Showing posts with label Personality developments Trainer inchennai. Show all posts
Showing posts with label Personality developments Trainer inchennai. Show all posts

Tuesday, March 8, 2016

மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

ஹாலிவுட் மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - பிறந்த தின சிறப்பு பகிர்வு
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.

பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை .


தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு நிராகரிக்கப்பட்டது.மனம் தளராமல் கலிபோர்னியா மாகாண பல்கலையில் சேர்ந்தார்.ஆனால் அங்கேயும் தொடர்ந்து படிக்கவில்லை,சினிமா ஆர்வம் உந்தித்தள்ள உலகப் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோவில் சம்பளம் வாங்காத எடிட்டிங் துறை மாணவராக சேர்ந்து கொண்டார்.ஒரு நாள் கூட விடுமுறை இல்லாத வேலை அது.

யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக ஆம்ப்ளின் என்கிற குறும்படத்தை இயக்கியது தான் வாழ்வின் முதல் திருப்புமுனை.இருபத்து ஆறு நிமிடம் ஓடும் இப்படம் கவலைகள் இல்லாத ஒரு ஹிப்பி இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தை கடப்பதை நகைச்சுவையாக வசனமே இல்லாமல் பின்னணியில் கிடார் இசையை கொண்டு மட்டும் சொல்லும்.இது பலவேறு விருதுகளை ஸ்பீல்பெர்க் பெற உதவியது.

ரொம்பவும் கூச்சசுபாவம் உள்ளவர்.பெரும்பாலும் நண்பர்கள் இல்லாதவர். தன் இளமைக்காலத்தில் தந்தை மற்றும் தாய் விவாகரத்து பெற்று பிறந்ததன் தாக்கமும் ,ஒரு மூத்த அண்ணன் இல்லையே என்கிற ஏக்கமும் தான் உலக புகழ் பெற்ற ஈடி படம் எடுக்க உந்துதல் எனவும் சொன்னார்.


கடுமையாக தன் படங்களுக்கு உழைப்பார்.ஒவ்வொரு படமும் ஒரு மேஜிக்!அப்படிதான் பார்க்கிற ரசிகர்கள் உணரவேண்டும் என்பார்.அதிலும் குழந்தைகளுக்கான படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் !அப்படி எடுத்த படங்கள் தான் ஜுராசிக் பார்க்,ஈடி,டின்டினின் சாகசங்கள் போன்றவை.

புத்தகங்கள் படிப்பதை விரும்பாதவர். நன்றாக உற்று கவனிப்பார்.பலபடங்களை ஒரே வாரத்தில் பல முறை பார்த்தும் விடுவார்.கதை சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கவும் செய்வார்.ஜாஸ் கதையை படிப்பதற்கு முன் வரை அது ஏதோ பல் சம்பந்தப்பட்ட புத்தகம் என்றே நினைத்துக்கொண்டு இருந்தார்.படித்து முடித்ததும் உடனே படம் எடுக்கலாம் என கிளம்பிவிட்டார்.

நிஜம் இல்லாத உலகத்தை காட்டி படத்தை ஓட்டி விடுகிறார் என பிறர் சொன்னதும், 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' எனும் ஹிட்லரிடம் இருந்து ஆயிரம் யூதர்களை காப்பாற்ற போராடும் சிண்ட்லர் எனும் மனிதனின் கதையை கருப்பு வெள்ளையில் சொல்லி கண்ணீர் வரவைத்தார் !அந்த படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கரை பெற்றார் . இப்படத்தின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை ஷோஆ அறக்கட்டளையை நிறுவி ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து விட்டார் .

இவருக்கு ஏழு குழந்தைகள் .ஒரு அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்கு முன் தன் பிள்ளைகளிடம் கதையை சொல்லி அவர்கள் கண்கள் ஒளிர்கிறதா என பார்த்த பின்பே அதை படமாக எடுக்க சம்மதம் சொல்வார் . 

"திரையரங்கில் படம் பார்க்கிற ஐநூறு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை மாதிரி மாறி என் படத்தை ரசிக்க வேண்டும் அதுதான் என் குறிக்கோள்" என சொல்கிற நம்பிக்கைக்காரர்.

- பூ.கொ.சரவணன்

Wednesday, September 30, 2015

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் .

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் .
* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடுகட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.
* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில்இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.
. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்
.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு.
வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொரி க்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள்.
ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பது நல்லது
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன் இருக்கும்.
புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
Ankhamuthu Kumar's photo.

Tuesday, September 22, 2015

வாழ்க்கையை மாற்றும் மாந்திரிக ரகசியங்கள்

வாழ்க்கையை மாற்றும் மாந்திரிக ரகசியங்கள்

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும்.காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம்.நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை



Monday, September 21, 2015

எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?

நாம் வாழ்ந்து வரும் மனித உலகத்திற்கும்,நம்மைச் சுற்றிலும் இருக்கும் சில சூட்சும உலகங்கள் மற்றும் நமது பூமிக்கு மேலே இருக்கும் ஏழு தெய்வீக உலகங்கள்,கீழே இயங்கும் ஏழு கர்ம உலகங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்த உதவுபவையே மந்திரங்கள்!

சித்தர்களும்,தெய்வீக புருஷர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக தவம் இருந்து இறைசக்தியிடம் இருந்து வரங்களாகப் பெற்றவையே இந்த மந்திரங்கள் ஆகும்;பூமியில் மனிதர்கள் மத்தியில் 7,00,00,000 கோடி மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;

இவைகளில் எச்சில் படாத மந்திரங்கள்,காயத்ரி மந்திரங்கள்,பீஜாட்சர மந்திரங்கள்,அஷ்டகர்ம மந்திரங்கள்,வழிபாட்டு மந்திரங்கள் என்று பலவகைகள் உள்ளன;
தவிர தரையில் ஜபிக்கக் கூடியவை;கடலில் ஜபிக்கக் கூடியவை;காட்டுக்குள் ஜபிக்கக் கூடியவை;குகைக்குள் ஜபிக்கக் கூடியவை;பூமிக்கு அடியில் ஜபிக்கக் கூடியவை;விண்ணில் பறந்துகொண்டே ஜபிக்கக் கூடியவை;என்று பலவிதங்களும் உண்டு;

மேலும் ஆண் மட்டுமே ஜபிக்கக் கூடியவை;பெண் மட்டுமே ஜபிக்கத் தக்கவை;அலி மட்டும் ஜபிக்க வேண்டியவை;துறவி மட்டும் ஜபிக்கக் கூடியவை;இல்லறத்தார் ஜபிக்கக் கூடியவை என்றும் வகைப்படுத்தப்படுள்ளன;

