Showing posts with label MLM Sales training company in chennai. Show all posts
Showing posts with label MLM Sales training company in chennai. Show all posts

Sunday, September 25, 2016

கட்டு மந்திரங்களும் முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும்

கட்டு மந்திரங்களும் முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும்

கட்டு மந்திரங்களும் முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும்  அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும்
சக்தி வாய்ந்த கட்டு மந்திரங்களும் அவற்றை முறையாக பிரயோகிக்க சித்தர்கள் சொன்ன வழி முறைகளும் .. அவற்றின் பின்னால் உள்ள சூக்சும ரகசியங்களும் .. 
==================================== 

சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன 
வாழ்விடங்களில் இருந்து விலகி 
காடுகளிலும், மலைகளிலும் 
வாழ்ந்திருந்தனர்.அவர்களின் வாழ்நாள் தேடல் 
விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் 
சார்ந்ததாகவே இருந்தது. இத்தகைய தேடலில் 
அவர்கள் அடைந்த தெளிவும், முதிர்வும் 
அசாதாரணமானவை. 

தாங்கள் உணர்ந்த அரிய தகவல்கள் 
சுயநலவாதிகளிடமோ அல்லது 
பேராசைக்காரர்களிடமோ சென்று சேர்ந்து 
விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக 
இருந்தனர்.அதன் பொருட்டே தங்களின் 
பாடல்களை மறைபொருளாய் எழுதி 
வைத்தனர். 

சித்தரியலில் குருவே எல்லாவற்றுக்கும் 
ஆதாரமானவர் என தீர்க்கமாய் 
நம்பினர்.குருவானவர் தனத் தெளிவுகளை 
சீடர்களுக்கே அளித்தார்.மறைபொருளை 
கட்டவிழ்க்கும் வகையினையும் 
குருவிடமிருந்தே சீடர்கள் 
பெற்றனர்.இதனையே நாம் குருவருள் 
என்கிறோம். 

சதாரண மனிதர்களினால் செயல் 
படுத்தமுடியாத நுட்பங்கள், வழிமுறைகள் 
அவற்றின் அசாத்திய விளைவுகளை பற்றிய 
தகவல்களே இப்படி பாதுகாக்கப் 
பட்டது.இவற்றையே பொது மக்கள் சித்த 
ரகசியம் என்று அழைத்தனர். 
என்னுடைய புரிதலின்படி இந்த சித்த 
ரகசியங்களை ஆறு வகைகளாய் தொகுக்க 
நினைக்கிறேன். 

அவையாவன... 
உடல் கட்டு மந்திரங்கள் 
அபாயகரமான யந்திரங்கள் 
சாபநிவர்த்தி மந்திரங்கள் 
காயகற்ப வகைகள் 
இரசவாதம் 
தீட்சைகள் 
இரசவாதம் பற்றி முன்பே பல பதிவுகளில் 
பார்த்து விட்டபடியால் மற்ற வகைகளைப் 
பற்றிய எனது புரிதல்கள் மற்றும் 
தகவல்களை வரும் நாட்களில் பகிர்ந்து 
கொள்கிறேன். 

இனி பகிர இருக்கும் பல தகவல்கள் நம்ப 
இயலாத வகையிலும், பகுத்தறிவுக்கு 
ஒவ்வாதனவாகவும் இருக்கலாம்.இவற்றின் 
சாத்திய,அசாத்தியங்கள் ஆய்வுக்கும், 
விவாதத்திற்கும் உட்பட்டவை. இந்த 
முறைகளை செயல்படுத்தி பலன் காண்பதில 
நிறையவே நடைமுறை சிக்கல்கள் 
இருக்கின்றன.முறையான குருவின் அருளாசி 
மற்றும் வழி நடத்துதல் இருந்தால் மட்டுமே 
இவை சாத்தியமாகும்.எனவே இவற்றை ஒரு 
தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட 
வேண்டுகிறேன். 

சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்” 
------------------------------------------------------------- 
நமது உடலானது பஞ்ச பூதங்களின் 
சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச 
சக்திகளான கோள்கள், அட்டதிக்கு 
பாலகர்களுக்கு 
கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான 
மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் 
ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த 
கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே 
எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், 
சுயமாகவும் செயல்பட முடியும் என 
சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் 
தெளிவுகளுமே இந்த பதிவு... 

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து 
உடலை வெளியேற்றுவது, வெளியேறிய 
பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு 
அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு 
மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் 
கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது 
அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் 
மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக 
குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் 
என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், 
அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் 
கூறப் பட்டிருக்கிறது. 

இனி நவ கோள்களின் உடல் கட்டு 
மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு 
மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த 
பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க 
வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். 

