Monday, September 22, 2014

வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே - with video

" குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ""
............பாடல் வரி : முத்துலிங்கம்...
எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை
எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை

வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே
தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே
எது வந்த போதும் அதை ஏற்றுகொள்வாய்
இருள் கூட ஒளி வீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஓர் நாள் உண்டு
எல்லோர்க்கும் வாழ்வுண்டு

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே

மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ
வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ
உழைப்பார்க்கு என்றும் இழப்பேதும் இல்லை
இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா
தளராது புயல்போலே
வரலாறு படைப்பாரே

மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


urs Happily 
Dr.Star Anand ram
www.v4all.org 

Saturday, September 20, 2014

முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம்

எந்த காரியத்திலும் மனிதனின் முதல் தேவை  பயிற்சி.முறையாக பயிற்சி.பெற்றால் தான் அந்த காரியத்தை இறுதியில் சிறப்பாக முடிக்க முடியும். பயிற்சி.பெற்ற பின் சம்பந்தப்பட்ட நிகழ்வு உயரினக்களுக்கு பழக்கமாகி விடும். மறுபடி செய்ய சிரமமோ சலிப்போ தோன்றுவது இல்லை.

       பயிற்சிக்கு முன் முயற்சி தேவை. முயற்சி பயிற்சியாகி பழக்கமாகிறது. 
           
    பழக்கமாகி தொடர்ந்து செய்யும் போது அது வழக்கமாகிறது.ஒரு மனிதனின் இயல்பு கூட அவனுடைய  வழக்கத்திலிருந்து தான் கணிக்கப் படுகிறது. பழக்க
வழக்கம் மனிதனின் உள்மனதில் ஆள் மனதில் பதிந்த பின் அது அவனின் அனிச்சை செயலாக மாறுகிறது.

 அப்படியானால் ஆரம்பம் முயற்சி பயிற்சி. அது பழக்கமாகி வழக்கமாக மாரி மனிதனின் அனிச்சை செயலாகிறது. அதுவே அவனின் இயல்பாக சமூகத்தில் காட்டப் படுகிறது. அதனால் மனிதனுக்கு ஆரம்ப பயிற்சி முக்கியம்.

உடலையும் மனதையும் நலமாக வைப்பதில் நல்ல விசயங்களில் பயிற்சி முக்கியம். அது மனிதனின் செயல திறனை அதிகமாக்கி மனிதனை நல்ல இடத்தில் அமர்த்தும்.

    அதனால் தான் முயற்சி பின் பயிற்சி தேவை என்கிறோம். பயிற்சி பழக்கமாகி
வழக்கமாகிறது. வழக்கம் அனிச்சை செயலாகிறது.

urs Happily 
Dr.Star Anand ram
www.v4all.org 

Thursday, September 18, 2014

சத்குரு, தியானம் செய்வதால் பல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், குழந்தையில்லாதவர்கள் தியானம் செய்வது கருத்தரிக்க உதவுமா? சத்குரு