மனதைத் திடப்படுத்துபவை அனைத்துமே மந்திரங்கள் எனப்படும்;
வித்மஹே என்ற வார்த்தையில் முதல் வரியும்,தீமஹி என்ற வார்த்தையில் இரண்டாவது வரியும்,ப்ரசோதயாத் என்ற வார்த்தையில் மூன்றாவது வரியும் நிறைவடைந்தால் அது காயத்ரி மந்திரம் எனப்படும்;ஒவ்வொரு இறைசக்திக்கும் காயத்ரி மந்திரம் உண்டு;தகுந்த ஆன்மீகத் தகுதி வராமல் இவைகளை ஜபித்தால் உடல் நலம்,மன நலம் பாதிக்கக் கூடும்;

ஒரே ஒரு எழுத்து மட்டுமே மந்திரமாக இருக்குமானால் அது பீஜாட்சர மந்திரம் எனப்படும்;இவைகள் உரிய தெய்வீக சக்தியின் ஆத்மாவுக்குச் சமமானவை;

அஷ்ட கர்ம மந்திரங்கள் என்றும் இருக்கின்றன;இவையே மாந்திரீகத்திற்கு அடிப்படை ஆகும்;இதில் எட்டு விதமான செயல்களைச் செய்யலாம்;அல்லது எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்தலாம்;ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ப இந்த அஷ்ட கர்ம மந்திரங்களை ஜபிக்கும் முறை நம்மை வந்து சேரும்;இவைகளைக் கொண்டு தனிமனித நலனுக்கு செய்வதால் சாபமும் கிடைக்கும்;மனிதர்களின் செயல்களை எட்டுவிதமான வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான மந்திரங்களைக் கொண்டே பூமியில் மாந்திரீகம் ஒரு தொழிலாகவே பரவியிருக்கிறது;மாந்திரீகத்தை ஒரு தொழிலாகவே செய்வது தமிழ்நாடு,கேரளாவில் மட்டுமல்ல;பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது;இதில் முழுமையாக அறிந்தவர் என்று எவரும் இல்லை;

இல்லறவாசிகள் தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிப்பதை வழக்கமாக வைத்திருப்பது அவசியம்;அதுவும் ஏதாவது ஒரு இறைவனது பெயரை ஜபித்து வந்தாலே போதும்;தமிழ்நாடு முழுவதும் தினமும் 108 முறை அல்லது 1008 முறை ராமஜெயம் எழுதுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்;ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம என தினமும் 108 முறை ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;அதேபோல,தினமும் 108 முறை ஒம் நமச்சிவாய நமஹ என்று ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;சிலர் சிவாய நமஹ என்றும்,சில நமச்சிவாய என்றும்,சிலர் சிவாய சிவ என்றும்,சிலர் சிவசிவ என்றும்,சிலர் ஒம்சிவசிவஒம் என்றும் ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;

எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?

ஒரு மஞ்சள் துண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்;அதிகாலையில்(4.30 முதல் 6 க்குள்)காலைக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு உங்களுக்கு விருப்பமான மந்திரத்தை இந்த மஞ்சள் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பத்மாசனத்தில் தயாராக வேண்டும்;

அப்படி அமரும்முன்பு, வாசமான பத்தியை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;(இதில் ஏதாவது ஒன்று செய்தாலும் போதுமானது)


பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு ஒம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;(குல தெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளலாம்) பிறகு உங்களது விருப்பமான சிவ மந்திரம் அல்லது விஷ்ணு மந்திரத்தை 108 முறை உதடு அசையாமல் மனதுக்குள் ஜபிக்கலாம்;
இப்படி ஒரு ஆண்டுக்குக் குறையாமல் ஜபித்து வந்தால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வரும்;அப்படி உயிர் வந்தப் பின்னர் அந்த மந்திரம் உங்களை பாதுகாக்கும்;வழிநடத்தும்;

நீண்டகாலமாக பிரச்சினைகளுடன் இருப்பவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே அவைகளைத் தீர்க்கமுடியும்;கடந்த காலங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே தங்களது பிரச்சினைகள் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்;

எப்படி இந்த மந்திர ஜபம் நம் சிக்கல்களைத் தீர்க்கும்?

ஒரு நாளுக்கு 108 முறை வீதம் குறைந்தது ஒராண்டு வரை மந்திர ஜபம் செய்து வருவதால்,உங்களது மந்திர ஜபம் நெய்தீபத்தின் சுடர் மூலமாக ஆவியாகவோ அல்லது பத்திப் புகை மூலமாகவே விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்தைச் சென்றடைகிறது;விண்வெளியில் நமது விதி ஒரு ஏடாகவே இருக்கிறது;அந்த ஏட்டை நமது மந்திர ஜபம் சென்றடைகிறது;பிறகு,அந்த ஏட்டிற்கும் மேலே குறிப்பிட்ட உயரத்தில் ஆகாய ஏடு என்ற ஒன்று இருக்கிறது;அந்த ஆகாய ஏட்டைச் சென்றடைகிறது உங்களின் மந்திர ஜபம்;அங்கே சென்றடைந்ததும் உங்களின் கர்மவினையை உங்களது மந்திரஜபமானது அழித்துவிடுகிறது;அப்படி அழிப்பதற்கு உங்கள் ஜனன ஜாதகத்தில் பூர்வபுண்ணியமும் துணைபுரிகிறது;கடந்த சில ஆண்டுகளாக ஈசனின் அருளால் கண்டறிந்த தெய்வீக உண்மை இது;

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் உங்களின் கர்மவினைகள் கரையவும் ஒரு சுலபமான மந்திரஜபம் இருக்கிறது;

அமாவாசையன்று மேலே கூறியவிதத்தில் மந்திர ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;ஒரு மாதம் வரை;அதாவது இரண்டாவது அமாவாசை வரை 10 நிமிடம் வரை மட்டுமே மந்திர ஜபம் செய்ய வேண்டும்;இரண்டாவது அமாவாசை முதல் அந்த மந்திர ஜபத்தை 20 நிமிடமாக அதிகரித்து மூன்றாவது அமாவாசை வரை தினமும் 20 நிமிடம் ஜபிக்க வேண்டும்;மூன்றாவது அமாவாசை முதல் தினமும் 40 நிமிடம் மந்திரத்தை ஜபித்து வரை வேண்டும்;நான்காவது அமாவாசை வரை இப்படிச் செய்ய வேண்டும்;நான்காவது அமாவாசை முதல் உங்கள் சிக்கல்கள் தீரும் வரை தினமும் 80 நிமிடம் மந்திரம் ஜபிக்கக் கூடாது;60 நிமிடம் வரை தினமும் மந்திரம் ஜபித்தால் போதுமானது;
ஏனெனில்,நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒரு மனிதனது ஒரு நாள் மந்திர ஜபமானது 60 நிமிடம் வரை ஜபித்தாலே போதும்;அதற்கு மேல் ஜபித்தால் அந்த மந்திரஜப ஆற்றலைத் தாங்க முடியாது;தலைவலியோ அல்லது வேறு ஏதாவது உடல் நலக் குறைவோ உருவாகலாம்;

