Showing posts with label மனதை வசப்படுத்திவிட்டால். Show all posts
Showing posts with label மனதை வசப்படுத்திவிட்டால். Show all posts

Sunday, July 31, 2016

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை எல்லாம் இன்பமயம்

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும்  இல்லை எல்லாம் இன்பமயம்

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று மகான் ரமணர் கூறுவார்.
எங்கே எண்ணங்கள் தோன்றுகின்றனவோ, எங்கே அவை தொடங்குகின்றனவோ,
அங்கே உள்ள ஒன்றையே நாம் மனம் என்கிறோம்.
மனம் என்பது தனியே ஒன்று இருப்பதில்லை அது எண்ணங்களையே சார்ந்துதிருக்கிறது. நான் என்ற எண்ணத்தையே முதன்மையாய்க் கொண்டது. அகத்தில் ஆன்மாவையும் , புறத்தில் உலகத்தையும் அது கொண்டிருக்கிறது. அது தனித்திருப்பத்தில்லை அதற்கெண தனியாக ஒரு இடம் கிடையாது.
எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை தற்போது பயனற்றதாய் உள்ள எண்ணம் அதுவே பிறகு பயனுள்ளதாயிருக்கும்.
நான்,எனது,என்னுடைய,எனக்கு என்ற ஒவ்வொரு எண்ணத்திலும் ஒரு அகந்தை இருக்கிறது.மணதுக்கென வலிமையுண்டு அது எண்ணங்கள்ற்ற நிலையில் அளவற்ற வலிமையுடன் இருக்கும். நாம் மனதை பயன்படுத்தி நம்மையறிவதில்லை நம்மை சுற்றியுள்ள புறப்பொருள்களையே அறிகிறோம். ஞானம் வந்துவிட்டால் இந்த மனம் தனக்குள் இந்த பிரபஞ்சத்தை காணும். பிரபஞ்சத்தில் தன்னைக் கண்டுக்கொள்ளும்.
மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை. ஆசையை விடவேண்டும். சொல்லற்று செயல்லற்று சும்மாயிருக்கும் நிலையை அடையவேண்டும். தியானத்தின் மூலமே மனதை வசப்படுத்த முடியும். அதனால் தான் சும்மாயிரு என்கிறது பல மகான்களின் நூல்கள். சும்மா இருப்பது என்பதே தவம் அதை வள்ளல் பெருமான்கெஞ்சுவதை பாருங்கள்
இன்று வருமோ? நாளை வருமோ?
அல்லது மற்று என்றுதான் வருமோ?
துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்கு உள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்.
அதையே பத்தரகிரியார் சும்மா இருப்பதை நினைத்து இப்படி ஏங்குகிறார்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்.
ஒரு பக்கதனுடைய மனம் அறிகிறது தனக்குள் மனமாகவும் ,பிராணனாகவும் , ஆன்மாவாகாவும் இருப்பது இறைவனே. அவனுக்குள் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது அவனுடைய துடிப்பும், ஏக்கமும், அருள்தாகமும் அதைச் சாத்தியப்படுத்துகிறது என்று ராமகிருஷ்ணர் கூறுகிறார்.அகந்தை ஒரு திரை அந்தத் திரையை விலகினால், அதுவரை அறிந்திராதவைகளை அறிய முடியும், கணமுடியாத காட்சிகளை காணமுடியும், இறைக்காட்சி உட்பட.

Yours Happily
Jc.Dr.Star Anand ram
www.moneyattraction.in
9790044225