கேள்வி
சத்குரு, தியானம் செய்வதால் பல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், குழந்தையில்லாதவர்கள் தியானம் செய்வது கருத்தரிக்க உதவுமா?
சத்குரு:
நீங்கள் தியானம் செய்வது என்பது வேறு. தியானத்தன்மையில் இருப்பது என்பது வேறு. தியானத்தன்மை என்பதொரு செயலல்ல. அதுவொரு நிலை. உங்களிடம் தியானத்தன்மை உருவானால் உங்களின் எல்லா நிலைகளுமே உயர்ந்தவொரு பரிமாணத்தில் இருக்கும். அந்தப் பரிமாணத்தில் நீங்கள் இயங்கத் தொடங்கினால் கருத்தரித்தாலும் கருத்தரிக்காவிட்டாலும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.
நான் மிகவும் அற்புதமான தன்மையில் இருக்கிறேன். என்னைப்போல் இன்னோர் உயிரை இந்த உலகுக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருந்தால், அவர்கள் கருத்தரிக்க வேண்டும்.
கருத்தரித்தல் என்பது இயற்கையாகவே நிகழுமொரு சம்பவம். இதற்கு அளவு கடந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. தாய்மைநிலை என்பது உண்மையிலேயே அற்புதமானதுதான். குழந்தைகள் முக்கியமனவர்கள்தான். ஆனால் அதற்கு இன்று தரப்படும் அதீத முக்கியத்துவம், அதன் அடிப்படைத் தன்மையையே அறிந்துகொள்ள முடியாமல் செய்கிறது. கருத்தரித்தல் என்பது இயற்கையாக நடக்க வேண்டியதொரு நிகழ்வு. அது உங்களுக்கு நிகழ வேண்டுமா, வேண்டாமா என்று தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. ஆனால் அது இயல்பான, இயற்கையான நிகழ்வாகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர, அதை ஒரு நோய் போலக் கையாளக் கூடாது.
புற்றுநோயை குணப்படுத்த யோகாவில் வழியுண்டா என்று நீங்கள் கேட்டால் அது முற்றிலும் வேறு விஷயம். அதை நான் வேறுவிதமாக அணுகுவேன். ஆனால் கருத்தரித்தலோ கருத்தரிக்காமையோ ஒரு நோயல்ல.
யாருக்கு கருத்தரிக்க உரிமையிருக்கிறது தெரியுமா? நான் மிகவும் அற்புதமான தன்மையில் இருக்கிறேன். என்னைப்போல் இன்னோர் உயிரை இந்த உலகுக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருந்தால், அவர்கள் கருத்தரிக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்வை துன்பமயமாக ஆக்கிக் கொண்டிருந்தால், உங்களைப்போல் இன்னோர் உயிரை உருவாக்குவதே ஒரு குற்றம்தான். எனவே உங்களை ஆனந்தமாக அற்புதமாக வைத்துக் கொண்டு பத்து குழந்தைகளைப் பெற்றாலும் தவறே இல்லை.
எனவே கருத்தரிக்கும்போது தியானத் தன்மையில் இருங்கள். கடவுள் உலகைக் காப்பாற்றட்டும் என்று பலர் சொல்வார்கள். இல்லை. நீங்கள்தான் உலகைக் காப்பாற்ற முடியும். கருத்தரிக்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் உலகைக் காப்பாற்ற முடியும். இன்று மனிதர்கள் சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசுகிறார்கள். உலகம் வெப்பமயமாதல் பற்றிப் பேசுகிறார்கள். இந்த சிக்கலுக்கெல்லாம் மக்கள் தொகைதான் அடிபபடைக் காரணம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக மக்கள் தொகை நூற்றறுபது கோடியாக இருந்தது. இப்போது எழுநூறு கோடியாக உயர்ந்திருக்கிறது. ஐ.நா. சபையின் கணக்கீட்டின்படி, 2050ல், உலகமக்கள் தொகை தொள்ளாயிரத்து அறுபது கோடியாக உயர்ந்திருக்கும் என்கிறார்கள். அப்படி ஒருநிலை வருமென்றால் இப்போது நீங்கள் பயன்படுத்தும் இயற்கை வளங்களில் நாற்பது சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். நீங்கள் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, எல்லாமே நாற்பது சதவிகிதம் குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும். நிமிடத்திற்கு பன்னிரண்டிலிருந்து பதினைந்து முறை சுவாசிக்கிறீர்கள் என்றால், ஐம்பது வருடங்கள் கழித்து நிமிடத்துக்கு நான்கு முறையோ ஐந்து முறையோதான் நீங்கள் சுவாசிக்க முடியும். உங்கள் குழந்தைகள் முதியவர்களாகும் போதும், உங்கள் பேரப்பிள்ளைகள் வாழ்வைத் தொடங்கும்போதும் இத்தகைய நிலை ஏற்படக் கூடும். கூடுதல் பிராணவாயுவை சுவாசிக்க உங்கள் நாசிகளின் அளவு இன்னும் பெரிதாய் ஆக்கப்பட வேண்டியிருக்கும்.
1947ல் முப்பது கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகையை, அறுபதே ஆண்டுகளில் நான்கு மடங்குகளாகப் பெருக்கியிருக்கிறோம். மத்திய அமைச்சர் ஒருவரும் தில்லியின் முதலமைச்சரும் என்னுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது ஒரு புள்ளிவிபரத்தை சொன்னார்கள். 1947ல் ஒரு தனிமனிதனின் பயன்பாட்டுக்காக இருந்த தண்ணீரின் அளவு, இன்று இருபது சதவிகிதமாகக் குறைந்துவிட்டது என்றார்கள். இப்போது நீங்கள் பாட்டிலில் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துகிறீர்கள். எதிர்காலத்தில் பாட்டில் தண்ணீரை குளிக்கப் பயன்படுத்தும் நிலை உருவாகலாம்.
எனவே மிகவும் உன்னதமான ஓர் உயிரை இந்த உலகுக்குத் தரமுடியும் என்று தோன்றினால் மட்டுமே கருத்தரிப்பது பற்றிக் கவலைப்படுங்கள். கருத்தரிக்கவிட்டால் என் தாய்மை என்னாவது என்னும் எண்ணம் வேண்டாம். தாய்மை என்பது உங்கள் உடற்கூறு சம்பந்தப்பட்டதல்ல. உங்கள் உணர்வு சம்பந்தப்பட்டது. உங்களை சுற்றியிருப்பவர்களை உங்களில் ஒருவராக அரவணைக்கவும் உள்வாங்கவும் முடிந்தால், இந்தப் பிரபஞ்சத்துக்கே நீங்கள் தாயாக உணரலாம்.
1970களிலும் 80களிலும் குடும்பக் கட்டுப்பாட்டுத்துறை என்றொரு துறை இருந்தது. இன்று குடும்ப நல்வாழ்வுத்துறைதான் இருக்கிறது. அப்படியானால் குடும்பக் கட்டுப்பாட்டின் தேவை முடிந்து விட்டதாகப் பொருளில்லை. மக்களுக்கு கட்டுப்பாடு பிடிக்காது. நலவாழ்வுதான் பிடிக்கும். நாமிருவர் நமக்கிருவர் என்று சொன்னார்கள். பிறகு நாமிருவர் நமக்கொருவர் என்றார்கள். இன்று நாமிருவர், நமக்கெதற்கு இன்னொருவர் என்று சொன்னாலும் சொல்வார்கள். இன்னோர் உயிரை உங்களில் ஓர் அங்கமாக உணர்ந்தால் அதுவே தாய்மையின் அற்புதமான தன்மைதான். அதற்கு யாரும் உங்களுக்குத் தடை சொல்லப் போவதில்லை. இன்னொருவரின் உதவியும் அதற்குத் தேவையில்லை.