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்வியல் சிக்கல்கள் இருக்கும்;அதற்கும் ஒரே ஒரு மந்திரத்தை ஜபித்தாலே போதுமானது;


மந்திரம் ஜபிக்க ஆரம்பிப்பவர்கள் கண்டிப்பாக 18 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்;கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக(உங்கள் பிரச்சினைகள்/வாழ்வியல் சிக்கல்கள் தீரும் வரை) நிறுத்தியிருக்க வேண்டும்;இப்படி இதற்காக மந்திரம் ஜபிக்கிறேன் என்று எவரிடம் தெரிவிக்கக்கூடாது;புரோட்டா,முட்டை இரண்டுமே அசைவம் தான்;ஒரு போதும் சைவம் அல்ல;சைவப் புரோட்டாவும் அசைவமே! மது அருந்துவதையும்,போதைப் பொருட்களையும் தவிர்த்தால் மட்டுமே மந்திரஜபம் கைகூடும்;


மந்திர ஜபம் செய்து வரும் நாட்களில் துக்கத்தில் கலந்து கொண்டால் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

ருதுவான வீடுகளுக்குச் சென்று ருது விஷேசத்தில் கலந்து கொண்டாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

குழந்தை பிறப்பை போய் பார்த்தாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

உக்கிரமான தெய்வ மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது இல்லறவாசிகளுக்கு நல்லது;உதாரணமாக காளி,ஆஞ்சநேயர் மந்திரங்களையும்,நரசிம்மர்,லட்சுமி நரசிம்மர் மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது மிகவும் நன்று;மிகவும் கடினமான கட்டுப்பாடுகள் இந்த கடவுள்களின் மந்திர ஜபத்தை ஜபிப்பவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது;அது நடைமுறையில் சிறிதும் சாத்தியமில்லை;

ஏழரைச்சனி(துலாம்,விருச்சிகம்,தனுசு),அஷ்டமச்சனி(மேஷம்),
கண்டச்சனி(ரிஷபம்);அர்த்தாஷ்டமச்சனி(சிம்மம்) இருப்பவர்கள் (அசைவத்தைத் தவிர்த்துவிட்டு)ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
மற்றவர்கள் சிவ மந்திரத்தை ஜபிக்கலாம்;

இந்த பதிவு ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே! தமிழ்நாடு சித்தர் பூமி! பல புண்ணிய ஆத்மாக்கள் முற்பிறப்புகளில் செய்த புண்ணியச் செயல்களால் தமிழர்களாகப் பிறந்துள்ளனர்;அப்படிப் பிறந்துள்ளவர்களுக்கு மிகச் சுலபமாக சித்தர் தரிசனமும்,மிகவும் சக்தி வாய்ந்த மந்திர உபதேசமும் கிடைத்து வருகிறது;அப்படி கிடைத்தவர்கள்,கிடைக்க இருப்பவர்களில் பலர் வலைப்பூ/முகனூல் பக்கம் வழியாக ஆன்மீகத்தைப் பரப்புகிறார்கள்;அவர்களுக்கு இந்த பதிவு கத்துக்குட்டியாகவே தோன்றும்;

இந்த மந்திர ஜபமானது பக்தி மார்க்கமே! தைரியமாக 18 வயது நிரம்பிய எவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றலாம்;
-www.v4all.org

Saturday, September 12, 2015

தலைமைப் பொறுப்பை

ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
தன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன் பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு பெற நினைக்கிறேன்…”
அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அவர் தொடர்ந்தார்.
“உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும் செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத் தேர்ந்தெடுப்பேன்”
சொல்லி விட்டு அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார்.  அந்த இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.
மூன்று வாரங்களான பின்னும் அந்த விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட்டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த மாற்றமும் அவன் விதையில் இல்லை.
கம்பெனியிலோ அவரவர்களின் விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.
ஒரு வருடம் கழித்து அந்த முக்கிய நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது. அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக நின்றான்.
சேர்மன் வந்தவர் ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார்.  வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன் அவர் கேட்டார். “என்ன ஆயிற்று?”
அவன் கூனிக் குறுகிப் போனாலும் நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.
சேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர் சொன்னார்.
“நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.”
“நீங்கள் அனைவரும் திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால் உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத் திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில் தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என் கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
அவனிடம் தலைமைப் பொறுப்பைத் தந்து விட்டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.
இது ஒரு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, கட்சி, அமைப்பு, கூட்டம், நாடு எல்லாவற்றிற்கும் பொருந்தும். அவன் அரிச்சந்திரனாக எல்லா விஷயங்களில் இருக்கிறானோ இல்லையோ, யாருக்குத் தலைவராக ஆகிறானோ அவர்களுக்காவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருப்பவன் தான் அவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அவனே தலைவன், அப்படி இருக்க முடியாதவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே!
urs
www.v4all.org

