Thursday, June 25, 2015

இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும்

ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
தன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன் பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு பெற நினைக்கிறேன்…”
அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அவர் தொடர்ந்தார்.
“உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும் செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத் தேர்ந்தெடுப்பேன்”
சொல்லி விட்டு அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார்.  அந்த இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.
மூன்று வாரங்களான பின்னும் அந்த விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட்டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த மாற்றமும் அவன் விதையில் இல்லை.
கம்பெனியிலோ அவரவர்களின் விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.
ஒரு வருடம் கழித்து அந்த முக்கிய நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது. அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக நின்றான்.
சேர்மன் வந்தவர் ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார்.  வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன் அவர் கேட்டார். “என்ன ஆயிற்று?”
அவன் கூனிக் குறுகிப் போனாலும் நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.
சேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர் சொன்னார்.
“நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.”
“நீங்கள் அனைவரும் திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால் உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத் திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில் தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என் கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
அவனிடம் தலைமைப் பொறுப்பைத் தந்து விட்டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.
இது ஒரு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, கட்சி, அமைப்பு, கூட்டம், நாடு எல்லாவற்றிற்கும் பொருந்தும். அவன் அரிச்சந்திரனாக எல்லா விஷயங்களில் இருக்கிறானோ இல்லையோ, யாருக்குத் தலைவராக ஆகிறானோ அவர்களுக்காவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருப்பவன் தான் அவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அவனே தலைவன், அப்படி இருக்க முடியாதவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே!
urs
www.v4all.org

நாம் மருந்துகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறோமா?

நாம் மருந்துகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறோமா?
நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் எல்லாமே அவசரம் தான். எல்லாவற்றிலும் வேகம் தான். உணவில் கூட, துரித உணவு உண்ண ஆரம்பித்து விட்டோம். நோய் வந்தாலும் உடனடி நிவாரணம் நமக்கு தேவையாகிவிடுகிறது. நம் உடலுக்கு நோயை குணப்படுத்தும் சக்தி இயற்கையாகவே உள்ளது. ஆனால் நம் இரசாயன மருந்துகள் எடுக்கும் போது உடலின் 'தானாகவே குணமாகும்' சக்தி குறைகிறது.அல்லது முற்றிலும் போய் விடுகிறது. நாம் மருந்துகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறோமா? மேலே படியுங்கள்.................
நாம் இன்று எதற்கெடுத்தாலும் மருத்துவ சிகிச்சை எடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டு விட்டோம். சிறு குழந்தைகளுக்கு லேசான சளி இருந்தாலும் உடனே டாக்டரிடம் அழைத்து செல்கிறோம். அவர்களது உடலின் நோய் குணமாக்கும் சக்தியை இழக்க வைத்து விடுகிறோம். பெரும்பாலான வியாதிகள் தானாகவே குணமாகும் தன்மை உடையவை தான். நாம் நம் உடலுக்கு அந்த வாய்ப்பையே இப்பொழுதெல்லாம் கொடுப்பதேயில்லை என்பது தான் கொடுமையான உண்மை.
தேவை இல்லாமல் 'மாஸ்டர் செக்கப்' என்கின்ற பெயரில் வருடாவருடம் உடலை XRay, ஸ்கேன் என்று பல சோதனைகள் செய்து உடலை ஆபத்தான கதிர் வீச்சுக்கு ஆளாக்குகிறோம் என்பதுவேதனையான உண்மை.
மருத்துவ சிகிச்சைகளையும், மருந்துகளையும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவறு என்று நாம் உணர வேண்டும். நம் உடலும் மனமும் அபரிதமான சக்தி உடையவை. உடல் தானாகவே நோய்களை குணமாக்க அனுமதிக்க வேண்டும் நாம். உடல் தானாக குணமாக சற்று அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். அது ஒன்றே இதில் உள்ள குறை எனலாம். அவசரம் என்றால் சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மிகவும் அவசரம் அல்லது அறுவை சிகிச்சை தேவைப் பட்டால் ஆங்கில மருத்துவத்தை நாடலாம்.
யோகா மற்றும் தியானம் தினசரிசெய்து வந்தால் நோய் இல்லா சுக வாழ்வு கடைசி வரை வாழலாம். மருந்துகளை உணவு போல் உட்கொள்ளும் அவலமும் நமக்கு ஏற்படாது.
வாழ்க வளமுடன்!
www.v4all.org