Tuesday, September 16, 2014

ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா - நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம்.

  • 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு
    'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு
  • 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு
    'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு
'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகின் பிரம்மாண்டத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம்.
ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான்.
அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்கலந்து கொண்டார்.
'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்போது, கேசட் விளம்பரத்தைச் சுற்றிருந்த பேப்பரை கிழித்து அப்படியே கீழே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க, ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். உடனே சுற்றிருந்த நடிகர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர்.
பிறகு, ஜாக்கிசான் இசை வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.
'ஐ' இசை வெளியீட்டு விழா...
'ஐ' இசை வெளியீட்டு விழாவை பொறுத்தவரை, ஒரு விழா எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இருந்தது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.
இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பு இசைக்கு ஏற்றவாறு ஒளி அமைப்பு மாறுவது காண்பிக்கப்பட்டது. ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.
நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.
இதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, "நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.
இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. 'ஐ' இசை வெளியீட்டு விழாவைக் காப்பாற்றியது என்னவோ ரஜினி மட்டுமே.
'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.
பிரம்மாண்டம் என்ற அடைமொழியுடன் அறங்கேற்றப்படும் தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்தில் ஆரம்பித்ததில்லை. இனியாவது விழித்துக்கொள்வார்களா?
thank u - The Hindu 
urs - www.v4all.org 