Sunday, September 6, 2015

வியாபாரத்தை விரிவுபடுத்தலும் சிக்கல்களைக் கையாளுதலும்

விரிவுபடுத்தலும் சிக்கல்களைக் கையாளுதலும்
  1. உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் முடிவு செய்தவுடன், பின்வரும் எந்த நடவடிக்கைகளையும் பிறரிடம் ஒப்படைக்கக்கூடாது:
    1.  காசோலைகள் எழுதுதல்
    2.  காசோலைகளில் கையொப்படமிடல்
    3.  பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல்
    4.  இலாபம் ஈட்டும் நிலையத்தின் பொறுப்பு
  1. பணியாளரை ஊக்குவிக்க, தரகுத் திட்டத்தை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் உறுதிப்படுத்தவேண்டியது:
    1.  நிறுவனச் செலவுகளை அந்தப் பணியாளர் கட்டுப்படுத்துகிறாரா என்பதை ஆகும்.
    2.  நிறுவனச் செலவுகளை தொழில்தருநராகிய நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள்.
  1. வளர்ந்து வரும் உங்கள் வியாபாரத்திற்கான மிகவும் பொருத்தமான ஊக்குவிப்புத் தொகை (இலாபப் பகிர்வு) திட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த இடம்:
    1.  உஙகள் கணக்காளர்
    2.  மெக்டொனால்ட்ஸ்
    3.  உங்களின் மிகச் சிறந்த போட்டியாளர்
    4.  நூலகம்
  1. நீங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பது, உங்கள் வியாபாரத்தை நிர்வகிப்பதற்கான மிக முக்கியத் திறமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விற்பனையில் எதிர்பாராத வீழ்ச்சியை உங்கள் வியாபாரம் சந்திக்கும் போது, நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை:
    1.  விற்பனை அளவை மீண்டும் அதன் நிலைக்கு மீண்டும் மாற்ற உங்கள் பொருட்களின் விலையைக் குறைத்தல்.
    2.  உங்கள் சேவை அல்லது பொருளின் தரத்தை மீளாய்வு செய்து மேம்படுத்தல்.
    3.  செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளை உடனே காணுதல்.
  1. சரியான நேரத்தில் வாடகையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் செய்ய வேண்டியது:
    1.  வங்கியில் பணம் இன்றி திரும்பும் காசோலையை உடனே வழங்குவதை விட, பணம் இருக்கும் நாளுக்கான முன்திகதியிட்டு வழங்கலாம்.
    2.  தாமதம் ஆகும் நிலையிலும், வங்கியில் பணம் வரும் வரை காத்திருந்து, அதன் பிறகு காசோலையை அனுப்பவும்.
    3.  தாமதம் ஆகும் நிலையையும் அதற்கான காரணத்தையும் நில உரிமையாளரை அழைத்து, அவரிடம் விளக்கவும். காசோலை உங்களுக்கு எப்போது வரும் என்பதை அவரிடம் தெரிவித்து, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவும்.
  1. மிகப் பொருத்தமான சந்தைகளை தொடர்ச்சியாக ஆரம்பிக்கத் திட்டமிடவும். வியாபார முடக்கத்தையும், பணியாளர் திருட்டையும் இந்த வியாபாரம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதைக் கண்டறிவதற்கான சிறந்த வழி:
    1.  சௌகரிய சந்தை அமைப்பில் (Convenience Market Association) உறுப்பினராக இணைதல்.
    2.  சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் தொடர்பான பட்டப் படிப்பைப் பின்பற்றல்.
    3.  மிகச் சிறந்த போட்டியாளராக நீங்கள் கருதுபவரிடத்தில் வேலைக்குச் சேரவும்.
    4.  இந்த இழப்புகளைக் கட்டுப்படுத்த, வியாபாரத்தில் உங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில், வியாபார முறைகளை உருவாக்கவும்.
  1. "குக்கீ கட்டர்" அணுகுமுறையிலான விரிவாக்கம் இவற்றைக் குறிக்கிறது:
    1.  நீங்கள் மிகவும் விரும்பும் குக்கீ போட்டியாளரின் சந்தைப்படுத்தல் முறையைப் பின்பற்றுதல்.
    2.  இலாபம் ஈட்டும் வரையில், பைலட் இயக்கத்தில் ஏற்படும் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு, "குக்கீ கட்டர்" பிரதிபலிப்பில் அதை விரிவுபடுத்தல்.
    3.  பல வகையான விரிவாக்க வகைகளை உருவாக்க, வெவ்வேறு அமைப்பிலான, "குக்கீ" கருத்துக்களை முயற்சித்துப் பார்க்கவும்.
  1. உங்கள் பணப்புழக்கத் திட்டம், ஆறு மாத காலத்திற்கு தொடர்ந்து வீழ்ச்சி நிலையிலேயே இருந்தால், முதல் தீர்வு பின்வருமாறு இருக்க வேண்டும்:
    1.  வியாபாரத்தை விற்க முயற்சிக்கவும்.
    2.  மாற்று வியாபார வாய்ப்புகளைத் தேட முயற்சிக்கவும்.
    3.  விற்பனையை அதிகரித்து, செலவுகளைக் கட்டுப்படுத்தி, நிதி ஆதாரங்களைப் பெற்று, உங்கள் பணப்புழக்கத் திட்டத்தை "சிறப்பாக்கவும்".
  1. இரண்டாவது கடையை நீங்கள் திறந்திருந்து (சங்கிலித் தொடர்பில் நுழைவீர்கள்!), மாதம் ₨3,000 வீதம் ஐந்தாண்டு குத்தகை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய தொகை:
    1.  ஒவ்வொரு மாதமும் ₨3,000
    2.  ₨180,000
    3.  ₨130,000
  1. சிறந்த முகாமையாளர்களை சிறப்பாக ஊக்குவிக்கும் வழிகள்:
    1.  நிறுவனத்தின் வருவாய்க்கு ஏற்ப ஊக்குவிப்புத் தொகையை அறிவித்தல்.
    2.  நிறுவனத்தின் அதிகாரி மற்றும். துணைத் தலைவர் ஆகியோருக்கு பதவி உயர்வுகளை வழங்குதல்.
பதிப்புரிமை© 1993, 1997-2008, மை ஓன் பிஸ்னெஸ், இன்க். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

