Showing posts with label sales training class in coimbatore. Show all posts
Showing posts with label sales training class in coimbatore. Show all posts

Thursday, July 9, 2015

100 சதவீத அன்பை காட்டுங்கள்

படித்ததில் பிடித்தது #
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையனும்
விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த
பையன் கைகளில் நிறைய பொம்மைகளும்
அந்த குட்டிப்பெண் கையில் நிறைய
இனிப்புகளும் இருந்தது.
அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற
பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட
தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள்
எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று
கேட்டான்.குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம்
தெரிவித்தாள்.
அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல
பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த
குட்டி பெண்ணிடம் இனிப்புகளை
கேட்டான்.குட்டி பெண் எல்லா
இனிப்புகளையும் கொடுத்து விட்டு
பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக
உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே
வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும்
நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம்
ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி
இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே
உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை
வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம்
காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து
கொண்டே இருக்கும்.
இது காதலுக்கும் , நட்புக்கும் , வேலை
செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி
தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.
எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை
காட்டுங்கள்....!!!!

Wednesday, July 8, 2015

யார் கெட்டவர்?

யார் கெட்டவர்? நீங்களேக் கூறுங்களேன் - www.v4all.org 
நாம் ஒரு சிலரை நல்லவர் என்றும் ஒரு சிலரை கெட்டவர் என்றும் முத்திரைக் குத்துகிறோம். ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று எப்படி தீர்மானிப்பது? என்ன அளவுகோல் நாம் வைத்திருக்கிறோம்? யார் இதற்கு இலக்கணம் வகுத்தது?
நாம் பொதுவாக கெட்ட பழக்கங்கள் உடையவரைக் கெட்டவர் என்கிறோம் என்று தோன்றுகிறது. மொடாக் குடிகாரனை, சிகரெட் பிடிப்பவரை, காமுகனைக் கெட்டவன் என்று தரம் பிரிக்கிறோம்.
கெட்ட பழக்கங்கள் உடைய ஒருவன் கெட்டவனாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? அவனை ஒழுக்கம் இல்லாதவன் என்று கூறலாம். ஆனால் கெட்டவன் என்று சொல்லுவது சரியாகுமா?கவிச் சக்ரவர்த்தி கண்ணதாசன் அவர்கள் கெட்ட பழக்கங்கள் உடையவர் தான். அவர் அதை தைரியமாக ஒப்புக் கொள்ளவும் செய்தார். வெளி வேஷம் போடத் தெரியாத உத்தம மனிதர் அவர். கடவுள் அனுக்கிரகம் பெற்ற மஹாக் கவி அவர். அவரைக் கெட்டவர் என்று சொல்ல முடியுமா?
ஒருவன் எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் மகாக் கருமி. யாரும் நன்றாக இருப்பது கண்டு பொறுக்க இயலாதவன். சமயம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர் வாழ்வைக் கெடுப்பவன். அவனால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. அவனால் எல்லோருக்கும் தொல்லை தான் மிஞ்சும். அவனை நல்லவன் என்று எப்படி கூற இயலும்?
என்னைப் பொறுத்த வரை கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவர் எல்லாம் கெட்டவர்கள் அல்லர். நல்ல பழக்க வழக்கங்கள் உடையவர் எல்லாம் நல்லவரும் அல்லர். யார் எல்லா உயிரினங்களிடத்தும் அன்பாக இருக்கின்றாரோ, யார் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றாரோ, யார் வாழ்க்கையையும் கெடுக்காதவர் யாரோ அவரே நல்லவர்.
உண்மையான ஆன்மிகவாதிகளும் நல்லவரே.
சிலர் பணம் வைத்திருப்பவரெல்லாம் நல்லவர் என்று நினைக்கிறனர். அவர் எந்த கெட்ட வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும் அவர் நல்லவராக அவர்கள் கண்ணுக்குத் தெரிவார். ஏழைகள் எல்லோரையும் கெட்டவராக இந்த உலகில் சிலர் சித்தரிக்கின்றனர்.
யார் கெட்டவர்? நீங்களேக் கூறுங்களேன்.


