ஷியாஆகிறதுஇந்த நோயில்தகவலானது உள்ளே போகிறது.ஆனால்அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால் திரும்ப நினைவுகூர முடிவது இல்லை

மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்புரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில்கோத்துக்கொள்வதுதலையில் அடிபடுவதுவயது அதிகரிப்புஅல்சைமர்ஸ் எனப்படும்மூளை தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்புஏற்படுகிறதுஇதுதவிர மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு நினைவாற்றல்இருக்காதுமன அழுத்தம்மனப் பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல்மூளைக்குள்ளேயே செல்லாதுஇதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவேஇருக்கும்.