வியாபாரத்திட்டம்

வியாபாரத்திட்டம்
  1. உங்களுடைய சொந்த தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை வடிவமைப்பதற்கான அதிக தகவல்களை தேடிக்கொள்வதற்கான மிகவும் நல்ல இடம்:
    1.  உங்களது சட்ட வல்லுனர்
    2.  உங்களது கணக்காளர்
    3.  பொது வாசிகசாலை, தொழில் துறை அல்லது அரசு"வியாபார திட்டம் "இணையத்தளம் அல்லது புக்ஸ்டோர்ஸ்
    4.  வியாபார திட்டமிடல் ஆலோசகர்கள்
  1. நீங்கள் வியாபாரத்தை துவங்க முன் வியாபாரத்திட்டத்தை தயாரித்துக் கொள்வதற்கான முதன்மையான காரணம் என்னவெனில் முதலீட்டாளர்கள் மற்றும் நிதியியல் மூலங்கள் பற்றி கையால்வதற்கான கருவியொன்றை உருவாக்கிக் கொள்வதாகும்.
    1.  உண்மை
    2.  தவறு
  1. உங்களுடைய வியாபாரத்திட்டத்திற்கான நிதியியல் திட்டத்தை தயாரிக்கும் போது நீண்டகால விற்பனைகள், ஊதியங்கள் போன்றன மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும். காரணம் அது குறுகிய கால நோக்கங்கள் பற்றி தயாரிக்கப்படுவதேயாகும்.
    1.  உண்மை
    2.  தவறு
  1. உங்களது வியாபாரத்திட்டத்தை ஒரு முக்கியமான முதலீட்டாளர் அல்லது கடன் வழங்குநர் பார்வையிடப் போகிறார். அவரின் மனதில் இவ்வாறான கேள்வியொன்று எழலாம். உண்மையில் கஷ்டமான முடிவுகளை எடுக்கக் கூடிய, பேச்சுவார்த்தைகளை திறனாகக் கையாளக்கூடிய, கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய ஒரு உறுதியான நபர் எங்கே இருக்கிறார்: உங்களுடைய வியாபாரத்திட்டம் அதற்கான விடையை வழங்குதல் வேண்டும். உங்களுடைய வியாபாரத்திட்டம் அதற்கான விடையை வழங்குதல் வேண்டும்.
    1.  இந்தப் படத்தில் உங்களைக் காட்டுங்கள் (நீங்கள் அல்ல என நினைத்து)
    2.  உங்களது சட்ட வல்லுனர். கணக்காளர் உள்ளடங்களாக உங்களது ஆலோசனைக் குழு உங்களுடைய வியாபாரத்தை சிறந்த ஒழுக்க வியாபாரப் பிரவேசமாக பேணுவதற்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். எனக்குறிப்பிட்டு ஆரம்பிக்கவும்.
    3.  இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து அதனை உங்களுடைய வியாபாரத்திட்டத்தில் குறிப்பிடுங்கள். உங்களுடைய வியாபாரத்திற்கு உறுதியான மற்றும் திறன் வாய்ந்த முகாமை தேவைப்படும். உங்களையும், உங்களுடன் வியாபாரம் செய்யும் மற்றவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இதற்குப் பதிலளியுங்கள்.
  1. ஒரு வியாபாரத்திட்டத்தை தயார் செய்வது சில சிறிய வியாபாரங்கள் பற்றி தெரிவுசெய்யக்கூடிய ஒன்றாக அமையலாம்.
    1.  உண்மை
    2.  தவறு
  1. உங்களுடைய வியாபாரத்திட்டம் உள்ளடக்கக் கூடாதவை:
    1.  இந்த பாடநெறியின் அமர்வில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பாடங்கள்
    2.  முகாமையின் தனிப்பட்ட சுயசரிதைகள்
    3.  நிதியியல் அறிக்கை திட்டங்களும் காசுப்பாய்சச்ல் திட்டங்களும்
    4.  உங்களுடைய மார்கெடிங் மற்றும் விஸ்த்தரிப்புத் திட்டங்கள்
    5.  உங்களுடைய இலாபங்களுடன் புதிய விடுமுறை இல்லமொன்றை கட்டுவதற்கான உங்களுடைய திட்டங்கள்.
  1. உங்களுடைய வியாபாரத்திட்டம் கண்டுபிடிப்புக்கள் குறித்த தகவல்களை உள்ளடக்கியிருப்பின் பாரிய திட்டங்கள் பற்றி நீங்கள் தவறிழைக்கக்கூடாது எனும் விபரங்களையும் உள்ளடக்கியிருப்பின் உங்களுடைய வெற்றி உறுதிசெய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
    1.  உண்மை
    2.  தவறு
  1. உங்களுடைய வியாபாரத்தை ரீல்ஸ்டேட் வியாபாரத்துடன் தொடர்புற்ற ஒரு வியாபாரமாகக் கொள்வோம். இந்த வியாபாரத்திட்ட அமர்வு நீங்கள் கட்டாயம் கருத்திற்கொள்ளக்கூடிய விடயம் தொடர்பில் உங்களை இட்டுச் செல்லும்::
    1.  வசிப்பிட மற்றும் வியாபார விற்பனைகள்.
    2.  தொழில் துறை மற்றும் வியாபார அபிவிருத்தி.
    3.  அறைகளை சேர்த்தலும், கைத்தொழில் நிர்மாணிப்பும்.
    4.  மேற்குறிப்பிட்ட ஏதோ ஒன்றில் நிபுணத்துவம் பெறுங்கள்.
    5.  மேற்குறிப்பிட்டவற்றில் எதுவுமில்லை.
  1. சந்தை பற்றி உங்களுடைய புரிந்துனர்வை பரீட்சித்துப் பார்ப்பதற்காக பின்வரும் முறை மிகவும் பாதுகாப்பான அனுகுமுறையாக அமையலாம்.
    1.  உங்களுடைய தனிப்பட்ட புத்திசாலித்தனத்தில் நம்பிக்கை வையுங்கள்.
    2.  உங்களுடைய நன்பர்களுக்கிடையே ஒரு மதிப்பீட்டை நடாத்துங்கள்.
    3.  உங்களுடைய தயாரிப்பு அல்லது சேவை குறித்த சந்தை பரீட்சயம்.
  1. ஒரு வியாபாரத்திட்டத்தை தயாரித்துக் கொள்ளாத நிலையில் இருப்பதற்கான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு இது உங்களுக்கு உதவும்.
    1.  நீங்கள் தொடர்ந்து செய்யும் போது ஒவ்வொரு அமர்வுக்குமான திட்டத்தை நிறைவு செய்யுங்கள்.
    2.  தொடர்ந்து செல்வதற்கு முன் உங்களுடைய வியாபாரத்திட்டத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
    3.  இந்தப் பாடநெறியை நீங்கள் நிறைவு செய்த பின்னர் உங்களுடைய திட்டத்தை தயார் செய்யுங்கள்.
urs - www.v4all.org