பிட்சாடனர் புராணப்பின்னணி

பிட்சாடனர்
புராணப்பின்னணி :www.v4all.org 
ஒரு சமயம் சிவன், விஷ்ணுடன் (கோகினி வடிவில்) “பிச்சைப்பாத்திரம்” ஏந்தி “தாருகவனம்” சென்றனர். தாருக வனத்தில் ரிஷிகள் செருக்குற்றிருந்தனர். அதாவது தங்களுக்கு மும்மூர்த்திகளும் இணையானவர்கள் இல்லை என்றும், வேத மந்திரங்களிலும், வேள்விகளிலும் தங்களைவிடச் சிறந்தவர்கள் இல்லை என்று கர்வமுற்றிருந்தனர். சிவபெருமான் ரிஷிகளுக்குத் தகுந்த பாடம் புகட்ட விழைந்தார். சிவபெருமான் தம் உடலில் ஆடையில்லாது, மோகினி (விஷ்ணு) பின் தொடர ரிஷிகளின் குடில்களுக்குச் சென்றார். ரிஷிகள் தங்களது கடமைகளை (வேள்விகல் மற்றும் வேத மந்திரம் ஓதுதல்) மறந்து மோகினியின் அழகில் தங்களின் எண்ணங்கள் வயப்பட்டுப் பின் தொடர்ந்தனர். ஒருகனம் ரிஷிகள் தங்கள் பத்தினிமார்கள் (மனைவிமார்கள்) அனைவரும் சிவனின் பின் செல்வதை அறிந்து யாகத்திலிருந்து புலியினையும், நாகத்தினையும், குள்ள உருவம் கொண்ட அபஸ்மாரனையும் (முயலகன்) மானினையும் ஏவி சிவனை அழிக்க முயன்றனர். ரிஷியினால் ஏவப்பட்ட புலியின் தோலினை ஆடையாக அணிந்து கொண்டார். நாகத்தினையும், மானினையும் கைகளில் உபகரணமாகவும், ஆபரணமாகவும் கொண்டார். முயலகனைக் காலடியில் மிதித்து “ஆனந்த்த் தாண்டவம்” புரிந்தார். ரிஷிகள் தங்களது தவறினை உணர்ந்தனர். உலகியல் நெறிமுறைகளான பிரவிருத்தி மார்க்கத்தினைப் பின்பற்றாமலிருந்ததைச் சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் ரிஷிகளுக்கு உணர்த்திய சிற்ப வடிவாகும். இப்புராணப் பின்னணியை லிங்க புராணம் விளக்குகின்றது.
ரிஷிபத்தினி மற்றும் பூத கணம் பின்தொடர பிட்சாடனர்
கூர்மபுராணத்தில் பிட்சாடனரைப் பற்றி மற்றொரு குறிப்பு கூறப்படுகிறது. பிரம்மன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தது தாமென்று எண்ணிச் செருக்குற்றிருந்தார். பிரம்மனின் முன் லிங்கோத்பவராக ருத்ரன் தோன்றினார். வேதங்களும், ரிஷிகளும் ஏற்ற நிலையில் பிரம்மன் மறுக்க வேறு வழியில்லாது பிரம்மனின் ஐந்தாவது தலையைச் சிவன் (பைரவ வடிவில்) கொய்ததனால் “பிரம்மஹத்தி தோஷம்” பெற்றார். சிவன் காசி சென்றடைகிறார். பிச்சைப் பாத்திரம் ஏந்திய பிட்சாடனருக்கு மகாலெட்சுமியின் கரங்களால் பிச்சையளித்த கனமே “பிரம்மகபாலம்” மறைந்ததாகவும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாகவும் குறிப்பிடுகிறது.
