Showing posts with label coimbatore expo stall desgin.. Show all posts
Showing posts with label coimbatore expo stall desgin.. Show all posts

Friday, December 26, 2014

மனதை இளமையாக வை‌‌த்திருக்க சில ஆலோசனைகள்

மனதை இளமையாக வை‌‌த்திருக்க சில ஆலோசனைகள் 


மனதை எ‌ப்போது‌ம் உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எ‌ப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம். அதெ‌ப்படி ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது மனதை உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம்.
முடியு‌ம். எதையு‌ம் நே‌ர்மறையாக ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ல் ந‌ம்மா‌ல் எ‌ந்த ‌சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம் உடை‌ந்து போகாம‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ முடியு‌ம்.

ஒரு நகை‌ச்சுவை இரு‌க்‌கிறது. அதாவது ‌நீ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்...எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்குமே இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள் தா‌ன் உ‌ள்ளன.
வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்‌பீ‌ர்க‌ள் அ‌ல்லது நோ‌ய்வா‌ய்‌ப்படு‌வீ‌ர்க‌ள். முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் நலமாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ஏ‌‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்? இ‌ல்லை, உட‌ல் நல‌க் குறைவு ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ற்கு‌ம் இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள்தா‌ன். ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் இற‌ந்து‌விடு‌வீ‌ர்க‌ள். நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ஏ‌ன் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டு‌ம். இ‌ல்லை இற‌ந்து ‌வி‌ட்டா‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள் இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள். சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ன்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டுமா எ‌ன்ன? இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல்... அ‌ங்குதா‌ன் உ‌ங்களது ஏராளமான ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌ப்பா‌ர்களே.. அவ‌ர்களுட‌ன் அர‌ட்டை அடி‌த்தே கால‌த்தை ‌க‌ழி‌க்கலாமே ‌பிறகு ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.. இதுதா‌ன் அ‌ந்த நகை‌ச்சுவை.

ஆனா‌ல் இது நகை‌ச்சுவை ம‌ட்டும‌ல்ல‌.. வா‌ழ்‌க்கை‌யி‌ன் சுவையை அ‌றியு‌ம் வ‌ழியு‌ம் கூட..

எ‌திலு‌ம் ஒ‌ன்று ந‌ல்லது அ‌ல்லது கெ‌ட்டது நட‌க்கு‌ம். ந‌ல்லது நட‌ந்தா‌ல் கவலை‌ப்பட ஒ‌ன்று‌மி‌ல்லை, கெ‌ட்டது நட‌ந்தா‌ல் அ‌திலு‌ம் இர‌ண்டு ‌விஷய‌ங்க‌ள். இ‌ப்படி இரு‌க்க, உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யைப் ப‌ற்‌றிய கவலையைத் தூ‌க்‌கி எ‌றி‌ந்து ‌வி‌ட்டு, வா‌ழ்‌க்கை எ‌ன்பது பூ‌ங்காவன‌ம் அ‌ல்ல போரா‌ட்ட‌க்கள‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

போரா‌ட்ட‌க்கள‌த்‌தி‌ல் இழ‌ப்புகளு‌ம், வெ‌ற்‌றிகளு‌ம் சாதாரண‌ம். எத‌ற்கு‌ம் கல‌ங்காம‌ல் வாழப் பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். எ‌ப்போது‌ம் நட‌‌ப்பவை எ‌ல்லா‌ம் ந‌‌ன்மை‌க்கே எ‌ன்று அத‌ன் போ‌க்‌கி‌ல் உ‌ங்களது வா‌ழ்‌க்கையை ‌சிற‌ப்பாக வாழப்‌ பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

‌நீ‌ங்க‌ள் ‌எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையு‌ம் ச‌ந்‌தி‌க்காம‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் தவறான‌ பாதை‌யி‌ல் பய‌ணி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். முத‌லி‌ல் உ‌ங்க‌ள் பாதையை மா‌ற்று‌ங்க‌ள். ‌‌சில சமய‌ங்க‌ளி‌ல் இது பெ‌ரிய அள‌வி‌ல் மு‌ன்னே‌ற்ற‌த்தை அளிக்கும்.

பு‌திதாக செ‌ய்யு‌ம் போதுதா‌ன் உ‌ற்சாக‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அரை‌த்த மாவையே அரை‌த்து ‌நீ‌ங்க‌ள் எதையு‌ம் சா‌தி‌க்க முடியாது எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

உ‌ற்சாக‌ம் உ‌ங்களு‌க்கு‌ள்தா‌ன் இரு‌க்‌கிறது. அதை வெ‌ளி‌யி‌ல் தேடா‌தீ‌ர்க‌ள். ம‌ற்றவ‌ர்களு‌க்கு மு‌ன்னுதாரணமாக வா‌ழ்‌ந்து கா‌ட்டு‌ங்க‌ள்.