Saturday, September 5, 2015

வெற்றிபெற்ற தொழில் முனைவோரின் தனிச்சிறப்புப் பண்புகள்

வெற்றிபெற்ற தொழில் முனைவோரின் தனிச்சிறப்புப் பண்புகள்
சான்றிதழ்
கொல்லெட் பால்
Collette PaulSTM Media Inc. வியாபார சஞ்சிகைகள் வெளியீட்டாளர்
"நீங்கள் எந்தத் வியாபாரத்தை ஆரம்பித்தாலும் நிதி சார்ந்த பொறுப்புகளை முகங்கொடுத்து பேணிக்கொள்ளும் திறமையுடன் இருக்கவும்"
Transcription - html
தைரியம்::அதாவது உங்களுக்கென்று சொந்தத் வியாபாரத்தை வைத்துக்கொள்ளவேண்டுமென்ற தீராத ஆசை வைத்துக் கொள்வதற்கான தெரழில் முனைவோருக்கு இருக்கும் ஒரு இயல்பூக்கமே தைரியமாகும். உங்கள் இலட்சியத்தை அடைவதில் தைரியமும், அர்ப்பணிப்பும் முழுமையாக வேண்டும். நீங்கள் நினைத்த வியாபாரத்தின் மீது உங்களுக்கு காதல் இருந்தால், உங்கள் இலட்சியத்தின் மீதான பக்தி இன்னும் கூடுதலாக இருக்கும். வாழ்க்கை குறுகிய காலமே உள்ளது, எனவேஉங்களுக்கு திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்காத ஒரு வியாபாரத்தை ஆரமபிக்க முடியாது. மேலும் நல்ல மற்றும் கெட்ட நேரங்கள் ஆகியவற்றின் வழியே உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றிக் கொள்ளவும்.
அறிவுத்திறன்: ஒரு முறையானக் கல்வித் தகுதிகள் முக்கியமானது என்பதோடு அதே வேளையில், ஒரு தொழில் முனைவோருக்கான"மூளைத்திறன்" என்பது வெறும் இடைக்கால சாதனைகளைக்காட்டிலும் கூடுதலானது ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபராக நீங்கள் உருவாக, நீங்கள் ஆரம்பிக்கும் வியாபாரத்தைப்பற்றிய ஒரு நடைமுறை அறிவு வியாபாரத்தை நீங்கள் தொடங்கும் முன்னரே தேவை. நடைமுறை அறிவு, மற்றும் சரியான அனுபவம் இணைந்து உருவாவதே தேவையான அறிவாற்றல். செயலறிவு,நடந்தவற்றை பின்பற்றிச் செல்லுதல், மற்றும் விபரத்திற்கான கவனம், ஆகியவைமிக முக்கியம்.
மூலதனம்: முதலாம் ஆண்டில் குறைந்தது உங்கள் சொந்தப்பணம், மற்றும் ஒரு காசுப் பாய்ச்சலை பேணிக்கொள்ள போதுமான அளவு முதலீடு ஆகியவை உங்களுக்கு தேவை. எதிர்கால அமர்வில் காசுப்பாய்சல் கட்டுப்பாட்டின் மூலம் எதிர்கால பணத்தேவைகளை கணிக்க நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். சிறிய அளவில் குறைந்த முதலீட்டுடன் பல வியாபாரங்ள் ஆரம்பிக்கப்படலாம் . பிறகு வியாபாரம் வளர வளர உங்கள் அனுபவம் கூடும், உங்கள் வியாபாரத்தில் கிடைக்கும் பணப்பெருக்கத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பிறரை சேர்த்துக் கொள்ள உங்களுக்கு ஆரம்ப மூலதனம் தேவையில்லாமல் இருக்கலாம் ஏனெனில் முதலில் அனைத்தையும் நீங்களே செய்பவராகக் கூட இருக்கலாம். தாமாகவே"செய்யுங்கள்"என்ற கொள்கை அனைத்தையும் கற்றுக் கொள்ளவும், பிறருக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கவும் கற்றுக்கொள்ள சிறந்த வழி. உங்கள் வியாபாரத்திற்கு இடும் மூலதனத்திற்கு வரையறை வைத்துக் கொள்வதன் மூலம் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம்.