தங்கம் உருவான கதை

தங்கம் உருவான கதை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதா ரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய் வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தங்களது இந்தக் கண்டு பிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன் படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதி படுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்ன மும் ஆச்சரியாமாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல் களிலேயே நாம் இன்று பயன் படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.


urs 

www.v4all.org 

History of Google - கூகிள் உருவான கதை மற்றும் வரலாறு

History of Google - கூகிள் உருவான கதை மற்றும் வரலாறு



தொடக்கம் : மென்லோ பார்க்,கலிபோர்னியா

தொடங்கிய ஆண்டு : செப்டம்பர் 7 1998

தலைமையகம் : மவுன்டன் வியூ,கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா

டைரக்டர் எரிக் ஷ்மித் ( Eric Schmidt- CEO ) 


தொழில்நுட்ப தலைவர் : சேர்ஜி பிரின் ( Sergey Brin )  மற்றும் லாரி பேஜ் ( Larry Page ) 

 

தொழில்துறை : இணையம் ( Internet),மென்பொருள் ( Software Products) 


Google கூகிள் வரலாறு : 


கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும். 
ஆரம்பத்தில் லாரி பேஜின் மட்டுமே இதில் இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய Search Engine -கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். 
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி Search Engine -ல் தேடப்படும்Information எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து Search Results பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இந்த முறையே சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். 
 இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய சர்ச் என்ஜின் ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். 
ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம்(google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.
 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் Car Shed- ல் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது Silicon Valley பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு ( Typo Error )  செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். 
கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. 
ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானதுGoto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். Goto.com என்ற இதன் பெயர் (Overture Services)ஆகவும் பின்நாளில் YAHOO! இனால் கொள்முதல் செய்யப்பட்டு Yahoo! Search Marketing ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல நிறுவனங்களும் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று.

urs 
Dr.Star Anand Ram
www.v4all.org 

Monday, September 15, 2014

ATM உருவான கதை தெரியுமா உங்களுக்கு?.... மிஸ் பண்ணிடாதீங்க இந்த Love Story-யை!...

ATM உருவான கதை தெரியுமா உங்களுக்கு?.... மிஸ் பண்ணிடாதீங்க இந்த Love Story-யை!...


ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.
பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.
பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.
கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.
இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத் தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.
அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.
பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் .
இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.
இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான். இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன.
ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84வது வயதில் கடந்த 2010 மே 19ம் திகதியன்று காலமானார்.
urs -
Vivekas Corporate Training Company
 www.v4all.org 

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?


இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

How to Overcome Excuses: 6 Tips to Gain the Edge & Meet Your Goals

Happy morning , Good day & Week end..

How to Overcome Excuses: 6 Tips to Gain the Edge & Meet Your Goals

This is a guest post by Dan Waldschmidt, business strategist.

Great people throughout history often fail, quite miserably, before finally reaching their goals, says international business strategist Dan Waldschmidt.

"Van Gogh sold only one painting during his lifetime; Winston Churchill lost every public election until becoming prime minister at age 62; Henry Ford went bankrupt five times; Albert Einstein was a terrible student and was expelled from school; Sigmund Freud was booed from a stage," says Waldschmidt, author of Edgy Conversations: How Ordinary People Achieve Outrageous Success.