சாஸ்த்திரச் சான்றுகள்:
பிட்சாடனரின் படிமக்கலைக் கூறுகள் காசியப சில்பசாஸ்திரம், சகளாதிகாரம், ஸ்ரீதத்துவநிதி அம்சுமத்பேதாகமம், காமிகம், காரணாகமம், சில்ப ரத்தினம் ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன.
படிமக்கலை:
அம்சுமத்பேதாகமம், இவரைப் பிரம்மனையும், விஸ்வக்சேனரையும் (விஷ்ணுவின் அம்சம்) கொன்றவர் என்று கூறுகிறது. விஸ்வக்சேனரின் எலும்புகளைக் கோர்த்து தோளில் சார்த்தியவாறு ஸ்தானக நிலையில் வலது கால் முன்னோக்கி இருப்பது போல அமைந்திருப்பார்.
இவர் ஆடையில்லாத மேனியராகக் காணப்படுவார். சிவனுக்குரிய சகலாபரணங்களும் அணிந்திருப்பார். கைகளில் பிரம்ம கபாலப் பாத்திரம் ஏந்தி, பூதகணம் தம் தலையில் பிச்சைப் பாத்திரத்துடன் பின் தொடரச் செல்வார். தலையில் ஜடாபாரம் அணிந்து, பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். அருகில் ரிஷி பத்தினி நின்றிருப்பார். பிட்சாடனர் இடையில் சர்ப்ப மேகலை அணிந்திருப்பார் (திருவாமாத்தூர்) முன் இடது கையில் கபாலமும், முன் வலது கை மானைத் தொட்டவாறும் அல்லது மானிற்கு அருகம்புல் தருவது போலவும் பின் வலது கை நாகத்தைப் பிடித்தவாறும் அமைந்திருக்கும்.
காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் இரண்டு கைகளைக் கொண்ட பிட்சாடனர் படிமம் அமைந்துள்ளது. ஒரு கையில் சிகிபீஞ்சையும் (மயில்தோகைக் கற்றை) மற்றொரு கையில் அக்க மாலையைப் பிடித்தவாறு சின்முத்திரையில் அமைந்திருக்கும்.
சிறப்பு:
பிட்சாடனர் சிற்பம் சோழர்காலத்தில் புகழ்பெற்ற சிற்பமாகும். தஞ்சைப் பெரிய கோயிலில் கற்சிற்பமாகவும், உலோகச் சிற்பமாகவும், அதற்குரிய அணிகலன்களைப் பெற்றிருந்ததாகவும் கல்வெட்டுக்களில் குறிப்புகள் இருக்கின்றன. கல்வெட்டு இவரைப் “பிச்சதேவர்” என்று குறிப்பிடுகிறது. சோழர்காலச் சிவாலயங்களில் தேவகோட்டங்களில் இடம்பெற்றதுடன் உற்சவமூர்த்தியாகவும் போற்றப்பட்டார். சோழர் கோயில்களில் திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, மேலப்பெரும்பள்ளம் ஆகிய கோயில்களில் உலோகத் திருமேனியராக விளங்குகிறார்.
www.v4all.org

Ankhamuthu Kumar's photo.

இலவசமாக கிடைக்கும் அற்புதமான பிரபஞ்ச சக்தி

இலவசமாக கிடைக்கும் அற்புதமான பிரபஞ்ச சக்தி - www.v4all.org
பிரபஞ்சம் என்றால் என்ன? இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.கற்பனைக்கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம். எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்? அது தான் பிரபஞ்ச
சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.
பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம். ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்? மிக மிகக் குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப் பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள் வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?


வாசியை அறிந்தவன்'s photo.


சரியாக சாப்பிடவாவது தெரியுமா நமக்கு?

சரியாக சாப்பிடவாவது தெரியுமா நமக்கு? - www.v4all.org

ஒன்றுக்கும் உதவாதவனை 'அவன் சாப்பிடத்தான் லாயக்கு' என்று சொல்லுவோம் நாம், ஏதோ சாப்பிடுவது தான் உலகத்திலேயே எளிதான விஷயம் போல். ஆனால் சரியான முறையில் சாப்பிடிடுவது என்பது அப்படி ஒன்றும் எளிதான காரியமல்ல. எந்த உணவை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று நமக்கு முழுமையாகத் தெரியுமா?
சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வதாகத் தோன்றும். எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் இவர்கள். எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவதில் வல்லவர்கள் இவர்கள். அதிகம் சாப்பிடுவது தவறாகும். சரியாக சாப்பிடுவது எப்படி என்பதை ஒரு சிலரே உணர்ந்து உள்ளனர்.
தவறான உணவுப் பழக்கங்களால் தான் நோய்களே வருகின்றன. உணவே மருந்து என்பார்கள். சரியாக உணவு உண்ண தெரிந்து விட்டால் உங்களுக்கு நோயே வராது என்று உறுதியாக சொல்லலாம்.
சரியாக சாப்பிடும் முறைகள் யாவை? அவற்றைக் காண்போம்.
காலை உணவு மிகவும் முக்கியமான உணவு. அதை எதற்காகவும் விலக்கவேக் கூடாது.
இரவு அதிகம் சாப்பிடத் தேவை இல்லை.
தினமும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது ஒரு கட்டுக் கதை என்றே சொல்ல வேண்டும்.
உண்மையில் பசித்த நேரத்தில் மட்டுமே நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.
உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அவசர அவசரமாக விழுங்கவேக் கூடாது.
சாப்பிடும் போது தண்ணீர் அருந்தக் கூடாது.
சாப்பிடுவதற்கு முன் அரை மணி நேரம் மற்றும் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் வரை தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீர் அருந்துவது நல்லது.
காலையில் எழுந்ததும் முதல் உணவாக ஒரு தம்ளர் வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. அல்லது வெது வெதுப்பான எலுமிச்சம்பழ ஜூஸ் குடிக்கலாம். காலையில் எழுந்ததும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லுவது தப்பான கருத்தாகும். தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் அருந்தினால் போதுமானது.
வயதாக, வயதாக உணவு அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
சாப்பிடும் பொது தொலைக் காட்சியைப் பார்க்காதீர்கள்.
உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுங்கள்.
சாப்பிடும் பொது நல்ல மன நிலையில் இருக்க வேண்டும்.
இனி எந்த மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
இயற்கை உணவு (organic food) மிகவும் நல்லது.
காய்கறிகளும் பழங்களும் அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அசைவ உணவுகளைத் தவிருங்கள்.
துரித உணவைத் தொடாதீர்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவும் உடலுக்கு நல்லதல்ல.
மதுவை அளவுக்கதிகமாக குடிப்பது தீங்குகளை விளைவிக்கும். ஆனால் சிகப்பு ஒயின் அளவோடுக் குடித்தால் நல்லது. நமது வெப்ப நாட்டிற்கு அதுவும் கூடத் தேவை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
தேங்காய், வேர்க்கடலை, பசுவின் வெண்ணெய் மற்றும் நெய் இவற்றில் தீய கொழுப்பு இருப்பதாக கூறுவதும் பொய் தான்.
தேன், இஞ்சி, சாம்பர் வெங்காயம்,பூண்டு, மிளகு யாவற்றை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். சிகப்பு மிளகாய் கெடுதல் அல்ல.
வெள்ளை சக்கரை (refined sugar) மிகவும் ஆபத்தானது.
கல் உப்பை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லா சுவைகளும் உணவில் வருமாறு வாரம் முழுவதிலும் சாப்பிடுங்கள்.

இப்பொழுது சொல்லுங்கள். நமக்கு உண்மையில் சாப்பிடத் தெரியுமா?


வாசியை அறிந்தவன்'s photo.

அதிர்ஷ்டம் என்பது உண்மையா?

அதிர்ஷ்டம் என்பது உண்மையா? - www.v4all.org 

சில விவாதங்கள் முடிவில்லாதவை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா?, அதிர்ஷ்டம் என்று ஒன்று உள்ளதா இல்லையா? போன்றவை.
இவ்வுலகில் நிறைய பேர் அதிர்ஷ்டத்தை நம்புகின்றவர்கள் தான். வாழ்க்கையில் வெற்றிப் பெற்ற சில பேர் அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் சால்ஜாப்பு என்பர். அவர்களே பின் ஒரு காலத்தில் சில தோல்விகளை சந்திக்கும்போது அதிர்ஷ்டம் உண்டு என்று கொக்கரிப்பர்.
எனக்குத் தெரிந்த வரை அதிர்ஷ்டம் என்றும் உண்டு. துரதிர்ஷ்டம் என்றும் உண்டு.கடுமையான் உழைப்பு தான் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பது எனக்கும் தெரியும். உழைப்புடன் புத்திசாலித்தனமும் சேரும் போது தான் பெரிய வெற்றிகள் கிட்டும்.
எனது கேள்வி: புத்திசாலித்தனத்துடன் கடுமையாக உழைப்பவர்கள் எல்லோரும் வெற்றி பெறுகிறார்களா? அதிகம் உழைக்காமல், பெரிய புத்திசாலித்தனமும் இல்லாத எத்தனை பேர் வெற்றி பெற்றுருக்கின்றனர்?
எவ்வளவோ புத்திசாலித்தனமாகவும், கடுமையாகவும் உழைத்த சில பேர் பெரிய தோல்விகளை சந்தித்ததை நான் பார்த்திருக்கிறேன்.
பொதுவாக வெற்றி முக்கோணத்திற்கு உழைப்பு, புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம் என்னும் மூன்று பக்கங்கள் தேவை.
எதிலும் விதி விலக்கு உண்டு. விதி விலக்குகள் விதிகளாகாது.
சுருங்க சொல்ல வேண்டுமானால் இவ்வுலகில் அதிர்ஷ்டமும் உண்டு. துரதிர்ஷ்டமும் உண்டு.
அதற்காக வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்புவது தவறு. மாறாக, எத்தனை துரதிர்ஷ்டம் இருந்தாலும், எத்தனை தோல்விகளை சந்தித்திருந்தாலும் வாழ்க்கையில் தொடந்து கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்


வாசியை அறிந்தவன்'s photo.

Wednesday, June 24, 2015

ஹெல்மெட்டின் பணி என்ன?

ஹெல்மெட்டின் பணி என்ன? - www.v4all.org 

‘‘ஒரு விபத்தின்போது 80 கிலோ எடையுள்ள ஒருவர், 1 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழந்தால் 800 கிலோ வேக பலத்தில் விழுவார். அதுவே 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் 1600 கிலோ வேக பலம். இவ்வளவு வேக பலத்தை ஹெல்மெட் போடாத நமது தலையால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது.
800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரிடலாம். இதைவிடவும் பல மடங்கு அதிக வேக பலம் நம் தலையைத் தாக்கினாலும் அதைத் தடுக்கும் வேலையைத்தான் ஒரு ஹெல்மெட் செய்கிறது. அவ்வளவு பலத்தைத் தாங்க, ஒரு குறிப்பிட்ட தரத்தில் ஹெல்மெட் தயாரிக்கப்படவேண்டும்!’’
அது என்ன ஐ.எஸ்.ஐ. தரம்?‘‘இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஹெல்மெட்டுக்கு பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச் சான்றிதழ் கொடுக்கிறது. அதன் கீழ் வரும் ஐ.எஸ் 4151 பிரிவில்தான் ஹெல்மெட்டின் தர விதிகள் உள்ளன. இதன்படி ஏ.பி.எஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாகப் பயன்படுத்த வேண்டும். அதன் இடைப்பட்ட பகுதியில்...
அதாவது, நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும். இது தவிர, சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும், அதன் லாக் எப்படி இருக்க வேண்டும், தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இந்த ஐ.எஸ் தர விதியில் இருக்கிறது. இந்த ஹெல்மெட்டுகளில் ஐ.எஸ்.ஐ முத்திரையும் கூடவே IS4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த ஐ.எஸ் விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து ஹெல்மெட் செய்து விலை மலிவாக சந்தையில் விற்கிறார்கள். பலத்த பாதிப்பைத் தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்துகிறார்கள். இவற்றை வாங்கி அணிந்தால் ஹெல்மெட் போட்டும் போடாத கதைதான்.’’ எதைத் தேர்ந்தெடுப்பது?
‘‘நமது தலையின் அளவுக்கு ஏற்ப சரியாக ஃபிட் ஆகும் ஹெல்மெட்டை மட்டும்தான் வாங்க வேண்டும். ரொம்பவும் லூஸாக இருந்தால் அடிபடும்போது அந்த ஹெல்மெட்டே நமது தலையைப் பதம் பார்க்கலாம். சதுரம், கூம்பு வடிவம் என டிசைனர் ஹெல்மெட்களைத் தவிர்க்க வேண்டும். ஹெல்மெட் ரவுண்டாக இருந்தால் மட்டுமே விபத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும்.’’
எப்படி அணிய வேண்டும்?
‘‘ஹெல்மெட் போட்டும் நாடி நாடாவைப் போடாமல் இருப்பது ஹெல்மெட்டை நழுவவிடச் செய்யும். ஆக, ஒரு விரல் அல்லது இரண்டு விரல் மட்டும் செல்லக்கூடிய இடைவெளியில் நாடாவை அணிந்துகொள்வது நல்லது. அதன் லாக்கும் சுலபத்தில் விலகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.’’
நன்றி : Saravanan Velliangiri.
பொன். சிவகுமார்'s photo.