என்றும் புன்னகையோடு

Friday, July 11, 2014

UNION BUDGET 2014-2015 HIGHLIGHTS RELATED WITH TAXES

UNION BUDGET 2014-2015 
HIGHLIGHTS  RELATED  WITH TAXES
*No changes in tax rates for individuals.
*Tax exemption limit for small and marginal changed from Rs 2 lakh to Rs 2.5 lakh and for senior tax payers Changed to 3Lakhs.
*Investment limit under 80C raised from Rs 1 lakh to Rs 1.5 lakh.
*Govt to provide investment allowance at 15% for 3 years to manufacturing company which invest more than Rs 25 crore in plant and machinery.
*Housing loan rebate to raised from 1.5 lakh to 2 lakh: Jaitley
*60 more 'Ayakar Sewa Kendras' to be set up.
*Income tax department is expected to function not only as an enforcement dept but also as a facilitator says Arun Jaitley
*Arun Jaitley raises PPF ceiling to Rs 1.5 lakh
*Goods and Services tax , VAT should come to end - FM
*Personal computers, electronic goods to be cheaper. FM announces proposals to make CRT TVs cheaper.*Basic custom duty on LED panel below 19 inch made NIL
*Soaps and oil products to become cheaper.
*Excise duty on footwear reduced from 12% to 6%.
*Jaitley announces reduction in excise duty(VAT) for specified food package industry from 10% to 6%.
*Excise duty raised on tobacco products and aerated water products with added sugar.
*To broaden tax base, negative list for service tax has been reviewed: FM
*Cigarettes, pan masalas to be costlier: FM
* Annual PPF ceiling to be raised to Rs 1.5 lakh, from Rs 1 lakh.
* No changes in taxes retrospectively and also there is no changes in tax rates.
* Goods and Services tax , VAT should come to end

OTHERS
-Uniform KYC across the finance sector
- Govt to set up 4 more AIIMS
- Rs 3600 crore set aside for National Rural Drinking Water.
- 12 more medical colleges with dental facilities as well
- Govt proposes to set up 5 new IIMs and 5 new IITs.
- There should be at least 2 bank accounts in each household says FM.. Govt to provide all households with banking facilities to empower the weaker sections.
- To allocate Rs 150 crore to boost women's safety
- Rs 1,000 crore for 'one rank, one pension' scheme.
- Rs 2.29 lakh crore allocated for defence sector.
- Rs 500 crore for digital India programme to ensure broadband connectivity at village level, transparency in VAIBHAV governance.
- Sports university to be set up in Manipur, Rs 100 crore to be provided for this.
- Rs 100 crore for training of sportspersons for upcoming Asian Games.
- FM propose Rs 200 crore for power reforms, and Rs 500 crore for water reforms in Delhi
- Rs 100 crore set aside for Metro scheme in Ahmedabad and Lucknow.
- The govt is notifying Rs 1000 pension per subscriber of EP scheme. Rs 50 crores being set aside for this
- Rs 200 crore set aside to support Gujarat govt in the Sardar Patel statue installtion
- FM propose Rs 7060 crores for the development of 100 smart cities
- Jaitley announces schemes for disabled persons in the country.
- Jaitley announces 'Beti padhao, beti badhao yojana', sets aside Rs 100 crore for this.
- Govt to provide finance to 5 lakh landless farmers through NABARD
- Govt to set up Industrial Smart Cities in 7 cities.
- Rs 200 crore allocated for 6 more textile clusters in Rae Bareily, Lucknow, Surat and Bhagalpur.
- 16 new ports to be set up. Rs 11,000 crore to be allocated for this..
- FM : Bank to be encouraged to give long term funds and loans to infrastructure sector.
- EPFO will launch a unified account scheme for portability of Provident Fund accounts
- In order to give major boost to tourism, E-visas would be introduced at 9 airports. This will facilitate visas on arrival
- Indian citizen will hold shares in public sector banks directly rather than indirectly at present
- FDI is an additional support. India needs a boost in job creation.

சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

1. காமம்: 
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. 

2. குரோதம்: 
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். 

3. லோபம்: 
பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். ஆண்டவனை அடைய முடியாது. 

4. மதம்: 
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான். 

5. மாத்ஸர்யம்: 
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும். 

6. டம்பம் (வீண் பெருமை): 
அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது. 

7. அகந்தை: 
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை. 

8. சாத்வீகம்: 
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். 

9. ராஜஸம்: 
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது. 

10. தாமஸம்: 
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. 

11. ஞானம்: 
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு. 

12. மனம்: 
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். 

13. அஞ்ஞானம்: 
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். 

14. கண்: 
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

15. காது: 
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும். 

16. மூக்கு: 
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும். 

17. நாக்கு: 
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. 

18. மெய்: 
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும். 

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். 

இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்

Tuesday, July 8, 2014

இயற்கையே இறைவன்; இயற்கை வழி வாழ்தலே இறை வழிபாடு.



யோகக் கலையின் தமிழ் நூலான திருமந்திரம் அருளிய திருமூலநாயனார். உடல் நலத்தின் சிறப்புகளை பலவாறு பாடியுள்ளார்.
''உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவனே சிவலிங்கம்''
என்றும்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பிற்குள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஒம்புகின்றனே.
எனவும்,
உடம்பாரழியிர் உயிராலழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவுமாட்டார்
உடம்பினை வழக்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பினை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
எனவும்,
அண்டம் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கின் உபாயம் பலவுள 
கண்டங் கருத்த கபாலியுமாமே.
என்றெல்லாம் அவர் உடல் நலத்தினை பேணிக்காப்பதைப் பற்றி கூறுகிறார்.
அது போலவே உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் மிக அழகாக இதையே
''மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றியுணின்''
எனவும்,
''மாறுபாடில்லா வுண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு''

எனவும் கூறியுள்ளார்.

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..

அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,



ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

1
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

2
உங்களுக்கு முதுமையே வராது

3
பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்காடினார்.

நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் .

"
இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்

அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"

"
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்"

"
ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. .முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்"

2
வது என்ன சொன்னேன்

முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?

3
வது என்னசொன்னேன்

பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நட்ச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது