Showing posts with label star anand. Show all posts
Showing posts with label star anand. Show all posts

Friday, July 22, 2016

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.!

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.!

1.அதிகாலையில் எழுந்துகரைதல்.

2.உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல்.

3.உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.

4.பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.

5.மாலையிலும் குளித்தல்,
பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக்கொண்டவை.

6. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம்.

இது அஞ்சலி செய்வதற்குச்சமமாக கருதப்படுகிறது….
மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்..
ஆனால் மெல்ல,
மெல்ல இதை நாமே பெரிது
படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது… !!

காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….தெரியவில்லை!.. ஆனால்,
உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திர
சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்
– மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமைவேண்டும் என்று நினைக்கும்சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.
தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும்மகிழ்ச்சியாகவும்இருக்க,
தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழஇந்தக்காணுப்பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக்கோலமிடுவார்கள்.
அங்கேவாழைஇலையைப்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில் நூபூரம்,
பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கை எனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால்காக்கைக்கு உணவு அளித்தால் எமன்மகிழ்வாராம்.
எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.தந்திரமான குணம் கொண்ட காகம்
யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்லசெய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம்வீட்டின் முன் உள்ள “கா…கா…’
என்று பலமுறை குரல் கொடுக்கும்.
இந்தப்பழக்கம் இன்றும் உண்டு.
காலையில் நாம் எழுவதற்கு முன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்லபலன் உண்டு. வீடு தேடிகாகங்கள் வந்துகரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்.

காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன் வாழலாம் என்று ஆன்மீகம் கூறினாலும் மனிதனை அண்டி பிழைக்கும் ஒர் உயிரினம் நாகரீக வளர்ச்சியில் நாம் கவனிக்க தவறி அந்த இனம் அழியாமல் பாதுகாக்கபட வேண்டும

Wednesday, July 24, 2013

கோபத்தைக் கட்டுப்படுத்த…


கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்
ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !


‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.
‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால் கூட ‘எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. ‘வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.
‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.
ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.
கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ… எப்படிய்யா என் மனைவியைப் பற்றி தப்பாப் பேசலாம்’ என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.
மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் எச்சரிக்கிறது.
அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது.
கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலைக்கு வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.
இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.
உறவுகளுக்கு இடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. `கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்’ என்றோதான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.
கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.
அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம்…’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.
மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை.
கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.
‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங் களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது!
நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், `இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.
***********************************************

கோபத்தைக் கட்டுப்படுத்த
கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை…
1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். ‘இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தேன்’ என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின் சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.
6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.
7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.
10. மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்பிளாஸ்டிக் எமன் விழிப்புணர்வு தகவல் !!!

YOURS HAPPILY
STAR ANAND

Wednesday, May 15, 2013

நீங்களே விற்கலாம் - விற்றலின் அடிப்படை (Selling Skills)