"Ideas, brilliance, genius. They all mean nothing without the guts, passion and tenacity necessary to make your dream a reality. But often, people fall back on excuses and give up on trying to reach their goals."

Most of us have dreams, and many of us have big ones, but few of us actually see them through, he says.

He offers six tricks for jumping off the excuse train and forge the path to your goals.
  • Avoid the need to blame others for anything. Mean, small-minded people know that they suck. That's why they are so cranky and eager to point out others' mistakes. They hope that by causing others to feel inadequate, everyone will forget about how woefully off the mark their own performance is. Don't blame anyone, for any reason, ever. It's a bad habit.
     
  • Stop working on things that just don't matter. Not everything needs to be done in place of sleep. If you work for a boss, then you owe him or her solid time. You can't cut that out. You can, however, cut out television time, meetings and anything else that gets in the way of achieving your goals. Replace entertainment with activity toward your goal.
     
  • Refuse to let yourself wallow in self-doubt. You're alive to succeed. Stop comparing your current problems to your last 18 failures. They are not the same. You are not the same. Here's something to remember: Your entire life has been a training ground for you to capture your destiny right now. Why would you doubt that? Stop whining. Go conquer.
     
  • Ask yourself, "What can I do better next time?" And then do it next time. If you spend a decade or two earnestly trying to be better, that's exactly what will happen. The next best thing to doing something amazing is not doing something stupid. So learn from your mistakes and use the lessons to dominate.
     
  • Proactively take time to do things that fuel your passion. Exercise is a great example. Living in the moment requires you to live at peak performance. A huge part of mental fitness is physical fitness. A sparring or running partner is a great way to refresh physical competition. Physical activity accelerates mental motivation.
     
  • Apologize to yourself and those around you for having a bad attitude. Do this once or twice and you'll snap out of your funk pretty fast. When you start genuinely apologizing for being a bad influence on those around you, you learn to stop whining and start winning.


Thanks & Best Regards,
Dr.Star Anand Ram
Motivation Trainer 
www.v4all.org 

Saturday, September 13, 2014

நமக்குள் ஏழு பேர்!

நமக்குள் ஏழு பேர்!