Thursday, September 3, 2015

அறிமுகமற்ற அழைப்புகளைப் (Cold Calls) பயன்படுத்துவது

அறிமுகமற்ற அழைப்புகளைப் (Cold Calls) பயன்படுத்துவது

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
அறிமுகமற்ற அழைப்புகள் என்பவை, உங்களை யாரென்று தெரியாத வாடிக்கையாளர்களிடம், தொலைபேசி அழைப்பு அல்லது நேரில் செல்வது மூலமாக விற்பனை செய்ய முயற்சி செய்வதாகும். அறிமுகமற்ற அழைப்புகளின் நோக்கம், வாடிக்கையாளரின் வலிமையைப் பற்றிய தகவலைச் சேகரிப்பது ஆகும், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் நன்மைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்கிக்கூறுவது, மற்றும் சில நேரங்களில், அவர்களைச் சந்திக்க அனுமதி வாங்குவது ஆகியவை ஆகும். அறிமுகமற்ற அழைப்புகளில் சில சவால்கள் உள்ளன, அவை: ஐயம், கடந்தகால உதவியாளர்களைச் சந்திப்பது, செயலாளர்களைச் (secretaries) சந்திப்பது, மற்றும் பிற வாயில் காப்பாளர்களைச் சந்திப்பது, சரியான நபர்களைக் கண்டறிவது, விற்பனைச் செயல் முறையை விரைவாக நிறைவு செய்ய உதவும் தளத்தைக் கண்டறிவது ஆகியவை.
இந்த சவால்களை முறியடிக்க, பின்வரும் தகவல் குறிப்புகள் உங்களுக்கு உதவும்:
சற்றும் "அறிமுகமற்ற" தன்மை கொண்ட அறிமுகமற்ற அழைப்புகளைத் தவிர்க்கவும்.
உங்கள் நடப்பு வாடிக்கையாள்களிடம் இருந்து மேற்குறிப்புகளைப் பெறுங்கள், பின்னர், அந்த நபர்களிடம் பேசுங்கள், இதனால் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள அறிமுகமற்ற தன்மை சற்றுக் குறையும். உங்கள் வாடிக்கையார்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக பெயர் மற்றும் இலக்கங்களைக் கேட்காமல், அவர்களே அதைக் கூறும் வகையில் அவர்களிடம் உரையாடுங்கள். உதாரணமாக, நீங்கள் தனக்குத் தெரிந்த ஒருவருக்கு காப்பீடு வாங்கும் ஆர்வம் இருப்பது தெரிந்த ஒருவர் பெரும்பாலும், அவர்களைப் பற்றிக் கூற மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அந்த நேரத்தில் யாரைப் பற்றியும் சிந்திக்க முடியாது. ஆனால், நீங்கள் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்பது பற்றியும் அவரது நண்பர்களுக்கும் குழந்தைகள் இருகிறார்களா என்பது போல கேட்கும்போது, அவர்கள், தங்கள் நண்பர்களுக்கும் எதிர்காலத் திட்டமிடும் அவசியம் இருந்தால் அவர்களைப் பற்றிக் கூறலாம் என உணர்வார்கள்.
இப்போதே செய்யுங்கள்
விற்பனை அழைப்புகளைச் செய்ய நீங்கள் எப்போதும் தயாராகப் போவதில்லை, ஆகவே, சரியான நேரத்திற்காகக் காத்திருக்காதீர்கள். உங்கள் ஐயம் எப்போதும் இல்லாமல் போகாது, ஏனெனில், நீங்களாகவே ஒருவரை அழைத்து, அவர்கள் உங்களிடம் பேச மறுப்பதை எதிர்கொள்ள யாருக்கும் விருப்பம் இருக்காது. ஆகவே, தள்ளிப்போட வேண்டாம் காரணங்களைத் தேடுவதற்குப் பதிலாக, இப்போதே செய்துவிடுங்கள்.
வெளிப்படையாக இருங்கள்
நீங்கள் ஒரு காவலாளி, ஒரு உதவியாளர் அல்லது தொலைபேசியில் எதிர்பார்ப்பவர் ஆகிய எவரைச் சந்தித்தாலும், வெளிப்படையாக எதற்கு நீங்கள் அழைக்கிறீர்கள் என்று கூறுங்கள். உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் அழைப்பின் அவசியத்தைக் குறிப்பிடுங்கள். நேர்மையாகவும் விவரமாகவும் இருங்கள். அழைப்பது எதற்கு என்று கூறுவது, சரியாக இல்லாவிட்டால், மக்கள் உங்களைத் தவிர்க்கலாம், அல்லது சந்தேகப்படலாம். பேசுவதற்கு இது சரியான நேரம்தானா எனக் கண்டறியுங்கள் – அதிக தகவலைக் கொடுங்கள், அப்படி முடியாவிட்டால், பின்னர் மீண்டும் அவர்களை எப்போது அழைக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளுங்கள்.
விரைவில் மற்றும் தாமதமாக அழையுங்கள்
உதவியாளர் தொலைபேசியை எடுப்பதால், செயலாளர் பதிலளிப்பதால் அல்லது அழைக்கும்போதெல்லாம் குரல் அஞ்சல் பதிலளித்தால், ரு சிலரைத் தொடர்பு கொள்வது கடினமாக இருந்தால், வழக்கமற்ற நேரங்களில் அழையுங்கள். நாம் எதிர்பார்ப்பவர், காலை 8.00 மணி அல்லது மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே தானாகவே தொலைபேசியை எடுக்கலாம். மேலும் அவர்கள் தளர்வாகவும் பேசுவதற்கு நேரத்தோடும் இருப்பார்கள், ஏனெனில், இப்போது அவர்கள் 9 –இலிருந்து 5 வரை இருக்கும் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கவில்லை. நேரடியாகவே விற்பனை அழைப்புகளைச் செய்தால், வழக்கமற்ற நேர அழைப்புகளைச் செய்ய, காலையை விட மாலை நேரம் சிறந்தது.
மக்கள் மீண்டும் உங்களை அழைப்பார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.
அவர்கள் உங்களை அழைக்க காத்திருக்கக்கூடாது. அவர்களுக்கு ஆர்வமிருந்தாலும் கூட அவர்கள் அழைக்காமல் போகலாம். அவர்கள் மீண்டும் உங்களை அழைப்பதாகக் கூறினால், அப்படியே செய்வார்கள் என நம்பிக்கொண்டு இருக்காதீர்கள். உங்கள் மமதையை தள்ளிவிட்டு நீங்களே அவர்களை அழையுங்கள். அப்படிச் செய்யும் போது, இனிமையாக நடந்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களை மீண்டும் அழைக்காததால், நீங்கள் எவ்வளவு வெறுப்படைந்திருந்தாலும் பரவாயில்லை.
மனிதனாக நடந்துகொள்ளுங்கள்
விற்பனையாளர்கள் பொதுவாக அவர்கள் சொல்வதை மூச்சு கூட விடாமல் சொல்லிவிடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். இப்படிச் செய்யாதீர்கள். அது இயல்பாக இருக்காது, மற்றும் உதவாது. மக்கள் அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களிடமிருந்தே வாங்குவார்கள், அவர்களையும் அவர்களுடைய வியாபாரத்தையும் புரிந்து கொள்பவர்களிடம் இருந்தே வாங்குவார்கள். நீங்கள் அணுகுபவர்களை, பல கேள்விகளைக் கேட்டு பதில் பெறுங்கள், அவர்களிடம் உண்மையாகவே ஆர்வம் கொண்டிருங்கள்.
குறைவாகப் பேசுங்கள், அதிகம் பேசாதீர்கள்
நீங்கள் அணுகுபவர்களின் தேவைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க, அறிமுகமற்ற அழைப்புகளைப் பயன்படுத்துங்கள். அந்த நபர் உங்களிடம் பேச, நீங்கள் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் நன்மைகளைக் பற்றிய அதிகமான தகவல்களை நிச்சயம் வழங்க வேண்டும். ஆனால் அதிகமாகப் பேசாதீர்கள். நீங்கள் அணுகுபவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறியாமல், நீங்களாக பேசிக்கொண்டே இருந்தால், அவர் வெறுப்படைவார். நீங்கள் அணுகுபவரை, அவரது சிக்கல்கள் மற்றும் தேவைகள் பற்றி ஒரு கேள்வி கேட்டு (நீங்கள் இந்த கேள்விகளை ஏற்கனவே எழுதி வைத்துக் கொள்ளலாம்) அவர்களின் பதில்களைக் கூர்ந்து கவனியுங்கள். பின்னர், அவர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் உதவும் தயாரிப்பின் நன்மை பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டுக் கூறுங்கள். நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள்
ஒருவர் உங்களை, எழுத்து தகவலை அனுப்ப வேண்டினால், அவரிடம் நேரில் சென்று 15 நிமிடம் விளக்கமாகக் கூறலாமா எனக் கேளுங்கள். இந்த முறை அவர்களுக்கு, உங்கள் வியாபாரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மிக செயல்திறனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் தகவல்களைச் சிறப்பாகப் பெறலாம், மற்றும் அவர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளிக்கலாம். மேலும், ஒருவரைச் சந்திக்கும் போது, அவர்களிடம் இனிமையான குணத்தோடு பழகுங்கள், இதனால், அவர் உங்களையும் அவர் உங்கள் தயாரிப்பை வாங்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவில் வைத்திருக்க உதவும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Wednesday, September 2, 2015

நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க

Nice story!

நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க
-----------------
ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க.

பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
'என்னப்பா பண்ண லாம்?’னு கேட்டார்.

‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!

நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!
www.v4all.org 

Friday, August 21, 2015

வினைத்திறனான வேலை விபரத்தினை உருவாக்குதல்

வினைத்திறனான வேலை விபரத்தினை உருவாக்குதல்

www.v4all.org
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
தெளிவான வேலை விவரத்தை உருவாக்குவது பலதரப்பட்ட விண்ணப்பதாரர்களிலிருந்து சரியான நபரைத் தெரிவு செய்வதற்கு உதவும். பொதுவாக இதில் இரு பகுதிகள் காணப்படும் – வேலையின் பொறுப்புகளின் சுருக்கம், மற்றும் செயற்படுத்த வேண்டிய முக்கிய கடமைகள். வேலை விபரத்தினை முழுமையாக சிந்தித்து உருவாக்குவது உங்கள் நேரத்தையும் வேலையையும் மீதப்படுத்தும். குழப்பமான, தெளிவற்ற, அல்லது தவறான வேலை விபரத்தினால் ஒரு நபரையும் வேலையையும் இணைப்பது குழப்பமானதாக இருக்கக்கூடும். ஏனெனில் குறிப்பிட்ட வேலைக்கு என்ன தேவை என்பதே உங்களுக்கு சரியாக தெரியாமல் இருக்கிறன.
வரிவிளம்பரம், வேலைப் பட்டியலிடல், அல்லது ஏனைய ஆட்சேர்ப்பு செயற்பாடுகளுக்கும் சரியான வேலை விபரம் அவசியமாகிறது. இதனால் எவ்வகை திறமையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைத் தெளிவாக தெரிவிக்கிறது. மேலும் அந்த திறன்களை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களை கவர்வதற்கு வழிசெய்யப்படும்.
வேலை விபரத்தினை உருவாக்கும்போது பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
பொதுவான விபரங்களைத் தவிர்க்கவும்
எவ்வளவு நுணுக்கமா இயலுமோ அவ்வளவு நுணுக்கமாக வேலையாட்கள் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகளை விபரியுங்கள். உங்கள் கம்பனி அல்லது உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வேலையாட்கள் அளிக்கக்கூடிய நன்மைகளின் அடிப்படையில் சிந்திக்கவும். உதாரணமாக வீடியோ கடை பராமரிப்பவருக்கான வேலைக்கு, "வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு தருபவர்" என்பது போன்ற விபரங்களைத் தராதீர்கள். அதற்கு பதிலாக, "வாடிக்கையாளரின் அண்மைய அல்லது பழைய திரைப்படங்களின் இரசனையினைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்கள் படங்களைத் தெரிவு செய்வதற்கு உதவுபவர்," போன்ற விபரங்களைப் பயன்படுத்துங்கள். திரைப்படங்களை அதிகம் விரும்பும் நபர் ஒருவர் தன்னுடைய ஈடுப்பாட்டை வாடிக்கையாளருக்கு ஏற்படுத்த முடியும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
முன்னுரிமை வழங்குதல்
பொறுப்புகளினதும் கடமைகளினதும் பட்டியலை உருவாக்கியதும், முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும். வேலையைச் செய்ய முக்கியமாகத் தேவைப்படும் திறன்களிலிருந்து ஆரம்பிக்கவும். வேலையை வெற்றிகரமாக நிறைவேற்ற அவசியமானது என்ன, பொதுவாக விரும்பப்படுவது என்ன, உண்மையில் பொருத்தமில்லாததாக எது இருக்கக்கூடும் போன்றவற்றை இந்த வழியில் அறிவீர்கள். பெரும்பாலும் கூலிக்கமர்த்தல் என்பது புரிந்துணர்வு அடிப்படையிலான பரிமாற்றமாகும், ஆகவே முன்னுரிமைப்படுத்தலின் மூலம் எதனுடன் நீங்கள் வாழலாம் அல்லது வாழ முடியாது என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கே உதவுகிறீர்கள்.
அளவிடக்கூடிய அளவுகோல்களைப் பயன்படுத்தல்
ஒருவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கின்ற செயலாற்றுகையின் வகை பற்றி தெளிவாக இருங்கள், அதோடு, எப்போது சாத்தியமோ அப்போது அந்த அளவுகோலை இலக்கங்கள் அல்லது திகதிகளைக் கொண்டு அளவிடும் வழிகளைத் தேடுங்கள். இல்லாவிட்டால், அவசியமான சிறப்புப்பணியைச் செய்யக்கூடிய ஆனால் உற்பத்தித்திறனில் அல்லது அனைத்திலும் குறைந்த ஒருவரை நீங்கள் கூலிக்கமர்த்தியிருக்கக்கூடும். உதாரணமாக, ஒரே நேரத்தில் கணக்கு முகாமையாளர் ஒன்று, நான்கு அல்லது பத்து கணக்குகளைச் செய்துகொண்டிருப்பாரா? கணக்கு வைப்பாளர் ஒருவர் நாள்தோறும், வாராந்தம் அல்லது மாதாந்தம் பெறக்கூடிய கணக்குகளைப் புதுப்பிக்கும்படி எதிர்பார்க்கப்படலாமா?
உதவி கேட்டல்
புதிய ஊழியர் ஒருவர் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அவரை நிர்வகிக்கப்போகின்ற அல்லது அவருடன் பரஸ்பர தொடர்பிலிருக்கப்போகின்ற உங்கள் நிறுவனத்தாருடன் நேரத்தைச் செலவழியுங்கள். ஒரு வேலையை வெற்றிகரமாகச் செய்வதற்கு அவசியமான தினசரி திறன்கள் என்ன என்பது பற்றி, ஒருவருடன் முன் வரிசைகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் தெரிந்திருப்பார்கள். இந்த உள்ளீடு பெறுமதியற்றது என்பதைக் கண்டுபிடிப்பீர்கள்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Thursday, August 20, 2015

இலக்கு இலக்கு லக்கு

இலக்கு

இலக்கு -www.v4all.org

வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் நம் மனதும் இலக்கும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணமாக, காதலிக்காக காத்திருக்கும் போது கூட மனம் அங்கிருக்கும் பெண்களின் மீது தாவுகிறது. முழுமையாக முடிவு செய்து ஒரு புத்தகம் வாங்குவதற்காக புத்தகசாலைக்கு சென்றால் கூட மனம் அங்குள்ள மற்ற புத்தகங்களின் மீது தாவுகிறது. மனம் எப்பொழுதும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை ஒரு இலக்கில் நிறுத்துவது என்பது பற்றி இந்த மகாபாரத கதை அழகாக விளக்குகிறது.
துரோணனின் மாணவர்கள் அனைவரும் வில் வித்தையில் சிறந்தவர்கள். இலக்குகளை நோக்கி அம்புகளைத் தவறாமல் செலுத்தக் கூடியவர்கள். ஒரு பறவையை அடிக்க துரோணர் சொன்னபோது ஒரு சீடனுக்கு மரம் தெரிந்தது. மற்றொருவனுக்கு பறவை முழுதாய் தெரிந்தது. ஆனால் அர்ச்சுனனுக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. இலக்கு நோக்கி எய்யும் போது கை மீதும் கவனம் இல்லை, வில் மீதும் இல்லை, அம்பு மீதும் இல்லை. இலக்கின் மீது மட்டுமே. அந்த இலக்கிலும் துல்லியமாக அதன் மையத்தில் மட்டுமே மனம் லயித்திருந்தது. அந்த அலைபாயும் மனதை ஒரு புள்ளியில் நிறுத்தியதாலேயே அர்ச்சுனன் ‘வில்வித்தையில் சிறந்தவர்’ என்ற பெயர் பெற்றார்.
“எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம்தான் நம் எதிர்காலத்தை உருவாக்குகிறது”.

Friday, August 14, 2015

வாழ்க்கையை மாற்றும் மாந்திரிக ரகசியங்கள்

வாழ்க்கையை மாற்றும் மாந்திரிக ரகசியங்கள்
(share) செய்யுங்கள்)
(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும்.காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம்.நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை


DrS
tar Anand