நீங்களே விற்கலாம்



நீங்களே விற்கலாம்





11.மற்றவர் அவர்களது இழப்புகளை சொல்லும் பொழுது அமைதியாகவும்ஆறுதலாகவும் இருக்க வேண்டும்
12.   உங்கள் ப்ராஸ்பெக்ட் சொல்வதை கவனமுடன் கேளுங்கள்குருக்கே இடையூறு செய்யாதீர்கள்.
13.   உங்கள் உடல் பாஷைகளை உணர்ந்து செயல்படுங்கள்எவ்வாறான அமைதி குரிகைகளை நேஙள் உங்கள் ப்ராஸ்பெக்டிடம் வெளியிடுகிறீகள் ?
14.   உங்கலது பாடீ லாங்குவேஜை  கற்றுகொள்ள முற்படுங்கள்ஆது உங்களின் விற்பனை உருதி முடிதல்களை மேலுயர்த்தும்.
15.   மறுப்புரைகளுக்கான  பதில்களை முன்னமெ தயார் நிலயில் வைத்துகொள்ளுங்கள்ஆனால் அவர்களிடம் நீங்கள் மனப்பாடம் செய்ததாக காட்ட் கொள்ள வேண்டாம்
16.   தோழமையுடன் இருங்கள்அன்பாக பேசுங்கள்உங்கள் ப்ராஸ்பெக்ட் க்கு உதவும் பொதுவான அக்கரையை கைய்யிலெடுங்கள்.
17.   உங்கள் ப்ராஸ்பெக்ட்க்கு அவர்கள் உங்களுக்கு முக்கியம் என்று உணரவையுங்கள் அதே சமயம் குழையாமல் பார்த்து கொள்ளுங்கள்.
18.   உறுதி முடிக்கும் சமயத்தை வெறும் விற்பனைக்கான உறுதி முடிப்பதாக மட்டும் பார்க்காமல்நீங்கள் எடுக்கும் அடுத்த படிக்கான முயற்சியாக பாருங்கள்
19.   பொருட்களை பற்றிய உங்களின் அறிவுத்திறணை வளர்த்து கொள்ளுங்கள்
20.   உங்களை நம்புங்கள்
21.          உங்கள் தயாரிப்புகளை நம்புங்கள்
22.          உங்கலுடய எதிராளி / போட்டியிடுபவர் என்னவெல்லாம் வழங்குகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்உங்கள் நண்பர்களை உங்களுக்கு அருகாமையில் வையுங்கள்உங்கள் எதிரிகளை உங்களுக்கு மிகவும் அருகாமயில் வையுங்கள்

உங்களது திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்உங்கள் திறமைகளுக்கு பட்டயம் தீட்டுங்கள்.
24.          உங்களது ப்ராஸ்பெக்டுகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் படங்கள் மற்றும் விளக்க படங்களை வரைந்து காட்டுங்கள்.
25.          ஓவ்வொரு வாங்கும் தீர்மானமும் மனகிளர்ச்சியால் ஏர்படுகின்ற ஒன்றுஅத்தகைய உங்களது ப்ராஸ்பெக்ட்களின் மனக்கிளர்ச்சியை ஈர்ப்பதர்க்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
ஓவ்வொரு வாங்கும் தீர்மானமும் மனகிளர்ச்சியால் ஏர்படுகின்ற ஒன்றுஅத்தகைய உங்களது ப்ராஸ்பெக்ட்களின் மனக்கிளர்ச்சியை ஈர்ப்பதர்க்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

26.          எந்த வகையில் உங்களின் ப்ராஸ்பெக்டுக்கு நீங்கள் கூடுதல் மதிப்பு அளிக்க முடியும்?

27.          எப்படி உங்கள் ப்ராஸ்பெக்டின் எதிர்ப்பார்ப்புகளை கடக்க முற்படுவீர்கள் ?

28.          உங்களது பொருள் / சேவைக்கான தனித்தன்மையான இயல்பு என்ன ?

29.          நீங்கள் எப்படி உங்களது தற்போதய வாடிக்கயாளர்கள் / தகுதிசான்றுகள் / நிகழ்வாய்வுகளை உங்களது மேன்மைக்காக பயன் படுத்த போகீறீர்கள் ?

