Showing posts with label Training Company in chennai. Show all posts
Showing posts with label Training Company in chennai. Show all posts

Thursday, July 9, 2015

100 சதவீத அன்பை காட்டுங்கள்

படித்ததில் பிடித்தது #
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையனும்
விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த
பையன் கைகளில் நிறைய பொம்மைகளும்
அந்த குட்டிப்பெண் கையில் நிறைய
இனிப்புகளும் இருந்தது.
அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற
பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட
தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள்
எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று
கேட்டான்.குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம்
தெரிவித்தாள்.
அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல
பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த
குட்டி பெண்ணிடம் இனிப்புகளை
கேட்டான்.குட்டி பெண் எல்லா
இனிப்புகளையும் கொடுத்து விட்டு
பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக
உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே
வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும்
நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம்
ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி
இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே
உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை
வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம்
காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து
கொண்டே இருக்கும்.
இது காதலுக்கும் , நட்புக்கும் , வேலை
செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி
தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.
எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை
காட்டுங்கள்....!!!!

Thursday, June 11, 2015

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.
4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
8. “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.
11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.
12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.
13. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.
14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
15. எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது
16. கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.
17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும்  கிடைக்காது.
19. சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.
20. கடவுளை நம்புங்கள்.