வாழ்க்கை என்பது பிறரோடு பழகுதல், இணைந்து வாழுதல். பழகுதல் என்றால் என்ன? நம் கருத்துகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளுதல், திறந்த மனங்களோடு அவர்கள் கருத்துகளைக் கேட்டல்.
சொல்வதற்கு எளிதான இந்தச் சமாச்சாரம் கடைப்பிடிக்கக் கஷ்டமானது. ஏன் தெரியுமா? நாம் என்னதான் அறிவார்த்தமாகப் பேசினாலும், அதை மற்றவர்கள் அனைவரும் முழுமனதாக ஏற்றுக்கொள்வதில்லை. நாமும் அப்படித்தான். அவர்கள் கருத்துகளை மனமார ஏற்பதில்லை. காரணங்கள்? முதலில் நம் ஈகோ. அத்தோடு நம் ஒவ்வொருவரின் மனோ பாவம், கண்ணோட்டம், ஆளுமை, வளர்ந்த பின்புலம் ஆகியவை வித்தியாசமானவை.
என் நண்பர்கள் சிலரைச் சந்திக்கிறீர்களா?
கோபால். கல்லூரிப் பேராசிரியர். எதையும் அறிவு பூர்வமாக அணுகுவார். ஆனால், ஜோதிடம், கை ரேகை ஆகியவற்றில் அழுத்தமான நம்பிக்கை. நாங்கள் இருவரும் சமீபத்தில் கன்னியாகுமரி போயிருந்தோம். குறி சொல்லும் பெண்ணிடம் கை நீட்டினார், கிளி ஜோசியரிடம் சீட்டு எடுத்துப் பார்த்தார். பயபக்தியோடு அவர்கள் சொல்வதைக் கேட்டார்.
எல்லா விஷயங்களையும் உணர்வு வசப்படாமல் விவாதிக்கும் கோபால், ஜோசியத்தை விமர்சித்தால், எமோஷனல் ஆகி விடுவார், அவர்களை எதிரிகள் பட்டியலில் சேர்த்துவிடுவார். கோபாலை முதன் முதலாகச் சந்திப்பவர்கள் அவரிடம் ஜோசியம் பற்றி விவாதிக்க நேர்ந்துவிட்டால், அவரை மூடநம்பிக்கைக்காரர் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அவருடைய பாஸிட்டிவ் அம்சங்களை அவர்கள் அறியவே முடியாது.
****
சரோஜா. அரசாங்க அலுவலகத்தில் வேலை. சுஜாதா கதைகள், நாதஸ்வரம் தொலைக்காட்சித் தொடர், மன்மோகன் ஆட்சி, ஷேர் மார்க்கெட் நிலவரம், உலகப் பொருளாதாரம், கூகுள் கம்பெனி தயாரிக்கும் ஓட்டுநர் இல்லாத கார் (Driverless Car) – அனைத்தும் அறிந்த சகலகலா வல்லவர். ஆனால், பெண்ணுரிமை பற்றி அவருடன் பேசினீர்களோ, சமநிலை மறப்பார், கோபத்தில் குதிப்பார்.
****
குமார். எப்போது வெயில் கொளுத்தும், எப்போது மழை கொட்டும் என்று தெரியாத ஊட்டி க்ளைமேட் மாதிரியான புரியாத புதிர் கேரக்டர். திடீரென்று அன்பைப் பொழிவார்: காரணமே இல்லாமல் கத்துவார்.
****
கோபால், சரோஜா ஆகியோர் சில சமாச்சாரங்களைப் பேசும்போதும், குமார் போன்றவர்கள் சில நேரங்களிலும் விசித்திரமாக நடந்துகொள்வது ஏன்? கோபால், சரோஜா, குமார் போன்ற ஏராளமானவர்களோடு பிஸினஸில், வேலையில், தினசரி வாழ்க்கையில் நாம் தொடர்புகொள்கிறோம், சிலரோடு தோள் கொடுத்துப் பணியாற்றுகிறோம். அந்த உறவுகளில் நாம் ஜெயிக்கவேண்டுமானால், கோபால். சரோஜா, குமார் போன்றவர்களின் செயல்முறைக்கான காரணங்களை நாம் புரிந்துகொண்டேயாகவேண்டும்.
****
கமல் நடித்த ஆளவந்தான் படம் நினைவிருக்கிறதா? “கடவுள் பாதி, மிருகம் பாதி இரண்டும் சேர்ந்த கலவை நான்” என்று கமல் வலம் வருவார். ஒரே மனிதனுக்குள் இரண்டு வேறுபட்ட மனிதர்கள் இருக்கமுடியும் என்பது கதை.
நம் எல்லோருக்குள்ளும் இரண்டல்ல, ஏழு பேர் இருக்கிறார்கள் என்கிறார் டேவ் வெபர் (Dave Weber). இவர் சினிமா கதாசிரியர் இல்லை, பாங்க் ஆஃப் அமெரிக்கா, ஐ.பி.எம், நைக்கி (Nike), ஃபெடெக்ஸ் (Fedex) போன்ற முன்னணிக் கம்பெனிகளுக்கு மேனேஜ்மென்ட் ஆலோசகர். நம் எல்லோருக்குள்ளும் இருப்பதாக டேவ் வெபர் சொல்லும் ஏழு பேர் இவர்கள்தாம்:
என் பார்வையில் நான்
(The Me I think I am)
நிஜமாக நான் (The Me I really am)
கடந்த காலத்தில் நான்
(The Me I used to be)
பிறர் பார்வையில் நான்
(The Me others see)
பிறருக்கு என்னைக் காட்டிக்கொள்ள விரும்பும் நான்
(The Me I try to project)
பிறர் எவ்வாறு என்னை மாற்ற முயற்சிக்கிறார்களோ, அந்த நான் (The Me others try to make me)
எப்படி மாற விரும்புகிறேனோ, அந்த நான் (The Me I want to be)
இந்த ஏழு பேருக்குள்ளும் எக்கச்சக்க வித்தியாசங்கள் இருக்கின்றன என்று டேவ் வெபர் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்தார். நமக்குள் இத்தனை வித்தியாசங்கள் எப்படி இருக்கமுடியும் என்று உங்களுக்குள் சந்தேகங்கள் வரலாம். எப்படிக் கண்டுபிடிப்பது? உங்களையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். மேலே சொன்ன ஏழு ”நான்”களும் எப்படிப்பட்டவர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
இந்த “நான்”களுக்குள் ஒற்றுமை இருக்கலாம்: அல்லது ஏழு பேரும் வித்தியாசமான குணங்கள் கொண்டவர்களாக இருக்கலாம் – ஒரு “நான்” பிறரோடு இணங்கிப் போகிறவர். இன்னொருவர் முரட்டுப் பிடிவாதக்காரர், ஒருவர் சாந்த சொரூபி, இன்னொருவர் முன்கோபி, ஒருவர் பேசிக்கொண்டேயிருப்பவர், மற்றவர் மெளனி.......நீங்கள் பிறரிடம் பேசும்போது,இந்த ஏழு “நான்”களில் ஏதாவது ஒரு “நான்” தன்னை வெளிப்படுத்துவான்.
இந்த வெளிப்படுத்துதல் நீங்கள் திட்டமிட்டு வருவதல்ல, உங்கள் ஆழ்மனத்தின் செயலால் வரும் அனிச்சைச் செயல். சில சமயங்களில் நம்மை அறியாமலேயே சில வார்த்தைகளைப் பேசி விடுகிறோம், உடல் மொழியால் சில உணர்வுகளை வெளிப்படுத்திவிடுகிறோம். இவை அனிச்சைச் செயலாக, நாம் அறியாமலேயே வெளி வருவதால், ஏழு “நான்”களில் எந்த ஆசாமி வெளியே வந்தான், ஏன் வந்தான் என்பது நமக்குத் தெரிவதில்லை.
நீங்கள் உங்கள் நண்பர் கண்ணனோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அவருக்குள்ளும் ஏழு “கண்ணன்கள்”ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஏதாவது ஒரு கண்ணன் வெளிப்படலாம். இருவரிடமும், விட்டுக் கொடுக்கும் “நான்” வெளிப்பட்டால், பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பிடிவாத ‘நான்” வெளிவந்தால், தோல்வியோடு முறியும்,
நீங்களும் கண்ணனும் பேசும்போது, உங்கள் பேச்சு 7 x 7 = 49 திசைகளில் பயணிக்கலாம். மூன்று பேர் சேர்ந்து பேசுகிறீர்களா, 7 x 7 x 7 = 343 வகையான பரிவர்த்தனைகள் நடக்கும் சாத்தியங்கள் உள்ளன. இதுவே பேசுபவர்கள் எண்ணிக்கை 4, 5, 6 என்று அதிகமாகும்போது,
7 x 7 x 7 x 7
7 x 7 x 7 x 7 x 7
7 x 7 x 7 x 7 x 7 x 7
என்று அதிகமாகிக்கொண்டே போகும்.
பேச்சு வார்த்தைகளில் எதிர்பாராத சிக்கல்களும் திருப்பங்களும் வருவது இந்த ஏழு “நான்”களால்தான். உங்களுக்குள்ளும், நீங்கள் நெருங்கிய உறவு வைத்திருப்பவர்களுக்குள்ளும் ஏழு ”நான்” கள் இருப்பதை உணருங்கள், ஒத்துக்கொள்ளுங்கள். டீல்களை முடிப்பது செம ஈஸி!
urs
www.v4all.org