30.          “கடின தோளினை” அடைய உங்களது நம்பிக்கையை மேம்படுத்துங்கள்
31.          மனதில் குறிக்கோளுடனும்குறிப்பிட்ட பலனுடனும் ஒவ்வொரு விற்பனை களத்திற்க்கும் செல்லுங்கள்
32.          உங்கள் நிர்வாகத்தில் தலை சிறந்த விற்பனையாளர் யார்நீங்கள் செய்யாத எதை அவர் செய்து கொண்டு இருக்கிறார் ? அதை அவரிடமிருந்து கற்று கொள்ளுங்கள்
33.          விதிமுறைகளையும் மரபொழுங்கலையும் விடுத்து ஒரு நண்பனை போல உங்கள் ப்ராஸ்பெக்டிடம் பேசுங்கள்
34.          உங்களை நீங்களே வற்புறுத்தி கொள்ளமல்ஒவ்வொரு விற்பனை வாய்ப்பையும் ஒரு புதிய சவாலாகவே எதிர்கொள்ளுங்கள்
35.          உங்களது நாட்குறிப்பை சரியாக பயன்படுதுங்கள்இதில் ஏதெனும் சிரமம் இருந்தால் தகுந்த ஆலொசனை பெற்று பயன்படுத்துங்கள்ஓவ்வொரு நாளும் கூடுதலாக 60 நிமிடங்கள் ஆகத்திறனை உருவாக்க உங்களால் என்ன செய்ய முடியும் ?
36.          ப்ராஸ்பெக்டுடனான உங்கள் உரையாடலை தொலைபேசியில் பதிவு செய்து கேளுங்கள்
37.          உங்கள் தொலைபேசி குரல் வளத்தை மிகைப்படுத்துங்கள்
38.          நீங்கள் தொடங்கும் இடத்திர்க்கேற்ப்ப உங்கள் சிகையும் உடையும் இல்லாமல்,செல்ல வேண்டிய இடத்தை பொருத்து உங்கள் உடை நாகரீகமானதாக இருக்க வெண்டுமா அல்லது அலுவல் முரைப்படியான உடையாக இருக்க வேண்டுமா என தேர்வு செய்யுங்கள்.
39.          உங்களை ஒரு விற்பனை ஆலொசகராக எண்ணி புதுமை உத்திகளை உருவாக்குங்கள்
40.          விற்பனை ஆற்றல் தொடர்பான ஊக்குவிக்கும் ஒலிப்பதிவுகளை  நீங்கள் மகிழ்வுந்தில் பிரயாணிக்கும் பொழுது கேளுங்கள்இந்த செயலற்ற நேரத்தை உங்களின் வளர்ச்சிக்காக பயண்படுத்தி கொள்ளுங்கள்

41.          சிறந்த பண்பான தகவலை உங்கள் தொலைபேசியின் ஆன்ஸர் போன் ஆப்ஷனில் பதிவு செய்யுங்கள்அவை உங்களின் ப்ராஸ்பெக்டுகளை உங்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும்படியான ஆர்வத்தை தூண்ட வெண்டும்
42.          வாங்குதலின் பொழுது ஏதேனும் கூடுதல் பொருட்கள் மற்றும் சேவைகளை உங்களால் தர இயலுமா ?
43.          உங்களின் முதல் கருத்துகளையும் எண்ணங்களையும் நேர்மரையானதாக பதிவு செய்யுங்கள்நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயம் மற்றும் அதை சொல்ல நினைக்கும் விதம் பற்றி நேரம் ஒதுக்கி சிந்தித்து செயல் படுங்கள்
44.          நீங்கள் இறுதி தீர்மானம் செய்பவரிடம் தான் பேசுகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
45.          உங்களுடைய ப்ராஸ்பெக்டுகளை விற்பனை செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுத்துங்கள்
46.          உங்கள் ப்ராஸ்பெக்டுகளை குறுக்கு கேள்விகள் கேட்காதீர்கள் / கேள்வி மேல் கேள்வி கேட்டு குறுக்கு விசாரணை செய்யாதீர்கள்
47.          உங்களிடம் இருந்து எளிதான முறையில் வாங்குவதர்க்கு நீங்கள் என்ன செய்ய முடியும் ?
48.          உங்களுடய பொருட்கள் மற்றும் சேவை பற்றி அழுத்தமாக எடுத்து சொல்லுங்கள். “எனக்கானது என்ன இருக்கிறது” என்ற உங்களுடைய ப்ராஸ்பெக்டின் கேள்விக்கு பதில் அளியுங்கள்
49.          உங்களுடய பேச்சு திறணை மேம்படுதுங்கள்சரியான பயிற்சி நிறைவை தரும்
50.          விற்றலின் அடிப்படைகளை ஒருமுறை திரும்ப பார்த்து கொள்ள வேண்டும்இது நீங்கள் நேர் சிந்தனையுடன் சரியான பாதயில் செல்ல வழி வகுக்கும்.
51.          உங்களால் முயன்று அடையகூடிய விற்பனை இலக்கை அடையும்வரை உங்களை நீங்களே சவாலாக எடுத்து கொள்ளுங்கள்
52.          நேர்மரையானதெளிவான மனநிலையை உருவாக்குங்கள்
53.          விலையை முதலில் தெரியபடுதாத்தீர்கள்.பயன்களையும்திறனையும் முதலில் மேம்பட எடுத்துரையுங்கள்
54.          ஓரு பொருள் அல்லது சேவை இரண்டு காரணங்களுக்காக வாங்கபடும். 1. வேதனையை குறைப்பதர்க்காக 2. மகிழ்ச்சியை பெருவதர்க்காகவாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வேதனையை குறைப்பதர்க்காகவே வாங்குவார்களே தவிரமகிழ்ச்சிக்காக அல்ல
55.          உங்களின் இலக்கங்களை அறியுங்கள்மாதத்திற்க்கு வெறும் 3 கூடுதல் விற்பனைகள் உங்கள் நிர்வாகத்தின் அடித்தளத்திர்க்கும் உங்கள் வருமானத்திர்க்கும் எவ்வாறு பொருள்படுகிறது என்பதை ஒரு ஊக்குவித்தலாக கொள்ளுங்கள்
56.          நீங்கள் கடைசியாக எப்பொழுது விற்றலுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டீர்கள்இன்றெ ஒரு பயிற்சி வகுப்பிற்க்கு உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்
57.          உங்கள் பொருள் மற்றும் சேவை தொடர்பாண நவீன தொழில் சார்ந்த புதிய நடைமுறைகளையும்செய்திகளையும் எப்பொழுதும் தெரிந்து வைத்திருங்கள்
58.          உங்களுடைய ப்ராஸ்பெக்டுக்ளை பின் தொடர மறக்காதீர்கள்
59.          பொது நிகழ்ச்சிகள்கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் உங்களுடைய தொடர்பையும் பங்களிப்பையும் மேம்படுத்துங்கள்வெறும் வர்த்தக அட்டையை மட்டும் பரிமாறிக்கொள்ளாமல்உறவுமுறைகளை கட்டமைத்து கொள்ளுங்கள்
60.          உறுதியாக இருங்கள்அதேசமயம் எரிச்சலூட்டும்படியாக நடந்து கொள்ளாதீர்கள்
61.          உங்களது கோல்ட் கால்களை ஒரு விற்பனை செயலாக எண்ணாமல்வாடிக்கையாளருக்கு உங்கள் ப்ரொடுக்ட் மற்றும் சேவை பற்றிய புரிதலை உருவாக்கும் சந்தர்ப்பமாகவே எண்ணுங்கள்
62.          வாடிக்கையாளர் சேவையிண் அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு அதனை உங்களது செயலாக்க அளிக்கையின் மூலம் எடுத்துரையுங்கள்
63.          உங்களது மிகைபடுத்தப்பட்ட சொற்களால் வாடிக்கையாளரை குழப்பமடைய செய்யதீர்கள்இதன் மூலம் அவர்கள் உங்களை நேரடியாக காண்பார்கள்
64.          உங்களுடன் இந்த வர்த்தகத்தை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதனால் வரும் விளைவுகளை தாங்களே ஏற்காமல்எப்படி நீங்கள் வருவிளைவுகளை உங்கள் தோளிள் சுமக்க வேண்டும்
65.          உங்களின் விற்பனையை கேட்க மறக்காதீர்கள்
66.          மகிழ்ச்சியாக இருங்கள் !


Yours Happily
Star Anand
Sales Skills Trainer 
Vivekas Sales Training Company 
Coimbatore
website - www.v4all.org
cell -9790044225
mail- star.v4all@gmail.com