Tuesday, June 23, 2015

HAPPY SELLING workshop

Everyone in business has heard the old saying: 80 percent of our sales are produced by 20 percent of our people. Unfortunately, few seem to know what the 20 percent are doing that the 80 percent are not. 

Here's the TRUTH - The 20 percent are using a system and the 80 percent are not. 

And we've all seen such systems produce 100 percent to 500 percent increases in sales in almost no time! 

HAPPY SELLING -  Sales & Prospecting Persuasion & Influence Program is that system!

Dr.Star Anand  walk you step-by-step through the process he uses to consistently and effortlessly make sale after sale.

This system has been shared with thousands of people all over the india to help them become more persuasive and produce better results. This program will help you to generate more leads, set more appointments, effortlessly handle any objection with confidence and ease.

In this 17-Part Sales & Prospecting Persuasion & Influence Program You will learn:

- How to have the mindset of an influence master
- How to generate unlimited leads
- How to set unlimited appointments
- How to build trust and rapport
- How to identify customer needs
- How to share the benefits of your product or service
- How to close
- How to handle every objection
- How to follow up
- How to break out of a sales slump
- How to expand your comfort zone

Do you want to dramatically increase your results now? 

Are you ready for a sales breakthrough?

Dr.Star Anand Ram  is a Master Sales Trainer who has taught his proven sales systems to thousands of professionals around the India.

In this program, We will teach you what to do, to increase your results and breakthrough to success!

For details visit - www.v4all.org call- 9790044225 

சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?

சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன? - www.v4all.org
``காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்‘‘- என்கிறார் சேக்கிழார்.
திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள் உரைக்கப்பட்டுள்ளன.
தத்துவம்
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
பிருகு முனிவரின் சாபத்தால் சிவலிங்க வழிபாடு ஏற்பட்டதாக புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுவதும் இடைச்செருகலே என்பது ஞானிகளின் கருத்தாக உள்ளது. தட்சிணாமூர்த்தியாய் உள்ள கால காலனை சபிக்கக்கூடிய ஆற்றல் எந்த முனிவருக்குத் தான் இருந்து விட முடியும்?
லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம்.
இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.


சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?

சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன? - www.v4all.org
``காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்‘‘- என்கிறார் சேக்கிழார்.
திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள் உரைக்கப்பட்டுள்ளன.
தத்துவம்
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
பிருகு முனிவரின் சாபத்தால் சிவலிங்க வழிபாடு ஏற்பட்டதாக புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுவதும் இடைச்செருகலே என்பது ஞானிகளின் கருத்தாக உள்ளது. தட்சிணாமூர்த்தியாய் உள்ள கால காலனை சபிக்கக்கூடிய ஆற்றல் எந்த முனிவருக்குத் தான் இருந்து விட முடியும்?
லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம்.
இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.