அதாவது... 
"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய 
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன் 
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா 
தனி தனியாய் உருத்தான் போடு போடே" 
- அகத்தியர் - 

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம் 
நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம் 

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம் 

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் 
ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது 

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது 

அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது 

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது 

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது 

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் 
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் 

திக்கு கட்டு 
------------------- 
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் 
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு 
முன்புறம் போடவும் 
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும் 
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும் 
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும் 
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம் 
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் 
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே 
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே 
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே 
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே 
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே 
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே 
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே 
பொருப்பு இருப்பாக கொண்டேனே 
சிவன் சிவமாக கொண்டேன் 
சிவன் இருந்தவாறே 

உடல்கட்டு. 
------------------- 
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல் 
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல் 
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல் 
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல் 
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா 
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்) 
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர 
கீழ்க்கண்டவை நடக்கும் 
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும் 
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும் 
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும் 
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும் 
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும் 
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது 
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்........... 

சிவ மகாமந்திரம் ... முயன்று பாருங்கள் 
-------------------------------------------------------------------- 
"ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்" 
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது: 
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது. 
இதை நீக்க சிவ மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம் - அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும். 

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் . 
"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த 
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே! 
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை 
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே 
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே 
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே! 
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! 
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும். 

அனுமாரின் வசியக் கட்டு மந்திரம் ... 
---------------------------------------------------------- 
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா, 
லங்காபுரி ராவண சம்ஹாரா, 
சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா, 
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு 
ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா" 
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார்அகத்தியர். 

சகலத்திர்கும் கட்டு மந்திரம் ... 
------------------------------------------------ 
"ஓம் பஹவதி ப்ய்ரவி 
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு 
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு 
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி 
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு 
சத்ருவை கட்டு எதிரியை கட்டு 
எங்கேயும் கட்டு 
சிங்க் வங்க் லங்க் லங்க் 
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம" 
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா” 
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன். 

சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
--------------------------------------------------------- 
"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு 
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம் 
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" 
என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் 
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். 

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
--------------------------------------------------------- 
"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர 
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம் 
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" 
என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் 
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். 

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------------ 
"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர 
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே" 
- அகத்தியர் - 

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் 
றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் 
செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------- 
"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு 
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம் 
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்" 
- அகத்தியர் - 

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு 
சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் 
உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
-------------------------------------------------------- 
"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு 
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம் 
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்" 
- அகத்தியர் - 

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் 
மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று 
அன்பாக லட்சம் உரு செபித்தால் 
குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
-------------------------------------------------------------- 
"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு 
இறீம் றீம் நசி மசி யென்று போடே" 
- அகத்தியர் - 

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு 
செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு 
தீரும் என்கிறார் அகத்தியர். 

சனிக்கான உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------------- 
"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு 
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி 
தேடுவாய் லட்சமுருப் போடு போடே" 
- அகத்தியர் - 

பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு 
செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------------- 
"திறமான இராகுவுட கட்டுதீர 
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம் 
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்" 
- அகத்தியர் - 

திறமான இராகு பகவானின் உடல் கட்டு 
மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" 
என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் 
இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் 
அகத்தியர். 

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. 
------------------------------------------------------ 
"சாடுவாய் கேதுவுட கட்டு தீர 
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் 
போடே" 
- அகத்தியர் - 

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை 
கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு 
செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு 
தீரும் என்கிறார் அகதியர். 

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் 
மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் 
கட்டு மந்திரங்களை அகத்தியர் 
அருளியிருக்கிறார். 

குளிகன் உடல் கட்டு மந்திரம்.. 
---------------------------------------------- 
"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க 
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம் 
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா" 
- அகத்தியர் - 

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு 
"ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு 
செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் 
என்கிறார் அகத்தியர். 

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம். 
------------------------------------------------------------- 
"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப் 
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு 
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும் 
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் 
என்றும் 
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும் 
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும் 
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும் 
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே" 
- அகத்தியர் - 

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் 
புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் 
வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் 
பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது 
லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே 
அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் 
என்கிறார். 

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் 
உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் 
பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ 
கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் 
அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது 
உடல் முழுமையாக உனது 
கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார். 

உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை 
---------------------------------------------------------------- 
சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் 
நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் 
மந்திரங்கள் மட்டுமே கூறப் 
பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை 
செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு 
கொண்டு வருவது போன்றவைகள் 
குருவினால் மட்டுமே கூறிட இயலும். 
தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை 
வலியுறுத்துவதன் பின்னனி இதுதான். 
இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் 
முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை 
இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு 
பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் 
மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி 
பார்ப்போம். 

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள் 
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு 
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும் 
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு 
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா 
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம் 
திருவான வினாயகரின் சுழியை முந்திச் 
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே" 
- அகத்தியர் - 

குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்" 
என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் 
முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் 
என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், 
சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே 
அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், 
மேலும் திருவான வினாயகரின் சுழியை 
முதலில் செபித்தே தனது மந்திரங்கள் 
அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று 
சொல்கிறார். 

