Saturday, December 12, 2015

உயிரோடு இருக்கும்வரை ஏதாவது செய்து கொண்டிருங்கள்

உயிரோடு இருக்கும்வரை ஏதாவது செய்து கொண்டிருங்கள்,எதுவும் செய்ய முடியாத போது செத்துப் போங்கள் !"என்று தொழில் போதையில் மூழ்கிவிட்டவர்கள் கூறுகிறார்கள். வேலை ஒன்றைத் தவிர,வாழ்க்கை பற்றிய வேறு கண்ணோட்டமே அவர்களுக்கு கிடையாது,எதற்கு வேலை?மனிதன் ஏன் வேலை செய்ய வேண்டும்?
உயிர் வாழ்வதற்காக மனிதன் வேலை செய்கிறான்.வாழ்வது என்றால் என்ன?வாழ்வது என்பது,வாழ்வைக் கொண்டாடுவது தான்.நாம் தொழில் செய்வதே,நம் வாழ்வில் ஆடிப்பாடி மகிழும் பொழுதுகளுக்காகத்தான்.உண்மையில் தொழில் வாழ்வின் கொண்டாட்டத்திற்க்கு உதவும் ஒரு வழிமுறை.
ஆனால்,இதில் வேடிக்கை என்னவென்றால்,வாழ்வில் ஆடிப்பாடி மகிழ நேரமில்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!வழி முறையையே முடிவான குறிக்கோளாக நாம் மாற்றி விட்டோம்.எல்லாமே நமக்கு வேலை.வாழ்க்கையின் முடிவெல்லாம் வேலையே.அதனால் வாழ்க்கை நம் வீட்டிற்கும்,அலுவலகத்திற்கும் இடையில் அடங்கி போய்விடுகிறது.

No comments:

Post a Comment