வாசியை அறிந்தவன்'s photo.

Tuesday, July 7, 2015

உண்மையான சுகம் தான் என்ன?

உண்மையான சுகம் தான் என்ன? - www.v4all.org 
உண்மையான சந்தோஷம் அடைவது எப்படி என்பதை அறிவதற்கு முன்னால் உண்மையான சந்தோசம் என்பது என்ன என்பதைப் பற்றி சற்று பார்ப்போம். எது நிலையானதோ அதுவே உண்மையானது ஆகும். நிலையான சந்தோஷம் தான் உண்மையான சந்தோசம் ஆகும். அதை அடைவது எப்படி?
உயிர் போகும் பசி எடுக்கும் போது ஒரு கவளம் சோறு அமிர்தமாய் ருசிக்கிறது. சொர்க்கமே அந்த ஒரு கவளச் சோற்றில் தெரிகிறது. அதே சோறு நீங்கள் வயிறு புடைக்க சாப்பிட்டபின் அதே சந்தோஷத்தைக் கொடுக்க முடியுமா? ஒரு பருக்கை சோறு கூட ஒரு நிலைக்கு பின் சாப்பிட முடியாது அல்லவா? வாந்தி எடுக்கும் நிலை ஏற்படும். சந்தோஷத்தைக் கொடுத்த அதே சோறு அப்போது நரகமாகிப் போகும். நிரந்தரமற்ற அது உண்மையான சுகம் அல்ல.
காம சுகமும் அப்படியே. சொர்க்கமாய் தெரியும் கட்டில் சுகம் அளவுக்கு அதிகமாய் ஒரே மூச்சில் தொடரப்படும் போது காமம் கசந்து தள்ளிப் படுக்கும் நிலை வந்து விடும். காமம் நிரந்தர சுகம் அல்ல. உண்மையான சுகமும் அல்ல.
பணம் கொடுக்கும் சுகம், மது கொடுக்கும் சுகம், மற்றைய போதை வஸ்த்துக்கள் கொடுக்கும் சுகங்களும் அப்படியே நிரந்தரமற்றவை. உண்மையான் சுகத்தைக் கொடுக்கமுடியாதவை அவை.
அப்படியானால் நிரந்தரமான, உண்மையான சுகம் தான் என்ன? நாம் நம்மை உணரும் போது, நம்முள் இருக்கும் இறை சக்தியை உணரும் போது, அந்த இறைவனுடன் தொடர்பு கொள்ளும்போது பேரின்பம் கிடைக்கும். அந்த இன்பம் துய்க்க துய்க்க சலிக்காது. இன்பமும் குறையாது. அது தான் நிலையான உண்மையான சந்தோஷம் ஆகும்.
தினமும் சிரத்தையோடு தியானம் செய்தால் நாம் நம்மை உணரலாம். நம்முள் இருக்கும் இறை சக்தியை உணரலாம். பேரின்பத்தை அனுபவிக்கலாம். உண்மையான சந்தோஷம் நமக்கு வசப்படும். அது ஒன்றும் எளிதான காரியம் அல்ல என்று எனக்கும் தெரியும். எந்த பெரிய சாதனைகளும் சிறிய முயற்சிகளில் தான் ஆரம்பிக்கின்றன. தியானம் செய்வோம். உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்போம்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Thursday, June 4, 2015

“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது”

“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.
வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்
1 கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல…
சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.
உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.
2 தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்
உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.
3 தேவை தெளிவு – குருட்டு நம்பிக்கை அல்ல
ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள்.
உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம், ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா?
வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.
4 கொஞ்சம் வளைந்து கொடுங்கள்
நம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமை குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழு திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால் பலருக்கோ சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
நீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக! உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்த சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.
5 எனக்கு என்ன கிடைக்கும்?
உயர்ந்த மனிதனாக ஆக வேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள்.
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள் பார்வை “எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதைத் தாண்டி இருந்தது. “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள் திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்
.
அப்போது இயல்பாகவே “என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்!

Yours Happily
Dr.Star Anand Ram
www.v4all.org