"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு 
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு 
வடக்குமுகம் இருந்துலட்சம் 
உருத்தான்போடு" 
- அகத்தியர் - 

மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு 
உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து 
ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு 
நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க 
வேண்டும் என்கிறார். 

இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய 
தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும், 
முயற்சியும் உள்ள எவரும் குருவருளை 
வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன் 
படுத்திடலாம். 

பின் குறிப்பு : 
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள் 
அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட 
நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத 
நம்பிக்கைகளை விதைப்பதோ எனது 
நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை, 
பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும், 
விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும் 
தெளிவுகள் கிடைக்கலாம். 

சிவ சிவ சிவ சிவ நமசிவாய................. 

முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்.

Monday, September 5, 2016

மன ஆரோக்கியம் என்றால் என்ன?

மன ஆரோக்கியம் என்றால் என்ன?

மன ஆரோக்கியம் என்பது, நமது வாழ்க்கையை அனுபவிக்கவும் அன்றாட வாழ்வின் தேவைகளை சமாளிக்கவுமான நமது திறன் ஆகும்.
நல்ல மன ஆரோக்கியம் என்பது நாம் உற்பத்தித் திறன் கொண்டிருக்கவும், மற்றவர்களுடன் நிறைவான உறவுகளைக் கொண்டிருக்கவும், மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும், சோதனையான நேரங்களை சமாளிக்கவும் உதவுகிறது.
மன ஆரோக்கியத்திற்கு பல கூறுகள் பங்களிக்கின்றன:
  • சுய நம்பிக்கை மற்றும் சுய அறிவு
  • உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி
  • குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் உறவுகள்
  • நிதிநிலைகள்
  • சமூக ஈடுபாடு
  • மனஅழுத்தத்தை நீங்கள் சமாளிக்கும் விதம்
  • உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தும் விதம்
குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்கு நாம் முறையற்ற வகையில் எதிர்வினை காட்டுவது அல்லது விரக்தியாக அல்லது "ஊக்கம் குன்றியதாக" ("down") உணர்வது போன்றவற்றை நாம் அனைவருமே சில நேரங்களில் அனுபவிக்கிறோம். நல்ல மன ஆரோக்கியம் கொண்ட நபர், இத்தகைய நேரங்களை சமாளிக்கவும் விரைவாக அதைக் கடந்து செல்லவும் இயலும்.
புதிய நாட்டுக்குக் குடிவரவு செய்யும்போது நல்ல மன ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதாவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து தனிமைப்படுவது, நிதிநிலை உறுதிப்பாட்டை இழப்பது, புதிய மொழியைக் கற்பது, புதிய பண்பாட்டுக்கு தகவமைத்துக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறனுடையவராக நீங்கள் இருக்க வேண்டும்.
yours Happily
Jc.Dr.Star Anand Ram
www.moneyattraction.in

Thursday, March 17, 2016

வியாபார மற்றும் பண பிரச்சனைகள் தீர்க்கும்

வியாபார மற்றும் பண பிரச்சனைகள் தீர்க்கும் எட்டு முக ருத்திராட்சம் 



17 முக ருத்திராக்ஷும்

தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும்.இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷும்.

மேற்கண்ட நமது பதிவை கண்டு பலர் தொடர்ந்து தொலைபேசியில் இது வேண்டும் என்று கேட்டு வந்தனர்-ஆனால் சாமானியர்கள் வாங்கும் விலையில் இல்லை இந்த ருத்திராட்சம்-ரூ.90,000 முதல் 1,50,000 வரை விற்கபடுகிறது. ஆகையால் இதை விசாரிப்போரிடம் நாம் நமது அனுபவத்தில் கண்ட உண்மையை சொல்வதுண்டு-ஆம், இது கொடுக்க கூடிய அதே பலனை தரவல்லது 7 மற்றும் 8 முக ருத்திராட்சங்கள். சேர்த்து அணிய வேண்டும். லக்ஷ்மி மற்றும் கணபதியின் ஆகர்ஷன சக்தியை கொண்ட இவ்விரண்டும்- பண பிரச்சனைக்கு மட்டுமின்றி ஜாதகத்தில் அஷ்டமத்தில் சனி அல்லது ராகு இருப்பினும், ஏழரை, அஷ்டம, கண்டக சனி மற்றும் கர்ம சனி காலங்களிலும் அணிந்து நிவாரணம் பெறலாம். மேலும் தற்போது காம்புடன் கூடிய அதிக நபர்கள் கைபடாத அதிவீரிய காய்கள் கிடைப்பது அரிது. ஒரு சில அன்பர்களுக்காக தற்போது நேபாளத்தில் இருந்து நமக்கு வந்திருந்த ருத்திராட்ச காய்களில் அதிசியமாக இரண்டு 8 முக காய்கள் காம்புடன் !! இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது !!  

Friday, March 4, 2016

நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கம்.

💐 நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கம்.
💐💐💐💐💐💐💐

😀 FAIL என்ற வார்த்தைக்கு 'first Attempt In Learning', அதாவது ‘கற்றுக்கொள்வதற ்கான முதல் வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும். 

😀 END என்பதற்கு ‘Effort Never Dies'. அதாவது ‘முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை' என்பது அதன் பொருளாகும். 

😀 NO என்ற வார்த்தைக்கு Next Opportunity, அதாவது ‘அடுத்த வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்..!!!

Monday, September 21, 2015

Key Personal Financial Terms Everyone Should Know


Key Personal Financial Terms Everyone Should Know

Financial TermsIt does not matter whether you hire an accountant or an advisor to handle your finances, understanding basic financial concepts will only help you manage your investments better.
Below is a glossary that describes the frequently used financial jargons.
#1: Inflation
Defined as a sustained increase in the general level of prices for goods and services, inflation reflects a reduction in the purchasing power per unit of money. The value of money is observed in terms of purchasing power, so the higher the rate of inflation, the lower is your purchasing power.
While it influences the economy it also affects the investors. It tells investors exactly how much of a return their investments need to make for them to maintain their standard of living. For example – if a certain stock returned 4% and inflation was 5%, then the real return on investment would be minus 1% (5%-4%). In India the inflation rate averaged 8.98 percent from 2012 until 2014.
terms image
Compounding
Generating earnings from previous earnings is referred to as compounding. In Scripbox terms, making your money work hard.
For example, let’s say you invested INR 10,000 and it earned an interest if INR 1000 in the first year. Now, for the second year, if you don’t make any more investments and assuming the interest rate remains the same at 10%, you will generate an interest amount of INR 1100 for second year. The interest earned in the first year, generated additional interest in the second year. This way, your money keeps on growing until withdrawn. This is called compounding. It is one of the fundamental ways to build wealth.
Related reading
Interest Rate (Floating, Fixed, and Reducing)
An interest rate is the rate at which interest is paid by borrowers for the use of money that they borrow from lenders.
A fixed interest rate stays constant throughout the duration of the loan however.
A floating interest rate is based on a base rate which is controlled by the RBI and can change over the duration of the loan. Floating interest rates can affect your interest payable and could increase/decrease your monthly instalment amount.
A reducing or diminishing interest rate is calculated on the outstanding loan balance every month. Interest Payable per Installment = Interest Rate per Installment * Remaining Loan Amount.
Time value of money
Time value of money is a concept based on the idea that the value of money available at the present time is worth more than the same amount in the future.
For example, INR 100 invested today for one year at a 5% interest rate will be worth INR 105 in the next year, therefore, INR 100 paid now and INR 105 paid one year later have exactly the same value.
Related Reading
Market volatility
Volatility refers to the amount of uncertainty or fluctuation in the value of an investment. In other words, volatility refers to the amount of uncertainty or risk about the size of changes in a security’s value.
It is a rate at which the price of a security increases or decreases for a given set of returns. Volatility is measured by calculating the standard deviation of the annualized returns over a given period of time.
Asset allocation
It is an investment strategy which aims to balance risk and reward. In other words, it is the process of deciding the proportion of your portfolio dedicated to various assets based on your goals, risk tolerance, and time sphere.
The three major asset classes include equity, real estate, and fixed income. Each of these classes reacts differently to different economic conditions. Hence it is wise to diversify your portfolio and spread your investments across multiple asset classes.
Recommended related reading
Net worth
The difference between your assets and liabilities is referred to as net worth. You can calculate your overall financial health by adding up all of the money and investments and subtracting all the debt from the grand total. The resulting amount is your net worth.
Credit Score
Credit score is a numeric representation of a person’s credit files and defines a person’s creditworthiness. It is used by lenders to assess whether the person will be able to clear off his debts.
Lenders use credit scores to determine who qualifies for a loan, at what interest rate, and what credit limits. The score ranges from 300 to 850 – the higher the number, the more creditworthy the person is deemed to be.
Capital gains
The increase in the value of an asset or investment, like a stock or real estate, above its original purchase price is called a capital gain.
Rebalancing
Rebalancing involves buying or selling assets periodically to maintain your desired asset allocation.
For example, if your target allocation is 60% stocks, 20% bonds and 20% cash, and the stock market has performed particularly well over the past year, your allocation may now have shifted to 70% stocks, 10% bonds and 20% cash. To rebalance your portfolio, you could sell some of your stocks and reinvest the amount in bonds and rebalance your portfolio.
Related Reading
Stocks
Stocks are a type of investment or security which gives you part-ownership in a company. Also referred to as shares or equity, stocks give you a claim on part of the company’s assets and earnings. The more stocks you own, the higher is your ownership stake in the company.
There are two types of stocks, common and preferred. A common stockholder can vote at shareholders meetings and receive dividends. Preferred stockholders have a higher claim on assets and earnings than owners of common stock but do not have any voting rights.
Bonds
A bond is a debt investment or a loan issued to a corporate or governmental entity for the purpose of raising capital. A bond is a promise to repay the principal along with the fixed interest for a defined period of time. Some bonds do not pay interest, but all bonds require a repayment of principal.
Related Reading
Equity
An equity investment generally refers to the buying and holding of shares of stock in anticipation of income from dividends and capital gains. However, in the context of real estate, it is the difference between the current market value of the property and the amount the owner still owes on the mortgage. In other words, it is the difference between the current value of the property and the amount that the owner owes against it.
Related Reading
Term Insurance
Term insurance is a traditional form of life insurance which offers life coverage for a specified duration of time or a specified “term” of years. Term insurance provides only insurance cover and does not offer money back on maturity.
Available for a range of 10-30 years, term insurance is the cheapest and most recommended type of life insurance policy.
Premium for Life Insurance
A premium is an amount to be paid periodically for a contract of insurance. The premium amount is calculated based on several parameters like age, type of employment, medical condition of the insured person, etc. The premium amount can be paid in monthly, quarterly or annually for a defined period of time.

Friday, September 11, 2015

மார்க்கெட்டிங் ரகசியம் - மார்க்கெட்டிங் செய்வது எப்படி

மார்க்கெட்டிங் செய்வது எப்படி - Marketing Seivathu Eppadi In Tamil 



மார்க்கெட்டிங் ரகசியம்!
ஒ ரு நகர வீதியில் இருபக்கமும் மளிகைக் கடைகள் நிறைந்திருக்கின்றன. ஒரு கடையில் எப்போது பார்த்தாலும் கூட்டம்... சதா தள்ளு முள்ளு! அடுத்த கடையிலோ, காற்றாடும். இருவருமே மளிகை வியாபாரத்தில் இருந்தாலும் ஏனிந்த வித்தியாசம்? கூட்டம் கூடும் கடைக்காரர் மார்க்கெட்டிங் வித்தை அறிந்தவர். ஆளில்லாத கடைக்காரருக்கு அந்த வித்தை தெரியவில்லை. இதுதான் வித்தியாசம்!
கோடி கோடியாகப் பணம் போட்டுப் பொருளைத் தயாரித்தாலும், அது விற்பனை ஆனால்தானே மதிப்பு? அதேபோல தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தயாரிக்கப்பட்டாலும் பொருட்களை எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கவேண்டுமே... அப்போதுதானே வியாபாரம் பெருகும். இதுபோன்ற விஷயங்களுக்கு அடிப்படையாக இருப்பது மார்க்கெட்டிங்!
தற்போது உள்ள சூழ்நிலையில் என்னென்ன வழிகளைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களைக் கவரலாம்? பல முன்னணி நிறுவனங்களுக்கு விற்பனை ஆலோசகராக இருக்கும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, ‘‘ஒரு பொருளை தயாரித்த பின் அதற்கு நல்ல பெயராகத் தேர்ந்தெடுப்பது அவசியம். பெயர் எளிதாக மக்கள் மனதில் பதிந்துவிட்டாலே போதும். பெயரில் இருக்கும் ஈர்ப்பினாலேயே மக்கள் அந்தப் பொருளைக் கேட்டு வாங்க ஆரம்பிப்பார்கள்.
அதேபோல, பொருளை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் கருத்தைக் கேட்கவேண்டும். ‘நன்றாக இருக்கிறது’ என்று கருத்து சொல்பவர்கள், தொடர்ந்து வாங்க ஆரம்பிப்பார்கள். அதுமட்டும் இல்லை. தாங்கள் பயன்படுத்திய பொருளைப் பற்றி நாலுபேருக்கு எடுத்துச் சொல்லவும் செய்வார்கள். இது இலவச பப்ளிசிட்டி!
‘மேகி’ நூடுல்ஸை இப்படித்தான், ஆரம்பத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். அது, இப்போது குழந்தைகளின் விருப்பமான உணவு’’ என்றார்.
சென்னையில் உள்ள என்.ஜி.ஓ-க்களின் விற்பனை ஆலோசகர் முத்து கிருஷ்ணன், ‘‘பொருளைத் தயாரிக்கும் பகுதியிலேயே விற்பனையைத் தொடங்கவேண்டும். அப்படி முன்னோட் டம் பார்க்கும்போது அந்தப் பொருளில் உள்ள நிறைகுறைகள் தெரியும்.
சுய உதவி குழுவில் பொருட்களைத் தயாரிப்பவர்கள் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள அரசு விற்பனை அங்காடிகளுக்குச் சென்று விற்பனை செய்ய லாம். அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் விற்கலாம்’’ என்று அனுபவ அடிப்படையில் கருத்து சொன்னார்.
பொருளைத் தரமானதாகத் தயாரித்துவிட்டு பேக்கிங்கைச் சரியாகச் செய்யாவிட்டாலும் விற்பனையில் தேக்கம் இருக்கும். அதனால், பொருளைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அதே அளவு அக்கறையை பேக்கிங்கிலும் காட்டவேண்டும்.


Saturday, September 5, 2015

வெற்றிபெற்ற தொழில் முனைவோரின் தனிச்சிறப்புப் பண்புகள்

வெற்றிபெற்ற தொழில் முனைவோரின் தனிச்சிறப்புப் பண்புகள்
சான்றிதழ்
கொல்லெட் பால்
Collette PaulSTM Media Inc. வியாபார சஞ்சிகைகள் வெளியீட்டாளர்
"நீங்கள் எந்தத் வியாபாரத்தை ஆரம்பித்தாலும் நிதி சார்ந்த பொறுப்புகளை முகங்கொடுத்து பேணிக்கொள்ளும் திறமையுடன் இருக்கவும்"
Transcription - html
தைரியம்::அதாவது உங்களுக்கென்று சொந்தத் வியாபாரத்தை வைத்துக்கொள்ளவேண்டுமென்ற தீராத ஆசை வைத்துக் கொள்வதற்கான தெரழில் முனைவோருக்கு இருக்கும் ஒரு இயல்பூக்கமே தைரியமாகும். உங்கள் இலட்சியத்தை அடைவதில் தைரியமும், அர்ப்பணிப்பும் முழுமையாக வேண்டும். நீங்கள் நினைத்த வியாபாரத்தின் மீது உங்களுக்கு காதல் இருந்தால், உங்கள் இலட்சியத்தின் மீதான பக்தி இன்னும் கூடுதலாக இருக்கும். வாழ்க்கை குறுகிய காலமே உள்ளது, எனவேஉங்களுக்கு திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்காத ஒரு வியாபாரத்தை ஆரமபிக்க முடியாது. மேலும் நல்ல மற்றும் கெட்ட நேரங்கள் ஆகியவற்றின் வழியே உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றிக் கொள்ளவும்.
அறிவுத்திறன்: ஒரு முறையானக் கல்வித் தகுதிகள் முக்கியமானது என்பதோடு அதே வேளையில், ஒரு தொழில் முனைவோருக்கான"மூளைத்திறன்" என்பது வெறும் இடைக்கால சாதனைகளைக்காட்டிலும் கூடுதலானது ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபராக நீங்கள் உருவாக, நீங்கள் ஆரம்பிக்கும் வியாபாரத்தைப்பற்றிய ஒரு நடைமுறை அறிவு வியாபாரத்தை நீங்கள் தொடங்கும் முன்னரே தேவை. நடைமுறை அறிவு, மற்றும் சரியான அனுபவம் இணைந்து உருவாவதே தேவையான அறிவாற்றல். செயலறிவு,நடந்தவற்றை பின்பற்றிச் செல்லுதல், மற்றும் விபரத்திற்கான கவனம், ஆகியவைமிக முக்கியம்.
மூலதனம்: முதலாம் ஆண்டில் குறைந்தது உங்கள் சொந்தப்பணம், மற்றும் ஒரு காசுப் பாய்ச்சலை பேணிக்கொள்ள போதுமான அளவு முதலீடு ஆகியவை உங்களுக்கு தேவை. எதிர்கால அமர்வில் காசுப்பாய்சல் கட்டுப்பாட்டின் மூலம் எதிர்கால பணத்தேவைகளை கணிக்க நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். சிறிய அளவில் குறைந்த முதலீட்டுடன் பல வியாபாரங்ள் ஆரம்பிக்கப்படலாம் . பிறகு வியாபாரம் வளர வளர உங்கள் அனுபவம் கூடும், உங்கள் வியாபாரத்தில் கிடைக்கும் பணப்பெருக்கத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பிறரை சேர்த்துக் கொள்ள உங்களுக்கு ஆரம்ப மூலதனம் தேவையில்லாமல் இருக்கலாம் ஏனெனில் முதலில் அனைத்தையும் நீங்களே செய்பவராகக் கூட இருக்கலாம். தாமாகவே"செய்யுங்கள்"என்ற கொள்கை அனைத்தையும் கற்றுக் கொள்ளவும், பிறருக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கவும் கற்றுக்கொள்ள சிறந்த வழி. உங்கள் வியாபாரத்திற்கு இடும் மூலதனத்திற்கு வரையறை வைத்துக் கொள்வதன் மூலம் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம்.

Wednesday, September 2, 2015

அலுவலக கீதை.

அலுவலக கீதை.- www.happy4all.org


!! நீ தனியாகத்தான் வந்தாய், தனியாகத்தான் போவாய்.
இங்கு உனக்கு என்று ஒன்றும் கிடையாது.

பணியாளர்கள் குறைவு என்று வருந்தாதே !  
நீ தனியாகத்தான் போராட வேண்டும். யாரையும் நம்பி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே !

உற்றார் உறவினர் நண்பர்கள் சக பணியாளர்கள் என்பதெல்லாம் மாயை, அவை அனைத்தும் மா
யையின் சின்னங்கள்.

அதிகமாக உழைக்கும் காரணமாக உன்னை மீறி நடக்கும் பிழைகளுக்கும் அதற்கு உண்டான தண்டனைகளுக்கும் வருந்தாதே !

நீ அடுத்த பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்காதே !
தற்போது எந்த பதவியில் இருக்கிறாயோ அதில் திருப்தி பட்டுக்கொள் !

நீ எப்பொழுது இங்கு இல்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருந்தது.  நீ எப்பொழுது இருக்கப்போவதில்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருக்கும்.

இதில் நீ என்று எதுவும் கிடையாது.
இன்று உனது வேலை எதுவோ 
அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது, 
நாளை வேறு ஒருவருடையது ஆகி விட போகிறது.

நீ என்பது ஒரு மாயை.  தான் என்ற கர்வம் வர கூடாது.
இந்த மாயை மட்டுமே உனது அனைத்து கவலைகளுக்கும் காரணம்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறைகள், . என்கிற வார்த்தைகளை நீ மறந்து விடு.  மாயையிலிருந்து விடு படு.

அப்படி இருக்கும் பட்சத்தில் நீதான் இந்த அலுவலகம், இந்த அலுவலகம்தான் நீ என்பது உனக்கு புலப்படும்...

Saturday, August 29, 2015

வெற்றிகரமான விற்பனைக் கடிதங்கள்

வெற்றிகரமான விற்பனைக் கடிதங்கள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
நம்பகமான வாடிக்கையாளர்களை அடைவதற்கான சிறந்தவழி தொலைபேசியே, பல நேரங்களில் விற்பனை பற்றிய கடிதங்களை நீங்கள் எழுதவேண்டியதிருக்கும். அப்படி சிறப்பானதாக எழுதப்படும் அந்த கடிதமே வாடிக்கையாளர்கள் மத்தியில் உங்கள் நிறுவனத்தை கவரக்கூடும். அந்தக் கடிதத்தில் தவறோ அல்லது பிழையோ இருந்தால், உங்கள் தயாரிப்பு அல்லது சேவை மீது இருக்கும் விருப்பம் குறைந்துவிட அதுவே காரணமாக இருக்கும்.
விற்பனை கடிதங்களில் மூன்று வகைகள் உண்டு -- அறிமுக கடிதங்கள்; பின்-தொடர் கடிதங்கள்; தொகுப்புகள் பற்றிய உறை கடிதங்கள் போன்றவை இதில் அடங்கும். அறிமுக கடிதத்தில் உங்களைப் பற்றியும், நீங்கள் எந்த நாள் மற்றும் நேரத்தில் அவர்களை சந்திக்க இருக்கிறீர்கள் என்பதையும் அதில் தெளிவாக குறிப்பிடவேண்டும். பின் தொடர் கடிதங்களானது நீங்கள் முன்பு அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சியாகும்; இது ஒரு தொலைபேசி உரையாடலாக இருக்கலாம் அல்லது நேரடிச் சந்திப்பாகவோ இருக்கலாம். உறை கடிதங்கள் பெரும்பாலும் மொத்தமாக பொருட்கள் அனுப்பும்போது அதோடு இணைத்து, பெறுநருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
ஒரு சிறப்பான விற்பனைக் கடிதத்தை உருவாக்குவதற்கான சிறு குறிப்புகள்:


உங்களைப் பற்றியல்லாமல் வாடிக்கையாளரைப் பற்றி பேசுங்கள்
விற்பனைக் கடிதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது,"நான்"என்ற சொல்லாகும், ஆனால், அதிகம் பயன்படுத்தவேண்டியது, "நீங்கள்" என்ற சொல்லாகும். "நான்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஒரு விற்பனைக் கடிதத்தை தொடங்குவதை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் வாசிப்பவர் தொடர்ந்து வாசிக்காமல் போய்விடலாம். இவையாவும் விற்பனையின் நன்மைகளே -- உங்கள் தயாரிப்புகளின் சேவை தொடர்பான அம்சங்களைப் பற்றி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விருப்பம் இல்லாதபோதிலும், உங்கள் தயாரிப்புகளின் சேவைகள் எந்த வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்கள் விளக்கலாம். "உங்களின் சேவை பிரதிநிதிகளுக்கு அண்மைகால தொழில்நுட்பங்கள் குறித்து நான் பயிற்சி தருகிறேன்"என்பதற்குப் பதில், "வாடிக்கையாளர் திருப்தியுடன் சம்மந்தப்பட்ட அண்மைகால தொழில்நுட்பங்ளின் உங்கள் சேவை பிரதிநிதிகளுக்கு கற்றுத்தருவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் கூறும் குறைகளின் அளவு குறையும்".கூறுவது சிறப்பு.
உங்கள் கடிதத்தில் சுருக்கமாக நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுடன் தொடங்க வேண்டும். அறிமுக கடிதத்தில் இது மிகவும் அவசியமானது, அந்த குறிப்பிட்ட நபர் ஏற்கனவே உங்களுக்குப் பழக்கமானவராக இருந்தால் அதையும் நினைவுகூரவும். உதாரணமாக: "கடந்த வியாழக்கிழமை உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. Acme Partners என்பது ஒரு விளம்பர நிறுவனம், இந்நிறுவனம் உங்கள் வலைத்தளத்தை சிறப்பாக மாற்றிடக்கூடிய வசதிகளை செய்யும்"" என்று கூறலாம்.
உங்கள் கடிதத்தின் அங்கத்தில் மூன்று அல்லது அதற்குமேற்பட்ட முக்கிய குறிப்புகள் இருக்கவேண்டும். பொட்டுக்குறிகள் இருப்பதை மக்கள் அதிகம் விரும்புவார்கள், காரணம் கடிதத்தை எளிமையாக வாசிக்க இது உதவும். எழுதுபவர்/விற்பனையாளராக இருக்கும்போது, முக்கிய தகவல்களை நீங்கள் குறித்துகாட்டுவதும் சிறப்பானது.
உங்கள் கடிதத்திலிருந்து எந்த விளைவை பெறவிரும்புகிறீர்கள்? நேரடி சந்திப்பை விரும்புகிறீர்களா? முந்திய சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறுகிறீர்களா? வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா? கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தை பெற விருப்பமா? குறிப்பிட்டச் செயல்வடிவ வேண்டுகோளை இட்டு உங்கள் கடிதத்தை முடியுங்கள். உதாரணமாக: "சந்திப்பு குறித்து பேசுவவதற்கு வருகிற நவம்பர் 18, வியாழக்கிழமை காலை 10. a.m மணிக்கு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்" அல்லது "வருகிற டிசம்பர் 12 ஆம் திகதிக்குள் இதில் இணைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை திருப்பி அனுப்பவும் அல்லது உங்களுக்கு வேறெதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் என்னைத் தொடர்புக்கொள்ளவும்".
பெரும்பாலும் அனைவரும் கடிதத்தின் முதல் பக்கத்தை தான் வாசிப்பார்கள், ஆகவே உங்கள் கடிதம் ஒரே பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கடிதம் யாரிடமிருந்து வந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள பெரும்பாலானவர்கள் கையொப்பம் இருக்கிறதா என்று கடிதத்தின் கீழ் பகுதியைதான் முதலில் பார்ப்பார்கள். சுருக்கமானதே செயல்திறன் மிக்கது, அதனால் சுருக்கமான கடிதத்தை தயாரித்து வாடிக்கையளர்களுக்கு அனுப்புங்கள்.
உங்கள் வாடிக்கையாளரின் நிறுவனத்தைப் பற்றி முழுமையாக நீங்கள் அறிந்துக்கொள்வதன் மூலம் சிறப்பாக அவர்களின் கவனத்தை நீங்கள் கவர முடியும். நிறுவனத்தை சேர்ந்த பல வாடிக்கையாளர்களை கவர்வதற்கு இது ஒரு சிறப்பான வழியாகும். அவர்களின் தரம், மதிப்பு, மற்றும் தேவைகளைப் பற்றி விரிவாகப் பேசுங்கள். உதாரணமாக: "Acme நிறுவனம், சிறந்ததொரு சேவையை வழங்கி வாடிக்கையாளர்களின் தேவைகளை முதலில் நிறைவேற்றும்" அல்லது "அஜாக்ஸ் விட்ஜெட்டைப் பயன்படுத்துவதற்கான பல மதிப்பு மிக்க சான்றுகள் உள்ளன".
தேவைப்படும் விவரங்களைப் புள்ளிவிவரங்களாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி கூறும்போது அந்த சிக்கலை நீங்கள் தீர்க்கமுடியும் என்பதையும் விளக்கும்போது, நீங்கள் அவர்களின் வியாபாரத்தைப் பற்றிப் புரிந்து கொண்டீர்கள் எனக் காட்டும், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை ஆதரிப்பதற்கான வழியை ஏற்படுத்தவும் இது உதவும். உதாரணமாக, மென்பொருள் குறித்து பயிற்சியளிக்கும் நிறுவனமாக இருந்தால் இப்படிக் கூறலாம், "Acme Research Associates நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான கணனிப் பயனாளர்கள் 100 மணிநேரத்தை எப்படி ஒரு சில வேலைகள் முடிந்தது என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே செலவிடுகின்றனர்".
உங்கள் விற்பனைக் குறித்த கடிதத்தில், நம்பகத்தன்மை கொண்ட வாடிக்கையாளர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைப் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடவேண்டும். கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, உங்கள் அலுவல் சார்ந்த எந்தப் பணியையும் உங்களிடமிருந்து பெறமுடியாமல் போகக்கூடிய சூழலும் உண்டு என நீங்கள் கருதலாம். ஆனால் அது தவறு. கடிதத்தில் உங்களின் சிறந்த எண்ணங்களை பகிர்ந்துகொள்வதால், உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளில் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உணர்வார்கள். முக்கியமாக, உங்கள் திறமையை அதில் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.
எந்தவொரு கடிதத்தையும் நீங்கள் அனுப்புவதற்கு முன்னர், அதை வேறொருவர் நன்கு வாசிப்து சிறந்தது. உங்கள் கடிதம் தெளிவாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளமுடியும். மேலும், எழுத்துப்பிழைகள் மற்றும் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் அவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்துக்கொள்ள முடியும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.